search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Egg Curry"

    தோசை, இட்லி, சப்பாத்தி, சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட முட்டை சால்னா அருமையாக இருக்கும். இன்று இந்த சால்னாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    முட்டை - 4
    தக்காளி - 2
    சின்ன வெங்காயம் - 100 கிராம்
    பச்சை மிளகாய் - 1
    புளி - பெரிய நெல்லி அளவு
    தேங்காய்ப்பால் - 1 கப்
    வெந்தயம் - அரை டீஸ்பூன்
    பூண்டு - 15 பல்
    மஞ்சள் தூள் - தேவைக்கு
    தனி மிளகாய் தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்
    மிளகாய்தூள் - சிறிதளவு
    கறிவேப்பிலை - தேவைக்கு
    கொத்தமல்லி - சிறிதளவு
    உப்பு - தேவைக்கு
    நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்



    செய்முறை :

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    புளியை சிறிது தண்ணீரில் கரைத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து வெந்தயத்தை போட்டு லேசாக வறுத்த பின்னர் நல்லெண்ணையை ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கறிவேப்பில்லை போட்டு தாளித்த பின்னர் பூண்டு, வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், தனி மிளகாய் தூள் சேர்க்கவும்

    அடுத்து தக்காளியை சேர்த்து அத்துடன் பச்சை மிளகாய், மிளகாய் தூள், உப்பு சேர்க்கவும்.

    பின்னர் புளிக்கரைசலை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை அடுப்பை சிம்மில் வைத்து கொதிக்கவிடவும்.

    பின்னர் தேங்காய் பால் தேவைக்கு சேர்க்கவும்.

    குழம்பு நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் முட்டையை தனித்தனியாக பவுலில் உடைத்து ஒவ்வொன்றாக இடைவெளி விட்டு விட்டு கொதிக்கும் குழம்பில் ஊற்றவும்.5 லிருந்து பத்து நிமிடம் மூடி போட்டு சிம்மில் வைத்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

    சுவையான முட்டை சால்னா ரெடி.

    பின் குறிப்பு: தேங்காய்ப்பால் சேர்த்து கொதிக்க விடும்போது தேவைக்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கலாம். முட்டையை ஊற்றிய பிறகு அதிக நேரம் அடுப்பில் வைத்தால் கிரேவி வற்றிவிடும். அதனால் சிறிது நேரத்தில் அடுப்பை அணைத்து விடவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சப்பாத்தி, பூரி, சாதம், புலாவ், நாண், இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த முட்டை உருளைக்கிழங்கு கறி. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள்

    முட்டை - 4
    உருளைக்கிழங்கு - 1
    தக்காளி - 1
    மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
    மல்லித்தூள் - 2 மேஜைக்கரண்டி
    சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
    மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி 
    மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு
    தேங்காய் துருவல் - 100 கிராம்

    அரைக்க

    இஞ்சி - 1/2 இன்ச் அளவு
    பூண்டு - 3 பல்
    கொத்தமல்லித்தழை - 1 மேஜைக்கரண்டி 

    தாளிக்க

    எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
    பட்டை - 1 இன்ச் அளவு
    கிராம்பு - 2
    வெங்காயம் - 1/4 பங்கு
    கறிவேப்பிலை - சிறிது



    செய்முறை  :

    உருளைக்கிழங்கை தோலுரித்து நீள வாக்கில் நறுக்கி கொள்ளவும்.

    தக்காளியை நீள வாக்கில் வெட்டி வைக்கவும்.

    இஞ்சி, பூண்டு, கொத்தமல்லித்தழையை அரைத்துக் கொள்ளவும்.

    தேங்காயுடன் தண்ணீர் சேர்த்து அரைத்து முதல் பால், இரண்டாம் பால் எடுத்து தனியாக வைக்கவும்.

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு, கொத்தமல்லித்தழை அரைத்த கலவையை போட்டு வதக்கவும்.

    அடுத்து உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து சிறிது நேரம் இரண்டாம் தேங்காய் பாலை ஊற்றவும்.

    அவற்றுடன் மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், மஞ்சள்தூள், உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து கொதிக்க விடவும்.

    உருளைக்கிழங்கு நன்கு வெந்து மசாலா வாடை போனதும் முட்டைகளை உடைத்து ஊற்றி அடுப்பை சிம்மில் வைத்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.

    பின்னர் முதலில் எடுத்த தேங்காய்பாலை ஊற்றி நன்றாக கலக்கி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.

    சுவையான முட்டை உருளைக்கிழங்கு கறி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×