என் மலர்
நீங்கள் தேடியது "tag 142417"
பிளாஸ்டிக் மூலக்கூறுகளால் தயாரிக்கப்படும் நாப்கின்களுக்கு மாற்றாக இயற்கை மூலப்பொருட்களை கொண்டு உற்பத்தி செய்யப்படும் நாப்கின்களுக்கு மவுசு கூடி வருகிறது.
மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தப்படும் சானிட்டரி நாப்கின்கள் பக்கவிளைவுகளை ஏற்படுத்தாததாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் அமைந்திருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பெண்களிடம் அதிகரித்து வருகிறது. பிளாஸ்டிக் மூலக்கூறுகளால் தயாரிக்கப்படும் நாப்கின்களுக்கு மாற்றாக பருத்தி, மரக்கூழ், வாழை நார், கரும்பு சக்கை போன்ற இயற்கை மூலப்பொருட்களை கொண்டு உற்பத்தி செய்யப்படும் நாப்கின்களுக்கு மவுசு கூடி வருகிறது.
அந்த வாய்ப்பை கனகச்சிதமாக கையாண்டு தொழில்முனைவோர்களாக மாறி நாப்கின் தயாரிப்பில் பல மடங்கு லாபம் ஈட்டி வருகிறார்கள். அப்படிப்பட்ட தொழில் முனைவோர்களுள் ஒருவராக விளங்குகிறார், சுஜாதா பவார். மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள தானே பகுதியை சேர்ந்த இவர், மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்தக்கூடிய இயற்கை சானிட்டரி நாப்கின்களை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் உருவாக்கினார்.
இன்றைக்கு இந்தியா முழுவதும் விற்பனையை விரிவுபடுத்தி இருப்பவர் நேபாளம், சிங்கப்பூர், நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறார். கடந்த பத்தே மாதங்களில் சுமார் ரூ.20 லட்சம் ரூபாய் வணிகம் செய்துள்ளதோடு, 30 பேருக்கு வேலை வாய்ப்பும் கொடுத்துள்ளார்.
33 வயதான சுஜாதா பி.பார்ம் முடித்துவிட்டு எம்.பி.ஏ. படித்தவர். படிப்பை முடித்ததும் 8 ஆண்டுகளாக பல்வேறு மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் பணியாற்றினார். அவரது கணவரும் இதே துறையில் வேலை பார்த்ததால், வருமானத்திற்கு குறைவில்லை. அதனால் வேறு தொழில் தொடங்க வேண்டும் என்று அவர்கள் சிந்திக்கவும் இல்லை. பிறகு எப்படி இயற்கை சானிட்டரி நாப்கின்களை தயாரித்து இந்த நிலையை எட்டிப் பிடித்தார்? என்பதை சுஜாதாவே கூறுகிறார்...
"மாதவிடாய் காலங்களில் சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்தும்போது மற்ற பெண்களை போல் எனக்கும் பிரச்சினை வந்தது. அப்போது கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் இருந்தது. ஒவ்வாமை பிரச்சினையை ஏற்படுத்தாத நாப்கின்களை எப்படி தயாரிப்பது? என்ற ஆராய்ச்சியில் களம் இறங்கினேன்.
நீண்ட ஆய்வுக்கு பிறகு, தற்போது புழக்கத்தில் இருக்கும் சானிட்டரி நாப்கின்களில் பிளாஸ்டிக் மூலக்கூறுகளும், சில ரசாயனப் பொருட்களும் இருப்பதை தெரிந்து கொண்டேன். இதனால்தான் பெண்களுக்கு தோல் வியாதி தொடர்பான பாதிப்புகள் வருவதையும் புரிந்து கொண்டேன்.
அதோடு நோய்த்தொற்றுகள் ஏற்படுவதற்கும் இந்த சானிட்டரி நாப்கின்களே காரணம் என்பதும் புரிந்தது. இதற்கு மாற்றாக நாப்கின்களை தயாரிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அதற்கு பருத்திதான் சரியான மாற்றாக இருக்க முடியும் என்பதை பல்வேறு ஆய்வு தகவல்கள் உறுதிப்படுத்தின. அந்த காலத்தில் கிராமப்புறப்பெண்கள் நீண்ட காலமாக பருத்தி துணிகளையே பயன்படுத்தி வந்தனர்.
அதன் அடிப்படையில் இயற்கையான சானிட்டரி நாப்கின்களை தயாரித்தேன். அதனைப் பயன்படுத்திய பின்பு எனக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. உறவினர்களுக்கும் கொடுத்தேன். எனது நாப்கின்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. எனினும் இரண்டு பிரச்சினைகள் ஏற்பட்டன. முதலில், இந்த நாப்கினைப் பயன்படுத்திய பிறகு மீண்டும் துவைத்துப் பயன்படுத்த இரண்டு நாட்கள் ஆனது. இரண்டாவதாக, இந்த நாப்கின்களை துவைத்து பயன்படுத்தியபோது உடலுக்கு பிரச்சினை ஏற்பட்டது.
சரியாக சுத்தம் செய்யாவிட்டால், இந்த நாப்கின் பயன்படுத்தினாலும் தொற்று ஏற்படும் நிலை இருந்தது. அதன் பிறகு, வடிவமைப்பு நிறுவனத்தின் உதவியோடு, மீண்டும் பயன்படுத்தும் வகையிலான இயற்கை சானிட்டரி நாப்கின்களை தயாரிக்க தொடங்கினேன். அந்த நாப்கின் எளிதில் உலரும் தன்மையுடன் இருந்தது. நீண்ட நாட்களுக்கு பயன்படுத்துவதும் பாதுகாப்பானது'' என்பவர் தான் பார்த்துவந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு நாப்கின் தயாரிப்பில் முழு நேரமாக ஈடுபட தொடங்கிவிட்டார்.
''ஆரம்பத்தில் 5 மாதங்கள் வீட்டிலேயே வைத்து நாப்கின் தயாரித்தேன். வாடிக்கையாளர்கள் அதிகரித்ததும் தானேயில் அலுவலகத்தை தொடங்கினோம். தற்போது என்னுடன் சேர்த்து 30 பேர் பணியாற்றி வருகிறோம். இதில் பெரும்பாலானோர் பெண்கள். அவர்கள் பேக்கிங் பணிகளை செய்கிறார்கள்.
என் கணவரும் வேலையை விட்டுவிட்டு என்னுடன் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். தற்போது நாங்கள் இயற்கை சானிட்டரி நாப்கின் தயாரிக்க ரூ.25 லட்சம் முதலீடு செய்துள்ளோம். இதில் பெரும்பாலான தொகையை முதலீட்டாளர்களிடம் இருந்து பெற்றுள்ளோம். இயந்திரங்கள் மற்றும் மூலப் பொருட்களை வாங்குவதற்கு இந்த முதலீட்டைப் பயன்படுத்தியுள்ளோம். அதோடு, சந்தை வியூகம் மற்றும் தொழில் மேம்பாட்டுக்காகவும் செலவு செய்துள்ளோம்.
சமூக ஊடகங்கள் வழியே எங்கள் சந்தைப்படுத்தலை தொடங்கினோம். எங்கள் தயாரிப்பு தொடர்பான படங்களையும், வீடியோக்களையும் அதில் பகிர்ந்தோம். இதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதேவேளையில் அனைத்து தரப்பு மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் அவசியம் என்று நினைத்தேன். எந்த சானிட்டரி நாப்கின் நல்லது என்பதை வீடியோக்கள் மூலம் விளக்கினேன். அதன்பிறகு நிறைய ஆர்டர்கள் வரத்தொடங்கின.
தற்போது மூன்று விதமான இயற்கை சானிட்டரி நாப்கின்களை தயாரித்து வருகிறோம். முதல் தயாரிப்பான காட்டன் சானிட்டரி நாப்கின்களை 3 ஆண்டுகளுக்கு பயன்படுத்த முடியும். ஒரு முறை பயன்படுத்திய பிறகு 4 மணி நேரத்தில் இது உலர்ந்துவிடும். இரண்டாவது தயாரிப்பு, ஒருமுறை பயன்படுத்தும் இயற்கை சானிட்டரி நாப்கின். இது சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்டுள்ளது. மூன்றாவதாக மாதவிடாய் கோப்பையை தயாரித்துள்ளோம். இது சிலிக்கானில் தயாரிக்கப்பட்டது. இந்த கோப்பையை 4 ஆண்டுகளுக்கு பயன்படுத்த முடியும்" என்றார்.
அந்த வாய்ப்பை கனகச்சிதமாக கையாண்டு தொழில்முனைவோர்களாக மாறி நாப்கின் தயாரிப்பில் பல மடங்கு லாபம் ஈட்டி வருகிறார்கள். அப்படிப்பட்ட தொழில் முனைவோர்களுள் ஒருவராக விளங்குகிறார், சுஜாதா பவார். மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள தானே பகுதியை சேர்ந்த இவர், மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்தக்கூடிய இயற்கை சானிட்டரி நாப்கின்களை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் உருவாக்கினார்.
இன்றைக்கு இந்தியா முழுவதும் விற்பனையை விரிவுபடுத்தி இருப்பவர் நேபாளம், சிங்கப்பூர், நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறார். கடந்த பத்தே மாதங்களில் சுமார் ரூ.20 லட்சம் ரூபாய் வணிகம் செய்துள்ளதோடு, 30 பேருக்கு வேலை வாய்ப்பும் கொடுத்துள்ளார்.
33 வயதான சுஜாதா பி.பார்ம் முடித்துவிட்டு எம்.பி.ஏ. படித்தவர். படிப்பை முடித்ததும் 8 ஆண்டுகளாக பல்வேறு மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் பணியாற்றினார். அவரது கணவரும் இதே துறையில் வேலை பார்த்ததால், வருமானத்திற்கு குறைவில்லை. அதனால் வேறு தொழில் தொடங்க வேண்டும் என்று அவர்கள் சிந்திக்கவும் இல்லை. பிறகு எப்படி இயற்கை சானிட்டரி நாப்கின்களை தயாரித்து இந்த நிலையை எட்டிப் பிடித்தார்? என்பதை சுஜாதாவே கூறுகிறார்...
"மாதவிடாய் காலங்களில் சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்தும்போது மற்ற பெண்களை போல் எனக்கும் பிரச்சினை வந்தது. அப்போது கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் இருந்தது. ஒவ்வாமை பிரச்சினையை ஏற்படுத்தாத நாப்கின்களை எப்படி தயாரிப்பது? என்ற ஆராய்ச்சியில் களம் இறங்கினேன்.
நீண்ட ஆய்வுக்கு பிறகு, தற்போது புழக்கத்தில் இருக்கும் சானிட்டரி நாப்கின்களில் பிளாஸ்டிக் மூலக்கூறுகளும், சில ரசாயனப் பொருட்களும் இருப்பதை தெரிந்து கொண்டேன். இதனால்தான் பெண்களுக்கு தோல் வியாதி தொடர்பான பாதிப்புகள் வருவதையும் புரிந்து கொண்டேன்.
அதோடு நோய்த்தொற்றுகள் ஏற்படுவதற்கும் இந்த சானிட்டரி நாப்கின்களே காரணம் என்பதும் புரிந்தது. இதற்கு மாற்றாக நாப்கின்களை தயாரிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அதற்கு பருத்திதான் சரியான மாற்றாக இருக்க முடியும் என்பதை பல்வேறு ஆய்வு தகவல்கள் உறுதிப்படுத்தின. அந்த காலத்தில் கிராமப்புறப்பெண்கள் நீண்ட காலமாக பருத்தி துணிகளையே பயன்படுத்தி வந்தனர்.
அதன் அடிப்படையில் இயற்கையான சானிட்டரி நாப்கின்களை தயாரித்தேன். அதனைப் பயன்படுத்திய பின்பு எனக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. உறவினர்களுக்கும் கொடுத்தேன். எனது நாப்கின்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. எனினும் இரண்டு பிரச்சினைகள் ஏற்பட்டன. முதலில், இந்த நாப்கினைப் பயன்படுத்திய பிறகு மீண்டும் துவைத்துப் பயன்படுத்த இரண்டு நாட்கள் ஆனது. இரண்டாவதாக, இந்த நாப்கின்களை துவைத்து பயன்படுத்தியபோது உடலுக்கு பிரச்சினை ஏற்பட்டது.
சரியாக சுத்தம் செய்யாவிட்டால், இந்த நாப்கின் பயன்படுத்தினாலும் தொற்று ஏற்படும் நிலை இருந்தது. அதன் பிறகு, வடிவமைப்பு நிறுவனத்தின் உதவியோடு, மீண்டும் பயன்படுத்தும் வகையிலான இயற்கை சானிட்டரி நாப்கின்களை தயாரிக்க தொடங்கினேன். அந்த நாப்கின் எளிதில் உலரும் தன்மையுடன் இருந்தது. நீண்ட நாட்களுக்கு பயன்படுத்துவதும் பாதுகாப்பானது'' என்பவர் தான் பார்த்துவந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு நாப்கின் தயாரிப்பில் முழு நேரமாக ஈடுபட தொடங்கிவிட்டார்.
''ஆரம்பத்தில் 5 மாதங்கள் வீட்டிலேயே வைத்து நாப்கின் தயாரித்தேன். வாடிக்கையாளர்கள் அதிகரித்ததும் தானேயில் அலுவலகத்தை தொடங்கினோம். தற்போது என்னுடன் சேர்த்து 30 பேர் பணியாற்றி வருகிறோம். இதில் பெரும்பாலானோர் பெண்கள். அவர்கள் பேக்கிங் பணிகளை செய்கிறார்கள்.
என் கணவரும் வேலையை விட்டுவிட்டு என்னுடன் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். தற்போது நாங்கள் இயற்கை சானிட்டரி நாப்கின் தயாரிக்க ரூ.25 லட்சம் முதலீடு செய்துள்ளோம். இதில் பெரும்பாலான தொகையை முதலீட்டாளர்களிடம் இருந்து பெற்றுள்ளோம். இயந்திரங்கள் மற்றும் மூலப் பொருட்களை வாங்குவதற்கு இந்த முதலீட்டைப் பயன்படுத்தியுள்ளோம். அதோடு, சந்தை வியூகம் மற்றும் தொழில் மேம்பாட்டுக்காகவும் செலவு செய்துள்ளோம்.
சமூக ஊடகங்கள் வழியே எங்கள் சந்தைப்படுத்தலை தொடங்கினோம். எங்கள் தயாரிப்பு தொடர்பான படங்களையும், வீடியோக்களையும் அதில் பகிர்ந்தோம். இதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதேவேளையில் அனைத்து தரப்பு மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் அவசியம் என்று நினைத்தேன். எந்த சானிட்டரி நாப்கின் நல்லது என்பதை வீடியோக்கள் மூலம் விளக்கினேன். அதன்பிறகு நிறைய ஆர்டர்கள் வரத்தொடங்கின.
தற்போது மூன்று விதமான இயற்கை சானிட்டரி நாப்கின்களை தயாரித்து வருகிறோம். முதல் தயாரிப்பான காட்டன் சானிட்டரி நாப்கின்களை 3 ஆண்டுகளுக்கு பயன்படுத்த முடியும். ஒரு முறை பயன்படுத்திய பிறகு 4 மணி நேரத்தில் இது உலர்ந்துவிடும். இரண்டாவது தயாரிப்பு, ஒருமுறை பயன்படுத்தும் இயற்கை சானிட்டரி நாப்கின். இது சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்டுள்ளது. மூன்றாவதாக மாதவிடாய் கோப்பையை தயாரித்துள்ளோம். இது சிலிக்கானில் தயாரிக்கப்பட்டது. இந்த கோப்பையை 4 ஆண்டுகளுக்கு பயன்படுத்த முடியும்" என்றார்.
மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய துணி நாப்கின்களை உபயோகிப்பதால் பல்வேறு நன்மைகள் உள்ளன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
இன்றைய காலகட்டத்தில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நாப்கின்களை பயன்படுத்துகிறார்கள். ஆனால் மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய துணி நாப்கின்களை பெண்கள் ஏனோ விரும்புவதில்லை.
ஒருமுறை மட்டுமே உபயோகப்படுத்தும் நாப்கின்கள் உங்கள் சருமத்தில் காயங்களையும் எரிச்சலையும் ஏற்படுத்தும். சிலருக்கு இதனால் இன்பெக்சன் கூட ஏற்பட்டு விடும். இந்த பகுதியில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய துணி நாப்கின்களை உபயோகிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி காணலாம்.
ஒரு முறை மட்டுமே உபயோகப்படுத்தும் நாப்கின்களில் பிளாஸ்டிக் மெட்டிரியல் உள்ளது.
இது உராய்வின் போது காயங்களையும், அரிப்பையும் உண்டாக்கும், மேலும் இது பெண் உறுப்பிற்கு செல்லும் காற்றை தடுத்து நிறுத்தி விடும்.
ரேயான் மெட்டிரியல் மூலம் செய்யப்பட்ட நாப்கின்கள், பெண் உறுப்பின் ஈரப்பதத்தை உறிஞ்சி விடும்.

ஒரு முறை மட்டுமே உபயோகப்படுத்தும் நாப்கின்கள் பஞ்சு, பிளாஸ்டிக் என எந்த மெட்டிரியல்களால் செய்யப்பட்டிருந்தாலும் கூட இதில் சில கெமிக்கல்கள் கலக்கப்பட்டிருக்கும்.
ஆனால் துணி நெப்கின்கள் இயற்கையான முறையில் தயாரிக்கப்படுபவையாகும்.
துணி நாப்கின்களை நீங்கள் சுகாதாரமாக பயன்படுத்தினால், பல தடவைகள் பயன்படுத்தலாம். பலமுறை உபயோகப்படுத்துவதால் இது சுத்தமாக இருக்குமா என்ற கேள்வி அனைவருக்கு இருப்பது தான்.
ஆனால் இதனை சுத்தம் செய்வது நீங்கள் நினைக்கும் அளவிற்கு கடினமானதல்ல. நீங்கள் இதனை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து, டீ ட்ரீ ஆயில் அல்லது, ஏதேனும் கிருமி நாசினியை கொண்டு சூடான நீரில் சுத்தம் செய்தாலே போதும். இதில் கசிவுகளும் இருக்காது.
இது உங்களுக்கு தேவையான வண்ணங்கள், டிசைன்கள் மற்றும் வடிவங்களில் கிடைக்கின்றன. எனவே இவற்றை கண்டு நீங்கள் முகம் சுழிக்கமாட்டீர்கள் என்பது மட்டும் உறுதி.
ஒருமுறை மட்டுமே உபயோகப்படுத்தும் நாப்கின்கள் உங்கள் சருமத்தில் காயங்களையும் எரிச்சலையும் ஏற்படுத்தும். சிலருக்கு இதனால் இன்பெக்சன் கூட ஏற்பட்டு விடும். இந்த பகுதியில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய துணி நாப்கின்களை உபயோகிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி காணலாம்.
ஒரு முறை மட்டுமே உபயோகப்படுத்தும் நாப்கின்களில் பிளாஸ்டிக் மெட்டிரியல் உள்ளது.
இது உராய்வின் போது காயங்களையும், அரிப்பையும் உண்டாக்கும், மேலும் இது பெண் உறுப்பிற்கு செல்லும் காற்றை தடுத்து நிறுத்தி விடும்.
ரேயான் மெட்டிரியல் மூலம் செய்யப்பட்ட நாப்கின்கள், பெண் உறுப்பின் ஈரப்பதத்தை உறிஞ்சி விடும்.
இதனால் தொற்றுக்களும், புண்களும் உண்டாகும். ஆனால் துணி நாப்கின்களில் இயற்கையான பஞ்சு உபயோகப்படுத்துவதால் எந்த வித பாதிப்பும் ஏற்படாது.

கோப்பு படம்
ஆனால் துணி நெப்கின்கள் இயற்கையான முறையில் தயாரிக்கப்படுபவையாகும்.
துணி நாப்கின்களை நீங்கள் சுகாதாரமாக பயன்படுத்தினால், பல தடவைகள் பயன்படுத்தலாம். பலமுறை உபயோகப்படுத்துவதால் இது சுத்தமாக இருக்குமா என்ற கேள்வி அனைவருக்கு இருப்பது தான்.
ஆனால் இதனை சுத்தம் செய்வது நீங்கள் நினைக்கும் அளவிற்கு கடினமானதல்ல. நீங்கள் இதனை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து, டீ ட்ரீ ஆயில் அல்லது, ஏதேனும் கிருமி நாசினியை கொண்டு சூடான நீரில் சுத்தம் செய்தாலே போதும். இதில் கசிவுகளும் இருக்காது.
இது உங்களுக்கு தேவையான வண்ணங்கள், டிசைன்கள் மற்றும் வடிவங்களில் கிடைக்கின்றன. எனவே இவற்றை கண்டு நீங்கள் முகம் சுழிக்கமாட்டீர்கள் என்பது மட்டும் உறுதி.
மாதவிடாய் நாட்களில், நாப்கின் பயன்படுத்தும்போது பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
மாதவிடாய் பற்றி பொது இடங்களில் பேசுவதையே அருவறுப்பு என நினைப்பவர்கள் ஏராளம். இதனாலேயே உடல் அடையும் மாற்றங்கள் பற்றிய விழிப்பு உணர்வே பல பெண்களுக்கும் இருப்பதில்லை. இதன் பாதிப்பினால், பெண்கள் சில நோய்களுக்கு ஆளாகின்றனர். இதனால் பெண்கள் மனஉளைச்சலுக்கும் ஆளாகின்றனர். ஆரோக்கியத்துக்காக செய்யும் செயல்களில் எதற்காகவும் கூச்சமோ, வெட்கமோ அடையத் தேவையில்லை.
பெரும்பாலான நாப்கின்கள் மறுசுழற்சி செய்யப்படும் காகிதங்களால் தயாரிக்கப்படுகின்றன. மேலும் நாப்கின் தாயாரிப்பில் டயாக்சினும், ஈரத்தை உறிஞ்சுவதற்காக ரசாயனமும் சேர்க்கப்படுகின்றன. இது பெண்களுக்கு கர்ப்பப்பை பாதிப்பை ஏற்படுத்தும். எனவே நாப்கின்களை வாங்கும்போது இரசாயனமற்ற நாப்கின்களை (பாக்கெட்டுகளில் குறிப்பிடப்பட்டிருக்கும்) வாங்குவது நல்லது.

புதிதாக பயன்படுத்த போகும் நாப்கினை உங்கள் கைப்பையில் மற்ற பொருட்களுடன் அல்லது எடுத்துச் சென்று கழிப்பறையின் கதவுகளிலோ வைத்து பயன்படுத்தாதீர்கள். அப்படி பயன்படுத்தினால் நாப்கின்களில் எளிதாக கிருமிகள் பரவ வாய்ப்பு உள்ளது. நாப்கின் ஈரத்தை உறிஞ்சி இருந்தாலும் அல்லது அதிகமான உதிரப் போக்கு இல்லை என்ற காரணத்தால் சில பெண்கள் ஒருநாள் முழுவதும்கூட ஒரே நாப்கினைப் பயன்படுத்துவார்கள். இது பூஞ்சை மற்றும் பாக்டீரியாவால் ஏற்படும் ஒவ்வாமையை ஏற்படுத்தும். இதனால் நாப்கின்களை ஐந்துமணி நேரத்துக்கு ஒருமுறை கட்டாயம் மாற்ற வேண்டும். இரவு நேரங்களில்கூட சோம்பல் பார்க்காமல் இதைச் செய்வது நல்லது.
நாப்கின் பயன்படுத்தியபோது அணிந்திருந்த உள்ளாடைகளை வெண்ணீர் ஊற்றி அலசி சூரிய ஒளியில் நேரடியாக காயவைப்பது நல்லது. ஒவ்வொரு முறை நாப்கின் பயன்படுத்தும்போதும் மிதமான வெண்ணீரில் பிறப்புறுப்பைக் கழுவி சுத்தம் செய்வதை மறக்க வேண்டாம். நாப்கினை பற்றிய விழிப்பு உணர்வு என்பது அதைப் பயன்படுத்துவதைப் போலவே, அதை அப்புறப்படுத்துவதிலும் இருக்க வேண்டும்.
பயன்படுத்தப்பட்ட நாப்கின்களைக் கழிப்பறையிலே போட்டு தண்ணீரை பிளஷ் செய்வது மிகவும் தவறான செயலாகும். இதனால் கழிப்பறையைப் பயன்படுத்துபவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும். பயன்படுத்திய நாப்கினை இரண்டு மூன்று பேப்பர்களில் சுற்றி குப்பைத்தொட்டியில் போடலாம். அப்படி நாப்கின்கள் போடும் குப்பைதொட்டியை அன்றே வீட்டை விட்டு அப்புறப்படுத்திவிடுங்கள், இல்லையெனில் நோய்த்தொற்று ஏற்படும்.
பெரும்பாலான நாப்கின்கள் மறுசுழற்சி செய்யப்படும் காகிதங்களால் தயாரிக்கப்படுகின்றன. மேலும் நாப்கின் தாயாரிப்பில் டயாக்சினும், ஈரத்தை உறிஞ்சுவதற்காக ரசாயனமும் சேர்க்கப்படுகின்றன. இது பெண்களுக்கு கர்ப்பப்பை பாதிப்பை ஏற்படுத்தும். எனவே நாப்கின்களை வாங்கும்போது இரசாயனமற்ற நாப்கின்களை (பாக்கெட்டுகளில் குறிப்பிடப்பட்டிருக்கும்) வாங்குவது நல்லது.
இரசாயனம் கலந்த நாப்கின்களைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு உண்டு. நாப்கின் மாற்றும்போது பயன்படுத்திய நாப்கினை நீக்கி விட்டு, கைகளைக் கழுவாமல், அதே கைகளால் புதிதான நாப்கினை பாக்கெட்டுகளில் இருந்து எடுத்து பயன்படுத்தக் கூடாது. அப்படி செய்யும்போது நுண்ணுயுரிகள் எளிதாக பரவும். இது பிறப்புறுப்புகளில் அரிப்பு, அலர்ஜியை ஏற்படுத்தும்.

புதிதாக பயன்படுத்த போகும் நாப்கினை உங்கள் கைப்பையில் மற்ற பொருட்களுடன் அல்லது எடுத்துச் சென்று கழிப்பறையின் கதவுகளிலோ வைத்து பயன்படுத்தாதீர்கள். அப்படி பயன்படுத்தினால் நாப்கின்களில் எளிதாக கிருமிகள் பரவ வாய்ப்பு உள்ளது. நாப்கின் ஈரத்தை உறிஞ்சி இருந்தாலும் அல்லது அதிகமான உதிரப் போக்கு இல்லை என்ற காரணத்தால் சில பெண்கள் ஒருநாள் முழுவதும்கூட ஒரே நாப்கினைப் பயன்படுத்துவார்கள். இது பூஞ்சை மற்றும் பாக்டீரியாவால் ஏற்படும் ஒவ்வாமையை ஏற்படுத்தும். இதனால் நாப்கின்களை ஐந்துமணி நேரத்துக்கு ஒருமுறை கட்டாயம் மாற்ற வேண்டும். இரவு நேரங்களில்கூட சோம்பல் பார்க்காமல் இதைச் செய்வது நல்லது.
நாப்கின் பயன்படுத்தியபோது அணிந்திருந்த உள்ளாடைகளை வெண்ணீர் ஊற்றி அலசி சூரிய ஒளியில் நேரடியாக காயவைப்பது நல்லது. ஒவ்வொரு முறை நாப்கின் பயன்படுத்தும்போதும் மிதமான வெண்ணீரில் பிறப்புறுப்பைக் கழுவி சுத்தம் செய்வதை மறக்க வேண்டாம். நாப்கினை பற்றிய விழிப்பு உணர்வு என்பது அதைப் பயன்படுத்துவதைப் போலவே, அதை அப்புறப்படுத்துவதிலும் இருக்க வேண்டும்.
பயன்படுத்தப்பட்ட நாப்கின்களைக் கழிப்பறையிலே போட்டு தண்ணீரை பிளஷ் செய்வது மிகவும் தவறான செயலாகும். இதனால் கழிப்பறையைப் பயன்படுத்துபவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும். பயன்படுத்திய நாப்கினை இரண்டு மூன்று பேப்பர்களில் சுற்றி குப்பைத்தொட்டியில் போடலாம். அப்படி நாப்கின்கள் போடும் குப்பைதொட்டியை அன்றே வீட்டை விட்டு அப்புறப்படுத்திவிடுங்கள், இல்லையெனில் நோய்த்தொற்று ஏற்படும்.






