என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
உடல் நலத்தினை வெகுவாய் பாதிக்கும் கவலை, மனஉளைச்சல் போன்றவற்றிலிருந்து எப்படி வெளியில் வருவது என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
அடிக்கடி மருத்துவத்தில் கூறப்படுவது கவலை, மனஉளைச்சல் போன்றவை உடல் நலத்தினை வெகுவாய் பாதிக்கும் என்பதுதான். அநேகர் கூறும் சில வார்த்தைகள் என்ன தெரியுமா? குறைந்தது 10 வருடம் முன்னாடி இதெல்லாம் நான் செய்திருந்தால் எனக்கு இன்று மனநலம், உடல் நலம் இரண்டும் நன்றாக இருந்திருக்கும் என்பதாகும். நாமும் அவ்வாறு சொல்லாதிருக்க கீழ்கண்ட வழி முறைகளை இன்றிலிருந்தே கடைபிடிப்போம்.
* வாழ்வின் இளமை காலத்தில் ‘என்னால் இவ்வளவு உழைக்க முடியாது. போராட முடியாது’ என்று சொல்லி மெத்தனமாக இருந்து விட்டால் அதுவே பிற்காலத்தில் மிகுந்த மனஉளைச்சலை ஒருவருக்குத் தந்துவிடும். எனவே தன்னால் முடிந்தவரை ‘சவாலை ஏற்று செயலாற்றுவது’ நிறைந்த மனநிறைவினை ஒருவருக்கு அளிக்கும்.
* சிலருக்கு மற்றவர்களைப் பற்றிய குறை, குற்றங்களை கூறிக் கொண்டே இருக்க வேண்டும். இது அவர்களின் குணம். ஆனால் இந்த குணம் பிற்காலத்தில் அவர்களை மனஉளைச்சல் உடையவராக மாற்றி விடும். எனவே இந்த தரக்குறைவான குணத்தினை இன்றே மாற்றிக் கொள்ள வேண்டும்.
* தனக்கு மட்டுமே வேலை அதிகம் என்று சொல்லிக் கொண்டு சிலர் வீட்டில் உள்ளவர்களுடன் நேரம் செலவழிக்க மாட்டார்கள். மனைவி, குழந்தைகள் எல்லாம் இவர் வீட்டில் இவருக்கு சம்பந்தம் இல்லாதவர்களாக இருப்பார்கள். வீட்டிற்கு வரும் விருந்தினர்களிடம் ஒரு வார்த்தை கூட சிரித்து பேச மாட்டார்கள். இத்தகையோர் விரைவிலேயே மனஉளைச்சலுக்கு ஆளாவதால் பல நோய் தாக்குதல்கள் இவர்களுக்கு ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. பூமி நம் தலைமீது சுற்றுவதில்லை. சூரியனும், சந்திரனும் நம்மை கேட்டு உதிப்பதில்லை. அப்படியிருக்க ஏன் நாமே தான் எல்லாம் செய்கின்றோம் என்ற நினைப்பு இருக்க வேண்டும். குடும்பம், ஓய்வு இவற்றுக்கு கண்டிப்பாய் சிறிது நேரம் ஒதுக்குங்கள். இது நம் ஆரோக்கியத்தினைக் கூட்டும்.
* உடற்பயிற்சிக்கு நேரமே இல்லை என்று கூறுபவர்களை அவர்களது உடலே நோயை கொடுத்து தண்டித்து விடுகின்றது. 30 நிமிட துரித நடைபயிற்சி அநேக நன்மைகளை அள்ளித் தரும்.
* நன்றி சொல்ல பழகுங்கள். காலை வெயிலுக்கு, மலரும் பூவுக்கு, மற்றவர்களின் சிறிய உதவிக்கும் நன்றி சொல்ல பழகுங்கள்.
* எதிலும் ‘பயம்’ என முடங்காதீர்கள். தவறுகளுக்கு மட்டுமே அஞ்ச வேண்டும். முயற்சிகளுக்கு அஞ்சுவது ஒருவரை வெகுவாய் பலவீனப்படுத்தி விடும்.

* மிகவும் சோர்ந்த பிறகு ஓய்வு எடுப்பது தவறு. குறிப்பிட்ட நேரம் வேலை செய்தபின் நாமே சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* தன்னைப் பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டிருப்பவர்கள் எப்பொழுதும் படபடப்புடனேயே இருப்பார்கள். ஆகவே பிறரைப் பற்றியும் சிந்தியுங்கள். இதனால் உங்கள் சிந்தனை, பேச்சு இரண்டும் தெளிவாகும்.
* சிறு நன்மைகள், நற்செயல்களை கண்டு மனதில் மகிழ்ச்சி அடையுங்கள். புன் முறுவல் செய்யுங்கள். சிரியுங்கள். இது இறைவன் தந்த உடல் நல, மனநல மருந்து.
* உங்களை மிகவும் பலவீனமானவராகவும், பரிதாபத்திற்குரியவராகவும் நினைக்காதீர்கள். சுய பரிதாபம் வேண்டாம். இது ஒருவரை நிரந்தர நோயாளி ஆக்கி விடும்.
மேற் கூறப்பட்டவைகள் பொதுவில் கூறப்படும் அறிவுரைகள் அல்ல. உடல் நலனுக்காக செய்யப்பட்ட சில ஆய்வுகளின் முடிவுகள் ஆகும். இனியாவது இவைகளை கடை பிடிப்போமாக.
* வாழ்வின் இளமை காலத்தில் ‘என்னால் இவ்வளவு உழைக்க முடியாது. போராட முடியாது’ என்று சொல்லி மெத்தனமாக இருந்து விட்டால் அதுவே பிற்காலத்தில் மிகுந்த மனஉளைச்சலை ஒருவருக்குத் தந்துவிடும். எனவே தன்னால் முடிந்தவரை ‘சவாலை ஏற்று செயலாற்றுவது’ நிறைந்த மனநிறைவினை ஒருவருக்கு அளிக்கும்.
* சிலருக்கு மற்றவர்களைப் பற்றிய குறை, குற்றங்களை கூறிக் கொண்டே இருக்க வேண்டும். இது அவர்களின் குணம். ஆனால் இந்த குணம் பிற்காலத்தில் அவர்களை மனஉளைச்சல் உடையவராக மாற்றி விடும். எனவே இந்த தரக்குறைவான குணத்தினை இன்றே மாற்றிக் கொள்ள வேண்டும்.
* தனக்கு மட்டுமே வேலை அதிகம் என்று சொல்லிக் கொண்டு சிலர் வீட்டில் உள்ளவர்களுடன் நேரம் செலவழிக்க மாட்டார்கள். மனைவி, குழந்தைகள் எல்லாம் இவர் வீட்டில் இவருக்கு சம்பந்தம் இல்லாதவர்களாக இருப்பார்கள். வீட்டிற்கு வரும் விருந்தினர்களிடம் ஒரு வார்த்தை கூட சிரித்து பேச மாட்டார்கள். இத்தகையோர் விரைவிலேயே மனஉளைச்சலுக்கு ஆளாவதால் பல நோய் தாக்குதல்கள் இவர்களுக்கு ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. பூமி நம் தலைமீது சுற்றுவதில்லை. சூரியனும், சந்திரனும் நம்மை கேட்டு உதிப்பதில்லை. அப்படியிருக்க ஏன் நாமே தான் எல்லாம் செய்கின்றோம் என்ற நினைப்பு இருக்க வேண்டும். குடும்பம், ஓய்வு இவற்றுக்கு கண்டிப்பாய் சிறிது நேரம் ஒதுக்குங்கள். இது நம் ஆரோக்கியத்தினைக் கூட்டும்.
* உடற்பயிற்சிக்கு நேரமே இல்லை என்று கூறுபவர்களை அவர்களது உடலே நோயை கொடுத்து தண்டித்து விடுகின்றது. 30 நிமிட துரித நடைபயிற்சி அநேக நன்மைகளை அள்ளித் தரும்.
* நன்றி சொல்ல பழகுங்கள். காலை வெயிலுக்கு, மலரும் பூவுக்கு, மற்றவர்களின் சிறிய உதவிக்கும் நன்றி சொல்ல பழகுங்கள்.
* எதிலும் ‘பயம்’ என முடங்காதீர்கள். தவறுகளுக்கு மட்டுமே அஞ்ச வேண்டும். முயற்சிகளுக்கு அஞ்சுவது ஒருவரை வெகுவாய் பலவீனப்படுத்தி விடும்.
* பிறருக்கு உதவாவிட்டாலும் பரவாயில்லை. பிறரை வேதனைப்படுத்தாது இருங்கள். காரணம் கோபப்படுபவர்களே அதிக அசிடிடி, உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு ஆளாகின்றனர்.

* மிகவும் சோர்ந்த பிறகு ஓய்வு எடுப்பது தவறு. குறிப்பிட்ட நேரம் வேலை செய்தபின் நாமே சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* தன்னைப் பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டிருப்பவர்கள் எப்பொழுதும் படபடப்புடனேயே இருப்பார்கள். ஆகவே பிறரைப் பற்றியும் சிந்தியுங்கள். இதனால் உங்கள் சிந்தனை, பேச்சு இரண்டும் தெளிவாகும்.
* சிறு நன்மைகள், நற்செயல்களை கண்டு மனதில் மகிழ்ச்சி அடையுங்கள். புன் முறுவல் செய்யுங்கள். சிரியுங்கள். இது இறைவன் தந்த உடல் நல, மனநல மருந்து.
* உங்களை மிகவும் பலவீனமானவராகவும், பரிதாபத்திற்குரியவராகவும் நினைக்காதீர்கள். சுய பரிதாபம் வேண்டாம். இது ஒருவரை நிரந்தர நோயாளி ஆக்கி விடும்.
மேற் கூறப்பட்டவைகள் பொதுவில் கூறப்படும் அறிவுரைகள் அல்ல. உடல் நலனுக்காக செய்யப்பட்ட சில ஆய்வுகளின் முடிவுகள் ஆகும். இனியாவது இவைகளை கடை பிடிப்போமாக.
தோசை, இட்லி, நாண், சப்பாத்தி, புலாவ், சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் பன்னீர் குருமா. இன்று இந்த குருமாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பன்னீர் - 200 கிராம்
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - கால் தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
கஸ்தூரி மேத்தி - 1 தேக்கரண்டி
பிரிஞ்சி இலை - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்துமல்லி இலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவைக்கேற்ப
அரைக்க :
தேங்காய்த் துருவல் - கால் கப்
வெங்காயம் - 1
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 3
கொத்துமல்லி இலை - சிறிதளவு
இஞ்சி - சிறிய துண்டு
சோம்பு - 1 தேக்கரண்டி
கிராம்பு - 4
ஏலக்காய் - 3
அன்னாசிப்பூ - 1
பட்டை - சிறிய துண்டு

செய்முறை :
கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பன்னீரை சதுரமாக வெட்டிக்கொள்ளவும்.
அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளவும்.
ஒரு கனமான வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் பிரிஞ்சி இலை மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வாசனை வந்ததும் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து நன்கு கைவிடாமல் வதக்கவும். தேங்காய் விழுது லேசாக வதங்கியதும் சிறிது நேரம் மூடிப் போட்டு வதக்கவும்.
வாணலியின் ஓரங்களில் எண்ணெய் பிரியும் போது 1 கிண்ணம் தண்ணீர் விட்டு நன்கு கலந்து விடவும்.
பின் தேவையான அளவு உப்பு, மிளகாய்த் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
குருமா நன்கு கொதித்ததும் நறுக்கி வைத்துள்ள பன்னீர் துண்டுகளை சேர்த்து கலந்து கொள்ளவும்.
பின் கரம் மசாலா தூள் சேர்த்து மெதுவாக கிளறி விடவும்.
கடைசியாக சிறிது கஸ்தூரி மேத்தி (காய்ந்த வெங்காயத்தாள்) சேர்த்து லேசாக கொதித்ததும் இறக்கவும்.
கொத்துமல்லி இலை தூவி பரிமாறவும்
சூப்பரான பன்னீர் குருமா ரெடி.
பன்னீர் - 200 கிராம்
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - கால் தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
கஸ்தூரி மேத்தி - 1 தேக்கரண்டி
பிரிஞ்சி இலை - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்துமல்லி இலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவைக்கேற்ப
அரைக்க :
தேங்காய்த் துருவல் - கால் கப்
வெங்காயம் - 1
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 3
கொத்துமல்லி இலை - சிறிதளவு
இஞ்சி - சிறிய துண்டு
சோம்பு - 1 தேக்கரண்டி
கிராம்பு - 4
ஏலக்காய் - 3
அன்னாசிப்பூ - 1
பட்டை - சிறிய துண்டு
முந்திரி பருப்பு - 10

செய்முறை :
கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பன்னீரை சதுரமாக வெட்டிக்கொள்ளவும்.
அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளவும்.
ஒரு கனமான வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் பிரிஞ்சி இலை மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வாசனை வந்ததும் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து நன்கு கைவிடாமல் வதக்கவும். தேங்காய் விழுது லேசாக வதங்கியதும் சிறிது நேரம் மூடிப் போட்டு வதக்கவும்.
வாணலியின் ஓரங்களில் எண்ணெய் பிரியும் போது 1 கிண்ணம் தண்ணீர் விட்டு நன்கு கலந்து விடவும்.
பின் தேவையான அளவு உப்பு, மிளகாய்த் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
குருமா நன்கு கொதித்ததும் நறுக்கி வைத்துள்ள பன்னீர் துண்டுகளை சேர்த்து கலந்து கொள்ளவும்.
பின் கரம் மசாலா தூள் சேர்த்து மெதுவாக கிளறி விடவும்.
கடைசியாக சிறிது கஸ்தூரி மேத்தி (காய்ந்த வெங்காயத்தாள்) சேர்த்து லேசாக கொதித்ததும் இறக்கவும்.
கொத்துமல்லி இலை தூவி பரிமாறவும்
சூப்பரான பன்னீர் குருமா ரெடி.
சிலருக்கு உதடுகள் கருமையாக இருக்கும், சிலருக்கு உதடுகள் வறண்டு இருக்கும். உங்கள் உதட்டை இயற்கை முறையில் அழகாக மாற்றுவது எப்படி என்று பார்க்கலாம்.
முகம் என்ன தான் அழகாக இருந்தாலும், கூட முகத்தின் அழகை எடுத்து காட்ட உதவுவது அழகிய உதடுகள் தான். உதடுகளின் வண்ணமும், உதடுகளில் பளபளப்பும் இருந்தால், உங்களது முகத்தின் தோற்றமே மேம்படும். சிலருக்கு உதடுகள் கருமையாக இருக்கும், சிலருக்கு உதடுகள் வறண்டு இருக்கும். இது ஒரு சில ஊட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் சில பழக்கங்களால் ஏற்படுகிறது. இந்த பகுதியில் உங்களது வறண்ட உதடுகளை மேம்படுத்துவது எப்படி என்பது பற்றி காணலாம்.
* வறண்ட உதடுகளைக் கொண்டவர்கள் நாள்தோறும் உதடுகளின்மேல் வெண்ணெய் தடவி வந்தால் வறண்ட உதடுகள் மாறி வழவழப்பான அழகான உதடாகும்.
* கொத்துமல்லி இலைகளின் சாற்றை எடுத்து தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும்முன் உதடுகளில் தடவி வந்தால் உதடு சிவப்பாகும்.
* தேங்காய் எண்ணெயில் அரை டீஸ்பூன் சாதிக்காய் பொடியைச் சேர்த்து குழைத்து உதடுகளின் மேல் தடவி வந்தால் உதடுகள் சிவந்து, பளபளப்பாக காட்சியளிக்கும்.
* பீட்ரூட் பழத்தின் சாற்றை உதடுகளின் மீது பூசி வந்தால் உதடுகள் அழகாகும். மாதுளம் பழத்தின் சாறும் உதடுகளை அழகாக்கும்.
* பெட்ரோலியம் ஜெல்லி உதடுகளை மென்மையாக்க உதவும் மிக சிறந்த பொருளாகும். தினசரி பெட்ரோலியம் ஜெல்லியை உதடுகளில் தடவி வந்தால் உதடுகள் மென்மையாக மாறும்.
* வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு உதடுகளை வெதுவெதுப்பான மற்றும் குளிர்ந்த தண்ணீரால் ஒத்தடம் கொடுத்து வந்தால் அவை ரோஜா போல மென்மையாக மாறும்.
* உதடுகளைக் கடிக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு. அது தவிர்க்கப்படவேண்டிய பழக்கம். அதனால் உதடுகள் வறண்டு போகவும், நிறம் மாறி அசிங்கமாகக் காட்சியளிக்கவும் கூடும். எனவே இது தவிர்க்கப்பட வேண்டும்.
* வறண்ட உதடுகளைக் கொண்டவர்கள் நாள்தோறும் உதடுகளின்மேல் வெண்ணெய் தடவி வந்தால் வறண்ட உதடுகள் மாறி வழவழப்பான அழகான உதடாகும்.
* கொத்துமல்லி இலைகளின் சாற்றை எடுத்து தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும்முன் உதடுகளில் தடவி வந்தால் உதடு சிவப்பாகும்.
* தேங்காய் எண்ணெயில் அரை டீஸ்பூன் சாதிக்காய் பொடியைச் சேர்த்து குழைத்து உதடுகளின் மேல் தடவி வந்தால் உதடுகள் சிவந்து, பளபளப்பாக காட்சியளிக்கும்.
* பீட்ரூட் பழத்தின் சாற்றை உதடுகளின் மீது பூசி வந்தால் உதடுகள் அழகாகும். மாதுளம் பழத்தின் சாறும் உதடுகளை அழகாக்கும்.
* பெட்ரோலியம் ஜெல்லி உதடுகளை மென்மையாக்க உதவும் மிக சிறந்த பொருளாகும். தினசரி பெட்ரோலியம் ஜெல்லியை உதடுகளில் தடவி வந்தால் உதடுகள் மென்மையாக மாறும்.
* வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு உதடுகளை வெதுவெதுப்பான மற்றும் குளிர்ந்த தண்ணீரால் ஒத்தடம் கொடுத்து வந்தால் அவை ரோஜா போல மென்மையாக மாறும்.
* உதடுகளைக் கடிக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு. அது தவிர்க்கப்படவேண்டிய பழக்கம். அதனால் உதடுகள் வறண்டு போகவும், நிறம் மாறி அசிங்கமாகக் காட்சியளிக்கவும் கூடும். எனவே இது தவிர்க்கப்பட வேண்டும்.
மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய துணி நாப்கின்களை உபயோகிப்பதால் பல்வேறு நன்மைகள் உள்ளன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
இன்றைய காலகட்டத்தில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நாப்கின்களை பயன்படுத்துகிறார்கள். ஆனால் மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய துணி நாப்கின்களை பெண்கள் ஏனோ விரும்புவதில்லை.
ஒருமுறை மட்டுமே உபயோகப்படுத்தும் நாப்கின்கள் உங்கள் சருமத்தில் காயங்களையும் எரிச்சலையும் ஏற்படுத்தும். சிலருக்கு இதனால் இன்பெக்சன் கூட ஏற்பட்டு விடும். இந்த பகுதியில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய துணி நாப்கின்களை உபயோகிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி காணலாம்.
ஒரு முறை மட்டுமே உபயோகப்படுத்தும் நாப்கின்களில் பிளாஸ்டிக் மெட்டிரியல் உள்ளது.
இது உராய்வின் போது காயங்களையும், அரிப்பையும் உண்டாக்கும், மேலும் இது பெண் உறுப்பிற்கு செல்லும் காற்றை தடுத்து நிறுத்தி விடும்.
ரேயான் மெட்டிரியல் மூலம் செய்யப்பட்ட நாப்கின்கள், பெண் உறுப்பின் ஈரப்பதத்தை உறிஞ்சி விடும்.

ஒரு முறை மட்டுமே உபயோகப்படுத்தும் நாப்கின்கள் பஞ்சு, பிளாஸ்டிக் என எந்த மெட்டிரியல்களால் செய்யப்பட்டிருந்தாலும் கூட இதில் சில கெமிக்கல்கள் கலக்கப்பட்டிருக்கும்.
ஆனால் துணி நெப்கின்கள் இயற்கையான முறையில் தயாரிக்கப்படுபவையாகும்.
துணி நாப்கின்களை நீங்கள் சுகாதாரமாக பயன்படுத்தினால், பல தடவைகள் பயன்படுத்தலாம். பலமுறை உபயோகப்படுத்துவதால் இது சுத்தமாக இருக்குமா என்ற கேள்வி அனைவருக்கு இருப்பது தான்.
ஆனால் இதனை சுத்தம் செய்வது நீங்கள் நினைக்கும் அளவிற்கு கடினமானதல்ல. நீங்கள் இதனை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து, டீ ட்ரீ ஆயில் அல்லது, ஏதேனும் கிருமி நாசினியை கொண்டு சூடான நீரில் சுத்தம் செய்தாலே போதும். இதில் கசிவுகளும் இருக்காது.
இது உங்களுக்கு தேவையான வண்ணங்கள், டிசைன்கள் மற்றும் வடிவங்களில் கிடைக்கின்றன. எனவே இவற்றை கண்டு நீங்கள் முகம் சுழிக்கமாட்டீர்கள் என்பது மட்டும் உறுதி.
ஒருமுறை மட்டுமே உபயோகப்படுத்தும் நாப்கின்கள் உங்கள் சருமத்தில் காயங்களையும் எரிச்சலையும் ஏற்படுத்தும். சிலருக்கு இதனால் இன்பெக்சன் கூட ஏற்பட்டு விடும். இந்த பகுதியில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய துணி நாப்கின்களை உபயோகிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி காணலாம்.
ஒரு முறை மட்டுமே உபயோகப்படுத்தும் நாப்கின்களில் பிளாஸ்டிக் மெட்டிரியல் உள்ளது.
இது உராய்வின் போது காயங்களையும், அரிப்பையும் உண்டாக்கும், மேலும் இது பெண் உறுப்பிற்கு செல்லும் காற்றை தடுத்து நிறுத்தி விடும்.
ரேயான் மெட்டிரியல் மூலம் செய்யப்பட்ட நாப்கின்கள், பெண் உறுப்பின் ஈரப்பதத்தை உறிஞ்சி விடும்.
இதனால் தொற்றுக்களும், புண்களும் உண்டாகும். ஆனால் துணி நாப்கின்களில் இயற்கையான பஞ்சு உபயோகப்படுத்துவதால் எந்த வித பாதிப்பும் ஏற்படாது.

கோப்பு படம்
ஆனால் துணி நெப்கின்கள் இயற்கையான முறையில் தயாரிக்கப்படுபவையாகும்.
துணி நாப்கின்களை நீங்கள் சுகாதாரமாக பயன்படுத்தினால், பல தடவைகள் பயன்படுத்தலாம். பலமுறை உபயோகப்படுத்துவதால் இது சுத்தமாக இருக்குமா என்ற கேள்வி அனைவருக்கு இருப்பது தான்.
ஆனால் இதனை சுத்தம் செய்வது நீங்கள் நினைக்கும் அளவிற்கு கடினமானதல்ல. நீங்கள் இதனை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து, டீ ட்ரீ ஆயில் அல்லது, ஏதேனும் கிருமி நாசினியை கொண்டு சூடான நீரில் சுத்தம் செய்தாலே போதும். இதில் கசிவுகளும் இருக்காது.
இது உங்களுக்கு தேவையான வண்ணங்கள், டிசைன்கள் மற்றும் வடிவங்களில் கிடைக்கின்றன. எனவே இவற்றை கண்டு நீங்கள் முகம் சுழிக்கமாட்டீர்கள் என்பது மட்டும் உறுதி.
தோசை, சப்பாத்தி, நாண், சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையானது, சத்தானதும் இந்த கேரட் - பாசிப்பருப்பு கூட்டு. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கேரட் - 150 கிராம்
பாசிப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
துவரம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
அரைப்பதற்கு...
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு.
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை :
ப.மிளகாய், கேரட், பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பாசிப்பருப்பை வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்த பின்னர் அதனை குக்கரில் போட்டு, அத்துடன் துவரம் பருப்பு, 1 கப் தண்ணீர், உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து, 2 விசில் விட்டு இறக்கி, மசித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
மிக்ஸியில் தேங்காய் மற்றும் சீரகம் போட்டு, தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, பச்சை மிளகாய், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி விட வேண்டும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் தேவையான அளவு உப்பு மற்றும் கேரட்டை சேர்த்து, பச்சை வாசனை போக சிறிது நேரம் வதக்கி, பின் அதில் வேக வைத்த பருப்புக்கள் மற்றும் தண்ணீர் ஊற்றி, கேரட் நன்கு மென்மையாக வேகும் வரை வேக வைக்க வேண்டும்.
கேரட் - 150 கிராம்
பாசிப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
துவரம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
அரைப்பதற்கு...
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு.
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிதளவு
பச்சை மிளகாய் - 3

செய்முறை :
ப.மிளகாய், கேரட், பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பாசிப்பருப்பை வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்த பின்னர் அதனை குக்கரில் போட்டு, அத்துடன் துவரம் பருப்பு, 1 கப் தண்ணீர், உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து, 2 விசில் விட்டு இறக்கி, மசித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
மிக்ஸியில் தேங்காய் மற்றும் சீரகம் போட்டு, தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, பச்சை மிளகாய், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி விட வேண்டும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் தேவையான அளவு உப்பு மற்றும் கேரட்டை சேர்த்து, பச்சை வாசனை போக சிறிது நேரம் வதக்கி, பின் அதில் வேக வைத்த பருப்புக்கள் மற்றும் தண்ணீர் ஊற்றி, கேரட் நன்கு மென்மையாக வேகும் வரை வேக வைக்க வேண்டும்.
கேரட் நன்கு வெந்த பின்னர், அதில் அரைத்த தேங்காய் பேஸ்ட் சேர்த்து, நன்கு பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கினால், கேரட் - பாசிப்பருப்பு கூட்டு ரெடி!!!
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இந்த முத்திரை தலை சார்ந்த அனைத்துத் தொந்தரவுகளையும் தீர்க்கும். நீர்கோத்தலால் ஏற்படும் தலைவலி, கழுத்து வலி, கழுத்து எலும்பில் உள்ள சவ்வு தேய்வால் ஏற்படும் தோள்பட்டை, கை வலியை குணமாக்கும்.
‘சிரசாசனம்’ என்பது தலைகீழாக நின்று செய்யும் ஆசனம்.
சிரசாசனம் செய்ய முடியாதவர்களுக்கு ‘மகா சிரசு முத்திரை’ நல்ல மாற்று. சிரசாசனம் செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்குமோ, அவை அனைத்தும் இந்த முத்திரையைச் செய்வதால் கிடைக்கும். இது உச்சி முதல் கழுத்து, தோள்பட்டை வரை உள்ளஅனைத்துப் பகுதிகளுக்கும் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி, அங்குள்ள சளி, நீர் ஆகியவற்றை வெளியேற்றும்.
செய்முறை :
மோதிர விரலை மடக்கி உள்ளங்கையின் நடுவில் வைத்து அழுத்த வேண்டும். ஆள்காட்டி விரல் நடுவிரல் நுனிகளை கட்டைவிரல் நுனியோடு சேர்த்து வைக்க வேண்டும். சுண்டு விரல் நீட்டி இருக்கவும்.
விரிப்பில் அமர்ந்து தலை, முதுகுத்தண்டு நிமிர்ந்த நிலையில் தரையில் சம்மணமிட்டு செய்ய வேண்டும். நாற்காலியில் அமர்ந்து பாதங்களை தரையில் பதித்தும் செய்யலாம்.
படுக்கையில் இருக்கும் நோயாளிகள் தலையணை வைத்து சாய்ந்த நிலையில் செய்யலாம்.
உயர் ரத்த அழுத்தம் பிரச்சனை உள்ளவர்கள் இதை தவிர்க்க வேண்டும்.
பலன்கள் :
நீர்கோத்தலால் ஏற்படும் தலைவலி, தலைபாரம், சளியால் ஏற்படும் தலைவலி, நெற்றிப்பொட்டில் ஏற்படும் வலி (Frontal sinusitis), மூக்குக்கு இருபுறமும் கண்களுக்குக் கீழே உள்ள எலும்புகளில் வரும் வலியை (Maxillaray sinusitis, Ethomoidal sinusitis) சரியாக்கும்.
மூக்கடைப்பு, மூக்கில் சதை வளர்தல், மூக்கில் நீர் வடிதல், ஒரு பக்க மூக்கில் மூச்சுவிடுதல், வாசனை உணராமல் போதல் பிரச்சனை உள்ளவர்கள் மூன்று மாதங்கள் தொடர்ந்து செய்துவந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
குனிந்து நிமிர்ந்து வேலை செய்வோர், இரு சக்கர வாகனம் ஓட்டுவோர், நீண்ட நேரம் குனிந்து படிக்கும் மாணவர்கள் ஆகியோருக்கு ஏற்படும் கழுத்து வலி சரியாகும். கழுத்து இறுக்கமும் நீங்கும்.
சிலருக்குக் கழுத்து எலும்பில் உள்ள சவ்வு பாதிக்கப்பட்டிருக்கும். இதனால் தோள்பட்டை, கை வரை வலி பாயும். இவர்களுக்கான பிரச்சனையைத் தீர்க்கும் சிறந்த முத்திரை இது.
இதனால் தலை சார்ந்த அனைத்துத் தொந்தரவுகளும் நீங்கும். தலைவலி, ஸ்ட்ரெஸ் (மன அழுத்தம்) டென்சன் இவைகள் தீரும்.
சிரசாசனம் செய்ய முடியாதவர்களுக்கு ‘மகா சிரசு முத்திரை’ நல்ல மாற்று. சிரசாசனம் செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்குமோ, அவை அனைத்தும் இந்த முத்திரையைச் செய்வதால் கிடைக்கும். இது உச்சி முதல் கழுத்து, தோள்பட்டை வரை உள்ளஅனைத்துப் பகுதிகளுக்கும் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி, அங்குள்ள சளி, நீர் ஆகியவற்றை வெளியேற்றும்.
செய்முறை :
மோதிர விரலை மடக்கி உள்ளங்கையின் நடுவில் வைத்து அழுத்த வேண்டும். ஆள்காட்டி விரல் நடுவிரல் நுனிகளை கட்டைவிரல் நுனியோடு சேர்த்து வைக்க வேண்டும். சுண்டு விரல் நீட்டி இருக்கவும்.
விரிப்பில் அமர்ந்து தலை, முதுகுத்தண்டு நிமிர்ந்த நிலையில் தரையில் சம்மணமிட்டு செய்ய வேண்டும். நாற்காலியில் அமர்ந்து பாதங்களை தரையில் பதித்தும் செய்யலாம்.
படுக்கையில் இருக்கும் நோயாளிகள் தலையணை வைத்து சாய்ந்த நிலையில் செய்யலாம்.
உயர் ரத்த அழுத்தம் பிரச்சனை உள்ளவர்கள் இதை தவிர்க்க வேண்டும்.
பலன்கள் :
நீர்கோத்தலால் ஏற்படும் தலைவலி, தலைபாரம், சளியால் ஏற்படும் தலைவலி, நெற்றிப்பொட்டில் ஏற்படும் வலி (Frontal sinusitis), மூக்குக்கு இருபுறமும் கண்களுக்குக் கீழே உள்ள எலும்புகளில் வரும் வலியை (Maxillaray sinusitis, Ethomoidal sinusitis) சரியாக்கும்.
மூக்கடைப்பு, மூக்கில் சதை வளர்தல், மூக்கில் நீர் வடிதல், ஒரு பக்க மூக்கில் மூச்சுவிடுதல், வாசனை உணராமல் போதல் பிரச்சனை உள்ளவர்கள் மூன்று மாதங்கள் தொடர்ந்து செய்துவந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
குனிந்து நிமிர்ந்து வேலை செய்வோர், இரு சக்கர வாகனம் ஓட்டுவோர், நீண்ட நேரம் குனிந்து படிக்கும் மாணவர்கள் ஆகியோருக்கு ஏற்படும் கழுத்து வலி சரியாகும். கழுத்து இறுக்கமும் நீங்கும்.
சிலருக்குக் கழுத்து எலும்பில் உள்ள சவ்வு பாதிக்கப்பட்டிருக்கும். இதனால் தோள்பட்டை, கை வரை வலி பாயும். இவர்களுக்கான பிரச்சனையைத் தீர்க்கும் சிறந்த முத்திரை இது.
இதனால் தலை சார்ந்த அனைத்துத் தொந்தரவுகளும் நீங்கும். தலைவலி, ஸ்ட்ரெஸ் (மன அழுத்தம்) டென்சன் இவைகள் தீரும்.
ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்கள் அணுகுமுறையாலும், அரவணைப்பாலும் குறைபாடு உள்ள குழந்தைகளின் வாழக்கையில் ஒளி ஏற்ற வேண்டும்.
ஒரு மனிதனின் வாழ்வை அழகுறச் செய்வது குழந்தைகள்தான். வீட்டில் சுட்டித்தனத்துடன் ஓடிவரும் குழந்தைகளை பார்க்கும்போது நமது மனதில் உள்ள துன்பங்கள் அனைத்தும் சிதறி ஓடிவிடும். குழந்தைகளிடையே கவனப்பற்றாக்குறை மற்றும் மிகை இயக்க செயல்பாடு பொதுவாக காணப்பட்டு வருகிறது. இது நரம்பியலில் ஏற்படும் ஒருவித வளர்ச்சி குறைபாடு ஆகும்.
இந்த வகையுடைய ஒரு சில குழந்தைகள் வயதுக்கு மீறிய துறுதுறுப்புடனும், உத்வேகத்துடனும் இருப்பார்கள். மிகுதியான இயக்கமும், உணர்ச்சி வேகமும் இவர்களிடம் அதிகமாக காணப்படும். சில குழந்தைகள் எதிலும் ஆர்வம் இல்லாமல் மந்தமாகவே செயல்படுவார்கள். இந்த வகை குழந்தைகளை சமாளிப்பது பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மிகுந்த சவால் மிக்க ஒன்றாகும்.
நமது நாட்டில் தற்போதைய நிலவரப்படி 11.32 சதவீத தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு இந்த குறைபாடு இருப்பதாகக் கூறப்படுகிறது. அதிலும் பெண் குழந்தைகளைவிட, ஆண் குழந்தைகள் 3 மடங்கு அதிகம் இந்த குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இக்குறைபாட்டிற்கான அறிகுறிகள் ஏழு வயதிற்குள் தென்படத் தொடங்குகிறது. அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் கென்னடி, மைக்கேல் ஜார்டான், அறிவியல் அறிஞர் ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன் போன்ற பிரபலமானவர்கள் இந்த வகை குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள். குழந்தைகளுக்கு பின்வரும் அறிகுறிகள் தென்படும். இந்த வகை குழந்தைகள் படிப்பிலோ அல்லது வேறு எந்த வேலையிலோ ஈடுபடும்போது கவனத்தை தக்க வைத்துக்கொள்ள சிரமப்படுவார்கள்.
ஆசிரியர்கள், பெற்றோர்கள் நேரடியாகப் பேசும்போது காது கொடுத்து கேட்க மாட்டார்கள், படிப்பில் ஈடுபாடு இல்லாமல் இருப்பார்கள், தனது உடைமைகளை பத்திரப்படுத்தாமல் மறந்து எங்கேயாவது விட்டுவிடுவார்கள், ஒரு வேலையை செய்து கொண்டிருக்கும்போதே, மற்றொரு வேலையின் மேல் இவர்கள் எண்ணம் செல்லும், ஒரு இடத்தில் அமைதியாய் உட்காரமாட்டார்கள், திடீரென்று எழுந்து ஓடுவார்கள், மேசை, நாற்காலி மீது ஏறிக்கொண்டு இருப்பார்கள்.
இவர்களை வகுப்பறையில் ஒரு இடத்தில் உட்கார வைக்க முடியாது. அப்படி உட்கார வைக்கும்போது நெளிந்து கொண்டும், இருக்கையை விட்டு எழுந்தும், பிற ஒலிகளை எழுப்பிக் கொண்டும் இருப்பார்கள். இவர்களின் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதும் மிகக் கடினம்.
ஒரு கேள்வியைக் கேட்டு முடிப்பதற்குள் அது சரியோ, தவறோ, உடனடியாக பதிலைக் கூறிவிடுவார்கள். சுயகட்டுப்பாடு இல்லாமல் எளிதில் தூண்டப்பட்டு சிந்திக்காமல் செயல்படுவார்கள்.
மரபணுக் கூறுகள், சுற்றுச்சூழல், மூளையின் செயல்பாடுகள் போன்றவை இந்த குறைபாட்டுக்கு காரணமாக இருக்கலாம் என்று ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. இந்த குறைபாடு உடைய குழந்தைகளை நாம் கவனிக்காமல் விட்டால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். இவர்களால் படிப்பில் கவனம் செலுத்த முடியாததால் சமூகத்தில் பின்தங்க நேரிடும்.

இந்த குறைபாடு உடைய குழந்தைகளை எப்படி கையாள்வது? இதனை எப்படி சரிசெய்வது? என்பதை பார்ப்போம்.
இக்குறைபாடு உள்ள குழந்தைகளை பெற்றோர்கள் அடிக்காமல், கோபப்படாமல் நல்லப் பழக்கங்களைச் சொல்லிக் கொடுத்து அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். இனிப்பு அவர்களின் துறுதுறுத்தன்மையை அதிகரிக்கும் என்பதால் பெரும்பாலும் இனிப்பு பலகாரங்களை தவிர்க்கவேண்டும். செயற்கை வண்ணங்கள் சேர்க்கப்பட்ட உணவு வகைகள், குளிர் பானங்கள் ஆகியவற்றையும் தவிர்த்தல் வேண்டும்.
இந்த வகை குழந்தைகளை கையாள்வதற்கு ஆசிரியருக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. ஆசிரியர்கள், பாதிக்கப்பட்ட குழந்தைகளை தங்களது அருகிலேயே அமர வைத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் நற்செயல்களை பாராட்டி, பரிசு அளித்து அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். அவர்கள் தவறு செய்தாலும் கோபப்படாமல் பக்குவமாய் எடுத்து சொல்ல வேண்டும்.
ஒரு வேலையை, செயலை அவர்களிடம் ஒப்படைக்கும்போது அவை குறித்த தகவல்களை, விதிமுறைகளை தெளிவாக எடுத்து சொல்ல வேண்டும், எந்த ஒரு வேலையையும் சிறு, சிறு செயல்களாகப் பிரித்தே இந்த வகை குழந்தைகளிடம் வழங்க வேண்டும். இந்த குழந்தைகளின் கவனத்தை திசை திருப்பும் செயல்களை செய்யக்கூடாது, இக்குறைப்பாடு உள்ள குழந்தையை, நன்றாக செயல்படும் குழந்தைகளின் அருகில் அமர வைப்பதன் மூலம் அவர்களின் தாழ்வு மனப்பான்மையை குறைக்கலாம்.
இந்த வகை குழந்தைகளுக்கு சிறு, சிறு பயிற்சிகள் கொடுக்கலாம். சிறு துவாரங்கள் இருக்கின்ற மணிகளை கோர்க்கும்படி செய்தல், வரைபடங்களில் உள்ள கோடுகளின் மீது வரையும் பயிற்சி, படங்களின் எல்லைக்குள் வர்ணம் தீட்ட செய்தல், ஊஞ்சலில் மெதுவாக ஆடும்படி கூறுதல், நீச்சல் பயிற்சி, காலில் சக்கரம் கட்டிக்கொண்டு செல்லும் பயிற்சி போன்ற பயிற்சிகளை இந்த குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கலாம்.
இந்த குறைபாட்டிற்கான அறிகுறிகள் தென்படும் குழந்தைகளை உளவியல் நிபுணர் அல்லது குழந்தைகள் நல மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதனை செய்ய வேண்டும். அதன்பின்னரே அவர்கள் குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை உறுதி செய்ய வேண்டும்.
குழந்தைகள் தான் நமது உலகம். அவர்களின் எதிர்காலத்தை சிறந்த ஒளிமயமாக்க வேண்டிய பொறுப்பு நமது கையில்தான் உள்ளது. எனவே ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்கள் அணுகுமுறையாலும், அரவணைப்பாலும் இத்தகைய குறைபாடு உள்ள குழந்தைகளின் வாழக்கையில் ஒளி ஏற்ற வேண்டும். இத்தகைய குறைபாட்டைப் பற்றிய ஒரு விழிப்புணர்வு பொதுமக்களிடம் வளர வேண்டும்.
கலையரசி, சிறப்பு பயிற்சியாளர்.
இந்த வகையுடைய ஒரு சில குழந்தைகள் வயதுக்கு மீறிய துறுதுறுப்புடனும், உத்வேகத்துடனும் இருப்பார்கள். மிகுதியான இயக்கமும், உணர்ச்சி வேகமும் இவர்களிடம் அதிகமாக காணப்படும். சில குழந்தைகள் எதிலும் ஆர்வம் இல்லாமல் மந்தமாகவே செயல்படுவார்கள். இந்த வகை குழந்தைகளை சமாளிப்பது பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மிகுந்த சவால் மிக்க ஒன்றாகும்.
நமது நாட்டில் தற்போதைய நிலவரப்படி 11.32 சதவீத தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு இந்த குறைபாடு இருப்பதாகக் கூறப்படுகிறது. அதிலும் பெண் குழந்தைகளைவிட, ஆண் குழந்தைகள் 3 மடங்கு அதிகம் இந்த குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இக்குறைபாட்டிற்கான அறிகுறிகள் ஏழு வயதிற்குள் தென்படத் தொடங்குகிறது. அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் கென்னடி, மைக்கேல் ஜார்டான், அறிவியல் அறிஞர் ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன் போன்ற பிரபலமானவர்கள் இந்த வகை குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள். குழந்தைகளுக்கு பின்வரும் அறிகுறிகள் தென்படும். இந்த வகை குழந்தைகள் படிப்பிலோ அல்லது வேறு எந்த வேலையிலோ ஈடுபடும்போது கவனத்தை தக்க வைத்துக்கொள்ள சிரமப்படுவார்கள்.
ஆசிரியர்கள், பெற்றோர்கள் நேரடியாகப் பேசும்போது காது கொடுத்து கேட்க மாட்டார்கள், படிப்பில் ஈடுபாடு இல்லாமல் இருப்பார்கள், தனது உடைமைகளை பத்திரப்படுத்தாமல் மறந்து எங்கேயாவது விட்டுவிடுவார்கள், ஒரு வேலையை செய்து கொண்டிருக்கும்போதே, மற்றொரு வேலையின் மேல் இவர்கள் எண்ணம் செல்லும், ஒரு இடத்தில் அமைதியாய் உட்காரமாட்டார்கள், திடீரென்று எழுந்து ஓடுவார்கள், மேசை, நாற்காலி மீது ஏறிக்கொண்டு இருப்பார்கள்.
இவர்களை வகுப்பறையில் ஒரு இடத்தில் உட்கார வைக்க முடியாது. அப்படி உட்கார வைக்கும்போது நெளிந்து கொண்டும், இருக்கையை விட்டு எழுந்தும், பிற ஒலிகளை எழுப்பிக் கொண்டும் இருப்பார்கள். இவர்களின் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதும் மிகக் கடினம்.
ஒரு கேள்வியைக் கேட்டு முடிப்பதற்குள் அது சரியோ, தவறோ, உடனடியாக பதிலைக் கூறிவிடுவார்கள். சுயகட்டுப்பாடு இல்லாமல் எளிதில் தூண்டப்பட்டு சிந்திக்காமல் செயல்படுவார்கள்.
மரபணுக் கூறுகள், சுற்றுச்சூழல், மூளையின் செயல்பாடுகள் போன்றவை இந்த குறைபாட்டுக்கு காரணமாக இருக்கலாம் என்று ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. இந்த குறைபாடு உடைய குழந்தைகளை நாம் கவனிக்காமல் விட்டால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். இவர்களால் படிப்பில் கவனம் செலுத்த முடியாததால் சமூகத்தில் பின்தங்க நேரிடும்.

இந்த குறைபாடு உடைய குழந்தைகளை எப்படி கையாள்வது? இதனை எப்படி சரிசெய்வது? என்பதை பார்ப்போம்.
இக்குறைபாடு உள்ள குழந்தைகளை பெற்றோர்கள் அடிக்காமல், கோபப்படாமல் நல்லப் பழக்கங்களைச் சொல்லிக் கொடுத்து அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். இனிப்பு அவர்களின் துறுதுறுத்தன்மையை அதிகரிக்கும் என்பதால் பெரும்பாலும் இனிப்பு பலகாரங்களை தவிர்க்கவேண்டும். செயற்கை வண்ணங்கள் சேர்க்கப்பட்ட உணவு வகைகள், குளிர் பானங்கள் ஆகியவற்றையும் தவிர்த்தல் வேண்டும்.
இந்த வகை குழந்தைகளை கையாள்வதற்கு ஆசிரியருக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. ஆசிரியர்கள், பாதிக்கப்பட்ட குழந்தைகளை தங்களது அருகிலேயே அமர வைத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் நற்செயல்களை பாராட்டி, பரிசு அளித்து அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். அவர்கள் தவறு செய்தாலும் கோபப்படாமல் பக்குவமாய் எடுத்து சொல்ல வேண்டும்.
ஒரு வேலையை, செயலை அவர்களிடம் ஒப்படைக்கும்போது அவை குறித்த தகவல்களை, விதிமுறைகளை தெளிவாக எடுத்து சொல்ல வேண்டும், எந்த ஒரு வேலையையும் சிறு, சிறு செயல்களாகப் பிரித்தே இந்த வகை குழந்தைகளிடம் வழங்க வேண்டும். இந்த குழந்தைகளின் கவனத்தை திசை திருப்பும் செயல்களை செய்யக்கூடாது, இக்குறைப்பாடு உள்ள குழந்தையை, நன்றாக செயல்படும் குழந்தைகளின் அருகில் அமர வைப்பதன் மூலம் அவர்களின் தாழ்வு மனப்பான்மையை குறைக்கலாம்.
இந்த வகை குழந்தைகளுக்கு சிறு, சிறு பயிற்சிகள் கொடுக்கலாம். சிறு துவாரங்கள் இருக்கின்ற மணிகளை கோர்க்கும்படி செய்தல், வரைபடங்களில் உள்ள கோடுகளின் மீது வரையும் பயிற்சி, படங்களின் எல்லைக்குள் வர்ணம் தீட்ட செய்தல், ஊஞ்சலில் மெதுவாக ஆடும்படி கூறுதல், நீச்சல் பயிற்சி, காலில் சக்கரம் கட்டிக்கொண்டு செல்லும் பயிற்சி போன்ற பயிற்சிகளை இந்த குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கலாம்.
இந்த குறைபாட்டிற்கான அறிகுறிகள் தென்படும் குழந்தைகளை உளவியல் நிபுணர் அல்லது குழந்தைகள் நல மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதனை செய்ய வேண்டும். அதன்பின்னரே அவர்கள் குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை உறுதி செய்ய வேண்டும்.
குழந்தைகள் தான் நமது உலகம். அவர்களின் எதிர்காலத்தை சிறந்த ஒளிமயமாக்க வேண்டிய பொறுப்பு நமது கையில்தான் உள்ளது. எனவே ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்கள் அணுகுமுறையாலும், அரவணைப்பாலும் இத்தகைய குறைபாடு உள்ள குழந்தைகளின் வாழக்கையில் ஒளி ஏற்ற வேண்டும். இத்தகைய குறைபாட்டைப் பற்றிய ஒரு விழிப்புணர்வு பொதுமக்களிடம் வளர வேண்டும்.
கலையரசி, சிறப்பு பயிற்சியாளர்.
கைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும். சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் கைகளை நன்றாக கழுவ வேண்டும். கைகளை கழுவுவதற்கு அதற்குரிய லோஷன்களை பயன்படுத்துவது நல்லது.
டெங்கு காய்ச்சல் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ள அன்றாட பழக்க வழக்கங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். உடல் உறுப்புகளில் கிருமிகள், அழுக்குகள் படியாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். முகம், கண், மூக்கு, வாய் போன்ற பகுதிகளில் படிந்திருக்கும் வைரஸ் கிருமிகள் சுவாச அமைப்புக்குள் ஊடுருவி செல்ல வாய்ப்பிருக்கிறது.
கைகளை வாய்க்குள் வைக்கும்போது அதன் மூலம் எளிதாக வைரஸ் கிருமிகள் உடலுக்குள் பரவிவிடும். அதனால் கைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும். சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் கைகளை நன்றாக கழுவ வேண்டும். விரல் நகங்களையும் சுத்தம் செய்ய வேண்டும். வெதுவெதுப்பான நீரில் கைகளை கழுவுவது நல்லது. கைகளை கழுவுவதற்கு அதற்குரிய லோஷன்களை பயன்படுத்துவது நல்லது. அவை வைரஸ் கிருமிகளை செயலிழக்க செய்துவிடும்.
வெளி இடங்களுக்கு செல்லும்போது மூக்கு, வாய் பகுதியை ‘மாஸ்க்’ போட்டு மூடிவிட்டு செல்வது நல்லது. சுற்றி இருப்பவர்கள் தும்மல், இருமல் போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகி இருந்தால் அவர்களிடம் இருந்து நோய் தொற்று பரவாமல் தடுக்க இது உதவும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் அதற்குரிய ‘மாஸ்க்’கை முகத்தில் அணிந்து கொள்ள வேண்டியது அவசியமானது. ‘மாஸ்க்’ காற்று, ஈரப்பதம் மூலம் பரவும் வைரஸ்களை வடிகட்ட உதவும். அதனால் பருவகால காய்ச்சல் பாதிப்புகளை 80 சதவீதம் தடுத்துவிடலாம்.
கைகளை வாய்க்குள் வைக்கும்போது அதன் மூலம் எளிதாக வைரஸ் கிருமிகள் உடலுக்குள் பரவிவிடும். அதனால் கைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும். சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் கைகளை நன்றாக கழுவ வேண்டும். விரல் நகங்களையும் சுத்தம் செய்ய வேண்டும். வெதுவெதுப்பான நீரில் கைகளை கழுவுவது நல்லது. கைகளை கழுவுவதற்கு அதற்குரிய லோஷன்களை பயன்படுத்துவது நல்லது. அவை வைரஸ் கிருமிகளை செயலிழக்க செய்துவிடும்.
வெளி இடங்களுக்கு செல்லும்போது மூக்கு, வாய் பகுதியை ‘மாஸ்க்’ போட்டு மூடிவிட்டு செல்வது நல்லது. சுற்றி இருப்பவர்கள் தும்மல், இருமல் போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகி இருந்தால் அவர்களிடம் இருந்து நோய் தொற்று பரவாமல் தடுக்க இது உதவும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் அதற்குரிய ‘மாஸ்க்’கை முகத்தில் அணிந்து கொள்ள வேண்டியது அவசியமானது. ‘மாஸ்க்’ காற்று, ஈரப்பதம் மூலம் பரவும் வைரஸ்களை வடிகட்ட உதவும். அதனால் பருவகால காய்ச்சல் பாதிப்புகளை 80 சதவீதம் தடுத்துவிடலாம்.
மொறுமொறுப்பான தட்டை வகைகளை வீட்டிலேயே தயார் செய்து டீ, காபியுடன் சுவைக்கலாம். இன்று எள்ளுத்தட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - கால்கிலோ
உளுந்தம்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
வெல்லம் - 150 கிராம் (தூளாக்கவும்)
வெள்ளை எள் - 100 கிராம்

செய்முறை :
பச்சரிசியை இரண்டு மணி நேரம் நீரில் ஊறவைத்து, மாவு தயாரித்துக்கொள்ளவும்.
உளுந்தம் பருப்பை பொன்னிறமாக வறுத்து பொடித்துக்கொள்ளவும்.
அவற்றுடன் எள் சேர்த்து கலந்து கொள்ளவும்.
பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அது சூடானதும் வெல்லத்தை கொட்டி பாகு காய்ச்சிக்கொள்ளவும்.
பின்னர் பாகுவை அரிசி மாவு கலவையில் ஊற்றி கிளறவும்.
இந்த மாவை தட்டைகளாக தட்டி உலற வைக்கவும்.
வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் தட்டைகளை போட்டு பொரித்தெடுக்கலாம்.
சூப்பரான எள்ளுத்தட்டை ரெடி.
பச்சரிசி - கால்கிலோ
உளுந்தம்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
வெல்லம் - 150 கிராம் (தூளாக்கவும்)
வெள்ளை எள் - 100 கிராம்
நல்லெண்ணெய் - தேவைக்கு

செய்முறை :
பச்சரிசியை இரண்டு மணி நேரம் நீரில் ஊறவைத்து, மாவு தயாரித்துக்கொள்ளவும்.
உளுந்தம் பருப்பை பொன்னிறமாக வறுத்து பொடித்துக்கொள்ளவும்.
அவற்றுடன் எள் சேர்த்து கலந்து கொள்ளவும்.
பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அது சூடானதும் வெல்லத்தை கொட்டி பாகு காய்ச்சிக்கொள்ளவும்.
பின்னர் பாகுவை அரிசி மாவு கலவையில் ஊற்றி கிளறவும்.
இந்த மாவை தட்டைகளாக தட்டி உலற வைக்கவும்.
வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் தட்டைகளை போட்டு பொரித்தெடுக்கலாம்.
சூப்பரான எள்ளுத்தட்டை ரெடி.
இந்த தட்டையை காற்று போகாத டப்பாவில் போட்டு வைத்து 10 நாட்கள் வரை உபயோகிக்கலாம்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கணவனின் கோமாளித்தனத்தை மனைவி மறந்தால் தான் இல்லறம் நல்லறமாகும். அதே போல் மனைவியின் முட்டாள் தனத்தை மறந்தால் தான் அங்கு அன்பு துளிர்க்க ஆரம்பிக்கும்.
தவறு செய்பவர்கள் யார் மீது கோபப்பட்டாலும் அதனால் கோபப்படுபவரின் உள்ளம் வெந்து, கண்கள் சிவந்து, வயிறு எரிய கோபம் கொள்ளும் போது ஏற்படும் அதிக ரத்த அழுத்தத்தால் கோபப்படுபவரின் உடல் நலன் தான் கெட்டுப்போகும். ஆகவே கோபம் வராமல் தடுக்க என்னென்ன வழிமுறைகள் உண்டு என்பதை இங்கு பார்க்கலாம்.
பெண்களே உங்களுக்கு கோபம் வரும் போது தயவு செய்து ஒரு முறை உங்கள் வீட்டு நிலைக்கண்ணாடி முன் நின்று உங்கள் உருவத்தை பாருங்கள். முகம் அஷ்ட கோணலாகி, கண்கள் சிவந்து நீர் வழிய, மூக்கு விடைக்க, நரம்பு வெளியே தெரிய நீங்களே விரும்பாத உங்கள் முகத்தை உங்களை சுற்றி உள்ளவர்கள் எப்படி சகித்துக்கொள்வார்கள் என்று ஒரு கணம் சிந்தித்து இருக்கிறீர்களா?
ஆன்மிகத்தில் ஈடுபடுபவர்களுக்கு கோபம் வருவது குறைவாக இருக்கலாம். ஏனென்றால், அவர் தன் மீது எப்போதும் இறைவன் பார்வை விழுந்து கொண்டே இருக்கிறது என்று நினைக்கிறார். அதனால் கோபம் குறைகிறது. கோபங்களை குறைத்துக்கொள்ள ஆன்மிகம், யோகா, தியானம் போன்ற ஞான மார்க்கத்தில் ஈடுபட்டால் கோபம் வருவது குறையும். ஆனால் இதிலும் மனதை அடக்க தெரிந்தவர்களுக்கே சாத்தியம். அதே போல் மறதி பல உறவுகளுக்கு பாதையை அமைக்கும்.

இதனால் தான் நமது பெரியவர்கள் சொன்னார்கள். “குற்றம் பார்க்கின் சுற்றும் இல்லை“ என்று? மாமியாரின் குத்தல் பேச்சுகளை மருமகள் மறந்தால் தான் வீட்டில் அமைதி நிலைக்கும். கணவனின் கோமாளித்தனத்தை மனைவி மறந்தால் தான் இல்லறம் நல்லறமாகும். அதே போல் மனைவியின் முட்டாள் தனத்தை மறந்தால் தான் அங்கு அன்பு துளிர்க்க ஆரம்பிக்கும்.
இப்படி ஒருவர் மேல் ஒருவர் வரும் கோபத்தை மறப்பதுடன் அவரை மன்னித்தால் அவரும் திருந்துவார். அங்கே அன்பும், சமாதானமும் நிலைக்கும். இதனால் ஏட்டிக்கு போட்டி நான் தான் பெரியவன், எனக்கு தான் எல்லாம் தெரியும், இது என்னால் மட்டும் தான் முடியும் என்ற சுயநலம் பறந்தோடி உறவுக்கு உயிர்கொடுக்கும். ஒருவரை ஒருவர் மன்னிப்பதால் அங்கே அமைதி நிலைத்து நிற்கும்.
அராஜகமும், தீவிரவாதமும் விரட்டி அடிக்கப்படும். இதைத்தான் கவிஞன் ஒருவன் கூறுகிறான். மண்ணில் மன்னிக்க தெரிந்தவன் மகாத்மா ஆகிறான் என்று. இதே கருத்தைத்தான் அனைத்து மதங்களும் எடுத்துரைக்கின்றன. அறிவியல் விந்தைகள் நிகழ்ந்து வரும் இந்த காலத்தில் மன்னிப்பு என்ற கேடயத்தை நாம் கையில் வைத்திருந்தால், கோபம், துன்பம் என்ற அரக்கர்கள் நம்மை அணுகமாட்டார்கள்.
பெண்களே உங்களுக்கு கோபம் வரும் போது தயவு செய்து ஒரு முறை உங்கள் வீட்டு நிலைக்கண்ணாடி முன் நின்று உங்கள் உருவத்தை பாருங்கள். முகம் அஷ்ட கோணலாகி, கண்கள் சிவந்து நீர் வழிய, மூக்கு விடைக்க, நரம்பு வெளியே தெரிய நீங்களே விரும்பாத உங்கள் முகத்தை உங்களை சுற்றி உள்ளவர்கள் எப்படி சகித்துக்கொள்வார்கள் என்று ஒரு கணம் சிந்தித்து இருக்கிறீர்களா?
ஆன்மிகத்தில் ஈடுபடுபவர்களுக்கு கோபம் வருவது குறைவாக இருக்கலாம். ஏனென்றால், அவர் தன் மீது எப்போதும் இறைவன் பார்வை விழுந்து கொண்டே இருக்கிறது என்று நினைக்கிறார். அதனால் கோபம் குறைகிறது. கோபங்களை குறைத்துக்கொள்ள ஆன்மிகம், யோகா, தியானம் போன்ற ஞான மார்க்கத்தில் ஈடுபட்டால் கோபம் வருவது குறையும். ஆனால் இதிலும் மனதை அடக்க தெரிந்தவர்களுக்கே சாத்தியம். அதே போல் மறதி பல உறவுகளுக்கு பாதையை அமைக்கும்.

இதனால் தான் நமது பெரியவர்கள் சொன்னார்கள். “குற்றம் பார்க்கின் சுற்றும் இல்லை“ என்று? மாமியாரின் குத்தல் பேச்சுகளை மருமகள் மறந்தால் தான் வீட்டில் அமைதி நிலைக்கும். கணவனின் கோமாளித்தனத்தை மனைவி மறந்தால் தான் இல்லறம் நல்லறமாகும். அதே போல் மனைவியின் முட்டாள் தனத்தை மறந்தால் தான் அங்கு அன்பு துளிர்க்க ஆரம்பிக்கும்.
இப்படி ஒருவர் மேல் ஒருவர் வரும் கோபத்தை மறப்பதுடன் அவரை மன்னித்தால் அவரும் திருந்துவார். அங்கே அன்பும், சமாதானமும் நிலைக்கும். இதனால் ஏட்டிக்கு போட்டி நான் தான் பெரியவன், எனக்கு தான் எல்லாம் தெரியும், இது என்னால் மட்டும் தான் முடியும் என்ற சுயநலம் பறந்தோடி உறவுக்கு உயிர்கொடுக்கும். ஒருவரை ஒருவர் மன்னிப்பதால் அங்கே அமைதி நிலைத்து நிற்கும்.
அராஜகமும், தீவிரவாதமும் விரட்டி அடிக்கப்படும். இதைத்தான் கவிஞன் ஒருவன் கூறுகிறான். மண்ணில் மன்னிக்க தெரிந்தவன் மகாத்மா ஆகிறான் என்று. இதே கருத்தைத்தான் அனைத்து மதங்களும் எடுத்துரைக்கின்றன. அறிவியல் விந்தைகள் நிகழ்ந்து வரும் இந்த காலத்தில் மன்னிப்பு என்ற கேடயத்தை நாம் கையில் வைத்திருந்தால், கோபம், துன்பம் என்ற அரக்கர்கள் நம்மை அணுகமாட்டார்கள்.
சிறு குழந்தைகள் படுக்கையிலேயே சிறுநீர் கழிப்பது உண்டு. இதற்கான காரணத்தையும் தடுக்கும் வழிமுறையையும் அறிந்து கொள்ளலாம்.
சிறு குழந்தைகள் படுக்கையிலேயே சிறுநீர் கழிப்பது உண்டு. அதற்கு 3 காரணங்கள் இருப்பதாக கண்டறியபட்டுள்ளது.
1. மரபு ரீதியானது,
2. ஹார்மோன் மாற்றங்கள்,
3. கவலை மற்றும் பயம்.
இவை தவிர சிறுநீர் பை சரிவர வளர்ச்சி அடையாததாலும் தன்னை அறியாமல் சிறுநீர் கழிக்க வாய்ப்பிருக்கிறது.
இதனை தடுப்பது எப்படி?
* படுக்கையில் சிறுநீர் கழித்ததற்காக குழந்தைகளை அடிக்கவோ, திட்டவோ கூடாது.
* குழந்தைகளுக்கு நம்பிக்கை ஏற்படும்படியாக பேச வேண்டும். பயம், கவலை ஏற்பட காரணங்கள் என்ன என்பதை புரிந்து கொண்டு நம்பிக்கையூட்டுங்கள்.
* இரவில் அதிகமாக தண்ணீர் குடிப்பதையும் மற்றும் திரவ உணவுகள் கொடுபதையும் நிறுத்துங்கள்.
* 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் படுக்கையில் சிறுநீரை உறிஞ்சும் துண்டுகளை விரிக்கலாம்.
* குழந்தையின் படுக்கையை அடிக்கடி சுத்தம் செய்வது மற்றும் மாற்று ஏற்பாடுகளை செய்வது அவர்கள் நிம்மதியாக உறங்க உதவும்.
* தூங்கச் செல்லும் முன் சிறுநீர் கழித்து விட்டு வந்து படுக்கச் சொல்லலாம்.
* குறிப்பிட்ட நேரங்களில் அவர்கள் சிறுநீர் கழிப்பதை வழக்கமாக வைத்திருந்தால் அந்த நேரத்திற்கு எழுப்பி கழிவறைக்கு கொண்டு சென்று விடலாம்.
1. மரபு ரீதியானது,
2. ஹார்மோன் மாற்றங்கள்,
3. கவலை மற்றும் பயம்.
இவை தவிர சிறுநீர் பை சரிவர வளர்ச்சி அடையாததாலும் தன்னை அறியாமல் சிறுநீர் கழிக்க வாய்ப்பிருக்கிறது.
இதனை தடுப்பது எப்படி?
* படுக்கையில் சிறுநீர் கழித்ததற்காக குழந்தைகளை அடிக்கவோ, திட்டவோ கூடாது.
* குழந்தைகளுக்கு நம்பிக்கை ஏற்படும்படியாக பேச வேண்டும். பயம், கவலை ஏற்பட காரணங்கள் என்ன என்பதை புரிந்து கொண்டு நம்பிக்கையூட்டுங்கள்.
* இரவில் அதிகமாக தண்ணீர் குடிப்பதையும் மற்றும் திரவ உணவுகள் கொடுபதையும் நிறுத்துங்கள்.
* 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் படுக்கையில் சிறுநீரை உறிஞ்சும் துண்டுகளை விரிக்கலாம்.
* குழந்தையின் படுக்கையை அடிக்கடி சுத்தம் செய்வது மற்றும் மாற்று ஏற்பாடுகளை செய்வது அவர்கள் நிம்மதியாக உறங்க உதவும்.
* தூங்கச் செல்லும் முன் சிறுநீர் கழித்து விட்டு வந்து படுக்கச் சொல்லலாம்.
* குறிப்பிட்ட நேரங்களில் அவர்கள் சிறுநீர் கழிப்பதை வழக்கமாக வைத்திருந்தால் அந்த நேரத்திற்கு எழுப்பி கழிவறைக்கு கொண்டு சென்று விடலாம்.
இளவயசு மெனோபாஸை ஏதோ முறை தவறின மாதவிலக்குன்னு தப்பாக நினைத்து அலட்சியப்படுத்தாமல் சரியான நேரத்துல மருத்துவ பரிசோதனை அவசியம்.
மாதவிலக்கு நிற்க சராசரி வயது 52. இதற்கு மேல் நிற்காவிட்டால் அசாதாரணம். அதே மாதிரி 40 வயதுக்குள்ளேயே மாதவிலக்கு நிற்பது நல்ல அறிகுறியல்ல. இளவயது மெனோபாஸூக்கான காரணங்கள், சிகிச்சைகள், பற்றி விரிவாக பார்க்கலாம்.
ஒரு பெண் அம்மாவோட வயித்துல உருவாகிறப்பவே, அதோட சினைப்பைல இத்தனை மில்லியன் முட்டைகள் இருக்கணுங்கிறது தீர்மானிக்கப்படும். அந்தக்குழந்தை வயதுக்கு வர்றப்ப லட்சக்கணக்குல உள்ள அந்த முட்டைகள், மாதவிலக்கு மூலமா மாசா மாசம் வெளியேறி குறைஞ்சுகிட்டே வரும். பிரசவத்தின் போது இன்னும் குறையும். இப்படி குறைஞ்சிக்கிட்டே வந்து, ஒரு கட்டத்துல முழுக்க முட்டைகளே இல்லாம போகிறப்ப மாதவிலக்கு வராது.
அதை தான் மெனோபாஸ்னு சொல்கிறோம். சிலருக்கு சராசரியை விட சீக்கிரமே, அதாவது 40 வயசுக்குள்ளேயே மெனோபாஸ் வரலாம். பரம்பரைத் தன்மை புற்றுநோய்க்காக எடுத்துக்கிற கீமோதெரபியோட விளைவுனு இளவயசு மெனோபாஸூக்கான காரணங்கள் பல இருக்கிறது. இவை தவிர ப்ரீ மெச்சூர் ஓவரியன் ஃபெயிலியர் பிரச்சனையாலையும் சீக்கிரமே மெனோபாஸ் வரலாம்.
அதாவது சினைப்பைல சுரக்கிற ஹாமோனுக்கு மூளையிலேர்ந்து சிக்னல் கிடைக்காவிட்டால், 25 வயசுல கூட மெனோபாஸ் வரலாம். மாதவிலக்கு சுழற்சி சரியா இருக்கிறவங்களுக்கு (20 முதல் 25 நாட்கள்) மெனோபாஸ் சீக்கிரமே வரும் 2, 3 மாதத்துக்கு ஒரு முறை வர்றவங்களுக்கு மாதவிலக்கு மூலமா இழக்கப்படற முட்டைகள் குறையறதால, மெனோபாஸூம் லேட் ஆகும்.
சீக்கிரமே வயசுக்கு வர்றவங்களுக்கு மெனோபாஸ் சீக்கிரமாகவும், வயசு கடந்து வாற்வங்களுக்கு அது தாமதமாகவும் வரும். 50வயசுல மெனோபாஸ் வர்றவங்களுக்கு சரியான கவனிப்பு அவசியம். அப்படியிருக்கிறப்ப இளவயசு மாதவிலக்கு நிற்கும் போது கூடுதல் அக்கறை அவசியம். ஈஸ்ரோஜென் ஹார்மோன் இல்லாம, எலும்புகள் பாதிக்கப்படும்.
கால்சியம் சப்ளிமென்ட் எடுத்துக்க வேண்டியிருக்கும். பால், தயிர்னு உணவு மூலமா கிடைக்கிற கால்சியம் மட்டும் போதாது. வைட்டமின் கூட கால்சியமும் சேர்த்து எடுத்துக்கணும். இல்லாட்டி எலும்புகள் பஞ்சு மாதிரி மாறி ஆஸ்டியோபொரோசிஸ் வரும். மெனோபாஸ்ல இதய ஆரோக்கியமும் பாதிக்கப்படுங்கிறதால அதுக்கான பரிசோதனையும் அவசியம். இளவயசு மெனோபாஸை ஏதோ முறை தவறின மாதவிலக்குன்னு தப்பாக நினைத்து அலட்சியப்படுத்தாம சரியான நேரத்துல மருத்துவ பரிசோதனையும் அவசியம்.
ஒரு பெண் அம்மாவோட வயித்துல உருவாகிறப்பவே, அதோட சினைப்பைல இத்தனை மில்லியன் முட்டைகள் இருக்கணுங்கிறது தீர்மானிக்கப்படும். அந்தக்குழந்தை வயதுக்கு வர்றப்ப லட்சக்கணக்குல உள்ள அந்த முட்டைகள், மாதவிலக்கு மூலமா மாசா மாசம் வெளியேறி குறைஞ்சுகிட்டே வரும். பிரசவத்தின் போது இன்னும் குறையும். இப்படி குறைஞ்சிக்கிட்டே வந்து, ஒரு கட்டத்துல முழுக்க முட்டைகளே இல்லாம போகிறப்ப மாதவிலக்கு வராது.
அதை தான் மெனோபாஸ்னு சொல்கிறோம். சிலருக்கு சராசரியை விட சீக்கிரமே, அதாவது 40 வயசுக்குள்ளேயே மெனோபாஸ் வரலாம். பரம்பரைத் தன்மை புற்றுநோய்க்காக எடுத்துக்கிற கீமோதெரபியோட விளைவுனு இளவயசு மெனோபாஸூக்கான காரணங்கள் பல இருக்கிறது. இவை தவிர ப்ரீ மெச்சூர் ஓவரியன் ஃபெயிலியர் பிரச்சனையாலையும் சீக்கிரமே மெனோபாஸ் வரலாம்.
அதாவது சினைப்பைல சுரக்கிற ஹாமோனுக்கு மூளையிலேர்ந்து சிக்னல் கிடைக்காவிட்டால், 25 வயசுல கூட மெனோபாஸ் வரலாம். மாதவிலக்கு சுழற்சி சரியா இருக்கிறவங்களுக்கு (20 முதல் 25 நாட்கள்) மெனோபாஸ் சீக்கிரமே வரும் 2, 3 மாதத்துக்கு ஒரு முறை வர்றவங்களுக்கு மாதவிலக்கு மூலமா இழக்கப்படற முட்டைகள் குறையறதால, மெனோபாஸூம் லேட் ஆகும்.
சீக்கிரமே வயசுக்கு வர்றவங்களுக்கு மெனோபாஸ் சீக்கிரமாகவும், வயசு கடந்து வாற்வங்களுக்கு அது தாமதமாகவும் வரும். 50வயசுல மெனோபாஸ் வர்றவங்களுக்கு சரியான கவனிப்பு அவசியம். அப்படியிருக்கிறப்ப இளவயசு மாதவிலக்கு நிற்கும் போது கூடுதல் அக்கறை அவசியம். ஈஸ்ரோஜென் ஹார்மோன் இல்லாம, எலும்புகள் பாதிக்கப்படும்.
கால்சியம் சப்ளிமென்ட் எடுத்துக்க வேண்டியிருக்கும். பால், தயிர்னு உணவு மூலமா கிடைக்கிற கால்சியம் மட்டும் போதாது. வைட்டமின் கூட கால்சியமும் சேர்த்து எடுத்துக்கணும். இல்லாட்டி எலும்புகள் பஞ்சு மாதிரி மாறி ஆஸ்டியோபொரோசிஸ் வரும். மெனோபாஸ்ல இதய ஆரோக்கியமும் பாதிக்கப்படுங்கிறதால அதுக்கான பரிசோதனையும் அவசியம். இளவயசு மெனோபாஸை ஏதோ முறை தவறின மாதவிலக்குன்னு தப்பாக நினைத்து அலட்சியப்படுத்தாம சரியான நேரத்துல மருத்துவ பரிசோதனையும் அவசியம்.






