search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "deficiency"

    • நாட்டு சர்க்கரை, பனை வெல்லம் உள்ளிட்ட பலவகையான பொருட்களை கொண்டு இனிப்பு பலகாரங்கள் தயார் செய்தனர்.
    • நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் அனைத்து வகையான வைட்டமின் குறைபாடுகளையும் நீக்கிக்கொள்ள முடியும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அடுப்பில்லா சமையல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    கல்லூரி முதல்வர் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கல்லூரியில் பயின்று வரும் இளங்கலை மற்றும் முதுகலை பட்ட வகுப்பு பயின்று வரும் அனைத்து துறை சார்ந்த மாணவிகள் கலந்து கொண்டு வகை வகையான இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, காரம் உள்ளிட்ட அனைத்து அறு சுவைகள் கொண்ட தின்பண்டங்களை அடுப்பு இல்லாமல் தயார் செய்து அசத்தி காட்டினர்.

    இந்த உணவுப்பொ ருட்களை மாணவிகள் தயாரிப்பதற்கு அடுப்பின் உதவி இல்லாமலும், எண்ணெய்யை பயன்ப டுத்தாமலும் இயற்கை மற்றும் பாரம்பரிய உணவு முறையில் சத்து நிறைந்த கம்பு, கேழ்வரகு, சோளம், வரகு, திணை, உளுந்து, பயறு உள்ளிட்ட மாவு பொருட்கள், காய்கறிகள், கீரைகள், இரும்பு சத்து மற்றும் அனைத்து வைட்டமின் அடங்கிய காய்கறிகள், தேங்காய், வெல்லம், நாட்டுச் சர்க்கரை, பனை வெல்லம், ஏலக்காய், கிராம்பு உள்ளிட்ட பொருட்களை கொண்டு பல வகை, வகையான இனிப்பு பலகாரங்களை தயார் செய்து கல்லூரியில் காட்சிக்கு வைத்தனர்.

    இதனை ஆசிரியர்கள், மாணவர்கள் பார்வையிட்டு ருசித்து மகிழ்ந்தனர்.

    இதுகுறித்து மாணவிகள் கூறுகையில், பாரம்பரிய உணவு தானிய முறையில் பலவ கையான தின்பண்டங்களை தயார் செய்துள்ளோம் இவைகளை உண்பதன் மூலம்நோய் எதிர்ப்பு சக்திமற்றும் அனைத்து வகையான வைட்டமின் குறைபாடுகளையும் நீக்கிக் கொள்ள முடியும்.

    இந்த உணவுப் பொருட்களை தயாரிக்க நாங்கள் அடுப்புகளை பயன்படுத்தவில்லை.

    இந்த சத்தான உணவுகளை தயார் செய்ய சூடு தேவையில்லை. எனவே இங்கு அடுப்பும் தேவையில்லை.

    மிகக் குறைந்த செலவிலேயே தயாரிக்க கூடிய இந்த உணவு மிகவும் சிறந்த உணவு.ஊட்டச்சத்தும் அதிகம் நிறைந்தது என்றனர்.

    • இதுவரை பயிர் காப்பீடு இழப்பீடு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்கவில்லை.
    • உரத்தட்டுப்பாட்டை போக்கி விலையை குறைக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

    இதற்கு கலெக்டர் தினேஷ் பொ ன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார்.

    மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த விவசா யிகள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    அப்போது கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போது விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் மாநிலத் துணைத் தலைவர் கக்கரை சுகுமாரன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அடகு வைக்கப்பட்ட பித்தளை குடங்களுடன் வந்து திடீரென கலெக்டர் இடம் முறையிட்டனர் .

    கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

    இது குறித்து கக்கரை சுகுமாறன் கூறும்போது, தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு பெய்த கனமழையால் நெற்பயிர்கள் சேதம் அடைந்தது.

    மகசூல் இல்லை என தெரிந்தும் 2021-22-ம் ஆண்டுக்கு பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு செய்ய விவசாயிகள் அண்டா, குண்டா அடகு வைத்து பிரிமியம் தொகை கட்டினார்கள்.

    ஆனால் அடகு வைத்த பொருட்கள் ஏலம் போனது தான் மிச்சம். இதுவரை பயிர் காப்பீடு இழப்பீடு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்கவில்லை. உடனே பயிர் இன்சூரன்ஸ் இழப்பீடு வழங்க வேண்டும்.

    வரலாறு காணாத அளவுக்கு விலைவாசி உயர்ந்துள்ளது. ஆனால் விவசாயத்திற்கான யூரியா உரம் தட்டுப்பாட்டில் உள்ளது.

    உரம் தட்டுப்பா ட்டை போக்கி விலையை குறைக்க வேண்டும்.

    நெல் குவிண்டால் விலை ரூ.2500-ம், கரும்புக்கான விலை டன் ஒன்றுக்கு ரூ.4000 விலையை அறிவிக்க வேண்டும்.

    விவசாயிகளுக்கு வழங்கும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது. 2022-23-ம் ஆண்டுக்கான சம்பவ பருவத்திற்கு கூட்டுறவு கடன் உடனே வழங்க வேண்டும்.

    விவசாயிகளுக்கு பாரபட்சமின்றி விவசாய கடன் ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும்.

    மேற்கண்ட கோரி க்கைகள் அனைத்தையும் நிறைவேற்றக்கோரி என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தை புறக்கணி த்தோம்.

    அடகு வைத்தது தான் மிச்சம் என்பதை வலியுறுத்தி பித்தளை பாத்திரம், பித்தளை குடத்துடன் வந்தோம் என்றார்.

    இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் தலைக்காய சிகிச்சை பிரிவு இல்லாததால் நோயாளிகள் தவித்து வருகின்றனர்.
    • மயக்க மருந்து டாக்டர்கள் குறைவாக உள்ளதால் தினமும் 4 அறுவை சிகிச்சைதான் மேற்கொள்ள முடிகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் மாவட்ட அரசு ஆஸ்பத்திரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியாக மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் அளிக்க கூடிய வகையில் தேவையான வசதிகளும் டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

    ராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விபத்தில் பாதிக்க ப்படுபவர்கள் தலைக்காயம் ஏற்பட்டால் அவர்கள் ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் இருந்து மதுரைக்குதான் பரிந்துரை செய்யப்பட்டு வருகின்றனர். மருத்துவ கல்லூரி வந்தால் தலைக்காய சிகிச்சை உள்ளிட்ட அனைத்து அறுவை சிகிச்சைகளும் இங்கேயே பார்க்கலாம் என்று நம்பி இருந்த மக்களுக்கு இது ஏமாற்றமாக உள்ளது.

    இதுதவிர, ஆஸ்பத்திரியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் பல சிறப்பு சிகிச்சை பிரிவுகள் இன்னும் தொடங்கப்படாமலேயே உள்ளன.

    இதுகுறித்து ஆஸ்பத்திரி நிர்வாக டாக்டர் கூறு கையில், கட்டிட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்து துரிதப்படுத்த உத்தர விட்டுள்ளார். மயக்க மருந்து டாக்டர்கள் குறைவாக உள்ளதால் தினமும் 4 அறுவை சிகிச்சைதான் மேற்கொள்ள முடிகிறது. இதனால் ஒட்டுமொத்தமாக அறுவை சிகிச்சை பாதிக்கப்படுகிறது.

    விரைவில் கூடுதலாக மயக்க மருந்து டாக்டர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஆக்சிஜன் மையம் எலும்பு அறுவை சிகிச்சை, அறுவை அரங்கு புதிய கட்டிடம் முடிவடைந்ததும் அதில் செயல்படும். இன்னும் 3 மாத காலத்தில் ஒவ்வொரு சிகிச்சைக்கும் தனி பிரிவுகள் தொடங்கப்பட்டு அதற்கென தனி அறுவை சிகிச்சை அரங்குகள் செயல்பட தொடங்கும். அதற்கு தேவையான எந்திரங்கள் வந்துள்ளன. 3 மாதத்திற்குள் அனைத்து எந்திரங்களும் வந்துவிடும்.

    ஆஸ்பத்திரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 11 ஆயிரம் கிலோலிட்டர் திரவ ஆக்சிஜன் மையத்திற்கென தனியாக ஜெனரேட்டர் அமைக்கப்பட்டு வருகிறது என்றார்.

    ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்கள் அணுகுமுறையாலும், அரவணைப்பாலும் குறைபாடு உள்ள குழந்தைகளின் வாழக்கையில் ஒளி ஏற்ற வேண்டும்.
    ஒரு மனிதனின் வாழ்வை அழகுறச் செய்வது குழந்தைகள்தான். வீட்டில் சுட்டித்தனத்துடன் ஓடிவரும் குழந்தைகளை பார்க்கும்போது நமது மனதில் உள்ள துன்பங்கள் அனைத்தும் சிதறி ஓடிவிடும். குழந்தைகளிடையே கவனப்பற்றாக்குறை மற்றும் மிகை இயக்க செயல்பாடு பொதுவாக காணப்பட்டு வருகிறது. இது நரம்பியலில் ஏற்படும் ஒருவித வளர்ச்சி குறைபாடு ஆகும்.

    இந்த வகையுடைய ஒரு சில குழந்தைகள் வயதுக்கு மீறிய துறுதுறுப்புடனும், உத்வேகத்துடனும் இருப்பார்கள். மிகுதியான இயக்கமும், உணர்ச்சி வேகமும் இவர்களிடம் அதிகமாக காணப்படும். சில குழந்தைகள் எதிலும் ஆர்வம் இல்லாமல் மந்தமாகவே செயல்படுவார்கள். இந்த வகை குழந்தைகளை சமாளிப்பது பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மிகுந்த சவால் மிக்க ஒன்றாகும்.

    நமது நாட்டில் தற்போதைய நிலவரப்படி 11.32 சதவீத தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு இந்த குறைபாடு இருப்பதாகக் கூறப்படுகிறது. அதிலும் பெண் குழந்தைகளைவிட, ஆண் குழந்தைகள் 3 மடங்கு அதிகம் இந்த குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    இக்குறைபாட்டிற்கான அறிகுறிகள் ஏழு வயதிற்குள் தென்படத் தொடங்குகிறது. அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் கென்னடி, மைக்கேல் ஜார்டான், அறிவியல் அறிஞர் ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன் போன்ற பிரபலமானவர்கள் இந்த வகை குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள். குழந்தைகளுக்கு பின்வரும் அறிகுறிகள் தென்படும். இந்த வகை குழந்தைகள் படிப்பிலோ அல்லது வேறு எந்த வேலையிலோ ஈடுபடும்போது கவனத்தை தக்க வைத்துக்கொள்ள சிரமப்படுவார்கள்.

    ஆசிரியர்கள், பெற்றோர்கள் நேரடியாகப் பேசும்போது காது கொடுத்து கேட்க மாட்டார்கள், படிப்பில் ஈடுபாடு இல்லாமல் இருப்பார்கள், தனது உடைமைகளை பத்திரப்படுத்தாமல் மறந்து எங்கேயாவது விட்டுவிடுவார்கள், ஒரு வேலையை செய்து கொண்டிருக்கும்போதே, மற்றொரு வேலையின் மேல் இவர்கள் எண்ணம் செல்லும், ஒரு இடத்தில் அமைதியாய் உட்காரமாட்டார்கள், திடீரென்று எழுந்து ஓடுவார்கள், மேசை, நாற்காலி மீது ஏறிக்கொண்டு இருப்பார்கள்.

    இவர்களை வகுப்பறையில் ஒரு இடத்தில் உட்கார வைக்க முடியாது. அப்படி உட்கார வைக்கும்போது நெளிந்து கொண்டும், இருக்கையை விட்டு எழுந்தும், பிற ஒலிகளை எழுப்பிக் கொண்டும் இருப்பார்கள். இவர்களின் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதும் மிகக் கடினம்.

    ஒரு கேள்வியைக் கேட்டு முடிப்பதற்குள் அது சரியோ, தவறோ, உடனடியாக பதிலைக் கூறிவிடுவார்கள். சுயகட்டுப்பாடு இல்லாமல் எளிதில் தூண்டப்பட்டு சிந்திக்காமல் செயல்படுவார்கள்.

    மரபணுக் கூறுகள், சுற்றுச்சூழல், மூளையின் செயல்பாடுகள் போன்றவை இந்த குறைபாட்டுக்கு காரணமாக இருக்கலாம் என்று ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. இந்த குறைபாடு உடைய குழந்தைகளை நாம் கவனிக்காமல் விட்டால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். இவர்களால் படிப்பில் கவனம் செலுத்த முடியாததால் சமூகத்தில் பின்தங்க நேரிடும்.



    இந்த குறைபாடு உடைய குழந்தைகளை எப்படி கையாள்வது? இதனை எப்படி சரிசெய்வது? என்பதை பார்ப்போம்.

    இக்குறைபாடு உள்ள குழந்தைகளை பெற்றோர்கள் அடிக்காமல், கோபப்படாமல் நல்லப் பழக்கங்களைச் சொல்லிக் கொடுத்து அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். இனிப்பு அவர்களின் துறுதுறுத்தன்மையை அதிகரிக்கும் என்பதால் பெரும்பாலும் இனிப்பு பலகாரங்களை தவிர்க்கவேண்டும். செயற்கை வண்ணங்கள் சேர்க்கப்பட்ட உணவு வகைகள், குளிர் பானங்கள் ஆகியவற்றையும் தவிர்த்தல் வேண்டும்.

    இந்த வகை குழந்தைகளை கையாள்வதற்கு ஆசிரியருக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. ஆசிரியர்கள், பாதிக்கப்பட்ட குழந்தைகளை தங்களது அருகிலேயே அமர வைத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் நற்செயல்களை பாராட்டி, பரிசு அளித்து அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். அவர்கள் தவறு செய்தாலும் கோபப்படாமல் பக்குவமாய் எடுத்து சொல்ல வேண்டும்.

    ஒரு வேலையை, செயலை அவர்களிடம் ஒப்படைக்கும்போது அவை குறித்த தகவல்களை, விதிமுறைகளை தெளிவாக எடுத்து சொல்ல வேண்டும், எந்த ஒரு வேலையையும் சிறு, சிறு செயல்களாகப் பிரித்தே இந்த வகை குழந்தைகளிடம் வழங்க வேண்டும். இந்த குழந்தைகளின் கவனத்தை திசை திருப்பும் செயல்களை செய்யக்கூடாது, இக்குறைப்பாடு உள்ள குழந்தையை, நன்றாக செயல்படும் குழந்தைகளின் அருகில் அமர வைப்பதன் மூலம் அவர்களின் தாழ்வு மனப்பான்மையை குறைக்கலாம்.

    இந்த வகை குழந்தைகளுக்கு சிறு, சிறு பயிற்சிகள் கொடுக்கலாம். சிறு துவாரங்கள் இருக்கின்ற மணிகளை கோர்க்கும்படி செய்தல், வரைபடங்களில் உள்ள கோடுகளின் மீது வரையும் பயிற்சி, படங்களின் எல்லைக்குள் வர்ணம் தீட்ட செய்தல், ஊஞ்சலில் மெதுவாக ஆடும்படி கூறுதல், நீச்சல் பயிற்சி, காலில் சக்கரம் கட்டிக்கொண்டு செல்லும் பயிற்சி போன்ற பயிற்சிகளை இந்த குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கலாம்.

    இந்த குறைபாட்டிற்கான அறிகுறிகள் தென்படும் குழந்தைகளை உளவியல் நிபுணர் அல்லது குழந்தைகள் நல மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதனை செய்ய வேண்டும். அதன்பின்னரே அவர்கள் குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை உறுதி செய்ய வேண்டும்.

    குழந்தைகள் தான் நமது உலகம். அவர்களின் எதிர்காலத்தை சிறந்த ஒளிமயமாக்க வேண்டிய பொறுப்பு நமது கையில்தான் உள்ளது. எனவே ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்கள் அணுகுமுறையாலும், அரவணைப்பாலும் இத்தகைய குறைபாடு உள்ள குழந்தைகளின் வாழக்கையில் ஒளி ஏற்ற வேண்டும். இத்தகைய குறைபாட்டைப் பற்றிய ஒரு விழிப்புணர்வு பொதுமக்களிடம் வளர வேண்டும்.

    கலையரசி, சிறப்பு பயிற்சியாளர்.
    ×