என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
ஒருசில நோயாளிகள் மட்டும் வெந்நீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். எந்த நோயாளிகள், எதனால் சுடுநீரில் குளிக்கக்கூடாது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
வெந்நீரில் குளிப்பதால் ரத்த நாளங்கள் விரிவடைந்து, உடலின் அனைத்து உறுப்புகளிலும் ரத்த ஓட்டம் அதிகரித்து புத்துணர்ச்சி கிடைக்கும். தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்தால் அதில் உள்ள கிருமிகள் அனைத்தும் அழிந்து விடும். எனவே காலை மற்றும் மாலை என்று இருவேளையும் வெந்நீரில் குளிப்பது மிகவும் நல்லது.
சளி காரணமாக மூக்கடைப்பு உள்ளவர்கள் சுவாசிப்பது கடினமாக இருக்கும். இது போன்ற நேரங்களில் வெந்நீரில் குளிப்பதால் மூக்கடைப்பு நீங்கி சுவாசம் சீராகும்.
ஆனால் ஒருசில நோயாளிகள் மட்டும் வெந்நீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். சொரியாசிஸ் போன்ற சரும பிரச்சினை உள்ளவர்களுக்கு வெந்நீரில் குளித்தால் அந்த நோயின் தன்மை அதிகரித்து அரிப்பு ஏற்படும்.
எனவே சொரியாசிஸ் மற்றும் பொடுகு பிரச்சினை உள்ளவர்கள் சுடுநீரில் குளிப்பதைத் தவிர்ப்பது நல்லது.

சர்க்கரை நோய் முற்றிய நிலையில் உள்ளவர்கள் சருமத்தின் உணர்வுத்திறன் குறைவாக இருக்கும். எனவே இவர்கள் அதிக சூடான நீரில் குளிக்க கூடாது. இல்லையெனில் உடலில் ஆங்காங்கே கொப்புளங்கள் ஏற்படும்.
நீரை அளவுக்கு அதிகமாக கொதிக்க வைத்து குளிக்கக் கூடாது. ஏனெனில் அதனால் சருமம் மற்றும் முடிகளில் உள்ள ஈரப்பதம் குறைந்து, சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படும்.
அதிகமான சூட்டில் குளிப்பதால் கால்களில் வெடிப்பு ஏற்படுவதுடன், உயிரணுக்கள் பாதிக்கப்பட்டு மலட்டுத்தன்மை வர கூட வாய்ப்பு உள்ளது.
குறிப்பு
சில நோயாளிகள் வெந்நீரில் துணியை நனைத்து உடலை சுத்தம் செய்வார்கள், ஆனால் அவ்வாறு செய்வதால் உடலில் உள்ள அழுக்குகள் அப்படியே தங்கிவிடும், எனவே வெந்நீரில் குளிப்பது நல்லது.
சளி காரணமாக மூக்கடைப்பு உள்ளவர்கள் சுவாசிப்பது கடினமாக இருக்கும். இது போன்ற நேரங்களில் வெந்நீரில் குளிப்பதால் மூக்கடைப்பு நீங்கி சுவாசம் சீராகும்.
ஆனால் ஒருசில நோயாளிகள் மட்டும் வெந்நீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். சொரியாசிஸ் போன்ற சரும பிரச்சினை உள்ளவர்களுக்கு வெந்நீரில் குளித்தால் அந்த நோயின் தன்மை அதிகரித்து அரிப்பு ஏற்படும்.
எனவே சொரியாசிஸ் மற்றும் பொடுகு பிரச்சினை உள்ளவர்கள் சுடுநீரில் குளிப்பதைத் தவிர்ப்பது நல்லது.

சர்க்கரை நோய் முற்றிய நிலையில் உள்ளவர்கள் சருமத்தின் உணர்வுத்திறன் குறைவாக இருக்கும். எனவே இவர்கள் அதிக சூடான நீரில் குளிக்க கூடாது. இல்லையெனில் உடலில் ஆங்காங்கே கொப்புளங்கள் ஏற்படும்.
நீரை அளவுக்கு அதிகமாக கொதிக்க வைத்து குளிக்கக் கூடாது. ஏனெனில் அதனால் சருமம் மற்றும் முடிகளில் உள்ள ஈரப்பதம் குறைந்து, சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படும்.
அதிகமான சூட்டில் குளிப்பதால் கால்களில் வெடிப்பு ஏற்படுவதுடன், உயிரணுக்கள் பாதிக்கப்பட்டு மலட்டுத்தன்மை வர கூட வாய்ப்பு உள்ளது.
குறிப்பு
சில நோயாளிகள் வெந்நீரில் துணியை நனைத்து உடலை சுத்தம் செய்வார்கள், ஆனால் அவ்வாறு செய்வதால் உடலில் உள்ள அழுக்குகள் அப்படியே தங்கிவிடும், எனவே வெந்நீரில் குளிப்பது நல்லது.
இந்த பொரி உப்புமாவை காலை உணவாகவோ, மாலையில் சிற்றுண்டியாகவோ சாப்பிடலாம். எளிதில் செய்யக்கூடிய இந்த பொரி உப்புமா செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
பொரி - 2 கப்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
கேரட் - 3 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
மஞ்சள் - ¼ டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
கடுகு - ½ தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கடலை பருப்பு - 2 தேக்கரண்டி
வேர்க்கடலை - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை :
வெங்காயம், ப.மிளகாய், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பொரியை நன்கு அலசி ஒரு வடிகட்டியில் தண்ணீரை முற்றிலுமாக வடியும்படி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் சூடாக்கி, கடுகு போட்டு வெடித்ததும், உளுந்து, கடலைப்பருப்பு மற்றும் வேர்க்கடலை சேர்த்து குறைந்த தீயில் வறுக்கவும்.
அடுத்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கேரட், கறிவேப்பிலை சேர்த்து, வதக்கவும்.
அடுத்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலந்து விடவும்.
கடைசியாக தண்ணீர் இல்லாமல் வடிந்த பொரியை சேர்த்து, மேலும் ஒரு நிமிடம் வதக்கி, இறக்கவும்.
எலுமிச்சம் பழ சாறு சேர்த்து கலந்து பரிமாறவும்..
சூப்பரான எளிதில் செய்யக்கூடிய பொரி உப்புமா ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பொரி - 2 கப்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
கேரட் - 3 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
மஞ்சள் - ¼ டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
கடுகு - ½ தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கடலை பருப்பு - 2 தேக்கரண்டி
வேர்க்கடலை - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை :
வெங்காயம், ப.மிளகாய், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பொரியை நன்கு அலசி ஒரு வடிகட்டியில் தண்ணீரை முற்றிலுமாக வடியும்படி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் சூடாக்கி, கடுகு போட்டு வெடித்ததும், உளுந்து, கடலைப்பருப்பு மற்றும் வேர்க்கடலை சேர்த்து குறைந்த தீயில் வறுக்கவும்.
அடுத்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கேரட், கறிவேப்பிலை சேர்த்து, வதக்கவும்.
அடுத்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலந்து விடவும்.
கடைசியாக தண்ணீர் இல்லாமல் வடிந்த பொரியை சேர்த்து, மேலும் ஒரு நிமிடம் வதக்கி, இறக்கவும்.
எலுமிச்சம் பழ சாறு சேர்த்து கலந்து பரிமாறவும்..
சூப்பரான எளிதில் செய்யக்கூடிய பொரி உப்புமா ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பெண்களே ஒவ்வொரு துணியையும் அலசுவதற்கு முன் அதன் பராமரிப்பு முறைகளை, துணிகளில் ஒட்டப்பட்டு இருக்கும் லேபிள்களில் பார்த்து படித்து கொண்டு செய்தால் துணிகளின் ஆயுள் காலத்தை நீடிக்கலாம்.
ஒவ்வொரு துணியையும் அலசுவதற்கு முன் அதன் பராமரிப்பு முறைகளை, துணிகளில் ஒட்டப்பட்டு இருக்கும் லேபிள்களில் பார்த்து படித்து கொண்டு செய்தால் துணிகளின் ஆயுள் காலத்தை நீடிக்கலாம். ‘ஆள் பாதி, ஆடை பாதி’ என்பது பழமொழி. மேலும், ‘ஆடையில்லா மனிதன் அரைமனிதன்’ என நம்முடைய முன்னோர்கள் ஆடைகளின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் பல தத்துவங்களை உருவாக்கி இருக்கின்றார்கள். ஒருவரை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுவதில் அவரது ஆடை முக்கியப் பங்கு வகிக்கிறது.
மனிதர்களின் ஆடைகளை பார்த்தே அவர்களது தகுதியை நிர்ணயித்துவிடுவார்கள். ஆகையால் தான் தற்போதைய சூழ்நிலையில், சிறியவர் முதல் பெரியவர்கள் வரை ஆடைகளை வாங்கும் விஷயத்தில் அதிக அளவு முக்கியத்துவம் அளிக்கின்றனர். இதனால்தான் சில ‘ஜவுளிக்கடைகள்’ இப்போது ‘ஜவுளிக் கடல்’ களாக மாறிவருகின்றன. இந்த அளவுக்கு ஆடைகளை வாங்கும் போது கவனம் செலுத்தும் நாம் அதனை பராமரிக்கும் விஷயத்தில் விழிப்புணர்வாக இருக்கிறோமா என்றால் இல்லை.
விலையுயர்ந்த துணிகளை வாங்குகிற நமக்கு, அதைப் பராமரிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். அந்த வகையில் துணியை எந்தெந்த ரக ஆடைகளை எப்படித் துவைக்க வேண்டும் என்றும் அதை எப்படி பாதுகாக்க வேண்டும் என்றும் பார்ப்போம். ஒவ்வொரு துணியையும் அலசுவதற்கு முன் அதன் பராமரிப்பு முறைகளை (துணிகளில் ஒட்டப்பட்டு இருக்கும் லேபிள்களில்) பார்த்து படித்துக்கொள்வது நல்லது. குளிர்ந்த நீரில் அலச வேண்டுமா, காய வைக்கும் முறை, சொட்டு நீர் முறையை பயன்படுத்த வேண்டுமா போன்ற குறிப்புகளை படித்து அதன்படி செய்வது துணியின் தன்மையையும் நிறத்தையும் காக்கலாம்.

1 கப் வினிகர் இருந்தால் போதும் உங்கள் துணி புதிது போல மின்ன வைக்கலாம். டிடர்ஜென்ட் மற்றும் குளிர்ந்த நீர் இல்லாமல் வெறும் வினிகரை கொண்டு அலசினாலே துணிகளில் உள்ள அழுக்கு, வியர்வை நாற்றம் நீங்கி துணிகளின் நிறத்தை அப்படியே புதிது போல் காக்கிறது. உங்கள் துணிகளை வெறுமனே ஒரு பக்கெட் தண்ணீரில் உள்ளங்கை அளவு உப்பு சேர்த்து அதில் ஊற வைத்தால் போதும். பிறகு டிடர்ஜென்ட் கொண்டு குளிர்ந்த நீரில் அலசினால் நல்ல பலன் கிடைக்கும்.
ஆடைகளை திருப்பி போட்டு அதன் உட்புற பகுதியை டிடர்ஜென்ட் கொண்டு அலசினால் அடர்ந்த நிற ஆடைகள் மங்கி போவதை தடுக்கலாம். சூடான நீரில் உங்கள் கைகளைக் கொண்டு ஆடைகளை துவைப்பது நல்லது. 15 நிமிடங்கள் குளிர்ந்த நீரில் மைல்டு டிடர்ஜெண்ட் சேர்த்து 10 நிமிடங்கள் அலசி மிதமான வெயிலில் காய வைத்தால் போதும்.
இதனால் ஆடைகளின் நிறம் மங்காது. சூடான வெப்பநிலை ஆடையிழைகளின் தன்மையை பாதிப்படைய செய்யும். எனவே பெண்களே எப்பொழுதும் குளிர்ந்த நீரில் அலசுவது நல்லது. ஸ்டார்ச் போன்ற கெமிக்கல்கள் பயன்படுத்தி உங்கள் ஆடைகளை சலவை செய்யும் போது அதனால் ஆடைகள் பாதிப்படைய வாய்ப்பு உள்ளது. எனவே இந்த மாதிரியான கெமிக்கல்களை தவிர்ப்பது நல்லது.
மனிதர்களின் ஆடைகளை பார்த்தே அவர்களது தகுதியை நிர்ணயித்துவிடுவார்கள். ஆகையால் தான் தற்போதைய சூழ்நிலையில், சிறியவர் முதல் பெரியவர்கள் வரை ஆடைகளை வாங்கும் விஷயத்தில் அதிக அளவு முக்கியத்துவம் அளிக்கின்றனர். இதனால்தான் சில ‘ஜவுளிக்கடைகள்’ இப்போது ‘ஜவுளிக் கடல்’ களாக மாறிவருகின்றன. இந்த அளவுக்கு ஆடைகளை வாங்கும் போது கவனம் செலுத்தும் நாம் அதனை பராமரிக்கும் விஷயத்தில் விழிப்புணர்வாக இருக்கிறோமா என்றால் இல்லை.
விலையுயர்ந்த துணிகளை வாங்குகிற நமக்கு, அதைப் பராமரிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். அந்த வகையில் துணியை எந்தெந்த ரக ஆடைகளை எப்படித் துவைக்க வேண்டும் என்றும் அதை எப்படி பாதுகாக்க வேண்டும் என்றும் பார்ப்போம். ஒவ்வொரு துணியையும் அலசுவதற்கு முன் அதன் பராமரிப்பு முறைகளை (துணிகளில் ஒட்டப்பட்டு இருக்கும் லேபிள்களில்) பார்த்து படித்துக்கொள்வது நல்லது. குளிர்ந்த நீரில் அலச வேண்டுமா, காய வைக்கும் முறை, சொட்டு நீர் முறையை பயன்படுத்த வேண்டுமா போன்ற குறிப்புகளை படித்து அதன்படி செய்வது துணியின் தன்மையையும் நிறத்தையும் காக்கலாம்.

1 கப் வினிகர் இருந்தால் போதும் உங்கள் துணி புதிது போல மின்ன வைக்கலாம். டிடர்ஜென்ட் மற்றும் குளிர்ந்த நீர் இல்லாமல் வெறும் வினிகரை கொண்டு அலசினாலே துணிகளில் உள்ள அழுக்கு, வியர்வை நாற்றம் நீங்கி துணிகளின் நிறத்தை அப்படியே புதிது போல் காக்கிறது. உங்கள் துணிகளை வெறுமனே ஒரு பக்கெட் தண்ணீரில் உள்ளங்கை அளவு உப்பு சேர்த்து அதில் ஊற வைத்தால் போதும். பிறகு டிடர்ஜென்ட் கொண்டு குளிர்ந்த நீரில் அலசினால் நல்ல பலன் கிடைக்கும்.
ஆடைகளை திருப்பி போட்டு அதன் உட்புற பகுதியை டிடர்ஜென்ட் கொண்டு அலசினால் அடர்ந்த நிற ஆடைகள் மங்கி போவதை தடுக்கலாம். சூடான நீரில் உங்கள் கைகளைக் கொண்டு ஆடைகளை துவைப்பது நல்லது. 15 நிமிடங்கள் குளிர்ந்த நீரில் மைல்டு டிடர்ஜெண்ட் சேர்த்து 10 நிமிடங்கள் அலசி மிதமான வெயிலில் காய வைத்தால் போதும்.
இதனால் ஆடைகளின் நிறம் மங்காது. சூடான வெப்பநிலை ஆடையிழைகளின் தன்மையை பாதிப்படைய செய்யும். எனவே பெண்களே எப்பொழுதும் குளிர்ந்த நீரில் அலசுவது நல்லது. ஸ்டார்ச் போன்ற கெமிக்கல்கள் பயன்படுத்தி உங்கள் ஆடைகளை சலவை செய்யும் போது அதனால் ஆடைகள் பாதிப்படைய வாய்ப்பு உள்ளது. எனவே இந்த மாதிரியான கெமிக்கல்களை தவிர்ப்பது நல்லது.
உள்ளூர அன்பும் மரியாதையும் பரஸ்பரம் இருந்தாலும் அப்பாவுக்கும் குழந்தைகளுக்குமான ஆரோக்கியமான உறவை வளர்ப்பதாக இல்லை நம் குடும்ப அமைப்புகள்.
நம் சமூகத்தில் அன்னையர் தினம் அளவுக்குப் பேசப் படாததும் கொண்டாடப் படாமலும் சப்பென்று கடக்கும் இந்த நாளுக்கு ஏன் இந்த நிலை?
உள்ளூர அன்பும் மரியாதையும் பரஸ்பரம் இருந்தாலும் அப்பாவுக்கும் குழந்தைகளுக்குமான ஆரோக்கியமான உறவை வளர்ப்பதாக இல்லை நம் குடும்ப அமைப்புகள்.
எந்த அளவுக்குத் தாய்மையைப் பெண்ணுக்கான உணர்வாக மட்டுமே வைத்துப் போற்றிக் கொண்டாடி வருகிறதோ, அதே அளவு ஆணை விலக்கி வைத்து விட்டது இச்சமூகம்.
தாய்மை உணர்வு கனியாத, வயது முதிராத இன்னொரு குழந்தையாக ஆணாதிக்கத்தை நிலை நிறுத்தும் கருவியாக மட்டுமே இருக்கிறார்கள் அப்பாக்கள்.
பெரும்பாலான வீடுகளில் வளர்ந்த மகன்களுக்கு அப்பாக்களுடன் பேச ஏதும் இருப்பதில்லை. மகள்களுக்கோ அப்பாவின் ‘குலப்பெருமை’க்குப் பங்கம் வராமல் நடந்து கொள்வதே வாழ்க்கைக் கடமையாக இருக்கிறது. இதில் மகிழ்ச்சி வாய்ந்த உறவுகள் எப்படிச் சாத்தியம்?
“எனக்கு மூணு பசங்க. பசங்க மேல உயிரையே வெச்சிருப்பார். ஆனா எந்தக் கொழந்தையையும் தொட்டுத் தூக்கினதே இல்லை. பசங்களும் எது வேணாலும் என்னைத் தான் கேப்பாங்க; அவர் ரொம்பக் கண்டிப்பு!”என்று பூரித்துக் கொள்ளும் அம்மாக்கள் நம்மிடம் சகஜம்.
சென்ற தலைமுறை அப்பாக்கள் பெரும்பாலும் இந்த வெறைப்பு வீரப்பாக்கள் தாம்.

ஆணாதிக்கம் கோலோச்சும் வீடுகளில் அப்பாக்கள் நிலைமை ரொம்பவே பரிதாபம். எட்டு தோட்டாக்களில் என்ற படத்தில் பாஸ்கர் பேசும் வசனம் மனதை உருக்குவதாக இருக்கும்.
வயதான காலத்தில் வளர்ந்த பிள்ளைகளிடமிருந்து முற்றும் அன்னியப்பட்டு விட்ட அவர் சொல்வார், “எனக்குத் தெரியும், என் குழந்தைங்க நினைக்கிறாங்க. அம்மா உயிரோட இருந்திருந்தா வாய்க்கு ருசியா சமைச்சுப் போடுவாங்க, குழந்தைகளைப் பார்த்துப்பாங்க, பேசிக்கிட்டு கலகலப்பா இருப்பாங்க; அப்பா இருக்க அம்மா போயிட்டாங்களேன்னு”என்று.
பிள்ளைகள் அவ்வாறு நினைக்காவிட்டாலும், பெரும்பாலான ஆண்களுக்குக் காலப் போக்கில் தோன்றும் வலிமிகுந்த இந்த உணர்வு மெட்றாஸ் படத்தில், வேலை முடிந்து வீட்டுக்கு வரும் மகளுக்கு தோசை சுட்டுக் கொடுப்பார் அப்பா. காதலனை நினைத்து மருகிக் கொண்டிருக்கும் அவளை, “ஏய், தட்டுல தோசையப் பாரு”என்று கரண்டியால் தட்டி விட்டுப் போகும் அப்பா மீது பேரன்பும் மதிப்பும் பெருகியது.
இத்தனைக்கும் படத்தின் மையக்கரு அப்பா மகள் பாசமெல்லாம் இல்லை. வீடு என்றால் இப்படித் தான் இருக்கும் என்பதாக அமைந்த அந்தக் காட்சி அவ்வளவு பிடித்துப் போனது.
அம்மா என்றால் கிச்சனுக்குள் நிற்பது போன்ற? படத்தையும், அப்பா என்றால் ஈசிசேரில் அமர்ந்து புத்தகம் படிப்பது போன்ற படத்தையும் இன்னும் நம் குழந்தைகளின் பாடப்புத்தகங்களிலிருந்து அகற்ற முடியாமல் இருக்கும் அவலமான சமூகச் சூழலில் இது போல் யதார்த்தங்களுக்கு இயல்பாய் வேறு நிறம் பூசும் நடவடிக்கைகள் நடக்க வேண்டும்.
நகம் வெட்டுவது, பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு தேவையானவற்றை செய்வது குழந்தைகளுக்கு மட்டுமல்ல, வளர்ந்த பிள்ளைகளுக்கும் ஈகோ பார்க்காமல் பணிவிடை செய்யும் இளைய தலைமுறை அப்பாக்கள் பலரையும் பார்க்க அவ்வளவு அழகாக இருக்கிறது.
அது போன்ற குடும்பச்சூழலில் வளரும் மகள்கள் மட்டுமே தன்னம்பிக்கை மிகுந்தவர்களாகவும் மகன்கள் பெண்கள் குறித்த ஆரோக்கியமான பார்வை உள்ளவர்களாகவும் இருப்பார்கள். சனிக்கிழமை அலுவலகத்தில் ஒரு நாள் பயணம் முடிவானது.
காலை ஆறு மணிக்குக் கிளம்ப வேண்டும். ஒன்றரை வயதான என் இளைய மகளுக்கு லேசாக உடல் கொதித்தது. “நான் போகலை. மனசு கேக்கலை” என்று தயங்கிய போது, “எனக்கு இன்னிக்கு லீவ் தானே? நான் பார்த்துக்க மாட்டேனா?” என்று கடிந்து கொண்டு அனுப்பி வைத்தார் அவளது அப்பா. பயணம் முடிந்து நான் திரும்பிய போது அப்பாவுடன் சிரித்து விளையாடிக் கொண்டிருந்தாள் குழந்தை.
சென்ற தலைமுறையில் பெண்ணியமும், பெரியாரியமும், முற்போக்கும் பேசிய ஆண்களின் வீட்டுக்குள் சென்று பார்த்தால் அவர்கள் பேசும் புரட்சிக் கருத்துகள் சிரிப்பாய்ச் சிரிக்கும். சமூகத்தைத் திருத்தக் கிளம்பிய இவர்கள் வீட்டுக்குள் அன்னியப்பட்டுப் போனதும் சரியான அப்பாக்களாக இல்லாமல் போனது தான்.
பெண்களுக்கு சமூகம் கொடுக்கும் அழுத்தங்களின் மூலம் விளையும் குற்றவுணர்ச்சியைப் போக்குபவர்களாகவும் இருக்கும் அப்பாக்களே ஆண் பெண் சமத்துவத்தைக் குடும்பத்துக்குள் தொடங்கி சமூகத்தில் நிலைக்கச் செய்ய முடியும்.
ஜெ.தீபலட்சுமி
உள்ளூர அன்பும் மரியாதையும் பரஸ்பரம் இருந்தாலும் அப்பாவுக்கும் குழந்தைகளுக்குமான ஆரோக்கியமான உறவை வளர்ப்பதாக இல்லை நம் குடும்ப அமைப்புகள்.
எந்த அளவுக்குத் தாய்மையைப் பெண்ணுக்கான உணர்வாக மட்டுமே வைத்துப் போற்றிக் கொண்டாடி வருகிறதோ, அதே அளவு ஆணை விலக்கி வைத்து விட்டது இச்சமூகம்.
தாய்மை உணர்வு கனியாத, வயது முதிராத இன்னொரு குழந்தையாக ஆணாதிக்கத்தை நிலை நிறுத்தும் கருவியாக மட்டுமே இருக்கிறார்கள் அப்பாக்கள்.
பெரும்பாலான வீடுகளில் வளர்ந்த மகன்களுக்கு அப்பாக்களுடன் பேச ஏதும் இருப்பதில்லை. மகள்களுக்கோ அப்பாவின் ‘குலப்பெருமை’க்குப் பங்கம் வராமல் நடந்து கொள்வதே வாழ்க்கைக் கடமையாக இருக்கிறது. இதில் மகிழ்ச்சி வாய்ந்த உறவுகள் எப்படிச் சாத்தியம்?
“எனக்கு மூணு பசங்க. பசங்க மேல உயிரையே வெச்சிருப்பார். ஆனா எந்தக் கொழந்தையையும் தொட்டுத் தூக்கினதே இல்லை. பசங்களும் எது வேணாலும் என்னைத் தான் கேப்பாங்க; அவர் ரொம்பக் கண்டிப்பு!”என்று பூரித்துக் கொள்ளும் அம்மாக்கள் நம்மிடம் சகஜம்.
சென்ற தலைமுறை அப்பாக்கள் பெரும்பாலும் இந்த வெறைப்பு வீரப்பாக்கள் தாம்.

ஆணாதிக்கம் கோலோச்சும் வீடுகளில் அப்பாக்கள் நிலைமை ரொம்பவே பரிதாபம். எட்டு தோட்டாக்களில் என்ற படத்தில் பாஸ்கர் பேசும் வசனம் மனதை உருக்குவதாக இருக்கும்.
வயதான காலத்தில் வளர்ந்த பிள்ளைகளிடமிருந்து முற்றும் அன்னியப்பட்டு விட்ட அவர் சொல்வார், “எனக்குத் தெரியும், என் குழந்தைங்க நினைக்கிறாங்க. அம்மா உயிரோட இருந்திருந்தா வாய்க்கு ருசியா சமைச்சுப் போடுவாங்க, குழந்தைகளைப் பார்த்துப்பாங்க, பேசிக்கிட்டு கலகலப்பா இருப்பாங்க; அப்பா இருக்க அம்மா போயிட்டாங்களேன்னு”என்று.
பிள்ளைகள் அவ்வாறு நினைக்காவிட்டாலும், பெரும்பாலான ஆண்களுக்குக் காலப் போக்கில் தோன்றும் வலிமிகுந்த இந்த உணர்வு மெட்றாஸ் படத்தில், வேலை முடிந்து வீட்டுக்கு வரும் மகளுக்கு தோசை சுட்டுக் கொடுப்பார் அப்பா. காதலனை நினைத்து மருகிக் கொண்டிருக்கும் அவளை, “ஏய், தட்டுல தோசையப் பாரு”என்று கரண்டியால் தட்டி விட்டுப் போகும் அப்பா மீது பேரன்பும் மதிப்பும் பெருகியது.
இத்தனைக்கும் படத்தின் மையக்கரு அப்பா மகள் பாசமெல்லாம் இல்லை. வீடு என்றால் இப்படித் தான் இருக்கும் என்பதாக அமைந்த அந்தக் காட்சி அவ்வளவு பிடித்துப் போனது.
அம்மா என்றால் கிச்சனுக்குள் நிற்பது போன்ற? படத்தையும், அப்பா என்றால் ஈசிசேரில் அமர்ந்து புத்தகம் படிப்பது போன்ற படத்தையும் இன்னும் நம் குழந்தைகளின் பாடப்புத்தகங்களிலிருந்து அகற்ற முடியாமல் இருக்கும் அவலமான சமூகச் சூழலில் இது போல் யதார்த்தங்களுக்கு இயல்பாய் வேறு நிறம் பூசும் நடவடிக்கைகள் நடக்க வேண்டும்.
நகம் வெட்டுவது, பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு தேவையானவற்றை செய்வது குழந்தைகளுக்கு மட்டுமல்ல, வளர்ந்த பிள்ளைகளுக்கும் ஈகோ பார்க்காமல் பணிவிடை செய்யும் இளைய தலைமுறை அப்பாக்கள் பலரையும் பார்க்க அவ்வளவு அழகாக இருக்கிறது.
அது போன்ற குடும்பச்சூழலில் வளரும் மகள்கள் மட்டுமே தன்னம்பிக்கை மிகுந்தவர்களாகவும் மகன்கள் பெண்கள் குறித்த ஆரோக்கியமான பார்வை உள்ளவர்களாகவும் இருப்பார்கள். சனிக்கிழமை அலுவலகத்தில் ஒரு நாள் பயணம் முடிவானது.
காலை ஆறு மணிக்குக் கிளம்ப வேண்டும். ஒன்றரை வயதான என் இளைய மகளுக்கு லேசாக உடல் கொதித்தது. “நான் போகலை. மனசு கேக்கலை” என்று தயங்கிய போது, “எனக்கு இன்னிக்கு லீவ் தானே? நான் பார்த்துக்க மாட்டேனா?” என்று கடிந்து கொண்டு அனுப்பி வைத்தார் அவளது அப்பா. பயணம் முடிந்து நான் திரும்பிய போது அப்பாவுடன் சிரித்து விளையாடிக் கொண்டிருந்தாள் குழந்தை.
சென்ற தலைமுறையில் பெண்ணியமும், பெரியாரியமும், முற்போக்கும் பேசிய ஆண்களின் வீட்டுக்குள் சென்று பார்த்தால் அவர்கள் பேசும் புரட்சிக் கருத்துகள் சிரிப்பாய்ச் சிரிக்கும். சமூகத்தைத் திருத்தக் கிளம்பிய இவர்கள் வீட்டுக்குள் அன்னியப்பட்டுப் போனதும் சரியான அப்பாக்களாக இல்லாமல் போனது தான்.
பெண்களுக்கு சமூகம் கொடுக்கும் அழுத்தங்களின் மூலம் விளையும் குற்றவுணர்ச்சியைப் போக்குபவர்களாகவும் இருக்கும் அப்பாக்களே ஆண் பெண் சமத்துவத்தைக் குடும்பத்துக்குள் தொடங்கி சமூகத்தில் நிலைக்கச் செய்ய முடியும்.
ஜெ.தீபலட்சுமி
கருப்பு உளுந்தில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று கருப்பு உளுந்து, கருப்பட்டி சேர்த்து சத்து நிறைந்த களி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கருப்பு உளுந்து - ஒரு கப்,
கருப்பட்டித்தூள் - ஒரு கப்,
தேங்காய்த் துருவல் - கால் கப்,
நல்லெண்ணெய் - கால் கப்,
பச்சரிசி - 3 டீஸ்பூன்,
ஏலக்காய்த்தூள் - சிட்டிகை.

செய்முறை :
வெறும் வாணலியில் உளுந்து, அரிசியை தனித்தனியாக சேர்த்து வறுத்து ஆற விடவும்.
பிறகு மிக்சியில் நைசாக அரைத்து சலிக்கவும்.
கருப்பட்டியுடன் தேவையான அளவு தண்ணீர் விட்டு ஒரு கொதி விட்டு கரைத்து வடிகட்டவும்.
உளுத்த மாவுடன் தண்ணீர், கருப்பட்டி கரைசல், ஏலக்காய்த்தூள் சேர்த்து கரைத்து அடுப்பில் வைத்து சிறு தீயில் கிளறவும்.
அதனுடன் நல்லெண்ணெய் விட்டு கிளறி பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும் போது கிளறி இறக்கவும்.
சத்து நிறைந்த கருப்பு உளுந்து கருப்பட்டி களி ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கருப்பு உளுந்து - ஒரு கப்,
கருப்பட்டித்தூள் - ஒரு கப்,
தேங்காய்த் துருவல் - கால் கப்,
நல்லெண்ணெய் - கால் கப்,
பச்சரிசி - 3 டீஸ்பூன்,
ஏலக்காய்த்தூள் - சிட்டிகை.

செய்முறை :
வெறும் வாணலியில் உளுந்து, அரிசியை தனித்தனியாக சேர்த்து வறுத்து ஆற விடவும்.
பிறகு மிக்சியில் நைசாக அரைத்து சலிக்கவும்.
கருப்பட்டியுடன் தேவையான அளவு தண்ணீர் விட்டு ஒரு கொதி விட்டு கரைத்து வடிகட்டவும்.
உளுத்த மாவுடன் தண்ணீர், கருப்பட்டி கரைசல், ஏலக்காய்த்தூள் சேர்த்து கரைத்து அடுப்பில் வைத்து சிறு தீயில் கிளறவும்.
அதனுடன் நல்லெண்ணெய் விட்டு கிளறி பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும் போது கிளறி இறக்கவும்.
சத்து நிறைந்த கருப்பு உளுந்து கருப்பட்டி களி ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மாங்காய் சாப்பிடுவது, சாம்பலை ருசிப்பது என கர்ப்ப காலத்தில் பெண்களின் வித்தியாச தேடல் காலங்காலமாகத் தொடர்கிற ஒன்றே. இது குறித்துவிரிவாக அறிந்து கொள்ளலாம்.
மாங்காய் சாப்பிடுவது, சாம்பலை ருசிப்பது என கர்ப்ப காலத்தில் பெண்களின் வித்தியாச தேடல் காலங்காலமாகத் தொடர்கிற ஒன்றே. கர்ப்பிணிப் பெண் கேட்டால் முடியாதெனச் சொல்லாமல், இவற்றை எல்லாம் வாங்கிக் கொடுக்கும் ஆட்கள் நிறைய பேர். மசக்கையின் போது இப்படி காரசார, புளிப்பு உணவுகளை உட்கொள்வது சரிதானா? என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
‘‘கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு உமிழ்நீரின் சுரப்பு அதிகமாக இருக்கும். வாந்தி உணர்வு இருக்கும். மாங்காய், நெல்லிக்காய் மாதிரி புளிப்புப் பொருட்களை சாப்பிட்டால் வாய்க்கு இதமாக இருக்கும். அதே நேரத்தில் புளிப்புப் பொருட்களை அதிகமாக சாப்பிட்டால் வயிற்றில் அமிலத்தன்மையை அதிகமாக்கி நெஞ்செரிச்சல், எதுக்களிப்பு ஆகிய பிரச்னைகளை ஏற்படுத்தும்.

கர்ப்பிணிகளுக்கு பொதுவாக இரும்புச்சத்து குறைவாக இருக்கும். இதனால் சிலர் சாம்பல் சாப்பிடுவதை விரும்புவார்கள். சாம்பலை சாப்பிடவே கூடாது. உப்பும், காரமும் அதிகமுள்ள ஊறுகாயைத் தவிர்க்க வேண்டும். உப்பு அதிகமுள்ள உணவுப்பொருட்களை கர்ப்பிணிகள் சாப்பிட்டால் உயர் ரத்த அழுத்தம் உருவாகும் வாய்ப்புண்டு.
கர்ப்பிணிகள், ஆசைப்பட்ட உணவுகளை அளவோடு சாப்பிட்டுக் கொள்ள வேண்டும். காரமான உணவுகளை சாப்பிட நேர்ந்தால் கடைசியாக தயிரோ அல்லது நீர் மோரோ எடுத்துக்கொண்டால் வயிற்றில் ஏற்படும் அமிலத்தன்மை ஓரளவு குறையும்.’’
‘‘கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு உமிழ்நீரின் சுரப்பு அதிகமாக இருக்கும். வாந்தி உணர்வு இருக்கும். மாங்காய், நெல்லிக்காய் மாதிரி புளிப்புப் பொருட்களை சாப்பிட்டால் வாய்க்கு இதமாக இருக்கும். அதே நேரத்தில் புளிப்புப் பொருட்களை அதிகமாக சாப்பிட்டால் வயிற்றில் அமிலத்தன்மையை அதிகமாக்கி நெஞ்செரிச்சல், எதுக்களிப்பு ஆகிய பிரச்னைகளை ஏற்படுத்தும்.

கர்ப்பிணிகளுக்கு பொதுவாக இரும்புச்சத்து குறைவாக இருக்கும். இதனால் சிலர் சாம்பல் சாப்பிடுவதை விரும்புவார்கள். சாம்பலை சாப்பிடவே கூடாது. உப்பும், காரமும் அதிகமுள்ள ஊறுகாயைத் தவிர்க்க வேண்டும். உப்பு அதிகமுள்ள உணவுப்பொருட்களை கர்ப்பிணிகள் சாப்பிட்டால் உயர் ரத்த அழுத்தம் உருவாகும் வாய்ப்புண்டு.
கர்ப்பிணிகள், ஆசைப்பட்ட உணவுகளை அளவோடு சாப்பிட்டுக் கொள்ள வேண்டும். காரமான உணவுகளை சாப்பிட நேர்ந்தால் கடைசியாக தயிரோ அல்லது நீர் மோரோ எடுத்துக்கொண்டால் வயிற்றில் ஏற்படும் அமிலத்தன்மை ஓரளவு குறையும்.’’
யோக தினமான இன்று (21-6-2018) ஒவ்வொருவரும் மனித வாழ்க்கைக்கு யோகம் எவ்வளவு நன்மை அளிக்கிறது என்று அறிந்து கொள்வது அவசியமாகிறது. #InternationalYogaDay2018 #yoga
இன்று வியாழக்கிழமை (21-6-2018) உலக யோக தினம். யோக தினத்தன்று ஒவ்வொருவரும் மனித வாழ்க்கைக்கு யோகம் எவ்வளவு நன்மை அளிக்கிறது என்று அறிந்து கொள்வது அவசியமாகிறது.
யோகத்தின் சிறப்பு
மனித வாழ்க்கையில் ஒவ்வொருவரும் தான் செல்லும் பாதைகளில் வெற்றியடைய நல்ல உடல், மன ஆரோக்கியம் அவசியமாகிறது. நம் உடல், மூச்சு, மனம் இம்மூன்றின் சேர்க்கையே உயிர் வாழ்க்கையாகிறது. உடல், மூச்சு, மனம் ஆகிய மூன்றில் எது பாதித்தாலும் அது மற்றதை பாதித்து விடுகிறது.
இம்மூன்றையும் சீர்படுத்த ஹடயோகம் உதவுகிறது. பழங்கால பயிற்சி முறையான ஹடயோகம் பாரத நாட்டு யோகிகளால் உபதேசிக்கப்பட்ட உடல், மூச்சு, மனம் மற்றும் ஆன்மா சம்பந்தமான ஓர் அற்புத விஞ்ஞானமாகும். ஹடயோகம்-ஆசனம், பிராணாயாமம், முத்திரை, பந்தம் ஷட்கர்மா, தியானம் என ஆறு முக்கிய அங்கங்களை கொண்டுள்ளது.
யோகத்தில் வரும் ஆசனங்கள். உடலை ஆரோக்கியமடையச் செய்யவும். பிராணாயாமம் மூச்சை ஒழுங்குபடுத்தி நீண்ட ஆயுளை அடையவும், முத்திரைகள் குறிப்பிட்ட நாடி, நரம்புகளில் பிராஹ சக்தியை (மின்காந்த சக்தியை) செலுத்தவும், வந்தங்கள் குறிப்பிட்ட நாடிகளில் பிராண சக்தியை நிலை நிறுத்தவும், ஷட்கர்மா உடலின் உள் உறுப்புகளை தூய்மைப்படுத்தவும், தியானம் மனதை தூய்மைப்படுத்தவும், தனது நிஜவடிவான இறை தன்மையை அறியவும் உதவுகிறது.
தற்கால நவீன மருத்துவம்-எலும்பு மண்டலம், தசை மண்டலம், சுவாச இயக்க மண்டலம், ரத்த சுழற்சி மண்டலம், உணவூட்ட சுழற்சி மண்டலம், கழிவு, நீக்க மண்டலம், மூளை மற்றும் நரம்பு மண்டலம், நாளமில்லா சுரப்பி மண்டலம், என உடல் இயக்கத்தை பிரித்து விவரித்து கூறுகின்றன. யோகப் பயிற்சிகள் இந்த அனைத்து இயக்கங்களும் சரியாக இயங்க உதவுவதோடு மட்டுமல்லாமல் நவீன மருத்துவம் இன்னும் முழுமையாக தெரிந்து கொள்ள முடியாத நுட்ப உடல், காரண உடல் மற்றும் ஆன்மாவை அறிந்து கொள்ளவும் யோகம் வழிகாட்டுகிறது.
எலும்பு மண்டலம்
மனித உடலுக்கு அடிப்படை உருவத்தை எலும்புகள் அமைத்துக் கொடுக்கின்றன. மண்டை ஓடு, முதுகெலும்புத் தொடர், மார்பு எலும்பு, விலா எலும்பு, இடுப்பு எலும்பு, மேற்கை எலும்பு, கீழ்க்கை எலும்பு, தொடை எலும்பு, கால் எலும்பு, விரல் எலும்புகள் எனப் பலவகை எலும்புகள் நம் உடலில் உள்ளன. மூளையிலிருந்து உடலெங்கும் பரவி நிற்கும் நரம்புகள் முதுகெலும்புத் தொடரை சார்ந்து செல்கின்றன. முதுகெலும்புத் தொடர் முன்னோக்கியும், பின் நோக்கியும், பக்கவாட்டிலும் வளையக்கூடிய தன்மை உள்ளவரை, இளமை, சுறுசுறுப்பு நீடிக்கும்.
முறையான ஆசனப் பயிற்சிகள் எலும்புகளை உறுதிப்படுத்தி அவைகளின் இயல்பான வளைவு தன்மையை மிகச் செய்கின்றன. உத்தித திரிகோணாசன நிலை முழு முதுகெலுப்புத் தொடருக்கும், அதிகபட்சமாக 85 (டிகிரி) வரை பக்க வளைவைத் தருகிறது. இடுப்பு-20, மார்பு-20, கழுத்து-35-45 (டிகிரி) வரை வளைவு பெறுகின்றன. இதனால் எலும்புகளில் அமைந்துள்ள அனைத்து பந்தகங்களும் (Ligaments) மற்றும் தசைகளும் நன்கு நீட்சி (Stretch) அடைகின்றன.
சசாங்காசன நிலை சட்டகத்திற்கு முன் நோக்கி 110 வளைவைத் தருகிறது. இந்த ஆசனம் முதுகெலும்பு பந்தகங்களுக்கு ஓய்வளிப்பதுடன் பின்புறத் தசைகளை நீட்சியடையச் செய்கின்றன. மேலும் நிற்கும் நிலையில் இடுப்பு முன்னெலும்பு இடைத்தட்டுகளில் சாதாரணமாய் காணப்படும் அழுத்தத்தை விடுக்கின்றன.

தசை மண்டலம்
உடலின் அசைவுகளுக்கு எலும்புகள் காரணம் என்றால் அந்த எலும்புகளை இயக்குபவை தசைகள்தான் தசைகள் எலும்புகளோடும், மூட்டுகளோடும் தசை நார்களால் இணைக்கப்பட்டுள்ளன. எலும்புகளை மூடி உடலுக்கு வடிவையும், அழகையும் தசைகளே தருகின்றன. ஆசனம் பயிற்சிகள் ஒவ்வொரு தசைகளையும் முறையாக இயக்கி உடலை அழகான வடிவடையதாக்குகிறது மற்றும் பலப்படுத்துகிறது. ஆசனப் பயிற்சியின் மெதுவான இயக்கங்களும் ஆழமான மூச்சும் தசைகளுக்கு பிராணவாயுவின் விநியோகத்தை அதிகரிப்பதால் தசை நார்களில் லாக்டிக் அமிலம் தங்குவதைத் தடுக்கிறது.
பஸ்சிமோந்தாசனம்-முட்டி, பாதம் மற்றும் கழுத்துப் பகுதி எக்ஸ்டென்சார் (extensors) தசைகளை இயக்குவதுடன் முட்டி பந்தகங்கள் மற்றும் முதுகுத்தசைகளை நீட்டியடையச் செய்கிறது. பூர்ண புஜங்காசன நிலையில் முட்டி, பாதம், முதுகெலும்பு மற்றும் கழுத்துப் பகுதிகளில் உள்ள பிளக்சார் தசைகள் இயக்கப்படுகின்றன.
ஆசனங்களின் எதிரெதிராக செயல்படும் ஒவ்வொரு இணைத் தசைகளையும் அடுத்தடுத்து முறையாக செயல்பட வைக்கிறது. எடுத்துக்காட்டா முன் நோக்கி வளையும் பஸ்சிமோத்தாசனத்தையும், பின் நோக்கி வளையும் பூர்ண புஜங்காசனத்தையும் கூறலாம். இத்தகைய மாற்று ஆசனப் பயிற்சிகளினால் தசைகளை இளமையுடனும், மீள் தன்மையுடனும் மேலும் ஒன்றுக்கொன்று சம நிலையிலும் வைக்க முடிகிறது.
சுவாச இயக்க மண்டலம்
உயிர் வாழ்க்கைக்கு அவசியமான பிராண வாயுவை நாம் சுவாசிப்பதன் மூலம் பெறுகிறோம். நுரையீரல்கள் நன்றாக விரிந்தால்தான் நாம் நிறைய பிராண வாயுவைப் பெற முடியும். அதே போல் நுரையீரல்கள் நன்றாகச் சுருங்கினால்தான் நாம் கரியமில வாயுவை அதிக அளவு வெளியேற்ற முடியும். உடம்பு நிமிர்ந்த நிலையில் இருக்கும் போது இது எளிதாக நடைபெறும். ஆனால் மக்களில் அநேகம் பேர் உடலை எப்போதும் கூனி குறுகியபடி வைத்துக் கொள்வதால் சுவாச இயக்கம் சீராக நடைபெற இயலுவதில்லை.
ஒவ்வாமை, ஆஸ்துமா போன்றவற்றினால் பாதிக்கப்படும் போது நுரையீரல்களின் சிறுகுழல்கள் மற்றும் காற்று நுண்ணுறைகள் இறுக்கமடைகின்றன. சுவாசத் தசை நார்கள் வலுவிழக்கின்றன. நோயின் தன்மை அதிகரிக்கும் போது அசுத்தக் காற்றை வெளியேற்றவோ, சுத்தக் காற்றை உட்கொள்ளவோ முடியாமல் நோயாளிகள் மிகவும் துன்பப்படுவர்.
புஜங்காசன, உஷ்ட்ராசனம், மதஸ்யாசனம் போன்ற ஆசனங்களும், கபால பாத்தி போன்ற வயிற்று சுவாச பயிற்சிகளும் சுவாச இயக்கத்திற்கு உதவும் மூச்சு, சுவாச குழல், உதரவிதானம், மார்புக்கூடு, விலா இடைத் தசைகள் மற்றும் நுரையீல்களின் செயலை சீர்படுத்தி எல்லா சுவாச பணிகளையும் மேம்படுத்துகிறது. நாடி சோதனா போன்ற பிராணாயாமப் பயிற்சியினால் சாதாரண மூச்சில் நுரையீரல்களுக்கு செல்லும் காற்றின் அளவைவிட ஐந்து மடங்கு காற்று அதிகமாக நுரையீரல்களுக்கு செல்வதுடன் வலுவான தசைகளை உருவாக்குகின்றன.

ரத்த சுழற்சி மண்டலம்
உடலில் பல பாகங்களில் வளர்சிதை மாற்றத்தின்போது ஏற்படும் கழிவுகள் கலந்த அசுத்த ரத்தத்தை சிரைகளின் வழியாக இருதயம் பெற்று நுரையீரல்களுக்கு அனுப்பி, பிராணவாயு கலந்த சுத்த ரத்தமாக மாற்றி, மீண்டும் நுரையீரல்களிலிருந்து இருதயம் பெற்று, இருதயத்திலிருந்து வெளியேறும் தமனிகள் (Artevie) வழியாக உடல் முழுவதும் சுத்த ரத்தத்தை பாய்ச்சுகிறது.
ரத்தம் பிராண வாயுவையும், ஜீரண உறுப்புகள் உணவிலிருந்து கிரகித்துத் தரும் சத்துக்களையும் நாளமில்லா சுரப்பிகள் சுரக்கும் ஹார்மோன்களையும் உடலின் திசுக்களுக்கு வழங்கி உடலில் ஆங்காங்கே வெளிப்படும் கழிவுகளையும், கரியமில வாயுவையும், சிறுநீரகங்கள், சருமம் மற்றும் நுரையீரல்களுக்கு எடுத்துச் செல்லும் பணியை செய்கிறது.
ரத்த சுழற்சி என்பது ஒரு ஆரோக்கியமான இருதயத்தையும், முதன்மை தமனிகள் மற்றும் சிரைகளில் (Veines) இருந்து சிறிய நுண் ரத்தக்குழல்கள் வரை மீள்தன்மை மற்றும் அடைப்புகள் அற்ற ரத்த நாளங்களையும் நம்பியுள்ளது.
அனைத்து ஆசனங்களும், குறிப்பாக சிரசாசனம், சர்வாங்காசனம் போன்ற தலைகீழாக வரும்படி செய்யும் ஆசனப் பயிற்சிகள் ரத்த சுழற்சிக்கு நன்மை அளிக்கிறது. தலைகீழாக நிற்கும் போது புவி ஈர்ப்பு விசையின் விளைவை மாற்றி அமைப்பதால் இருதயம் தரும் அழுத்தம் இன்றியே தலைக்கும், கழுத்திற்கும் ரத்தம் கீழ்நோக்கி ஓடி வருகிறது. இதனால் இருதயம் ஓய்வு பெற்று மீண்டும் நன்கு இயங்கும் ஆற்றலை பெறுகிறது.
உடலின் தலைகீழ் பயிற்சியான ஆசனங்கள் வால்வுகளும், சிரைச்சுவர்களும் ஓய்வு பெற உதவுகின்றன. சில குறிப்பிட்ட ஆசனங்கள் வெரிகோஸ் நிலையை வராமல் தடுப்பதுடன் அந்தக் குறைபாட்டை அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தவும் பயன்படுகிறது.
பொதுவாக ஆசனப் பயிற்சிகள் உடல் தசைகளை மெதுவாக அமுக்குவது போல செய்வதால், திசுக்களில் உள்ள தேவையற்ற கழிவுகளை கொண்ட திரவங்களை வெளியேற்றுகிறது. மேலும் திசுக்களை நீட்சி அடைய வைப்பதால் புதிய வாழ்வு தரும் உணவுப் பொருட்கள் மற்றும் ஆற்றல் ஆகியவை கொண்ட திரவங்கள் உட்செல்ல வைக்கிறது.
உத்ரவிதானத்தின் சுவாச அசைவுகள் ஜீரண உறுப்புகளை தொடர்ச்சியாக அமுக்கிவிடுவதால் அவற்றை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. அக்னிசாரா கிரியா உதரவிதானத்தை நேரடியாக பலப்படுத்த உதவுகிறது. புஜங்காசனம், சவாசனம் போன்ற பின் வளைந்து செய்யும் ஆசனங்களும் தண்டுவட சுழற்ப்பயிற்சியான அர்த்த மத்ஸ்பேந்திராசனம் ஆகியவையும், உதரவிதானம் மற்றும் வயிற்றிலுள்ள முக்கியமான உறுப்புகளை அமுக்கி விடுவதன்மூலம் ஜீரண கருவிகளின் கோளாறுகளை நீக்கி அவ்வுறுப்புகள் நல்ல ஆரோக்கியத்துடன் செயல்பட வைக்கிறது.
மேலும் கழிவு நீக்க மண்டலம், மூளை மற்றும் நரம்பு மண்டலம், நாளமில்லா சுரப்பி மண்டலம் போன்ற எல்லா மண்டலங்களும் நன்கு இயங்க, குறைபாடுகள் நீங்க யோகப்பயிற்சி உதவுகிறது.
யோகத்தை பயிலுங்கள் உடல் மன ஆரோக்கியத்துடன் வாழுங்கள். #InternationalYogaDay2018 #yoga
யோகத்தின் சிறப்பு
மனித வாழ்க்கையில் ஒவ்வொருவரும் தான் செல்லும் பாதைகளில் வெற்றியடைய நல்ல உடல், மன ஆரோக்கியம் அவசியமாகிறது. நம் உடல், மூச்சு, மனம் இம்மூன்றின் சேர்க்கையே உயிர் வாழ்க்கையாகிறது. உடல், மூச்சு, மனம் ஆகிய மூன்றில் எது பாதித்தாலும் அது மற்றதை பாதித்து விடுகிறது.
இம்மூன்றையும் சீர்படுத்த ஹடயோகம் உதவுகிறது. பழங்கால பயிற்சி முறையான ஹடயோகம் பாரத நாட்டு யோகிகளால் உபதேசிக்கப்பட்ட உடல், மூச்சு, மனம் மற்றும் ஆன்மா சம்பந்தமான ஓர் அற்புத விஞ்ஞானமாகும். ஹடயோகம்-ஆசனம், பிராணாயாமம், முத்திரை, பந்தம் ஷட்கர்மா, தியானம் என ஆறு முக்கிய அங்கங்களை கொண்டுள்ளது.
யோகத்தில் வரும் ஆசனங்கள். உடலை ஆரோக்கியமடையச் செய்யவும். பிராணாயாமம் மூச்சை ஒழுங்குபடுத்தி நீண்ட ஆயுளை அடையவும், முத்திரைகள் குறிப்பிட்ட நாடி, நரம்புகளில் பிராஹ சக்தியை (மின்காந்த சக்தியை) செலுத்தவும், வந்தங்கள் குறிப்பிட்ட நாடிகளில் பிராண சக்தியை நிலை நிறுத்தவும், ஷட்கர்மா உடலின் உள் உறுப்புகளை தூய்மைப்படுத்தவும், தியானம் மனதை தூய்மைப்படுத்தவும், தனது நிஜவடிவான இறை தன்மையை அறியவும் உதவுகிறது.
தற்கால நவீன மருத்துவம்-எலும்பு மண்டலம், தசை மண்டலம், சுவாச இயக்க மண்டலம், ரத்த சுழற்சி மண்டலம், உணவூட்ட சுழற்சி மண்டலம், கழிவு, நீக்க மண்டலம், மூளை மற்றும் நரம்பு மண்டலம், நாளமில்லா சுரப்பி மண்டலம், என உடல் இயக்கத்தை பிரித்து விவரித்து கூறுகின்றன. யோகப் பயிற்சிகள் இந்த அனைத்து இயக்கங்களும் சரியாக இயங்க உதவுவதோடு மட்டுமல்லாமல் நவீன மருத்துவம் இன்னும் முழுமையாக தெரிந்து கொள்ள முடியாத நுட்ப உடல், காரண உடல் மற்றும் ஆன்மாவை அறிந்து கொள்ளவும் யோகம் வழிகாட்டுகிறது.
எலும்பு மண்டலம்
மனித உடலுக்கு அடிப்படை உருவத்தை எலும்புகள் அமைத்துக் கொடுக்கின்றன. மண்டை ஓடு, முதுகெலும்புத் தொடர், மார்பு எலும்பு, விலா எலும்பு, இடுப்பு எலும்பு, மேற்கை எலும்பு, கீழ்க்கை எலும்பு, தொடை எலும்பு, கால் எலும்பு, விரல் எலும்புகள் எனப் பலவகை எலும்புகள் நம் உடலில் உள்ளன. மூளையிலிருந்து உடலெங்கும் பரவி நிற்கும் நரம்புகள் முதுகெலும்புத் தொடரை சார்ந்து செல்கின்றன. முதுகெலும்புத் தொடர் முன்னோக்கியும், பின் நோக்கியும், பக்கவாட்டிலும் வளையக்கூடிய தன்மை உள்ளவரை, இளமை, சுறுசுறுப்பு நீடிக்கும்.
முறையான ஆசனப் பயிற்சிகள் எலும்புகளை உறுதிப்படுத்தி அவைகளின் இயல்பான வளைவு தன்மையை மிகச் செய்கின்றன. உத்தித திரிகோணாசன நிலை முழு முதுகெலுப்புத் தொடருக்கும், அதிகபட்சமாக 85 (டிகிரி) வரை பக்க வளைவைத் தருகிறது. இடுப்பு-20, மார்பு-20, கழுத்து-35-45 (டிகிரி) வரை வளைவு பெறுகின்றன. இதனால் எலும்புகளில் அமைந்துள்ள அனைத்து பந்தகங்களும் (Ligaments) மற்றும் தசைகளும் நன்கு நீட்சி (Stretch) அடைகின்றன.
சசாங்காசன நிலை சட்டகத்திற்கு முன் நோக்கி 110 வளைவைத் தருகிறது. இந்த ஆசனம் முதுகெலும்பு பந்தகங்களுக்கு ஓய்வளிப்பதுடன் பின்புறத் தசைகளை நீட்சியடையச் செய்கின்றன. மேலும் நிற்கும் நிலையில் இடுப்பு முன்னெலும்பு இடைத்தட்டுகளில் சாதாரணமாய் காணப்படும் அழுத்தத்தை விடுக்கின்றன.

தசை மண்டலம்
உடலின் அசைவுகளுக்கு எலும்புகள் காரணம் என்றால் அந்த எலும்புகளை இயக்குபவை தசைகள்தான் தசைகள் எலும்புகளோடும், மூட்டுகளோடும் தசை நார்களால் இணைக்கப்பட்டுள்ளன. எலும்புகளை மூடி உடலுக்கு வடிவையும், அழகையும் தசைகளே தருகின்றன. ஆசனம் பயிற்சிகள் ஒவ்வொரு தசைகளையும் முறையாக இயக்கி உடலை அழகான வடிவடையதாக்குகிறது மற்றும் பலப்படுத்துகிறது. ஆசனப் பயிற்சியின் மெதுவான இயக்கங்களும் ஆழமான மூச்சும் தசைகளுக்கு பிராணவாயுவின் விநியோகத்தை அதிகரிப்பதால் தசை நார்களில் லாக்டிக் அமிலம் தங்குவதைத் தடுக்கிறது.
பஸ்சிமோந்தாசனம்-முட்டி, பாதம் மற்றும் கழுத்துப் பகுதி எக்ஸ்டென்சார் (extensors) தசைகளை இயக்குவதுடன் முட்டி பந்தகங்கள் மற்றும் முதுகுத்தசைகளை நீட்டியடையச் செய்கிறது. பூர்ண புஜங்காசன நிலையில் முட்டி, பாதம், முதுகெலும்பு மற்றும் கழுத்துப் பகுதிகளில் உள்ள பிளக்சார் தசைகள் இயக்கப்படுகின்றன.
ஆசனங்களின் எதிரெதிராக செயல்படும் ஒவ்வொரு இணைத் தசைகளையும் அடுத்தடுத்து முறையாக செயல்பட வைக்கிறது. எடுத்துக்காட்டா முன் நோக்கி வளையும் பஸ்சிமோத்தாசனத்தையும், பின் நோக்கி வளையும் பூர்ண புஜங்காசனத்தையும் கூறலாம். இத்தகைய மாற்று ஆசனப் பயிற்சிகளினால் தசைகளை இளமையுடனும், மீள் தன்மையுடனும் மேலும் ஒன்றுக்கொன்று சம நிலையிலும் வைக்க முடிகிறது.
சுவாச இயக்க மண்டலம்
உயிர் வாழ்க்கைக்கு அவசியமான பிராண வாயுவை நாம் சுவாசிப்பதன் மூலம் பெறுகிறோம். நுரையீரல்கள் நன்றாக விரிந்தால்தான் நாம் நிறைய பிராண வாயுவைப் பெற முடியும். அதே போல் நுரையீரல்கள் நன்றாகச் சுருங்கினால்தான் நாம் கரியமில வாயுவை அதிக அளவு வெளியேற்ற முடியும். உடம்பு நிமிர்ந்த நிலையில் இருக்கும் போது இது எளிதாக நடைபெறும். ஆனால் மக்களில் அநேகம் பேர் உடலை எப்போதும் கூனி குறுகியபடி வைத்துக் கொள்வதால் சுவாச இயக்கம் சீராக நடைபெற இயலுவதில்லை.
ஒவ்வாமை, ஆஸ்துமா போன்றவற்றினால் பாதிக்கப்படும் போது நுரையீரல்களின் சிறுகுழல்கள் மற்றும் காற்று நுண்ணுறைகள் இறுக்கமடைகின்றன. சுவாசத் தசை நார்கள் வலுவிழக்கின்றன. நோயின் தன்மை அதிகரிக்கும் போது அசுத்தக் காற்றை வெளியேற்றவோ, சுத்தக் காற்றை உட்கொள்ளவோ முடியாமல் நோயாளிகள் மிகவும் துன்பப்படுவர்.
புஜங்காசன, உஷ்ட்ராசனம், மதஸ்யாசனம் போன்ற ஆசனங்களும், கபால பாத்தி போன்ற வயிற்று சுவாச பயிற்சிகளும் சுவாச இயக்கத்திற்கு உதவும் மூச்சு, சுவாச குழல், உதரவிதானம், மார்புக்கூடு, விலா இடைத் தசைகள் மற்றும் நுரையீல்களின் செயலை சீர்படுத்தி எல்லா சுவாச பணிகளையும் மேம்படுத்துகிறது. நாடி சோதனா போன்ற பிராணாயாமப் பயிற்சியினால் சாதாரண மூச்சில் நுரையீரல்களுக்கு செல்லும் காற்றின் அளவைவிட ஐந்து மடங்கு காற்று அதிகமாக நுரையீரல்களுக்கு செல்வதுடன் வலுவான தசைகளை உருவாக்குகின்றன.

ரத்த சுழற்சி மண்டலம்
உடலில் பல பாகங்களில் வளர்சிதை மாற்றத்தின்போது ஏற்படும் கழிவுகள் கலந்த அசுத்த ரத்தத்தை சிரைகளின் வழியாக இருதயம் பெற்று நுரையீரல்களுக்கு அனுப்பி, பிராணவாயு கலந்த சுத்த ரத்தமாக மாற்றி, மீண்டும் நுரையீரல்களிலிருந்து இருதயம் பெற்று, இருதயத்திலிருந்து வெளியேறும் தமனிகள் (Artevie) வழியாக உடல் முழுவதும் சுத்த ரத்தத்தை பாய்ச்சுகிறது.
ரத்தம் பிராண வாயுவையும், ஜீரண உறுப்புகள் உணவிலிருந்து கிரகித்துத் தரும் சத்துக்களையும் நாளமில்லா சுரப்பிகள் சுரக்கும் ஹார்மோன்களையும் உடலின் திசுக்களுக்கு வழங்கி உடலில் ஆங்காங்கே வெளிப்படும் கழிவுகளையும், கரியமில வாயுவையும், சிறுநீரகங்கள், சருமம் மற்றும் நுரையீரல்களுக்கு எடுத்துச் செல்லும் பணியை செய்கிறது.
ரத்த சுழற்சி என்பது ஒரு ஆரோக்கியமான இருதயத்தையும், முதன்மை தமனிகள் மற்றும் சிரைகளில் (Veines) இருந்து சிறிய நுண் ரத்தக்குழல்கள் வரை மீள்தன்மை மற்றும் அடைப்புகள் அற்ற ரத்த நாளங்களையும் நம்பியுள்ளது.
அனைத்து ஆசனங்களும், குறிப்பாக சிரசாசனம், சர்வாங்காசனம் போன்ற தலைகீழாக வரும்படி செய்யும் ஆசனப் பயிற்சிகள் ரத்த சுழற்சிக்கு நன்மை அளிக்கிறது. தலைகீழாக நிற்கும் போது புவி ஈர்ப்பு விசையின் விளைவை மாற்றி அமைப்பதால் இருதயம் தரும் அழுத்தம் இன்றியே தலைக்கும், கழுத்திற்கும் ரத்தம் கீழ்நோக்கி ஓடி வருகிறது. இதனால் இருதயம் ஓய்வு பெற்று மீண்டும் நன்கு இயங்கும் ஆற்றலை பெறுகிறது.
உடலின் தலைகீழ் பயிற்சியான ஆசனங்கள் வால்வுகளும், சிரைச்சுவர்களும் ஓய்வு பெற உதவுகின்றன. சில குறிப்பிட்ட ஆசனங்கள் வெரிகோஸ் நிலையை வராமல் தடுப்பதுடன் அந்தக் குறைபாட்டை அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தவும் பயன்படுகிறது.
பொதுவாக ஆசனப் பயிற்சிகள் உடல் தசைகளை மெதுவாக அமுக்குவது போல செய்வதால், திசுக்களில் உள்ள தேவையற்ற கழிவுகளை கொண்ட திரவங்களை வெளியேற்றுகிறது. மேலும் திசுக்களை நீட்சி அடைய வைப்பதால் புதிய வாழ்வு தரும் உணவுப் பொருட்கள் மற்றும் ஆற்றல் ஆகியவை கொண்ட திரவங்கள் உட்செல்ல வைக்கிறது.
உத்ரவிதானத்தின் சுவாச அசைவுகள் ஜீரண உறுப்புகளை தொடர்ச்சியாக அமுக்கிவிடுவதால் அவற்றை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. அக்னிசாரா கிரியா உதரவிதானத்தை நேரடியாக பலப்படுத்த உதவுகிறது. புஜங்காசனம், சவாசனம் போன்ற பின் வளைந்து செய்யும் ஆசனங்களும் தண்டுவட சுழற்ப்பயிற்சியான அர்த்த மத்ஸ்பேந்திராசனம் ஆகியவையும், உதரவிதானம் மற்றும் வயிற்றிலுள்ள முக்கியமான உறுப்புகளை அமுக்கி விடுவதன்மூலம் ஜீரண கருவிகளின் கோளாறுகளை நீக்கி அவ்வுறுப்புகள் நல்ல ஆரோக்கியத்துடன் செயல்பட வைக்கிறது.
மேலும் கழிவு நீக்க மண்டலம், மூளை மற்றும் நரம்பு மண்டலம், நாளமில்லா சுரப்பி மண்டலம் போன்ற எல்லா மண்டலங்களும் நன்கு இயங்க, குறைபாடுகள் நீங்க யோகப்பயிற்சி உதவுகிறது.
யோகத்தை பயிலுங்கள் உடல் மன ஆரோக்கியத்துடன் வாழுங்கள். #InternationalYogaDay2018 #yoga
தொடர்ந்து ஆரோக்கியம் நிலைக்க வேண்டும் என்றால் தினமும் ஆழ்ந்த தூக்கம் இருக்க வேண்டும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
தினமும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் தூங்கச் செல்லுங்கள். ஒரு நாள் 8 மணி, ஒரு நாள் 10 மணி, லீவு நாட்களில் 12 மணி என்று செல்லாதீர்கள். தொடர்ந்து ஆரோக்கியம் நிலைக்க வேண்டும் என்றால் தினமும் ஆழ்ந்த தூக்கம் இருக்க வேண்டும். ஆழ்ந்த தூக்கத்தில் சுரக்கும் ஹார்மோன்கள் கல்லீரலை சுத்தம் செய்கின்றன. செல்களை புதுப்பிக்கின்றன. தசைகளை வலுப்படுத்துகின்றது. கொழுப்பினை உடைக்கின்றது.
ரத்தத்தில் சர்க்கரை அளவினை சீர் செய்கின்றது. எனவே தினமும் குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி குறிப்பிட்ட நேரத்தில் எழ பழகுங்கள். அத்துடன் தினமும் 8-10 மணி நேரம் தூங்குங்கள். தூக்கம் வரவில்லை எனில் ஒரு நல்ல புத்தகம் படியுங்கள். சீக்கிரம் தூங்கி விடுவீர்கள்.
* இரவு உணவினை சீக்கிரம் முடித்து விடுங்கள் என்ற அறிவுரையினை மருத்துவ உலகம் கூறுகின்றது. 7 மணிக்குள் உணவினை முடித்துக் கொண்டால் 9 மணிக்கு ஏதேனும் சாப்பிட வேண்டும் என்ற உணர்வு ஏற்படுகின்றது என பலர் கூறுகின்றனர். ஏதேனும் புரதமாக சிறிதளவு எடுத்துக் கொள்வது வயிறு நிறைவினை தரும். ஆரோக்யத்தினையும் அளிக்கும். சிறிதளவு பன்னீர் அல்லது சில பாதாம் கொட்டைகள் இவையே போதும். மாவு சத்து, சர்க்கரை சேர்ந்த உணவு கண்டிப்பாக வேண்டாம்.
* தூங்குவதற்கு முன்னால் சில எளிய யோகாசனங்கள் செய்யலாம்.
* குடல், உணவுப் பாதை நன்கு இருந்தால் உடல் சிறந்த ஆரோக்கியம் பெறும். எனவே அன்றாட உணவில் கொழுப்பில்லாத தயிர், மோர் இவற்றினை எடுத்துக் கொள்வதும் தூக்கத்திற்கு உதவும்.
* கால்ஷியம், மக்னீசியம் இவை தேவையான அளவு உங்கள் உடலில் உள்ளதா என்பதை உங்கள் மருத்துவர் மூலம் அறிந்து கொள்ளுங்கள்.
* வெந்நீரில் 1/2 எலுமிச்சை பிழிந்து சாப்பிடுவது இரவில் உடலினை ஆசிட் தன்மை இல்லாது வைக்கும். ஆசிட் தன்மை இல்லாது இருந்தாலே உடல் தொந்தரவின்றி இருக்கும்.
ரத்தத்தில் சர்க்கரை அளவினை சீர் செய்கின்றது. எனவே தினமும் குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி குறிப்பிட்ட நேரத்தில் எழ பழகுங்கள். அத்துடன் தினமும் 8-10 மணி நேரம் தூங்குங்கள். தூக்கம் வரவில்லை எனில் ஒரு நல்ல புத்தகம் படியுங்கள். சீக்கிரம் தூங்கி விடுவீர்கள்.
* இரவு உணவினை சீக்கிரம் முடித்து விடுங்கள் என்ற அறிவுரையினை மருத்துவ உலகம் கூறுகின்றது. 7 மணிக்குள் உணவினை முடித்துக் கொண்டால் 9 மணிக்கு ஏதேனும் சாப்பிட வேண்டும் என்ற உணர்வு ஏற்படுகின்றது என பலர் கூறுகின்றனர். ஏதேனும் புரதமாக சிறிதளவு எடுத்துக் கொள்வது வயிறு நிறைவினை தரும். ஆரோக்யத்தினையும் அளிக்கும். சிறிதளவு பன்னீர் அல்லது சில பாதாம் கொட்டைகள் இவையே போதும். மாவு சத்து, சர்க்கரை சேர்ந்த உணவு கண்டிப்பாக வேண்டாம்.
* தூங்குவதற்கு முன்னால் சில எளிய யோகாசனங்கள் செய்யலாம்.
* குடல், உணவுப் பாதை நன்கு இருந்தால் உடல் சிறந்த ஆரோக்கியம் பெறும். எனவே அன்றாட உணவில் கொழுப்பில்லாத தயிர், மோர் இவற்றினை எடுத்துக் கொள்வதும் தூக்கத்திற்கு உதவும்.
* கால்ஷியம், மக்னீசியம் இவை தேவையான அளவு உங்கள் உடலில் உள்ளதா என்பதை உங்கள் மருத்துவர் மூலம் அறிந்து கொள்ளுங்கள்.
* வெந்நீரில் 1/2 எலுமிச்சை பிழிந்து சாப்பிடுவது இரவில் உடலினை ஆசிட் தன்மை இல்லாது வைக்கும். ஆசிட் தன்மை இல்லாது இருந்தாலே உடல் தொந்தரவின்றி இருக்கும்.
உளுந்தம் பருப்புடன் கீரை சேர்த்து வடை செய்தால் அருமையாக இருக்கும். இன்று இந்த கீரை வடையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
உளுந்தம்பருப்பு - 200 கிராம்
முளைக்கீரை - கைப்பிடி அளவு
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை
உளுத்தம்பருப்பை நன்றாக கழுவி 1 மணி நேரம் ஊற வைத்து, தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைத்து கொள்ளவும்.
வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முளைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அரைத்த மாவில் நறுக்கிய கீரை, உப்பு, வெங்காயம், ப.மிளகாய் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்து வைத்திருக்கும் மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
சூப்பரான உளுந்து கீரை வடை ரெடி.
இதற்குத் தொட்டுக் கொள்ள எல்லா வகை சட்னியும் ஏற்றது.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
உளுந்தம்பருப்பு - 200 கிராம்
முளைக்கீரை - கைப்பிடி அளவு
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை
உளுத்தம்பருப்பை நன்றாக கழுவி 1 மணி நேரம் ஊற வைத்து, தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைத்து கொள்ளவும்.
வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முளைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அரைத்த மாவில் நறுக்கிய கீரை, உப்பு, வெங்காயம், ப.மிளகாய் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்து வைத்திருக்கும் மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
சூப்பரான உளுந்து கீரை வடை ரெடி.
இதற்குத் தொட்டுக் கொள்ள எல்லா வகை சட்னியும் ஏற்றது.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகள் செய்யும் சேட்டைகளுக்கு பெற்றோர்கள் டென்சன் ஆகி கத்துவது வாடிக்கை. இது குழந்தைகளுக்கு மிகப்பெரிய பாதிப்புகளை உண்டாக்குகிறது.
குழந்தைகள் செய்யும் சேட்டைகளுக்கு பெற்றோர்கள் டென்சன் ஆகி கத்துவது வாடிக்கை. இது குழந்தைகளுக்கு மிகப்பெரிய பாதிப்புகளை உண்டாக்குகிறது. நாங்கள் தான் குழந்தைகளை அடிக்கவில்லையே காயம் ஏற்பட்டுவிடக்கூடாது என்று அவர்களை எச்சரிக்கும் விதமாக, குழந்தைகளை மிரட்டுவதற்காக, அவர்களின் பாதுகாப்பிற்காக என்று எப்படி சமாதானம் சொன்னாலும் பாதிப்பு என்பது உண்மை தான். குழந்தைகளை அவர்கள் வயதிற்கு தகுந்தாற் போல எப்படி அணுக வேண்டும் என்பதற்கான சில டிப்ஸ் இதோ…
இந்த வயதில் குழந்தைகளுக்கு அரவணைப்பு மிகவும் அவசியம். விளையாட்டாகவோ அல்லது உங்களை அறியாமலோ குழந்தையிடம் மிரட்டும் தொனியில் கத்துவது என்பது மிகவும் ஆபத்தானது. அந்த அதிர்வை குழந்தைகளால் ஏற்றுக் கொள்வது சிரமம் என்பதால் தூக்கத்தில் அதிர்ந்து எழுந்து அழும், இதனால் குழந்தையின் தூக்கம் பாதிக்கப்படும். இதனைத் தவிர்க்க மெலிதாக அவர்களை அணுகுவதே சிறந்தது. அதற்கு விரைவாக ரெஸ்பான்ஸ் கிடைப்பதை நீங்கள் கண்கூடாக உணரலாம்.
குழந்தைகளிடத்தில் கத்துவது என்பது அவர்களை நல்வழிப்படுத்தாது மாறாக, அவர்களின் தன்னம்பிக்கையை குலைத்து அவநம்பிக்கையை ஏற்படுத்தும். இந்த வயதில் குழந்தைகள் ஒப்பிட்டு பார்க்க ஆரம்பித்துவிடும். தன்னிடம் யார் நன்றாக பேசுகிறார்கள், எப்படி தன்னிடம் அணுகுகிறார்கள் என்று புரிந்து கொள்ள ஆரம்பிக்கும். இந்த வயதில் குழந்தைகளிடம் கத்துவது பெற்றோர் குழந்தை உறவுமுறையை பாதிக்கும். தன் எண்ணத்தை வெளிப்படுத்தாது தனிமைபடுத்திக் கொள்ள அதிகம் விரும்ப ஆரம்பித்துவிடும்.

கோபத்தை அன்பால் அணுகுங்கள், ஓடி வந்து எதையாவது சிந்திவிட்டால், ஏன் ஓடி வந்தாய்? என்று கத்தி இனிமே வந்த கால ஒடச்சுருவேன் என்று மிரட்டாமல், கொட்டிருச்சு வாங்க க்ளீன் பண்ணலாம் என்று அழைத்து நீங்கள் சுத்தம் செய்யும் போது உடன் வைத்துக் கொள்ளுங்கள் உங்களுக்கு இரட்டிப்பு வேலை என்று நினைப்பதை குழந்தையிடம் பக்குவமாக உணர்த்துங்கள். மெதுவா வந்தா கொட்டியிருக்காதுல்ல இனிமே வீட்டுக்குள்ள ஓடிவரக்கூடாது என்று புரியவைத்திடுங்கள்.
குழந்தைகளிடத்தில் கத்துவது எந்த அளவிற்கு ஆபத்தோ அதேயளவு குழந்தைகளிடம் பேசாமல் இருப்பதோ அல்லது அவர்களை கண்டிக்காமல் இருப்பதோ தவறு. சிறு வயதில் அதிக செல்லத்துடன் அவர்களை அணுகினால் வளர்ந்த பின்பும், தவறுகள் செய்யும் போதும் அதே செல்லத்துடன் தன்னை அணுக வேண்டும் என்று விரும்புவர் அது பொய்க்கும் போது மனரீதியாக பெரிதும் பாதிக்கப்படுவர். அதனால் அன்பாக திருத்துங்கள்.கடிந்து, கத்தாமல் அரவணைத்து தவறை உணர்த்துங்கள்.
இந்த வயதில் குழந்தைகளுக்கு அரவணைப்பு மிகவும் அவசியம். விளையாட்டாகவோ அல்லது உங்களை அறியாமலோ குழந்தையிடம் மிரட்டும் தொனியில் கத்துவது என்பது மிகவும் ஆபத்தானது. அந்த அதிர்வை குழந்தைகளால் ஏற்றுக் கொள்வது சிரமம் என்பதால் தூக்கத்தில் அதிர்ந்து எழுந்து அழும், இதனால் குழந்தையின் தூக்கம் பாதிக்கப்படும். இதனைத் தவிர்க்க மெலிதாக அவர்களை அணுகுவதே சிறந்தது. அதற்கு விரைவாக ரெஸ்பான்ஸ் கிடைப்பதை நீங்கள் கண்கூடாக உணரலாம்.
குழந்தைகளிடத்தில் கத்துவது என்பது அவர்களை நல்வழிப்படுத்தாது மாறாக, அவர்களின் தன்னம்பிக்கையை குலைத்து அவநம்பிக்கையை ஏற்படுத்தும். இந்த வயதில் குழந்தைகள் ஒப்பிட்டு பார்க்க ஆரம்பித்துவிடும். தன்னிடம் யார் நன்றாக பேசுகிறார்கள், எப்படி தன்னிடம் அணுகுகிறார்கள் என்று புரிந்து கொள்ள ஆரம்பிக்கும். இந்த வயதில் குழந்தைகளிடம் கத்துவது பெற்றோர் குழந்தை உறவுமுறையை பாதிக்கும். தன் எண்ணத்தை வெளிப்படுத்தாது தனிமைபடுத்திக் கொள்ள அதிகம் விரும்ப ஆரம்பித்துவிடும்.

கோபத்தை அன்பால் அணுகுங்கள், ஓடி வந்து எதையாவது சிந்திவிட்டால், ஏன் ஓடி வந்தாய்? என்று கத்தி இனிமே வந்த கால ஒடச்சுருவேன் என்று மிரட்டாமல், கொட்டிருச்சு வாங்க க்ளீன் பண்ணலாம் என்று அழைத்து நீங்கள் சுத்தம் செய்யும் போது உடன் வைத்துக் கொள்ளுங்கள் உங்களுக்கு இரட்டிப்பு வேலை என்று நினைப்பதை குழந்தையிடம் பக்குவமாக உணர்த்துங்கள். மெதுவா வந்தா கொட்டியிருக்காதுல்ல இனிமே வீட்டுக்குள்ள ஓடிவரக்கூடாது என்று புரியவைத்திடுங்கள்.
குழந்தைகளிடத்தில் கத்துவது எந்த அளவிற்கு ஆபத்தோ அதேயளவு குழந்தைகளிடம் பேசாமல் இருப்பதோ அல்லது அவர்களை கண்டிக்காமல் இருப்பதோ தவறு. சிறு வயதில் அதிக செல்லத்துடன் அவர்களை அணுகினால் வளர்ந்த பின்பும், தவறுகள் செய்யும் போதும் அதே செல்லத்துடன் தன்னை அணுக வேண்டும் என்று விரும்புவர் அது பொய்க்கும் போது மனரீதியாக பெரிதும் பாதிக்கப்படுவர். அதனால் அன்பாக திருத்துங்கள்.கடிந்து, கத்தாமல் அரவணைத்து தவறை உணர்த்துங்கள்.
கண்களுக்கு போதிய ஓய்வைத் தராமல் எப்போதும் கம்ப்யூட்டர் முன்போ, மொபைலை அதிகம் பயன்படுத்தி வந்தாலோ, கண்கள் அதிக அளவில் களைப்படையும்.
உண்மையில் கண்கள் துடிப்பது, உடலில் இருக்கும் ஒருசில பிரச்சனைகளுக்கான அறிகுறியாகும்.
• நீங்கள் அதிகப்படியான மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருந்தால், கண்கள் அடிக்கடி துடிக்க ஆரம்பிக்கும். எனவே மன அழுத்தம் இருந்தால், அதனைக் குறைக்கும் செயல்களில் ஈடுபடுங்கள்.
• தூக்கமின்மை மற்றும் நாள் முழுவதும் கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்து கண்கள் சோர்ந்திருந்தால், கண்கள் அதிகம் துடிக்கும். எனவே நல்ல நிம்மதியான தூக்கத்தை மேற்கொண்டு, கம்ப்யூட்டர் முன்பு அதிக நேரம் வேலை செய்வதைக் குறைத்திடுங்கள்.
• கண்களுக்கு போதிய ஓய்வைத் தராமல் எப்போதும் கம்ப்யூட்டர் முன்போ, மொபைலை அதிகம் பயன்படுத்தி வந்தாலோ, கண்கள் அதிக அளவில் களைப்படையும். எனவே கம்ப்யூட்டர் முன்பு அதிக நேரம் வேலை செய்வது போல் இருந்தால், கண்களுக்கு ஸ்பெஷலான கண்ணாடியை அணிந்து கொள்ளுங்கள். இதனால் கணினி திரையின் ஒளியால் கண்கள் விரைவில் களைப்படையாமல் இருக்கும்.

• ஆல்கஹால் அளவுக்கு அதிகமாக எடுத்து வந்தால், அப்போது கண்கள் அடிக்கடி துடிக்க ஆரம்பிக்கும். எனவே நீங்கள் இப்படிப்பட்டவராக இருந்தால், காபி, டீ, சோடா, ஆல்கஹால் போன்றவற்றை குறைத்துக் கொள்வது நல்லது.
• தினமும் போதிய அளவில் தண்ணீர் குடிக்காமல் இருந்தால், கண்கள் வறட்சி அடையும். உங்கள் கண்கள் வறட்சியுடன் இருந்தால், அது கண்கள் துடிப்பதன் மூலம் வெளிப்படும்.
• கண்களில் அலர்ஜி இருந்தால், அரிப்பு, வீக்கம் மற்றும் கண்களில் தண்ணீர் வடிதல் போன்றவை ஏற்படும். அதுமட்டுமல்லாமல் கண்கள் அடிக்கடி துடிக்கவும் செய்யும்.
• நீங்கள் அதிகப்படியான மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருந்தால், கண்கள் அடிக்கடி துடிக்க ஆரம்பிக்கும். எனவே மன அழுத்தம் இருந்தால், அதனைக் குறைக்கும் செயல்களில் ஈடுபடுங்கள்.
• தூக்கமின்மை மற்றும் நாள் முழுவதும் கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்து கண்கள் சோர்ந்திருந்தால், கண்கள் அதிகம் துடிக்கும். எனவே நல்ல நிம்மதியான தூக்கத்தை மேற்கொண்டு, கம்ப்யூட்டர் முன்பு அதிக நேரம் வேலை செய்வதைக் குறைத்திடுங்கள்.
• கண்களுக்கு போதிய ஓய்வைத் தராமல் எப்போதும் கம்ப்யூட்டர் முன்போ, மொபைலை அதிகம் பயன்படுத்தி வந்தாலோ, கண்கள் அதிக அளவில் களைப்படையும். எனவே கம்ப்யூட்டர் முன்பு அதிக நேரம் வேலை செய்வது போல் இருந்தால், கண்களுக்கு ஸ்பெஷலான கண்ணாடியை அணிந்து கொள்ளுங்கள். இதனால் கணினி திரையின் ஒளியால் கண்கள் விரைவில் களைப்படையாமல் இருக்கும்.

• ஆல்கஹால் அளவுக்கு அதிகமாக எடுத்து வந்தால், அப்போது கண்கள் அடிக்கடி துடிக்க ஆரம்பிக்கும். எனவே நீங்கள் இப்படிப்பட்டவராக இருந்தால், காபி, டீ, சோடா, ஆல்கஹால் போன்றவற்றை குறைத்துக் கொள்வது நல்லது.
• தினமும் போதிய அளவில் தண்ணீர் குடிக்காமல் இருந்தால், கண்கள் வறட்சி அடையும். உங்கள் கண்கள் வறட்சியுடன் இருந்தால், அது கண்கள் துடிப்பதன் மூலம் வெளிப்படும்.
• கண்களில் அலர்ஜி இருந்தால், அரிப்பு, வீக்கம் மற்றும் கண்களில் தண்ணீர் வடிதல் போன்றவை ஏற்படும். அதுமட்டுமல்லாமல் கண்கள் அடிக்கடி துடிக்கவும் செய்யும்.
வயிற்று கோளாறு, அஜீரண பிரச்சனை உள்ளவர்கள் அடிக்கடி இஞ்சி துவையலை செய்து சாப்பிடலாம். இன்று இந்த துவையல் செய்முறையை பார்க்கலாம்.
தேவையானப் பொருட்கள் :
இஞ்சி - 1/2 கப்
தேங்காய் துருவல் - 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 2
உளுத்தம்பருப்பு - 1 ½ மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - 4 ஈர்க்கு
பெருங்காயம், புளி - சிறு நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி

செய்முறை :
இஞ்சியைத் தோல்சீவி நன்றாகக் கழுவி சிறுதுண்டுகளாக்கிக் கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் காய்ந்த மிளகாய், உளுந்தம் பருப்பை போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.
அடுத்து அதில் இஞ்சித் துண்டுகள், கறிவேப்பிலை சேர்த்து மேலும் சிறிது நேரம் பச்சை வாசனை போகும்வரை வதக்கி இறக்கவும்.
அடுத்து தேங்காயைத் துருவல், புளி, பச்சை மிளகாயைக் சேர்த்து வதக்கி ஆற வைக்கவும்,
ஆறியதும் உப்பு சேர்த்து சிறிது சிறிதாக நீர்தெளித்து கெட்டியாக கரகரப்பாக அரைத்து எடுக்கவும்.
காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பை வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும். இஞ்சி கறிவேப்பிலையை தனியாக வதக்கி, தேங்காய்த் துருவல் புளி, உப்பு, வறுத்ததிலிருந்து காய்ந்தமிளகாய் மட்டும் சேர்த்து அம்மியில் வைத்து கரகரப்பாக அரைத்து கடைசியில் வறுத்த உளுத்தம் பருப்பையும் வைத்து ஒன்றிரண்டாக அரைபடுமாறு ஒரு ஓட்டு அரைத்து எடுத்தால் சுவையாக இருக்கும்.
இந்தத் துவையலில் நல்லெண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு தாளிப்பது நல்லது என்று மருத்துவ உணவுக் குறிப்பு சொல்கிறது.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இஞ்சி - 1/2 கப்
தேங்காய் துருவல் - 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 2
உளுத்தம்பருப்பு - 1 ½ மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - 4 ஈர்க்கு
பெருங்காயம், புளி - சிறு நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி

செய்முறை :
இஞ்சியைத் தோல்சீவி நன்றாகக் கழுவி சிறுதுண்டுகளாக்கிக் கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் காய்ந்த மிளகாய், உளுந்தம் பருப்பை போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.
அடுத்து அதில் இஞ்சித் துண்டுகள், கறிவேப்பிலை சேர்த்து மேலும் சிறிது நேரம் பச்சை வாசனை போகும்வரை வதக்கி இறக்கவும்.
அடுத்து தேங்காயைத் துருவல், புளி, பச்சை மிளகாயைக் சேர்த்து வதக்கி ஆற வைக்கவும்,
ஆறியதும் உப்பு சேர்த்து சிறிது சிறிதாக நீர்தெளித்து கெட்டியாக கரகரப்பாக அரைத்து எடுக்கவும்.
காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பை வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும். இஞ்சி கறிவேப்பிலையை தனியாக வதக்கி, தேங்காய்த் துருவல் புளி, உப்பு, வறுத்ததிலிருந்து காய்ந்தமிளகாய் மட்டும் சேர்த்து அம்மியில் வைத்து கரகரப்பாக அரைத்து கடைசியில் வறுத்த உளுத்தம் பருப்பையும் வைத்து ஒன்றிரண்டாக அரைபடுமாறு ஒரு ஓட்டு அரைத்து எடுத்தால் சுவையாக இருக்கும்.
இந்தத் துவையலில் நல்லெண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு தாளிப்பது நல்லது என்று மருத்துவ உணவுக் குறிப்பு சொல்கிறது.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.






