என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
குழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால் சிறுதானிய சத்து உருண்டை செய்து கொடுக்கலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
நாட்டுச்சர்க்கரை - 2 கப்
தேங்காய் துருவல் - அரை கப்
கோதுமை - கால் கப்
கம்பு - கால் கப்
கொள்ளு - கால் கப்
பச்சைப் பயறு - கால் கப்
காராமணி - கால் கப்
பொரிக்கடலை - கால் கப்
எள் - 2 தேக்கரண்டி

செய்முறை :
நாட்டுச்சர்க்கரையை பொடித்து கொள்ளவும்.
அனைத்து தானியங்களையும் வெறும் வாணலியில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.
அரைத்த மாவுடன் பொரிக்கடலை, பொடித்த நாட்டுச்சர்க்கரை, தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
நெய்யை உருக்கி மாவில் ஊற்றவும்.
சற்று சூடாக இருக்கும் போதே மாவை உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.
நாட்டுச்சர்க்கரை - 2 கப்
தேங்காய் துருவல் - அரை கப்
கோதுமை - கால் கப்
கம்பு - கால் கப்
கொள்ளு - கால் கப்
பச்சைப் பயறு - கால் கப்
காராமணி - கால் கப்
பொரிக்கடலை - கால் கப்
எள் - 2 தேக்கரண்டி
நெய் - தேவையான அளவு

செய்முறை :
நாட்டுச்சர்க்கரையை பொடித்து கொள்ளவும்.
அனைத்து தானியங்களையும் வெறும் வாணலியில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.
அரைத்த மாவுடன் பொரிக்கடலை, பொடித்த நாட்டுச்சர்க்கரை, தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
நெய்யை உருக்கி மாவில் ஊற்றவும்.
சற்று சூடாக இருக்கும் போதே மாவை உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.
சத்தான சிறுதானிய இனிப்பு உருண்டை ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சருமத்தில் கரும்புள்ளி, சுருக்கம் உள்ளவர்கள் பால் பவுடரை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் நல்ல பலனை காணலாம். இன்று பால் பவுடரை எந்த முறையில் சருமத்திற்கு பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
பால் பவுடருடன் சிறிது எலுமிச்சை அல்லது ஆரஞ்சு சாறு சேர்த்து பல்வேறு விதமான பேஷியலை முயற்சி செய்யுங்கள். அது வளமான பொலிவை நமது முகத்திற்கு கொடுக்கும். பாலை விடவும் இது சிறந்தது. ஏனெனில் பாலை விட பால் பவுடரில் சில ஊட்டச்சத்துக்களின் காம்பவுண்ட்டுகள் சேர்க்கப்பட்டிருக்கும். அது சருமத்தை மென்மைப்படுத்த உதவும்.
எண்ணெய் பசையான சருமம் உள்ளவர்களாக இருந்தால் அவர்களுக்கு மிகவும் ஏற்ற முறை இதுதான். சருமத்தில் உள்ள எண்ணெய் பசை அதனால் உருவாகும் பருக்கள் ஆகியவற்றைக் குறைத்து சருமத்தின் நிறத்தைக் கூட்டும்.
ஒரு ஸ்பூன் பால் பவடருடன் ஃபிரஷ்ஷாக எடுத்த எலுமிச்சை சாறினை இரண்டு ஸ்பூன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். அந்த கலவையை முகத்தை நன்கு கழுவி விட்டு முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் இடைவெளி இல்லாமல் நன்கு அப்ளை செய்து உலர விடுங்கள். நன்கு உலர்ந்தபின் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவுங்கள். வாரம் ஒரு முறை இந்த முறையைப் பயன்படுத்திப் பாருங்கள். சிறந்த ரிசல்ட்டை பெற்றிருப்பதை உணர்வீர்கள்.
ஒரு டேபிள் ஸ்பூன் பால் பவுடருடன் சில துளிகள் குங்குமப்பூவைச் சேர்த்து அதனுடன் பேஸ்ட் செய்வதற்கான சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு பேஸ்ட்டாக்கிக் கொள்ள வேண்டும். அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் அப்ளை செய்து அதை அப்படியே அரை மணி நேரம் உலர விடுங்கள். அதன் பின்னர் குளிர்ந்த நீரால் நன்கு கழுவி விடுங்கள்.
எண்ணெய் பசையான சருமம் உள்ளவர்களாக இருந்தால் அவர்களுக்கு மிகவும் ஏற்ற முறை இதுதான். சருமத்தில் உள்ள எண்ணெய் பசை அதனால் உருவாகும் பருக்கள் ஆகியவற்றைக் குறைத்து சருமத்தின் நிறத்தைக் கூட்டும்.
ஒரு ஸ்பூன் பால் பவடருடன் ஃபிரஷ்ஷாக எடுத்த எலுமிச்சை சாறினை இரண்டு ஸ்பூன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். அந்த கலவையை முகத்தை நன்கு கழுவி விட்டு முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் இடைவெளி இல்லாமல் நன்கு அப்ளை செய்து உலர விடுங்கள். நன்கு உலர்ந்தபின் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவுங்கள். வாரம் ஒரு முறை இந்த முறையைப் பயன்படுத்திப் பாருங்கள். சிறந்த ரிசல்ட்டை பெற்றிருப்பதை உணர்வீர்கள்.
ஒரு டேபிள் ஸ்பூன் பால் பவுடருடன் சில துளிகள் குங்குமப்பூவைச் சேர்த்து அதனுடன் பேஸ்ட் செய்வதற்கான சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு பேஸ்ட்டாக்கிக் கொள்ள வேண்டும். அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் அப்ளை செய்து அதை அப்படியே அரை மணி நேரம் உலர விடுங்கள். அதன் பின்னர் குளிர்ந்த நீரால் நன்கு கழுவி விடுங்கள்.
நாம் தினமும் கைகளுக்கான சில உடற்பயிற்சி முறைகளை தொடர்ந்து செய்து வந்தால், கைகளில் ஓடும் ரத்தத்தின் வேகம் அதிகரித்து, கைகளில் தேங்கி இருக்கும் தேவையற்ற கொழுப்புக்களை கரைக்கச் செய்கிறது.
பெரும்பாலும் நிறைய பேருக்கு உடலில் இருக்கும் கொழுப்புகள் குறைந்தாலும் கைகளில் தொங்கும் சதைகள் மட்டும் குறையாமல் அப்படியே இருக்கும். எனவே நம் கைகளில் இருக்கும் தொங்கும் சதைகள் நமது அழகை பாதிக்கும் வகையில் அமைந்திருக்கும். இதற்காக நாம் செய்யும் டயட் முறைகள் கூட நமக்கு பயனளிப்பதில்லை.
நாம் தினமும் கைகளுக்கான சில உடற்பயிற்சி முறைகளை தொடர்ந்து செய்து வந்தால், கைகளில் ஓடும் ரத்தத்தின் வேகம் அதிகரித்து, கைகளில் தேங்கி இருக்கும் தேவையற்ற கொழுப்புக்களை கரைக்கச் செய்கிறது.
கை சுற்றும் உடற்பயிற்சி
நமது கால்களுக்கு போதிய இடைவெளி விட்டு நேராக நின்றுக் கொண்டு இரண்டு கைகளையும் பக்கவாட்டில் நீட்டிக் கொள்ள வேண்டும். பின் நமது கைகளை மட்டும் கடிகாரம் சுற்றுவது போல 20 நிமிடம் சுற்றி, பின் கைகளை தளர்வாக சாதாரண நிலைக்கு கொண்டு வர வேண்டும். இதே போல ஒரு நாளைக்கு 15 முறைகள் செய்து வர வேண்டும்.
கை அலை உடற்பயிற்சி
கால்களுக்கு போதிய இடைவெளி விட்டு நின்று கொண்டு கைகளை பக்கவாட்டில் நீட்டிக் கொள்ள வேண்டும். பின் அலை அடிப்பது போல கைகளை மேலிருந்து கீழாக 20 முறைகள் அசைக்க வேண்டும்.
முழங்கை உடற்பயிற்சி
நாம் முழங்கை உடற்பயிற்சியை செய்யும் போது மட்டும் கொஞ்சம் வேகமாக செய்ய வேண்டும். கால்களுக்கு போதிய இடைவெளி விட்டு, கைகளை பக்கவாட்டில் நீட்டி, பின் கைகளை மடக்கி, முழங்கைகளை பின்னோக்கி தள்ள வேண்டும்.

நமஸ்கார உடற்பயிற்சி
கால்களுக்கு போதிய இடைவெளி விட்டு, கைகளை பின் பக்கம் தலைக்கு நேராக கொண்டு வந்து கீழ் நோக்கி வணக்கம் செய்வதைப் போல் வைத்து, உள்ளங்கைகள் சமமாக தலைக்கு நடுவில் இருக்க வேண்டும். பின் வணக்கம் சொல்வது போல் கைகளை நன்கு அசைக்க வேண்டும்.
கைகளை உயர்த்தி தாழ்த்தும் உடற்பயிற்சி
நாற்காலியில் உட்காருவதைப் போன்று கால்களை வளைத்து, நமது இரண்டு கைகளால் மேலிருந்து ஏதோ கனமான பொருட்களை எடுப்பதைப் போல கைகளை உயர்த்தி பின் தோள்பட்டை வரை கைகளை இறக்க வேண்டும். இதே போல 20 முறைகள் தொடர்ந்து செய்து வர வேண்டும்.
புஷ் அப் உடற்பயிற்சி
முதலில் தரையில் அமர்ந்து, தரையை பார்த்தவாறு கால்களை நீட்டி, கைகளை ஊன்றி தோள்பட்டை மற்றும் உடலை உயர்த்த வேண்டும். பின் மீண்டும் தரை நோக்கி உடலையும் முழங்கைகளையும் வளைத்து, நமது மார்பிற்கும் தரைக்கும் 3 இன்ச் இடைவெளி இருக்கும் படி பார்த்துக் கொண்டு கைகளை ஊன்றி எழுந்து , பின் தரைக்கு மீண்டும் உடலை வளைப்பதை போன்று செய்ய வேண்டும்.
சுவற்றில் செய்யும் உடற்பயிற்சி
சுவற்றிற்கு எதிரில் நேராக நிற்க வேண்டும். பின் தரையில் தண்டால் எடுப்பது போல சுவற்றில் கைகளை ஊன்றி, முன்னும் பின்னும் வேகமாய் சுவரில் இடிக்காமல் செல்ல வேண்டும். இந்த பயிற்சியை செய்யும் போது, சுவற்றிற்கும் நமக்கும் 2 இன்ச் அளவு இடைவெளி இருக்க வேண்டும்.
முட்டி போடும் உடற்பயிற்சி
முதலில் தரையில் முட்டி போட்டபடி நின்று கொண்டு பின் வலது காலை மட்டும் பாதம் தரையில் படும்படி ஊன்ற வேண்டும். இடது கால் முட்டி போட்ட நிலையில் இருக்க வேண்டும். பின் வலது கையை பின்பக்கம் வளைக்காமல் நீட்டி, பக்கவாட்டில் கைகளை கொண்டு வர வேண்டும் இதேபோல 20 முறைகள் செய்து வர விரைவில் சதைப்பை குறைந்து விடும்.
நாம் தினமும் கைகளுக்கான சில உடற்பயிற்சி முறைகளை தொடர்ந்து செய்து வந்தால், கைகளில் ஓடும் ரத்தத்தின் வேகம் அதிகரித்து, கைகளில் தேங்கி இருக்கும் தேவையற்ற கொழுப்புக்களை கரைக்கச் செய்கிறது.
கை சுற்றும் உடற்பயிற்சி
நமது கால்களுக்கு போதிய இடைவெளி விட்டு நேராக நின்றுக் கொண்டு இரண்டு கைகளையும் பக்கவாட்டில் நீட்டிக் கொள்ள வேண்டும். பின் நமது கைகளை மட்டும் கடிகாரம் சுற்றுவது போல 20 நிமிடம் சுற்றி, பின் கைகளை தளர்வாக சாதாரண நிலைக்கு கொண்டு வர வேண்டும். இதே போல ஒரு நாளைக்கு 15 முறைகள் செய்து வர வேண்டும்.
கை அலை உடற்பயிற்சி
கால்களுக்கு போதிய இடைவெளி விட்டு நின்று கொண்டு கைகளை பக்கவாட்டில் நீட்டிக் கொள்ள வேண்டும். பின் அலை அடிப்பது போல கைகளை மேலிருந்து கீழாக 20 முறைகள் அசைக்க வேண்டும்.
முழங்கை உடற்பயிற்சி
நாம் முழங்கை உடற்பயிற்சியை செய்யும் போது மட்டும் கொஞ்சம் வேகமாக செய்ய வேண்டும். கால்களுக்கு போதிய இடைவெளி விட்டு, கைகளை பக்கவாட்டில் நீட்டி, பின் கைகளை மடக்கி, முழங்கைகளை பின்னோக்கி தள்ள வேண்டும்.

நமஸ்கார உடற்பயிற்சி
கால்களுக்கு போதிய இடைவெளி விட்டு, கைகளை பின் பக்கம் தலைக்கு நேராக கொண்டு வந்து கீழ் நோக்கி வணக்கம் செய்வதைப் போல் வைத்து, உள்ளங்கைகள் சமமாக தலைக்கு நடுவில் இருக்க வேண்டும். பின் வணக்கம் சொல்வது போல் கைகளை நன்கு அசைக்க வேண்டும்.
கைகளை உயர்த்தி தாழ்த்தும் உடற்பயிற்சி
நாற்காலியில் உட்காருவதைப் போன்று கால்களை வளைத்து, நமது இரண்டு கைகளால் மேலிருந்து ஏதோ கனமான பொருட்களை எடுப்பதைப் போல கைகளை உயர்த்தி பின் தோள்பட்டை வரை கைகளை இறக்க வேண்டும். இதே போல 20 முறைகள் தொடர்ந்து செய்து வர வேண்டும்.
புஷ் அப் உடற்பயிற்சி
முதலில் தரையில் அமர்ந்து, தரையை பார்த்தவாறு கால்களை நீட்டி, கைகளை ஊன்றி தோள்பட்டை மற்றும் உடலை உயர்த்த வேண்டும். பின் மீண்டும் தரை நோக்கி உடலையும் முழங்கைகளையும் வளைத்து, நமது மார்பிற்கும் தரைக்கும் 3 இன்ச் இடைவெளி இருக்கும் படி பார்த்துக் கொண்டு கைகளை ஊன்றி எழுந்து , பின் தரைக்கு மீண்டும் உடலை வளைப்பதை போன்று செய்ய வேண்டும்.
சுவற்றில் செய்யும் உடற்பயிற்சி
சுவற்றிற்கு எதிரில் நேராக நிற்க வேண்டும். பின் தரையில் தண்டால் எடுப்பது போல சுவற்றில் கைகளை ஊன்றி, முன்னும் பின்னும் வேகமாய் சுவரில் இடிக்காமல் செல்ல வேண்டும். இந்த பயிற்சியை செய்யும் போது, சுவற்றிற்கும் நமக்கும் 2 இன்ச் அளவு இடைவெளி இருக்க வேண்டும்.
முட்டி போடும் உடற்பயிற்சி
முதலில் தரையில் முட்டி போட்டபடி நின்று கொண்டு பின் வலது காலை மட்டும் பாதம் தரையில் படும்படி ஊன்ற வேண்டும். இடது கால் முட்டி போட்ட நிலையில் இருக்க வேண்டும். பின் வலது கையை பின்பக்கம் வளைக்காமல் நீட்டி, பக்கவாட்டில் கைகளை கொண்டு வர வேண்டும் இதேபோல 20 முறைகள் செய்து வர விரைவில் சதைப்பை குறைந்து விடும்.
பெரும்பாலும் சுற்றுச்சூழல் மாசு, அலர்ஜி காரணமாக சைனஸ் பிரச்சினை வருகிறது. அலர்ஜி ஏற்படுத்தும் உணவுகளை கண்டறிந்து அவற்றை சாப்பிடுவதை அறவே தவிர்க்க வேண்டும்.
பனிக்காலம் வந்தால், சிலருக்கு விடாத தலைவலி மற்றும் தும்மல் பாடாய் படுத்திவிடும். கேட்டால், ‘‘சைனஸ் பிரச்சினைங்க, தீரவே இல்லை‘‘ எனக் கவலையோடு சொல்வார்கள்.
நமது மூக்கை சுற்றி, நான்கு காற்று பைகள் உண்டு. மூளை மூக்கு, கன்னம் மூக்கு, மூக்கு நெற்றி இணையும் இடம், கண்கள் மற்றும் மூக்குக்கு இடைப்பட்ட பகுதிகளில் இந்த காற்றுப் பைகள் அமைந்திருக்கின்றன. இந்த காற்றுப் பைகள், நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனை குறிப்பிட்ட வெப்பநிலையில் நுரையீரலுக்கு எடுத்துச் செல்ல உதவுகின்றன. இந்த காற்றுப் பைகளே சைனஸ் பகுதி என அழைக்கப்படுகின்றன.
சைனஸ் பகுதியில் ஒரு திரவம் சுரந்து, நமது மூக்கில் உள்ள சளி சவ்வுக்கு வரும். இந்த சளி சவ்வுதான், நாம் சுவாசிக்கும் வெப்பமான காற்றை ஈரபடுத்தி, சைனஸ் பகுதிக்கு அனுப்புகிறது. சைனஸ் பகுதியில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், திரவம் காற்றுப் பையிலேயே தங்கிவிடும். இதன் காரணமாக பல பாதிப்புகள் முகத்தில் ஏற்படக்கூடும். சைனஸ் பகுதியில் ஏற்படும் இந்த பிரச்சினைக்கு ‘சைனசிட்டிஸ்‘ என்று பெயர்.
மூக்குத் துவாரத்தைப் பிரிக்கும் எலும்பு வளைவாக இருப்பதன் காரணமாகவும், சைனஸ் பகுதிக்கு அருகில் இருக்கும் எலும்பின் முறையற்ற வளர்ச்சியாலும், மூக்குப் பகுதிக்குள் ‘பாலிப்‘ எனப்படும் மூக்கு சதை வளர்ச்சி காரணமாகவும், சைனஸ் பிரச்சினை வருகிறது. பெரும்பாலும் சுற்றுச்சூழல் மாசு, அலர்ஜி காரணமாக சைனஸ் பிரச்சினை வருகிறது. கன்னம், நெற்றிப் பகுதியில் கடுமையான வலி ஏற்படும்.
தலையை கீழே கவிழ்த்தால், தாங்க முடியாத தலைவலி இருக்கும். அடர்த்தியான மஞ்சள் நிறத்தில் சளி வெளியேறும், சிலருக்கு சளி சிந்தும்போது, ரத்தமும் சேர்ந்து வரும். சளி, கடுமையான நாற்றத்துடன் இருக்கும். மூக்கை தொட்டாலே கடுமையான வலி ஏற்படும். இரவு நேரத்தில் இருமல் வரும். காலையில் எழுந்தவுடன் தொடர்ச்சியாக தும்மல் வரும். பல் வலி, காது வலி ஏற்படும். வாசனை, சுவை உணர்வு குறையும். காய்ச்சல் வரலாம், உடல் சோர்வாக இருக்கும். வேலையில் கவனம் செலுத்த முடியாது.
இந்த பிரச்சினை உள்ளவர்கள் பனிக்காலத்தில் அதிகாலை, இரவு வேளைகளில் வெளியே செல்வதை குறைத்துக்கொள்ளவும். தலையணை, படுக்கையறை ஆகியவற்றை சுத்தமாக வைத்திருக்கவும். கைக்குட்டைகளை கொதிக்கும் தண்ணீரில் சில நிமிடங்கள் ஊறவைத்து, துவைத்து பயன்படுத்தவும். கைக்குட்டையை அடிக்கடி மாற்றவும். சைனஸ் பிரச்சினை உள்ளவர்கள் செடி, பூக்கள், மரங்கள் இருக்கும் பகுதியில் உலவ வேண்டாம்.
அசுத்தமான நீர்நிலைகளில் குளிக்க வேண்டாம். குளிர்பானம் குடிப்பதை தவிர்க்க வேண்டும். அலர்ஜி ஏற்படுத்தும் உணவுகளை கண்டறிந்து அவற்றை சாப்பிடுவதை அறவே தவிர்க்க வேண்டும். மூக்குப்பொடி போடுவதையும், புகை பிடிப்பதையும் தவிர்க்க வேண்டும்.
நமது மூக்கை சுற்றி, நான்கு காற்று பைகள் உண்டு. மூளை மூக்கு, கன்னம் மூக்கு, மூக்கு நெற்றி இணையும் இடம், கண்கள் மற்றும் மூக்குக்கு இடைப்பட்ட பகுதிகளில் இந்த காற்றுப் பைகள் அமைந்திருக்கின்றன. இந்த காற்றுப் பைகள், நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனை குறிப்பிட்ட வெப்பநிலையில் நுரையீரலுக்கு எடுத்துச் செல்ல உதவுகின்றன. இந்த காற்றுப் பைகளே சைனஸ் பகுதி என அழைக்கப்படுகின்றன.
சைனஸ் பகுதியில் ஒரு திரவம் சுரந்து, நமது மூக்கில் உள்ள சளி சவ்வுக்கு வரும். இந்த சளி சவ்வுதான், நாம் சுவாசிக்கும் வெப்பமான காற்றை ஈரபடுத்தி, சைனஸ் பகுதிக்கு அனுப்புகிறது. சைனஸ் பகுதியில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், திரவம் காற்றுப் பையிலேயே தங்கிவிடும். இதன் காரணமாக பல பாதிப்புகள் முகத்தில் ஏற்படக்கூடும். சைனஸ் பகுதியில் ஏற்படும் இந்த பிரச்சினைக்கு ‘சைனசிட்டிஸ்‘ என்று பெயர்.
மூக்குத் துவாரத்தைப் பிரிக்கும் எலும்பு வளைவாக இருப்பதன் காரணமாகவும், சைனஸ் பகுதிக்கு அருகில் இருக்கும் எலும்பின் முறையற்ற வளர்ச்சியாலும், மூக்குப் பகுதிக்குள் ‘பாலிப்‘ எனப்படும் மூக்கு சதை வளர்ச்சி காரணமாகவும், சைனஸ் பிரச்சினை வருகிறது. பெரும்பாலும் சுற்றுச்சூழல் மாசு, அலர்ஜி காரணமாக சைனஸ் பிரச்சினை வருகிறது. கன்னம், நெற்றிப் பகுதியில் கடுமையான வலி ஏற்படும்.
தலையை கீழே கவிழ்த்தால், தாங்க முடியாத தலைவலி இருக்கும். அடர்த்தியான மஞ்சள் நிறத்தில் சளி வெளியேறும், சிலருக்கு சளி சிந்தும்போது, ரத்தமும் சேர்ந்து வரும். சளி, கடுமையான நாற்றத்துடன் இருக்கும். மூக்கை தொட்டாலே கடுமையான வலி ஏற்படும். இரவு நேரத்தில் இருமல் வரும். காலையில் எழுந்தவுடன் தொடர்ச்சியாக தும்மல் வரும். பல் வலி, காது வலி ஏற்படும். வாசனை, சுவை உணர்வு குறையும். காய்ச்சல் வரலாம், உடல் சோர்வாக இருக்கும். வேலையில் கவனம் செலுத்த முடியாது.
இந்த பிரச்சினை உள்ளவர்கள் பனிக்காலத்தில் அதிகாலை, இரவு வேளைகளில் வெளியே செல்வதை குறைத்துக்கொள்ளவும். தலையணை, படுக்கையறை ஆகியவற்றை சுத்தமாக வைத்திருக்கவும். கைக்குட்டைகளை கொதிக்கும் தண்ணீரில் சில நிமிடங்கள் ஊறவைத்து, துவைத்து பயன்படுத்தவும். கைக்குட்டையை அடிக்கடி மாற்றவும். சைனஸ் பிரச்சினை உள்ளவர்கள் செடி, பூக்கள், மரங்கள் இருக்கும் பகுதியில் உலவ வேண்டாம்.
அசுத்தமான நீர்நிலைகளில் குளிக்க வேண்டாம். குளிர்பானம் குடிப்பதை தவிர்க்க வேண்டும். அலர்ஜி ஏற்படுத்தும் உணவுகளை கண்டறிந்து அவற்றை சாப்பிடுவதை அறவே தவிர்க்க வேண்டும். மூக்குப்பொடி போடுவதையும், புகை பிடிப்பதையும் தவிர்க்க வேண்டும்.
சிவப்பு அவலில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று சிவப்பு அவலில் சத்தான சுவையான லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சிவப்பு அவல் - 3/4 கப்
பொட்டுக்கடலை - 1/4 கப்
சர்க்கரை - 1/4 கப்
ஏலக்காய் - 1
நெய் - 1/4 கப்

செய்முறை :
சிவப்பு அவலை 5 நிமிடங்கள் வாணலியில் இளஞ்சுட்டில் நிறம் மாறாமல் வறுக்கவும்.
பொட்டுக்கடலையை 2 நிமிடங்களுக்கு இளஞ்சுட்டில் வறுத்து, ஆற வைக்கவும்.
அவல், பொட்டுக்கடலை, சர்க்கரை, ஏலக்காய் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
அரைத்ததை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி உருகியதும் முந்திரியை போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.
அடுத்து அதில் அரைத்த அவல் மாவை சேர்த்து 5 நிமிடன் கிளறவும்.
சற்று சூடு ஆறியதும் சுத்தமான கைகளால் லட்டாக உருட்டி எடுத்து ஒரு டப்பாவில் வைக்கவும்.
இதை ஒரு வாரம் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.
சூப்பரான சிவப்பு அவல் லட்டு ரெடி.
சிவப்பு அவல் - 3/4 கப்
பொட்டுக்கடலை - 1/4 கப்
சர்க்கரை - 1/4 கப்
ஏலக்காய் - 1
நெய் - 1/4 கப்
முந்திரி - 1 டீஸ்பூன்

செய்முறை :
சிவப்பு அவலை 5 நிமிடங்கள் வாணலியில் இளஞ்சுட்டில் நிறம் மாறாமல் வறுக்கவும்.
பொட்டுக்கடலையை 2 நிமிடங்களுக்கு இளஞ்சுட்டில் வறுத்து, ஆற வைக்கவும்.
அவல், பொட்டுக்கடலை, சர்க்கரை, ஏலக்காய் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
அரைத்ததை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி உருகியதும் முந்திரியை போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.
அடுத்து அதில் அரைத்த அவல் மாவை சேர்த்து 5 நிமிடன் கிளறவும்.
சற்று சூடு ஆறியதும் சுத்தமான கைகளால் லட்டாக உருட்டி எடுத்து ஒரு டப்பாவில் வைக்கவும்.
இதை ஒரு வாரம் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.
சூப்பரான சிவப்பு அவல் லட்டு ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கோபப்படுவது முற்றிலும் தவறு என்று சொல்ல முடியாது. நியாயமான விஷயத்திற்கு கோபப்படலாம். ஆனால் சுற்றி இருப்பவர்களை பாதிக்கும் வகையில் அந்த கோபம் அமைந்துவிடக் கூடாது.
பொது இடத்தில் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்ற பக்குவம் சிலருக்கு தெரியாது. ஏதாவதொரு பிரச்சினையை மனதில் போட்டு குழப்பிக்கொண்டிருப்பார்கள். அதற்கு எப்படி முடிவெடுப்பது என்று தெரியாமல் தடுமாறும் மனநிலையில் இருப்பார்கள். அந்த சமயத்தில் மற்றவர்கள் ஜாலியான மனநிலையிலோ, கேலி செய்யும் தொனியிலோ பேசினால் உக்கிரமாகி கோபத்தை வெளிப்படுத்தி மற்றவர்களிடம் கொட்டிவிடுவார்கள்.
அவர்கள் எதற்காக கோபப்படுகிறார்கள் என்பது சம்பந்தப்பட்டவருக்கு புரியாது. இப்படி சம்பந்தமில்லாமல் அடுத்தவர்கள் மீது கோபப்படுவது பலருக்கு பழக்கமாகிவிட்டது. பின்னர் சகஜ நிலைக்கு திரும்பிய பிறகு சமாதானப்படுத்துவார்கள். ஆயிரம்தான் சமாதானம் சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் பலரும் இருக்கமாட்டார்கள். அதனால் தேவையில்லாமல் அவர்களுக்கிடையே மனஸ்தாபம் உருவாகி விரிசல் ஏற்பட்டுவிடும்.
கோபம் என்பது வாழ்க்கையில் வேண்டாத விளைவுகளை ஏற்படுத்தும். தான் பேசுவதை நியாயப்படுத்தியே காட்டும். வேண்டாத கடும் வார்த்தைகளை வெளிக்கொண்டுவரும். நம்மைப் பற்றிய தவறான அபிப்ராயத்தை மற்றவர்களிடம் விதைத்துவிடும். கோபம் எல்லோருக்கும் வரக்கூடிய ஒன்றுதான். அதேவேளையில் அது விவேகமானதாக இருக்க வேண்டும். எந்த இடத்தில் எப்போது கோபத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற வரைமுறை இருக்கிறது. நம் கோபத்தை மற்றவர்கள் மதிக்க வேண்டும் என்று நினைத்தால் நாம் அதை நியாயமான முறையில் வெளிப்படுத்த வேண்டும்.
நம்முடைய கோபம் சம்பந்தப்பட்டவர்களுக்கு புரிய வேண்டும். அதில் உண்மைத்தன்மையும் இருக்க வேண்டும். அப்போது தான் நமக்கு நியாயம் கிடைக்கும். நாம் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை சம்பந்தப்பட்டவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். அதற்கு வலு சேர்க்கும் விதமாக நம்முடைய ஆதங்கம் வெளிப்பட வேண்டும். அதை விட்டுவிட்டு அவர்களை ஆத்திரப்படவைக்கும் விதத்தில் நடந்துகொள்ளக்கூடாது. அதனால் எந்த பிரயோஜனமுமில்லை.
நம்முடைய எதிர்பார்ப்பு நிறைவேறாவிட்டால் கோபம் வரலாம். அது நமக்கு நியாயமானதாகவும் தெரியலாம். அதேவேளையில் மற்றவர்களின் சூழ்நிலையையும் புரிந்துகொள்ள வேண்டும். வெறும் கோபம் மட்டும் நியாயத்தை பெற்றுத் தந்துவிடாது. காட்டுத் தீ போன்று கொடூரமானது கோபம். அதிலும் பொது இடத்தில் பலர் முன் கோபப்படும்போது நம்முடைய பொறுமையற்ற குணத்தை அது பிரதிபலிக்கும்.
நம்மை பற்றிய தவறான அபிப்பிராயங்களை அவர்களிடம் உண்டாக்கிவிடும். ‘பொறுப்பற்றவர்கள் தான் இப்படி பொது இடத்தில் கோபப்படுவார்கள். தங்கள் இயலாமையை வெளிப்படுத்த இப்படி நடந்து கொள்வார்கள்’ என்று கோபப்படுபவர்களை கடுமையாக சாடுவார்கள். சிலர் எப்போது ‘நாலு பேர் கூடுவார்கள். நம் கோபத்தை காட்டலாம்’ என்று காத்திருப்பார்கள். தாம் கோபப்படுவதை பார்த்து மற்றவர்கள் பயப்பட வேண்டும், தனக்கு அடங்கி நடக்க வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்ப்பார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்ப்பது எதுவும் நடக்காது.
கோபப்படுவது முற்றிலும் தவறு என்று சொல்ல முடியாது. நியாயமான விஷயத்திற்கு கோபப்படலாம். ஆனால் சுற்றி இருப்பவர்களை பாதிக்கும் வகையில் அந்த கோபம் அமைந்துவிடக் கூடாது. கோபம் என்பது மனிதர்களுக்கு தேவையான ஒன்று தான். அதை எப்படி எங்கே எந்த அளவு வெளிப்படுத்த வேண்டும் என்ற விதி இருக்கிறது. நாம் யாரிடம் கோபத்தை காண்பிக்கிறோம், எதற்காக கோபப்படுகிறோம் என்பதையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அவர்கள் எதற்காக கோபப்படுகிறார்கள் என்பது சம்பந்தப்பட்டவருக்கு புரியாது. இப்படி சம்பந்தமில்லாமல் அடுத்தவர்கள் மீது கோபப்படுவது பலருக்கு பழக்கமாகிவிட்டது. பின்னர் சகஜ நிலைக்கு திரும்பிய பிறகு சமாதானப்படுத்துவார்கள். ஆயிரம்தான் சமாதானம் சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் பலரும் இருக்கமாட்டார்கள். அதனால் தேவையில்லாமல் அவர்களுக்கிடையே மனஸ்தாபம் உருவாகி விரிசல் ஏற்பட்டுவிடும்.
கோபம் என்பது வாழ்க்கையில் வேண்டாத விளைவுகளை ஏற்படுத்தும். தான் பேசுவதை நியாயப்படுத்தியே காட்டும். வேண்டாத கடும் வார்த்தைகளை வெளிக்கொண்டுவரும். நம்மைப் பற்றிய தவறான அபிப்ராயத்தை மற்றவர்களிடம் விதைத்துவிடும். கோபம் எல்லோருக்கும் வரக்கூடிய ஒன்றுதான். அதேவேளையில் அது விவேகமானதாக இருக்க வேண்டும். எந்த இடத்தில் எப்போது கோபத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற வரைமுறை இருக்கிறது. நம் கோபத்தை மற்றவர்கள் மதிக்க வேண்டும் என்று நினைத்தால் நாம் அதை நியாயமான முறையில் வெளிப்படுத்த வேண்டும்.
நம்முடைய கோபம் சம்பந்தப்பட்டவர்களுக்கு புரிய வேண்டும். அதில் உண்மைத்தன்மையும் இருக்க வேண்டும். அப்போது தான் நமக்கு நியாயம் கிடைக்கும். நாம் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை சம்பந்தப்பட்டவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். அதற்கு வலு சேர்க்கும் விதமாக நம்முடைய ஆதங்கம் வெளிப்பட வேண்டும். அதை விட்டுவிட்டு அவர்களை ஆத்திரப்படவைக்கும் விதத்தில் நடந்துகொள்ளக்கூடாது. அதனால் எந்த பிரயோஜனமுமில்லை.
நம்முடைய எதிர்பார்ப்பு நிறைவேறாவிட்டால் கோபம் வரலாம். அது நமக்கு நியாயமானதாகவும் தெரியலாம். அதேவேளையில் மற்றவர்களின் சூழ்நிலையையும் புரிந்துகொள்ள வேண்டும். வெறும் கோபம் மட்டும் நியாயத்தை பெற்றுத் தந்துவிடாது. காட்டுத் தீ போன்று கொடூரமானது கோபம். அதிலும் பொது இடத்தில் பலர் முன் கோபப்படும்போது நம்முடைய பொறுமையற்ற குணத்தை அது பிரதிபலிக்கும்.
நம்மை பற்றிய தவறான அபிப்பிராயங்களை அவர்களிடம் உண்டாக்கிவிடும். ‘பொறுப்பற்றவர்கள் தான் இப்படி பொது இடத்தில் கோபப்படுவார்கள். தங்கள் இயலாமையை வெளிப்படுத்த இப்படி நடந்து கொள்வார்கள்’ என்று கோபப்படுபவர்களை கடுமையாக சாடுவார்கள். சிலர் எப்போது ‘நாலு பேர் கூடுவார்கள். நம் கோபத்தை காட்டலாம்’ என்று காத்திருப்பார்கள். தாம் கோபப்படுவதை பார்த்து மற்றவர்கள் பயப்பட வேண்டும், தனக்கு அடங்கி நடக்க வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்ப்பார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்ப்பது எதுவும் நடக்காது.
கோபப்படுவது முற்றிலும் தவறு என்று சொல்ல முடியாது. நியாயமான விஷயத்திற்கு கோபப்படலாம். ஆனால் சுற்றி இருப்பவர்களை பாதிக்கும் வகையில் அந்த கோபம் அமைந்துவிடக் கூடாது. கோபம் என்பது மனிதர்களுக்கு தேவையான ஒன்று தான். அதை எப்படி எங்கே எந்த அளவு வெளிப்படுத்த வேண்டும் என்ற விதி இருக்கிறது. நாம் யாரிடம் கோபத்தை காண்பிக்கிறோம், எதற்காக கோபப்படுகிறோம் என்பதையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நெற்றியில் பருக்கள் வருவதற்கான காரணங்கள் எல்லாம் என்னென்ன அவை உங்களின் உடல் நலனைப் பற்றி என்ன சொல்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
ஒருவரை சந்திக்கும் போது நேரடியாக பார்க்கும் போது சட்டென நமக்கு தெரிவது அவரது முகம் தான். அதனாலேயே முகத்தினை பராமரிக்க பலரும் மெனக்கெடுகிறார்கள். இது நம்மைப் பற்றிய அபிப்ராயத்தை ஏற்படுத்திடும். முகத்தை சரியாக பராமரிக்காவிட்டால் நம் முகத்தில் பருக்கள் தோன்றுவதுண்டு. ஆனால் இவை சரியாக பராமரிக்காவிட்டால் மட்டுமல்ல நம் உடல் ஆரோக்கியத்தை எடுத்துச் சொல்பவையாகவும் இருக்கிறது.
நெற்றியில் பருக்கள் வருவதற்கான காரணங்கள் எல்லாம் என்னென்ன அவை உங்களின் உடல் நலனைப் பற்றி என்ன சொல்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
சருமத்துளைகள் :
பருக்கள் ஏற்படுவதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று சருமத்துளைகள் அடைத்துவிடுவது. அதிகமாக எண்ணெய் சுரந்து அவை வெளியே வர முடியாமல் அவை பருக்களாக உருவாகும். எண்ணெய் அதிகம் சுரப்பதை கட்டுப்படுத்துவதால் இதனை தவிர்க்கலாம்.
பொடுகு :
தலையில் பொடுகு இருக்கிறது, அல்லது பொடுகு வருவதற்கான ஆரம்ப நிலை என்றால் கூட தலையில் பருக்கள் தோன்றும். தலையில் உருவாகும் பாக்டீரியா சருமத்தை அலர்ஜியாக்கும். அதனால் தலையில் பருக்கள் தோன்றுகிறது.
தலைமுடி :
தலையை சரியாக பராமரிக்கவில்லை, அதிக வறட்சி அல்லது அல்லது எண்ணெய் இருந்தால் அவை நெற்றியில் பருக்களாக உருவாகிடும்.
ஜீரணக்கோளாறு :
நெற்றியில் ஏற்படும் பருக்களுக்கு முக்கியக் காரணங்களில் ஒன்று இது. அதிகமான உணவு சாப்பிட்டாலோ, அல்லது எடுத்துக் கொண்ட உணவு சரியாக ஜீரணமாகவில்லை என்றால் நெற்றியில் பருக்கள் ஏற்படும்.
மன அழுத்தம் :
ஏதாவது ஒரு பிரச்சனையை குறித்து தொடர்ந்து யோசித்துக் கொண்டேயிருந்தாலோ அல்லது பயம் ஏற்பட்டாலோ நெற்றியில் பருக்கள் உண்டாகும். உடலில் உண்டாகும் பல்வேறு பிரச்சனைக்களுக்கு அடிப்படைக் காரணமாக இருப்பது மன அழுத்தம் தான். மன அழுத்தம் இருந்தால் ஹார்மோன் சுரப்பதில் மாற்றங்கள் ஏற்படுவதால் தான் உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுகிறது.
ஷாம்பு :
ஷாம்புவைத் தவிர தலைக்குப் பயன்படுத்தும் எண்ணெய், சீரம், ஹேர் ஸ்ப்ரே போன்ற எந்தப் பொருட்கள் சேரவில்லை என்றாலும் நெற்றியில் பருக்கள் உண்டாகும்.
தவிர்க்க :
இதனைத் தவிர்க்க அதிக தண்ணீர் குடித்திடுங்கள், காய்கறி மற்றும் பழங்களை நிறைய எடுத்துக் கொள்ளுங்கள். செயற்கை சுவையூட்டிகளை தவிர்த்திடுங்கள்.
தினமும் உடற்பயிற்சி செய்திடுங்கள், ஸ்ட்ரஸை குறைக்க யோகா, தியானம் போன்றவற்றை செய்யலாம். தலைமுடியை முறையாக பராமரியுங்கள். விளம்பரத்தைப் பார்த்து தலைக்கு சந்தையில் கிடைக்கும் எல்லா பொருட்களை வாங்கி பயன்படுத்த வேண்டும் என்று நினைக்காதீர்கள்.
நெற்றியில் பருக்கள் வருவதற்கான காரணங்கள் எல்லாம் என்னென்ன அவை உங்களின் உடல் நலனைப் பற்றி என்ன சொல்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
சருமத்துளைகள் :
பருக்கள் ஏற்படுவதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று சருமத்துளைகள் அடைத்துவிடுவது. அதிகமாக எண்ணெய் சுரந்து அவை வெளியே வர முடியாமல் அவை பருக்களாக உருவாகும். எண்ணெய் அதிகம் சுரப்பதை கட்டுப்படுத்துவதால் இதனை தவிர்க்கலாம்.
பொடுகு :
தலையில் பொடுகு இருக்கிறது, அல்லது பொடுகு வருவதற்கான ஆரம்ப நிலை என்றால் கூட தலையில் பருக்கள் தோன்றும். தலையில் உருவாகும் பாக்டீரியா சருமத்தை அலர்ஜியாக்கும். அதனால் தலையில் பருக்கள் தோன்றுகிறது.
தலைமுடி :
தலையை சரியாக பராமரிக்கவில்லை, அதிக வறட்சி அல்லது அல்லது எண்ணெய் இருந்தால் அவை நெற்றியில் பருக்களாக உருவாகிடும்.
ஜீரணக்கோளாறு :
நெற்றியில் ஏற்படும் பருக்களுக்கு முக்கியக் காரணங்களில் ஒன்று இது. அதிகமான உணவு சாப்பிட்டாலோ, அல்லது எடுத்துக் கொண்ட உணவு சரியாக ஜீரணமாகவில்லை என்றால் நெற்றியில் பருக்கள் ஏற்படும்.
மன அழுத்தம் :
ஏதாவது ஒரு பிரச்சனையை குறித்து தொடர்ந்து யோசித்துக் கொண்டேயிருந்தாலோ அல்லது பயம் ஏற்பட்டாலோ நெற்றியில் பருக்கள் உண்டாகும். உடலில் உண்டாகும் பல்வேறு பிரச்சனைக்களுக்கு அடிப்படைக் காரணமாக இருப்பது மன அழுத்தம் தான். மன அழுத்தம் இருந்தால் ஹார்மோன் சுரப்பதில் மாற்றங்கள் ஏற்படுவதால் தான் உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுகிறது.
ஷாம்பு :
ஷாம்புவைத் தவிர தலைக்குப் பயன்படுத்தும் எண்ணெய், சீரம், ஹேர் ஸ்ப்ரே போன்ற எந்தப் பொருட்கள் சேரவில்லை என்றாலும் நெற்றியில் பருக்கள் உண்டாகும்.
தவிர்க்க :
இதனைத் தவிர்க்க அதிக தண்ணீர் குடித்திடுங்கள், காய்கறி மற்றும் பழங்களை நிறைய எடுத்துக் கொள்ளுங்கள். செயற்கை சுவையூட்டிகளை தவிர்த்திடுங்கள்.
தினமும் உடற்பயிற்சி செய்திடுங்கள், ஸ்ட்ரஸை குறைக்க யோகா, தியானம் போன்றவற்றை செய்யலாம். தலைமுடியை முறையாக பராமரியுங்கள். விளம்பரத்தைப் பார்த்து தலைக்கு சந்தையில் கிடைக்கும் எல்லா பொருட்களை வாங்கி பயன்படுத்த வேண்டும் என்று நினைக்காதீர்கள்.
ஆறு மாத குழந்தைகளுக்கு, சளி, ஜலதோஷம் ஏற்படுவது சகஜம். குழந்தைகளுக்கு ஜலதோஷம் ஏற்படும் போது தைலம் பயன்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.
ஆறு மாத குழந்தைகளுக்கு, சளி, ஜலதோஷம் ஏற்படுவது சகஜம். ஆனால், இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படும் போது, மூக்கடைத்து, சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். அப்போது, நாம் முதலில் கையில் எடுக்கும் மருந்து தைலம் தான். ஆனால், குழந்தைகளுக்கு இதை பயன்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. சாதாரண தைலங்களில், கற்பூரம் முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது.
இதை குழந்தைகளுக்கு பயன்படுத்துவது அதிகரிக்கும் போது, பல்வேறு பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதிக கற்பூர மூலப்பொருளை உள்ளடக்கிய தைலத்தை, குழந்தைகளுக்கு தடவும் போது, சருமத்தில் எரிச்சல் ஏற்பட்டு சிவக்க வாய்ப்புகள் உள்ளது. அதுமட்டுமின்றி குழந்தைகளுக்கு அதிக கற்பூர தன்மை கொண்ட தைலத்தை பயன்படுத்துவதால், வலிப்பு நோய் பாதிப்பு ஏற்படவும், வாய்ப்புகள் அதிகம்.
மருத்துவரின் உரிய ஆலோசனை இல்லாமல் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கு பிற மருந்துகளை பயன்படுத்துவது ஆபத்தில் கொண்டு போய் விடும்.
மருத்துவரின் உரிய ஆலோசனை இல்லாமல், எதையும் மேற்கொள்ளக் கூடாது.
இதை குழந்தைகளுக்கு பயன்படுத்துவது அதிகரிக்கும் போது, பல்வேறு பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதிக கற்பூர மூலப்பொருளை உள்ளடக்கிய தைலத்தை, குழந்தைகளுக்கு தடவும் போது, சருமத்தில் எரிச்சல் ஏற்பட்டு சிவக்க வாய்ப்புகள் உள்ளது. அதுமட்டுமின்றி குழந்தைகளுக்கு அதிக கற்பூர தன்மை கொண்ட தைலத்தை பயன்படுத்துவதால், வலிப்பு நோய் பாதிப்பு ஏற்படவும், வாய்ப்புகள் அதிகம்.
அதிலும், ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தைலம் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.
3 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு சளி மற்றும் ஜலதோஷ பாதிப்பு ஏற்படும் போது, ‘சலைன் நேசல்’ என்ற உறிஞ்சும் சொட்டு மருந்தை பயன்படுத்துவது மிகவும் நல்லது.
மருத்துவரின் உரிய ஆலோசனை இல்லாமல், எதையும் மேற்கொள்ளக் கூடாது.
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் உணவில் ஓட்ஸை சேர்த்து கொள்ளலாம். இன்று ஓட்ஸ், காய்கறி சேர்த்து கட்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
ஓட்ஸ் - ஒரு கப்,
வெங்காயம் - ஒன்று,
உருளைக்கிழங்கு (சின்னது) - ஒன்று,
பச்சைப் பட்டாணி) - அரை கப்,,
கேரட் (துருவியது)) - அரை கப்,,
குடைமிளகாய் (நறுக்கியது) - அரை கப்,
பிரவுன் பிரெட் ஸ்லைஸ் - 2,
தனியாத்துள் - அரை டீஸ்பூன்,
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்,
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்,
கொத்தமல்லி - சிறிதளவு,
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,

செய்முறை :
ஓட்ஸை சூடான கடாயில் போட்டு வறுத்து ஆறியதும் மிக்ஸியில் போட்டு பொடி செய்யவும்.
பிரெட்டையும் பொடித்து கொள்ளவும்.
உருளைக்கிழங்கு, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு, குடைமிளகாய், கேரட், பச்சைப் பட்டாணி, சேர்த்து மூடி வைத்து, பிறகு மேலும் வதக்கவும்.
காய்கள் வெந்ததும் நன்றாக மசித்து, அதனுடன் பிரெட் தூள், தனியாத்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு, கொத்தமல்லி சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.
இந்த மசாலாவை சிறிது ஓட்ஸ் பொடியில் நன்றாக இரண்டு பக்கமும் புரட்டி, உருண்டைகளாக்கி, வேண்டிய வடிவில் தட்டி வைக்கவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் கட்லெட்டை போட்டு சிறிதளவு எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
ஓட்ஸ் - ஒரு கப்,
வெங்காயம் - ஒன்று,
உருளைக்கிழங்கு (சின்னது) - ஒன்று,
பச்சைப் பட்டாணி) - அரை கப்,,
கேரட் (துருவியது)) - அரை கப்,,
குடைமிளகாய் (நறுக்கியது) - அரை கப்,
பிரவுன் பிரெட் ஸ்லைஸ் - 2,
தனியாத்துள் - அரை டீஸ்பூன்,
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்,
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்,
கொத்தமல்லி - சிறிதளவு,
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை :
ஓட்ஸை சூடான கடாயில் போட்டு வறுத்து ஆறியதும் மிக்ஸியில் போட்டு பொடி செய்யவும்.
பிரெட்டையும் பொடித்து கொள்ளவும்.
உருளைக்கிழங்கு, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு, குடைமிளகாய், கேரட், பச்சைப் பட்டாணி, சேர்த்து மூடி வைத்து, பிறகு மேலும் வதக்கவும்.
காய்கள் வெந்ததும் நன்றாக மசித்து, அதனுடன் பிரெட் தூள், தனியாத்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு, கொத்தமல்லி சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.
இந்த மசாலாவை சிறிது ஓட்ஸ் பொடியில் நன்றாக இரண்டு பக்கமும் புரட்டி, உருண்டைகளாக்கி, வேண்டிய வடிவில் தட்டி வைக்கவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் கட்லெட்டை போட்டு சிறிதளவு எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
சூப்பரான ஓட்ஸ் வெஜிடபிள் கட்லெட் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சீரான 28 நாள்கள் சுழற்சி, முதல் மூன்று நாள்கள் அதிகளவு உதிரப்போக்கு, நான்காவது நாளில் குறைந்து ஐந்தாவது நாளில் முடியும் மாதவிடாய் இவையெல்லாம் முறையான மாதவிடாயின் அறிகுறிகள்.
பெண்களின் உடல் ஆரோக்கியத்தைச் சொல்லும் இண்டிகேட்டர், மாதவிடாய். சீரான 28 நாள்கள் சுழற்சி, முதல் மூன்று நாள்கள் அதிகளவு உதிரப்போக்கு, நான்காவது நாளில் குறைந்து ஐந்தாவது நாளில் முடியும் மாதவிடாய், சிலருக்கு ஏழு நாள்கள் வரை திட்டுத்திட்டான ரத்தப்போக்கு இவையெல்லாம் முறையான மாதவிடாயின் அறிகுறிகள். ஆனால் உதிரப்போக்கின் நிறம், உதிரத்தின் அளவு மற்றும் இரண்டு மாதவிடாய்க்கு இடைப்பட்ட நாள்கள் எனப் பொதுவான வரைமுறையில் இருந்து இவை மாறுபடும்போது, அவை ஆரோக்கியக் குறைபாட்டின் அறிகுறியாகப் பார்க்கப்பட வேண்டும்.
அதிகளவு உதிரப்போக்கு ஏற்படுத்தும் எண்டோமெட்ரியாசிஸ் (Endometeriosis)
மாதவிடாயின் உதிரம் அடர்த்தி அதிகமாகவும் அதிகளவிலும் வெளியேறினால், கருப்பையின் எண்டோமெட்ரியாசிஸ் திசுக்கள் கரைந்து வெளியேறுகின்றன எனக் கொள்ளலாம். இதற்கு மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம். மருந்துகளிலேயே இதைக் குணப்படுத்திவிடலாம். சரியாகாவிட்டால், திசுக்களை பயாப்ஸி செய்து நோயின் தீவிரத்தன்மையைக் கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்படும்.
மாதவிடாய் மாயமாகும் அமனோரியா (Amenorrhoea)
சிலருக்குக் கர்ப்பம் தரிக்காமலேயே மாதவிடாய் நின்று போகலாம். சீரான சுழற்சியின்றிப் பின்னர் வெளியேறலாம். இதனை ‘செகண்டரி அமனோரியா’ என்கிறோம். ஹார்மோன் சமச்சீரின்மை பிரச்சனை இருப்பவர்களுக்கு இந்தத் தொந்தரவு இருக்கலாம். அவர்கள் ஹார்மோன் டெஸ்ட் எடுத்துப் பிறகு சிகிச்சை பெறுவது அவசியம். சிலருக்குப் பிறவியிலேயே கர்ப்பப்பை வளர்ச்சி பெறாமல் இருக்கும். இதை ‘பிரைமரி அமனோரியா’ என அழைப்போம். இவர்கள் தக்க வயது வந்த பின்னரும் பூப்படையாமல் இருப்பார்கள். இவர்கள் ‘இன்னும் கொஞ்ச காலம் காத்திருக்கலாம்’ என்று நினைக்காமல், மருத்துவப் பரிசோதனைகள் செய்துகொள்வது அவசியம்.
பயமுறுத்தும் பிசிஓடி (PCOD – PolyCystic Ovarian Syndrome)
சீரற்ற மாதவிடாய்ச் சுழற்சி, மாதவிடாய் ஒரே நாளில் முடிந்துவிடுவது, தொடர்ச்சியான மாதவிடாய் நாள்கள் இவையெல்லாம் பிசிஓடி எனப்படுகிற சினைப்பை நீர்க்கட்டிப் பிரச்சனையின் அறிகுறிகள். இளம் பெண்கள் முதல் மெனோபாஸை நெருங்கும் பெண்கள் வரை பாதிக்கக்கூடிய இப்பிரச்சனைக்கு காலம் தாழ்த்தாத மருத்துவ ஆலோசனையும் சிகிச்சையும் அவசியம்.
வலிதரும் ஃபைப்ராய்டு (Fibroid)
சிலருக்கு அதிக வலியோடு மாதவிடாய் நிகழும். இதற்குக் கர்ப்பப்பையில் இருக்கும் ஃபைப்ராய்டு கட்டிகளும் காரணமாகலாம். இதனால் மாதவிடாய் ஒழுங்கற்று 20 நாள்களுக்கு ஒருமுறை ஏற்படலாம். இந்தக் கட்டிகள் பெரிதாகும்போது உதிரப்போக்கு அதிகமாக இருக்கும். மகப்பேறு மருத்துவரின் ஆலோசனைப்படி கட்டிகளை அகற்றச் சிகிச்சை பெற வேண்டும்.

கருக்கலைதல் (Miscarriage) கவலை
சிலருக்குச் சிறுநீர்ப் பரிசோதனையில் கர்ப்பம் உறுதி செய்யப்பட்ட சில நாள்களில் உதிரம் கொஞ்சம் கொஞ்சமாக வலியோடு வெளியேறும். இவ்வாறு இருந்தால் மருத்துவ ஆலோசனையின் படி ஸ்கேன் செய்து கருவானது வளர்ச்சி நிலையில் இருக்கிறதா அல்லது கலைந்துவிட்டதா என்று உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். மேலும், தொடரும் கர்ப்பக்காலத்தில் ஓய்வு முதல் மருந்து வரை மருத்துவ ஆலோசனைப்படியே எடுத்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை கரு கலைந்திருந்தால், அதற்கான காரணம் அறிந்து, சிகிச்சையையும் எடுக்க வேண்டும்.
துர்நாற்றமா? கவனம் தேவை!
மாதவிடாய் ரத்தம் சிலருக்குத் துர்நாற்றத்துடன் வெளியேறலாம். அதை அலட்சியப்படுத்தாமல் அதற்கான காரணத்தை மருத்துவ ஆலோசனை, பரிசோதனை மூலம் அறிந்துகொள்ள வேண்டும். எண்டோமெட்ரியல் கேன்சர் இருப்பவர்களுக்கு இவ்வாறு ஏற்படலாம். இவர்களுக்கு மாதவிடாய் முறையற்று 15 முதல் 20 நாள்களுக்கு ஒரு முறை என ஏற்படும். இதனால் ரத்தச்சோகை ஏற்படலாம்.
உறவுக்குப் பின் உதிரம்
சிலருக்குத் தாம்பத்திய உறவுக்குப் பின்னர் ரத்தம் வெளியேறலாம். இது கர்ப்பவாயில் தொற்று அல்லது புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம் என்பதால் உடனடிப் பிரத்யேகப் பரிசோதனை, சிகிச்சை அவசியம்.
மெனோபாஸுக்குப் பின்னரும் உதிரப்போக்கு
மெனோபாஸுக்குப் பின்னர், அதாவது மாதவிடாய் நின்ற பின்னரும் உதிரம் வெளியேறுவதாக உணர்ந்தால் அது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான (Cervical Cancer) அறிகுறியாக இருக்கலாம். அதை அசட்டை செய்யாமல் ஆரம்பத்திலேயே பரிசோதனையில் உறுதிப்படுத்திச் சிகிச்சையின் மூலம் குணம் பெறலாம்.
அதிகளவு உதிரப்போக்கு ஏற்படுத்தும் எண்டோமெட்ரியாசிஸ் (Endometeriosis)
மாதவிடாயின் உதிரம் அடர்த்தி அதிகமாகவும் அதிகளவிலும் வெளியேறினால், கருப்பையின் எண்டோமெட்ரியாசிஸ் திசுக்கள் கரைந்து வெளியேறுகின்றன எனக் கொள்ளலாம். இதற்கு மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம். மருந்துகளிலேயே இதைக் குணப்படுத்திவிடலாம். சரியாகாவிட்டால், திசுக்களை பயாப்ஸி செய்து நோயின் தீவிரத்தன்மையைக் கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்படும்.
மாதவிடாய் மாயமாகும் அமனோரியா (Amenorrhoea)
சிலருக்குக் கர்ப்பம் தரிக்காமலேயே மாதவிடாய் நின்று போகலாம். சீரான சுழற்சியின்றிப் பின்னர் வெளியேறலாம். இதனை ‘செகண்டரி அமனோரியா’ என்கிறோம். ஹார்மோன் சமச்சீரின்மை பிரச்சனை இருப்பவர்களுக்கு இந்தத் தொந்தரவு இருக்கலாம். அவர்கள் ஹார்மோன் டெஸ்ட் எடுத்துப் பிறகு சிகிச்சை பெறுவது அவசியம். சிலருக்குப் பிறவியிலேயே கர்ப்பப்பை வளர்ச்சி பெறாமல் இருக்கும். இதை ‘பிரைமரி அமனோரியா’ என அழைப்போம். இவர்கள் தக்க வயது வந்த பின்னரும் பூப்படையாமல் இருப்பார்கள். இவர்கள் ‘இன்னும் கொஞ்ச காலம் காத்திருக்கலாம்’ என்று நினைக்காமல், மருத்துவப் பரிசோதனைகள் செய்துகொள்வது அவசியம்.
பயமுறுத்தும் பிசிஓடி (PCOD – PolyCystic Ovarian Syndrome)
சீரற்ற மாதவிடாய்ச் சுழற்சி, மாதவிடாய் ஒரே நாளில் முடிந்துவிடுவது, தொடர்ச்சியான மாதவிடாய் நாள்கள் இவையெல்லாம் பிசிஓடி எனப்படுகிற சினைப்பை நீர்க்கட்டிப் பிரச்சனையின் அறிகுறிகள். இளம் பெண்கள் முதல் மெனோபாஸை நெருங்கும் பெண்கள் வரை பாதிக்கக்கூடிய இப்பிரச்சனைக்கு காலம் தாழ்த்தாத மருத்துவ ஆலோசனையும் சிகிச்சையும் அவசியம்.
வலிதரும் ஃபைப்ராய்டு (Fibroid)
சிலருக்கு அதிக வலியோடு மாதவிடாய் நிகழும். இதற்குக் கர்ப்பப்பையில் இருக்கும் ஃபைப்ராய்டு கட்டிகளும் காரணமாகலாம். இதனால் மாதவிடாய் ஒழுங்கற்று 20 நாள்களுக்கு ஒருமுறை ஏற்படலாம். இந்தக் கட்டிகள் பெரிதாகும்போது உதிரப்போக்கு அதிகமாக இருக்கும். மகப்பேறு மருத்துவரின் ஆலோசனைப்படி கட்டிகளை அகற்றச் சிகிச்சை பெற வேண்டும்.

கருக்கலைதல் (Miscarriage) கவலை
சிலருக்குச் சிறுநீர்ப் பரிசோதனையில் கர்ப்பம் உறுதி செய்யப்பட்ட சில நாள்களில் உதிரம் கொஞ்சம் கொஞ்சமாக வலியோடு வெளியேறும். இவ்வாறு இருந்தால் மருத்துவ ஆலோசனையின் படி ஸ்கேன் செய்து கருவானது வளர்ச்சி நிலையில் இருக்கிறதா அல்லது கலைந்துவிட்டதா என்று உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். மேலும், தொடரும் கர்ப்பக்காலத்தில் ஓய்வு முதல் மருந்து வரை மருத்துவ ஆலோசனைப்படியே எடுத்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை கரு கலைந்திருந்தால், அதற்கான காரணம் அறிந்து, சிகிச்சையையும் எடுக்க வேண்டும்.
துர்நாற்றமா? கவனம் தேவை!
மாதவிடாய் ரத்தம் சிலருக்குத் துர்நாற்றத்துடன் வெளியேறலாம். அதை அலட்சியப்படுத்தாமல் அதற்கான காரணத்தை மருத்துவ ஆலோசனை, பரிசோதனை மூலம் அறிந்துகொள்ள வேண்டும். எண்டோமெட்ரியல் கேன்சர் இருப்பவர்களுக்கு இவ்வாறு ஏற்படலாம். இவர்களுக்கு மாதவிடாய் முறையற்று 15 முதல் 20 நாள்களுக்கு ஒரு முறை என ஏற்படும். இதனால் ரத்தச்சோகை ஏற்படலாம்.
உறவுக்குப் பின் உதிரம்
சிலருக்குத் தாம்பத்திய உறவுக்குப் பின்னர் ரத்தம் வெளியேறலாம். இது கர்ப்பவாயில் தொற்று அல்லது புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம் என்பதால் உடனடிப் பிரத்யேகப் பரிசோதனை, சிகிச்சை அவசியம்.
மெனோபாஸுக்குப் பின்னரும் உதிரப்போக்கு
மெனோபாஸுக்குப் பின்னர், அதாவது மாதவிடாய் நின்ற பின்னரும் உதிரம் வெளியேறுவதாக உணர்ந்தால் அது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான (Cervical Cancer) அறிகுறியாக இருக்கலாம். அதை அசட்டை செய்யாமல் ஆரம்பத்திலேயே பரிசோதனையில் உறுதிப்படுத்திச் சிகிச்சையின் மூலம் குணம் பெறலாம்.
பெண்கள் அன்றாட பணிகளுக்கு மத்தியில் ஒரு சில உடற்பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்தையும், புத்துணர்வையும் பெற செய்ய முடியும்.
பெண்கள் அன்றாட பணிகளுக்கு மத்தியில் ஒரு சில உடற்பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்தையும், புத்துணர்வையும் பெற செய்ய முடியும். காலை முதல் இரவு வரை அனைத்து பணிகளை மேற்கொள்வது எவ்வளவு அவசியமோ அதுபோல பெண்கள் உடற்பயிற்சி செய்வதும் மிக அவசியம்.
உடற்பயிற்சி செய்வதால் உடல் வலி, அசதி, தேவையற்ற கொழுப்புகள் சேருவது போன்ற பிரச்சினைகளிலிருந்து பெண்கள் விடுபட முடியும்.
கண்களுக்கு உடற்பயிற்சி: நமது இரு உள்ளங்கைகளையும் இரு கண்கள் மீது வைத்து மூடி அழுத்தி கொள்ளவும். ஐந்து வினாடிகள் கழித்து கைகளை எடுத்து விடவும். இது போன்று ஐந்து முதல் ஆறு முறை தொடர்ந்து செய்யவும். இதன் பின் வெதுவெதுப்பான நீரில் நனைத்த டவலை கொண்டு கண்களை மெதுவாக மசாஜ் செய்யவும். பிறகு குளிர்ந்த நீரால் நனைத்த டவலை கொண்டு கண்களை மசாஜ் செய்யவும். இதன் மூலம் கண்களின் அயர்வு அகன்று புத்துணர்வு பெருகும்.
முழங்காலுக்கு உடற்பயிற்சி: தினந்தோறும் மாடிப்படிகளில் ஏறுதல் மூலம் நமது கலோரி குறிப்பிட்ட அளவு எரிக்கப்படுகிறது. மாடிபடி ஏறுதலை சற்று வேகமாக மேற்கொண்டால் அது மிக சிறந்த உடற்பயிற்சி. மூட்டுவலி உள்ள பெண்கள் இம்முயற்சியை மேற்கொள்ள வேண்டாம்.
குதிகால்களுக்கு உடற்பயிற்சி: பெண்கள் ஒரு சேரில் அமர்ந்தவாறோ அல்லது படுத்து கொண்டோ இந்த உடற்பயிற்சியை செய்யலாம். சேரில் அமர்ந்து கால்களை நேராக இருக்க செய்து பாதத்தின் பின்புறம் குதிகால்களை மட்டும் மேல் தூக்கி இறக்கவும். இது போல் ஒரு நிமிடம் செய்தாலே மேலும் பல தசைகள் நல்ல வலுப்பெறுவதுடன், குதிக்கால்களின் வலி குறையும்.
கைவிரல்களுக்கான பயிற்சி: பெண்கள் அலுவலகத்திலும் சரி, வீட்டிலும் சரி, கைகளை பயன்படுத்தியே அதிகப்பணிகளை மேற்கொள்ளுவதால்,கைவிரல்கள் வலுவிழந்து, அவ்வப்போது வலி மற்றும் பிடிப்புகளை ஏற்படுத்தும். இதனை போக்க கைகளை அகல விரித்து விரல்களை மட்டும் நன்கு மடிக்கவும். விரல்களின் அடிப்பகுதியை தொடும் அளவிற்கு விரல்களை மடக்கவும்.
முதுகெலும்புக்கு உடற்பயிற்சி: சம்மணமிட்டு நேராக அமர்ந்து கொள்ளவும். இடது கையை வலது முட்டி பகுதியில் வைத்து கொண்டு வலது கையை எடுத்து பின்புற தரையில் வைக்கவும். பின் அதுபோல் வலது கையை இடது முட்டி பகுதியில் வைத்து இடது கையை பின்புற தரையில் படும் படி வைக்கவும்.இதன் மூலம் முதுகெலும்பு சுழல வைக்கப்படுகிறது. இந்நேரத்தில் மூச்சு நன்றாக இழுத்து விட்டு பிறகு சாதாரண நேர் நிலைக்கு வரவும். இதன் மூலம் பெண்களின் இடுப்பு ஓரப்பகுதிகளில் சதை போடாது. எப்போது மெல்லிய இடுப்பாகவும், முதுகெலும்புகள் வலுவாகவும் இருக்கும்.
கழுத்திற்கு பயிற்சி: பெண்களின் கழுத்து பகுதி அழகுடன் திகழவும், கழுத்து எழும்புகளில் வலி ஏற்படாமல் இருக்கவும் இந்த பயிற்சி உதவுகிறது. நேராக நின்று தலையை மெதுவாக சுழற்றவும். இது போல் வலது, இடது என மாறி மாறி கழுத்தை மெதுவாக சுழற்றும் போது கழுத்து தசைகள் வலுப்பெற்று நல்ல வனப்புடன் காட்சி தரும்.
உடற்பயிற்சி செய்வதால் உடல் வலி, அசதி, தேவையற்ற கொழுப்புகள் சேருவது போன்ற பிரச்சினைகளிலிருந்து பெண்கள் விடுபட முடியும்.
கண்களுக்கு உடற்பயிற்சி: நமது இரு உள்ளங்கைகளையும் இரு கண்கள் மீது வைத்து மூடி அழுத்தி கொள்ளவும். ஐந்து வினாடிகள் கழித்து கைகளை எடுத்து விடவும். இது போன்று ஐந்து முதல் ஆறு முறை தொடர்ந்து செய்யவும். இதன் பின் வெதுவெதுப்பான நீரில் நனைத்த டவலை கொண்டு கண்களை மெதுவாக மசாஜ் செய்யவும். பிறகு குளிர்ந்த நீரால் நனைத்த டவலை கொண்டு கண்களை மசாஜ் செய்யவும். இதன் மூலம் கண்களின் அயர்வு அகன்று புத்துணர்வு பெருகும்.
முழங்காலுக்கு உடற்பயிற்சி: தினந்தோறும் மாடிப்படிகளில் ஏறுதல் மூலம் நமது கலோரி குறிப்பிட்ட அளவு எரிக்கப்படுகிறது. மாடிபடி ஏறுதலை சற்று வேகமாக மேற்கொண்டால் அது மிக சிறந்த உடற்பயிற்சி. மூட்டுவலி உள்ள பெண்கள் இம்முயற்சியை மேற்கொள்ள வேண்டாம்.
குதிகால்களுக்கு உடற்பயிற்சி: பெண்கள் ஒரு சேரில் அமர்ந்தவாறோ அல்லது படுத்து கொண்டோ இந்த உடற்பயிற்சியை செய்யலாம். சேரில் அமர்ந்து கால்களை நேராக இருக்க செய்து பாதத்தின் பின்புறம் குதிகால்களை மட்டும் மேல் தூக்கி இறக்கவும். இது போல் ஒரு நிமிடம் செய்தாலே மேலும் பல தசைகள் நல்ல வலுப்பெறுவதுடன், குதிக்கால்களின் வலி குறையும்.
கைவிரல்களுக்கான பயிற்சி: பெண்கள் அலுவலகத்திலும் சரி, வீட்டிலும் சரி, கைகளை பயன்படுத்தியே அதிகப்பணிகளை மேற்கொள்ளுவதால்,கைவிரல்கள் வலுவிழந்து, அவ்வப்போது வலி மற்றும் பிடிப்புகளை ஏற்படுத்தும். இதனை போக்க கைகளை அகல விரித்து விரல்களை மட்டும் நன்கு மடிக்கவும். விரல்களின் அடிப்பகுதியை தொடும் அளவிற்கு விரல்களை மடக்கவும்.
முதுகெலும்புக்கு உடற்பயிற்சி: சம்மணமிட்டு நேராக அமர்ந்து கொள்ளவும். இடது கையை வலது முட்டி பகுதியில் வைத்து கொண்டு வலது கையை எடுத்து பின்புற தரையில் வைக்கவும். பின் அதுபோல் வலது கையை இடது முட்டி பகுதியில் வைத்து இடது கையை பின்புற தரையில் படும் படி வைக்கவும்.இதன் மூலம் முதுகெலும்பு சுழல வைக்கப்படுகிறது. இந்நேரத்தில் மூச்சு நன்றாக இழுத்து விட்டு பிறகு சாதாரண நேர் நிலைக்கு வரவும். இதன் மூலம் பெண்களின் இடுப்பு ஓரப்பகுதிகளில் சதை போடாது. எப்போது மெல்லிய இடுப்பாகவும், முதுகெலும்புகள் வலுவாகவும் இருக்கும்.
கழுத்திற்கு பயிற்சி: பெண்களின் கழுத்து பகுதி அழகுடன் திகழவும், கழுத்து எழும்புகளில் வலி ஏற்படாமல் இருக்கவும் இந்த பயிற்சி உதவுகிறது. நேராக நின்று தலையை மெதுவாக சுழற்றவும். இது போல் வலது, இடது என மாறி மாறி கழுத்தை மெதுவாக சுழற்றும் போது கழுத்து தசைகள் வலுப்பெற்று நல்ல வனப்புடன் காட்சி தரும்.
உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதில் கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் ஆகிய மூன்று ஊட்டச்சத்துக்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.
இதயம் சார்ந்த நோய் பாதிப்புகள் மற்றும் சிறுநீரக பிரச்சினைகள் ஏற்படுவதற்கு உயர் ரத்த அழுத்தம் முக்கிய காரணமாக இருக்கிறது. மற்ற நோய்களை போல இதன் பாதிப்புக்கான அறிகுறிகளை எளிதில் கண்டறிய முடியாது. உடற்பயிற்சியும், ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கமுமே உயர் ரத்த அழுத்த பிரச்சினைக்கு தீர்வாக அமையும்.
உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதில் கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் ஆகிய மூன்று ஊட்டச்சத்துக்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. பொட்டாசியம் தசைகளின் முறையான செயல்பாட்டுக்கு வழிவகை செய்கிறது. ஒழுங்கற்ற இதய துடிப்பை சமநிலைப்படுத்தி இதயத்திற்கு சமிக்ஞைகளை கடத்தவும் உதவுகிறது. ரத்த அழுத்த பாதிப்புக்கு ஆளாகி இருப்பவர்கள் பொட்டாசியம் அதிகம் நிறைந்த ஆரஞ்சு, காளான்கள், கீரை வகைகள், பிராக்கோலி, சர்க்கரை வள்ளி கிழங்கு, முந்திரி, வாழைப்பழங்கள் போன்றவற்றை சாப்பிட்டு வர வேண்டும்.
ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதிலும், தசைகள் மற்றும் நரம்புகளின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதிலும் மக்னீசியத்திற்கு முக்கிய பங்கு இருக்கிறது. எலும்புகளின் வளர்ச்சிக்கும் மெக்னீசியம் தேவையானதாக இருக்கிறது. வாழைப்பழங்கள், வெண்ணெய், கொட்டை வகைகள், விதைகள், கருப்பு பீன்ஸ், கீரை வகைகள் போன்றவற்றில் மெக்னீசியம் அதிகம் கலந்திருக்கிறது.
கால்சிய குறைபாடும் உயர் ரத்த அழுத்த பாதிப்பை அதிகரிக்கும். உடலில் ஹார்மோன்களின் சீரான செயல்பாட்டுக்கு கால்சியத்தின் பங்களிப்பு இன்றியமையாதது. ரத்த குழாய்களின் சீரான இயக்கத்திற்கும் கால்சியம் அவசியம். பால், தயிர், பாலாடை கட்டிகள், பயறு வகைகள், மீன் வகைகள், பச்சை இலை காய்கறிகள் போன்றவற்றில் கால்சியம் உள்ளது.
உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதில் கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் ஆகிய மூன்று ஊட்டச்சத்துக்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. பொட்டாசியம் தசைகளின் முறையான செயல்பாட்டுக்கு வழிவகை செய்கிறது. ஒழுங்கற்ற இதய துடிப்பை சமநிலைப்படுத்தி இதயத்திற்கு சமிக்ஞைகளை கடத்தவும் உதவுகிறது. ரத்த அழுத்த பாதிப்புக்கு ஆளாகி இருப்பவர்கள் பொட்டாசியம் அதிகம் நிறைந்த ஆரஞ்சு, காளான்கள், கீரை வகைகள், பிராக்கோலி, சர்க்கரை வள்ளி கிழங்கு, முந்திரி, வாழைப்பழங்கள் போன்றவற்றை சாப்பிட்டு வர வேண்டும்.
ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதிலும், தசைகள் மற்றும் நரம்புகளின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதிலும் மக்னீசியத்திற்கு முக்கிய பங்கு இருக்கிறது. எலும்புகளின் வளர்ச்சிக்கும் மெக்னீசியம் தேவையானதாக இருக்கிறது. வாழைப்பழங்கள், வெண்ணெய், கொட்டை வகைகள், விதைகள், கருப்பு பீன்ஸ், கீரை வகைகள் போன்றவற்றில் மெக்னீசியம் அதிகம் கலந்திருக்கிறது.
கால்சிய குறைபாடும் உயர் ரத்த அழுத்த பாதிப்பை அதிகரிக்கும். உடலில் ஹார்மோன்களின் சீரான செயல்பாட்டுக்கு கால்சியத்தின் பங்களிப்பு இன்றியமையாதது. ரத்த குழாய்களின் சீரான இயக்கத்திற்கும் கால்சியம் அவசியம். பால், தயிர், பாலாடை கட்டிகள், பயறு வகைகள், மீன் வகைகள், பச்சை இலை காய்கறிகள் போன்றவற்றில் கால்சியம் உள்ளது.






