search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அவல் சமையல்"

    • சேலம் மாவட்ட மக்களின் கால நேர சிற்றுண்டி இது.
    • டயட்டில் இருப்பவர்களுக்கு இந்த ரெசிபி மிகவும் நல்லது.

    தேவையான பொருட்கள்

    பச்சை வேர்க்கடலை - 50 கிராம்

    வெள்ளை அவல் - 100 கிராம்

    வெங்காயம் - 1

    ப.மிளகாய் - 3

    பூண்டு - 3 பல்

    இஞ்சி - சிறிய துண்டு

    சிவப்பு மிளகாய் - 4

    கறிவேப்பிலை - சிறிதளவு

    கொத்தமல்லி இலை - தேவையான அளவு

    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

    கடுகு - 1/4 டீஸ்பூன்

    எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்

    உப்பு - சுவைக்க

    எண்ணெய் - சமையலுக்கு

    செய்முறை

    பூண்டு, இஞ்சி, வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அவலை நன்றாக கழுவி சிறிது தண்ணீர் தெளித்து ஊற வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெண் ஊற்றி சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்த பச்சை வேர்க்கடலையை போட்டு வதக்கவும்.

    அடுத்து அதில் வெங்காயம், பூண்டு, இஞ்சி, ப.மிளகாய் போட்டு வதக்கவும்.

    அடுத்து மஞ்சள் தூள் சேர்க்கவும்.

    வேர்க்கடலை நன்றாக வெந்த பின்னர் ஊறவைத்த அவல், உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.

    அவல் வெந்து உதிரி உதிரியாக வந்தவுடன்கொத்தமல்லி தழை, எலுமிச்சை சாறு பிழிந்து இறக்கி பரிமாறவும்.

    இப்போது சூப்பரான சேலம் ஸ்பெஷல் அவல் சுண்டல் ரெடி.

    வேர்க்கடலைக்கு பதில், ராஜ்மா, கொண்டைக்கடலை, பச்சை பட்டாணி சேர்த்தும் செய்யலாம். சிவப்பு அவல் வைத்தும் இந்த ரெசிபியை செய்யலாம்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • சிவப்பு அவலில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
    • அதிக சத்துக்கள் நிறைந்த இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுபலம்.

    தேவையான பொருட்கள்

    சிவப்பு அவல் - 1 கப்

    உப்பு - 1 சிட்டிகை

    தண்ணீர் - 2 கப்

    கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை - முக்கால் கப்

    தேங்காய் துருவல் - முக்கால் கப்

    ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை

    செய்முறை

    சிவப்பு அவலை மிக்சியில் போட்டு கொரகொரப்பாக பொடித்துகொள்ளவும்.

    2 கப் தண்ணீரை நன்றாக கொதிக்கவிடவும்.

    பொடித்த அவலை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் கொதிக்க வைத்த நீரை சிறிது சிறிதாக ஊற்றி நன்றாக கலந்து 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். இப்போது அவல் நன்றாக ஊறி இருக்கும்.

    அடுப்பில் இட்லி பாத்திரத்தை வைத்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

    அடுத்து இட்லி தட்டில் ஊறவைத்த சிவப்பு அவலை பரப்பி விட்டு 7 முதல் 10 நிமிடங்கள் வேக விடவும்.

    வேக வைத்த அவலை ஒரு பாத்திரத்தில் போட்டு (அவல் சூடாக இருக்கும் போதே) அதனுடன் தேங்காய் துருவல், ஏலக்காய் தூள், கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

    இப்போது சத்தான சுவையான சிவப்பு அவல் புட்டு ரெடி.

    • இந்த புட்டிங் செய்ய 10 நிமிடங்களே போதுமானது.
    • பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு உடனே செய்து கொடுக்கலாம்.

    தேவையான பொருட்கள்

    சிவப்பு அவல் - 1 கப்

    நாட்டுச்சர்க்கரை - தேவைக்கேற்ப

    தேங்காய் துருவல் - கால் கப்

    செவ்வாழைப்பழம் - 2

    செய்முறை

    சிவப்பு அவலை நன்றாக கழுவி 10 நிமிடம் ஊற வைக்கவும். அவல் நன்றாக குழைய ஊறக்கூடாது.

    ஊறிய அவலை நன்றாக தண்ணீரை பிழிந்து எடுத்து விட்டு ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் நாட்டுச்சர்க்கரை, தேங்காய் துருவல், செவ்வாழைப்பழத்தை போட்டு நன்றாக பிசைத்து உருண்டைகளாக பிடித்து குழந்தைகளுக்கு கொடுக்கவும்.

    இப்போது சத்தான சுவையான சிவப்பு அவல் வாழைப்பழ புட்டிங் ரெடி.

    • அவலில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
    • காலையில் அவசரமாக வேலைக்கு செல்வர்கள் இந்த ரெசிபி செய்யலாம்.

    தேவையான பொருட்கள் :

    அவல் - 1 கப்

    பாசிப்பருப்பு - கால் கப்

    பெருங்காயத்தூள் - சிறிதளவு

    எண்ணெய், நெய் - தேவைக்கு

    மிளகு, சீரகம் - சிறிதளவு

    பச்சை மிளகாய் - 2

    இஞ்சி - 1 துண்டு

    கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - சிறிதளவு

    உப்பு- தேவைக்கு

    செய்முறை :

    ப.மிளகாய், இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் பாசிப்பருப்பை போட்டு உதிரியாக வேக வைத்துக்கொள்ளுங்கள்.

    வாணலியில் நெய் ஊற்றி அது உருகியதும் மிளகு, சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு வதக்கி பின்னர் அதனுடன் அவலை கொட்டி கிளறுங்கள்.

    மேலும் பாசிப்பருப்பு, பெருங்காயத்தூள், உப்பு ஆகியவற்றுடன் போதுமான தண்ணீர் சேர்த்து வேக வையுங்கள்.

    பொங்கல் பதத்துக்கு வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.

    அவல் கார பொங்கல் ரெடி.

    • நாடு முழுவதும் இன்று மகா சிவராத்திரி அனுஷ்டிக்கப்படுகிறது.
    • இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    மெல்லிய அவல் - 2 கப்,

    அரிசி மாவு - 1/4 கப்,

    ரவை (வெள்ளை) - 3 டேபிள் ஸ்பூன்,

    பெரிய வெங்காயம் - 1.

    கேரட் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்,

    பச்சை மிளகாய் - 2,

    கொரகொரப்பாகப் பொடித்த மிளகு, சீரகம் - 1 டீஸ்பூன்,

    கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு

    தேங்காய்த்துருவல் - 2 டேபிள் ஸ்பூன்,

    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,

    பெருங்காயம் - 1/2 டீஸ்பூன்,

    உப்பு - தேவைக்கு,

    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு,

    செய்முறை

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மெல்லிய அவலை நன்றாகக் கழுவி (ஊற விட வேண்டாம்), நீரினை வடிகட்டி கொள்ளவும்.

    வடிகட்டிய அவலை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, அரிசி மாவு, உப்பு, மஞ்சள் தூள், கொரகொரப்பாகப் பொடித்த மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கேரட் துருவல், தேங்காய்த்துருவல், பெருங்காயம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    கடைசியாக ரவை சேர்த்து கலந்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை வடைகளாக தட்டி போட்டு பொரித்து எடுக்கவும்.

    சிவபெருமானுக்கு நைவேத்தியமாக படைக்க அவல் வடை ரெடி.

    • தேங்காய்ப்பால் போஹா கோவாவின் ஸ்பெஷல் ஐட்டம்.
    • பத்தே நிமிடங்களில் இந்த போஹாவை செய்து விடலாம்.

    தேவையான பொருட்கள்

    அவல் - 200 கிராம்

    தேங்காய்ப்பால் - 1 கப்

    சர்க்கரை - தேவையான அளவு

    ஏலக்காய் - 3

    செய்முறை

    ஏலக்காயை பொடித்து கொள்ளவும்.

    அவலை தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.

    மிருதுவாக வந்தவுடன் அரை கப் சூடு தண்ணீர் சேர்க்க வேண்டும்.

    அத்துடன் அவல் சேர்த்து கொதிக்க விடவும்.

    பின்னர் தேங்காய்ப்பால் சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

    அத்துடன் சர்க்கரை சேர்த்து கலக்கவும்.

    பொடித்த ஏலக்காய்த்தூளை சேர்த்து கிளறிவிடவும்.

    சுவையான தேங்காய்ப்பால் போஹா ரெடி. சுடச்சுட பரிமாறவும்.

    • கிருஷ்ணருக்கு இந்த லட்டை நைவேத்தியம் செய்யலாம்.
    • இதை குழந்தைகள் விரும்பி உண்பர்; சுவையும், சத்தும் நிறைந்தது.

    தேவையான பொருட்கள்:

    அவல் - 1 கப்,

    பால் - 100 மில்லி லிட்டர்,

    வெல்லம் - 1 கப்,

    நெய் - சிறிதளவு,

    ஏலக்காய் - சிறிதளவு,

    முந்திரி - சிறிதளவு,

    பாதாம் - சிறிதளவு.

    செய்முறை:

    வாணலியில், சிறிது நெய் ஊற்றி, ஏலக்காய், முந்திரி, பாதாம் போன்றவற்றை வறுத்து, அரைக்கவும்.

    அவலில் சூடான பால், வெல்லம், நெய் மற்றும் அரைத்து வைத்திருக்கும் பொடி சேர்த்து, உருண்டை பிடித்தால், அவல் லட்டு தயார்!

    • வெள்ளை அவலைவிட சிவப்பு அவல் நல்லது.
    • ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கைக்கு உதவும். ரத்தச்சோகை வராமல் காக்கும்.

    தேவையான பொருட்கள் :

    கெட்டி அவல் - ஒரு கப்,

    கேரட், பட்டாணி, உருளைக்கிழங்கு, பீன்ஸ் கலவை - அரை கப்,

    கடுகு, சீரகம் - தலா கால் டீஸ்பூன்,

    சர்க்கரை - சிட்டிகை,

    வறுத்த வேர்க்கடலை, முந்திரி - சிறிதளவு,

    எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்,

    கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு,

    எண்ணெய், உப்பு - தேவைக்கு.

    செய்முறை:

    கொத்தமல்லி, காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அவலுடன் தண்ணீர் சேர்த்து கழுவி ஐந்து நிமிடம் அப்படியே வைக்கவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி, கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

    அதனுடன் காய்கறிகள் சேர்த்து வதக்கி சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடி வேக விடவும்.

    பிறகு அவல், உப்பு, சர்க்கரை சேர்த்து கிளறி மூடி சிறிது நேரம் வேக விடவும்.

    நன்கு வெந்த பிறகு எலுமிச்சைச் சாறு பிழிந்து, கொத்தமல்லித்தழை தூவி கிளறி இறக்கவும்.

    மேலே வேர்க்கடலை, முந்திரி சேர்த்து சூடாக பரிமாறவும்.

    • இந்த ரெசிபி குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
    • இந்த ரெசிபியை 30 நிமிடங்களில் செய்து விடலாம்.

    தேவையான பொருட்கள்:

    அவல் மாவு - 1 கப்

    பால் - 500 மி.லி

    பாதாம் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்

    வெல்லம் - தேவைக்கு ஏற்ப

    ஏலக்காய்த்தூள் - சிறிது

    நெய் - 1 டீஸ்பூன்

    செய்முறை:

    அகலமான பாத்திரத்தில் அவல் மாவுடன் ஒரு சிட்டிகை உப்பு, நெய் மற்றும் கொதிக்கும் தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.

    பாலுடன், பாதாம் பவுடர் கலந்து மிதமான தீயில் கொதிக்க வைக்கவும்.

    அதில் பொடித்த வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும்.

    உருட்டி வைத்துள்ள உருண்டைகளை அதில் போட்டு கொதிக்க வைக்கவும்.

    5 நிமிடம் கழித்து அடுப்பில் இருந்து இறக்கினால் 'அவல் பால் கொழுக்கட்டை' தயார்.

    • காலையில் சத்தான உணவை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
    • இன்று அவல் வைத்து சத்தான கிச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    கெட்டி சிவப்பு அவல் - அரை கப்,

    தேங்காய்ப்பால் - ஒரு கப்,

    பெரிய வெங்காயம் - 1,

    தக்காளி - 1,

    நிலக்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன்,

    எண்ணெய் - 2 டீஸ்பூன்,

    சீரகம் - அரை டீஸ்பூன்,

    உப்பு - சுவைக்கேற்ப,

    கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு.

    வறுத்து பொடிக்க

    காய்ந்த மிளகாய் - 4.

    செய்முறை

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அவலை நன்றாக கழுவி தேங்காய்ப் பாலில் ஊறவிடவும்.

    நிலக்கடலையை வறுத்துப் கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.

    ஒரு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம், தக்காளி நன்றாக வதங்கியதும் அவலையும் (தேங்காய்ப் பால் முழுவதையும் அவல் இழுத்திருக்கும்) போட்டு தேவையான உப்பு சேர்த்து நன்றாக கிளறி, இறக்கும்போது வறுத்து பொடித்த நிலக்கடலை தூள், மிளகாய்தூள் தூவிக் கிளறவும்.

    கடைசியாக கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை தூவிப் பரிமாறவும்.

    தேங்காய்ப்பால் சேர்ந்திருப்பதால் சாப்பிட ருசியாக இருக்கும்.

    • அவல் உடல் சூட்டை தணித்து நல்ல புத்துணர்ச்சியை தருகிறது.
    • நீரிழிவு நோயாளிகள் பசிக்கும்போது கொஞ்சம் அவலை வாயில் போட்டு மென்று சாப்பிடலாம்.

    தேவையான பொருட்கள்:

    அவல் - முக்கால் ஆழாக்கு

    காய்ந்த மிளகாய் - 2

    தேங்காய்த் துருவல் - 3 ஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    உளுத்தம் பருப்பு - அரை ஸ்பூன்

    கடுகு - கால் ஸ்பூன்

    பெரிய வெங்காயம் - 1

    முந்திரிப் பருப்பு - 4 உடைத்தது

    செய்முறை

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அவலை நன்றாகத் தண்ணீரில் களைந்து, ஒரு பாத்திரத்தில் நீர் விட்டு சில மணி நேரம் ஊறவைக்கவும். பின் நீரை ஒட்ட வடித்து விட வேண்டும்.

    வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு, கடுகு, மிளகாய் உடைத்த முந்திரி இவற்றைப் போட்டு வறுத்து பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    அடுத்து ஊற வைத்த அவலையும் போட்டு உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும்.

    பின்னர் துருவிய தேங்காயையும் சேர்க்கவும்.

    இப்போது சுவையான அவல் உப்புமா ரெடி.

    இந்த உப்புமாவை சர்க்கரையுடனோ அல்லது சட்னியுடனோ உண்டால் சுவை மிகுதியாக இருக்கும்.

    ×