என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
வயிற்றில் ஏற்பட்ட புண்ணிற்கு நார்த்தங்காய் ஊறுகாய் நல்ல மருந்தாக அமைகிறது. இன்று நாரத்தங்காய் வைத்து சுவையான ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
நாரத்தங்காய் - 3,
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
வெந்தயம் - அரை டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 8,
கடுகு, பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன்,
நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு - 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை :
நாரத்தங்காயை நன்றாக கழுவிய துடைத்த பின்னர் துண்டுகளாக வெட்டி விதைகளை நீக்கி விடவும்.
வெட்டிய நாரத்தங்காய் துண்டுகளை ஜாடியில் போட்டு அதனுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கலக்கவும்.
இதை பத்து நாள்கள் வரை தினமும் கிளறிவிடவும்.
வெறும் வாணலியில் வெந்தயம், காய்ந்த மிளகாயைத் தனித்தனியாகச் சேர்த்து வறுத்து மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்.
நன்கு ஊறிய நார்த்தங்காயுடன் அரைத்த பொடியைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து ஊறுகாயுடன் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
குறிப்பு : நாரத்தங்காய் ஊறுவதற்கு 10 நாள்களாகும். தேவைப்படும்போது தாளித்துக்கொண்டால் ஊறுகாய் ஃப்ரெஷ்ஷாகவும், மேலும் சுவையாகவும் இருக்கும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
நாரத்தங்காய் - 3,
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
வெந்தயம் - அரை டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 8,
கடுகு, பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன்,
நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு - 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை :
நாரத்தங்காயை நன்றாக கழுவிய துடைத்த பின்னர் துண்டுகளாக வெட்டி விதைகளை நீக்கி விடவும்.
வெட்டிய நாரத்தங்காய் துண்டுகளை ஜாடியில் போட்டு அதனுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கலக்கவும்.
இதை பத்து நாள்கள் வரை தினமும் கிளறிவிடவும்.
வெறும் வாணலியில் வெந்தயம், காய்ந்த மிளகாயைத் தனித்தனியாகச் சேர்த்து வறுத்து மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்.
நன்கு ஊறிய நார்த்தங்காயுடன் அரைத்த பொடியைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து ஊறுகாயுடன் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
குறிப்பு : நாரத்தங்காய் ஊறுவதற்கு 10 நாள்களாகும். தேவைப்படும்போது தாளித்துக்கொண்டால் ஊறுகாய் ஃப்ரெஷ்ஷாகவும், மேலும் சுவையாகவும் இருக்கும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பிராணாயாமம் எனில் ‘பிராண சக்தியை அதிகமாக்குதல்’ என்று அர்த்தம். மூச்சைப் பயன்படுத்தி பலவித பலன்களும் பெறுவது பிராணாயாமத்தில் சாத்தியம்.
பிராணாயாமம் எனில் ‘பிராண சக்தியை அதிகமாக்குதல்’ என்று அர்த்தம். சிலர் பிராணனை தெய்வீக சக்தியாகவும் பார்ப்பதுண்டு. ஆகவே நமது தெய்வீக சக்தியில் வேலை செய்வது என்றும் இதை எடுத்துக் கொள்ளலாம்.
மூச்சைப் பயன்படுத்தி பலவித பலன்களும் பெறுவது பிராணாயாமத்தில் சாத்தியம். பெரும்பாலும் மூக்குவழிதான் மூச்சைப் பயன்படுத்தினாலும், சிலநேரப் பயிற்சியில் மூச்சு, தொண்டையை மையமிட்டு இருக்கும். மிக அரிதாகவே வாய்வழியாக மூச்சை எடுப்பதோ அல்லது வெளிவிடுவதோ நடக்கும்.
ஒரு மூச்சுக்கும் அடுத்த மூச்சுக்கும் சிறிய இடைவெளி இருக்க வேண்டும். மூச்சை உள்ளெடுப்பது-வெளியே விடுவது தவிர, உள் மூச்சுக்குப்பின் நிறுத்துவது, வெளி மூச்சுக்குப்பின் நிறுத்துவது, மூச்சின்போது எண்ணிக்கையைப் பயன்படுத்துவது, அதை மெல்ல மெல்ல அதிகப்படுத்துவது, மூச்சின்போது ஒலியைப் பயன்படுத்துவது, மூச்சோடு மந்திரங்களைப் பயன்படுத்துதல்… என்று நிறைய முறைகள் உள்ளன.
சாதாரண பலன்கள் தொடங்கி, நாடிகளைச் சுத்தம் செய்தல், மனதை ஆரோக்கியமாக மாற்றுதல் என்று மிக அரிய சக்திகளை பிராணாயாமம் மூலம் பெறமுடியும். தியானத்திற்கும் வாழ்வின் தெளிவான பார்வைக்கும் பிராணாயாமம் காரணமாக இருக்க முடியும்.
நபருக்கு ஏற்பவும், பயிற்சிக்கு ஏற்பவும், காலத்திற்கு ஏற்பவும், ஏன்… நேரத்திற்கு ஏற்பவும் கூட பிராணாயாமத்தைத் தேர்வு செய்து பலன் பெறலாம்.
பிராணாயாமத்தில் சுத்தப்படுத்தல், குளிர்ச்சி தருதல், உடலை சூடாக்குதல், தியானத்திற்குத் தயார்செய்யும் பிராணாயாமம் என்று அதன் இயல்பை வைத்து, பலவாறு பிரிக்கப்பட்டுள்ளது.
முதலில் செய்யும்போது, உடலை - மூச்சுப்பாதைகளைச் சுத்தம் செய்வது முக்கியம். அப்போது உடலில் இறுக்கம் இருக்கலாம். பயிற்சிக்கு முழுவதும் உடல் தயாராக இல்லாமல் இருக்கலாம்.
அவ்வாறு மெல்ல மெல்ல தயார் செய்து கொண்டபின்பு பிராணாயாமப் பயிற்சியை நன்றாகச் செய்ய முடியும்; தரமானதாக இருக்கும். பிறகு அடுத்தடுத்த கட்டங்கள் என்பது எளிதாகவும் சரியாகவும் நடக்கும்.
மூச்சை நன்கு நீட்டிக் கொண்டு, உடலையும் மூச்சுக் குழாயையும் சுத்தம் செய்து கொண்டபின்பு நுட்பமான நாடி சோதனை போன்ற பிராணாயாமத்திற்குப் போகும்போது, அந்த அனுபவத்தை எளிதில் மறக்க முடியாது. சுயத்தைப் பற்றிய அறிவு கூடும்; தெளிவு அதிகமாகும். அமைதியின் ஆழம் மேலும் அதிகரிக்கும். இதனால் பலன்கள் நிறைய இருக்கும்.
பிராணாயாமத்தைச் சரியாக எப்படிச் செய்வது?
ஒரு மூக்கை முழுவதுமாக மூடிக்கொண்டு, மற்றொரு மூக்கு வழியாக மூச்சை உள்ளே இழுப்பதோ அல்லது வெளியே விடுவதோ செய்ய வேண்டும். அப்போது அந்த மூக்கு பாதி மூடியிருக்க வேண்டும். அப்போதுதான் உள்மூச்சு-வெளிமூச்சின் அளவு நன்கு நீளும்; மூச்சு மென்மையாகவும் சீராகவும் இருக்கும். இதில் உள்மூச்சையோ-வெளிமூச்சையோ அல்லது இரண்டையுமோ நீட்டச் செய்யலாம். இரு மூச்சு களுக்கு இடையில் இருக்கும் இடைவெளியைக் கூட்டலாம்.
மூச்சைப் பயன்படுத்தி பலவித பலன்களும் பெறுவது பிராணாயாமத்தில் சாத்தியம். பெரும்பாலும் மூக்குவழிதான் மூச்சைப் பயன்படுத்தினாலும், சிலநேரப் பயிற்சியில் மூச்சு, தொண்டையை மையமிட்டு இருக்கும். மிக அரிதாகவே வாய்வழியாக மூச்சை எடுப்பதோ அல்லது வெளிவிடுவதோ நடக்கும்.
ஒரு மூச்சுக்கும் அடுத்த மூச்சுக்கும் சிறிய இடைவெளி இருக்க வேண்டும். மூச்சை உள்ளெடுப்பது-வெளியே விடுவது தவிர, உள் மூச்சுக்குப்பின் நிறுத்துவது, வெளி மூச்சுக்குப்பின் நிறுத்துவது, மூச்சின்போது எண்ணிக்கையைப் பயன்படுத்துவது, அதை மெல்ல மெல்ல அதிகப்படுத்துவது, மூச்சின்போது ஒலியைப் பயன்படுத்துவது, மூச்சோடு மந்திரங்களைப் பயன்படுத்துதல்… என்று நிறைய முறைகள் உள்ளன.
சாதாரண பலன்கள் தொடங்கி, நாடிகளைச் சுத்தம் செய்தல், மனதை ஆரோக்கியமாக மாற்றுதல் என்று மிக அரிய சக்திகளை பிராணாயாமம் மூலம் பெறமுடியும். தியானத்திற்கும் வாழ்வின் தெளிவான பார்வைக்கும் பிராணாயாமம் காரணமாக இருக்க முடியும்.
நபருக்கு ஏற்பவும், பயிற்சிக்கு ஏற்பவும், காலத்திற்கு ஏற்பவும், ஏன்… நேரத்திற்கு ஏற்பவும் கூட பிராணாயாமத்தைத் தேர்வு செய்து பலன் பெறலாம்.
பிராணாயாமத்தில் சுத்தப்படுத்தல், குளிர்ச்சி தருதல், உடலை சூடாக்குதல், தியானத்திற்குத் தயார்செய்யும் பிராணாயாமம் என்று அதன் இயல்பை வைத்து, பலவாறு பிரிக்கப்பட்டுள்ளது.
முதலில் செய்யும்போது, உடலை - மூச்சுப்பாதைகளைச் சுத்தம் செய்வது முக்கியம். அப்போது உடலில் இறுக்கம் இருக்கலாம். பயிற்சிக்கு முழுவதும் உடல் தயாராக இல்லாமல் இருக்கலாம்.
அவ்வாறு மெல்ல மெல்ல தயார் செய்து கொண்டபின்பு பிராணாயாமப் பயிற்சியை நன்றாகச் செய்ய முடியும்; தரமானதாக இருக்கும். பிறகு அடுத்தடுத்த கட்டங்கள் என்பது எளிதாகவும் சரியாகவும் நடக்கும்.
மூச்சை நன்கு நீட்டிக் கொண்டு, உடலையும் மூச்சுக் குழாயையும் சுத்தம் செய்து கொண்டபின்பு நுட்பமான நாடி சோதனை போன்ற பிராணாயாமத்திற்குப் போகும்போது, அந்த அனுபவத்தை எளிதில் மறக்க முடியாது. சுயத்தைப் பற்றிய அறிவு கூடும்; தெளிவு அதிகமாகும். அமைதியின் ஆழம் மேலும் அதிகரிக்கும். இதனால் பலன்கள் நிறைய இருக்கும்.
பிராணாயாமத்தைச் சரியாக எப்படிச் செய்வது?
ஒரு மூக்கை முழுவதுமாக மூடிக்கொண்டு, மற்றொரு மூக்கு வழியாக மூச்சை உள்ளே இழுப்பதோ அல்லது வெளியே விடுவதோ செய்ய வேண்டும். அப்போது அந்த மூக்கு பாதி மூடியிருக்க வேண்டும். அப்போதுதான் உள்மூச்சு-வெளிமூச்சின் அளவு நன்கு நீளும்; மூச்சு மென்மையாகவும் சீராகவும் இருக்கும். இதில் உள்மூச்சையோ-வெளிமூச்சையோ அல்லது இரண்டையுமோ நீட்டச் செய்யலாம். இரு மூச்சு களுக்கு இடையில் இருக்கும் இடைவெளியைக் கூட்டலாம்.
இன்றைய பெண்களில் பலருக்கும் கர்ப்ப காலத்தில் உடல் எடை பிரச்சனை என்பது இருக்கிறது.. கர்ப்ப காலத்தில் எவ்வளவு எடையில் இருக்க வேண்டும் என்பது பற்றி அறிந்து கொள்ளலாம்.
இன்றைய பெண்களில் பலருக்கும் கர்ப்ப காலத்தில் உடல் எடை பிரச்சனை என்பது இருக்கிறது.. ஒரு சில பெண்கள் கர்ப்ப காலத்தில் மிக குறைந்த எடையுடன் இருக்கிறார்கள்.. மேலும் சில பெண்கள் கர்ப்ப காலத்தில் மிக அதிக எடையுடன் இருக்கிறார்கள்..
கர்ப்ப காலத்தில் பெண்கள் ஒரு குறிப்பிட்ட எடைக்கு குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரி அது குழந்தையின் ஆரோக்கியத்தையும் சேர்த்து பாதிக்கும் என்பது பற்றி தெரியுமா? கருவில் வளரும் குழந்தைக்கு தேவையான உணவானது தொப்புள் கொடி வழியாக தான் செல்கிறது என்பதால், தாய் நல்ல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டியது என்பது மிக மிக அவசியமானதாகும்..
இல்லை என்றால் இது குழந்தையை பாதிக்கும்.. இந்த பகுதியில் பெண்கள் கர்ப்ப காலத்தில் எவ்வளவு எடையில் இருக்க வேண்டும் என்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.
கர்ப்ப காலத்தில் பெண்களின் எடையானது சுமார், 12 கிலோ முதல் 16 கிலோ வரை அதிகரிக்க வேண்டும். எனவே இதற்காக பெண்கள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டியது என்பது அவசியமாகும். உடல் எடை அதிகமாக உள்ள பெண்கள் கர்ப்ப காலத்தில் உடல் எடையை குறைக்க முயற்சி செய்யாமல் சத்தான உணவுகளை சாப்பிட வேண்டியது என்பது அவசியமாகும்..
உடல் எடை குறைவாக உள்ள பெண்கள் கர்ப்ப காலத்தில், 13 முதல் 18 கிலோ வரையில் அதிகரிக்க வேண்டியது அவசியமாகும். இதற்காக இவர்கள் சிரமம் பார்க்காமல் கர்ப்ப காலத்தில் சத்தான உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியமாகும்.
உடல் எடை அதிகமாக உள்ள பெண்கள் கர்ப்ப காலத்தில் உடல் எடையை குறைக்க முயற்சி செய்யாமல், 7 கிலோ முதல் 11 கிலோ வரையில் அதிகரிக்க வேண்டியது அவசியமாகும்.

முதன் முதலில் கர்ப்பமடைந்த பெண்கள் தங்களது உடல் எடையை முதல் மூன்று மாதங்களில் 1 கிலோ முதல் 2 கிலோ வரையில் அதிகரிக்க வேண்டியது அவசியமாகும். பின் அடுத்தடுத்த ஒவ்வொரு வாரங்களிலும் அரை கிலோ கிராம் வரையில் அதிகரித்துக் கொண்டே செல்ல வேண்டியது அவசியமாகும்.
உங்களுக்கு இரட்டை குழந்தை என்றால், நீங்கள் 16 கிலோ கிராம் முதல் 20 கிலோ கிராம் வரையில் தங்களது உடல் எடையை அதிகரிக்க வேண்டியது அவசியமாகும்.
பொதுவாக கர்ப்ப காலத்தில் அனைத்து பெண்களும் ஒரே மாதிரியான எடையில் இருக்க மாட்டார்கள்.. கர்ப்ப காலத்தில் உடல் எடையானது உங்களது உயரம், எடை, வயது ஆகியவற்றை பொருத்து எவ்வளவு அதிகரிக்க வேண்டும் என்று உங்களது மருத்துவர் உங்களுக்கு பரிந்துரை செய்வார்.
கர்ப்பம் தரித்த உடனே எடை உயராது. ஏனெனில், கர்ப்ப காலத்தின் ஆரம்பத்தில், உண்டாகிற குமட்டல், வாந்தி, பசியின்மை போன்ற காரணங்களால் முதல் 3 மாதங்களில் எடையானது இயல்பை விட மிகவும் குறைந்துவிடும். அரை கிலோ முதல் ஒரு கிலோ வரை குறைவது சாதாரணமானது. 5, 10 கிலோ வரை குறைவது என்பது அசாதாரணம். இவ்வாறு அதிகமாகக் குறைந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
கர்ப்ப காலத்தில் எடை அதிகரிப்பானது கருத்தரித்த 12 வாரம் அல்லது 14 வது வாரத்தில்தான் பொதுவாக ஆரம்பிக்கும். அந்த நேரத்தில் பெரும்பாலும் வாந்தியும், குமட்டலும் நின்றிருக்கும். கர்ப்பிணிக்கு நன்றாகப் பசியெடுத்து, எதையாவது சாப்பிட வேண்டும் என்பது போலத் தோன்றும். இந்த நாட்களில் ஊட்டம் நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.
பத்தாவது வார வாக்கில்தான் ரத்த ஓட்டம் அதிகரிக்க ஆரம்பிக்கும். பதினான்காவது வார வாக்கில் பசி எடுக்கும் நிலை இயல்பு நிலைக்கு திரும்பும். இந்த நேரத்தில்தான் கர்ப்பிணி தான் விரும்பியதை அல்லது அவ்வப்போது கிடைப்பதை சாப்பிட ஆரம்பிப்பாள்.
கர்ப்ப காலத்தில் பெண்கள் ஒரு குறிப்பிட்ட எடைக்கு குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரி அது குழந்தையின் ஆரோக்கியத்தையும் சேர்த்து பாதிக்கும் என்பது பற்றி தெரியுமா? கருவில் வளரும் குழந்தைக்கு தேவையான உணவானது தொப்புள் கொடி வழியாக தான் செல்கிறது என்பதால், தாய் நல்ல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டியது என்பது மிக மிக அவசியமானதாகும்..
இல்லை என்றால் இது குழந்தையை பாதிக்கும்.. இந்த பகுதியில் பெண்கள் கர்ப்ப காலத்தில் எவ்வளவு எடையில் இருக்க வேண்டும் என்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.
கர்ப்ப காலத்தில் பெண்களின் எடையானது சுமார், 12 கிலோ முதல் 16 கிலோ வரை அதிகரிக்க வேண்டும். எனவே இதற்காக பெண்கள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டியது என்பது அவசியமாகும். உடல் எடை அதிகமாக உள்ள பெண்கள் கர்ப்ப காலத்தில் உடல் எடையை குறைக்க முயற்சி செய்யாமல் சத்தான உணவுகளை சாப்பிட வேண்டியது என்பது அவசியமாகும்..
உடல் எடை குறைவாக உள்ள பெண்கள் கர்ப்ப காலத்தில், 13 முதல் 18 கிலோ வரையில் அதிகரிக்க வேண்டியது அவசியமாகும். இதற்காக இவர்கள் சிரமம் பார்க்காமல் கர்ப்ப காலத்தில் சத்தான உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியமாகும்.
உடல் எடை அதிகமாக உள்ள பெண்கள் கர்ப்ப காலத்தில் உடல் எடையை குறைக்க முயற்சி செய்யாமல், 7 கிலோ முதல் 11 கிலோ வரையில் அதிகரிக்க வேண்டியது அவசியமாகும்.

முதன் முதலில் கர்ப்பமடைந்த பெண்கள் தங்களது உடல் எடையை முதல் மூன்று மாதங்களில் 1 கிலோ முதல் 2 கிலோ வரையில் அதிகரிக்க வேண்டியது அவசியமாகும். பின் அடுத்தடுத்த ஒவ்வொரு வாரங்களிலும் அரை கிலோ கிராம் வரையில் அதிகரித்துக் கொண்டே செல்ல வேண்டியது அவசியமாகும்.
உங்களுக்கு இரட்டை குழந்தை என்றால், நீங்கள் 16 கிலோ கிராம் முதல் 20 கிலோ கிராம் வரையில் தங்களது உடல் எடையை அதிகரிக்க வேண்டியது அவசியமாகும்.
பொதுவாக கர்ப்ப காலத்தில் அனைத்து பெண்களும் ஒரே மாதிரியான எடையில் இருக்க மாட்டார்கள்.. கர்ப்ப காலத்தில் உடல் எடையானது உங்களது உயரம், எடை, வயது ஆகியவற்றை பொருத்து எவ்வளவு அதிகரிக்க வேண்டும் என்று உங்களது மருத்துவர் உங்களுக்கு பரிந்துரை செய்வார்.
கர்ப்பம் தரித்த உடனே எடை உயராது. ஏனெனில், கர்ப்ப காலத்தின் ஆரம்பத்தில், உண்டாகிற குமட்டல், வாந்தி, பசியின்மை போன்ற காரணங்களால் முதல் 3 மாதங்களில் எடையானது இயல்பை விட மிகவும் குறைந்துவிடும். அரை கிலோ முதல் ஒரு கிலோ வரை குறைவது சாதாரணமானது. 5, 10 கிலோ வரை குறைவது என்பது அசாதாரணம். இவ்வாறு அதிகமாகக் குறைந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
கர்ப்ப காலத்தில் எடை அதிகரிப்பானது கருத்தரித்த 12 வாரம் அல்லது 14 வது வாரத்தில்தான் பொதுவாக ஆரம்பிக்கும். அந்த நேரத்தில் பெரும்பாலும் வாந்தியும், குமட்டலும் நின்றிருக்கும். கர்ப்பிணிக்கு நன்றாகப் பசியெடுத்து, எதையாவது சாப்பிட வேண்டும் என்பது போலத் தோன்றும். இந்த நாட்களில் ஊட்டம் நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.
பத்தாவது வார வாக்கில்தான் ரத்த ஓட்டம் அதிகரிக்க ஆரம்பிக்கும். பதினான்காவது வார வாக்கில் பசி எடுக்கும் நிலை இயல்பு நிலைக்கு திரும்பும். இந்த நேரத்தில்தான் கர்ப்பிணி தான் விரும்பியதை அல்லது அவ்வப்போது கிடைப்பதை சாப்பிட ஆரம்பிப்பாள்.
சர்க்கரை நோயாளிகள் தினமும் உணவில் ஓட்ஸ், சம்பா ரவையை சேர்த்து கொள்வது நல்லது. இன்று இந்த இரண்டையும் சேர்த்து இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ஓட்ஸ் - 1 கப்
சம்பா ரவை - அரை கப்
தயிர் - கால் கப்
சோடா மாவு - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
தாளிக்க
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு, சீரகம், உளுந்தம் பருப்பு - தலா அரை டீஸ்பூன்
ப.மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
இஞ்சி - சிறிய துண்டு

செய்முறை
கொத்தமல்லி, ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் ஓட்ஸை போட்டு 5 நிமிடங்கள் வறுத்து ஆறியதும் கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.
மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு தாளித்த பின்னர் சம்பா ரவையை போட்டு 5 நிமிடங்கள் வறுக்கவும்.
அடுத்து அதில் பொடித்த ஓட்ஸ் சேர்த்து சிறிது கிளறிய பின்னர் அடுப்பை அணைத்து விடவும்.
பிறகு அதில் சோடா மாவு, தயிர், 1 1/2 தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும். கலவை இட்லி மாவு பதத்தில் இருக்க வேண்டும்.
அடுத்து அதில் உப்பு, கொத்தமல்லி தழை சேர்த்து கலந்து அரை மணிநேரம் அப்படியே வைக்கவும்.
இட்லி தட்டில் சிறிது எண்ணெய் தடவிய பின்னர் அதில் மாவை ஊற்றி ஆவியில் 20 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.
சாம்பார், புதினா சட்னியுடன் பரிமாறவும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ஓட்ஸ் - 1 கப்
சம்பா ரவை - அரை கப்
தயிர் - கால் கப்
சோடா மாவு - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
தாளிக்க
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு, சீரகம், உளுந்தம் பருப்பு - தலா அரை டீஸ்பூன்
ப.மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
இஞ்சி - சிறிய துண்டு

செய்முறை
கொத்தமல்லி, ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் ஓட்ஸை போட்டு 5 நிமிடங்கள் வறுத்து ஆறியதும் கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.
மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு தாளித்த பின்னர் சம்பா ரவையை போட்டு 5 நிமிடங்கள் வறுக்கவும்.
அடுத்து அதில் பொடித்த ஓட்ஸ் சேர்த்து சிறிது கிளறிய பின்னர் அடுப்பை அணைத்து விடவும்.
பிறகு அதில் சோடா மாவு, தயிர், 1 1/2 தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும். கலவை இட்லி மாவு பதத்தில் இருக்க வேண்டும்.
அடுத்து அதில் உப்பு, கொத்தமல்லி தழை சேர்த்து கலந்து அரை மணிநேரம் அப்படியே வைக்கவும்.
இட்லி தட்டில் சிறிது எண்ணெய் தடவிய பின்னர் அதில் மாவை ஊற்றி ஆவியில் 20 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.
சாம்பார், புதினா சட்னியுடன் பரிமாறவும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
நமது வீட்டில் எளிதில் கிடைக்கும் சில பொருட்களை கொண்டு முகத்தில் பொலிவை அதிகரிக்க செய்யலாம். அது எப்படி என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.
கருமையை போக்க பல க்ரீம்கள் மற்றும் இராசாயனப்பொருட்களை தான் முகத்தில் தடவ வேண்டும் என்ற அவசியம் இல்லை. நமது வீட்டில் எளிதில் கிடைக்கும் சில பொருட்களை கொண்டு முகத்தில் பொலிவை அதிகரிக்க செய்யலாம். அது எப்படி என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.
ஓட்ஸை பொடி செய்து அதனுடன் தக்காளி சாற்றினையும், தயிரையும் கலந்து முகத்தில் குறிப்பாக வாயை சுற்றிலும் போடுங்கள். 15 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவுங்கள். விரைவில் பலன் கிடைக்க, வாரம் மூன்று முறையாவது போடுங்கள்.
சிறிதளவு வெண்ணெயை முகத்தில் தடவி மசாஜ் செய்தால் முகம் வெண்ணெய் போலவே மிருதுவாக மாறும். உங்களுக்கு பிரகாசமான முகம் கிடைப்பதும் உறுதி.
பேக்கிங் சோடாவை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி வெளியே சென்று வீட்டிற்கு வந்ததும் செய்து வந்தால், முகத்தில் நல்ல மாற்றம் தெரியும்.
வாழைப்பழத்தை மசித்து, அதில் பால் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், இரண்டே நாட்களில் முகத்தின் பொலிவு கூடியிருப்பதை நன்கு காணலாம்.
ரோஸ் வாட்டரில் சிறிது பால் சேர்த்து கலந்து, தினமும் இரவில் படுக்கும் முன் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் வெள்ளையாக பளிச்சென்று காணப்படும்.
சோப்பிற்கு பதிலாக பாசிப்பயறு மாவு, கடலை மாவு, கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை பயன்படுத்தினால், முகத்திற்கு ஒரு தனி கவர்ச்சியே கிடைக்கும். உங்களது அழகு பல்லாண்டு காலம் நீடித்திருக்கும்.
தினமும் இரவு தூங்குவதற்கு முன்னர் சிறிதளவு பாலில், மஞ்சளை கலந்து பேக் போட்டுக்கொண்டால், முகம் வசீகரமாக இருக்கும். தினமும் காலையில் உங்களது முகத்தில் ஒரு ஒளியை காணமுடியும்.
தினமும் குளிப்பதற்கு முன்னர் கற்றாழை ஜெல்லுடன் மஞ்சளை கலந்து மசாஜ் செய்து பின்னர் குளித்தால், முகப்பருக்கள் இல்லாத தெளிவான சருமத்தை பெறலாம்.
ஓட்ஸை பொடி செய்து அதனுடன் தக்காளி சாற்றினையும், தயிரையும் கலந்து முகத்தில் குறிப்பாக வாயை சுற்றிலும் போடுங்கள். 15 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவுங்கள். விரைவில் பலன் கிடைக்க, வாரம் மூன்று முறையாவது போடுங்கள்.
சிறிதளவு வெண்ணெயை முகத்தில் தடவி மசாஜ் செய்தால் முகம் வெண்ணெய் போலவே மிருதுவாக மாறும். உங்களுக்கு பிரகாசமான முகம் கிடைப்பதும் உறுதி.
பேக்கிங் சோடாவை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி வெளியே சென்று வீட்டிற்கு வந்ததும் செய்து வந்தால், முகத்தில் நல்ல மாற்றம் தெரியும்.
வாழைப்பழத்தை மசித்து, அதில் பால் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், இரண்டே நாட்களில் முகத்தின் பொலிவு கூடியிருப்பதை நன்கு காணலாம்.
ரோஸ் வாட்டரில் சிறிது பால் சேர்த்து கலந்து, தினமும் இரவில் படுக்கும் முன் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் வெள்ளையாக பளிச்சென்று காணப்படும்.
சோப்பிற்கு பதிலாக பாசிப்பயறு மாவு, கடலை மாவு, கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை பயன்படுத்தினால், முகத்திற்கு ஒரு தனி கவர்ச்சியே கிடைக்கும். உங்களது அழகு பல்லாண்டு காலம் நீடித்திருக்கும்.
தினமும் இரவு தூங்குவதற்கு முன்னர் சிறிதளவு பாலில், மஞ்சளை கலந்து பேக் போட்டுக்கொண்டால், முகம் வசீகரமாக இருக்கும். தினமும் காலையில் உங்களது முகத்தில் ஒரு ஒளியை காணமுடியும்.
தினமும் குளிப்பதற்கு முன்னர் கற்றாழை ஜெல்லுடன் மஞ்சளை கலந்து மசாஜ் செய்து பின்னர் குளித்தால், முகப்பருக்கள் இல்லாத தெளிவான சருமத்தை பெறலாம்.
பிள்ளைகள் பசித்த வயிறும், அழுத கண்களுமாக பள்ளிக்கு செல்வதை மாற்றி, சத்தான சாப்பாடு, சிரித்த முகமாக அவர்கள் பள்ளி சென்று திரும்ப அக்கறை காட்டுங்கள்!
95 சதவீத குழந்தைகள் சத்தான உணவை எடுத்துக் கொள்வதில்லை என்கிறது ஒரு புள்ளி விவரம். பாதி குழந்தைகள் காலை உணவில் கவனம் செலுத்துவதில்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.
சத்தான காலை உணவே குழந்தைகளின் நினைவுத்திறன், எச்சரிக்கை உணர்வு, மன ஒருமைப்பாடு, சாதுரிய மனப்பான்மைக்கு உதவியாக இருக்கும். நிம்மதியாக சாப்பிட்டு மனநிறைவுடன் பள்ளிக்கு கிளம்புபவர்கள் மகிழ்ச்சியான மனநிலையுடன் எதையும் எதிர்கொள்வார்கள்.
அடிக்கடி காலை உணவை சாப்பிடாமல் கிளம்புபவர்களுக்கு வயிற்றில் சுரக்கும் ஜீரண திரவங்களால் வயிற்றில் புண் ஏற்பட்டு, ‘அல்சர்’ எனும் தீராத வயிற்றுவலி பிரச்சினையாக மாற வாய்ப்பு உண்டு.
குழந்தைகள் சரியாக சாப்பிட்டு மகிழ்ச்சியாக பள்ளி செல்வது பெற்றோரின் கைகளில்தான் உள்ளது.
சிறுகுழந்தைகள் பலர் சாப்பிட அடம் பிடிப்பார்கள். அவர்களை சாப்பிட வைக்க, அவர்களின் சொந்த விருப்பத்தின்படி உணவுகளை தயார் செய்து கொடுக்க வேண்டும். கடைக்கு அழைத்துச் சென்று அவர்களையே காய்கறியைத் தேர்வு செய்யச் சொல்லுங்கள். ஒவ்வொரு காயிலும் என்ன சத்து இருக்கிறது என்பதைச் சொல்லுங்கள். காய்கறி குறித்து குழந்தை கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லத் தயாராக இருங்கள். சமைக்கும்போது சின்னச் சின்ன வேலைகள் செய்ய குழந்தைகளை அனுமதியுங்கள். இது சாப்பிடும் ஆர்வத்தை ஏற்படுத்தும்.
வழக்கமான இட்லி, தோசை, சாதம் போன்றவற்றுக்குப் பதிலாக, குழந்தைக்குப் பிடித்த உணவு வகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம். இவற்றுக்குப் பதிலாக பால், காய்கறி, பழங்கள், கீரைகள், பருப்புகள், தேன், முந்திரி, பாதாம், திராட்சை, முட்டை சேர்த்து விதவிதமான உணவுகள் தயாரித்து கொடுக்கலாம்.
சாப்பிடும்போது பெற்றோரும் இணைந்துகொண்டால் போட்டி போட்டு சாப்பிட்டு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தலாம்.
பள்ளிக்கான தயாரிப்புகளை இரவே முடித்து விடுங்கள். குழந்தைகளின் வேலையை அவர்களே செய்ய வாய்ப்பளியுங்கள்.
தொலைக்காட்சி பார்க்கும், ஸ்மார்ட்போனில் விளையாடும் நேரத்தைக் குறைத்து, அவர்களுடன் பேசவும், விளையாடவும் நேரம் ஒதுக்குங்கள்.
பசித்த வயிறும், அழுத கண்களுமாக பிள்ளைகள் பள்ளிக்கு செல்வதை மாற்றி, சத்தான சாப்பாடு, சிரித்த முகமாக அவர்கள் பள்ளி சென்று திரும்ப அக்கறை காட்டுங்கள்!
சத்தான காலை உணவே குழந்தைகளின் நினைவுத்திறன், எச்சரிக்கை உணர்வு, மன ஒருமைப்பாடு, சாதுரிய மனப்பான்மைக்கு உதவியாக இருக்கும். நிம்மதியாக சாப்பிட்டு மனநிறைவுடன் பள்ளிக்கு கிளம்புபவர்கள் மகிழ்ச்சியான மனநிலையுடன் எதையும் எதிர்கொள்வார்கள்.
அடிக்கடி காலை உணவை சாப்பிடாமல் கிளம்புபவர்களுக்கு வயிற்றில் சுரக்கும் ஜீரண திரவங்களால் வயிற்றில் புண் ஏற்பட்டு, ‘அல்சர்’ எனும் தீராத வயிற்றுவலி பிரச்சினையாக மாற வாய்ப்பு உண்டு.
குழந்தைகள் சரியாக சாப்பிட்டு மகிழ்ச்சியாக பள்ளி செல்வது பெற்றோரின் கைகளில்தான் உள்ளது.
சிறுகுழந்தைகள் பலர் சாப்பிட அடம் பிடிப்பார்கள். அவர்களை சாப்பிட வைக்க, அவர்களின் சொந்த விருப்பத்தின்படி உணவுகளை தயார் செய்து கொடுக்க வேண்டும். கடைக்கு அழைத்துச் சென்று அவர்களையே காய்கறியைத் தேர்வு செய்யச் சொல்லுங்கள். ஒவ்வொரு காயிலும் என்ன சத்து இருக்கிறது என்பதைச் சொல்லுங்கள். காய்கறி குறித்து குழந்தை கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லத் தயாராக இருங்கள். சமைக்கும்போது சின்னச் சின்ன வேலைகள் செய்ய குழந்தைகளை அனுமதியுங்கள். இது சாப்பிடும் ஆர்வத்தை ஏற்படுத்தும்.
வழக்கமான இட்லி, தோசை, சாதம் போன்றவற்றுக்குப் பதிலாக, குழந்தைக்குப் பிடித்த உணவு வகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம். இவற்றுக்குப் பதிலாக பால், காய்கறி, பழங்கள், கீரைகள், பருப்புகள், தேன், முந்திரி, பாதாம், திராட்சை, முட்டை சேர்த்து விதவிதமான உணவுகள் தயாரித்து கொடுக்கலாம்.
சாப்பிடும்போது பெற்றோரும் இணைந்துகொண்டால் போட்டி போட்டு சாப்பிட்டு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தலாம்.
பள்ளிக்கான தயாரிப்புகளை இரவே முடித்து விடுங்கள். குழந்தைகளின் வேலையை அவர்களே செய்ய வாய்ப்பளியுங்கள்.
தொலைக்காட்சி பார்க்கும், ஸ்மார்ட்போனில் விளையாடும் நேரத்தைக் குறைத்து, அவர்களுடன் பேசவும், விளையாடவும் நேரம் ஒதுக்குங்கள்.
பசித்த வயிறும், அழுத கண்களுமாக பிள்ளைகள் பள்ளிக்கு செல்வதை மாற்றி, சத்தான சாப்பாடு, சிரித்த முகமாக அவர்கள் பள்ளி சென்று திரும்ப அக்கறை காட்டுங்கள்!
லூபஸ் என்பது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி, எதிர்மறையாக மாறுவதால் வருவது. சில சமயங்களில், நமது உடலில் இயங்கும் நோய் எதிர்ப்பு சக்தி நமது உடலுக்கு எதிராக உடல் உறுப்புக்களை, திசுக்களை, பாதிக்கிறது.
லூபஸ் என்பது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி, எதிர்மறையாக மாறுவதால் வருவது. சில சமயங்களில், நமது உடலில் இயங்கும் நோய் எதிர்ப்பு சக்தி நமது உடலுக்கு எதிராக உடல் உறுப்புக்களை, திசுக்களை, பாதிக்கிறது. உடலின் வெவ்வேறு பாகங்களையும் பாதிக்கலாம். குறிப்பாக தோல், மூட்டுக்கள், சிறுநீரகங்கள், மூளை, இதயம், நுரையீரல், ரத்த அணுக்கள் ஆகியன பாதிக்கப்படலாம்.
இந்நோயின் அறிகுறிகள் வேறு நோய்களின் அறிகுறிகளைப் போன்று இருப்பதால் இந்நோயைக் கண்டறிவது சிரமம். பெரும்பாலானவர்களுக்குக் காணப்படும் அறிகுறி வணத்துப்பூச்சி சிறகடிப்பது போல இரு கன்னங்களிலும் காணப்படுவதாகும்.
சிலர் பிறக்கும்போதே இந்நோய் வருவதற்கான அறிகுறியுடன் காணப்படுவர். அது சில மருந்துகள், நோய்த் தொற்றுக்கள், சூரியஒளி காரணமாகத் தூண்டப்பட்டு அதிகமாகும். முழுவதும் குணப்படுத்த முடியாத நிலையில், இந்நோயைக் கட்டுக்குள் வைக்கலாம்.
அறிகுறிகள் :
பாதிக்கப்பட்ட இடங்களைப் பொறுத்து, இந்நோயின் அறிகுறிகள் மாறுபடும். காய்ச்சல், மூட்டுக்களில் வலி, வீக்கம், இறுக்கம், கன்னங்களில் பட்டாம்பூச்சி வடிவில் நிறமாற்றம்
* சூரியஒளி படும்போது தோல் சிவந்து, கறுத்துப் போதல்.
* விரல்கள், பாதங்கள் வெளிறிப் போதல் அல்லது நீல நிறமாகி விடுதல் (குளிர் படும் போது அல்லது மன அழுத்தம் அதிகமாகும் போது)
* மூச்சுவிடச் சிரமம் ஆதல்,
* நெஞ்சுவலி
* கண்களில் வறட்சி
* தலைவலி, குழப்பம், ஞாபக மறதி ஆகியன தென்படும்.
பின் விளைவுகள் :
* இந்நோய் தீவிரமாகும் போது உடலின் சிறுநீரகங்கள் பாதிக்கப்படலாம்.
* மூளை மற்றும் நரம்பு மண்டலம் பாதிக்கப்படலாம். மூளை பாதிக்கப்பட்டால் தலைவலி, மயக்கம், பார்வைக் குறைபாடுகள், தலைசுற்றல், பக்க வாதம், நடைமுறையில் மாற்றங்கள், குழப்பங்கள் நேரலாம்.
* ஞாபக மறதி, எண்ணங்களை வெளிப் படுத்துவதில் குறைபாடு நேரலாம்.
* ரத்தம், ரத்தக் குழாய் சம்பந்தமான நோய்கள், அதாவது ரத்தசோகை, ரத்தம் உறைதல், ரத்தக் கசிவு, ரத்தக் குழாய்கள் வீக்கம் (உப்புதல்) ஆகியன.
* நுரையீரல் நோய்கள், நுரையீரல் உறைகளில் வீக்கம் நேர்ந்து, மூச்சுவிடச் சிரமம் ஆகும். நிமோனியா வரலாம். நுரையீரலில் ரத்தக் கசிவு நேரலாம்.
* இதயத்தின் தசைகளில், ரத்தக் குழாய் களில் இதயத்தைச் சுற்றியுள்ள உறையான பெரிகார்டியத்தில் வீக்கம் வரலாம், இதய அடைப்பு வரலாம்.
பிற பின் விளைவுகள்:
* இவ்வியாதி காரணமாக நோய்த்தொற்று அதிகம் ஏற்படலாம்.
* புற்றுநோய் வர, குறைந்த வாய்ப்புள்ளது.
* எலும்புகளுக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு குறையும், அதனால் எலும்புகள் உடை யும் அபாயம் நேரலாம்.
* பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் ரத்த அழுத்தம் அதிகமாக வாய்ப்பு அதிகம். அதனால் கர்ப்பச்சிதைவு ஏற்படவும், குழந்தை உரிய நேரத்துக்கு முன்பே பிறக்கவும் வாய்ப்பு அதிகம். ஆகவே இந்நோய் குணமாகும் வரை கர்ப்பம் தரிக்காமல் இருப்பது நல்லது.
மருந்துகள்:
குடூச்சியாதி கஷாயம், தீக்தகம் கஷாயம், தாடிமாதி கஷாயம், சுகுமார க்ருதம், மஹாதிக்தக க்ருதம், ஆரோக்கிய வர்த்தினி வடி ஆகியன சாப்பிடலாம்.
மேலே போட
* ‘பஞ்சதிக்தக திரவியம்’ சேர்த்துக் காய்ச்சிய பாலை பாதிக்கப்பட்ட இடங்களில் ஊற்றலாம். (தாரா).
* சீந்தில் கொடியைச் சேர்த்துக் காய்ச்சிய பால் கஷாயத்தில் தாரா செய்யலாம்.
* தா வரி சேர்த்துக் காய்ச்சிய பால் கஷாயத்தில் தாரா செய்யலாம்.

“சொரியாட்டிக் ஆர்த்தரைட்டிஸ் இது சொரியாஸிஸ், ஆர்த்தரைட்டிஸ் (வாதம்) இரண்டும் சேர்ந்த வியாதி ஆகும்.
தோலில் சிவந்த தடிப்புகளும் அதன் மேலே வெள்ளிபோன்ற நிறமுடைய செதில்களும் காணப்படும். பெரும்பாலான மக்களுக்கு, முடிவில் சொரியாஸிஸ் வரும் பிறகு சொரியாட்டிக் ஆர்த்தரைட்டிஸ் ஆக உணரப்படும்.
அவை விரல் நுனி, முதுகுத் தண்டு போன்று உடலின் எந்த பாகத்தையும் பாதிக்கும்.
இந்நோயை குணப்படுத்த முடியாது, நோயைக கட்டுக்குள் வைக்கலாம்.
உடலின் ஒரு பாகத் திலுள்ள மூட்டுக்ளையோ அல்லது (இடது, வலது) இரு பக்கத்திலுள்ள மூட்டுக்களையோ பாதிக்கலாம். இந்நோயின் அறிகுறிகள் “ருமாட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ்” நோயைப் போன்றே இருக்கும். இரு நோய்களிலும் மூட்டுக்கள் பாதிக்கப்பட்டு வலி, வீக்கம் ஆகியன இருக்கும்.
மேலும், சொரியாட்டிக் ஆர்த்தரைட்டிஸ், விரல் களிலும், பாதங்களிலும் வலியையும், வீக்கத்தையும் உண்டாக்கும். மூட்டுக்களில் குறிப்பிடத்தக்க அறிகுறிகள் தோன்றுமுன்பே, கை, கால்களில் வீக்கம், அசாதாரண மாற்றம் தோன்றம்.
பாதத்தின் அடியிலோ, பாதத்தின் பின்பகுதியிலோ தசை, தசைநார் ஆகியவை எலும்புடன் இணையும் இடத்தில் வலியை உண்டாக்கும்.
சிலருக்கு “ஸ்பாண்டி லைட்டிஸ்” எனப்படும் முதுகுத்தண்டின் அடிப்பாகத்தில் வலி வரும். முதுகுத் தண்டின் கண்ணிகளுக்கிடையே வீக்கம் வரும். முதுகுத்தண்டு மற்றும் இருப்புக்குமிடையே இருக்கும் மூட்டுக்களிலும் வீக்கம் வரும். சில சமயங்களில் தோல் செல்களின் உற்பத்தி அதிகம் ஆகும்.
நோய் எதிர்ப்பு சக்தி ஏன் எதிராக மாறுகிறது என்பது முழுவதும் அறியப்படாவிட்டாலும், பரம்பரை, சூழ்நிலை ஆகிய இரண்டும் பெரும்பங்கு வகிக்கின்றன என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
‘சொரியாடிக் ஆர்த்தரைட்டிஸ்’ நோய் வந்தவர்கள் குடும்பத்தில் யாருக்காவது சொரியாஸிஸ் அல்லது சொரியாட்டிக் ஆர்த்தரைட்டிஸ் நோய் முன்பே வந்திருக்கும்.
பிறப்பிலேயே இந்நோய் வரக்கூடிய சாத்தியக் கூறுகள் அமையப் பெற்றவர்களுக்கு ஏதாவது விபத்து ஏற்பட்டாலோ, அல்லது சுற்றுச்சூழல் பாதிப்பால் வைரஸ், பாக்டீரியா தோற்று ஏற்பட்டாலோ இந்நோய் சீக்கிரம் வந்து விடலாம். நோய் தீவிரமாகும் போது கையின் சிறு எலும்புகள் முழுவதும் சேதமடையலாம். கண்நோய்கள் வரலாம். இதயநோய்கள் வரலாம்.
சிகிச்சை, மருந்துகள்
உள்ளே சாப்பிட
மஞ்சிஷ்டாதி கஷாயம், மாணிபத்ர லேகியம், குடூச்சியாரி கஷாயம், கல்யாணகம் கஷாயம், கைஷோர குக்குலு, ஆரோக்கிய வர்த்தினிவடி ஆகிய உள்ளே சாப்பிடலாம்.
வெளியே போட
தசமூல கஷாயத்தில் பத்து போடலாம், தாரா செய்யலாம்.
இந்நோயின் அறிகுறிகள் வேறு நோய்களின் அறிகுறிகளைப் போன்று இருப்பதால் இந்நோயைக் கண்டறிவது சிரமம். பெரும்பாலானவர்களுக்குக் காணப்படும் அறிகுறி வணத்துப்பூச்சி சிறகடிப்பது போல இரு கன்னங்களிலும் காணப்படுவதாகும்.
சிலர் பிறக்கும்போதே இந்நோய் வருவதற்கான அறிகுறியுடன் காணப்படுவர். அது சில மருந்துகள், நோய்த் தொற்றுக்கள், சூரியஒளி காரணமாகத் தூண்டப்பட்டு அதிகமாகும். முழுவதும் குணப்படுத்த முடியாத நிலையில், இந்நோயைக் கட்டுக்குள் வைக்கலாம்.
அறிகுறிகள் :
பாதிக்கப்பட்ட இடங்களைப் பொறுத்து, இந்நோயின் அறிகுறிகள் மாறுபடும். காய்ச்சல், மூட்டுக்களில் வலி, வீக்கம், இறுக்கம், கன்னங்களில் பட்டாம்பூச்சி வடிவில் நிறமாற்றம்
* சூரியஒளி படும்போது தோல் சிவந்து, கறுத்துப் போதல்.
* விரல்கள், பாதங்கள் வெளிறிப் போதல் அல்லது நீல நிறமாகி விடுதல் (குளிர் படும் போது அல்லது மன அழுத்தம் அதிகமாகும் போது)
* மூச்சுவிடச் சிரமம் ஆதல்,
* நெஞ்சுவலி
* கண்களில் வறட்சி
* தலைவலி, குழப்பம், ஞாபக மறதி ஆகியன தென்படும்.
பின் விளைவுகள் :
* இந்நோய் தீவிரமாகும் போது உடலின் சிறுநீரகங்கள் பாதிக்கப்படலாம்.
* மூளை மற்றும் நரம்பு மண்டலம் பாதிக்கப்படலாம். மூளை பாதிக்கப்பட்டால் தலைவலி, மயக்கம், பார்வைக் குறைபாடுகள், தலைசுற்றல், பக்க வாதம், நடைமுறையில் மாற்றங்கள், குழப்பங்கள் நேரலாம்.
* ஞாபக மறதி, எண்ணங்களை வெளிப் படுத்துவதில் குறைபாடு நேரலாம்.
* ரத்தம், ரத்தக் குழாய் சம்பந்தமான நோய்கள், அதாவது ரத்தசோகை, ரத்தம் உறைதல், ரத்தக் கசிவு, ரத்தக் குழாய்கள் வீக்கம் (உப்புதல்) ஆகியன.
* நுரையீரல் நோய்கள், நுரையீரல் உறைகளில் வீக்கம் நேர்ந்து, மூச்சுவிடச் சிரமம் ஆகும். நிமோனியா வரலாம். நுரையீரலில் ரத்தக் கசிவு நேரலாம்.
* இதயத்தின் தசைகளில், ரத்தக் குழாய் களில் இதயத்தைச் சுற்றியுள்ள உறையான பெரிகார்டியத்தில் வீக்கம் வரலாம், இதய அடைப்பு வரலாம்.
பிற பின் விளைவுகள்:
* இவ்வியாதி காரணமாக நோய்த்தொற்று அதிகம் ஏற்படலாம்.
* புற்றுநோய் வர, குறைந்த வாய்ப்புள்ளது.
* எலும்புகளுக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு குறையும், அதனால் எலும்புகள் உடை யும் அபாயம் நேரலாம்.
* பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் ரத்த அழுத்தம் அதிகமாக வாய்ப்பு அதிகம். அதனால் கர்ப்பச்சிதைவு ஏற்படவும், குழந்தை உரிய நேரத்துக்கு முன்பே பிறக்கவும் வாய்ப்பு அதிகம். ஆகவே இந்நோய் குணமாகும் வரை கர்ப்பம் தரிக்காமல் இருப்பது நல்லது.
மருந்துகள்:
குடூச்சியாதி கஷாயம், தீக்தகம் கஷாயம், தாடிமாதி கஷாயம், சுகுமார க்ருதம், மஹாதிக்தக க்ருதம், ஆரோக்கிய வர்த்தினி வடி ஆகியன சாப்பிடலாம்.
மேலே போட
* ‘பஞ்சதிக்தக திரவியம்’ சேர்த்துக் காய்ச்சிய பாலை பாதிக்கப்பட்ட இடங்களில் ஊற்றலாம். (தாரா).
* சீந்தில் கொடியைச் சேர்த்துக் காய்ச்சிய பால் கஷாயத்தில் தாரா செய்யலாம்.
* தா வரி சேர்த்துக் காய்ச்சிய பால் கஷாயத்தில் தாரா செய்யலாம்.

“சொரியாட்டிக் ஆர்த்தரைட்டிஸ் இது சொரியாஸிஸ், ஆர்த்தரைட்டிஸ் (வாதம்) இரண்டும் சேர்ந்த வியாதி ஆகும்.
தோலில் சிவந்த தடிப்புகளும் அதன் மேலே வெள்ளிபோன்ற நிறமுடைய செதில்களும் காணப்படும். பெரும்பாலான மக்களுக்கு, முடிவில் சொரியாஸிஸ் வரும் பிறகு சொரியாட்டிக் ஆர்த்தரைட்டிஸ் ஆக உணரப்படும்.
அவை விரல் நுனி, முதுகுத் தண்டு போன்று உடலின் எந்த பாகத்தையும் பாதிக்கும்.
இந்நோயை குணப்படுத்த முடியாது, நோயைக கட்டுக்குள் வைக்கலாம்.
உடலின் ஒரு பாகத் திலுள்ள மூட்டுக்ளையோ அல்லது (இடது, வலது) இரு பக்கத்திலுள்ள மூட்டுக்களையோ பாதிக்கலாம். இந்நோயின் அறிகுறிகள் “ருமாட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ்” நோயைப் போன்றே இருக்கும். இரு நோய்களிலும் மூட்டுக்கள் பாதிக்கப்பட்டு வலி, வீக்கம் ஆகியன இருக்கும்.
மேலும், சொரியாட்டிக் ஆர்த்தரைட்டிஸ், விரல் களிலும், பாதங்களிலும் வலியையும், வீக்கத்தையும் உண்டாக்கும். மூட்டுக்களில் குறிப்பிடத்தக்க அறிகுறிகள் தோன்றுமுன்பே, கை, கால்களில் வீக்கம், அசாதாரண மாற்றம் தோன்றம்.
பாதத்தின் அடியிலோ, பாதத்தின் பின்பகுதியிலோ தசை, தசைநார் ஆகியவை எலும்புடன் இணையும் இடத்தில் வலியை உண்டாக்கும்.
சிலருக்கு “ஸ்பாண்டி லைட்டிஸ்” எனப்படும் முதுகுத்தண்டின் அடிப்பாகத்தில் வலி வரும். முதுகுத் தண்டின் கண்ணிகளுக்கிடையே வீக்கம் வரும். முதுகுத்தண்டு மற்றும் இருப்புக்குமிடையே இருக்கும் மூட்டுக்களிலும் வீக்கம் வரும். சில சமயங்களில் தோல் செல்களின் உற்பத்தி அதிகம் ஆகும்.
நோய் எதிர்ப்பு சக்தி ஏன் எதிராக மாறுகிறது என்பது முழுவதும் அறியப்படாவிட்டாலும், பரம்பரை, சூழ்நிலை ஆகிய இரண்டும் பெரும்பங்கு வகிக்கின்றன என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
‘சொரியாடிக் ஆர்த்தரைட்டிஸ்’ நோய் வந்தவர்கள் குடும்பத்தில் யாருக்காவது சொரியாஸிஸ் அல்லது சொரியாட்டிக் ஆர்த்தரைட்டிஸ் நோய் முன்பே வந்திருக்கும்.
பிறப்பிலேயே இந்நோய் வரக்கூடிய சாத்தியக் கூறுகள் அமையப் பெற்றவர்களுக்கு ஏதாவது விபத்து ஏற்பட்டாலோ, அல்லது சுற்றுச்சூழல் பாதிப்பால் வைரஸ், பாக்டீரியா தோற்று ஏற்பட்டாலோ இந்நோய் சீக்கிரம் வந்து விடலாம். நோய் தீவிரமாகும் போது கையின் சிறு எலும்புகள் முழுவதும் சேதமடையலாம். கண்நோய்கள் வரலாம். இதயநோய்கள் வரலாம்.
சிகிச்சை, மருந்துகள்
உள்ளே சாப்பிட
மஞ்சிஷ்டாதி கஷாயம், மாணிபத்ர லேகியம், குடூச்சியாரி கஷாயம், கல்யாணகம் கஷாயம், கைஷோர குக்குலு, ஆரோக்கிய வர்த்தினிவடி ஆகிய உள்ளே சாப்பிடலாம்.
வெளியே போட
தசமூல கஷாயத்தில் பத்து போடலாம், தாரா செய்யலாம்.
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சத்தான உணவுகளை சாப்பிட கொடுப்பது நல்லது. இன்று குழந்தைகளுக்கு சத்தான சிக்கன் சூப் ரைஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
நாட்டுக்கோழி - 100 கிராம்
வேகவைத்த சாதம் இரண்டு கப் (ஓரளவு குழைந்திருந்தால் நன்றாக இருக்கும்)
சின்ன வெங்காயம் - 5
தக்காளி - ஒன்று
மிளகு - ஒரு டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
சோம்பு - ஒரு டீஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லித்தழை - அரைக்கால் கப்
கறிவேப்பிலை - 4 அல்லது 5 இலைகள்
பூண்டுப் பல் - ஒன்று
நெய் (அ) நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் - அரைக்கால் டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை (அலங்கரிக்க) - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை :
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
நாட்டுக்கோழியை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
பூண்டு, சீரகம், மிளகு, சோம்பு ஆகியவற்றைத் தட்டி வைத்துக்கொள்ளவும்.
குக்கரில் நெய் (அ) நல்லெண்ணெய் சேர்த்து, காய்ந்ததும் பூண்டு, சீரகம், மிளகு, சோம்பு, நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கிய தக்காளி, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
அடுத்து நாட்டுக்கோழியை சேர்த்து அதனுடன் 2 கப் தண்ணீர் ஊற்றி உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறவும்.
குக்கரை மூடி, அடுப்பை மிதமான தீயில் வைத்து 25 நிமிடங்கள் வேகவிடவும்.
பின்னர் குக்கரைத் திறந்து சூப்பை மட்டும் வடிகட்டி அதைச் சூடான சாதத்துடன் தேவையான அளவு சேர்த்து நன்றாகக் கிளறவும்.
ரசம் சாதம் போல இருக்க வேண்டும். ருசி பார்த்து, தேவையானால் சிறிது உப்பு சேர்க்கவும்.
கடைசியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி, லஞ்ச் பாக்ஸில் போட்டுக் கொடுத்தனுப்பவும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
நாட்டுக்கோழி - 100 கிராம்
வேகவைத்த சாதம் இரண்டு கப் (ஓரளவு குழைந்திருந்தால் நன்றாக இருக்கும்)
சின்ன வெங்காயம் - 5
தக்காளி - ஒன்று
மிளகு - ஒரு டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
சோம்பு - ஒரு டீஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லித்தழை - அரைக்கால் கப்
கறிவேப்பிலை - 4 அல்லது 5 இலைகள்
பூண்டுப் பல் - ஒன்று
நெய் (அ) நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் - அரைக்கால் டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை (அலங்கரிக்க) - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை :
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
நாட்டுக்கோழியை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
பூண்டு, சீரகம், மிளகு, சோம்பு ஆகியவற்றைத் தட்டி வைத்துக்கொள்ளவும்.
குக்கரில் நெய் (அ) நல்லெண்ணெய் சேர்த்து, காய்ந்ததும் பூண்டு, சீரகம், மிளகு, சோம்பு, நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கிய தக்காளி, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
அடுத்து நாட்டுக்கோழியை சேர்த்து அதனுடன் 2 கப் தண்ணீர் ஊற்றி உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறவும்.
குக்கரை மூடி, அடுப்பை மிதமான தீயில் வைத்து 25 நிமிடங்கள் வேகவிடவும்.
பின்னர் குக்கரைத் திறந்து சூப்பை மட்டும் வடிகட்டி அதைச் சூடான சாதத்துடன் தேவையான அளவு சேர்த்து நன்றாகக் கிளறவும்.
ரசம் சாதம் போல இருக்க வேண்டும். ருசி பார்த்து, தேவையானால் சிறிது உப்பு சேர்க்கவும்.
கடைசியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி, லஞ்ச் பாக்ஸில் போட்டுக் கொடுத்தனுப்பவும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சுடு தண்ணீர் குடிப்பதனால் உடலுக்கு என்னவென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சுடு தண்ணீர் குடிப்பதனால் பல நன்மைகள் கிடைக்கின்றன.
இரவு உணவை எப்போதும் லைட்டாக சாப்பிட வேண்டும். ஆனால் பலர் கண்ட உணவுகளையும் இரவில் சாப்பிடுகிறார்கள். இதனால் காலையில் அவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
இது போன்ற பிரச்சனை உள்ளவர்கள், காலை வெறும் வயிற்றில் சுடுநீர் குடித்தால் மலம் எளிதாக வெளியேறும். சிலருக்கு டீ, காபி குடித்தால்தான் மலம் கழிக்கும் எண்ணம் வருவது, அந்த பானங்களில் உள்ள வெப்பம் தான் காரணம்.
உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் காலையில் வெந்நீர் குடித்தால், உடலிலுள்ள கெட்ட கொழுப்புகள் கரையும். மேலும் காலை உணவிற்கு முன்னர் சிறிது வென்னீர் குடித்தால் செரிமானம் சிறப்பாக இருக்கும்.
மாதவிடாய் காலங்களில் வயிறு வலி அதிகமாக இருக்கும் போது, வெறும் வயிற்றில் சுடுநீர் அருந்தினால் வலி சற்று மந்தப்படும். காலை வெறும் வயிற்றில் சுடுநீரோடு இஞ்சி அல்லது துளசியை கலந்து உண்டால், செரிமானம் மேம்படுவதோடு இளமையான தோற்றம் கிடைக்கும்.
இரவு உணவை எப்போதும் லைட்டாக சாப்பிட வேண்டும். ஆனால் பலர் கண்ட உணவுகளையும் இரவில் சாப்பிடுகிறார்கள். இதனால் காலையில் அவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
இது போன்ற பிரச்சனை உள்ளவர்கள், காலை வெறும் வயிற்றில் சுடுநீர் குடித்தால் மலம் எளிதாக வெளியேறும். சிலருக்கு டீ, காபி குடித்தால்தான் மலம் கழிக்கும் எண்ணம் வருவது, அந்த பானங்களில் உள்ள வெப்பம் தான் காரணம்.
உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் காலையில் வெந்நீர் குடித்தால், உடலிலுள்ள கெட்ட கொழுப்புகள் கரையும். மேலும் காலை உணவிற்கு முன்னர் சிறிது வென்னீர் குடித்தால் செரிமானம் சிறப்பாக இருக்கும்.
மாதவிடாய் காலங்களில் வயிறு வலி அதிகமாக இருக்கும் போது, வெறும் வயிற்றில் சுடுநீர் அருந்தினால் வலி சற்று மந்தப்படும். காலை வெறும் வயிற்றில் சுடுநீரோடு இஞ்சி அல்லது துளசியை கலந்து உண்டால், செரிமானம் மேம்படுவதோடு இளமையான தோற்றம் கிடைக்கும்.
தற்காலிகமாக கருத்தரிப்பதை நிறுத்த மட்டுமே காப்பர் டி பயன்படும். பெண்கள் கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டிய காப்பர் டி பற்றிய தகவல்களை பார்க்கலாம்.
ஓரு குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் இடைவெளி வேண்டும் என்று நினைப்பவர்கள் கருத்தடை வளையம் (Copper T) பொருத்திக்கொள்வது என்பது நடைமுறையில் உள்ள ஒன்று. தற்காலிகமாக கருத்தரிப்பதை நிறுத்த மட்டுமே காப்பர் டி பயன்படும். நிரந்தர தடைக்கு வேறு வழி உண்டு.
* மாதவிலக்கு வந்த 10 நாட்களுக்குள் போட்டுவிட வேண்டும்.
* காப்பர் டி பொருத்தியவர்கள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, டாக்டரிடம் வந்து பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.
* காப்பர் டி பொருத்தியவுடன் அதிக ரத்தப்போக்கு அல்லது ஒழுங்கற்ற மாதவிடாய் இருந்தால், உடனடியாக மருத்துவரைப் பார்ப்பது நல்லது.
* காப்பர் டி போட்டதும் கர்ப்பம் தரித்துவிட்டால், அந்தக் கர்ப்பத்தைத் தொடரக் கூடாது. குழந்தை கருக்குழாயிலேயே தங்கிவிடலாம். எனவே, அதை எடுத்துவிடுவது நல்லது.
* காப்பர் டி- யில், காப்பர் (தாமிரம்) இருக்கும் வரைதான் நல்லது. அதில் காப்பர் இல்லாமல் போகும்போது, முட்டை, கர்ப்பப்பையைத் துளைத்துக்கொண்டு உள்ளே போக வாய்ப்புகள் அதிகம்.
* குழந்தை இல்லாதவர்கள், போடவே கூடாது. இதனால், கர்ப்பப்பையில் ரணம் ஏற்பட்டு, குழந்தை நிரந்தரமாகத் தங்காமல் போய்விடும்.
குறிப்பு: கர்ப்பப்பையில் புண், கட்டிகள், கர்ப்பப்பையில் பிரச்சனை, வெள்ளைப்படுதல் மற்றும் முற்றிய சர்க்கரை நோயாளிகள், கொலஸ்ட்ரால், இதயப் பிரச்சனை உள்ளவர்கள் போட்டுக்கொள்வதும் நல்லதல்ல.
* மாதவிலக்கு வந்த 10 நாட்களுக்குள் போட்டுவிட வேண்டும்.
* காப்பர் டி பொருத்தியவர்கள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, டாக்டரிடம் வந்து பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.
* காப்பர் டி பொருத்தியவுடன் அதிக ரத்தப்போக்கு அல்லது ஒழுங்கற்ற மாதவிடாய் இருந்தால், உடனடியாக மருத்துவரைப் பார்ப்பது நல்லது.
* காப்பர் டி போட்டதும் கர்ப்பம் தரித்துவிட்டால், அந்தக் கர்ப்பத்தைத் தொடரக் கூடாது. குழந்தை கருக்குழாயிலேயே தங்கிவிடலாம். எனவே, அதை எடுத்துவிடுவது நல்லது.
* காப்பர் டி- யில், காப்பர் (தாமிரம்) இருக்கும் வரைதான் நல்லது. அதில் காப்பர் இல்லாமல் போகும்போது, முட்டை, கர்ப்பப்பையைத் துளைத்துக்கொண்டு உள்ளே போக வாய்ப்புகள் அதிகம்.
* குழந்தை இல்லாதவர்கள், போடவே கூடாது. இதனால், கர்ப்பப்பையில் ரணம் ஏற்பட்டு, குழந்தை நிரந்தரமாகத் தங்காமல் போய்விடும்.
குறிப்பு: கர்ப்பப்பையில் புண், கட்டிகள், கர்ப்பப்பையில் பிரச்சனை, வெள்ளைப்படுதல் மற்றும் முற்றிய சர்க்கரை நோயாளிகள், கொலஸ்ட்ரால், இதயப் பிரச்சனை உள்ளவர்கள் போட்டுக்கொள்வதும் நல்லதல்ல.
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு லஞ்ச பாக்சில் கொடுத்து அனுப்ப அவித்த முட்டை சாதம் சிறந்தது. இன்று இந்த சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
முட்டை - ஒன்று
வெங்காயம் - ஒன்று
தக்காளி - பாதியளவு
வேகவைத்த சாதம் - ஒன்றரை கப்
கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 3 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை (அலங்கரிக்க) - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை :
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முட்டையை வேக வைத்து ஓட்டை உடைத்து கொள்ளவும்.
அவித்த முட்டையில் பாதியைச் சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து மேலும் வதக்கவும்.
அடுத்து அதில் கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறவும்.
இதனுடன் உப்பு, கரம் மசாலாத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.
இப்போது வெட்டி வைத்திருக்கும் அவித்த முட்டையைச் சேர்த்து, மஞ்சள் கரு மசாலாவுடன் நன்றாகக் கலக்கும்வரை கிளறவும்.
வேகவைத்த சாதம் சேர்த்துக் கலந்து எடுக்கவும் (ஃப்ரைடு ரைஸ் செய்வது போல நன்றாகக் கிளறிவிட்டு எடுக்க வேண்டும்).
இறுதியில் இன்னும் கொஞ்சம் கொத்தமல்லித்தழை தூவிக் கிளறவும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
முட்டை - ஒன்று
வெங்காயம் - ஒன்று
தக்காளி - பாதியளவு
வேகவைத்த சாதம் - ஒன்றரை கப்
கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 3 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை (அலங்கரிக்க) - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை :
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முட்டையை வேக வைத்து ஓட்டை உடைத்து கொள்ளவும்.
அவித்த முட்டையில் பாதியைச் சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து மேலும் வதக்கவும்.
அடுத்து அதில் கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறவும்.
இதனுடன் உப்பு, கரம் மசாலாத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.
இப்போது வெட்டி வைத்திருக்கும் அவித்த முட்டையைச் சேர்த்து, மஞ்சள் கரு மசாலாவுடன் நன்றாகக் கலக்கும்வரை கிளறவும்.
வேகவைத்த சாதம் சேர்த்துக் கலந்து எடுக்கவும் (ஃப்ரைடு ரைஸ் செய்வது போல நன்றாகக் கிளறிவிட்டு எடுக்க வேண்டும்).
இறுதியில் இன்னும் கொஞ்சம் கொத்தமல்லித்தழை தூவிக் கிளறவும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கண்களின் மேல் மற்றும் கீழ் பக்கங்களில் ஐ லைனர் தீட்டுவதன் மூலம் கண்களின் வடிவமும் அழகும் இன்னும் பல மடங்கு அதிகரித்து காட்டும்.
உடல் ஆரோக்கியத்தையும், மன அமைதியையும் வெளிக்காட்டும் கண்ணாடி நமது கண். கவரும் கண்களைப் பெற எளிதான சில விஷயங்களை செய்தாலே போதும். பலரும் முகத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை கண்களுக்குக் கொடுப்பதில்லை. சிலருக்கு நமது கண்ணுக்கு எந்த விதமான மேக்கப்பை போட வேண்டும் என்று தெரிவதில்லை. இளம் பெண்களின் மத்தியில் டிரெண்டாகும் வில் போன்ற ஐ லைனர்.
பொதுவாக கண்களின் மேல் மற்றும் கீழ் பக்கங்களில் ஐ லைனர் தீட்டுவதன் மூலம் கண்களின் வடிவமும் அழகும் இன்னும் பல மடங்கு மேம்படும். ஐ லைனர்களில் இன்று நிறைய ஷேடுகளும் வகைகளும் கிடைக்கின்றன. வாட்டர் ப்ரூஃப் ஐ லைனர் என்பது கண்களின் வெளியே கொஞ்சம்கூட கசியாமல் நீண்ட நேரத்துக்கு அப்படியே இருக்கும்.
பென்சில் வடிவிலான ஐ லைனரை பயன்படுத்துவது சுலபம். முதன் முறையாக உபயோகிப்பவர்களுக்கு இந்த பென்சில் ஐ லைனர் உதவியாக இருக்கும். ஆனால், ஜெல் அல்லது நீர் தன்மையில் இருக்கும் ஐ லைனர் போன்று இந்த பென்சில் ஐ லைனரில் அடர்த்தியாக வில் போன்ற வடிவில் போடமுடியாது.

பென்சில் ஐ லைனர் வைத்து ஒரு கோடு வரைந்துக் கொண்டு பின்னர் ஐ லைனரால் இழுத்தால் நெளியாமல் ஒரே வளைவாக வரும். அது பார்க்க மிகவும் அழகாக இருக்கும்.
இமை முடிக்கு மேல் ஸ்காட்ச் டேப் போட்டு ஒட்டிவிட்டு அதன் மேல் ஐ லைனர் பயன்படுத்தினாலும், வில் போன்ற வடிவில் வரைய ஏதுவாக இருக்கும்.
ஐ லைனர், ஐ ஷேடோ போடும்போது கையில் நடுக்கம் ஏற்படுவது இயல்பான ஒன்று. அதனை 3 எளிய வழிகளில் நீக்கிவிடலாம். ஒரு சேரில் வசதியாக அமர்ந்துக் கொள்ளுங்கள். வாட்டமான இடத்தில் கை முட்டியை வைத்துக் கொள்ளுங்கள். உள்ளங்கை நடுக்காமல் இருக்க தாடை பகுதியில் வைத்து அழுத்திக் கொண்டால் ஆட்டம் இல்லாமல் ஐ லைனர் போடலாம்.
ஐ லைனர் போடும்போது களைந்துவிட்டால் துடைக்க கையில் பஞ்சு வைத்துக் கொள்வது நல்லது.
கண் சீலர் அல்லது பிரைமர் பயன்படுத்தாவிட்டால் ஐ லைனர் கண்ணுக்கு கீழ் கசிந்து அழகை பாழாக்கிவிடும்.
பொதுவாக கண்களின் மேல் மற்றும் கீழ் பக்கங்களில் ஐ லைனர் தீட்டுவதன் மூலம் கண்களின் வடிவமும் அழகும் இன்னும் பல மடங்கு மேம்படும். ஐ லைனர்களில் இன்று நிறைய ஷேடுகளும் வகைகளும் கிடைக்கின்றன. வாட்டர் ப்ரூஃப் ஐ லைனர் என்பது கண்களின் வெளியே கொஞ்சம்கூட கசியாமல் நீண்ட நேரத்துக்கு அப்படியே இருக்கும்.
பென்சில் வடிவிலான ஐ லைனரை பயன்படுத்துவது சுலபம். முதன் முறையாக உபயோகிப்பவர்களுக்கு இந்த பென்சில் ஐ லைனர் உதவியாக இருக்கும். ஆனால், ஜெல் அல்லது நீர் தன்மையில் இருக்கும் ஐ லைனர் போன்று இந்த பென்சில் ஐ லைனரில் அடர்த்தியாக வில் போன்ற வடிவில் போடமுடியாது.

பென்சில் ஐ லைனர் வைத்து ஒரு கோடு வரைந்துக் கொண்டு பின்னர் ஐ லைனரால் இழுத்தால் நெளியாமல் ஒரே வளைவாக வரும். அது பார்க்க மிகவும் அழகாக இருக்கும்.
இமை முடிக்கு மேல் ஸ்காட்ச் டேப் போட்டு ஒட்டிவிட்டு அதன் மேல் ஐ லைனர் பயன்படுத்தினாலும், வில் போன்ற வடிவில் வரைய ஏதுவாக இருக்கும்.
ஐ லைனர், ஐ ஷேடோ போடும்போது கையில் நடுக்கம் ஏற்படுவது இயல்பான ஒன்று. அதனை 3 எளிய வழிகளில் நீக்கிவிடலாம். ஒரு சேரில் வசதியாக அமர்ந்துக் கொள்ளுங்கள். வாட்டமான இடத்தில் கை முட்டியை வைத்துக் கொள்ளுங்கள். உள்ளங்கை நடுக்காமல் இருக்க தாடை பகுதியில் வைத்து அழுத்திக் கொண்டால் ஆட்டம் இல்லாமல் ஐ லைனர் போடலாம்.
ஐ லைனர் போடும்போது களைந்துவிட்டால் துடைக்க கையில் பஞ்சு வைத்துக் கொள்வது நல்லது.
கண் சீலர் அல்லது பிரைமர் பயன்படுத்தாவிட்டால் ஐ லைனர் கண்ணுக்கு கீழ் கசிந்து அழகை பாழாக்கிவிடும்.






