search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Variety Upma"

    வெஜிடபிள் இட்லி உப்புமா மிகச் சிறந்த காலை உணவு. இட்லி சாப்பிட விரும்பாத குழந்தைகளும் இதை விரும்பிச் சாப்பிடுவார்கள். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வேகவைத்த இட்லி - 7,
    பச்சை மிளகாய் - 2,
    நல்லெண்ணெய் - சிறிதளவு,
    இஞ்சி - சிறிது துண்டு,
    சீரகத்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி  - சிறிதளவு,
    கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி ஆகியவை சேர்த்து - 50 கிராம்.



    செய்முறை :

    கேரட், பீன்ஸை பொடியாக நறுக்கி, பச்சைப் பட்டாணியுடன் சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.

    இட்லியை நன்றாக உதிர்த்து வைத்து கொள்ளவும்.

    ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சித்துண்டுகள், சீரகத்தூள், ப.மிளகாய் போட்டு தாளித்த பின்னர் வேகவைத்த கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, கறிவேப்பிலை சேர்த்து, நன்றாக வதக்கவும்.

    கடைசியாக உதிர்த்த இட்லியை சேர்த்துக் கிளறவும்.

    இட்லி உப்புமா போல உதிர்ந்து வரும் போது அதன் மேல் கொத்தமல்லி இலைகளைத் தூவி இறக்கவும்.

    வெஜிடபிள் இட்லி உப்புமா ரெடி.

    சாம்பார், சட்னியுடன் பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிவப்பு அவலில் அதிகளவு சத்துக்கள் நிறைந்ததுள்ளது. இன்று சிவப்பு அவலில் சத்தான உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :
     
    சிவப்பு அவல் - 1 கப்,
    கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தாளிக்க தேவையான அளவு,
    நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு,
    வெங்காயம் - 2
    காய்ந்தமிளகாய் - 2,
    கறிவேப்பிலை - சிறிது,
    தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்.



    செய்முறை :

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.
     
    அவலை சுத்தம் செய்து தண்ணீரில் ஊறவைக்கவும். ஊறியதும் பிழிந்தெடுத்துக் கொள்ளவும்.

    கடாயில் நல்லெண்ணெயை விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்தமிளகாய், கறிவேப்பிலை தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் அவல், உப்பு சேர்த்து, ஒரு கையளவு தண்ணீர் தெளித்து நன்றாக கிளறி, சிறு தீயில் வைத்து மூடி வைத்து வேக விடவும். 5 நிமிடத்தில் வெந்து விடும்.

    தேங்காய்த்துருவல் தூவி பரிமாறவும்.
     
    சூப்பரான சிவப்பு அவல் உப்புமா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வெஜிடபிள் அவல் உப்புமாவானது மிகவும் சுவையாக இருப்பதுடன், அதில் உள்ள காய்கறிகள் குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தையும் தரவல்லது. இன்று அதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    அவல் - 1 கப்
    கேரட் - 2
    பட்டாணி - 1/4 கப்
    வறுத்த வேர்க்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
    பெரிய வெங்காயம் - 1
    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன்
    மல்லி தூள் - 1/4 டீஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிது
    உப்பு - தேவையான அளவு

    தாளிப்பதற்கு...


    எண்ணெய் - 2 டீஸ்பூன்
    கடுகு - 3/4 டீஸ்பூன்
    உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
    சீரகம் - 1/2 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிது
    பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை



    செய்முறை :

    கேரட், வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கேரட் மற்றும் பட்டாணியை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.

    பின்னர் அவலை நீரில் போட்டு, அவல் நீரில் மூழ்கும் வரை ஊற வைக்க வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்த பின் அதில் வெங்காயம் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

    அடுத்து அதில் வேக வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து, அத்துடன் மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து, மசாலாப் பொருட்கள் காய்கறியுடன் சேருமாறு நன்கு கிளறி விட வேண்டும்.

    பின் ஊற வைத்துள்ள அவலை பிழிந்து, நீரை முற்றிலும் வெளியேற்றிவிட்டு, வாணலியில் சேர்த்து நன்கு 2 நிமிடம் கிளறி, கொத்தமல்லி மற்றும் வேர்க்கடலையைத் தூவி ஒருமுறை பிரட்டி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான வெஜிடபிள் அவல் உப்புமா ரெடி!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் டீ, காபியுடன் ஏதாவது வித்தியாசமாக சாப்பிட தோன்றினால் மீல்மேக்கர் உப்புமா செய்து சாப்பிடலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மீல்மேக்கர் (சோயா சங்க்ஸ்) - ஒரு கப்
    உருளைக்கிழங்கு - 2
    எண்ணெய் - தேவைக்கேற்ப
    கடுகு - 1/2 டீஸ்பூன்
    உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
    பெரிய வெங்காயம் - 1
    தக்காளி - 1
    சாட் மசாலாத் தூள் - 1 டீஸ்பூன்
    மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
    கொத்தமல்லித் தழை - சிறிதளவு.



    செய்முறை :

    மீல்மேக்கரை நன்றாக கழுவி வேக வைத்து, தண்ணீரை வடித்து விட்டு உதிர்த்து கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை சதுரமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய்விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக குழைய வெந்ததும் உப்பு, மிளகுத்தூள், உருளைக்கிழங்கைச் சேர்த்து மேலும் வதக்கவும்.

    உருளைக்கிழங்கு வெந்ததும், வேகவைத்த உதிர்த்து வைத்துள்ள மீல்மேக்கரை சேர்த்துக் கிளறவும்.

    பரிமாறும் முன் சாட் மசாலாத்தூள், கொத்தமல்லித் தழை தூவிப் பரிமாறவும்.

    சூப்பரான மீல்மேக்கர் உப்புமா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சர்க்கரை நோயாளிகள் தினமும் உணவில் ஓட்ஸை சேர்த்து கொள்வது நல்லது. இன்று ஓட்ஸ், காய்கறிகள் வைத்து உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    ஓட்ஸ் - 1 கப்
    வெங்காயம் - 1
    ப.மிளகாய் - 1
    கேரட் - 1
    பீன்ஸ் - 10
    பட்டாணி - சிறிதளவு
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    தாளிக்க

    கடுகு - கால் டீஸ்பூன்
    உளுந்தம் பருப்பு - அரை ஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    கடலைப்பருப்பு - அரை டீஸ்பூன்



    செய்முறை :

    ஒட்ஸை வெறும் கடாயில் போட்டு வறுத்து கொள்ளவும்

    வெங்காயம், கேரட், பீன்ஸ், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வறுத்த ஓட்சில் உப்பு கலந்த நீர் தெளித்து புட்டு மாவு பிசைவது போல உதிரியாக பிசைந்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாய் போட்டு வதக்கவும்.

    வெங்காயம் சற்று காய்கறிகள், பட்டாணியை சேர்த்து காய்கறிகள் வேக சிறிது தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.

    காய்கறிகள் வெந்தவுடன் உதிராக பிசைந்த ஓட்ஸை போட்டு 5 நிமிடம் மூடி போட்டு வேக வைத்து இறக்கி பரிமாறவும்.

    சத்தான ஓட்ஸ் காய்கறி உப்புமா ரெடி.

    விருப்பப்பட்டால் காய்கறிகளையும் சேர்த்து கொள்ளலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கோதுமையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று கோதுமை பிரட்டை வைத்து சத்தான சுவையான உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள்

    கோதுமை பிரட் துண்டுகள் - 6
    தக்காளி - 1
    லெமன் ஜூஸ் - 2 மேஜைக்கரண்டி
    தண்ணீர் - 100 மில்லி
    மிளகாய் தூள் - சிறிதளவு
    கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி,
    கொத்தமல்லித்தழை - சிறிது
    உப்பு - தேவையான அளவு  

    தாளிக்க

    எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
    கடுகு - 1 தேக்கரண்டி
    உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
    பெரிய வெங்காயம் - 1
    பச்சை மிளகாய் - 2
    இஞ்சி - சிறிய துண்டு
    கறிவேப்பிலை - சிறிது



    செய்முறை

    கோதுமை பிரட் துண்டுகளின் ஓரங்களை கட் பண்ணி எடுத்து விடவும். பிறகு பிரட்டை சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

    தக்காளி, வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணைய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளித்த பின்னர் கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்கு சுருள வதங்கியதும் அதனுடன் உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா தூள், மற்றும் பிரட் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறவும்.

    இறுதியில் லெமன் ஜூஸ், கொத்தமல்லித்தழையும் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.

    சுவையான கோதுமை பிரட் உப்புமா ரெடி. 

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி உணவில் கேழ்வரகை சேர்த்து கொள்வது நல்லது. அந்த வகையில் இன்று கேழ்வரகு ரவையில் உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு ரவை - 1 கப்
    வெங்காயம் - 1
    ப.மிளகாய் - 2
    கறிவேப்பிலை - சிறிதளவு
    பெருங்காயத்தூள் - சிறிதளவு
    கடுகு, உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
    எண்ணெய், உப்பு - தேவைக்கு
    தண்ணீர் - 2 கப்
    கொத்தமல்லி - சிறிதளவு



    செய்முறை :

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டு தாளித்த பின்னர், வெங்காயம், ப.மிளகாய் போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் கேழ்வரகு ரவையை போட்டு 5 நிமிடங்கள் கிளறவும்.

    அடுத்து அதில் உப்பு, கொதிக்க வைத்த தண்ணீரை ஊற்றி அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடி  போட்டு வேக விடவும்.

    கேழ்வரகு நன்றாக வெந்து உதிரியாக வந்தவுடன் கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த பொரி உப்புமாவை காலை உணவாகவோ, மாலையில் சிற்றுண்டியாகவோ சாப்பிடலாம். எளிதில் செய்யக்கூடிய இந்த பொரி உப்புமா செய்வது எப்படி என்று பார்ப்போம்.
    தேவையான பொருட்கள் :

    பொரி - 2 கப்
    வெங்காயம் - 1
    பச்சை மிளகாய் - 2
    கேரட் - 3 டீஸ்பூன்
    எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
    மஞ்சள் - ¼ டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
    கடுகு - ½ தேக்கரண்டி
    உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
    கடலை பருப்பு - 2 தேக்கரண்டி
    வேர்க்கடலை - 2 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு



    செய்முறை :

    வெங்காயம், ப.மிளகாய், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பொரியை நன்கு அலசி ஒரு வடிகட்டியில் தண்ணீரை முற்றிலுமாக வடியும்படி வைக்கவும்.

    கடாயில் எண்ணெய் சூடாக்கி, கடுகு போட்டு வெடித்ததும், உளுந்து, கடலைப்பருப்பு மற்றும் வேர்க்கடலை சேர்த்து குறைந்த தீயில் வறுக்கவும்.

    அடுத்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கேரட், கறிவேப்பிலை சேர்த்து, வதக்கவும்.

    அடுத்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலந்து விடவும்.

    கடைசியாக தண்ணீர் இல்லாமல் வடிந்த பொரியை சேர்த்து, மேலும் ஒரு நிமிடம் வதக்கி, இறக்கவும்.

    எலுமிச்சம் பழ சாறு சேர்த்து கலந்து பரிமாறவும்..

    சூப்பரான எளிதில் செய்யக்கூடிய பொரி உப்புமா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காலை வேளையில் வேகமாகவும், உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் வகையில் ஏதேனும் சமைக்க வேண்டுமென்றால், அதற்கு போதுமை ரவை உப்புமா மிகவும் சிறந்ததாக இருக்கும்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை ரவை - 1 கப்
    பெரிய வெங்காயம் - 1
    வரமிளகாய் - 2
    இஞ்சி - சிறிது
    கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
    உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
    கடுகு - 1/2 டீஸ்பூன்
    பெருங்காயத்தூள் - சிறிது
    கறிவேப்பிலை - சிறிது
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இஞ்சியை தோல் நீக்கி தட்டி வைக்கவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும்.

    பின் அதில் பொருங்காயத்தூளை தூவி, வரமிளகாயை கிள்ளிப் போட்டு, இஞ்சியை தட்டிப் போட்டு ஒரு முறை கிளற வேண்டும்.

    பிறகு அத்துடன் வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.

    பின்னர் அதில் ஒரு 1 1/2 கப் தண்ணீரை ஊற்றி, உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

    தண்ணீர் கொதித்ததும், அதில் கோதுமை ரவையை சேர்த்து, சிறிது நேரம் மூடி போட்டு வேக வைக்கவும்.

    பின் மூடியை திறந்து ரவை அடி பிடிக்காமல், தண்ணீர் சுண்டும் வரை நன்கு கிளறி இறக்கிவிட வேண்டும்.

    இப்போது சுவையான கோதுமை ரவை உப்புமா ரெடி!!!

    இதனை தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×