என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
சமீப காலமாக குடும்ப உறவுகளின் விரிசலால் வாழ்க்கையில் விரக்தியும்,வெறுப்பும் ஏற்பட்டு கொலைகளும், தற்கொலைகளும் சர்வசாதாரணமாக நடைபெறுவதை காணமுடிகிறது.
சமீப காலமாக குடும்ப உறவுகளின் விரிசலால் வாழ்க்கையில் விரக்தியும்,வெறுப்பும் ஏற்பட்டு கொலைகளும், தற்கொலைகளும் சர்வசாதாரணமாக நடைபெறுவதை காணமுடிகிறது. ஏன் இப்படி நடக்கிறது? உறவுகள் சுருங்கி வருவதும், வருமானம் பெருகி வருவதும், தொழிலில் அகலக்கால் வைத்தலும், நம்பிக்கை துரோகங்களுக்கு ஆட்படுவதும் காரணங்களாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. உறவுகள் அதிகம் இருக்கும் போது தங்கள் செயல்பாடுகளை, மனக் குறைகளை மனம்விட்டு பேச, ஆலோசனைகள் பெற நல்ல மனம் படைத்த அனுபவஸ்தர்கள் இருந்தார்கள். அவர்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி அதை நிவர்த்தி செய்வார்கள். ஆறுதலாக பேசுவார்கள். மன பாரம் குறைக்கும் சுமைதாங்கிகளாக இருந்தார்கள்.
பண்டிகைக் காலங்களில் அனைவரும் ஒன்று கூடி மகிழ்ந்த வேளைகளில் பல சிக்கல்களுக்குத் தீர்வு கண்டதும் உண்டு. திருமணம் உள்ளிட்ட சடங்குகளில் ஒவ்வொரு உறவும் இதைச் செய்ய வேண்டும் என்று அழைத்ததும் சொந்தம் விட்டுப் போகக் கூடாது என்றுதான். ஆனால் பெரும்பாலும் இன்றைய படிப்பும், பணமும் மன அழுத்தத்தையும், நிம்மதியையும் தவிர எல்லாம் தருகிறது. வாழ்க்கை தொலைந்து போகிறது. குழந்தைகளின் கதி அதோ கதியாகிறது.
இன்று யூடியூப், கூகுள் சமூக வலைத்தளங்கள் என்று தளங்கள் மாறிவிட்டன. எல்லாம் எங்களுக்குத் தெரியும் என்ற மனப்போக்கினால், பிரச்சினைகள் வரும்போது வடிகாலின்றி மன அழுத்தம், மனக்குமுறல் அதிகமாகிறது. ஆனால் இதனை மனதில் பூட்டி வைத்து அன்றாட பணிகளைச் செய்வது பெரும்பாலும் சாத்தியமாகாது. அது வாழ்க்கையின் விளிம்பிற்கும் விபரீத முடிவுக்கும் அவர்களை அழைத்து செல்கிறது.
மனம் விட்டு பேசக் கூடிய உறவுகள், நல்ல குடும்ப நண்பர்கள் ஓரிருவர் இருந்தாலும் உதவுவார்கள். இவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு கணவன், மனைவி இருவரும் தனியே, அந்த ஆலோசனையை மனம் விட்டு அலசி ஆராய்ந்து முடிவெடுக்கலாம். நம்மிருவரைத் தவிர வேறு யாருக்கும் எதுவும் தெரிய வேண்டாம் என்ற மனப்போக்கு மாறவேண்டும்.
எல்லாவற்றையும் பகிர வேண்டும் என்றில்லை, தொழில் சார்ந்த முக்கிய முடிவுகளை, மனபாரத்தை பகிரலாம், ஆலோசனை பெறலாம். வழிகாட்டுதல்கள் நிச்சயம் பலன் தரும்.கணவன் மனைவி இருவரும் அலுவலகப் பணிகளை வாரத்தில் ஒருநாளாவது குறைந்தபட்சம் மூன்று மணி நேரம் ஒத்தி வைத்துவிட்டு மனம்விட்டு விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையோடு பேச வேண்டும், யார்செய்தது சரி? யார் செய்தது தவறு என்பதல்ல பிரச்சினை! விட்டுக் கொடுத்தால் கெட்டுப்போவதில்லை. தீர்வுதான் நோக்கமாக இருக்க வேண்டும்.
இப்படி அணுகினால் நிச்சயம் தீர்வும் மன அமைதியும் கிடைக்கும்.குழந்தைகளோடு நேரம் செலவிடுதல் மிக மிக முக்கியம். அது குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் நல்ல மகிழ்ச்சியையும் புரிதலையும் தரும். பல்வேறு வகுப்புகளில் சேர்த்து அவர்களை சிறைப்படுத்தாதீர்கள். அவர்களைக் கொண்டு விடுவதிலும், கூட்டி வருவதிலுமே பெற்றோர்களின் நேரம் செலவாகி அயற்சியும், மனச்சோர்வும்தான் மிஞ்சும். இது குடும்ப உறவில் எதிரொலித்து மனக்கசப்புக்கு வழிவகுக்கும்.உளவியல் சார்ந்த நிகழ்ச்சிகள், நூல்கள், வழிபாடு. ஆன்மிக சொற்பொழிவுகள், உடற்பயிற்சி, தியானம், நல்ல சொற்பொழிவாளர்களின் பேச்சு, நகைச்சுவை காட்சிகள் நிச்சயம் மனதை மென்மையாக்கும்.
குடும்பத்தை பிரிக்கும், பல்வேறு உறவுமுறைகளில் தோன்றும் வில்லத்தனமான காட்சி அமைப்புகளைக் கொண்ட தொடர்கள் நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டும். மிகுந்த மனப்பாதிப்பை இவை ஏற்படுத்தும். யாரைப் பார்த்தாலும் வெறுப்பும் சந்தேகமும் தான் மிஞ்சும்.
பெரியாரை துணைக்கொள்ள வேண்டும். இது வள்ளுவரின் வாய்மொழி. நல் வாழ்விற்கு வழிகாட்டும். அறிவுடைய மூத்தோர் நட்பும், அவரைச் சுற்றத்தார்களையும், அவர் கடிந்து கூறினாலும் அவரை பின் தொடர்தலும், நன்மை பயக்கும். பெரியார் தொடர்பில்லா வாழ்க்கை முதல் இல்லா வணிகம், மன்னர்களும் இப்படிப் பட்டோரை துணைகொள்ள வேண்டும் என்று நம்மை வழிநடத்துகிறார். நடப்போம். நல்லதே நினைத்து, நல்லதே செய்து, நல்லவர்கள் மத்தியில் இருந்து நல்லவர்கள் கண்ணில்பட்டால் வாழ்க்கையில் நிச்சயம் மகிழ்ச்சி ததும்பும். வாழ்ந்து காட்டுவோம்!
ஏ.பி.மதிவாணன்,
ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி
பண்டிகைக் காலங்களில் அனைவரும் ஒன்று கூடி மகிழ்ந்த வேளைகளில் பல சிக்கல்களுக்குத் தீர்வு கண்டதும் உண்டு. திருமணம் உள்ளிட்ட சடங்குகளில் ஒவ்வொரு உறவும் இதைச் செய்ய வேண்டும் என்று அழைத்ததும் சொந்தம் விட்டுப் போகக் கூடாது என்றுதான். ஆனால் பெரும்பாலும் இன்றைய படிப்பும், பணமும் மன அழுத்தத்தையும், நிம்மதியையும் தவிர எல்லாம் தருகிறது. வாழ்க்கை தொலைந்து போகிறது. குழந்தைகளின் கதி அதோ கதியாகிறது.
இன்று யூடியூப், கூகுள் சமூக வலைத்தளங்கள் என்று தளங்கள் மாறிவிட்டன. எல்லாம் எங்களுக்குத் தெரியும் என்ற மனப்போக்கினால், பிரச்சினைகள் வரும்போது வடிகாலின்றி மன அழுத்தம், மனக்குமுறல் அதிகமாகிறது. ஆனால் இதனை மனதில் பூட்டி வைத்து அன்றாட பணிகளைச் செய்வது பெரும்பாலும் சாத்தியமாகாது. அது வாழ்க்கையின் விளிம்பிற்கும் விபரீத முடிவுக்கும் அவர்களை அழைத்து செல்கிறது.
மனம் விட்டு பேசக் கூடிய உறவுகள், நல்ல குடும்ப நண்பர்கள் ஓரிருவர் இருந்தாலும் உதவுவார்கள். இவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு கணவன், மனைவி இருவரும் தனியே, அந்த ஆலோசனையை மனம் விட்டு அலசி ஆராய்ந்து முடிவெடுக்கலாம். நம்மிருவரைத் தவிர வேறு யாருக்கும் எதுவும் தெரிய வேண்டாம் என்ற மனப்போக்கு மாறவேண்டும்.
எல்லாவற்றையும் பகிர வேண்டும் என்றில்லை, தொழில் சார்ந்த முக்கிய முடிவுகளை, மனபாரத்தை பகிரலாம், ஆலோசனை பெறலாம். வழிகாட்டுதல்கள் நிச்சயம் பலன் தரும்.கணவன் மனைவி இருவரும் அலுவலகப் பணிகளை வாரத்தில் ஒருநாளாவது குறைந்தபட்சம் மூன்று மணி நேரம் ஒத்தி வைத்துவிட்டு மனம்விட்டு விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையோடு பேச வேண்டும், யார்செய்தது சரி? யார் செய்தது தவறு என்பதல்ல பிரச்சினை! விட்டுக் கொடுத்தால் கெட்டுப்போவதில்லை. தீர்வுதான் நோக்கமாக இருக்க வேண்டும்.
இப்படி அணுகினால் நிச்சயம் தீர்வும் மன அமைதியும் கிடைக்கும்.குழந்தைகளோடு நேரம் செலவிடுதல் மிக மிக முக்கியம். அது குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் நல்ல மகிழ்ச்சியையும் புரிதலையும் தரும். பல்வேறு வகுப்புகளில் சேர்த்து அவர்களை சிறைப்படுத்தாதீர்கள். அவர்களைக் கொண்டு விடுவதிலும், கூட்டி வருவதிலுமே பெற்றோர்களின் நேரம் செலவாகி அயற்சியும், மனச்சோர்வும்தான் மிஞ்சும். இது குடும்ப உறவில் எதிரொலித்து மனக்கசப்புக்கு வழிவகுக்கும்.உளவியல் சார்ந்த நிகழ்ச்சிகள், நூல்கள், வழிபாடு. ஆன்மிக சொற்பொழிவுகள், உடற்பயிற்சி, தியானம், நல்ல சொற்பொழிவாளர்களின் பேச்சு, நகைச்சுவை காட்சிகள் நிச்சயம் மனதை மென்மையாக்கும்.
குடும்பத்தை பிரிக்கும், பல்வேறு உறவுமுறைகளில் தோன்றும் வில்லத்தனமான காட்சி அமைப்புகளைக் கொண்ட தொடர்கள் நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டும். மிகுந்த மனப்பாதிப்பை இவை ஏற்படுத்தும். யாரைப் பார்த்தாலும் வெறுப்பும் சந்தேகமும் தான் மிஞ்சும்.
பெரியாரை துணைக்கொள்ள வேண்டும். இது வள்ளுவரின் வாய்மொழி. நல் வாழ்விற்கு வழிகாட்டும். அறிவுடைய மூத்தோர் நட்பும், அவரைச் சுற்றத்தார்களையும், அவர் கடிந்து கூறினாலும் அவரை பின் தொடர்தலும், நன்மை பயக்கும். பெரியார் தொடர்பில்லா வாழ்க்கை முதல் இல்லா வணிகம், மன்னர்களும் இப்படிப் பட்டோரை துணைகொள்ள வேண்டும் என்று நம்மை வழிநடத்துகிறார். நடப்போம். நல்லதே நினைத்து, நல்லதே செய்து, நல்லவர்கள் மத்தியில் இருந்து நல்லவர்கள் கண்ணில்பட்டால் வாழ்க்கையில் நிச்சயம் மகிழ்ச்சி ததும்பும். வாழ்ந்து காட்டுவோம்!
ஏ.பி.மதிவாணன்,
ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி
மாசடைந்த காற்றை சுவாசிக்கும்போது குழந்தைகளின் மூளைக்கு பாதிப்பு நேரும். அதைத்தொடர்ந்து பல வழிகளில் உடல் ஆரோக்கியம் பாதிப்புக்குள்ளாகும்.
காற்று மாசுபடுவது சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாவதோடு பச்சிளம் குழந்தைகளின் உயிரையும் பலிவாங்கிக்கொண்டிருக்கிறது. மாசுவால் உருவாகும் நச்சுக்காற்றால் பாதிக்கப்பட்டு 2016-ம் ஆண்டில் மட்டும் 6 லட்சம் குழந்தைகள் மரணமடைந்திருக்கிறார்கள். அவர்களில் இந்தியாவில் மட்டும் ஒரு லட்சத்து 10 ஆயிரம் குழந்தைகள் இறந்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இவற்றுள் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 60,987.
நைஜீரியாவில் 47,674 குழந்தைகளும், பாகிஸ்தானில் 21,136 பேரும், காங்கோவில் 12,890 பேரும் இறந்திருக்கிறார்கள். இந்தியாவில் ஆண் குழந்தைகளைவிட (28,097) பெண் குழந்தைகள்தான் (32,889) அதிக அளவில் இறக்கிறார்கள். 5 வயது முதல் 14 வயதுக்குட்பட்டவர்களில் 4,360 பேர் மரணத்தை தழுவியிருக்கிறார்கள்.
உலக அளவில் காற்று மாசுபாடு காரணமாக இறப்பவர்களில் 25 சதவீதம் பேர் இந்தியர்களாக இருக்கிறார்கள். உலகில் பெருமளவு மக்கள் நச்சுக்காற்றை சுவாசிப்பதால் சுவாசக்கோளாறு பிரச்சினைகளுக்கு ஆளாகிறார்கள். ‘‘மாசடைந்த காற்றை சுவாசிக்கும்போது குழந்தைகளின் மூளைக்கு பாதிப்பு நேரும். அதைத்தொடர்ந்து பல வழிகளில் உடல் ஆரோக்கியம் பாதிப்புக்குள்ளாகும்’’ என்கிறார், உலக சுகாதார நிறுவனத்தின் சுற்றுச்சூழல் மற்றும் பொது சுகா தாரத்துறை இயக்குனர் மரியா நெய்ரா.
காற்று மாசுபாடு கர்ப்பிணி பெண்களுக்கும் பாதிப்பை உண்டாக்குகிறது. குறைப்பிரசவத்தில் குழந்தை பிறப்பது, குழந்தையின் உடல் எடை குறைவாக இருப்பது போன்ற பிரச்சினைகள் தோன்றும்.
நைஜீரியாவில் 47,674 குழந்தைகளும், பாகிஸ்தானில் 21,136 பேரும், காங்கோவில் 12,890 பேரும் இறந்திருக்கிறார்கள். இந்தியாவில் ஆண் குழந்தைகளைவிட (28,097) பெண் குழந்தைகள்தான் (32,889) அதிக அளவில் இறக்கிறார்கள். 5 வயது முதல் 14 வயதுக்குட்பட்டவர்களில் 4,360 பேர் மரணத்தை தழுவியிருக்கிறார்கள்.
உலக அளவில் காற்று மாசுபாடு காரணமாக இறப்பவர்களில் 25 சதவீதம் பேர் இந்தியர்களாக இருக்கிறார்கள். உலகில் பெருமளவு மக்கள் நச்சுக்காற்றை சுவாசிப்பதால் சுவாசக்கோளாறு பிரச்சினைகளுக்கு ஆளாகிறார்கள். ‘‘மாசடைந்த காற்றை சுவாசிக்கும்போது குழந்தைகளின் மூளைக்கு பாதிப்பு நேரும். அதைத்தொடர்ந்து பல வழிகளில் உடல் ஆரோக்கியம் பாதிப்புக்குள்ளாகும்’’ என்கிறார், உலக சுகாதார நிறுவனத்தின் சுற்றுச்சூழல் மற்றும் பொது சுகா தாரத்துறை இயக்குனர் மரியா நெய்ரா.
காற்று மாசுபாடு கர்ப்பிணி பெண்களுக்கும் பாதிப்பை உண்டாக்குகிறது. குறைப்பிரசவத்தில் குழந்தை பிறப்பது, குழந்தையின் உடல் எடை குறைவாக இருப்பது போன்ற பிரச்சினைகள் தோன்றும்.
சர்க்கரை நோயை தொடக்க நிலையில் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தால் பாதிப்பின்றி வாழலாம். வருமுன் காப்போனாக செயல்பட்டு உடல்நலத்தை காத்துக் கொள்ள வேண்டும்.
இன்சுலின் மருந்தை கண்டு பிடித்த டாக்டர் பேண்டிங் அவர்களது பிறந்தநாளை (நவம்பர் 14) நினைவு கூர்வோம்! இரண்டாவது வகை சர்க்கரை நோய் குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள் யாரையும் விட்டு வைக்கவில்லை. “எனக்கு சர்க்கரை நோய் இருக்கிறது. ஆனால் சிகிச்சை எடுத்துக் கொள்வதில்லை” என்று அலட்சியப்படுத்து வோருக்கு சில தகவல்கள்.
நன்றாக இருந்த ஒரு மனிதர் திடீரென நெஞ்சு வலியால் துடிக்கிறார், அவரை அவசர மாக மருத்துவமனைக்கு தூக்கி கொண்டு ஓடுகிறார்கள், இப்போது நோய் எப்படி வந்தது என்று யோசிக்க நேரமில்லை.
இப்போதைய தேவை உயிரை காப்பாற்ற உடனடி மருத்துவம், நோயாளி மட்டுமல்லாமல் குடும்பத்தில் அனைவரது ஒத்துழைப்பும் இதற்கு தேவை. இது அன்றாட நிகழ்வாகும். மாரடைப்பு, சிறுநீரக செயல் இழப்பு, பக்கவாதம், பார்வை இழப்பு போன்றவை அவசர நிலைகள். தொடக்ககால காரணங்களை முன்னறிந்து பிற்காலத்தில் மிகப்பெரிய பிரச்சினை உருவெடுக்காமல் தடுக்கும் முறைகள், நீண்டகால நோய்களுக்கான சிகிச்சை ஆகும்.
நீண்டகால நோய்களில் சர்க்கரை நோயும், உயர் ரத்த அழுத்தமும் முதலிடம் வகிக்கின்றன. மேலே குறிப்பிட்ட அவசரகால தாக்குதல்கள் ஒரே நாளில் வருவதில்லை. இவற்றிற்கான அடித்தளம் உடலில் பல ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்டு விடுகிறது.
சாதாரணமாக நடமாடிக் கொண்டிருக்கும் ஒருவரிடம் எதிர்காலத்தில் வரும் பிரச்சினைகளை தடுப்பதற்கான ஆலோசனைகளை கூறினால் அவர் செவிமடுப்பதில்லை. விளைவு குடும்பம் முழுவதும் துன்பத்தில் ஆழ்ந்துவிடுகிறது. நலமுடன் இருக்கும்போது உடல்நலத்தை பற்றி சிந்தித்தே ஆக வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.
தொற்றுநோய்கள் குறித்து நம்மிடையே இருக்கும் விழிப் புணர்வு நீண்டகால நோய்கள் குறித்து இல்லை. சர்க்கரை நோய் உடலில் உள்ள ரத்தக் குழாய்களை பாதிப்பதால் அனைத்து உறுப்புகளும் பாதிப்புக்குள்ளாகின்றன. உறுப்புகளின் செயல்திறன் மிகவும் குறையும் வரை நடைமுறை வாழ்க்கையில் சிரமங்கள் தெரிவதில்லை.
மாரடைப்பு, பார்வை இழப்பு, சிறுநீரக செயல் இழப்பு, பாதங்கள் இழப்பு போன்ற கடுமையான சோதனைகள் உருவாகின்றன. சர்க்கரை நோய்க்கு தொடக்க காலத்தில் அன்றாட வாழ்க் கையை பாதிக்கும் அளவுக்கு அறிகுறிகள் இருப்பதில்லை. வேலைக்கு போக முடியாமை, கடுமைான சிரமங்கள், உயிருக்கு ஆபத்து என்பது போன்ற பிரச்சினைகள் தொடக்கத்தில் வருவ தில்லை.
இதனால்தான் பலரும் சர்க்கரை நோயை தொடக்கத்தில் கட்டுப்படுத்த தவறி அபாய நிலைக்கு வந்து விடுகிறார்கள். உணவு கட்டுப்பாடு குறித்து எவ்வளவு அறிவுரை கூறினாலும் கண்டுகொள்வதில்லை. தவறான உணவு பழக்கம் மிக அதிக அளவில் இருப்பதால், சர்க்கரை நோய் கட்டுப்பாடு ஒரு சவாலாகவே ஆகிவிடுகிறது. எந்த பாதிப்பும் இன்றி இயல்வு நிலையில் இருக்கும்போது சர்க்கரை நோய் சிகிச்சையை ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும்.
இந்த தகவல்களை தெரிந்து கொண்டு கலங்க வேண்டும். வருமுன் காப்போனாக செயல்பட்டு உடல்நலத்தை காத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை நோயை தொடக்க நிலையில் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தால் பாதிப்பின்றி வாழலாம். தெளிவான உண்மைகளை புரிந்து கொள்ளுதல், முறையான உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மருந்துகள், யோகா மற்றும் மறு பரிசோதனை சர்க்கரை நோய் சிகிச்சையின் முக்கிய அம்சங்களாகும்.
டாக்டர் ஆர்.ராஜபால்
சர்க்கரை நோய் சிகிச்சை மையம், நாகர்கோவில்.
நன்றாக இருந்த ஒரு மனிதர் திடீரென நெஞ்சு வலியால் துடிக்கிறார், அவரை அவசர மாக மருத்துவமனைக்கு தூக்கி கொண்டு ஓடுகிறார்கள், இப்போது நோய் எப்படி வந்தது என்று யோசிக்க நேரமில்லை.
இப்போதைய தேவை உயிரை காப்பாற்ற உடனடி மருத்துவம், நோயாளி மட்டுமல்லாமல் குடும்பத்தில் அனைவரது ஒத்துழைப்பும் இதற்கு தேவை. இது அன்றாட நிகழ்வாகும். மாரடைப்பு, சிறுநீரக செயல் இழப்பு, பக்கவாதம், பார்வை இழப்பு போன்றவை அவசர நிலைகள். தொடக்ககால காரணங்களை முன்னறிந்து பிற்காலத்தில் மிகப்பெரிய பிரச்சினை உருவெடுக்காமல் தடுக்கும் முறைகள், நீண்டகால நோய்களுக்கான சிகிச்சை ஆகும்.
நீண்டகால நோய்களில் சர்க்கரை நோயும், உயர் ரத்த அழுத்தமும் முதலிடம் வகிக்கின்றன. மேலே குறிப்பிட்ட அவசரகால தாக்குதல்கள் ஒரே நாளில் வருவதில்லை. இவற்றிற்கான அடித்தளம் உடலில் பல ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்டு விடுகிறது.
சாதாரணமாக நடமாடிக் கொண்டிருக்கும் ஒருவரிடம் எதிர்காலத்தில் வரும் பிரச்சினைகளை தடுப்பதற்கான ஆலோசனைகளை கூறினால் அவர் செவிமடுப்பதில்லை. விளைவு குடும்பம் முழுவதும் துன்பத்தில் ஆழ்ந்துவிடுகிறது. நலமுடன் இருக்கும்போது உடல்நலத்தை பற்றி சிந்தித்தே ஆக வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.
தொற்றுநோய்கள் குறித்து நம்மிடையே இருக்கும் விழிப் புணர்வு நீண்டகால நோய்கள் குறித்து இல்லை. சர்க்கரை நோய் உடலில் உள்ள ரத்தக் குழாய்களை பாதிப்பதால் அனைத்து உறுப்புகளும் பாதிப்புக்குள்ளாகின்றன. உறுப்புகளின் செயல்திறன் மிகவும் குறையும் வரை நடைமுறை வாழ்க்கையில் சிரமங்கள் தெரிவதில்லை.
மாரடைப்பு, பார்வை இழப்பு, சிறுநீரக செயல் இழப்பு, பாதங்கள் இழப்பு போன்ற கடுமையான சோதனைகள் உருவாகின்றன. சர்க்கரை நோய்க்கு தொடக்க காலத்தில் அன்றாட வாழ்க் கையை பாதிக்கும் அளவுக்கு அறிகுறிகள் இருப்பதில்லை. வேலைக்கு போக முடியாமை, கடுமைான சிரமங்கள், உயிருக்கு ஆபத்து என்பது போன்ற பிரச்சினைகள் தொடக்கத்தில் வருவ தில்லை.
இதனால்தான் பலரும் சர்க்கரை நோயை தொடக்கத்தில் கட்டுப்படுத்த தவறி அபாய நிலைக்கு வந்து விடுகிறார்கள். உணவு கட்டுப்பாடு குறித்து எவ்வளவு அறிவுரை கூறினாலும் கண்டுகொள்வதில்லை. தவறான உணவு பழக்கம் மிக அதிக அளவில் இருப்பதால், சர்க்கரை நோய் கட்டுப்பாடு ஒரு சவாலாகவே ஆகிவிடுகிறது. எந்த பாதிப்பும் இன்றி இயல்வு நிலையில் இருக்கும்போது சர்க்கரை நோய் சிகிச்சையை ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும்.
இந்த தகவல்களை தெரிந்து கொண்டு கலங்க வேண்டும். வருமுன் காப்போனாக செயல்பட்டு உடல்நலத்தை காத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை நோயை தொடக்க நிலையில் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தால் பாதிப்பின்றி வாழலாம். தெளிவான உண்மைகளை புரிந்து கொள்ளுதல், முறையான உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மருந்துகள், யோகா மற்றும் மறு பரிசோதனை சர்க்கரை நோய் சிகிச்சையின் முக்கிய அம்சங்களாகும்.
டாக்டர் ஆர்.ராஜபால்
சர்க்கரை நோய் சிகிச்சை மையம், நாகர்கோவில்.
சப்பாத்தி, நாண், சாதம், இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த பஞ்சாபி சிக்கன் கறி. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
எலும்புடன் சிக்கன் - கால் கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 2
மல்லி தூள் - ஒரு தேக்கரண்டி
ஏலக்காய் - 2
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கரம் மசாலா - அரை தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
தயிர் - கால் கப்
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
பட்டை - ஒரு சிறுத் துண்டு
லவங்கம் - 3
பிரியாணி இலை - ஒரு சிறுத் துண்டு
கொத்தமல்லி இலை

செய்முறை :
சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தக்காளியை அரைத்து கொள்ளவும்.
கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி பூண்டு சேர்த்து சிவக்க வதக்க வேண்டும்.
இந்த அதை நன்றாக ஆற வைத்து மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
பின் மீண்டும் அதே பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை போட்டு தாளித்த பின்னர் அதில் அரைத்த விழுது சேர்த்து வதக்கவேண்டும்.
அடுத்து அதில் தூள் வகை எல்லாம் சேர்த்து பிரட்டவேண்டும்.
பின் விழுதாக அரைத்த தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி பச்சை வாசம் போய் எண்ணெய் பிரியும் போது சிக்கன் துண்டுகளை சேர்த்து மூடி வேக விடவும்..
சிக்கன் வெந்து மீண்டும் கலவை திரண்டு வரும் போது தயிர் சேர்த்து கலந்து நன்றாக கலவை கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் போது பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.
எலும்புடன் சிக்கன் - கால் கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 2
மல்லி தூள் - ஒரு தேக்கரண்டி
ஏலக்காய் - 2
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கரம் மசாலா - அரை தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
தயிர் - கால் கப்
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
பட்டை - ஒரு சிறுத் துண்டு
லவங்கம் - 3
பிரியாணி இலை - ஒரு சிறுத் துண்டு
கொத்தமல்லி இலை
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி

செய்முறை :
சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தக்காளியை அரைத்து கொள்ளவும்.
கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி பூண்டு சேர்த்து சிவக்க வதக்க வேண்டும்.
இந்த அதை நன்றாக ஆற வைத்து மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
பின் மீண்டும் அதே பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை போட்டு தாளித்த பின்னர் அதில் அரைத்த விழுது சேர்த்து வதக்கவேண்டும்.
அடுத்து அதில் தூள் வகை எல்லாம் சேர்த்து பிரட்டவேண்டும்.
பின் விழுதாக அரைத்த தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி பச்சை வாசம் போய் எண்ணெய் பிரியும் போது சிக்கன் துண்டுகளை சேர்த்து மூடி வேக விடவும்..
சிக்கன் வெந்து மீண்டும் கலவை திரண்டு வரும் போது தயிர் சேர்த்து கலந்து நன்றாக கலவை கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் போது பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.
சூப்பரான பஞ்சாபி சிக்கன் கறி ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ஒரே நேரத்தில் பல வேலைகளை பெண்கள் செய்யும்போது அவர்களுக்குள் இருக்கும் படைப்பாற்றல் எனப்படும் ‘கிரியேட்டிவிட்டி’ குறைந்து விடுகிறது.
பெண்களிடம் அபார ஆற்றல் ஒன்று இருக்கிறது, அது ‘மல்டி டாஸ்க்’ எனப்படும் பன்முகத்திறன். அதனால் அவர் களால் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளை செய்யமுடியும். இது அவர்கள் வீட்டு வேலைகளை பார்ப்பதிலும், அலுவலக வேலைகளை பார்ப்பதிலும் கைகொடுக்கிறது. இது பெருமைக்குரிய விஷயமாக இருந்தாலும், இதில் சில அபாயங்களும் அடங்கியிருக்கின்றன.
பெண்களுக்கு உழைப்பு எவ்வளவு அவசியமோ அதுபோல் ஓய்வும் மிக அவசியம். தங்களால் இயன்ற வேலையை அளவுடன் செய்துவிட்டு மூளைக்கும், உடலுக்கும் ஓய்வளிக்க வேண்டியது அவசியம். சரியான ஓய்வு கொடுக்காவிட்டால், நாளடைவில் மனஅழுத்தம் ஏற்பட்டு பல்வேறு உடல்நல பாதிப்பு களுக்கு வழி வகுக்கும். ஆண்கள் சாதாரண நிலையில் நிதானமாக தங்கள் வேலைகளை செய்பவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் பெண்கள் ‘மல்டிடாஸ்கிங்’ எனப்படும் பன் முகப் பணியால், ஒரு இடத்தில் நிற்காமல் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள். அதனால் எளிதில் சோர்வடைந்து விடுகிறார்கள். மூளைக்குச் செல்லும் ரத்தத்தின் வேகம் அதிகரித்து அதிக பணிஅழுத்தம் ஏற்பட்டுவிடுகிறது.
பெண்கள், ஒரு வேலையை நேரத்தோடு செய்து முடிப்பது மட்டும் சாதனையல்ல. அந்த வேலை அவர்களது மனதுக்கோ, உடலுக்கோ அழுத்தம் கொடுக்காத அளவுக்கு செய்து முடிப்பதுதான் அந்த வேலையின் வெற்றி. ஒன்றுக்கு மேற்பட்ட வேலை எல்லோருக்கும் இருந்துகொண்டுதான் இருக்கும். அப்போது ஒவ்வொரு வேலைக்கும் உண்டான நுணுக்கத்தை கையாண்டு திறம்பட அந்த வேலைகளை செய்து முடிக்க கொஞ்சம் பொறுமை தேவை.
ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்பவர்களால் தங்கள் வேலைகளை பொறுமையாக செய்ய முடியாது. ஒன்றை செய்துகொண்டிருக்கும் போதே இடையில் அடுத்த வேலையின் நினைவு வந்து பயமுறுத்தி பொறுமையை இழக்கச்செய்யும். அப்போது துரிதமாக அந்த வேலைகளை செய்துமுடிக்கவேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்படுவார்கள். ஒரே ஒரு வேலையை மட்டும் செய்யும்போது அதில் முழுகவனத்தையும் செலுத்தமுடியும்.
மல்டி டாஸ்க்கை பயன்படுத்தும்போது கவனம் சிதறும். இது பற்றி பிரான்ஸ் நாட்டில் ஒரு ஆய்வு நடந்தது. அதில், ‘ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யும் பெண்களுக்கு அதிக தவறுகள் நிகழ்ந்துவிடுவதாக’ தெரியவந் திருக்கிறது. காரணம் பெண்களுக்கு தவிர்க்க முடியாத உணர்வுபூர்வமான சில வேலைகளும் உள்ளன. உதாரணமாக ‘பிளே ஸ்கூலில்’ விட்டுவிட்டு வந்த குழந்தையை திரும்ப வீட்டிற்கு அழைத்துச்செல்ல வேண்டும். இந்நேரம் குழந்தை அம்மாவை காணாமல் அழுதுகொண்டிருக்கும். வீட்டில் வயதானவர்கள் தனிமையில் இருக்கிறார்கள். சீக்கிரம் வீட்டிற்கு போக வேண்டும்’ என்பன போன்ற சிந்தனைகள் அவர்களுக்கு வந்துகொண்டே இருக்கும்.

இப்படிப்பட்ட உணர்வுபூர்வமான சிந்தனை அவர்களை ஆட்கொள்ளும்போது அதைக் கடந்து அவர்களால் இதர வேலைகளில் முழுகவனம் செலுத்தமுடியாது. இதுதான் பெண்களின் நிலை. இந்த நிலையில், அவர்கள் செய்யும் வேலைகளில் அவர்களை அறியாமலே சில தவறுகள் நடந்துவிடும். அந்த தவறுகளில் சிலவற்றை சரிசெய்வது கடினமான கூடுதல் வேலையாகிவிடும். அதனால் சில பின்விளைவுகளோ, எதிர்விளைவுகளோ உருவாகிவிடும். அப்போது ஏற்படும் மனஉளைச்சல் உடலையும், மனதையும் பாதிக்கும்.
ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யும்போது செயல்வேகம் குறைந்து, குறிப்பிட்ட வேலையை குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்துமுடிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. அதனால் ஒன்றன்பின் ஒன்றாக பல வேலைகள் தாமதமாகின்றன. பல வேலைகளை ஒன்றாக முடித்துவிடலாம் என்று கணக்குப் போட்டு வேலை செய்யும் பெண்களால் எதையுமே நேரத்தோடு செய்து முடிக்க முடிவதில்லை. காலம் கடந்து முடிக்கும் சில வேலைகள் பயனில்லாமல் போய்விடுகிறது. இதுவும் பெண்களை மனஅழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது.
ஒரே நேரத்தில் பல வேலைகளை பெண்கள் செய்யும்போது அவர்களுக்குள் இருக்கும் படைப்பாற்றல் எனப்படும் ‘கிரியேட்டிவிட்டி’ குறைந்து விடுகிறது. அப்போது தனது அத்தனை திறமைகளையும் ஒருமுகப்படுத்தி அந்த வேலையை எப்படி செய்து முடிப்பது என்று சிந்திப்பதற்கு பதில், அவர்களது மூளை அந்த வேலையை எப்படி எளிதாக செய்து முடிப்பது என்று சிந்திக்கத் தொடங்கிவிடும். அப்போது ‘இன்னும் கொஞ்சம் புதுமையாக என்ன செய்யலாம்? முன்பைவிட சிறப்பாக அதை எப்படி செய்யலாம்?’ என்று சிந்தித்து செயல்பட மூளைக்கு அவகாசம் இருக்காது.
அமைதியான மனநிலையில்தான் மூளை புதுமைகளைப் பற்றி சிந்திக்கும். அவசரத்தில் எந்த புதுமையையும் எந்த பெண்ணாலும் படைக்க முடியாது. மூளை ஒரு இயந்திரத்தைப் போல செயல்பட ஆரம்பித்துவிட்டால், செய்யும் வேலையில் எந்த மாற்றமும் இருக்காது. அச்சுஅசலாக ஒரே மாதிரிதான் அந்த வேலை அமையும். அப்படி எல்லா பெண்களும் வேலை செய்யத் தொடங்கிவிட்டால், வேலையில் புதுமை- வித்தியாசம் என்பதற்கு இடமே இல்லாமல் போய்விடும்.
மல்டி டாஸ்க் பணியில் நிரந்தரமாக ஈடுபடும் பெண்களின் மூளை எளிதாக சோர்ந்துவிடும். மூளை சோர்ந்து போகும்போது உற்சாகம் குறையும். ஞாபகமறதியும் தோன்றும். ஒரே நேரத்தில் பல வேலைகளை மூளையில் தேக்கி வைத்துக்கொண்டு செயல்படுவது, பெண்கள் மூளைக்கு தரும் ‘ஓவர்லோடு’ ஆகிவிடுகிறது. ஓவர் லோடு வேலை ஒருபோதும் பெண்களுக்கு நலனாக அமையாது. அதனால் எல்லாவற்றையும் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்து முடித்து, உங்கள் மனதையும், உடலையும் அழுத்தத்திற்கு உள்ளாக்கு வதைவிட, செய்கிற வேலையை ரசித்து செய்து உடலையும், மனதையும் உற்சாகப்படுத்தி மகிழ்ச்சியாக வாழ்வதே சிறந்தது. மகிழ்ச்சியான வேலையே மனம் நிறைந்த வேலை.
பெண்களுக்கு உழைப்பு எவ்வளவு அவசியமோ அதுபோல் ஓய்வும் மிக அவசியம். தங்களால் இயன்ற வேலையை அளவுடன் செய்துவிட்டு மூளைக்கும், உடலுக்கும் ஓய்வளிக்க வேண்டியது அவசியம். சரியான ஓய்வு கொடுக்காவிட்டால், நாளடைவில் மனஅழுத்தம் ஏற்பட்டு பல்வேறு உடல்நல பாதிப்பு களுக்கு வழி வகுக்கும். ஆண்கள் சாதாரண நிலையில் நிதானமாக தங்கள் வேலைகளை செய்பவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் பெண்கள் ‘மல்டிடாஸ்கிங்’ எனப்படும் பன் முகப் பணியால், ஒரு இடத்தில் நிற்காமல் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள். அதனால் எளிதில் சோர்வடைந்து விடுகிறார்கள். மூளைக்குச் செல்லும் ரத்தத்தின் வேகம் அதிகரித்து அதிக பணிஅழுத்தம் ஏற்பட்டுவிடுகிறது.
பெண்கள், ஒரு வேலையை நேரத்தோடு செய்து முடிப்பது மட்டும் சாதனையல்ல. அந்த வேலை அவர்களது மனதுக்கோ, உடலுக்கோ அழுத்தம் கொடுக்காத அளவுக்கு செய்து முடிப்பதுதான் அந்த வேலையின் வெற்றி. ஒன்றுக்கு மேற்பட்ட வேலை எல்லோருக்கும் இருந்துகொண்டுதான் இருக்கும். அப்போது ஒவ்வொரு வேலைக்கும் உண்டான நுணுக்கத்தை கையாண்டு திறம்பட அந்த வேலைகளை செய்து முடிக்க கொஞ்சம் பொறுமை தேவை.
ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்பவர்களால் தங்கள் வேலைகளை பொறுமையாக செய்ய முடியாது. ஒன்றை செய்துகொண்டிருக்கும் போதே இடையில் அடுத்த வேலையின் நினைவு வந்து பயமுறுத்தி பொறுமையை இழக்கச்செய்யும். அப்போது துரிதமாக அந்த வேலைகளை செய்துமுடிக்கவேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்படுவார்கள். ஒரே ஒரு வேலையை மட்டும் செய்யும்போது அதில் முழுகவனத்தையும் செலுத்தமுடியும்.
மல்டி டாஸ்க்கை பயன்படுத்தும்போது கவனம் சிதறும். இது பற்றி பிரான்ஸ் நாட்டில் ஒரு ஆய்வு நடந்தது. அதில், ‘ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யும் பெண்களுக்கு அதிக தவறுகள் நிகழ்ந்துவிடுவதாக’ தெரியவந் திருக்கிறது. காரணம் பெண்களுக்கு தவிர்க்க முடியாத உணர்வுபூர்வமான சில வேலைகளும் உள்ளன. உதாரணமாக ‘பிளே ஸ்கூலில்’ விட்டுவிட்டு வந்த குழந்தையை திரும்ப வீட்டிற்கு அழைத்துச்செல்ல வேண்டும். இந்நேரம் குழந்தை அம்மாவை காணாமல் அழுதுகொண்டிருக்கும். வீட்டில் வயதானவர்கள் தனிமையில் இருக்கிறார்கள். சீக்கிரம் வீட்டிற்கு போக வேண்டும்’ என்பன போன்ற சிந்தனைகள் அவர்களுக்கு வந்துகொண்டே இருக்கும்.

இப்படிப்பட்ட உணர்வுபூர்வமான சிந்தனை அவர்களை ஆட்கொள்ளும்போது அதைக் கடந்து அவர்களால் இதர வேலைகளில் முழுகவனம் செலுத்தமுடியாது. இதுதான் பெண்களின் நிலை. இந்த நிலையில், அவர்கள் செய்யும் வேலைகளில் அவர்களை அறியாமலே சில தவறுகள் நடந்துவிடும். அந்த தவறுகளில் சிலவற்றை சரிசெய்வது கடினமான கூடுதல் வேலையாகிவிடும். அதனால் சில பின்விளைவுகளோ, எதிர்விளைவுகளோ உருவாகிவிடும். அப்போது ஏற்படும் மனஉளைச்சல் உடலையும், மனதையும் பாதிக்கும்.
ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யும்போது செயல்வேகம் குறைந்து, குறிப்பிட்ட வேலையை குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்துமுடிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. அதனால் ஒன்றன்பின் ஒன்றாக பல வேலைகள் தாமதமாகின்றன. பல வேலைகளை ஒன்றாக முடித்துவிடலாம் என்று கணக்குப் போட்டு வேலை செய்யும் பெண்களால் எதையுமே நேரத்தோடு செய்து முடிக்க முடிவதில்லை. காலம் கடந்து முடிக்கும் சில வேலைகள் பயனில்லாமல் போய்விடுகிறது. இதுவும் பெண்களை மனஅழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது.
ஒரே நேரத்தில் பல வேலைகளை பெண்கள் செய்யும்போது அவர்களுக்குள் இருக்கும் படைப்பாற்றல் எனப்படும் ‘கிரியேட்டிவிட்டி’ குறைந்து விடுகிறது. அப்போது தனது அத்தனை திறமைகளையும் ஒருமுகப்படுத்தி அந்த வேலையை எப்படி செய்து முடிப்பது என்று சிந்திப்பதற்கு பதில், அவர்களது மூளை அந்த வேலையை எப்படி எளிதாக செய்து முடிப்பது என்று சிந்திக்கத் தொடங்கிவிடும். அப்போது ‘இன்னும் கொஞ்சம் புதுமையாக என்ன செய்யலாம்? முன்பைவிட சிறப்பாக அதை எப்படி செய்யலாம்?’ என்று சிந்தித்து செயல்பட மூளைக்கு அவகாசம் இருக்காது.
அமைதியான மனநிலையில்தான் மூளை புதுமைகளைப் பற்றி சிந்திக்கும். அவசரத்தில் எந்த புதுமையையும் எந்த பெண்ணாலும் படைக்க முடியாது. மூளை ஒரு இயந்திரத்தைப் போல செயல்பட ஆரம்பித்துவிட்டால், செய்யும் வேலையில் எந்த மாற்றமும் இருக்காது. அச்சுஅசலாக ஒரே மாதிரிதான் அந்த வேலை அமையும். அப்படி எல்லா பெண்களும் வேலை செய்யத் தொடங்கிவிட்டால், வேலையில் புதுமை- வித்தியாசம் என்பதற்கு இடமே இல்லாமல் போய்விடும்.
மல்டி டாஸ்க் பணியில் நிரந்தரமாக ஈடுபடும் பெண்களின் மூளை எளிதாக சோர்ந்துவிடும். மூளை சோர்ந்து போகும்போது உற்சாகம் குறையும். ஞாபகமறதியும் தோன்றும். ஒரே நேரத்தில் பல வேலைகளை மூளையில் தேக்கி வைத்துக்கொண்டு செயல்படுவது, பெண்கள் மூளைக்கு தரும் ‘ஓவர்லோடு’ ஆகிவிடுகிறது. ஓவர் லோடு வேலை ஒருபோதும் பெண்களுக்கு நலனாக அமையாது. அதனால் எல்லாவற்றையும் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்து முடித்து, உங்கள் மனதையும், உடலையும் அழுத்தத்திற்கு உள்ளாக்கு வதைவிட, செய்கிற வேலையை ரசித்து செய்து உடலையும், மனதையும் உற்சாகப்படுத்தி மகிழ்ச்சியாக வாழ்வதே சிறந்தது. மகிழ்ச்சியான வேலையே மனம் நிறைந்த வேலை.
தினமும் முட்டை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா? என்று சிலருக்குத் தயக்கம் இருக்கும். இதற்கான விடையை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
தினமும் முட்டை சாப்பிடுவது சரியா? என்று சிலருக்குத் தயக்கம் இருக்கும். ஆனால் தினமும் தயங்காமல் முட்டை சாப்பிடலாம் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். குறிப்பாக வளரும் குழந்தைகள் தினமும் ஒரு முட்டை வெள்ளைக்கரு மற்றும் மஞ்சள் கரு இரண்டையும் சேர்த்து சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமானது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
வைட்டமின் ஏ, பி, சி என உடலுக்குத் தேவையான அனைத்து வகையான வைட்டமின்களும் இதில் இருக்கின்றது. மேலும் பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு தேவைப்படும் பாஸ்பரஸ் போன்றவையும் முட்டையில் இருக்கின்றது.

பொதுவாக முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடுவதாக இருந்தால் 3 அது நான்கு முட்டைகள் வரை சாப்பிடலாம். இரவு நேரத்தில் முட்டை சாப்பிடுவதில் தவறில்லை, ஆனால் தூங்கப் போவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பாக சாப்பிட வேண்டும். மஞ்சள் கருவையும் சேர்த்து முட்டைகளை அதிகமாக சாப்பிடுபவர்களின் உடலில் கொழுப்புச் சத்து அளவு அதிகமாகி, இதய நோய்கள் வரக்கூடும். எனவே மஞ்சள் கரு சாப்பிடுவதை குறைத்துக்கொள்வது நல்லது.
உடற்பயிற்சிகள் செய்துவிட்டு அதன் பின்னர் முட்டை சாப்பிடுவது, உடல் வலிமையைக் அதிகரிக்கும். உடலில் ஏற்கனவே கொலஸ்ட்ரால் தொந்தரவு இருப்பவர்கள் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிட வேண்டும்.
சர்க்கரை நோய் இருப்பவர்கள், தினமும் இரண்டு முட்டைகளின் வெள்ளைக்கருவை உட்கொள்ளலாம். அதிக உடல் எடை கொண்டவர் வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முட்டைகளின் வெள்ளைக்கருவை சாப்பிடலாம்.
வைட்டமின் ஏ, பி, சி என உடலுக்குத் தேவையான அனைத்து வகையான வைட்டமின்களும் இதில் இருக்கின்றது. மேலும் பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு தேவைப்படும் பாஸ்பரஸ் போன்றவையும் முட்டையில் இருக்கின்றது.
ஓரிடத்திலேயே அமர்ந்து வேலை செய்பவர்கள் ஒரு நாளைக்கு ஒரு முட்டை எடுத்துக் கொண்டால் போதுமானது. உடல் உழைப்பு அதிகமான வேலைகளில் இருப்பவர்கள், ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முட்டை வெள்ளை கரு சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

பொதுவாக முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடுவதாக இருந்தால் 3 அது நான்கு முட்டைகள் வரை சாப்பிடலாம். இரவு நேரத்தில் முட்டை சாப்பிடுவதில் தவறில்லை, ஆனால் தூங்கப் போவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பாக சாப்பிட வேண்டும். மஞ்சள் கருவையும் சேர்த்து முட்டைகளை அதிகமாக சாப்பிடுபவர்களின் உடலில் கொழுப்புச் சத்து அளவு அதிகமாகி, இதய நோய்கள் வரக்கூடும். எனவே மஞ்சள் கரு சாப்பிடுவதை குறைத்துக்கொள்வது நல்லது.
உடற்பயிற்சிகள் செய்துவிட்டு அதன் பின்னர் முட்டை சாப்பிடுவது, உடல் வலிமையைக் அதிகரிக்கும். உடலில் ஏற்கனவே கொலஸ்ட்ரால் தொந்தரவு இருப்பவர்கள் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிட வேண்டும்.
சர்க்கரை நோய் இருப்பவர்கள், தினமும் இரண்டு முட்டைகளின் வெள்ளைக்கருவை உட்கொள்ளலாம். அதிக உடல் எடை கொண்டவர் வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முட்டைகளின் வெள்ளைக்கருவை சாப்பிடலாம்.
இட்லி, தோசை, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த மட்டன் குழம்பு. இன்று இந்த மட்டன் குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மட்டன் - அரை கிலோ
சின்ன வெங்காயம் - 50 கிராம்
தக்காளி - 2
மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி
மல்லித் தூள் - ஒன்றரை மேசைக்கரண்டி
தேங்காய் துருவல் - கால் கப்
கசகசா - அரை மேசைக்கரண்டி
சோம்பு தூள் - ஒரு தேக்கரண்டி
பட்டை - அரை அங்குலத் துண்டு
கல் உப்பு - 2 தேக்கரண்டி

செய்முறை :
மட்டனைத் துண்டுகளாக்கி கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.
தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பிறகு சின்ன வெங்காயத்தை தோலுரித்து இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.
தேங்காய் துருவலுடன் கசகசா சேர்த்து மிக்ஸி நைசாக அரைத்துக் கொள்ளவும்.
குக்கரில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
பின் வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி சற்று வதங்கியதும் சுத்தம் செய்து வைத்திருக்கும் மட்டனை சேர்த்துப் போட்டு நன்கு கிளறவும்.
பிறகு உப்பு சேர்த்து பிரட்டவும். (உப்பு சேர்த்து பிரட்டுவதால் கறியில் நன்கு உப்பு சேர்ந்துவிடும்) மட்டன் சற்று நிறம் மாறியதும் மல்லித் தூள், சோம்பு தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.
மிதமான தீயில் வைத்து மட்டன் தூள் வகைகள் ஒன்றாக சேரும்படி நன்கு 2 நிமிடங்கள் பிரட்டவும்.
அடுத்து மட்டனுடன் தேங்காய் விழுது ஒன்றாக சேரும்படி கிளறிவிட்டு, ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி தீயை அதிகமாக வைத்து, ஒரு முறை கிளறிவிட்டு குக்கரை மூடி 6 விசில் வரும் வரை வைத்து அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.
சிறிது நேரம் கழித்து குக்கரைத் திறந்து பார்த்தால் கறியில் உள்ள கொழுப்பு மற்றும் எண்ணெய் மேலே மிதந்து வந்திருக்கும். இப்போது சுவையான மட்டன் குழம்பு ரெடி.
மட்டன் - அரை கிலோ
சின்ன வெங்காயம் - 50 கிராம்
தக்காளி - 2
மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி
மல்லித் தூள் - ஒன்றரை மேசைக்கரண்டி
தேங்காய் துருவல் - கால் கப்
கசகசா - அரை மேசைக்கரண்டி
சோம்பு தூள் - ஒரு தேக்கரண்டி
பட்டை - அரை அங்குலத் துண்டு
கல் உப்பு - 2 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 3 மேசைக்கரண்டி

செய்முறை :
மட்டனைத் துண்டுகளாக்கி கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.
தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பிறகு சின்ன வெங்காயத்தை தோலுரித்து இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.
தேங்காய் துருவலுடன் கசகசா சேர்த்து மிக்ஸி நைசாக அரைத்துக் கொள்ளவும்.
குக்கரில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
பின் வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி சற்று வதங்கியதும் சுத்தம் செய்து வைத்திருக்கும் மட்டனை சேர்த்துப் போட்டு நன்கு கிளறவும்.
பிறகு உப்பு சேர்த்து பிரட்டவும். (உப்பு சேர்த்து பிரட்டுவதால் கறியில் நன்கு உப்பு சேர்ந்துவிடும்) மட்டன் சற்று நிறம் மாறியதும் மல்லித் தூள், சோம்பு தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.
மிதமான தீயில் வைத்து மட்டன் தூள் வகைகள் ஒன்றாக சேரும்படி நன்கு 2 நிமிடங்கள் பிரட்டவும்.
அடுத்து மட்டனுடன் தேங்காய் விழுது ஒன்றாக சேரும்படி கிளறிவிட்டு, ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி தீயை அதிகமாக வைத்து, ஒரு முறை கிளறிவிட்டு குக்கரை மூடி 6 விசில் வரும் வரை வைத்து அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.
சிறிது நேரம் கழித்து குக்கரைத் திறந்து பார்த்தால் கறியில் உள்ள கொழுப்பு மற்றும் எண்ணெய் மேலே மிதந்து வந்திருக்கும். இப்போது சுவையான மட்டன் குழம்பு ரெடி.
சுவையான மட்டன் குழம்பு தயார்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
நவநாகரீக பெண்கள் அணிகின்ற வகையில் அழகிய வடிவமைப்புடன் கடிகாரங்கள் முந்தைய பட்டை அமைப்பிலான ஸ்ட்ராப் டைப் வாட்ச்கள் என்பது மாறுபட்ட வடிவமைப்புடன் உருவாக்கப்படுகின்றன.
நவநாகரீக பெண்கள் அணிகின்ற வகையில் அழகிய வடிவமைப்புடன் கடிகாரங்கள் முந்தைய பட்டை அமைப்பிலான ஸ்ட்ராப் டைப் வாட்ச்கள் என்பது மாறுபட்ட வடிவமைப்புடன் உருவாக்கப்படுகின்றன. இந்த அதிநுட்பமான வேலைப்பாடு மிகுந்த கைக் கடிகாரங்கள் என்பது கணினி உதவியுடன் கண்கவர் வடிவங்கள் உள்ளவாறு உருவாக்கப்படுகின்றன. இதன் சிறப்பம்சம் எனும்போது சிக்கலான சிற்பங்கள் என்பதை வடிவமைப்பாக கொண்டு அழகிய வண்ண கற்கள் பொருத்தப்பட்டவாறு கிடைக்கின்றன. அதாவது பூ வேலைப்பாடு கொண்ட ஸ்ட்ராப் முதல் மேம்பட்ட புதிய டிசைன்கள் பல உள்ளவாறு கைக் கடிகாரங்கள் கிடைக்கின்றன.
பழங்குடியினர் வளையம் போன்ற கைக் கடிகாரங்கள்
மேம்பட்ட சிக்கலான வேலைப்பாட்டுடன் அழகிய பழங்குடியினர் வளையம் போன்ற கைக் கடிகாரங்கள் கிடைக்கின்றன. பப்- பிரிண்டட் செய்யப்பட்ட மாசாபா மோதிப்ஸ் டையல் பகுதிகளிலும், சூரிய கதிர் போன்ற பினிஷ் செய்யப்பட்ட ஜலி பேட்டர்ன் அமைப்பு உள்ளது. இதன் சிற்பங்கள் இணைந்த வளையல் அமைப்பு இரு சுழற்சி கொண்டவாறு கடிகாரப்பகுதி ஒரு பக்க இணைப்பில் பற்றியவாறு உள்ளது. அந்த சிற்ப அமைப்பு அழகிய உருளைகள் மற்றும் சிற்பங்கள் இணைந்தவாறு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கடிகாரத்தின் உலோக வண்ண சாயல் என்பது செம்மை நிறத்திலும், மஞ்சள் நிறத்திலும் உள்ளவாறு உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வளைய பகுதியும் சிறிய செதுக்கல்கள், உருவ பின்னணி கொண்டவாறு மிக துல்லியமான நுண்ணிய வேலைப்பாடுடன் கலைநயத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது, நீண்ட நாள் உழைக்கக்கூடிய வகையிலான மேற்பூச்சுடன் உள்ளது.
பூ வேலைப்பாட்டுடன் கூடிய கைக்கடிகாரங்கள்
முதன்மையான டையல் பகுதி என்பது வட்ட வடிவிலும், ஓவல் மற்றும் மொட்டு அமைப்பிலும் இருக்கும் படியான கடிகார அமைப்பின் ஸ்ட்ராப் என்பது மட்டும் பூ வேலைப்பாட்டுடன் அழகிய வடிவங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பூ வேலைப்பாடு பூ பேட்டர்ன் மற்றும் பெசல் அமைப்புடன் கூடிய ஸ்ராப் உள்ளது. இந்த தங்க பூ வடிவ அமைப்பின் நடுவே ஜொலிக்கும் ஸ்வரோஸ்கி கற்கள் பதியப்பட்டுள்ளன.
வண்ண கற்கள் பதியப்பட்ட கொடி பின்னல் கைக்கடிகாரம்

ஆடை மடிப்பு போன்று கைக்கடிகாரங்கள்
அழகிய உருளை கம்பி இருபக்கவாட்டு அமைப்புடன் நடுப்பகுதியில் ஆடை மடிப்பு போன்று கம்பிகள் குறுக்குவாட்டில் இணைக்கப்பட்டுள்ளது. இதில் இடைவெளிவிட்டு கம்பி அமைப்பு மேல் எழுந்தவாறு அலை அமைப்புடன் காணப்படுகிறது. அதுபோல் ஒரு கம்பி விட்டு ஒரு கம்பி அமைப்பில் அழகிய இளஞ்சிவப்பு கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. ரோஸ் கோல்டு சாயல் கொண்ட வண்ண பின்னணிக்கு ஏற்ப டயல் பகுதியும் அதே வண்ணத்தில் வடிவமைப்புச் செய்யப்பட்டுள்ளது.
கலைநயத்துடன் உருவான பதக்க அமைப்பு கைக்கடிகாரங்கள்
முதன்மை கடிகாரப்பகுதி என்பது வட்டவடிவில் முல்லை நிற இலை சாயலுடன் உள்ளது. அதுபோல் இதன் ஸ்ட்ராப் பகுதி மீதான வட்ட வடிவ பதக்கங்கள் இணைக்கப்பட்ட அமைப்பில் உள்ளன. வட்ட வடிவ பதக்கம் என்பது இலைப் பிரிவுகளுடன் கூடிய பூவுடன் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் பூப்பகுதி மட்டும் சிறு கற்கள் பதியப்பட்டு கிடைக்கின்றன.
வெள்ளி நிற பின்னணி கைக்கடிகாரங்கள்
ஓவல் வடிவ முதன்மை கைக் கடிகாரப்பகுதி என்பது வெளிர் நீல டையல் பின்னணியுடன் காட்சி தருகிறது. அதன் ஸ்ட்ராப் பகுதி சிறு சிறு டப்போதில் மலர் போன்று வெள்ளி கம்பியில் உருவாக்கப்பட்டு அதன் நடுவே ஒற்றை வெள்ளை கல் பதியப்பட்டுள்ளது. வெள்ளி நிற சாயலுடன் வெள்ளை கற்கள் பதியப்பட்ட இந்த கடிகாரம் ஆர்வத்தை தூண்டும் வகையில் உள்ளது.
பிரேஸ்லெட் அமைப்பிலான கைக்கடிகாரங்கள்
உருளை கம்பியின் ஒரு பகுதி கடிகாரமும், ஒரு பகுதியில் கற்கள் உள்ளவாறு பிரிவுகளுடன் கூடிய பிரேஸ்லெட் கடிகாரம் என்பது அழகுடன் அனைவரது கவனத்தையும் ஈர்க்கின்றது. கம்பி அமைப்பில் மெல்லிய அமைப்பில் டிசைன்கள் செய்யப்பட்டும் அதிலிருந்து மேலே எழுந்தப்படி பூ மொட்டு போல வண்ண கற்கள் பதியப்பட்டுள்ளது. வெள்ளி, தங்க, ரோஸ் கோல்டு வண்ண பின்னணியில் அழகிய பிரேஸ்லெட்-கள் வருகின்றன. பிரேஸ்லெட் போலவும், அதே நேரம் கடிகார தேவையையும் பூர்த்தி செய்யும் இந்த கடிகாரம் அழகின் உச்சம்.
பழங்குடியினர் வளையம் போன்ற கைக் கடிகாரங்கள்
மேம்பட்ட சிக்கலான வேலைப்பாட்டுடன் அழகிய பழங்குடியினர் வளையம் போன்ற கைக் கடிகாரங்கள் கிடைக்கின்றன. பப்- பிரிண்டட் செய்யப்பட்ட மாசாபா மோதிப்ஸ் டையல் பகுதிகளிலும், சூரிய கதிர் போன்ற பினிஷ் செய்யப்பட்ட ஜலி பேட்டர்ன் அமைப்பு உள்ளது. இதன் சிற்பங்கள் இணைந்த வளையல் அமைப்பு இரு சுழற்சி கொண்டவாறு கடிகாரப்பகுதி ஒரு பக்க இணைப்பில் பற்றியவாறு உள்ளது. அந்த சிற்ப அமைப்பு அழகிய உருளைகள் மற்றும் சிற்பங்கள் இணைந்தவாறு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கடிகாரத்தின் உலோக வண்ண சாயல் என்பது செம்மை நிறத்திலும், மஞ்சள் நிறத்திலும் உள்ளவாறு உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வளைய பகுதியும் சிறிய செதுக்கல்கள், உருவ பின்னணி கொண்டவாறு மிக துல்லியமான நுண்ணிய வேலைப்பாடுடன் கலைநயத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது, நீண்ட நாள் உழைக்கக்கூடிய வகையிலான மேற்பூச்சுடன் உள்ளது.
பூ வேலைப்பாட்டுடன் கூடிய கைக்கடிகாரங்கள்
முதன்மையான டையல் பகுதி என்பது வட்ட வடிவிலும், ஓவல் மற்றும் மொட்டு அமைப்பிலும் இருக்கும் படியான கடிகார அமைப்பின் ஸ்ட்ராப் என்பது மட்டும் பூ வேலைப்பாட்டுடன் அழகிய வடிவங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பூ வேலைப்பாடு பூ பேட்டர்ன் மற்றும் பெசல் அமைப்புடன் கூடிய ஸ்ராப் உள்ளது. இந்த தங்க பூ வடிவ அமைப்பின் நடுவே ஜொலிக்கும் ஸ்வரோஸ்கி கற்கள் பதியப்பட்டுள்ளன.
வண்ண கற்கள் பதியப்பட்ட கொடி பின்னல் கைக்கடிகாரம்
வெள்ளை நிற பின்னணியில் தங்க நிற வடிவமைப்பு முதன்மை கடிகாரம் இருக்க வலை பின்னல் அமைப்பிலான ஸ்ட்ராப் வண்ணக்கற்கள் பதியப்பட்டவாறு உள்ளன. அதாவது பட்டையான தங்க தகட்டில் இடைவெளிவிட்டு காற்றோட்டமான அமைப்பில் உருவங்கள் மட்டும் தெரியும் வகையில் உள்ளன. இந்த இடைவெளி விட்ட உருவ அமைப்பில் சிறு சிறு வண்ணங்கள் பூ, இலை, கொடி அமைப்பு என்றவாறு தனி வண்ணங்களில் பதியப்பட்டுள்ளன. முதன்மை கடிகாரப்பகுதி என்பது வட்டவடிவில் மேற்புறம் சிறு வைரக்கற்கள் பதியப்பட்டுள்ளன.

ஆடை மடிப்பு போன்று கைக்கடிகாரங்கள்
அழகிய உருளை கம்பி இருபக்கவாட்டு அமைப்புடன் நடுப்பகுதியில் ஆடை மடிப்பு போன்று கம்பிகள் குறுக்குவாட்டில் இணைக்கப்பட்டுள்ளது. இதில் இடைவெளிவிட்டு கம்பி அமைப்பு மேல் எழுந்தவாறு அலை அமைப்புடன் காணப்படுகிறது. அதுபோல் ஒரு கம்பி விட்டு ஒரு கம்பி அமைப்பில் அழகிய இளஞ்சிவப்பு கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. ரோஸ் கோல்டு சாயல் கொண்ட வண்ண பின்னணிக்கு ஏற்ப டயல் பகுதியும் அதே வண்ணத்தில் வடிவமைப்புச் செய்யப்பட்டுள்ளது.
கலைநயத்துடன் உருவான பதக்க அமைப்பு கைக்கடிகாரங்கள்
முதன்மை கடிகாரப்பகுதி என்பது வட்டவடிவில் முல்லை நிற இலை சாயலுடன் உள்ளது. அதுபோல் இதன் ஸ்ட்ராப் பகுதி மீதான வட்ட வடிவ பதக்கங்கள் இணைக்கப்பட்ட அமைப்பில் உள்ளன. வட்ட வடிவ பதக்கம் என்பது இலைப் பிரிவுகளுடன் கூடிய பூவுடன் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் பூப்பகுதி மட்டும் சிறு கற்கள் பதியப்பட்டு கிடைக்கின்றன.
வெள்ளி நிற பின்னணி கைக்கடிகாரங்கள்
ஓவல் வடிவ முதன்மை கைக் கடிகாரப்பகுதி என்பது வெளிர் நீல டையல் பின்னணியுடன் காட்சி தருகிறது. அதன் ஸ்ட்ராப் பகுதி சிறு சிறு டப்போதில் மலர் போன்று வெள்ளி கம்பியில் உருவாக்கப்பட்டு அதன் நடுவே ஒற்றை வெள்ளை கல் பதியப்பட்டுள்ளது. வெள்ளி நிற சாயலுடன் வெள்ளை கற்கள் பதியப்பட்ட இந்த கடிகாரம் ஆர்வத்தை தூண்டும் வகையில் உள்ளது.
பிரேஸ்லெட் அமைப்பிலான கைக்கடிகாரங்கள்
உருளை கம்பியின் ஒரு பகுதி கடிகாரமும், ஒரு பகுதியில் கற்கள் உள்ளவாறு பிரிவுகளுடன் கூடிய பிரேஸ்லெட் கடிகாரம் என்பது அழகுடன் அனைவரது கவனத்தையும் ஈர்க்கின்றது. கம்பி அமைப்பில் மெல்லிய அமைப்பில் டிசைன்கள் செய்யப்பட்டும் அதிலிருந்து மேலே எழுந்தப்படி பூ மொட்டு போல வண்ண கற்கள் பதியப்பட்டுள்ளது. வெள்ளி, தங்க, ரோஸ் கோல்டு வண்ண பின்னணியில் அழகிய பிரேஸ்லெட்-கள் வருகின்றன. பிரேஸ்லெட் போலவும், அதே நேரம் கடிகார தேவையையும் பூர்த்தி செய்யும் இந்த கடிகாரம் அழகின் உச்சம்.
கர்ப்ப காலத்தில் தண்ணீர் சத்து இல்லாமல் உடல் வறட்சியாக இருந்தால் பிரசவம் சிரமமாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கர்ப்பமாக இருக்கும் போது பெண்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 2 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். அப்போது தான் உடலில் நீர்ச்சத்து அதிகமாக இருக்கும். இதன்மூலம் பிரசவம் எளிதாக இருக்கும். அவ்வாறு இல்லாமல் உடல் வறட்சியாக இருந்தால் பிரசவம் சிரமமாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், கர்ப்பமாக இருக்கும் போது தண்ணீர் குடிக்காமல் இருந்தால் உடலில் ஒரு சில மாற்றங்களும் தெரியும் என்றும் சொல்கின்றனர்.
மேலும், தண்ணீர் குடிக்க முடியவில்லை என்றாலும் தேவையான அளவு பழச்சாறு அருந்த வேண்டும். அதுமட்டுமல்லாமல் சாதாரணமாக இருக்கும் போது உடலில் இருக்கும் சக்தியானது, கர்ப்பமாக இருக்கும் போது இருக்காது. ஏனெனில் அப்போது உண்ணும் உணவு அனைத்துமே கருவில் இருக்கும் குழந்தைக்கு செல்லும். மேலும் சில காரணங்களாலும் உடலில் உள்ள சக்தி வெளியேறும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சாதாரணமாக இருக்கும் போது உடலில் இருந்து வெளியேறும் வெப்பமானது, பிரசவத்தின் போது வெளியேறாது. உடலிலேயே தங்கிவிடும். இதற்கும் நீர்ச்சத்து இல்லாததே காரணமாகும். ஆகவே, உடலில் உள்ள வெப்பத்தை சரியாக வைத்துக்கொள்ள அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். வெப்பம் உடலிலேயே இருந்தால் காய்ச்சல் வரும். இதுபோன்ற சமயங்களில் குழந்தைக்கும் காய்ச்சல் பரவி, குழந்தையின் மூளையை பாதித்து மூளைக்குறைபாட்டை ஏற்படுத்தும்.
உடல் வறட்சியானது மலச்சிக்கல் மற்றும் தாய்ப்பால் சுரப்பில் குறைபாடு போன்றவற்றை ஏற்படுத்தும். சிறுநீரகத்தில் பிரச்சினையை உண்டாக்கும். தாய்க்கு பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் குழந்தையின் சிறுநீரகம் மற்றும் கல்லீரலும் பாதிக்கும். தாயின் உடலில் ரத்தக் குறைபாட்டை ஏற்படுத்தும்.
கர்ப்ப காலத்தில் அதிகமாக தண்ணீரை குடித்து உடல் வறட்சி இல்லாமல் பார்த்துக்கொண்டால் தாய், சேய் ஆகிய இரு உயிருமே நலமாக ஆரோக்கியமாக இருக்கும். எனவே தண்ணீரை அதிகமாக குடிங்க… குழந்தையை ஆரோக்கியமா பெற்றெடுங்க!
மேலும், தண்ணீர் குடிக்க முடியவில்லை என்றாலும் தேவையான அளவு பழச்சாறு அருந்த வேண்டும். அதுமட்டுமல்லாமல் சாதாரணமாக இருக்கும் போது உடலில் இருக்கும் சக்தியானது, கர்ப்பமாக இருக்கும் போது இருக்காது. ஏனெனில் அப்போது உண்ணும் உணவு அனைத்துமே கருவில் இருக்கும் குழந்தைக்கு செல்லும். மேலும் சில காரணங்களாலும் உடலில் உள்ள சக்தி வெளியேறும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தேவையான அளவு தண்ணீர் அருந்தவில்லை என்றால் பிரசவத்தின் போது உடலில் இருக்க வேண்டிய நீர்த்தன்மையை நீண்ட நேரம் தக்க வைக்க முடியாமல் போய்விடும். மேலும், கருவில் இருக்கும் குழந்தை கருப்பையில் இருக்க முடியாமல் விரைவில் வெளியே வந்துவிடும். இதைத்தான் குறைப்பிரசவம் என்கிறோம். இதுபோன்று பிறக்கும் குழந்தைகளுக்கு கை, கால் ஊனம் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன.

சாதாரணமாக இருக்கும் போது உடலில் இருந்து வெளியேறும் வெப்பமானது, பிரசவத்தின் போது வெளியேறாது. உடலிலேயே தங்கிவிடும். இதற்கும் நீர்ச்சத்து இல்லாததே காரணமாகும். ஆகவே, உடலில் உள்ள வெப்பத்தை சரியாக வைத்துக்கொள்ள அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். வெப்பம் உடலிலேயே இருந்தால் காய்ச்சல் வரும். இதுபோன்ற சமயங்களில் குழந்தைக்கும் காய்ச்சல் பரவி, குழந்தையின் மூளையை பாதித்து மூளைக்குறைபாட்டை ஏற்படுத்தும்.
உடல் வறட்சியானது மலச்சிக்கல் மற்றும் தாய்ப்பால் சுரப்பில் குறைபாடு போன்றவற்றை ஏற்படுத்தும். சிறுநீரகத்தில் பிரச்சினையை உண்டாக்கும். தாய்க்கு பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் குழந்தையின் சிறுநீரகம் மற்றும் கல்லீரலும் பாதிக்கும். தாயின் உடலில் ரத்தக் குறைபாட்டை ஏற்படுத்தும்.
கர்ப்ப காலத்தில் அதிகமாக தண்ணீரை குடித்து உடல் வறட்சி இல்லாமல் பார்த்துக்கொண்டால் தாய், சேய் ஆகிய இரு உயிருமே நலமாக ஆரோக்கியமாக இருக்கும். எனவே தண்ணீரை அதிகமாக குடிங்க… குழந்தையை ஆரோக்கியமா பெற்றெடுங்க!
வெந்தயக்கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று தயிர் சேர்த்து சத்தான சுவையான வெந்தயக்கீரை கறி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
வெந்தயக்கீரை - 1 கட்டு
தயிர் - 1 கப்
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - 1 சிறிய துண்டு
கடுகு, உளுத்தம் பருப்பு - 2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
பூண்டு - தலா 3
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - 2 கொத்து

செய்முறை :
வெந்தயக்கீரையை கழுவி, நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
இஞ்சியை தட்டி வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அதில் கடுகு, உளுத்தம் பருப்பு காய்ந்த மிளகாயை கிள்ளிப் போட்டு, ப.மிளகாய், பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை போட்டு மிதமான தீயில் வதக்கவும்.
பின், அரிந்து வைத்திருக்கும் கீரையை சேர்த்து நன்றாக வதக்கி இறக்கவும்.
வெந்தயக்கீரை - 1 கட்டு
தயிர் - 1 கப்
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - 1 சிறிய துண்டு
கடுகு, உளுத்தம் பருப்பு - 2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
பூண்டு - தலா 3
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - 2 கொத்து
உப்பு - தேவையான அளவு

செய்முறை :
வெந்தயக்கீரையை கழுவி, நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
இஞ்சியை தட்டி வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அதில் கடுகு, உளுத்தம் பருப்பு காய்ந்த மிளகாயை கிள்ளிப் போட்டு, ப.மிளகாய், பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை போட்டு மிதமான தீயில் வதக்கவும்.
பின், அரிந்து வைத்திருக்கும் கீரையை சேர்த்து நன்றாக வதக்கி இறக்கவும்.
அதனுடன் தயிர் சேர்த்துக் கலக்கி, மீண்டும் அடுப்பில் வைத்து, ஐந்து நிமிடம் கொதிக்க விட்டால், வெந்தயக்கீரை தயிர் கறி தயார்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வலிப்பு நோய் இருப்பவர்கள் இந்த முத்திரையை தினமும் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இந்த முத்திரை செய்முறையை பார்க்கலாம்.
செய்முறை :
முதலில் விரிப்பில் அமர்ந்து கொள்ளவும். பின்னர் படத்தில் காட்டியுள்ளபடி பெருவிரல் மற்றும் ஆட்காட்டி விரல் இடையில் உள்ள மேடான பகுதியில், மற்ற கையின் பெருவிரல் மற்றும் ஆட்காட்டி விரலைப் பயன்படுத்தி அழுத்திப் பிடிக்கவும்.
இந்த முத்திரையை எந்த இடத்தில் இருந்து வேண்டுமென்றாலும் செய்யலாம். காலை நேரத்தில் இந்த முத்திரையை செய்து வந்தால் மிகவும் நல்லது. தினமும் 15 நிமிடம் முதல் 45 நிமிடம் வரை செய்து வந்தால் நல்ல பயன் கிடைக்கும்.
பயன்கள் :
இந்த முத்திரையை தினமும் செய்து வந்தால் வலிப்பு நோயிலிருந்து விடுபடலாம். இந்த முத்திரை செய்வதற்கு முன்னால் நல்லஅனுபவம் வாய்ந்த ஆசிரியரிடன் பயிற்சி பெறுவது நல்லது.
முதலில் விரிப்பில் அமர்ந்து கொள்ளவும். பின்னர் படத்தில் காட்டியுள்ளபடி பெருவிரல் மற்றும் ஆட்காட்டி விரல் இடையில் உள்ள மேடான பகுதியில், மற்ற கையின் பெருவிரல் மற்றும் ஆட்காட்டி விரலைப் பயன்படுத்தி அழுத்திப் பிடிக்கவும்.
இந்த முத்திரையை எந்த இடத்தில் இருந்து வேண்டுமென்றாலும் செய்யலாம். காலை நேரத்தில் இந்த முத்திரையை செய்து வந்தால் மிகவும் நல்லது. தினமும் 15 நிமிடம் முதல் 45 நிமிடம் வரை செய்து வந்தால் நல்ல பயன் கிடைக்கும்.
பயன்கள் :
இந்த முத்திரையை தினமும் செய்து வந்தால் வலிப்பு நோயிலிருந்து விடுபடலாம். இந்த முத்திரை செய்வதற்கு முன்னால் நல்லஅனுபவம் வாய்ந்த ஆசிரியரிடன் பயிற்சி பெறுவது நல்லது.
குழந்தைகளோடு செலவழிக்கும் நேரங்கள் உறவுகளின் முதலீடு. அதில் அவர்களோடு விளையாடி அடிக்கடி தோற்றுப்போனால், வாழ்வில் வெற்றியே.
இன்று (நவம்பர் 14-ந்தேதி) குழந்தைகள் தினம்.
குழந்தைகள் ஒரு குடும்பத்தின் பொக்கிஷம். இந்த தேசத்தின் அற்புதம். உலகத்தின் உன்னதம். அவர்கள் தெய்வத்தின் மறு வடிவங்கள். இந்த மண்ணை துளிர்விக்கும் பசுமைபோல், மனதை குளிர்விக்கும் அன்பு மேகங்கள். வாழ்வின் எதார்த்தங்கள். வருங்கால மனிதனுக்கு தனது தலைமுறையை எடுத்துச் செல்லும் புதிய மரபணுக்கள். இம்மண்ணில் தவழும் நிலவுகள்.
குழந்தை ஓர் அற்புதமான கவிதை. உருவத்தில் தெரிவது அல்ல குழந்தை. அது கவிதைபோல் கருவில் உருவாக்கப்படுவது. ஆதலால், வகுப்பறையில் கற்பதற்கு முன்பே, கருவறையிலேயே அது நிறைய உருக்கொள்கிறது. கருவிற்குள் இருக்கும் குழந்தைக்கு தாய் கற்றுக் கொடுப்பதைத்தான், அது பிறந்ததும் மண்ணில் பிரதிபலிக்கிறது.
குழந்தை மொழி இனிது. மழலை இனிதினும் இனிது. கவிதையை வாசிக்கவும், நேசிக்கவும் தெரிந்த மனிதனுக்கு, சந்தங்களின்றி வருகின்ற கவிதையும் மகிழ்விப்பதைப்போல், தம்மக்கள் மழலைச் சொல் யாழினிலும், குழலினும் இனிதெனப் புரியுமென்கிறார் திருவள்ளுவர். அமிழ்தம் உணவாகக் கிடைப்பது அரிது. உணவினை அமிழ்தாக்க அன்புக் கரங்களில் குழந்தைக்கு ஊட்டி மகிழுங்கள். குழந்தையும் அதேபோல் தன் சிறுகையில் கூழினை அளாவி ஊட்டும். அது அமிழ்தினும் இனிதென்பது சுவைத்தவர் பெருமிதம். இது வள்ளுவரின் வாழ்வியல் அனுபவம்.
ஒரு குழந்தையின் முதல் பள்ளிக்கூடமும், முழுவதுமான பள்ளிக்கூடமும் பெற்றோரே. “மூளை வளர்ச்சி குன்றிய உங்கள் மகனை இனிமேல் எங்கள் பள்ளிக்கு அனுப்பவேண்டாம்” என்று எழுதித் தந்த ஆசிரியரின் கடிதத்தை அம்மாவின் கையில் புரியாத வயதில் தந்தான் சிறுவன். அதைப் படித்துவிட்டு, அழுகையை மனதோடு அடக்கிக்கொண்டு, சத்தமாய் மகனிடம் “உங்கள் மகனின் அறிவுத் திறமைக்கேற்ப, அவனுக்கு கற்பிக்கும் திறமையான ஆசிரியர்கள் எங்களிடமில்லை” என்று வாசித்தார் அந்த தெய்வீகத் தாய். அத்தாய் வீட்டினை பள்ளிக்கூடமாக்கினார். மகன் பின்னாளில் அதை ஆய்வகமாக்கினார். மூளை வளர்ச்சியில்லாத தாமஸ் ஆல்வா எடிசன் என்னும் அந்த குழந்தை, இன்று உலகத்தின் மூலைமுடுக்கெல்லாம் தனது பெயரை உச்சரிக்கும் பெருமை பெற்றது அவர் அன்னையாலே.
ஆபிரகாம் லிங்கன் தனது குழந்தையை பள்ளிக்கு அனுப்பும்போது அவனுக்கு கற்றுக் கொடுக்கவேண்டியவற்றை ஆசிரியர்களுக்கு கடிதம் எழுதினார். ஒவ்வொரு ஆசிரியரும், அதனை வகுப்பறை செல்வதற்கு முன் படித்துவிட்டு குழந்தைகளுக்கு பாடம் நடத்தினால், மொழியின் இலக்கணங்களை அறிவதற்கு முன்பு, வாழும் இலக்கணங்களை ஒவ்வொரு குழந்தையும் அறியும். ஓர் அற்புதமான மனித சமுதாயம் இம் மண்ணில் பரிசாய் அமையும். பெற்றோர்கள்தான் ஒவ்வொரு குழந்தையின் முன்மாதிரிகள். ஒவ்வொரு குழந்தையும் இம்மண்ணில் பிறக்கின்றபோது ஓர் ஆலமரத்தின் விதையைப்போல், அசாத்தியமான சக்தியோடு பிறக்கிறது. அதனைச் சரியான முறையில் வளர்த்தெடுத்தால் அக்குழந்தைகள் அற்புதங்களை நிகழ்த்தும்.

குழந்தைகள் மாயக் கண்ணாடிகள். ஒன்றை பலவாய் பிரதிபலிப்பவர்கள். அவர்களிடம் புன்னகைத்தால், நிறைய சிரிப்பர். திட்ட ஆரம்பித்தாலோ, வசைபாடுவர். அன்பாய்க் கொஞ்சினால் பாசமழை பொழிவர். பாராட்டினால் வாழ்த்துப் பூமாலை சூடுவர். பகைத்தால் போர் புரிவர். சிறு சேட்டைகளைச் சகித்தால், பொறுமையின் இலக்கணமாவர். கிண்டலடித்தால், வெட்கித் தலைநிமிரார். ஊக்கப்படுத்தினால், நம்பிக்கையின் தும்பிக்கையாயிருப்பர். அவமானப்படுத்தினால், குற்றவாளிபோல் கூனிக் குறுகிடுவர். அங்கீகரித்தால், உலகம் விரும்பும் மனிதராவர்.
நேர்மைப்படுத்தினால் நீதிமானாய் ஜொலிப்பர். மொத்தத்தில் நாம் விதைப்பது எவ்விதையாயிருப்பினும், வளர்ந்ததும் மரங்கள் ஒரு விதையை மட்டும் தருவதில்லை. அதுபோல் ஓராயிரமாய் மகிழ்ந்து தருவர் குழந்தைகள். அதிக நேரம் தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகளாலும், பெற்றோர்களாலும், குழந்தைகளின் பேச்சுத்திறன் பாதிக்கப்படுகிறது. அவர்களின் உடல் பருமனாகிறது. சிறுவயதிலேயே நீரிழிவு நோய்க்கு ஆளாகின்றனர் என்பது ஆராய்ச்சியின் எச்சரிக்கை. மகாகவி பாரதி போல் “ஓடி விளையாடு பாப்பா!” என்று ஓடச் சொல்லிக் கொடுக்கும் தந்தை இந்த தேசத்தின் ஆரோக்கியத் தூண்.
மனதிற்கு ஒரு கலையையும், உடலுக்கு ஒரு விளையாட்டையும் தன்னுள் உருவாக்கிக் கொள்ளும் குழந்தை நம் தேசத்தின் உயிர்ப்பு. அதை ஒவ்வொரு குழந்தையிலும் விதைப்போம்.
குழந்தைகள் பெற்றோர்களின் பிம்பங்கள். ஒரு குழந்தையின் தாத்தா இறந்ததும் அவரது அறை சுத்தம் செய்யப்பட்டது. அதிலிருந்த தேவையற்றவைகள் தூக்கியெறியப்படுகின்றன. தாத்தா சாப்பிட்ட நசுங்கிய தட்டை மட்டும் குழந்தை வீட்டிற்குள் கொண்டு வந்தது. “இதை ஏன் எடுத்து வந்தாய்?” என்று தந்தை கேட்டார். அப்பா! நீங்க வயதானதும் உங்களுக்கு சாப்பாடு போடுவதற்குத்தான்! என்றது குழந்தை. வளர்த்த தந்தையை கொச்சைப்படுத்தியவருக்கு, தந்தையாகிய குழந்தை சொல்லிக்கொடுத்த பாடம் இது.
குழந்தைகள் தங்களது பெற்றோர்களிடம் அதிகமாக விளையாட விரும்பும். அதனைத் தொந்தரவு என நினைத்து அவர்களை அமைதிப்படுத்த அவர்கள் விரும்பும் தொலைக்காட்சி நிகழ்ச்சியையோ அல்லது ஒரு செல்போனையோ கையில் கொடுக்கும்போது குழந்தைகள் அமைதியாகிவிடும். அதுபோல், சமூக வலைதளங்களில் சிக்கிப்போகும் குழந்தை, விட்டில் பூச்சிகளாய் விரைந்து மடியும். குழந்தைகளை நெறிப்படுத்துவதும், வழிப்படுத்துவதும் பெற்றோரின் முக்கிய கடமையாகும். இல்லையெனில், அவர்களுக்கு தருகின்ற வாய்ப்புகள் துடுப்பில்லாத கலன்போல கடலில் மூழ்கிவிடும்.
குழந்தைகளோடு செலவழிக்கும் நேரங்கள் உறவுகளின் முதலீடு. அதில் அவர்களோடு விளையாடி அடிக்கடி தோற்றுப்போனால், வாழ்வில் வெற்றியே.
ஆர்.திருநாவுக்கரசு, ஐ.பி.எஸ்., துணைஆணையர், நுண்ணறிவுப்பிரிவு
குழந்தைகள் ஒரு குடும்பத்தின் பொக்கிஷம். இந்த தேசத்தின் அற்புதம். உலகத்தின் உன்னதம். அவர்கள் தெய்வத்தின் மறு வடிவங்கள். இந்த மண்ணை துளிர்விக்கும் பசுமைபோல், மனதை குளிர்விக்கும் அன்பு மேகங்கள். வாழ்வின் எதார்த்தங்கள். வருங்கால மனிதனுக்கு தனது தலைமுறையை எடுத்துச் செல்லும் புதிய மரபணுக்கள். இம்மண்ணில் தவழும் நிலவுகள்.
குழந்தை ஓர் அற்புதமான கவிதை. உருவத்தில் தெரிவது அல்ல குழந்தை. அது கவிதைபோல் கருவில் உருவாக்கப்படுவது. ஆதலால், வகுப்பறையில் கற்பதற்கு முன்பே, கருவறையிலேயே அது நிறைய உருக்கொள்கிறது. கருவிற்குள் இருக்கும் குழந்தைக்கு தாய் கற்றுக் கொடுப்பதைத்தான், அது பிறந்ததும் மண்ணில் பிரதிபலிக்கிறது.
குழந்தை மொழி இனிது. மழலை இனிதினும் இனிது. கவிதையை வாசிக்கவும், நேசிக்கவும் தெரிந்த மனிதனுக்கு, சந்தங்களின்றி வருகின்ற கவிதையும் மகிழ்விப்பதைப்போல், தம்மக்கள் மழலைச் சொல் யாழினிலும், குழலினும் இனிதெனப் புரியுமென்கிறார் திருவள்ளுவர். அமிழ்தம் உணவாகக் கிடைப்பது அரிது. உணவினை அமிழ்தாக்க அன்புக் கரங்களில் குழந்தைக்கு ஊட்டி மகிழுங்கள். குழந்தையும் அதேபோல் தன் சிறுகையில் கூழினை அளாவி ஊட்டும். அது அமிழ்தினும் இனிதென்பது சுவைத்தவர் பெருமிதம். இது வள்ளுவரின் வாழ்வியல் அனுபவம்.
ஒரு குழந்தையின் முதல் பள்ளிக்கூடமும், முழுவதுமான பள்ளிக்கூடமும் பெற்றோரே. “மூளை வளர்ச்சி குன்றிய உங்கள் மகனை இனிமேல் எங்கள் பள்ளிக்கு அனுப்பவேண்டாம்” என்று எழுதித் தந்த ஆசிரியரின் கடிதத்தை அம்மாவின் கையில் புரியாத வயதில் தந்தான் சிறுவன். அதைப் படித்துவிட்டு, அழுகையை மனதோடு அடக்கிக்கொண்டு, சத்தமாய் மகனிடம் “உங்கள் மகனின் அறிவுத் திறமைக்கேற்ப, அவனுக்கு கற்பிக்கும் திறமையான ஆசிரியர்கள் எங்களிடமில்லை” என்று வாசித்தார் அந்த தெய்வீகத் தாய். அத்தாய் வீட்டினை பள்ளிக்கூடமாக்கினார். மகன் பின்னாளில் அதை ஆய்வகமாக்கினார். மூளை வளர்ச்சியில்லாத தாமஸ் ஆல்வா எடிசன் என்னும் அந்த குழந்தை, இன்று உலகத்தின் மூலைமுடுக்கெல்லாம் தனது பெயரை உச்சரிக்கும் பெருமை பெற்றது அவர் அன்னையாலே.
ஆபிரகாம் லிங்கன் தனது குழந்தையை பள்ளிக்கு அனுப்பும்போது அவனுக்கு கற்றுக் கொடுக்கவேண்டியவற்றை ஆசிரியர்களுக்கு கடிதம் எழுதினார். ஒவ்வொரு ஆசிரியரும், அதனை வகுப்பறை செல்வதற்கு முன் படித்துவிட்டு குழந்தைகளுக்கு பாடம் நடத்தினால், மொழியின் இலக்கணங்களை அறிவதற்கு முன்பு, வாழும் இலக்கணங்களை ஒவ்வொரு குழந்தையும் அறியும். ஓர் அற்புதமான மனித சமுதாயம் இம் மண்ணில் பரிசாய் அமையும். பெற்றோர்கள்தான் ஒவ்வொரு குழந்தையின் முன்மாதிரிகள். ஒவ்வொரு குழந்தையும் இம்மண்ணில் பிறக்கின்றபோது ஓர் ஆலமரத்தின் விதையைப்போல், அசாத்தியமான சக்தியோடு பிறக்கிறது. அதனைச் சரியான முறையில் வளர்த்தெடுத்தால் அக்குழந்தைகள் அற்புதங்களை நிகழ்த்தும்.

குழந்தைகள் மாயக் கண்ணாடிகள். ஒன்றை பலவாய் பிரதிபலிப்பவர்கள். அவர்களிடம் புன்னகைத்தால், நிறைய சிரிப்பர். திட்ட ஆரம்பித்தாலோ, வசைபாடுவர். அன்பாய்க் கொஞ்சினால் பாசமழை பொழிவர். பாராட்டினால் வாழ்த்துப் பூமாலை சூடுவர். பகைத்தால் போர் புரிவர். சிறு சேட்டைகளைச் சகித்தால், பொறுமையின் இலக்கணமாவர். கிண்டலடித்தால், வெட்கித் தலைநிமிரார். ஊக்கப்படுத்தினால், நம்பிக்கையின் தும்பிக்கையாயிருப்பர். அவமானப்படுத்தினால், குற்றவாளிபோல் கூனிக் குறுகிடுவர். அங்கீகரித்தால், உலகம் விரும்பும் மனிதராவர்.
நேர்மைப்படுத்தினால் நீதிமானாய் ஜொலிப்பர். மொத்தத்தில் நாம் விதைப்பது எவ்விதையாயிருப்பினும், வளர்ந்ததும் மரங்கள் ஒரு விதையை மட்டும் தருவதில்லை. அதுபோல் ஓராயிரமாய் மகிழ்ந்து தருவர் குழந்தைகள். அதிக நேரம் தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகளாலும், பெற்றோர்களாலும், குழந்தைகளின் பேச்சுத்திறன் பாதிக்கப்படுகிறது. அவர்களின் உடல் பருமனாகிறது. சிறுவயதிலேயே நீரிழிவு நோய்க்கு ஆளாகின்றனர் என்பது ஆராய்ச்சியின் எச்சரிக்கை. மகாகவி பாரதி போல் “ஓடி விளையாடு பாப்பா!” என்று ஓடச் சொல்லிக் கொடுக்கும் தந்தை இந்த தேசத்தின் ஆரோக்கியத் தூண்.
மனதிற்கு ஒரு கலையையும், உடலுக்கு ஒரு விளையாட்டையும் தன்னுள் உருவாக்கிக் கொள்ளும் குழந்தை நம் தேசத்தின் உயிர்ப்பு. அதை ஒவ்வொரு குழந்தையிலும் விதைப்போம்.
குழந்தைகள் பெற்றோர்களின் பிம்பங்கள். ஒரு குழந்தையின் தாத்தா இறந்ததும் அவரது அறை சுத்தம் செய்யப்பட்டது. அதிலிருந்த தேவையற்றவைகள் தூக்கியெறியப்படுகின்றன. தாத்தா சாப்பிட்ட நசுங்கிய தட்டை மட்டும் குழந்தை வீட்டிற்குள் கொண்டு வந்தது. “இதை ஏன் எடுத்து வந்தாய்?” என்று தந்தை கேட்டார். அப்பா! நீங்க வயதானதும் உங்களுக்கு சாப்பாடு போடுவதற்குத்தான்! என்றது குழந்தை. வளர்த்த தந்தையை கொச்சைப்படுத்தியவருக்கு, தந்தையாகிய குழந்தை சொல்லிக்கொடுத்த பாடம் இது.
குழந்தைகள் தங்களது பெற்றோர்களிடம் அதிகமாக விளையாட விரும்பும். அதனைத் தொந்தரவு என நினைத்து அவர்களை அமைதிப்படுத்த அவர்கள் விரும்பும் தொலைக்காட்சி நிகழ்ச்சியையோ அல்லது ஒரு செல்போனையோ கையில் கொடுக்கும்போது குழந்தைகள் அமைதியாகிவிடும். அதுபோல், சமூக வலைதளங்களில் சிக்கிப்போகும் குழந்தை, விட்டில் பூச்சிகளாய் விரைந்து மடியும். குழந்தைகளை நெறிப்படுத்துவதும், வழிப்படுத்துவதும் பெற்றோரின் முக்கிய கடமையாகும். இல்லையெனில், அவர்களுக்கு தருகின்ற வாய்ப்புகள் துடுப்பில்லாத கலன்போல கடலில் மூழ்கிவிடும்.
குழந்தைகளோடு செலவழிக்கும் நேரங்கள் உறவுகளின் முதலீடு. அதில் அவர்களோடு விளையாடி அடிக்கடி தோற்றுப்போனால், வாழ்வில் வெற்றியே.
ஆர்.திருநாவுக்கரசு, ஐ.பி.எஸ்., துணைஆணையர், நுண்ணறிவுப்பிரிவு






