என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
வீட்டு நிர்வாகம், அலுவலக வேலை ஆகிய இரண்டு பணிச் சுமைகளை சுமந்து கொண்டிருக்கும் பெண்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது.
வீட்டு நிர்வாகம், அலுவலக வேலை ஆகிய இரண்டு பணிச் சுமைகளை சுமந்து கொண்டிருக்கும் பெண்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. அப்படி பணிக்கு செல்லும் தாய்மார்கள் மற்ற பெண்களை விட 40 சதவீதம் அதிகமாக மன அழுத்தத்திற்கு ஆளாகுவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதிலும் இரண்டு குழந்தைகள் கொண்ட தாய்மார்கள்தான் அதிக பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.
அக்குழந்தைகள் 15 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கும்பட்சத்தில் அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு எதிர்கொள்ளும் சிரமங்கள் மன அழுத்தத்தை அதிகப்படுத்திவிடுகிறது. குழந்தை இல்லாமல் முழு நேரமாக வேலையில் ஈடுபடும் பெண்களை ஒப்பிடும்போது அவர்களை விட ஒரு குழந்தை கொண்ட தாய்மார்கள் 18 சதவீதம் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.
மான்செஸ்டர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மேற்கொண்ட இந்த ஆய்வில் 6025 பெண்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களின் ரத்த அழுத்தம், ஹார்மோன் அளவுகள், உடல் உழைப்பு, பணி சார்ந்த வாழ்க்கை முறை உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு மன அழுத்தம் அளவீடு செய்யப்பட்டிருக்கிறது. அத்துடன் பெண்களின் வயது, கல்வி, பார்க்கும் வேலை மற்றும் வருமானம், பணி நேரம், குடும்ப சூழ்நிலை போன்றவைகளும் கவனத்தில் கொள்ளப்பட்டன.
இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், ‘‘குடும்பத்தில் நிலவும் மோதல் போக்கும், பணி நெருக்கடியும் மன அழுத்தத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவை. இரண்டையும் சுமுகமாக கையாள வேண்டும். பணி பற்றிய சிந்தனை மேலோங்கும்போது குடும்பத்தினருடன் முழு ஈடுபாட்டோடு நேரத்தை செலவிட முடியாது. அவர்களின் விருப்பங்களை நிறைவேற்ற முடியாத சூழல் ஏற்படும். எப்படியாவது எடுத்த வேலையை முடித்தாக வேண்டும் என்ற மன நிலையிலேயே இருப்பதும், பணியிலேயே நேரத்தை அதிகமாக செலவிடுவதும் குடும்பத்தினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி விடும். அது மன அழுத்தத்திற்கும் காரணமாகிவிடும்’’ என்கிறார்கள்.
அக்குழந்தைகள் 15 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கும்பட்சத்தில் அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு எதிர்கொள்ளும் சிரமங்கள் மன அழுத்தத்தை அதிகப்படுத்திவிடுகிறது. குழந்தை இல்லாமல் முழு நேரமாக வேலையில் ஈடுபடும் பெண்களை ஒப்பிடும்போது அவர்களை விட ஒரு குழந்தை கொண்ட தாய்மார்கள் 18 சதவீதம் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.
மான்செஸ்டர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மேற்கொண்ட இந்த ஆய்வில் 6025 பெண்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களின் ரத்த அழுத்தம், ஹார்மோன் அளவுகள், உடல் உழைப்பு, பணி சார்ந்த வாழ்க்கை முறை உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு மன அழுத்தம் அளவீடு செய்யப்பட்டிருக்கிறது. அத்துடன் பெண்களின் வயது, கல்வி, பார்க்கும் வேலை மற்றும் வருமானம், பணி நேரம், குடும்ப சூழ்நிலை போன்றவைகளும் கவனத்தில் கொள்ளப்பட்டன.
இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், ‘‘குடும்பத்தில் நிலவும் மோதல் போக்கும், பணி நெருக்கடியும் மன அழுத்தத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவை. இரண்டையும் சுமுகமாக கையாள வேண்டும். பணி பற்றிய சிந்தனை மேலோங்கும்போது குடும்பத்தினருடன் முழு ஈடுபாட்டோடு நேரத்தை செலவிட முடியாது. அவர்களின் விருப்பங்களை நிறைவேற்ற முடியாத சூழல் ஏற்படும். எப்படியாவது எடுத்த வேலையை முடித்தாக வேண்டும் என்ற மன நிலையிலேயே இருப்பதும், பணியிலேயே நேரத்தை அதிகமாக செலவிடுவதும் குடும்பத்தினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி விடும். அது மன அழுத்தத்திற்கும் காரணமாகிவிடும்’’ என்கிறார்கள்.
இந்த யோகாசனம் தட்டையான வயிற்றைப் பெற உதவும் மற்றும் இடுப்பு பகுதியைச் சுற்றியுள்ள கொழுப்புக்களைக் கரைக்கும். இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.
தொப்பையைக் குறைக்க எத்தனையே வழிகள் இருந்தாலும், உடற்பயிற்சிக்கு இணை எதுவும் வர முடியாது. அதிலும் யோகாவை ஒருவர் தினமும் செய்து வந்தால், அதனால் தொப்பை குறைவதோடு, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படும்.
செய்முறை
இந்த யோகாசனம் தட்டையான வயிற்றைப் பெற உதவும் மற்றும் இடுப்பு பகுதியைச் சுற்றியுள்ள கொழுப்புக்களைக் கரைக்கும். மேலும் இந்த ஆசனத்தினால் முதுகு மற்றும் கால் தசைகள் வலிமைப் பெறும்.
இந்த ஆசனத்திற்கு முதலில் தரையில் படுத்து, பின் மூச்சை உள்ளிழுத்தவாறு மேல் உடலையும், கால்களையும் மேலே உயர்த்த வேண்டும். முடிந்த வரை 45 டிகிரி கோணத்தில் உடலைக் கொண்டு வர முயற்சி செய்யுங்கள். இந்நிலையில் 15 நொடிகள் இருந்து, பின் மூச்சை வெளியே விட்டவாறு பழைய நிலைக்கு திரும்புங்கள்.
செய்முறை
இந்த யோகாசனம் தட்டையான வயிற்றைப் பெற உதவும் மற்றும் இடுப்பு பகுதியைச் சுற்றியுள்ள கொழுப்புக்களைக் கரைக்கும். மேலும் இந்த ஆசனத்தினால் முதுகு மற்றும் கால் தசைகள் வலிமைப் பெறும்.
இந்த ஆசனத்திற்கு முதலில் தரையில் படுத்து, பின் மூச்சை உள்ளிழுத்தவாறு மேல் உடலையும், கால்களையும் மேலே உயர்த்த வேண்டும். முடிந்த வரை 45 டிகிரி கோணத்தில் உடலைக் கொண்டு வர முயற்சி செய்யுங்கள். இந்நிலையில் 15 நொடிகள் இருந்து, பின் மூச்சை வெளியே விட்டவாறு பழைய நிலைக்கு திரும்புங்கள்.
ப்ரீமெச்சூர் ஓவரியன் ஃபெயிலியர் ஏற்படக் காரணங்கள் அது உண்டாக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வுகள் என்ன என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
சினைமுட்டைகளை பத்திரப்படுத்தி மாதந்தோறும் வெளியிடும் முக்கியமான வேலையைச் செய்கிற சினைப்பை மெனோபாஸூக்கு பிறகே ஓவ்வெடுக்க ஆரம்பிக்கும். அரிதாக சில பெண்களுக்கு பிறவியிலேயோ அல்லது இளவயதிலேயோ சினைப்பை வேலை நிறுத்தம் செய்யலாம். ப்ரீமெச்சூர் ஓவரியன் ஃபெயிலியர் எனப்படுகிற இது முறையற்ற மாதவிலக்கு, மலட்டுத் தன்மை போன்றவற்றை உண்டாக்குவதோடு மெனோபாஸ் வந்துவிட்ட மாதிரியான அறிகுறிகளையும் காட்டுமாம். ப்ரீமெச்சூர் ஓவரியன் ஃபெயிலியர் ஏற்படக் காரணங்கள் அது உண்டாக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வுகள் என்ன என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
குறிப்பிட்ட வயசுக்கு முன்னாடியே சினைப்பை தன் வேலையைச் செய்யறதை நிறுத்திக்கிற இந்தப்பிரச்சனைக்கு பரம்பரைத் தன்மை காரணமா இருக்கலாம். எதிர்பு சக்தி இல்லாத சிலருக்கு அவங்களோட உடம்புக்குள்ள இருக்கிற திசுக்களை அவங்க உடம்பே அட்டாக் செய்யறதும் காரணமாகலாம்.. கர்ப்பப்பை அறுவை சிகிச்சை இடு ப்பெலும்பு தொடர்பான அறுவை சிகிச்சை புற்றுநோய்க்காக எடுத்துக்கிற கீமோதெரபி, ரேடியேஷனோட விளைவாலயும் சினைப்பையோட இயக்கம் நின்று போகலாம்.
மாதவிலக்கு மாசம் தவறி வர்றது அல்லது நின்று போவது உடம்பெல்லாம் சூடாகி வியர்த்துக்கொட்டறது எரிச்சல், மனஉளைச்சல், தாம்பத்ய உறவில் நாட்டம் இல்லாதது சரியான தூக்கமில்லாததுனு இந்தப் பிரச்சனையோட அறிகுறிகள் அத்தனையும் கிட்டத்தட்ட மொனோபாஸ் அறிகுறிகளைப் போலவே இருக்கும். மாதவிலக்கு சுழற்சி மாறினாலோ நின்னுட்டாலோ மருத்துவரை அணுகணும். ரத்தத்துள உள்ள எஃப். எஸ்.ஹெச் அளவு சரிபார்க்கப்படும்.
எஃப்.எஸ்.ஹெச் தான் மாசந்தோறும் சினைமுட்டைகளை வெளியேத்தச் சொல்லி உடம்புக்கு சிக்னல் தரும்.ரத்தத்துள அதோட அ ளவு மாறியிருக்கிறதை வச்சு ப்ரீமெச்சூரியன் ஓவரியன் ஃபெயிலியர் இருக்கானு கண்டு பிடிக்கலாம். தவிர ரத்தத்துள உள்ள ஈஸ் ட்ரோஜன் ரொம்ப குறைஞ்சு, எஃப்.எஸ்.ஹெச் அதிகமாறதும் இந்தப்பிரச்சனைக்கு காரணம்.
பெரும்பாலும் மலட்டுத்தன்மைன்னான சிகிச்சைகளை ஆரம்பிக்கிறப்பதான் பல பெண்களுக்கும் இந்த பிரச்சனை இருக்கிறதே தெரிய வரும். ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட் தெரபி மூலமா இந்தப் பிரச்சனையோட பாதிப்புகள்லேர்ந்து மீளலாம். அது எலும்புகளோட ஆரோக்கியத்தையும் காப்பாத்தும். கரு த்தரித்தலை பாதிக்கிறதால இள வயது பெண்களுக்குத்தான் இது கவலை தரும் பிரச்சனை.
அப்படிப்பட்டவங்க கருமுட்டை தானம் மூலமா குழந்தை பெறலாம். ப்ரீமெச்சூரியன் ஓவரியன் ஃபெயிலியர் உள்ள பெண்களுக்கு எலும்புகள் மெலியலாம். நீரிழிவும், இதய நோய்களும் பாதிக்கலாம். சரியான நேரத்துக்கு சிகிச்சை, கொழுப்பில்லாத சரிவிகித உணவு, உடற்பயிற்சி டாக்டரோட அறிவுரைப்படி கால்சியம் மற்றும் வைட்டமின் டி எடுத்துக்கிறதெல்லாம் அவங்களோட ஆரோக்கியத்துக்கு உதவும்.
குறிப்பிட்ட வயசுக்கு முன்னாடியே சினைப்பை தன் வேலையைச் செய்யறதை நிறுத்திக்கிற இந்தப்பிரச்சனைக்கு பரம்பரைத் தன்மை காரணமா இருக்கலாம். எதிர்பு சக்தி இல்லாத சிலருக்கு அவங்களோட உடம்புக்குள்ள இருக்கிற திசுக்களை அவங்க உடம்பே அட்டாக் செய்யறதும் காரணமாகலாம்.. கர்ப்பப்பை அறுவை சிகிச்சை இடு ப்பெலும்பு தொடர்பான அறுவை சிகிச்சை புற்றுநோய்க்காக எடுத்துக்கிற கீமோதெரபி, ரேடியேஷனோட விளைவாலயும் சினைப்பையோட இயக்கம் நின்று போகலாம்.
மாதவிலக்கு மாசம் தவறி வர்றது அல்லது நின்று போவது உடம்பெல்லாம் சூடாகி வியர்த்துக்கொட்டறது எரிச்சல், மனஉளைச்சல், தாம்பத்ய உறவில் நாட்டம் இல்லாதது சரியான தூக்கமில்லாததுனு இந்தப் பிரச்சனையோட அறிகுறிகள் அத்தனையும் கிட்டத்தட்ட மொனோபாஸ் அறிகுறிகளைப் போலவே இருக்கும். மாதவிலக்கு சுழற்சி மாறினாலோ நின்னுட்டாலோ மருத்துவரை அணுகணும். ரத்தத்துள உள்ள எஃப். எஸ்.ஹெச் அளவு சரிபார்க்கப்படும்.
எஃப்.எஸ்.ஹெச் தான் மாசந்தோறும் சினைமுட்டைகளை வெளியேத்தச் சொல்லி உடம்புக்கு சிக்னல் தரும்.ரத்தத்துள அதோட அ ளவு மாறியிருக்கிறதை வச்சு ப்ரீமெச்சூரியன் ஓவரியன் ஃபெயிலியர் இருக்கானு கண்டு பிடிக்கலாம். தவிர ரத்தத்துள உள்ள ஈஸ் ட்ரோஜன் ரொம்ப குறைஞ்சு, எஃப்.எஸ்.ஹெச் அதிகமாறதும் இந்தப்பிரச்சனைக்கு காரணம்.
பெரும்பாலும் மலட்டுத்தன்மைன்னான சிகிச்சைகளை ஆரம்பிக்கிறப்பதான் பல பெண்களுக்கும் இந்த பிரச்சனை இருக்கிறதே தெரிய வரும். ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட் தெரபி மூலமா இந்தப் பிரச்சனையோட பாதிப்புகள்லேர்ந்து மீளலாம். அது எலும்புகளோட ஆரோக்கியத்தையும் காப்பாத்தும். கரு த்தரித்தலை பாதிக்கிறதால இள வயது பெண்களுக்குத்தான் இது கவலை தரும் பிரச்சனை.
அப்படிப்பட்டவங்க கருமுட்டை தானம் மூலமா குழந்தை பெறலாம். ப்ரீமெச்சூரியன் ஓவரியன் ஃபெயிலியர் உள்ள பெண்களுக்கு எலும்புகள் மெலியலாம். நீரிழிவும், இதய நோய்களும் பாதிக்கலாம். சரியான நேரத்துக்கு சிகிச்சை, கொழுப்பில்லாத சரிவிகித உணவு, உடற்பயிற்சி டாக்டரோட அறிவுரைப்படி கால்சியம் மற்றும் வைட்டமின் டி எடுத்துக்கிறதெல்லாம் அவங்களோட ஆரோக்கியத்துக்கு உதவும்.
மாரடைப்பு நோயாளிகள், இரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது. இன்று சின்ன வெங்காயம் சேர்த்து சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு - 1 கப்
நறுக்கிய சிறிய வெங்காயம் - 2 கப்
பச்சை மிளகாய் - 3
எலுமிச்சை சாறு - சிறிதளவு

செய்முறை:
சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கோதுமை மாவுடன் எலுமிச்சை சாறு, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், ப.மிளகாய் மற்றும் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
பின்னர் அதனை மாவு கலவையுடன் சேர்த்து கலந்து சிறிய உருண்டைகளாக உருட்டி சப்பாத்திகளாக தயார் செய்யுங்கள்.
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அது சூடானதும் தேய்து வைத்த சப்பாத்தியை ஒவ்வொன்றாக போட்டு சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேகவைத்து பரிமாறுங்கள்.
கோதுமை மாவு - 1 கப்
நறுக்கிய சிறிய வெங்காயம் - 2 கப்
பச்சை மிளகாய் - 3
எலுமிச்சை சாறு - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவைக்கு

செய்முறை:
சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கோதுமை மாவுடன் எலுமிச்சை சாறு, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், ப.மிளகாய் மற்றும் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
பின்னர் அதனை மாவு கலவையுடன் சேர்த்து கலந்து சிறிய உருண்டைகளாக உருட்டி சப்பாத்திகளாக தயார் செய்யுங்கள்.
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அது சூடானதும் தேய்து வைத்த சப்பாத்தியை ஒவ்வொன்றாக போட்டு சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேகவைத்து பரிமாறுங்கள்.
சூப்பரான சின்ன வெங்காய சப்பாத்தி ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
உங்கள் முகம் இயற்கையாகவே ஜொலிக்கனும் என்று ஆசைப்படுகிறீர்களா? அப்ப கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை கொண்டு சருமத்தை பராமரித்து வந்தால் நல்ல பலனை காணலாம்.
உங்கள் முகம் இயற்கையாகவே ஜொலிக்கனும் என்று ஆசைப்படுகிறீர்களா? அப்போ இத ப்லோ பண்ணுங்க. இந்த இரண்டு பொருட்களைக் கொண்டே உங்கள் முகத்தை இயற்கையாக ஜொலிக்க வைக்க முடியும். இந்த அவசர உலகத்தில் நம்முடைய முகத்தை பராமரிக்க கூட நேரம் கிடைப்பதில்லை. பியூட்டி பார்லர் சென்று முகத்தை அழகு படுத்தினாலும் பணம் விரயமாவதுடன் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் இயற்கை முறைகள் செலவு இல்லாது ஒன்று. இதில் எந்த கெமிக்கல்களும் இருப்பதில்லை. சரி வாங்க உங்களுக்கான இயற்கை முகப் பராமரிப்புகளை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.
* பப்பாளி பழத்தில் உள்ள ஆன்டி ஹைட்ராக்ஸி அமிலம் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குகிறது. லெமன் சருமத்திற்கு நல்ல நிறத்தை கொடுத்து பருக்கள் போன்றவற்றை போக்குகிறது.
பயன்படுத்தும் முறை
அரை பப்பாளி பழத்தை எடுத்து அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். இதை நன்றாக கெட்டியாக அரைக்கவும். இந்த பப்பாளி பேஸ்ட்டுடன் கொஞ்சம் லெமன் ஜூஸ் சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த பேஸ்ட்டை உங்கள் முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். இதை ஒரு வாரத்திற்கு ஒரு முறை என செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்
* கிரீன் டீ பேக் நமது சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்குகிறது. தேன் சருமத்திற்கு நல்ல ஈரப்பதத்தை கொடுக்கிறது.
பயன்படுத்தும் முறை
க்ரீன் டீ பேக்கை வெட்டி அதிலுள்ள பொடியை மட்டும் எடுத்து கொள்ளுங்கள். அதை ஒரு பெளலில் எடுத்து 1-2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலக்கவும். முகத்தை நன்றாகக் கழுவி விட்டு இந்த பேஸ்ட்டை அப்ளே செய்து 5-10 நிமிடங்கள் இருங்கள். பிறகு சாதாரண நீரில் கழுவவும். இதை வாரத்திற்கு இரண்டு முறை என செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.
* பாதாம் பருப்பில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், விட்டமின் ஈ, கொழுப்பு அமிலங்கள் போன்றவை சரும ஜொலிப்பை தருகிறது. இந்த பேஸ் மாஸ்க் சருமத்தை சுத்தம் செய்து நல்ல பளபளப்பை கொடுக்கும்.
பயன்படுத்தும் முறை
10-15 பாதாம் பருப்பை எடுத்து சில மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். ஊற வைத்த பாதாம் பருப்பை மிக்சியில் போட்டு அரைத்து பேஸ்ட்டாக்கி கொள்ளுங்கள். அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்து 20 நிமிடங்கள் காய விடவும். பிறகு சாதாரண நீரில் கழுவவும். நல்ல முகம் பிரகாசமாக இருக்கும்.
* சரும ஜொலிப்பை தரக் கூடிய அனைத்து விட்டமின்களும் மினிரல்கள் கற்றாழையில் அமைந்துள்ளது. கரும்புள்ளிகள் மற்றும் பருக்களை போக்குகிறது.
பயன்படுத்தும் முறை
2-4 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை ஒரு மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் கிரீன் டீ பொடியை சேருங்கள். நன்றாக கலந்து பேஸ்ட்டாக்கி முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் வரை வைக்கவும். இதை தினமும் பயன்படுத்தும் போது நல்ல தீர்வு கிடைக்கும்.
* பப்பாளி பழத்தில் உள்ள ஆன்டி ஹைட்ராக்ஸி அமிலம் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குகிறது. லெமன் சருமத்திற்கு நல்ல நிறத்தை கொடுத்து பருக்கள் போன்றவற்றை போக்குகிறது.
பயன்படுத்தும் முறை
அரை பப்பாளி பழத்தை எடுத்து அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். இதை நன்றாக கெட்டியாக அரைக்கவும். இந்த பப்பாளி பேஸ்ட்டுடன் கொஞ்சம் லெமன் ஜூஸ் சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த பேஸ்ட்டை உங்கள் முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். இதை ஒரு வாரத்திற்கு ஒரு முறை என செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்
* கிரீன் டீ பேக் நமது சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்குகிறது. தேன் சருமத்திற்கு நல்ல ஈரப்பதத்தை கொடுக்கிறது.
பயன்படுத்தும் முறை
க்ரீன் டீ பேக்கை வெட்டி அதிலுள்ள பொடியை மட்டும் எடுத்து கொள்ளுங்கள். அதை ஒரு பெளலில் எடுத்து 1-2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலக்கவும். முகத்தை நன்றாகக் கழுவி விட்டு இந்த பேஸ்ட்டை அப்ளே செய்து 5-10 நிமிடங்கள் இருங்கள். பிறகு சாதாரண நீரில் கழுவவும். இதை வாரத்திற்கு இரண்டு முறை என செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.
* பாதாம் பருப்பில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், விட்டமின் ஈ, கொழுப்பு அமிலங்கள் போன்றவை சரும ஜொலிப்பை தருகிறது. இந்த பேஸ் மாஸ்க் சருமத்தை சுத்தம் செய்து நல்ல பளபளப்பை கொடுக்கும்.
பயன்படுத்தும் முறை
10-15 பாதாம் பருப்பை எடுத்து சில மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். ஊற வைத்த பாதாம் பருப்பை மிக்சியில் போட்டு அரைத்து பேஸ்ட்டாக்கி கொள்ளுங்கள். அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்து 20 நிமிடங்கள் காய விடவும். பிறகு சாதாரண நீரில் கழுவவும். நல்ல முகம் பிரகாசமாக இருக்கும்.
* சரும ஜொலிப்பை தரக் கூடிய அனைத்து விட்டமின்களும் மினிரல்கள் கற்றாழையில் அமைந்துள்ளது. கரும்புள்ளிகள் மற்றும் பருக்களை போக்குகிறது.
பயன்படுத்தும் முறை
2-4 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை ஒரு மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் கிரீன் டீ பொடியை சேருங்கள். நன்றாக கலந்து பேஸ்ட்டாக்கி முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் வரை வைக்கவும். இதை தினமும் பயன்படுத்தும் போது நல்ல தீர்வு கிடைக்கும்.
உணவுப் பழக்கவழக்கம், ஆர்செனிக் மற்றும் சில ரசாயனப் பொருட்களினாலும், தொழில்மயமாக்கல், மாசுபடுதல், சுற்றுச்சூழல் காரணங்களாலும் புற்றுநோய் ஏற்படலாம்.
இன்று (பிப்ரவரி 4-ந்தேதி) உலக புற்றுநோய் தினம்
புற்றுநோய் என்றால் என்ன? அது மக்களை அச்சுறுத்தும் ஆபத்தான நோயா? என்ற கேள்வி பலரின் மனதிலும் உள்ளது. உறுப்பில் உள்ள செல், ஏதாவது தூண்டுதலினால் தன் அமைப்பிலிருந்து மாறுபட்டு, வேறுபட்டு புதிய செல்லாக உருவாகும், அது தான் புற்றுநோய் செல். அது சாதாரண செல்லை விட வேகமாகவும், விரைவாகவும் பெருகிக்கொண்டே இருக்கும். இவ்வாறு பெருகும் செல்கள் ஒன்றாக சேர்ந்து உருவாகும் கட்டி தான் புற்று நோய்க்கட்டி.
புற்றுநோய் உடலில் பல், முடி, நகம் தவிர உடலின் எந்த பாகத்தில் வேண்டுமானாலும் ஏற்படலாம். புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது? என்பது குறித்து குழப்பம் நிலவி வருகிறது. புகைபிடித்தல், மதுப்பழக்கம், உடல் பருமன், சிவப்பு அல்லது பதப்படுத்தப்பட்ட இறைச்சி, உயர் உப்பு, கதிர்வீச்சு (புற ஊதா மற்றும் அயனியாக்கும் கதிர்வீச்சு) ஹார்மோன்கள், வைரஸ்கள், (கல்லீரலை பாதிக்கும் பி வைரஸ், சி வைரஸ் மற்றும் எப்ஸ்டீன்பார் வைரஸ்) பாக்டீரியா (ஹெலிகோபாக்டர் பைலோரி) மற்றும் ஒட்டுண்ணிகள், மற்றும் மரபியல் காரணங்களால் புற்றுநோய் ஏற்படலாம்.
உணவுப் பழக்கவழக்கம், ஆர்செனிக் மற்றும் சில ரசாயனப் பொருட்களினாலும், தொழில்மயமாக்கல், மாசுபடுதல், சுற்றுச்சூழல் காரணங்களாலும் புற்றுநோய் ஏற்படலாம். புற்றுநோய்களில் பல்வேறு வகைகள் இருக்கின்றன. முதியவர்களுக்குத்தான் புற்று நோய்கள் அதிகமாக ஏற்படும் என்றாலும், இளம் வயதினருக்கும், ஏன் சிறுவர்களுக்கு கூட சில வகை புற்றுநோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
புற்றுநோய் செல்கள் உருவான உறுப்பிலிருந்து உடலின் பல்வேறு பகுதிகளுக்கும் ரத்தத்தின் மூலமாகவும், நிணநீரின் மூலமாகவும் பரவும். அருகிலிருக்கும் திசுக்களுக்கும், உறுப்புகளுக்கும் பரவும். எந்த வகை புற்றுநோயாக இருந்தாலும் அது வளர்ந்து பரவியுள்ள தன்மையைப் பொறுத்து, அது ஆரம்பநிலையில் இருக்கிறதா? இல்லை முற்றிய நிலைக்குச் சென்றுவிட்டதா? என்று கண்டுபிடிக்கப்படும். இது சிகிச்சைக்கும், எதிர்கால கணிப்பிற்கும் பெரிதும் உதவும்.
உலக அளவில் ஒவ்வொரு வருடமும் 9.6 மில்லியன் மக்கள் புற்றுநோயால் இறக்கிறார்கள். ஒவ்வொரு நிமிடமும் உலகத்தில் 17 பேர் புற்றுநோயினால் பலியாகி கொண்டிருக்கிறார்கள். உலகில் நிகழும் 6 இறப்புகளில் ஒன்றுக்கு புற்றுநோய் தான் காரணமாக உள்ளது. பொதுவான புற்றுநோய்களில் மூன்றில் ஒரு பங்கு தடுக்கக்கூடியது. உலகளாவிய ரீதியில் மனிதர்களின் மரணத்திற்கு இரண்டாவது முக்கிய காரணம் புற்றுநோய் தான். 70 சதவீத புற்றுநோய் இறப்புகள் குறைந்த, நடுத்தர வருவாய் நாடுகளில் ஏற்படுகின்றன.

புற்றுநோய் தடுப்பு, ஆரம்ப கண்டறிதல் மற்றும் சிகிச்சைக்கான ஆதார உத்திகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 3.7 மில்லியன் உயிர்கள் வரை சேமிக்க முடியும். இந்தியாவில் சுமார் 22 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நமது தேசத்தில் கடந்த ஆண்டு மட்டும் 7,84,821 பேரை புற்றுநோய் காவு வாங்கியிருக்கிறது.
ஆண்களுக்கு, நுரையீரல், வாய், இரைப்பை, பெருங்குடல், புரோஸ்டேட் பகுதிகளிலும், பெண்களுக்கு மார்பகம், கருப்பை, கர்ப்பப்பை வாய்ப்பகுதி வாய், குடல் பகுதிகளிலும் புற்றுநோய் அதிக அளவு ஏற்படுகிறது. பசியின்மை, உடல் எடை குறைந்து கொண்டே வருதல், அசதி ஏற்படுதல், தீராத தலைவலி, சிகிச்சைக்கு கட்டுப்படாத தொடர் இருமல், பேச்சில், குரலில் வித்தியாசம் ஏற்படுதல், சிறுநீரில், மலத்தில் ரத்தம் கலந்து வருதல், தோலில் உள்ள மச்சம் திடீரென பெரிதாவது, அதிலிருந்து ரத்தம் கசிவது, காரணமில்லாமல் மூச்சு வாங்குவது, உணவை விழுங்க முடியாமல் சிரமப்படுதல், ஜீரண சக்தி குறைதல், சிறுநீர் கழிப்பதிலும், மலம் கழிப்பதிலும் காரணமில்லாமல் ஏற்படும் மாற்றங்கள், ஆறாத புண்-ரணங்கள், உடலில் ஏற்படும் வலியுடன் கூடிய கட்டிகள் போன்றவையே புற்றுநோய்க்கான பொதுவான காரணங்கள் ஆகும். புற்று நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை மற்றும் கீமோதெரபி எனப்படும் மருத்துவ சிகிச்சைகள் இப்போது நடைமுறையில் உள்ளன. எதிர்ப்பாற்றலை அடிப்படையாக கொண்டு நவீன சிகிச்சைகளும் வந்து கொண்டிருக்கின்றன.
ஆரோக்கியமான உணவை குறிப்பாக, அதிக காய்கறிகள், பழங்கள், கீரை வகை உணவுகளை உட்கொள்ள வேண்டும். இவற்றில் இருக்கும் அதிக நார்ச்சத்து புற்றுநோயைத் தடுக்க உதவும். புகைபழக்கம், மது ஆகியவற்றை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும். குடிநீர், காற்று மாசுபாடு ஆகியவற்றை கட்டுப்படுத்த வேண்டும். மனித பாபிலோமா வைரஸ் தடுப்பூசி கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை தடுக்க உதவுகிறது. மேலும் ஹெபடைடிஸ் பி தடுப்பூசி கல்லீரல் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது. இவற்றை மருத்துவரின் ஆலோசனைப்படி போட்டுக்கொள்ள வேண்டும்.
புற்றுநோய் குறித்து அதிகம் அச்சம் கொள்ள தேவையில்லை. ஏனெனில் ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை செய்தால் இந்த நோயை எளிதில் குணப்படுத்தி விட முடியும். இதற்காகத்தான் ‘ஸ்கிரீனிங் திட்டங்கள்’ எனப்படும் மாஸ்டர் ஹெல்த் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.
மக்கள் இதனை முறையாக பயன்படுத்தினால் புற்றுநோய் வராமலே தடுக்க முடியும். அப்படியே வந்தாலும் ஆரம்ப நிலையிலே கண்டறிந்து குணம் காண முடியும். புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், நோய்த்தடுப்பு முறைகள் மற்றும் சிகிச்சை முறைகளைப் பரப்புவதற்கும் ஆண்டுதோறும் பிப்ரவரி 4-ந் தேதி சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டு அமைப்பின் மூலம் ‘உலக புற்றுநோய் தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு இதன் கருப்பொருள், ‘என்னால் முடியும்’ என்பதாகும். மக்களிடம் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படவேண்டும். வராமல் தடுத்தல், உரிய பரிசோதனைகளை செய்தல், ஆரம்பத்திலேயே நோய் கண்டறிதல், சிகிச்சை மேற்கொள்ளுதல் ஆகியவற்றை நம்பிக்கையுடன் மேற்கொண்டால், நாமும், நாடும் புற்றுநோயின் பிடியில் இருந்து விடுபடலாம். ஆரோக்கியமாய் வாழலாம்.
டாக்டர் சு.முத்து செல்லக்குமார்
புற்றுநோய் என்றால் என்ன? அது மக்களை அச்சுறுத்தும் ஆபத்தான நோயா? என்ற கேள்வி பலரின் மனதிலும் உள்ளது. உறுப்பில் உள்ள செல், ஏதாவது தூண்டுதலினால் தன் அமைப்பிலிருந்து மாறுபட்டு, வேறுபட்டு புதிய செல்லாக உருவாகும், அது தான் புற்றுநோய் செல். அது சாதாரண செல்லை விட வேகமாகவும், விரைவாகவும் பெருகிக்கொண்டே இருக்கும். இவ்வாறு பெருகும் செல்கள் ஒன்றாக சேர்ந்து உருவாகும் கட்டி தான் புற்று நோய்க்கட்டி.
புற்றுநோய் உடலில் பல், முடி, நகம் தவிர உடலின் எந்த பாகத்தில் வேண்டுமானாலும் ஏற்படலாம். புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது? என்பது குறித்து குழப்பம் நிலவி வருகிறது. புகைபிடித்தல், மதுப்பழக்கம், உடல் பருமன், சிவப்பு அல்லது பதப்படுத்தப்பட்ட இறைச்சி, உயர் உப்பு, கதிர்வீச்சு (புற ஊதா மற்றும் அயனியாக்கும் கதிர்வீச்சு) ஹார்மோன்கள், வைரஸ்கள், (கல்லீரலை பாதிக்கும் பி வைரஸ், சி வைரஸ் மற்றும் எப்ஸ்டீன்பார் வைரஸ்) பாக்டீரியா (ஹெலிகோபாக்டர் பைலோரி) மற்றும் ஒட்டுண்ணிகள், மற்றும் மரபியல் காரணங்களால் புற்றுநோய் ஏற்படலாம்.
உணவுப் பழக்கவழக்கம், ஆர்செனிக் மற்றும் சில ரசாயனப் பொருட்களினாலும், தொழில்மயமாக்கல், மாசுபடுதல், சுற்றுச்சூழல் காரணங்களாலும் புற்றுநோய் ஏற்படலாம். புற்றுநோய்களில் பல்வேறு வகைகள் இருக்கின்றன. முதியவர்களுக்குத்தான் புற்று நோய்கள் அதிகமாக ஏற்படும் என்றாலும், இளம் வயதினருக்கும், ஏன் சிறுவர்களுக்கு கூட சில வகை புற்றுநோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
புற்றுநோய் செல்கள் உருவான உறுப்பிலிருந்து உடலின் பல்வேறு பகுதிகளுக்கும் ரத்தத்தின் மூலமாகவும், நிணநீரின் மூலமாகவும் பரவும். அருகிலிருக்கும் திசுக்களுக்கும், உறுப்புகளுக்கும் பரவும். எந்த வகை புற்றுநோயாக இருந்தாலும் அது வளர்ந்து பரவியுள்ள தன்மையைப் பொறுத்து, அது ஆரம்பநிலையில் இருக்கிறதா? இல்லை முற்றிய நிலைக்குச் சென்றுவிட்டதா? என்று கண்டுபிடிக்கப்படும். இது சிகிச்சைக்கும், எதிர்கால கணிப்பிற்கும் பெரிதும் உதவும்.
உலக அளவில் ஒவ்வொரு வருடமும் 9.6 மில்லியன் மக்கள் புற்றுநோயால் இறக்கிறார்கள். ஒவ்வொரு நிமிடமும் உலகத்தில் 17 பேர் புற்றுநோயினால் பலியாகி கொண்டிருக்கிறார்கள். உலகில் நிகழும் 6 இறப்புகளில் ஒன்றுக்கு புற்றுநோய் தான் காரணமாக உள்ளது. பொதுவான புற்றுநோய்களில் மூன்றில் ஒரு பங்கு தடுக்கக்கூடியது. உலகளாவிய ரீதியில் மனிதர்களின் மரணத்திற்கு இரண்டாவது முக்கிய காரணம் புற்றுநோய் தான். 70 சதவீத புற்றுநோய் இறப்புகள் குறைந்த, நடுத்தர வருவாய் நாடுகளில் ஏற்படுகின்றன.

புற்றுநோய் தடுப்பு, ஆரம்ப கண்டறிதல் மற்றும் சிகிச்சைக்கான ஆதார உத்திகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 3.7 மில்லியன் உயிர்கள் வரை சேமிக்க முடியும். இந்தியாவில் சுமார் 22 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நமது தேசத்தில் கடந்த ஆண்டு மட்டும் 7,84,821 பேரை புற்றுநோய் காவு வாங்கியிருக்கிறது.
ஆண்களுக்கு, நுரையீரல், வாய், இரைப்பை, பெருங்குடல், புரோஸ்டேட் பகுதிகளிலும், பெண்களுக்கு மார்பகம், கருப்பை, கர்ப்பப்பை வாய்ப்பகுதி வாய், குடல் பகுதிகளிலும் புற்றுநோய் அதிக அளவு ஏற்படுகிறது. பசியின்மை, உடல் எடை குறைந்து கொண்டே வருதல், அசதி ஏற்படுதல், தீராத தலைவலி, சிகிச்சைக்கு கட்டுப்படாத தொடர் இருமல், பேச்சில், குரலில் வித்தியாசம் ஏற்படுதல், சிறுநீரில், மலத்தில் ரத்தம் கலந்து வருதல், தோலில் உள்ள மச்சம் திடீரென பெரிதாவது, அதிலிருந்து ரத்தம் கசிவது, காரணமில்லாமல் மூச்சு வாங்குவது, உணவை விழுங்க முடியாமல் சிரமப்படுதல், ஜீரண சக்தி குறைதல், சிறுநீர் கழிப்பதிலும், மலம் கழிப்பதிலும் காரணமில்லாமல் ஏற்படும் மாற்றங்கள், ஆறாத புண்-ரணங்கள், உடலில் ஏற்படும் வலியுடன் கூடிய கட்டிகள் போன்றவையே புற்றுநோய்க்கான பொதுவான காரணங்கள் ஆகும். புற்று நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை மற்றும் கீமோதெரபி எனப்படும் மருத்துவ சிகிச்சைகள் இப்போது நடைமுறையில் உள்ளன. எதிர்ப்பாற்றலை அடிப்படையாக கொண்டு நவீன சிகிச்சைகளும் வந்து கொண்டிருக்கின்றன.
ஆரோக்கியமான உணவை குறிப்பாக, அதிக காய்கறிகள், பழங்கள், கீரை வகை உணவுகளை உட்கொள்ள வேண்டும். இவற்றில் இருக்கும் அதிக நார்ச்சத்து புற்றுநோயைத் தடுக்க உதவும். புகைபழக்கம், மது ஆகியவற்றை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும். குடிநீர், காற்று மாசுபாடு ஆகியவற்றை கட்டுப்படுத்த வேண்டும். மனித பாபிலோமா வைரஸ் தடுப்பூசி கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை தடுக்க உதவுகிறது. மேலும் ஹெபடைடிஸ் பி தடுப்பூசி கல்லீரல் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது. இவற்றை மருத்துவரின் ஆலோசனைப்படி போட்டுக்கொள்ள வேண்டும்.
புற்றுநோய் குறித்து அதிகம் அச்சம் கொள்ள தேவையில்லை. ஏனெனில் ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை செய்தால் இந்த நோயை எளிதில் குணப்படுத்தி விட முடியும். இதற்காகத்தான் ‘ஸ்கிரீனிங் திட்டங்கள்’ எனப்படும் மாஸ்டர் ஹெல்த் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.
மக்கள் இதனை முறையாக பயன்படுத்தினால் புற்றுநோய் வராமலே தடுக்க முடியும். அப்படியே வந்தாலும் ஆரம்ப நிலையிலே கண்டறிந்து குணம் காண முடியும். புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், நோய்த்தடுப்பு முறைகள் மற்றும் சிகிச்சை முறைகளைப் பரப்புவதற்கும் ஆண்டுதோறும் பிப்ரவரி 4-ந் தேதி சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டு அமைப்பின் மூலம் ‘உலக புற்றுநோய் தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு இதன் கருப்பொருள், ‘என்னால் முடியும்’ என்பதாகும். மக்களிடம் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படவேண்டும். வராமல் தடுத்தல், உரிய பரிசோதனைகளை செய்தல், ஆரம்பத்திலேயே நோய் கண்டறிதல், சிகிச்சை மேற்கொள்ளுதல் ஆகியவற்றை நம்பிக்கையுடன் மேற்கொண்டால், நாமும், நாடும் புற்றுநோயின் பிடியில் இருந்து விடுபடலாம். ஆரோக்கியமாய் வாழலாம்.
டாக்டர் சு.முத்து செல்லக்குமார்
நீங்கள் போட்டித் தேர்வில் ஜெயித்து, சிறந்த வாழ்க்கைப் பாதையை அமைக்கவும், தகவல் தொடர்பை பெருக்கிக் கொள்ளவும் ஆங்கில அறிவை வளர்ப்பது அவசியமாகிறது.
இன்று இந்திய குடிமைப் பணிகளான ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட அனைத்து தேர்வுகளையும் தாய்மொழியில் எழுத முடியும். இருந்தாலும் வங்கியின் வாயில் காவலர் முதல், உதவியாளர், உயர் அதிகாரி பணி வரை அனைத்து பணிகளுக்கும் மண்டல மொழியறிவுடன், பிறமொழி அறிவும் சோதிக்கப்படுகிறது. குறிப்பாக ஆங்கில அறிவு அவசியமாக கருதப்படுகிறது.
எனவே போட்டித் தேர்வுகளில் ஆங்கில அறிவை சோதிக்கும் பகுதிகளும், அதற்கென குறிப்பிட்ட மதிப்பெண்களுக்கு வினாக்களும் கேட்கப்படுகின்றன. வங்கிப் போட்டித் தேர்வில் ஆங்கில அறிவை சோதிக்கும் தனித்தாள் தேர்வும் நடத்தப்படுகிறது.
இயல்பாக பள்ளிப் படிப்பைத் தாண்டினாலும் ஆங்கில அறிவு அவசியம். அதுதான் பட்டப்படிப்பு படிக்கவும், முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளை மேற்கொள்ளவும் கைகொடுக்கும். படிப்பு முடிந்துவிட்டால் வேலைக்கும், வேலை தவிர்த்து சொந்தமாக தொழில் தொடங்க நினைத்தாலும், பெரிய அளவில் வியாபாரம் செய்ய நினைத்தாலும் ஆங்கில மொழி அறிவின் தேவையை உணர முடியும்.
ஆங்கிலம் உலகளாவிய தொடர்பு மொழியாக இருப்பதும், இன்றைய இணையதள பயன்பாட்டால் உலகம் மிகமிக சுருங்கிவிட்டதாலும், அங்கும் ஆங்கிலம் அடிப்படையாக இருப்பதாலும் இந்த மொழி தெரிந்திருப்பது நம் தன்னம்பிக்கையை வளர்ப்பதுடன், தேவைகளை நிறைவேற்றி வைக்கவும் உதவும்..
போட்டித் தேர்வுகளில் ஆங்கில அறிவை பல விதங்களில் சோதித்து அறிகிறார்கள். குறிப்பிட்ட ஆங்கில உரைநடையை கொடுத்துவிட்டு அதிலிருந்து கேள்வி கேட்பது, ஒரு வாக்கியத்தில் இடைவெளியை நிரப்பும் சரியான சொல்லை தேர்வு செய்வது, இணைப்புச் சொல், தொடர்புச் சொல், ஒரே பொருள் தரும் சொல், எதிர்பொருள் தரும் சொற்களை அறிவது என ஆங்கில இலக்கண அறிவை துல்லியமாக சோதிக்கும்படியான கேள்விகளை கேட்டிருப்பார்கள்.
இந்த கேள்விகளுக்கு குறித்த வரைமுறையோ, பாடப்பகுதியோ கிடையாது. தேர்ந்த இலக்கண அறிவும், சிறந்த மொழி அறிவும்தான் இதில் முழு மதிப்பெண் பெற உதவும். கணித வினாக்கள், பொது அறிவு வினாக்கள் போல மாதிரி பயிற்சி செய்து மொழியறிவு வினாவுக்கு பயிற்சி பெற முடியாது. ஆனால் இலக்கண விதிகளை மனதில் ஏற்றிக் கொண்டால், அதிகம் பயிற்சி செய்யாவிட்டாலும் சரியான பதில்களை தேர்வு செய்துவிட முடியும். இருந்தாலும் பொருளறிந்து பதில் அளிக்க வேண்டிய வினாக்களுக்கு, தொடர்ந்த ஆங்கில வாசிப்புத் திறனால், நிறைய சொற்களுக்கு பொருள் அறிந்து வைத்திருந்தால் மட்டுமே பதில் அளிக்க முடியும்.
எழுத்துத் தேர்வில் மட்டுமல்லாது நேர்காணலின்போதும் ஆங்கில உரையாடலே மையமாக இருக்கும். தாய்மொழி நேர்காணலை எல்லா இடத்திலும் எதிர்பார்க்க முடியாது. வேலைக்கான நேர்காணலில் எவ்வளவோ திறமை பெற்ற இளைஞர்கள், ஆங்கில மொழி தெரியாத ஒரே காரணத்தால் தடுமாறி தோல்வி அடைந்து திரும்பியிருக்கிறார்கள்.
நீங்கள் போட்டித் தேர்வில் ஜெயித்து, சிறந்த வாழ்க்கைப் பாதையை அமைக்கவும், தகவல் தொடர்பை பெருக்கிக் கொள்ளவும் ஆங்கில அறிவை வளர்ப்பது அவசியமாகிறது. அதை கற்றுக்கொள்ள சில அடிப்படை விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அவை...
முதலில் ஆங்கிலம் எனக்குப் புரிவதில்லை. பல முறை படிக்க முயன்றும் முடியவில்லை. எவ்வளவு படித்தாலும் சிறிது காலத்தில் மறந்துவிடுகிறது அல்லது குழப்பம் வருகிறது. என்னால் படிக்க முடியாது என்பது போன்ற எதிர்மறையான எண்ணங்களை மாற்றுங்கள். “நான் ஆங்கிலத்தை கற்றே தீர வேண்டும். அது என்னால் முடியும்” என்ற நம்பிக்கையுடன் படிக்கத் தொடங்குங்கள்.
தினமும் குறிப்பிட்ட மணி நேரங்களை ஆங்கிலம் படிக்க ஒதுக்குவதை வாடிக்கையாக்குங்கள். அதற்காக ஆங்கில தினசரிகள், வார இதழ்கள், கதைகளை வாசிப்பதை வழக்கமாக்குங்கள். புரியாத வார்த்தைகளுக்கு அர்த்தம் படியுங்கள். அதே பொருள் தரும் வேறு சொற்களை ஆங்கிலத்திலேயே அறிய முற்படுங்கள்.
தினசரி வாசிப்பு பயிற்சியுடன், மேற்படி கூடுதலான ஆங்கிலப் பயிற்சியும் அவசியம். நீங்கள் வாசித்த செய்தி அல்லது கதையை நீங்களே உங்கள் சொந்த நடையில், நீங்கள் அறிந்த சொற்களைக் கொண்டு எழுதிப் பாருங்கள். சொல் தடுமாற்றங்களைத் தவிர்க்க அதிகமான சொற்களை அறிய முயலுங்கள். இன்றைய இணையம் உங்கள் தேடலை எளிமையாக்கும். தெரியாத வார்த்தைகளுக்கும், புதிய வார்த்தைகளுக்கும் உடனே அர்த்தம் அறிவது இப்போது சுலபம்தான்.
வார்த்தைகள் அதிகம் பழகப்பழக, பேசுவது சுலபமாகிவிடும். பேசிப் பழக பயம் கொள்ளாதீர்கள். தவறாகப் பேசிவிடுவோமோ? என்று எண்ண வேண்டாம், தவறுகளை திருத்திக் கொள்ளலாம். ஆனால் தயங்கி நின்றால் தொடங்காமலே தோல்விதான் மிஞ்சும். தவறாக பேசினால் மற்றவர்கள் ஏளனமாக நினைப்பார்களோ என்று நினைத்தால் முதலில் நீங்கள் உங்களுக்குத் தெரிந்தவர்களுடன் பேசிப் பழகுங்கள், தவறுகளை சுட்டிக்காட்டச் சொல்லி திருத்திக் கொள்ளுங்கள். தொடர்ந்து ஆங்கிலத்திலேயே பேச முயற்சி செய்யுங்கள். விரைவில் யார் முன்னிலையிலும் ஆங்கிலம் பேச வந்துவிடும்.
உச்சரிப்பு முறைகள் சரியாக அமைய, ஆங்கில டி.வி. சானல்களை பார்க்கலாம். செய்திகளை கேட்கலாம். ஆங்கில சினிமாக்களையும் ரசிக்கலாம். மொழி பெயர்ப்புடன் வெளிவரும் சினிமாக்கள் ஏராளமான வார்த்தைகளை கற்றுக் கொள்ள துணை செய்யும்.
ஆங்கில மொழியறிவு மிக்க ஒருவரை பயிற்சியாளராகவோ, உதவியாளராகவோ நியமித்துக் கொள்வது சிறந்தது. ஆங்கிலத்தில் உரையாடத் தெரிந்த நண்பர்களிடம் பேசிப் பழகுவதும் நல்ல பலன் தரும். பேசிப்பழக இலக்கணம் தடையாக இருப்பதில்லை. ஆனால் இலக்கணம் தெரிந்தால் பிழையின்றி பேசலாம். எழுதவும் செய்யலாம்.
தினசரி பயிற்சியும், தொடர் முயற்சியும் உங்கள் ஆங்கில மொழியறிவை துரிதப்படுத்தும். தீவிர முயற்சி எடுத்துக் கொண்டால் சில மாதங்களில் இந்த முயற்சியில் தேர்ச்சி பெற்றுவிடலாம். தயக்கத்தை விட்டொழித்து பயிற்சி செய்யத் தொடங்கிவிட்டால் செந் தமிழ் மட்டுமல்ல எம்மொழியும் நாப்பழக்கத்தில் வந்துவிடும். வெற்றியைத் தந்துவிடும்.
எனவே போட்டித் தேர்வுகளில் ஆங்கில அறிவை சோதிக்கும் பகுதிகளும், அதற்கென குறிப்பிட்ட மதிப்பெண்களுக்கு வினாக்களும் கேட்கப்படுகின்றன. வங்கிப் போட்டித் தேர்வில் ஆங்கில அறிவை சோதிக்கும் தனித்தாள் தேர்வும் நடத்தப்படுகிறது.
இயல்பாக பள்ளிப் படிப்பைத் தாண்டினாலும் ஆங்கில அறிவு அவசியம். அதுதான் பட்டப்படிப்பு படிக்கவும், முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளை மேற்கொள்ளவும் கைகொடுக்கும். படிப்பு முடிந்துவிட்டால் வேலைக்கும், வேலை தவிர்த்து சொந்தமாக தொழில் தொடங்க நினைத்தாலும், பெரிய அளவில் வியாபாரம் செய்ய நினைத்தாலும் ஆங்கில மொழி அறிவின் தேவையை உணர முடியும்.
ஆங்கிலம் உலகளாவிய தொடர்பு மொழியாக இருப்பதும், இன்றைய இணையதள பயன்பாட்டால் உலகம் மிகமிக சுருங்கிவிட்டதாலும், அங்கும் ஆங்கிலம் அடிப்படையாக இருப்பதாலும் இந்த மொழி தெரிந்திருப்பது நம் தன்னம்பிக்கையை வளர்ப்பதுடன், தேவைகளை நிறைவேற்றி வைக்கவும் உதவும்..
போட்டித் தேர்வுகளில் ஆங்கில அறிவை பல விதங்களில் சோதித்து அறிகிறார்கள். குறிப்பிட்ட ஆங்கில உரைநடையை கொடுத்துவிட்டு அதிலிருந்து கேள்வி கேட்பது, ஒரு வாக்கியத்தில் இடைவெளியை நிரப்பும் சரியான சொல்லை தேர்வு செய்வது, இணைப்புச் சொல், தொடர்புச் சொல், ஒரே பொருள் தரும் சொல், எதிர்பொருள் தரும் சொற்களை அறிவது என ஆங்கில இலக்கண அறிவை துல்லியமாக சோதிக்கும்படியான கேள்விகளை கேட்டிருப்பார்கள்.
இந்த கேள்விகளுக்கு குறித்த வரைமுறையோ, பாடப்பகுதியோ கிடையாது. தேர்ந்த இலக்கண அறிவும், சிறந்த மொழி அறிவும்தான் இதில் முழு மதிப்பெண் பெற உதவும். கணித வினாக்கள், பொது அறிவு வினாக்கள் போல மாதிரி பயிற்சி செய்து மொழியறிவு வினாவுக்கு பயிற்சி பெற முடியாது. ஆனால் இலக்கண விதிகளை மனதில் ஏற்றிக் கொண்டால், அதிகம் பயிற்சி செய்யாவிட்டாலும் சரியான பதில்களை தேர்வு செய்துவிட முடியும். இருந்தாலும் பொருளறிந்து பதில் அளிக்க வேண்டிய வினாக்களுக்கு, தொடர்ந்த ஆங்கில வாசிப்புத் திறனால், நிறைய சொற்களுக்கு பொருள் அறிந்து வைத்திருந்தால் மட்டுமே பதில் அளிக்க முடியும்.
எழுத்துத் தேர்வில் மட்டுமல்லாது நேர்காணலின்போதும் ஆங்கில உரையாடலே மையமாக இருக்கும். தாய்மொழி நேர்காணலை எல்லா இடத்திலும் எதிர்பார்க்க முடியாது. வேலைக்கான நேர்காணலில் எவ்வளவோ திறமை பெற்ற இளைஞர்கள், ஆங்கில மொழி தெரியாத ஒரே காரணத்தால் தடுமாறி தோல்வி அடைந்து திரும்பியிருக்கிறார்கள்.
நீங்கள் போட்டித் தேர்வில் ஜெயித்து, சிறந்த வாழ்க்கைப் பாதையை அமைக்கவும், தகவல் தொடர்பை பெருக்கிக் கொள்ளவும் ஆங்கில அறிவை வளர்ப்பது அவசியமாகிறது. அதை கற்றுக்கொள்ள சில அடிப்படை விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அவை...
முதலில் ஆங்கிலம் எனக்குப் புரிவதில்லை. பல முறை படிக்க முயன்றும் முடியவில்லை. எவ்வளவு படித்தாலும் சிறிது காலத்தில் மறந்துவிடுகிறது அல்லது குழப்பம் வருகிறது. என்னால் படிக்க முடியாது என்பது போன்ற எதிர்மறையான எண்ணங்களை மாற்றுங்கள். “நான் ஆங்கிலத்தை கற்றே தீர வேண்டும். அது என்னால் முடியும்” என்ற நம்பிக்கையுடன் படிக்கத் தொடங்குங்கள்.
தினமும் குறிப்பிட்ட மணி நேரங்களை ஆங்கிலம் படிக்க ஒதுக்குவதை வாடிக்கையாக்குங்கள். அதற்காக ஆங்கில தினசரிகள், வார இதழ்கள், கதைகளை வாசிப்பதை வழக்கமாக்குங்கள். புரியாத வார்த்தைகளுக்கு அர்த்தம் படியுங்கள். அதே பொருள் தரும் வேறு சொற்களை ஆங்கிலத்திலேயே அறிய முற்படுங்கள்.
தினசரி வாசிப்பு பயிற்சியுடன், மேற்படி கூடுதலான ஆங்கிலப் பயிற்சியும் அவசியம். நீங்கள் வாசித்த செய்தி அல்லது கதையை நீங்களே உங்கள் சொந்த நடையில், நீங்கள் அறிந்த சொற்களைக் கொண்டு எழுதிப் பாருங்கள். சொல் தடுமாற்றங்களைத் தவிர்க்க அதிகமான சொற்களை அறிய முயலுங்கள். இன்றைய இணையம் உங்கள் தேடலை எளிமையாக்கும். தெரியாத வார்த்தைகளுக்கும், புதிய வார்த்தைகளுக்கும் உடனே அர்த்தம் அறிவது இப்போது சுலபம்தான்.
வார்த்தைகள் அதிகம் பழகப்பழக, பேசுவது சுலபமாகிவிடும். பேசிப் பழக பயம் கொள்ளாதீர்கள். தவறாகப் பேசிவிடுவோமோ? என்று எண்ண வேண்டாம், தவறுகளை திருத்திக் கொள்ளலாம். ஆனால் தயங்கி நின்றால் தொடங்காமலே தோல்விதான் மிஞ்சும். தவறாக பேசினால் மற்றவர்கள் ஏளனமாக நினைப்பார்களோ என்று நினைத்தால் முதலில் நீங்கள் உங்களுக்குத் தெரிந்தவர்களுடன் பேசிப் பழகுங்கள், தவறுகளை சுட்டிக்காட்டச் சொல்லி திருத்திக் கொள்ளுங்கள். தொடர்ந்து ஆங்கிலத்திலேயே பேச முயற்சி செய்யுங்கள். விரைவில் யார் முன்னிலையிலும் ஆங்கிலம் பேச வந்துவிடும்.
உச்சரிப்பு முறைகள் சரியாக அமைய, ஆங்கில டி.வி. சானல்களை பார்க்கலாம். செய்திகளை கேட்கலாம். ஆங்கில சினிமாக்களையும் ரசிக்கலாம். மொழி பெயர்ப்புடன் வெளிவரும் சினிமாக்கள் ஏராளமான வார்த்தைகளை கற்றுக் கொள்ள துணை செய்யும்.
ஆங்கில மொழியறிவு மிக்க ஒருவரை பயிற்சியாளராகவோ, உதவியாளராகவோ நியமித்துக் கொள்வது சிறந்தது. ஆங்கிலத்தில் உரையாடத் தெரிந்த நண்பர்களிடம் பேசிப் பழகுவதும் நல்ல பலன் தரும். பேசிப்பழக இலக்கணம் தடையாக இருப்பதில்லை. ஆனால் இலக்கணம் தெரிந்தால் பிழையின்றி பேசலாம். எழுதவும் செய்யலாம்.
தினசரி பயிற்சியும், தொடர் முயற்சியும் உங்கள் ஆங்கில மொழியறிவை துரிதப்படுத்தும். தீவிர முயற்சி எடுத்துக் கொண்டால் சில மாதங்களில் இந்த முயற்சியில் தேர்ச்சி பெற்றுவிடலாம். தயக்கத்தை விட்டொழித்து பயிற்சி செய்யத் தொடங்கிவிட்டால் செந் தமிழ் மட்டுமல்ல எம்மொழியும் நாப்பழக்கத்தில் வந்துவிடும். வெற்றியைத் தந்துவிடும்.
வயிற்று உப்புசம் ஏற்பட என்ன காரணம், அது என்ன மாதிரியான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும், அதற்கான தீர்வுகள் என்னென்ன என்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
வயிறு நிறைய சாப்பிட்டாலும், எதுவும் சாப்பிடாவிட்டாலும் சிலருக்கு வயிறு உப்புதல் என்பது அடிக்கடி நிகழும் பிரச்சனை. வயிற்று உப்புசம் ஏற்பட என்ன காரணம், அது என்ன மாதிரியான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும், அதற்கான தீர்வுகள் என்னென்ன என்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
உப்புசம் ஏற்படுவது ஏன்?
“உடலில் வாய்வு உண்டாக இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, இரைப்பை மற்றும் சிறுகுடலில் செரிமானமாகாத சில உணவுப் பொருள்கள் பெருங்குடலில் உள்ள நல்ல பாக்டீரியாவால் உடைக்கப்படும்போது உண்டாகும் வாய்வு. மற்றொன்று, வாய்வழியாக உடலுக்குள் செல்லும் வெளிக்காற்று. இவை இரைப்பையிலிருந்து ஏப்பமாகவோ, குடலைச் சென்றடைந்ததும் ஆசனவாய் வழியாகவோ உடலிலிருந்து வெளியேற வேண்டும். அப்படி வெளியேறாமல் உடலுக்குள்ளேயே தங்கிவிடுவதால், வயிறு வீங்கி உப்புசம் ஏற்படுகிறது.
உப்புசத்தை ஏற்படுத்தும் பிற காரணங்கள்
சாப்பிடும்போது பேசுவது, அவசரமாகச் சாப்பிடுவது, காபி, டீ, ஜூஸ் போன்ற பானங்களை அருந்துவது, ஸ்ட்ரா மூலம் உறிஞ்சிக் குடிப்பது, சூயிங்கம் மெல்வது, மிட்டாய் சப்புவது போன்ற நேரங்களில் நம்மையும் அறியாமல் காற்றையும் சேர்த்து விழுங்குதல்.
மொச்சை, பட்டாணி, பருப்பு, பயறு, பீன்ஸ், சோயா பீன்ஸ், முட்டைகோஸ், வெங்காயம், காலிஃபிளவர், முளைகட்டிய தானியங்கள், வாழைக்காய், முட்டை, உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, செயற்கைப் பழச்சாறுகள், வாய்வை உண்டாக்கும் உணவுப் பொருள்களை அதிகம் சாப்பிடுதல்.
‘லாக்டோஸ் ஒவ்வாமை’ (Lactose Intolerance) இருப்பவர்கள், பால் மற்றும் பாலில் தயாரிக்கப்பட்ட பால் அல்வா, பால்கோவா, சீஸ் போன்ற உணவு வகைகளைச் சாப்பிடுதல்.

காஸ் நிரப்பப்பட்ட குளிர்பானங்கள் அருந்துவது, எண்ணெயில் பொரித்த இறைச்சி, பாக்கெட்டுகளில் அடைத்த மசாலா அதிகமுள்ள உணவுகள், அதிகக் கொழுப்பு, மசாலா உணவுகள் சாப்பிடுதல்.
இவை தவிர, ‘இரிட்டபிள் பவல் சிண்ட்ரோம்’ (Irritable Bowel Syndrome) எனப்படும் வயிற்றில் எரிச்சல் பிரச்சனை, சர்க்கரைநோய், ‘குளூட்டன்’ என்னும் புரதம் செரியாமை, அசுத்தமான நீர்நிலைகளில் வாழும் ‘ஜார்டியா’ (Giardia) எனும் பூச்சி, நீர் மூலம் உடலுக்குள் செல்வது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளாலும் வயிற்று உப்புசம் ஏற்படலாம்.
உப்புசத்தால் உண்டாகும் பிரச்சனைகள்
* வயிறு அல்லது அடிவயிறு வீங்குதல்
* வாய்வுத் தொல்லை
* சாப்பிட்டதும் அசௌகர்யமாக உணர்தல்
* வயிற்று இரைச்சல்
* வயிற்றுப்பிடிப்பு
* குமட்டல்
தவிர்க்கலாம்… தடுக்கலாம்!
* ‘புரோபயாடிக்ஸ்’ (Probiotics) என்னும் நன்மை செய்யும் பாக்டீரியா உள்ள தயிர் போன்ற உணவுகளைச் சாப்பிடலாம்.
* மலம், சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு வந்தால், தாமதிக்காமல் உடனடியாக மலம் கழித்துவிட வேண்டும்.
* ‘குளூட்டன் ஃப்ரீ டயட்’ (Gluten free diet) உணவு முறையைப் பின்பற்றலாம். ‘குளூட்டன்’ என்னும் புரதம் இல்லாத உணவுகள் கடைகளில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கிச் சாப்பிடலாம்.
* மருத்துவரின் பரிந்துரையின்றி, சுயமாக மாத்திரைகள் வாங்கிச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
* நாளொன்றுக்கு மூன்று லிட்டர் நீர் அருந்த வேண்டும். முடிந்தவரை நீரை நன்றாகக் காய்ச்சி, வடிகட்டி அருந்துவது நல்லது.
* புகைபிடித்தல், மது அருந்துதல் மற்றும் செயற்கைக் குளிர்பானங்களைத் தவிர்க்க வேண்டும்.
* எந்த உணவைச் சாப்பிட்டால் வாய்வு அதிகரிப்பதாகத் தோன்றுகிறதோ, அதை முடிந்தவரை குறைத்துக்கொள்ள வேண்டும். தொல்லை தொடர்ந்தால் வந்திருக்கும் பிரச்சனைக்குக் காரணம் உணவா, நோயா என்று மருத்துவரிடம் பரிசோதித்து, சிகிச்சை பெறுவது இதைத் தீர்க்க உதவும்.
உப்புசம் ஏற்படுவது ஏன்?
“உடலில் வாய்வு உண்டாக இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, இரைப்பை மற்றும் சிறுகுடலில் செரிமானமாகாத சில உணவுப் பொருள்கள் பெருங்குடலில் உள்ள நல்ல பாக்டீரியாவால் உடைக்கப்படும்போது உண்டாகும் வாய்வு. மற்றொன்று, வாய்வழியாக உடலுக்குள் செல்லும் வெளிக்காற்று. இவை இரைப்பையிலிருந்து ஏப்பமாகவோ, குடலைச் சென்றடைந்ததும் ஆசனவாய் வழியாகவோ உடலிலிருந்து வெளியேற வேண்டும். அப்படி வெளியேறாமல் உடலுக்குள்ளேயே தங்கிவிடுவதால், வயிறு வீங்கி உப்புசம் ஏற்படுகிறது.
உப்புசத்தை ஏற்படுத்தும் பிற காரணங்கள்
சாப்பிடும்போது பேசுவது, அவசரமாகச் சாப்பிடுவது, காபி, டீ, ஜூஸ் போன்ற பானங்களை அருந்துவது, ஸ்ட்ரா மூலம் உறிஞ்சிக் குடிப்பது, சூயிங்கம் மெல்வது, மிட்டாய் சப்புவது போன்ற நேரங்களில் நம்மையும் அறியாமல் காற்றையும் சேர்த்து விழுங்குதல்.
மொச்சை, பட்டாணி, பருப்பு, பயறு, பீன்ஸ், சோயா பீன்ஸ், முட்டைகோஸ், வெங்காயம், காலிஃபிளவர், முளைகட்டிய தானியங்கள், வாழைக்காய், முட்டை, உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, செயற்கைப் பழச்சாறுகள், வாய்வை உண்டாக்கும் உணவுப் பொருள்களை அதிகம் சாப்பிடுதல்.
‘லாக்டோஸ் ஒவ்வாமை’ (Lactose Intolerance) இருப்பவர்கள், பால் மற்றும் பாலில் தயாரிக்கப்பட்ட பால் அல்வா, பால்கோவா, சீஸ் போன்ற உணவு வகைகளைச் சாப்பிடுதல்.
சிறுகுடல் பகுதியில் அளவுக்கு அதிகமாகத் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா சேர்தல். ஒரு வேளை உணவு உண்டதும் அடுத்த வேளை உணவு உண்ண அதிக இடைவெளி எடுத்துக்கொள்ளுதல். போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது, மலம் மற்றும் சிறுநீரை அடக்குதல்.

காஸ் நிரப்பப்பட்ட குளிர்பானங்கள் அருந்துவது, எண்ணெயில் பொரித்த இறைச்சி, பாக்கெட்டுகளில் அடைத்த மசாலா அதிகமுள்ள உணவுகள், அதிகக் கொழுப்பு, மசாலா உணவுகள் சாப்பிடுதல்.
இவை தவிர, ‘இரிட்டபிள் பவல் சிண்ட்ரோம்’ (Irritable Bowel Syndrome) எனப்படும் வயிற்றில் எரிச்சல் பிரச்சனை, சர்க்கரைநோய், ‘குளூட்டன்’ என்னும் புரதம் செரியாமை, அசுத்தமான நீர்நிலைகளில் வாழும் ‘ஜார்டியா’ (Giardia) எனும் பூச்சி, நீர் மூலம் உடலுக்குள் செல்வது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளாலும் வயிற்று உப்புசம் ஏற்படலாம்.
உப்புசத்தால் உண்டாகும் பிரச்சனைகள்
* வயிறு அல்லது அடிவயிறு வீங்குதல்
* வாய்வுத் தொல்லை
* சாப்பிட்டதும் அசௌகர்யமாக உணர்தல்
* வயிற்று இரைச்சல்
* வயிற்றுப்பிடிப்பு
* குமட்டல்
தவிர்க்கலாம்… தடுக்கலாம்!
* ‘புரோபயாடிக்ஸ்’ (Probiotics) என்னும் நன்மை செய்யும் பாக்டீரியா உள்ள தயிர் போன்ற உணவுகளைச் சாப்பிடலாம்.
* மலம், சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு வந்தால், தாமதிக்காமல் உடனடியாக மலம் கழித்துவிட வேண்டும்.
* ‘குளூட்டன் ஃப்ரீ டயட்’ (Gluten free diet) உணவு முறையைப் பின்பற்றலாம். ‘குளூட்டன்’ என்னும் புரதம் இல்லாத உணவுகள் கடைகளில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கிச் சாப்பிடலாம்.
* மருத்துவரின் பரிந்துரையின்றி, சுயமாக மாத்திரைகள் வாங்கிச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
* நாளொன்றுக்கு மூன்று லிட்டர் நீர் அருந்த வேண்டும். முடிந்தவரை நீரை நன்றாகக் காய்ச்சி, வடிகட்டி அருந்துவது நல்லது.
* புகைபிடித்தல், மது அருந்துதல் மற்றும் செயற்கைக் குளிர்பானங்களைத் தவிர்க்க வேண்டும்.
* எந்த உணவைச் சாப்பிட்டால் வாய்வு அதிகரிப்பதாகத் தோன்றுகிறதோ, அதை முடிந்தவரை குறைத்துக்கொள்ள வேண்டும். தொல்லை தொடர்ந்தால் வந்திருக்கும் பிரச்சனைக்குக் காரணம் உணவா, நோயா என்று மருத்துவரிடம் பரிசோதித்து, சிகிச்சை பெறுவது இதைத் தீர்க்க உதவும்.
வாழை மரத்தில் காய், பூ, தண்டு, இலை என்று தலை முதல் அடிவரை பயன்படாத பொருளே இல்லை எனலாம். இன்று வாழைப்பூவை பயன்படுத்தி பிரியாணி செய்து எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வாழைப்பூ - ஒன்று (சிறியது)
சீரகசம்பா அரிசி - 2 கப்
பட்டை, கிராம்பு - 5
ஏலக்காய் - 2
பிரிஞ்சி இலை - ஒன்று
பெரிய வெங்காயம், தக்காளி - 3
பச்சைமிளகாய் - 3
இஞ்சி-பூண்டு விழுது - 5 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
கரம் மசாலாத்தூள் - ஒன்றரை டீஸ்பூன்
ஜாதிக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
புதினா, கொத்தமல்லித்தழை இலை - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன்
நெய் - 4 டீஸ்பூன்
எலுமிச்சைப்பழம் - பாதி
தயிர் - 3 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
அரைக்க தேவையானவை :
சின்ன வெங்காயம் - 200 கிராம்,
முந்திரி - 10,
கசகசா - ஒன்றரை டீஸ்பூன்,
சோம்பு - ஒன்றரை டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை - 2 டீஸ்பூன்,

செய்முறை :
ப.மிளகாய், தக்காளி, வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
புதினா, கொத்தமல்லியை சுத்தம் செய்து வைக்கவும்.
அரைக்க கொடுக்கப்பபட்டுள்ள பொருட்களை அரைத்து தனியா வைத்து கொள்ளவும்.
சீரக சம்பா அரிசியை அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
வாழைப்பூவை நரம்பு நீக்கி இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.
குக்கரை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரிஞ்சி இலை சேர்த்துத் வதக்கவும்.
இத்துடன் பெரிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வாசனை போக வதக்கவும்.
அடுத்து அதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் தயிர், அரைத்த பேஸ்ட், சேர்த்து நன்கு வதக்கவும்.
அடுத்து அதில் கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு, ஜாதிக்காய்த்தூள், புதினா இலை, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்கு வதக்கியதும், வாழைப்பூ சேர்த்து வதக்கவும்.
இப்போது அரிசி சேர்த்து ஒரு டம்ளர் அரிசிக்கு 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு போட்டு முக்கால் பதம் வேகும் வரை சாதாரண மூடியால் குக்கரை மூடவும்.
சிறிது நேரத்திற்கு பின் மூடியை திறந்து அரிசியைக் கிளறவும். முக்கால் பதம் வெந்ததும் நெய் ஊற்றி மெதுவாக கிளறிவிட்டு, எலுமிச்சைச் சாறு ஊற்றி மூடியை வைத்து மூடி, வெயிட் போட்டு தீயைக் குறைத்து 10 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும். ஐந்து நிமிடம் கழித்து மூடியைத் திறந்து கொத்தமல்லித்தழை தூவிப் பின்னர் பரிமாறவும்.
வாழைப்பூ - ஒன்று (சிறியது)
சீரகசம்பா அரிசி - 2 கப்
பட்டை, கிராம்பு - 5
ஏலக்காய் - 2
பிரிஞ்சி இலை - ஒன்று
பெரிய வெங்காயம், தக்காளி - 3
பச்சைமிளகாய் - 3
இஞ்சி-பூண்டு விழுது - 5 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
கரம் மசாலாத்தூள் - ஒன்றரை டீஸ்பூன்
ஜாதிக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
புதினா, கொத்தமல்லித்தழை இலை - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன்
நெய் - 4 டீஸ்பூன்
எலுமிச்சைப்பழம் - பாதி
தயிர் - 3 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
அரைக்க தேவையானவை :
சின்ன வெங்காயம் - 200 கிராம்,
முந்திரி - 10,
கசகசா - ஒன்றரை டீஸ்பூன்,
சோம்பு - ஒன்றரை டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை - 2 டீஸ்பூன்,
புதினா - 2 டீஸ்பூன்

செய்முறை :
ப.மிளகாய், தக்காளி, வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
புதினா, கொத்தமல்லியை சுத்தம் செய்து வைக்கவும்.
அரைக்க கொடுக்கப்பபட்டுள்ள பொருட்களை அரைத்து தனியா வைத்து கொள்ளவும்.
சீரக சம்பா அரிசியை அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
வாழைப்பூவை நரம்பு நீக்கி இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.
குக்கரை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரிஞ்சி இலை சேர்த்துத் வதக்கவும்.
இத்துடன் பெரிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வாசனை போக வதக்கவும்.
அடுத்து அதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் தயிர், அரைத்த பேஸ்ட், சேர்த்து நன்கு வதக்கவும்.
அடுத்து அதில் கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு, ஜாதிக்காய்த்தூள், புதினா இலை, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்கு வதக்கியதும், வாழைப்பூ சேர்த்து வதக்கவும்.
இப்போது அரிசி சேர்த்து ஒரு டம்ளர் அரிசிக்கு 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு போட்டு முக்கால் பதம் வேகும் வரை சாதாரண மூடியால் குக்கரை மூடவும்.
சிறிது நேரத்திற்கு பின் மூடியை திறந்து அரிசியைக் கிளறவும். முக்கால் பதம் வெந்ததும் நெய் ஊற்றி மெதுவாக கிளறிவிட்டு, எலுமிச்சைச் சாறு ஊற்றி மூடியை வைத்து மூடி, வெயிட் போட்டு தீயைக் குறைத்து 10 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும். ஐந்து நிமிடம் கழித்து மூடியைத் திறந்து கொத்தமல்லித்தழை தூவிப் பின்னர் பரிமாறவும்.
சுவையான வாழைப்பூ பிரியாணி தயார்!!
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பிறந்த குழந்தைகள் எப்பொழுது பசியாக உணர்வார்கள் மற்றும் அவர்களுக்கு எவ்வளவு உணவு அளிக்க வேண்டும் என்பது புதிய தாய்மார்களுக்கு பெரிய சந்தேகமாக, கேள்வியாக இருக்கும்.
குழந்தைக்கு பசி ஏற்படுவதை நான் எப்படி அறிவது என்ற கேள்வி தாய்மார்களின் மனதில் எழலாம். பிறந்த குழந்தைகள் எப்பொழுது பசியாக உணர்வார்கள் மற்றும் அவர்களுக்கு எவ்வளவு உணவு அளிக்க வேண்டும் என்பது புதிய தாய்மார்களுக்கு பெரிய சந்தேகமாக, கேள்வியாக இருக்கும்.
குழந்தைகளுக்கு தாய்ப்பால் என்னும் அமுதை பிறந்த தருணம் முதல் ஆறு மாத காலம் வரை கண்டிப்பாக தாய்மார்கள் அளிக்க வேண்டியது அவசியம்.
குழந்தைக்கு பசி எடுத்தால், பால் குடிப்பது, பாலை உறிஞ்சுவது போன்ற செய்கைகளை செய்யும், குழந்தை அன்னையின் மார்பகத்தை நோக்கியே முகத்தைக் கொண்டு வரும்; தலையை திருப்பிக் கொண்டே இருக்கும், குழந்தைக்கு அதிகம் பசி எடுத்தால், அழ ஆரம்பித்து விடும் - இது போன்ற அறிகுறிகள் மூலம் குழந்தைக்கு பசி எடுப்பதை அன்னையர்கள் அறியலாம்.
மேலும் குழந்தைக்கு இரவில் அதிகம் பசி எடுக்கும், குழந்தைக்கு பால் குடிக்க வேண்டும் என்ற உணர்வும் இரவில் அதிகம் ஏற்படும். முதல் மாதத்தில் குழந்தைக்கு எடை குறைவு ஏற்பட்டால், பயம் கொள்ள வேண்டாம்; இது இயற்கையே! குழந்தை பிறந்த பின் முன்பு இருந்த எடையில் 10% எடையை இழக்கும்; பின் சிறிது நாட்களிலேயே குழந்தையின் எடை கூடத் தொடங்கி, இழந்த எடையை குழந்தையின் உடல் பெற்று விடும்.
குழந்தைகளுக்கு எப்பொழுது உணவு அளித்தாலும், அவர்கள் வயிறு நிரம்பும் வரை மட்டுமே உணவு அளிக்க வேண்டும்; அளவுக்கு அதிகமாக உணவினை திணிக்க கூடாது. குழந்தைகள் தனக்கு பசி எடுப்பதையும், உணவு வேண்டாம் என்பதையும் தனது அறிகுறிகள் மற்றும் தனது செயல்களின் மூலம் உங்களுக்கு தெரியப்படுத்தும்.
குழந்தைகளுக்கு தாய்ப்பால் என்னும் அமுதை பிறந்த தருணம் முதல் ஆறு மாத காலம் வரை கண்டிப்பாக தாய்மார்கள் அளிக்க வேண்டியது அவசியம்.
குழந்தைக்கு பசி எடுத்தால், பால் குடிப்பது, பாலை உறிஞ்சுவது போன்ற செய்கைகளை செய்யும், குழந்தை அன்னையின் மார்பகத்தை நோக்கியே முகத்தைக் கொண்டு வரும்; தலையை திருப்பிக் கொண்டே இருக்கும், குழந்தைக்கு அதிகம் பசி எடுத்தால், அழ ஆரம்பித்து விடும் - இது போன்ற அறிகுறிகள் மூலம் குழந்தைக்கு பசி எடுப்பதை அன்னையர்கள் அறியலாம்.
மேலும் குழந்தைக்கு இரவில் அதிகம் பசி எடுக்கும், குழந்தைக்கு பால் குடிக்க வேண்டும் என்ற உணர்வும் இரவில் அதிகம் ஏற்படும். முதல் மாதத்தில் குழந்தைக்கு எடை குறைவு ஏற்பட்டால், பயம் கொள்ள வேண்டாம்; இது இயற்கையே! குழந்தை பிறந்த பின் முன்பு இருந்த எடையில் 10% எடையை இழக்கும்; பின் சிறிது நாட்களிலேயே குழந்தையின் எடை கூடத் தொடங்கி, இழந்த எடையை குழந்தையின் உடல் பெற்று விடும்.
குழந்தைகளுக்கு எப்பொழுது உணவு அளித்தாலும், அவர்கள் வயிறு நிரம்பும் வரை மட்டுமே உணவு அளிக்க வேண்டும்; அளவுக்கு அதிகமாக உணவினை திணிக்க கூடாது. குழந்தைகள் தனக்கு பசி எடுப்பதையும், உணவு வேண்டாம் என்பதையும் தனது அறிகுறிகள் மற்றும் தனது செயல்களின் மூலம் உங்களுக்கு தெரியப்படுத்தும்.
மார்பகப் புற்றுநோய்க்கு மேமோகிராம் பரிசோதனை தானே பரவலாக மேற்கொள்ளப்படுகிறது. இதில் அப்படி என்ன சிக்கல் இருக்கிறது? என நீங்கள் கேட்கலாம். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஒவ்வொரு பெண்ணும் பருவ வயதை எட்டியதும தங்கள் மார்பை தாங்களே சுயமாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கட்டிகள் தென்பட்டாலே அது மார்பகப்புற்றுநோயோ என்று அச்சம் கொள்ளத் தேவையில்லை. பலரும் அவசரப்பட்டு மனதையும், உடலையும் வருத்திக்கொள்கிறார்கள்.
மார்பகப் புற்றுநோய்க்கு மேமோகிராம் பரிசோதனை தானே பரவலாக மேற்கொள்ளப்படுகிறது. இதில் அப்படி என்ன சிக்கல் இருக்கிறது? என நீங்கள் கேட்கலாம். பொதுவாக பருவ வயது பெண்களின் மார்பக திசுக்கள் சற்று அடர்த்தியுடன் காணப்படும். எனவே இதில் எக்ஸ்ரே கதிர்கள் சரியாக ஊடுருவ முடியாமல் வெறும் வெள்ளையாக படம் வந்து விடவும் வாய்ப்பு உண்டு.
அப்படி தெளிவான முடிவு கிடைக்காமல் போய் அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த நேரத்தில் தகுந்த சிகிச்சை அளிக்க முடியாமல் போவது தான் சிக்கல். எனவே தான் 40 வயதுக்கு உட்பட்ட பெண்களை மேமோகிராம் பரிசோதனைக்கு உட்படுத்துவது சரியான முடியாக இருக்காது.
அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுப்பதே மார்பக நீர்க்கட்டிகளை கண்டறியவும் மிகச்சிறந்த பரிசோதனை. கைகளுக்கு தட்டுப்படாமல் அவை சென்டிமீட்டருக்கும் குறைவாக உள்ள நுண்ணிய கட்டிகளையும் இது காட்டிச் கொடுத்து விடும். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் மேமோகிராம் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் டெஸ்ட் இணைந்தே மேற்கொள்ளப்படுகிறது.
கட்டிகள் கண்டறியப்பட்டு அதன் தன்மைக்கு ஏற்ப அடுத்தக்கட்ட சிகிச்சைகளை உடனடியாக மேற்கொள்ளவும், நீர்க்கட்டி இருந்தால் பெரும்பாலும் அதாவது 90 சதவிகிதம் பயப்படத் தேவையில்லை. இவ்வகை பாதிப்புகள் மார்பகத்தில் வருவது வெகு இயல்பானது. பெண்களுக்கு ஏற்படும் உடற்கூறு வளர்ச்சி மாற்றத்தால் உண்டாகும் சாதாரண நிகழ்வு. மிக இளம் வயதிலேயே சிலருக்கு நரை முடி வந்து விடுகிறது. தலை வழுக்கை ஆகிவிடுகிறது. இதை எப்படி நார்மல் என்று ஏற்றுகொள்கிறோமோ அதைப் போன்று தான் நீர்க்கட்டியும்.

35 முதல் 55 வயது உள்ள பெரும்பாலான பெண்களுக்கு இவை வரும் சாத்தியக்கூறு அதிகம். ஊசி வாயிலாக அந்த நீரை உறிஞ்சி எடுப்பதே எளிய சிகிச்சை. வெகு எளிதாக விரைவாக அதாவது ஒரிரு நிமிடங்களுக்குள் பாதிப்பில் இருந்து குணப்படுத்திவிடலாம்.
சிலருக்கு மார்பகத்துக்குள் வெவ்வேறு இடங்களில் அடிக்கடி நீர்க்கட்கள் உருவாகும். இதற்கும் பெரிய அளவில் பயப்படத் தேவையில்லை. சரியாக கணிக்கத் தெரிந்த மருத்துவர்கள் ஒவ்வொரு முறையும் ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனை மேற்கொள்ளாமலேயே அவ்வப்போது ஊசி வாயிலாக நீரை அகற்றி விடுவார்கள். எடுத்த நீரை பரிசோதனைக்கு அனுப்பக்கூட அவசியமில்லை.
ஆனால் ஒரே இடத்திலேயே திரும்பத் திரும்ப கட்டி உண்டானால் வேறு ஏதாவது பாதிப்பு இருக்கிறதா என்று பரிசோதிக்க வேண்டும். நீர்க்கட்டியில் இருந்து உறிஞ்சி எடுப்பப்படும் நீர் மஞ்சள், பச்சை என பலவித நிறங்களில் காணப்படலாம். அதனால் எந்தப் பாதிப்பும் கிடையாது. ரத்தமாக வந்தால் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும்.
சில நேரம் நீர்க்கட்டிக்கு உட்புறத்தில் சதைக்கட்டி இருக்க வாய்ப்பு உண்டு. இப்படிப்பட்ட நிலையில் அறுவைச்சிகிச்சை செய்து நீக்க நேரிடும். ஆனால் பாதிப்போடு வரும் பெண்ணில் நூரில் ஒருவருக்கே இத்தகைய நிலை ஏற்படும்.
மார்பகப் புற்றுநோய்க்கு மேமோகிராம் பரிசோதனை தானே பரவலாக மேற்கொள்ளப்படுகிறது. இதில் அப்படி என்ன சிக்கல் இருக்கிறது? என நீங்கள் கேட்கலாம். பொதுவாக பருவ வயது பெண்களின் மார்பக திசுக்கள் சற்று அடர்த்தியுடன் காணப்படும். எனவே இதில் எக்ஸ்ரே கதிர்கள் சரியாக ஊடுருவ முடியாமல் வெறும் வெள்ளையாக படம் வந்து விடவும் வாய்ப்பு உண்டு.
அப்படி தெளிவான முடிவு கிடைக்காமல் போய் அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த நேரத்தில் தகுந்த சிகிச்சை அளிக்க முடியாமல் போவது தான் சிக்கல். எனவே தான் 40 வயதுக்கு உட்பட்ட பெண்களை மேமோகிராம் பரிசோதனைக்கு உட்படுத்துவது சரியான முடியாக இருக்காது.
அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுப்பதே மார்பக நீர்க்கட்டிகளை கண்டறியவும் மிகச்சிறந்த பரிசோதனை. கைகளுக்கு தட்டுப்படாமல் அவை சென்டிமீட்டருக்கும் குறைவாக உள்ள நுண்ணிய கட்டிகளையும் இது காட்டிச் கொடுத்து விடும். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் மேமோகிராம் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் டெஸ்ட் இணைந்தே மேற்கொள்ளப்படுகிறது.
கட்டிகள் கண்டறியப்பட்டு அதன் தன்மைக்கு ஏற்ப அடுத்தக்கட்ட சிகிச்சைகளை உடனடியாக மேற்கொள்ளவும், நீர்க்கட்டி இருந்தால் பெரும்பாலும் அதாவது 90 சதவிகிதம் பயப்படத் தேவையில்லை. இவ்வகை பாதிப்புகள் மார்பகத்தில் வருவது வெகு இயல்பானது. பெண்களுக்கு ஏற்படும் உடற்கூறு வளர்ச்சி மாற்றத்தால் உண்டாகும் சாதாரண நிகழ்வு. மிக இளம் வயதிலேயே சிலருக்கு நரை முடி வந்து விடுகிறது. தலை வழுக்கை ஆகிவிடுகிறது. இதை எப்படி நார்மல் என்று ஏற்றுகொள்கிறோமோ அதைப் போன்று தான் நீர்க்கட்டியும்.

35 முதல் 55 வயது உள்ள பெரும்பாலான பெண்களுக்கு இவை வரும் சாத்தியக்கூறு அதிகம். ஊசி வாயிலாக அந்த நீரை உறிஞ்சி எடுப்பதே எளிய சிகிச்சை. வெகு எளிதாக விரைவாக அதாவது ஒரிரு நிமிடங்களுக்குள் பாதிப்பில் இருந்து குணப்படுத்திவிடலாம்.
சிலருக்கு மார்பகத்துக்குள் வெவ்வேறு இடங்களில் அடிக்கடி நீர்க்கட்கள் உருவாகும். இதற்கும் பெரிய அளவில் பயப்படத் தேவையில்லை. சரியாக கணிக்கத் தெரிந்த மருத்துவர்கள் ஒவ்வொரு முறையும் ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனை மேற்கொள்ளாமலேயே அவ்வப்போது ஊசி வாயிலாக நீரை அகற்றி விடுவார்கள். எடுத்த நீரை பரிசோதனைக்கு அனுப்பக்கூட அவசியமில்லை.
ஆனால் ஒரே இடத்திலேயே திரும்பத் திரும்ப கட்டி உண்டானால் வேறு ஏதாவது பாதிப்பு இருக்கிறதா என்று பரிசோதிக்க வேண்டும். நீர்க்கட்டியில் இருந்து உறிஞ்சி எடுப்பப்படும் நீர் மஞ்சள், பச்சை என பலவித நிறங்களில் காணப்படலாம். அதனால் எந்தப் பாதிப்பும் கிடையாது. ரத்தமாக வந்தால் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும்.
சில நேரம் நீர்க்கட்டிக்கு உட்புறத்தில் சதைக்கட்டி இருக்க வாய்ப்பு உண்டு. இப்படிப்பட்ட நிலையில் அறுவைச்சிகிச்சை செய்து நீக்க நேரிடும். ஆனால் பாதிப்போடு வரும் பெண்ணில் நூரில் ஒருவருக்கே இத்தகைய நிலை ஏற்படும்.
கவர்ச்சிகரமான வருவாயை வழங்கும் பல முதலீட்டு, சேமிப்புத் திட்டங்களை இந்திய அஞ்சலகங்கள் வழங்கிவருகின்றன. அவை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
அஞ்சலகம் மூலமும் முதலீட்டுத் திட்டங்களை மேற்கொள்ளலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?
கவர்ச்சிகரமான வருவாயை வழங்கும் பல முதலீட்டு, சேமிப்புத் திட்டங்களை இந்திய அஞ்சலகங்கள் வழங்கிவருகின்றன. அவை பற்றி...
தொடர் வைப்புச் சேமிப்புத் திட்டம், நிலையான தொடர்வைப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அஞ்சலகத் திட்டங்களில் அடக்கம். இவற்றுக்கு 4 சதவீதத்தில் இருந்து 8.1 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டங்களுக்கு, வருமானவரி சட்டம் 80 சி பிரிவின் கீழ் வரிவிலக்கும் உள்ளது.
அஞ்சலகங்களில் ரொக்கப் பணம் மூலம் அஞ்சலகச் சேமிப்புக் கணக்கைத் தொடங்கலாம். இதற்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 4 சதவீதம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சேமிப்பின் மூலம் வளர்ந்த வட்டி 10 ஆயிரமாகவோ, அதற்கும் அதிகமாகவோ இருந்தால் வரிவிதிக்கப்படும். மின்னணு முறையில் வைப்புத் தொகையைச் செலுத்தவும், திரும்பப் பெறவும் வசதிகள் உள்ளன. இது தவிர வாடிக்கையாளர்களுக்கு ஏ.டி.எம். கார்டு வழங்கப்படுகிறது.
அஞ்சலகத் தொடர்வைப்புத் திட்டத்தில், நிர்ணயிக்கப்பட்ட முதிர்வுக் காலமான 5 ஆண்டுகள் வரை வைப்புத் தொகையைத் தொடர்ந்து செலுத்த வேண்டும். வழக்கமான கால இடைவெளிகளில் இந்தத் தொகையைச் செலுத்திக் கொள்ளலாம். ரொக்கமாகவோ அல்லது காசோலை மூலமாகவோ 10 ரூபாயுடன் கணக்கைத் தொடங்கி அடுத்தடுத்த மாதங்களில் 5 ரூபாய் வீதம் முதலீட்டுத் தொகையை உயர்த்திக் கொள்ளலாம். காலாண்டு கூட்டு வட்டியாக 6.9 சதவீதம் அளிக்கப்படுகிறது. முழு ஆண்டு நிறைவடைந்தவுடன் 50 சதவீத தொகையைத் திரும்பப் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.

அஞ்சலக மாதாந்திர முதலீட்டுத் திட்டத்தில் ஆயிரத்து 500 ரூபாய் அல்லது அதன் இரட்டிப்புத் தொகையுடன் கணக்கைத் தொடங்கலாம். தனிநபர் முதலீட்டில் அதிகபட்ச வரம்பாக ரூ. 4.5 லட்சமும், கூட்டுக் கணக்காக இருந்தால் ரூ. 9 லட்சமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாதாந்திர முதலீட்டுத் திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள். வட்டி விகிதம் 7.3 சதவீதம்.
அஞ்சலக நிலையான வைப்புக் கணக்குத் திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ. 200 உடன் கணக்கைத் தொடங்கலாம். காலாண்டுவாக்கில் வட்டி கணக்கிடப்பட்டு ஆண்டு இறுதியில் வழங்கப்படுகிறது. ஓராண்டு நிலையான வைப்புக் கணக்குக்கு 6.6 சதவீத வட்டியும், 2 மற்றும் 3 ஆண்டுத் திட்டங்களுக்கு 6.7 சதவீதமும் வட்டி வழங்கப்படும். 5 ஆண்டுகள் நிலையான வைப்புத் திட்ட வாடிக்கையாளர்களுக்கு 7.4 சதவீத வட்டியுடன், வருமானவரிச் சட்டம் 80 சி யின்படி சலுகை வழங்கப்படும்.
பெண் குழந்தைகளுக்காக அஞ்சலகத்தில் மத்திய அரசு செயல்படுத்தும் திட்டம், சுகன்யா சம்ரிதி. இதில் ஆண்டுக்குக் குறைந்தபட்சம் ரூ. 250 ரூபாய் செலுத்தலாம் என அரசு சமீபத்தில் அறிவித்தது. முன்பு இது ஆண்டுக்கு குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாயாக இருந்தது. அதிகபட்சமாக ஒரு நிதியாண்டுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பிறந்த தேதியிலிருந்து 10 ஆண்டு நிறைவடைந்தால் கணக்கைத் தொடங்கலாம். பெண்குழந்தையின் பெற்றோரோ, சட்டப் படியாக அங்கீகரிக்கப்பட்ட பாதுகாவலரோ அந்தப் பெண்குழந்தையின் பெயரில் இந்தக் கணக்கை தொடங்க வேண்டும். ஒரு குழந்தைக்கு ஒரு கணக்கு மட்டுமே தொடங்க அனுமதி. இரண்டு குழந்தை களாக இருந்தால் இரு வேறு கணக்கு களைத் தொடங்கலாம்.
கவர்ச்சிகரமான வருவாயை வழங்கும் பல முதலீட்டு, சேமிப்புத் திட்டங்களை இந்திய அஞ்சலகங்கள் வழங்கிவருகின்றன. அவை பற்றி...
தொடர் வைப்புச் சேமிப்புத் திட்டம், நிலையான தொடர்வைப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அஞ்சலகத் திட்டங்களில் அடக்கம். இவற்றுக்கு 4 சதவீதத்தில் இருந்து 8.1 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டங்களுக்கு, வருமானவரி சட்டம் 80 சி பிரிவின் கீழ் வரிவிலக்கும் உள்ளது.
அஞ்சலகங்களில் ரொக்கப் பணம் மூலம் அஞ்சலகச் சேமிப்புக் கணக்கைத் தொடங்கலாம். இதற்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 4 சதவீதம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சேமிப்பின் மூலம் வளர்ந்த வட்டி 10 ஆயிரமாகவோ, அதற்கும் அதிகமாகவோ இருந்தால் வரிவிதிக்கப்படும். மின்னணு முறையில் வைப்புத் தொகையைச் செலுத்தவும், திரும்பப் பெறவும் வசதிகள் உள்ளன. இது தவிர வாடிக்கையாளர்களுக்கு ஏ.டி.எம். கார்டு வழங்கப்படுகிறது.
அஞ்சலகத் தொடர்வைப்புத் திட்டத்தில், நிர்ணயிக்கப்பட்ட முதிர்வுக் காலமான 5 ஆண்டுகள் வரை வைப்புத் தொகையைத் தொடர்ந்து செலுத்த வேண்டும். வழக்கமான கால இடைவெளிகளில் இந்தத் தொகையைச் செலுத்திக் கொள்ளலாம். ரொக்கமாகவோ அல்லது காசோலை மூலமாகவோ 10 ரூபாயுடன் கணக்கைத் தொடங்கி அடுத்தடுத்த மாதங்களில் 5 ரூபாய் வீதம் முதலீட்டுத் தொகையை உயர்த்திக் கொள்ளலாம். காலாண்டு கூட்டு வட்டியாக 6.9 சதவீதம் அளிக்கப்படுகிறது. முழு ஆண்டு நிறைவடைந்தவுடன் 50 சதவீத தொகையைத் திரும்பப் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.

அஞ்சலக மாதாந்திர முதலீட்டுத் திட்டத்தில் ஆயிரத்து 500 ரூபாய் அல்லது அதன் இரட்டிப்புத் தொகையுடன் கணக்கைத் தொடங்கலாம். தனிநபர் முதலீட்டில் அதிகபட்ச வரம்பாக ரூ. 4.5 லட்சமும், கூட்டுக் கணக்காக இருந்தால் ரூ. 9 லட்சமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாதாந்திர முதலீட்டுத் திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள். வட்டி விகிதம் 7.3 சதவீதம்.
அஞ்சலக நிலையான வைப்புக் கணக்குத் திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ. 200 உடன் கணக்கைத் தொடங்கலாம். காலாண்டுவாக்கில் வட்டி கணக்கிடப்பட்டு ஆண்டு இறுதியில் வழங்கப்படுகிறது. ஓராண்டு நிலையான வைப்புக் கணக்குக்கு 6.6 சதவீத வட்டியும், 2 மற்றும் 3 ஆண்டுத் திட்டங்களுக்கு 6.7 சதவீதமும் வட்டி வழங்கப்படும். 5 ஆண்டுகள் நிலையான வைப்புத் திட்ட வாடிக்கையாளர்களுக்கு 7.4 சதவீத வட்டியுடன், வருமானவரிச் சட்டம் 80 சி யின்படி சலுகை வழங்கப்படும்.
பெண் குழந்தைகளுக்காக அஞ்சலகத்தில் மத்திய அரசு செயல்படுத்தும் திட்டம், சுகன்யா சம்ரிதி. இதில் ஆண்டுக்குக் குறைந்தபட்சம் ரூ. 250 ரூபாய் செலுத்தலாம் என அரசு சமீபத்தில் அறிவித்தது. முன்பு இது ஆண்டுக்கு குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாயாக இருந்தது. அதிகபட்சமாக ஒரு நிதியாண்டுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பிறந்த தேதியிலிருந்து 10 ஆண்டு நிறைவடைந்தால் கணக்கைத் தொடங்கலாம். பெண்குழந்தையின் பெற்றோரோ, சட்டப் படியாக அங்கீகரிக்கப்பட்ட பாதுகாவலரோ அந்தப் பெண்குழந்தையின் பெயரில் இந்தக் கணக்கை தொடங்க வேண்டும். ஒரு குழந்தைக்கு ஒரு கணக்கு மட்டுமே தொடங்க அனுமதி. இரண்டு குழந்தை களாக இருந்தால் இரு வேறு கணக்கு களைத் தொடங்கலாம்.






