search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Healthy Problem"

    நீங்கள் எப்பவும் ‘சில்’லென்று இருப்பது போல் உணருகின்றீர்களா? அதற்கான மருத்துவ காரணங்களும் இருக்கின்றன. மேலும் இது குறித்து விரிவாக அறிந்து கெள்ளலாம்.
    நீங்கள் எப்பவும் ‘சில்’லென்று இருப்பது போல் உணருகின்றீர்களா? இந்தக் கேள்வியை யாராவது கேட்டாலோ (அ) ஆம், நாம் அவ்வாறுதான் உணருகின்றேன் என்று யாராவது பதில் சொன்னாலோ அக்னி நட்சத்திரம் நெருப்பாய் கொட்டும் இந்நேரத்தில் அவர்களைப் பார்த்தால் அடித்து விடலாம் என்பது போல் கோபம் வரும்தான்.

    ஆனால் அவர்கள் அவ்வாறு கூறுவதிலும் உண்மை இருக்கின்றது. அதற்கான மருத்துவ காரணங்களும் இருக்கின்றன. பொதுவில் ஆண்களை விட பெண்கள் சற்று கூடுதலாக இவ்வாறு கூறுவார்கள்.

    * தைராய்டு சுரப்பி குறைவாக வேலை செய்தல், இதனை ஹைப்போ தைராய்டிஸம் என்று கூறுவார்கள். இந்த பாதிப்பு இருப்பவர்கள் சற்று ‘சில்’லென்றே எப்போதும் உணர்வார்கள். மேலும் வறண்ட சருமம், சோர்வு, மலச்சிக்கல், எடை கூடுதல் போன்ற அறிகுறிகளையும் உடையவர்களாக இருப்பார்கள்.

    ரத்த சோகை: தேவையான அளவு சிகப்பணுக்கள் இல்லை என்றால் ஆக்ஸிசனை உடல் முழுவதும் எடுத்துச் செல்வதில் பாதிப்பு ஏற்படும். குறிப்பாக கை, கால்களில் ரத்த ஓட்ட குறைபாடு ஏற்படும். சிலர் எப்பொழுதும் கை, கால்கள் சில்லென்று இருக்கின்றது எனக் கூறுவர்.

    ரேருல்ட் பாதிப்பு: இதுவும் கை, கால் விரல்களில் ரத்த ஓட்ட குறைபாடால் ஏற்படும் பாதிப்பு. விரல்களில் வீக்கமும், சில்லென்ற உணர்வும் இருக்கும். சில நேரங்களில் கை, கால் வெளிர்ந்தும், லேசான நீல நிறம் கொண்டும், மரத்தும் இருக்கும்.

    போதுமான தூக்கமின்மை: போதுமான தூக்கமின்மை உடலில் சூட்டினை இழக்கச் செய்யும். 7-8 மணி நேர தூக்கம் மிக அவசியம்.

    ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு: இதன் காரண மாக ரத்த ஓட்டத்தில் குறைபாடுகள் ஏற்பட்டு கை, கால்கள், தலை போன்ற உறுப்புகளில் சில்லென்று உணர்வு ஏற்படலாம். மேலும் இத்தகைய அடைப்புகள் ஏற்படும் பொழுது புண், அடிபட்ட காயம் இவை மெதுவாய் ஆறுதல், கால், பின்புறம் ரத்து போகுதல், கால் நகங்களின் வளர்ச்சி குறைவாய் இருத்தல் போன்ற குறைபாடுகளும் இருக்கும்.

    * சர்க்கரை நோயும் சீரான ரத்த ஓட்டமில்லாத குறைபாடுகளை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. இது நரம்புகளையும் பாதிக்கும் தன்மை கொண்டது. அதிக சோர்வு, அதிகம் சிறுநீர் செல்லுதல், கலங்கிய பார்வை, அதிக தாகம் இவையும் சர்க்கரை நோயின் குறைபாடுகள் ஆகும்.

    * வைட்டமின் பி குறைபாடு ரத்த சோகையினை ஏற்படுத்தும். இதன் காரணமாக கை, கால்களில் ‘சில்’லென்ற உணர்வு ஏற்படலாம்.

    ஆக மேற்கூறிய அறிகுறிகள் இருந்தால் உடனடி மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என்பதனை நன்கு அறிய வேண்டும்.
    நான் நல்ல தான் இருந்தேன், ஆனால் திடீரென்று மயக்கம் ஏற்பட்டு என் நினைவுகள் இழக்கிறேன் என புலம்புவர்களா? இதற்கான காரணங்களை என்ன என்று பார்க்கலாம்.
    சில பேருக்கு திடீரென மயக்கம் வரும். அப்படி மயக்கம் வரக்காரணம் என்னவாக இருக்கும் என யோசனை செய்துள்ளீர்களா? நான் நல்ல தான் இருந்தேன், ஆனால் திடீரென்று மயக்கம் ஏற்பட்டு என் நினைவுகள் இழக்கிறேன் என புலம்புவர்களா? இதற்கான காரணங்களை என்ன என்று தெரியுமா?

    மருத்துவ ஆராய்ச்சியின் படி மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்படும் உணர்வுதான் இந்த மயக்கம் வர காரணம் என தெரியவந்துள்ளது.

    மயக்கம் வர முக்கிய காரணங்களை பார்ப்போம் என்னவென்று பார்ப்போம்.

    * நமது உடம்பில் குறைந்த இரத்த அழுத்தம் காரணமாக கூட மயக்கம் வரலாம். இது அனேகமாக வயதானவர்களுக்கு தான் அதிகமாக இருக்கும். அதாவது 65 வயது கடந்தவருக்கு தான் குறைந்த இரத்த அழுத்தத்தால் மயக்கம் ஏற்படும்.

    * உடலில் உள்ள நீரின் சமநிலை சேதப்படும் போது ரத்தின் வேகம் குறைந்து இரத்த அழுத்தம் வேகமாகும். அப்பொழுது உடம்பில் நடுக்கம் ஏற்பட்டு நரம்புமண்டலம் பாதிக்கப்படும். இந்த சமயத்தில் மயக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.

    * இன்சுலின் சமசீர் நிலையை இழப்பதால் ஏற்படும். மனித உடம்பில் சர்க்கரையை உடலுக்குத் தேவையான சக்தியாக மாற்ற இன்சுலின் அத்தியாவசியமாக உள்ளது. இரத்ததில் சர்க்கரை அளவு சரியாகக் கட்டுப்படுத்தப்படவில்லை எனில் உயர் இரத்த அழுத்தம், நாடிகளில் இரத்தம் சரியாக செல்லாது, அடிக்கடி சிறுநீர் கழித்தல் ஏற்படும், அதிகமாக தாகமெடுக்கும் போன்ற அறிகுறிகள் உடம்பில் ஏற்படும். அச்சமயங்களில் உடல் சோர்வடைந்து மயக்கம் ஏற்படலாம்.

    * இருதயத் தசைகளும், இரத்தக் குழாய்களும் வலுவிழந்து விடுவதாலேயே இந்த நோய் ஏற்படுகிறது. இதனால் மூளைக்கு செல்லும் இரத்தத்தில் தடங்கள் ஏற்பட்டு மயக்கம் வரும். இதை மருத்துவரீதியில் இதய மயக்கநிலை என்பார்கள்.
    ×