search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சூப்பரான பஞ்சாபி சிக்கன் கறி
    X

    சூப்பரான பஞ்சாபி சிக்கன் கறி

    சப்பாத்தி, நாண், சாதம், இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த பஞ்சாபி சிக்கன் கறி. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    எலும்புடன் சிக்கன் - கால் கிலோ
    வெங்காயம் - 2
    தக்காளி - 2
    மல்லி தூள் - ஒரு தேக்கரண்டி
    ஏலக்காய் - 2
    மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
    கரம் மசாலா - அரை தேக்கரண்டி
    இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
    தயிர் - கால் கப்
    மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு
    பட்டை - ஒரு சிறுத் துண்டு
    லவங்கம் - 3
    பிரியாணி இலை - ஒரு சிறுத் துண்டு
    கொத்தமல்லி இலை
    எண்ணெய் - 3 மேசைக்கரண்டி



    செய்முறை :

    சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தக்காளியை அரைத்து கொள்ளவும்.

    கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி பூண்டு சேர்த்து சிவக்க வதக்க வேண்டும்.

    இந்த அதை நன்றாக ஆற வைத்து மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

    பின் மீண்டும் அதே பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை போட்டு தாளித்த பின்னர் அதில் அரைத்த விழுது சேர்த்து வதக்கவேண்டும்.

    அடுத்து அதில் தூள் வகை எல்லாம் சேர்த்து பிரட்டவேண்டும்.

    பின் விழுதாக அரைத்த தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி பச்சை வாசம் போய் எண்ணெய் பிரியும் போது சிக்கன் துண்டுகளை சேர்த்து மூடி வேக விடவும்..

    சிக்கன் வெந்து மீண்டும் கலவை திரண்டு வரும் போது தயிர் சேர்த்து கலந்து நன்றாக கலவை கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் போது பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான பஞ்சாபி சிக்கன் கறி ரெடி. 

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×