என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    குடைமிளகாய் வாதம் தொடர்புடைய நோய்கள், வயிற்றுப்புண், மலச்சிக்கல் போன்றவைகளுக்கு எதிராக செயல்படுகிறது. இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தி, நீரிழிவையும் கட்டுப்படுத்துகிறது.
    தேவையான பொருட்கள்:

    கோதுமை மாவு - 1 கப்
    தக்காளி - 2
    குடைமிளகாய் - 1
    பெ.வெங்காயம் - 3
    மிளகாய்த்தூள் - சிறிதளவு
    இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு
    கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
    சோயா சாஸ், தக்காளி சாஸ் - சிறிதளவு
    கொத்தமல்லித்தழை, எண்ணெய் - சிறிதளவு
    தண்ணீர், உப்பு - தேவைக்கு

    செய்முறை :

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கோதுமை மாவுடன் உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் குடைமிளகாய், வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது, உப்பு ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும். பின்னர் சோயா சாஸ், தக்காளி சாஸ், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் ஆகியவற்றை கொட்டி வதக்கி வைக்கவும்.

    பிறகு சப்பாத்திகளாக தேய்த்து நடுவில் குடைமிளகாய் மசாலாவை வைத்து மூடி மீண்டும் சப்பாத்திகளாக தேய்த்து வைத்து கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் இந்த சப்பாத்தியை போட்டு சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    சத்தான குடைமிளகாய் ஸ்டப்ஃடு சப்பாத்தி ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பெண்கள் ஓடியாடி விளையாடும் எல்லா விளையாட்டுகளுமே அவர்கள் உடலையும், மனதையும் மகிழ்ச்சிப்படுத்தும். ஆனால் ஓடிவிளையாட முடியாத பெண்கள்கூட ஊஞ்சலில் ஆடி மகிழ்ந்தால் அவர்கள் உடலுக்கும், மனதுக்கும் அது இதம் தரும்.
    பெண்கள் ஓடியாடி விளையாடும் எல்லா விளையாட்டுகளுமே அவர்கள் உடலையும், மனதையும் மகிழ்ச்சிப்படுத்தும். ஆனால் ஓடிவிளையாட முடியாத பெண்கள்கூட ஊஞ்சலில் ஆடி மகிழ்ந்தால் அவர்கள் உடலுக்கும், மனதுக்கும் அது இதம் தரும். அதனால்தான் பலரும் வீடுகளில் ஊஞ்சலை அமைத்திருக்கிறார்கள். ஆனாலும் பல வீடுகளில் அது காட்சிப் பொருளாகத்தான் இருந்துகொண்டிருக்கிறது. அதில் இருந்து பெண்கள் ஆடி மகிழ்வதில்லை.

    ஊஞ்சலில் ஆடும்போது உள்ளம் எப்படி எல்லாம் மகிழும் தெரியுமா?

    * ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் தோன்றுகிறது. மகிழ்ச்சிப் பெருகி எதிர்காலத்தைப் பற்றிய வளமான சிந்தனைகள் தோன்றுகின்றன. திருமணங்களில் ‘ஊஞ்சல் சடங்கு’ இதன் அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது. ஊஞ்சலில் ஜோடியாக ஆடினால் உள்ளங்கள் இணையும்.

    * ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் பெறுகிறது. நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு பக்க சங்கிலிகளையும் பிடித்துக்கொண்டு வேகமாக ஆடும் போது முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் படர்ந்து மூளை சுறுசுறுப்பாகிறது. இது ஒரு நல்ல பயிற்சி. தினமும் தூங்குவதற்கு முன்பு சில நிமிடங்கள் ஆடினால் மனது லேசாகிவிடும்.

    * கம்ப்யூட்டரில் மணிக்கணக்கில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைந்துப் போன இன்றைய பெண்கள் இந்த ஊஞ்சல் பயிற்சியை தினமும் செய்தால் முதுகுத்தண்டு வடம் பலம் பெற்று கழுத்துவலி குணமடைய வழி செய்கிறது. குடும்பத்தினரோடு சேர்ந்து ஆடினால் உறவுகள் பலப்படும்.

    * தோட்டத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஊஞ்சலில் ஆடுவது அதிக பலனை தரக் கூடியது. மரம் செடிகளிலிருந்து வரும் பிராணவாயு வேகமாக உடல் முழுவதும் பரவி ரத்தத்தை சுத்திகரிக்கும். இதயத்திற்கு சுத்தமான பிராண வாயுவை கொடுத்து இதயத்தை சீராக இயங்கச் செய்யும். தினமும் தோட்டத்தில் ஊஞ்சல் ஆடுவர்களுக்கு இதயநோய் கட்டுப்படும்.

    * ஊஞ்சல் ஆடுவதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்திற்கு ரத்தம் சீராக செல்லும். அதனால் இதயம் பலப்படும். இப்போது இளைஞர்கள்கூட இதய நோயால் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு ஊஞ்சல் ஆட்டம் நல்லது.

    * சாப்பிட்டவுடன் அரைமணிநேரம் மிதமான வேகத்தில் ஊஞ்சல் ஆடுவது நல்லது. சாப்பிட்ட உணவு நன்கு செரிக்க இந்த ஆட்டம் உதவும். கோபமாக இருக்கும் போது ஊஞ்சல் ஆடினால் கோபம் தணியும். வெளியில் சுற்றியலைந்துவிட்டு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து கண்களை மூடி தலையை சற்றே மேலே உயர்த்தி, இரு கைகளையும் ஊஞ்சல் பலகையில் பதியவைத்து ரிலாக்ஸாக ஆடினால் களைப்பெல்லாம் பறந்து, உடலின் ஒவ்வொரு பகுதியும் ஓய்வு பெற்று நிம்மதி ஏற்படும்.

    * இல்லத்திற்கு அழகு சேர்க்கும் கலைப்பொருட்களில் ஊஞ்சலும் ஒன்று. இதை ஒரு தெய்வீக ஆசனம் என்று கருதி மதிப்பு கொடுப்பதைவிட, ஆடி மகிழ்வதே ஊஞ்சலுக்கு செய்யும் சிறப்பாகும்.
    ஒரு முறை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால் மீண்டும் கொரோனா தாக்கும் அபாயம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
    புதுடெல்லி :

    கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு பொருள் (ஆன்டிபாடிஸ்) உருவாகும். இந்த நோய் எதிர்ப்பு பொருள், நாளாவட்டத்தில் குறைகிறபோது, மீண்டும் கொரோனா வைரஸ் தொற்றும் ஆபத்து உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

    இதுபற்றிய தகவல்கள் ‘பி.எம்.ஜே. கேஸ் ரிப்போர்ட்ஸ்’ பத்திரிகையில் வெளியாகி உள்ளன.

    இந்த ஆராய்ச்சி கட்டுரையை எழுதிய ஆராய்ச்சியாளர்கள், அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி டாக்டர்கள் ஆவார்கள்.

    ஆராய்ச்சி பற்றி அவர்கள் கூறுகையில், “40 வயதில் ஒரு நபர் கடந்த ஏப்ரல் மாதம் கடுமையான கொரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டார். ஆனால் அதே நபர் 4 மாதங்களுக்கு பிறகு லேசான கொரோனா தொற்றுடன் மீண்டும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு டைப்-2 நீரிழிவு இருக்கிறது. உடல் பருமன் ஆனவர். தைராய்டு சுரப்பி சரியாக இயங்கவில்லை. இதெல்லாம் கொரோனாவின் தீவிர தாக்குதலுக்கு காரணிகள் ஆகும்” என்று சொல்கிறார்கள். முதலில் அவர் சுவாச கோளாறுகளுடன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, கடுமையான மூச்சிரைப்புக்கு ஆளாகி உள்ளார். அவரை வென்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளித்துள்ளனர்.

    ஆனால் அதே நபர், ஆகஸ்டு மாதம் மறுபடியும் கொரோனா தொற்று தாக்கி, அது உறுதி செய்யப்பட்டுள்ளது. இடைப்பட்ட காலத்தில் 3 முறை சோதித்ததில் கொரோனா தொற்று இல்லை. இரண்டாவது முறை அவர் தொற்றால் பாதிக்கப்பட்டபோது ஒரு நாள் ஆஸ்பத்திரியில் தங்க வேண்டியது ஏற்பட்டதாம். ஆனால் 2 வாரங்களுக்கு பின்னர் அவர் இடைவிடாத மூச்சு திணறலால் ஆஸ்பத்திரியில் சேர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இது பற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், “கொரோனா முதல் முறை தாக்கி தப்பி பிழைத்தவர்களுக்கு, ஆரம்ப நோய் தொற்றுக்கு பிறகு நோய் எதிர்ப்பு பொருள் குறைவது அல்லது இல்லாமல்போவது, மறுபடியும் தொற்று ஏற்பட வழி வகுக்க வாய்ப்பு உள்ளது. இது குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டால் இது தொடர்பான கூடுதல் உண்மைகள் வெளிவரும்” என்கிறார்கள்.
    உலகில் பல்வேறு நாடுகளில் ஒப்பந்த மனைவிகள், விருப்பப்பட்ட ஆண்களோடு ‘வாழ்ந்து’ கொண்டிருக்கிறார்கள். ஒதுங்கியும், பதுங்கியும் வாழ்ந்துகொண்டிருந்த அவர்கள் இப்போது தங்கள் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் விதத்தில் உரிமைக் குரல் எழுப்பத் தொடங்கியிருக்கிறார்கள்.
    திருமணம், இந்திய கலாசாரத்தோடு ஒருங்கிணைந்தது. இந்தியர்களின் வாழ்க்கையில் மிகமுக்கியமானது. ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்பது நம் கலாசாரத்தை காட்டும் தாரக மந்திரமாக இருக்கிறது. ‘மனைவி இருக்கும்போதே இன்னொரு பெண்ணுடனும் வாழ்க்கை’ என்பதை இன்றுவரை நமது கலாசாரம் ஏற்றுக்கொள்ளவில்லை. அது குற்றச்செயலாகவும், குறைவுள்ள வாழ்க்கையாகவும் கருதப்படுகிறது. ஆனால் மேலை நாடுகள் சிலவற்றில் இதில் தாராள நிலை கடைப்பிடிக்கப்படுகிறது. ஆண்களும், பெண்களும் இ்ஷ்டம்போல் வாழ அனுமதிக்கப்படுகிறார்கள்.

    இங்கே ஆணுக்கு ஒரே ஒரு திருமணம் என்பதும், அவனது இந்த ஜென்மம் முழுவதற்குமான இன்ப துன்பங்களை நிர்ணயிக்கும் சக்தியாக அதுவே இருக்கும் என்பதும் நிதர்சனமானது. அது மட்டுமல்லாமல் சமூக பாதுகாப்பு என்பதும் திருமணத்தால் ஏற்படுவதால் அதற்கு இத்தனை முக்கியத்துவம் தரப்படுகிறது. ஒரு பெண்ணின் பாதுகாப்பு, சந்ததியினரின் கல்வி, வளர்ச்சி, எதிர்காலம், பெற்றோரின் வயோதிக கால பாதுகாப்பு ஆகிய அனைத்தும் இந்த திருமண கட்டமைப்பில் அடங்குகிறது.

    இந்திய திருமண கட்டமைப்பு பழமையானது என்று சிலர் குறை கூறிக்கொண்டிருந்தாலும், வெளிநாடுகளில் அதற்கு இருக்கும் மகத்துவம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அதனால்தான் வெளிநாட்டு ஜோடிகளும் இந்தியாவிற்கு வந்து, இங்குள்ள முறைப்படி தங்கள் திருமணத்தை நடத்தி மகிழ் கிறார்கள். இந்திய திருமணங்களில் சிக்கல்கள் இருந்தாலும், வெளிநாட்டு திருமணங்களோடு ஒப்பிடும்போது அந்த சிக்கல்கள் குறைவுதான். நம் நாட்டில் விவாகரத்து என்பது இரு குடும்பங்களையும் பாதிக்கும் விஷயமாக கருதப்படுகிறது. விவாகரத்து என்பது சமூகத்தில் சற்று சறுக்கலான விஷயமாகவே பார்க்கப்படுகிறது. விவாகரத்து பெற்ற பெண்கள் வாழாவெட்டி என்ற பெயரோடு தாய்வீட்டில் அடைக்கலம் புகுந்த காலம் மாறிவிட்டது. பெண்கள் எந்த நிலையிலும் தங்களை நிலை நிறுத்திக் கொள்ளும் சூழல் நிலவுகிறது. அப்படிப்பட்ட இந்த காலகட்டத்திலும் விவாகரத்து என்பது விரும்பப்படாத ஒன்றாகவே இருக்கிறது. அதனால் ஒருவனுக்கு ஒருத்தியாக அனுசரித்துச்செல்லும் வாழ்க்கையே முக்கியத்துவம் பெறுகிறது.

    முந்தைய காலத்தில் இ்ந்திய மன்னர்களும், வசதி படைத்தவர்களும் பலதார மணம் முடித்தவர்களாக இருந்திருக்கிறார்கள். பல பெண்களை திருமணம் செய்துகொண்டு அவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால் அந்த வாழ்க்கை எந்த அளவுக்கு நிம்மதியாக இருந்தது என்று தெரியவில்லை. அப்படி ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை சேர்த்துக்கொண்டு வாழும் முறை ஐரோப்பிய நாடுகளில் இன்றும் உள்ளது. அதில் குறிப் பிடத்தக்கது, ‘ஒப்பந்த மனைவிகள்’ என்ற முறை!

    எந்த ஒரு விஷயத்தையும் தூரத்திலிருந்து பார்த்து சரி, தவறு என்று சொல்லிவிட முடியாது. அந்த நாட்டின் சூழ்நிலைக்கு ஏற்றபடிதான் அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறையும் அமையும். சில நாடுகளில் வயதானவர்கள் துணைக்காக திருமணம் செய்து கொள்கிறார்கள். சிலர் பணக்கார பெண்களை தங்களுடன் சேர்த்துக்கொண்டு வாழ்கிறார்கள். அவளது செலவில் தானும் வாழ்ந்துவிடலாம் என்ற ஆசைகூட அதற்கு காரணமாக இருக்கலாம்.

    ஆண்களில் பலர் அதிக சுதந்திரத்தை விரும்புகிறார்கள். அவர்கள் முறைப்படி ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டால் அவளுக்காக கட்டுப்பட்டு வாழவேண்டும் என்றும், அவளால் தங்கள் சுதந்திரம் பறிபோய்விடும் என்றும் கருதுகிறார்கள். அதனால் திருமணம் என்ற கட்டுக்கோப்புக்குள் வர அவர்கள் தயங்குகிறார்கள். இன்னொருபுறம் ஆண்கள் பொறுப்புகளை சுமக்கவும் தயங்குகிறார்கள். முறைப்படி ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்தால் அவளுக்கான பாதுகாப்பு, உரிமைகளை வழங்கவேண்டியதிருக்கும். அவளுக்கான கடமைகளையும் செய்யவேண்டியதிருக்கும். அப்படி எந்த பொறுப்பும் இல்லாமல் வாழ விரும்புகிறவர் களுக்கு உதவுபவர்களாக இருப்பவர்கள், ஒப்பந்த மனைவிகள். இவர்கள் ஒப்பந்தங்களுக்கு கட்டுப்பட்டு, தங்களை இணைத்துக்கொள்பவர்களோடு, ஒப்பந்த காலம் வரை வசிப்பார்கள். அவர்கள் மீது கணவர்களால் ஆதிக்கம் செலுத்த முடியாது. அன்பையும் செலுத்தமுடியாது. உடல்ரீதியான தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும். மனோரீதியான திருப்தி எந்த அளவுக்கு ஏற்படும் என்று சொல்லமுடியாது.

    உலகில் பல்வேறு நாடுகளில் ஒப்பந்த மனைவிகள், விருப்பப்பட்ட ஆண்களோடு ‘வாழ்ந்து’ கொண்டிருக்கிறார்கள். அதிகம் முகம்காட்டாமல் ஒதுங்கியும், பதுங்கியும் வாழ்ந்துகொண்டிருந்த அவர்கள் இப்போது தங்கள் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் விதத்தில் ஒன்றிணைந்து, உரிமைக் குரல் எழுப்பத் தொடங்கியிருக்கிறார்கள். சில வருடங்களுக்கு மட்டும் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு ஒன்று சேர்ந்து வாழும் அவர்கள் ‘ஒப்பந்தம் முடிந்த பின்பு எங்கள் எதிர்காலம் என்னவாகும்? ஒப்பந்த காலத்தில் கர்ப்பிணியாகி, குழந்தை பெற்றுவிட்டால் அந்த குழந்தைக்கு யார் பொறுப்பு? குழந்தையை பராமரிப்பது யார்?’ என்றெல்லாம் கேள்வி எழுப்புகிறார்கள். சந்தர்ப்ப சூழ்நிலை களால் ஒப்பந்த மனைவிகளை வைத்துக்கொள்ளும் செல்வந்தர்கள் அந்த மனைவிகளின் எதிர்கால தேவைகளுக்கும், குழந்தைகளின் எதிர்காலத்திற்கும் பொறுப்பேற்க வேண்டும் என்று போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். பணம் படைத்த ஆண்களிடம் ஏமாந்து, தங்கள் எதிர்காலத்தை தொலைத்துவிடக்கூடாது என்பதில் ஒப்பந்த மனைவிகள் மிகுந்த கவனம் செலுத்துகிறார்கள்.

    இந்த ஒப்பந்த மனைவிகளின் எண்ணிக்கை உலக நாடுகளில் இப்போது கணிசமான அளவு உயர்ந்திருக்கிறது. அவர்கள் செல்வாக்கு பெற்றவர்களாகவும் திகழ்கிறார்கள். அவர் களது போராட்டங்களாலும், அதனால் ஏற்படும் சமூக சிக்கல் களாலும் ஐரோப்பிய நாடுகளில் பல, இந்தியாவின் திருமண முறை பற்றி சிந்திக்கத் தொடங்கியிருக்கிறது. ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற வாழ்க்கை முறையே உயர்வானது என்பதை ஏற்றுக்கொள்ளத் தொடங்கியிருக்கின்றன. அதே நேரத்தில் இந்தியாவில் வசதி வாய்ப்பு கொண்டவர்கள், பாரம்பரிய கலாசாரத்தை மறந்துவிட்டு ‘வெளிநாட்டு ஒப்பந்த மனைவிகள் முறை இங்குவந்தால் மகிழ்ச்சியாக இருக்குமே’ என்ற ரீதியில் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இக்கரைக்கு அக்கரை பச்சை என்ற நிலைதான் இதில் ஏற்பட்டிருக்கிறது.

    இங்குள்ள பெருநகரங்கள் சிலவற்றிலும் இந்த ஒப்பந்த மனைவிகள் கலாசாரம் மெல்ல மெல்ல தலைதூக்கத் தொடங்கி யிருக்கிறது. ‘இதன் விளைவு என்னவாக இருக்கும்?’ என்று கவலை தோய்ந்த முகத்தோடு கேள்வி எழுப்புபவர்களுக்கு, காலம்தான் பதில்சொல்லும்!
    தினமும் சிறிதளவு கருப்பு சாக்லேட் சாப்பிட்டு வந்தால் உடலில் ஆக்ஸிஜனேற்றிகளின் செயல்பாடுகளுக்கு தேவையான ஆற்றல் உடலுக்கு கிடைத்துவிடும்.
    தினமும் இரண்டு கருப்பு சாக்லேட் சாப்பிட்டு வருவது உடலுக்கு நல்லது. சாப்பிட்ட பிறகோ காபி, டீ பருகிய பிறகோ அதனை சாப்பிடலாம். சாக்லேட்டில் கலோரிகள் அதிகம் இருக்கும் என்பதால் குறைந்த அளவே சாப்பிட வேண்டும்.

    கருப்பு சாக்லேட்டில் ஆக்ஸிஜனேற்றிகளின் திறன் மிகுந்திருக்கும். இவை இதய நோய், புற்றுநோய்களில் இருந்து உடலில் உள்ள செல்களை பாதுகாக்கும் திறன் கொண்டவை. தினமும் சிறிதளவு கருப்பு சாக்லேட் சாப்பிட்டு வந்தால் உடலில் ஆக்ஸிஜனேற்றிகளின் செயல்பாடுகளுக்கு தேவையான ஆற்றல் உடலுக்கு கிடைத்துவிடும்.

    வெளியே செல்பவர்கள் கருப்பு சாக்லேட்டுகளை எடுத்து செல்லலாம். அதிலிருக்கும் பிளவனோல்ஸ் எனப்படும் பையோ ஆன்டிக் மூலக்கூறுகள் சருமத்திற்கு செல்லும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் தன்மை கொண்டது. அதன் காரணமாக சருமத்தில் பொலிவு அதிகரிக்கும். அதனால் வெயில் பாதிப்பில் இருந்து சருமத்தை பாதுகாத்துக்கொள்ளலாம்.

    சாக்லேட்டில் இருக்கும் கோகோ ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். அது மூளையின் செயல்பாட்டையும் மேம்படுத்தும். மேலும் குரல் வளத்திற்கும் இது உதவும்.

    தமனிகளுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதன் மூலம் ரத்த அழுத்தத்தை சீராக்குவதற்கு கருப்பு சாக்லேட் உதவுகிறது. மேற்புறத்தில் பாதாம் கலந்த கருப்பு சாக்லேட்டை சாப்பிடலாம். அது பிளாக் காபியுடன் சாப்பிடுவதற்கும் ருசியாக இருக்கும்.

    கருப்பு சாக்லேட்டில் கலக்கப்பட்டிருக்கும் மூலக்கூறுகள் தமனிகளில் கொழுப்பு சேர்வதையும் தடுக்க உதவுகின்றன. அதன் காரணமாக இதய நோய் தாக்கும் அபாயம் குறையும் என்றும் கூறப்படுகிறது.

    மிதமான சுடுநீரில் குளிப்பதன் மூலம் ஏராளமான நன்மைகளை பெறலாம் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    தினமும் குளிப்பது உடலில் உள்ள அழுக்கை நீக்குவதோடு நோய்கள் நெருங்காமல் பாதுகாக்கவும் செய்யும். பெரும்பாலானோர் குளிர்ந்த நீரில்தான் குளிப்பார்கள். குளிர்காலங்களில் வெந்நீரை பயன்படுத்துவார்கள். அதேவேளையில் மிதமான சுடுநீரில் குளிப்பதன் மூலம் ஏராளமான நன்மைகளை பெறலாம் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

    * மிதமான சுடுநீரில் சற்று அதிக நேரம் குளிப்பது 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது எரிக்கப்படும் கலோரி களுக்கு சமமானது. சுடு நீரில் குளிக்கும்போது இதயம் வேகமாக இயங்கும். அதற்கேற்ப கலோரிகளும் வேகமாக எரியும். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த வழக்கத்தை தொடர்வது நல்லது.

    * சுடு நீரில் குளிப்பது மாரடைப்பு ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கும். சுடு நீரில் குளிக்கும்போது உடல் நெகிழ்ந்து மனமும் அமைதியாகிவிடும். அதனால் ரத்த ஓட்டம் சிறப்பாக இருக்கும். அதன் காரணமாக இதய செயலிழப்பு ஏற்படுவதற்கான அபாயம் குறையும்.

    * ரத்த ஓட்டம் சீராகும்போது அது நரம்பு மண்டல செயல்பாடுகளை மேம்படுத்தும். சுடு நீரில் குளிக்கும்போது தசைகளில் ஏற்படும் வலிகள் நீங்கிவிடும். தசைகள் இறுக்கம் குறைந்து நெகிழும். குளிக்கும்போது கை, கால்களை நீட்டி அசைப்பது மூட்டுகள், எலும்புகளில் ஏற்படும் வலிகளை போக்கும்.

    * கோபமாக இருந்தாலோ, ஏதாவதொரு காரணத்தால் ரத்த அழுத்தம் அதிகரித்திருந்தாலோ வெதுவெதுப்பான நீரில் குளிப்பது நல்லது. அது ரத்த அழுத்தத்தை சீராக்குவதோடு மனதையும் இலகுவாக்கும். இரவில் நல்ல தூக்கத்தை வரவழைக்கும்.

    * நாள்பட்ட நோய் பாதிப்புக்கு ஆளானவர்கள், மன அழுத்தத்தால் அவதிப்படுபவர்கள் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது இதமளிக்கும்.
    நினைவாற்றல் மாணவர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் தேவை. குழப்பமில்லாத மனநிலையோடும், தன்னம்பிக்கையோடும் செயல்பட்டால் நினைவாற்றல் சிறப்பாக இருக்கும்.
    நினைவாற்றல் மாணவர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் தேவை. குழப்பமில்லாத மனநிலையோடும், தன்னம்பிக்கையோடும் செயல்பட்டால் நினைவாற்றல் சிறப்பாக இருக்கும். மாணவர்கள் தேர்வு சமயத்தில் சில வகை உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். நினைவுத்திறனையும் மேம்படுத்தும்.

    மாணவர்கள் தேர்வு காலங்களில் நொறுக்குத்தீனிகளை சாப்பிடக்கூடாது. அதற்கு மாற்றாக ஆரோக்கியமான சிற்றுண்டி வகைளை சாப்பிட வேண்டும். பாதாம், முந்திரி பருப்பு, அக்ரூட் பருப்புகள் உள்ளிட்டவைகளை சாப்பிட்டு வருவது உடல் நிலையிலும், மனநிலையிலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். அவைகளில் இருக்கும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள், வைட்டமின்கள், தாதுக்கள், பைட்டோ நியூட்ரியன்ஸ் போன்றவை மூளையின் ஆரோக்கியத்திற்கு முக்கிய தேவை.

    செரிமானத்திற்கு மட்டுமின்றி நினைவாற்றல் திறனுக்கும், மனதை ஒருமுகப்படுத்துவதற்கும் தேன் உதவும். மூளையில் ஆக்ஸிஜனேற்ற நிலையை மேம்படுத்துவதற்கு தேன் உதவுவது ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. தேனில் இருக்கும் பாலிபினால்கள், நரம்பு மண்டலத்தை பலப் படுத்தும் தன்மை கொண்டது.

    பூசணி விதைகள் மூளை செல்கள் சேதமடைவதை தடுத்து நிறுத்தும்தன்மை கொண்டவை. அதில் இருக்கும் ஊட்டச்சத்துகள் நரம்பு மண்டலத்திற்கும், மூளையின் ஆரோக்கியத்திற்கும் வலு சேர்ப்பவை. அதிலிருக்கும் செம்பு, நரம்பு களின் செயல் திறனை அதிகரிக்கும். மெக்னீசியம் நினைவாற்றலுக்கு துணை நிற்கும்.

    ஆரோக்கிய பானமாக கருதப்படும் கிரீன் டீயில் காபின் அதிகம் கலந்திருக்கிறது. மூளையில் ரத்தம் தடையின்றி செயல்பட அதிலிருக்கும் அமினோ அமிலங்கள் துணைபுரிகிறது. தேவையற்ற பதற்றம் ஏற்படுவதையும் அது தடுக்கும்.

    நினைவாற்றலுக்கு உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இருக்க வேண்டும். நன்றாக தூங்குவதும் அவசியமானது.
    குழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால் நேந்திரம் பழத்தில் கட்லெட் செய்து கொடுக்கலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    நேந்திரம் பழம் - 3
    தேங்காய் துருவல் - 1 கப்
    நாட்டு சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்
    ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
    பொடியாக நறுக்கிய முந்திரி பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
    அரிசி மாவு - 2 1/2 டேபிள் ஸ்பூன்
    கோதுமை .மாவு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
    பிரெட் தூள் - தேவையான அளவு
    உப்பு - தேவைக்கு
    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

    செய்முறை

    நேந்திரம் பழத்தை ஆவியில் வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

    பழத்தின் நடுவில் உள்ள கறுப்பு விதைகளை நீக்கி விட்டு பழத்தை நன்றாக மசித்துக் கொள்ளவும்.

    தேங்காய் துருவலை மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் நாட்டு சர்க்கரை, பொடித்த தேங்காய் துருவலும் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணவும்.

    பின்னர் இதில் 1 1/2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறவும்.

    இதில் ஏலக்காய் தூள், நறுக்கிய முந்திரிப் பருப்பு சேர்த்து தண்ணீர் வற்றி சுருண்டு வரும் போது இறக்கி வைக்கவும்.

    மசித்து வைத்திருக்கும் பழத்தில் இந்த கலவையை சேர்த்து நன்றாக கலக்கவும்.

    இதனுடன் அரிசி மாவை சேர்த்து நன்றாக பிசைந்து வைக்கவும்.

    கோதுமை மாவை ஒரு பவுளில் போட்டு அதில் ஒரு சிட்டிகை உப்பும் கொஞ்சம் தண்ணீரும் சேர்த்து கொஞ்சம் லூசான பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.

    பிசைந்து வைத்த பழக்கலவையில் இருந்து கொஞ்சம் எடுத்து கையில் வைத்து தட்டி வட்ட வடிவமாகசெய்து கோதுமை மாவில் முக்கி பிரெட் தூளில் போட்டு நன்றாக புரட்டி எடுத்துக் கொள்ளவும்.

    ஒரு ஃப்ரையிங் பேன் அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் தட்டி வைத்திருக்கும் கட்லெட்களை போட்டு பொன்னிறத்தில் பொரித்து எடுக்கவும்.

    நல்ல கிரிஸ்ப்பியான நேந்திரம் பழ கட்லெட் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    50 வயதை கடந்த பெண்கள் மாதவிடாய் நிறுத்தத்தை எதிர்கொள்ளும்போது பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவார்கள். அவர்கள் பசுமையான சூழலில் வாழ்ந்தால், ‘மெனோபாஸ்’ இன்னல்கள் குறையும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
    சுகாதாரமான மற்றும் பசுமையான சூழலில் வாழும்போது ஆரோக்கியம் மேம்படும். நோய் தொற்றுகளில் இருந்து தற்காத்துக்கொள்ளவும் முடியும். முதுமை பருவத்தை எட்டியவர்களுக்கு இத்தகைய ஆரோக்கியமான வாழ்க்கை சூழல் அவசியமானது. பசுமையான சூழலுடன் இணைந்து வாழும்போது உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி மன ஆரோக்கியமும் மேம்படும். 50 வயதை கடந்த பெண்கள் மாதவிடாய் நிறுத்தத்தை எதிர்கொள்ளும்போது பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவார்கள். அவர்கள் பசுமையான சூழலில் வாழ்ந்தால், ‘மெனோபாஸ்’ இன்னல்கள் குறையும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

    ‘‘மன அழுத்தம் காரணமாக ரத்தத்தில் கார்டிசால் ஹார்மோனின் அளவு அதிகரிக்கும். பசுமையான இடங்களுக்கு செல்லும்போது அதன் அளவு கட்டுப்படும் என்பதை ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன. பசுமையான பகுதியில் வசிக்கும் பெண்களுக்கும் கார்டிசால் அளவு கட்டுப்படுகிறது. அதன் தாக்கம் மாதவிடாய் சுழற்சியில் வெளிப்படுகிறது.

    மேலும் பசுமையான சுற்றுப்புறத்தில் வசிக்கும் பெண்களுக்கு வயோதிகம் தள்ளிப்போகும். அதன் காரணமாக அவர்களுக்கு மெனோபாஸ் நெருக்கடிகள் குறையும். இயற்கை சூழலில் அமர்ந்து நேரத்தை செலவிடும்போது மன அழுத்தம், மன சோர்வு போன்றவைகளும் குறையும்’’ என்கிறார், ஸ்பெயினை சேர்ந்த மூத்த ஆராய்ச்சியாளர், ஹை டிரிப்னர்.

    இந்த ஆய்வுக்கு ஐரோப்பா கண்டத்தை சேர்ந்த 2 ஆயிரம் பெண்கள் உட்படுத்தப்பட்டனர். தூய்மையான மற்றும் பசுமையான சூழலில் வாழும் பெண்கள் மற்ற பெண்களை காட்டிலும் ஒன்றரை முதல் இரண்டு ஆண்டுகள் கழித்த பிறகே மாதவிடாய் நிறுத்தத்தை எதிர்கொள்கிறார்கள் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
    காதல் திருமணம் செய்துகொண்ட ஜோடிகளில் ஏராளமானவர்கள் ஒரு வருடத்திற்குள்ளே பிரச்சினைகள் ஏற்பட்டு பிரிந்துபோக தயாராகிவிடுகிறார்கள். அதற்கு என்ன காரணம் என்று அறிந்து கொள்ளலாம்.
    மோதல் முற்றி விவாகரத்து கேட்கும் நிலையில் இருக்கும் தம்பதிகளுக்கு கவுன்சலிங் வழங்கி, அவர்களுக்குள் மீண்டும் மன இணக்கத்தை ஏற்படுத்த கடைசிகட்ட முயற்சிகளை மேற்கொள்ளும் குடும்பநல ஆலோசனை மையம் அது. காதல் திருமணம் செய்த வேகத்திலே, பிரிந்துபோக தயாராக இருக்கும் இளஞ்ஜோடிகள் அன்று திரளாக அங்கே கவுன்சலிங்குக்கு வந்து காத்திருந்தார்கள். அவர்களில் ஒரு ஜோடியில் கணவருக்கு 27 வயது. மனைவிக்கு 23 வயது.

    இருவரும் பொருத்தமான ஜோடி என்று சொல்லும் அளவுக்கு அம்சமாக காணப்பட்டார்கள். ஆனால், தாங்கள் இருவரும் சேர்ந்து வாழ்வதற்கான வாய்ப்பே இல்லை என்பதுபோல் ஆளுக்கொரு பக்கமாக தூரமாக விலகி நின்றிருந்தார்கள். இருவர் அருகிலும் தனித்தனியாக அவரவர் குடும்பத்தை சேர்ந்த பத்து, பதினைந்து பேர் சூழ்ந்திருந்தார்கள். அவர்களும் எதிரிகளை பார்ப்பதுபோல்தான் முறைத்துகொண்டு நின்றிருந்தார்கள்.

    தனது குடும்ப உறுப்பினர்களுக்கு மத்தியில் அந்த பெண் கோழிக்குஞ்சு போல் அமுங்கியபடி உட்கார்ந்திருந்தாள். தாயார் அவளிடம் நெருக்கமாக அமர்ந்துகொண்டு, ‘இப்படி கேள்வி கேட்டால் அப்படி பதில் சொல்.. அப்படி கேள்வி கேட்டால் இப்படி பதில் சொல்’ என்று குசுகுசுவென பேசிக்கொண்டிருந்தார். அதுபோல், அவளது கணவருக்கும் அவரது உறவுக்கூட்டம் சுற்றியிருந்து மந்திர ஆலோசனை வழங்கிக்கொண்டிருந்தது. அந்த பக்கமாக சாலையில் தங்களை கடந்து செல்கிறவர்கள் தங்கள் முகத்தை பார்த்துவிட்டால் அது அவமானம், என்ற எண்ணம் அந்த இளஞ்ஜோடியிடம் இருந்துகொண்டிருந்ததால், அவ்வப்போது முகத்தை திருப்பிக்கொண்டும், மறைத்துக்கொண்டும் இருந்தார்கள்.

    உள்ளே இருந்து முதலில் கணவருக்கு மட்டும் அழைப்பு வந்தது. குடும்பத்தினர் யாரும் அந்த பக்கம் தலைகாட்டிவிடாமல் விலகி நிற்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். படிப்பில் ரொம்ப சுமாரான மாணவர் பதற்றத்தோடு பரீட்சை ஹாலுக்கு செல்வது போன்ற மனநிலையில் அவர் உள்ளே சென்றார்.

    ஒரு மணி நேரம் ஆகிவிட ‘உள்ளே போனவரை இன்னும் காணலையே.. என்ன நடந்துச்சோ?’ என்றபடி, உள்ளே நடந்ததை எல்லாம் தெரிந்துகொள்ளும் ஆவலில், அந்த இளைஞனின் குடும்பத்தினர் ஆர்வத்தோடு வெளியே அலைபாய்ந்து கொண்டிருந்தார்கள். சீக்கிரமே அவளை பிரித்து விவாகரத்து வாங்கிவிட்டு, அந்த சூட்டோடு இளைஞனுக்கு இன்னொரு பெண் பார்த்து அடுத்தொரு திருமணம் செய்துவைத்துவிடவேண்டும் என்ற வேகம் அவர்களிடம் இருந்துகொண்டிருந்தது.

    சிறிது நேரம் கழித்து மனைவியான அந்த இளம்பெண்ணை உள்ளே அழைத்தார்கள். கணவரை வெளியேவிடாமல் அங்கேயே தனியறையில் உட்காரவைத்துவிட்டார்கள். அவள் உள்ளே சென்றும் வெகுநேரம் ஆனது. அவர்கள் இருவரிடமும், காதல் தொடங்கிய காலத்தில் இருந்து காதலில் இடம்பெற்ற இனிமையான தருணங்கள் வரையிலும்- அவர்கள் இருவரும் குடும்பத்தினர் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்துகொண்டு ஒன்றாக வாழ எடுத்த முயற்சிகள் முதற்கொண்டு ஒன்றாக குடும்பம் நடத்திய நாட்கள் வரையிலும்- உள்ள அனைத்து விஷயங்களையும் கேட்டறிந்துவிட்டு, பிரச்சினை எங்கே- எப்படி உருவானது? அந்த பிரச்சினைகள் இருவரும் பிரிந்துபோகும் அளவுக்கு தீவிரமானவைகளா? என்றெல்லாம் கேட்டறிந்துகொண்டிருந்தார்கள்.

    அந்த இளஞ்ஜோடிகள் பெற்றோர்களுக்கு தெரியாமல் நான்கு வருடங்களாக காதலித்துக்கொண்டிருந்திருக்கிறார்கள். அந்த காதல் வாழ்க்கை மிகுந்த மகிழ்ச்சியாக இருந்திருக்கிறது. அவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடமும், ஒரு மாதமுமே ஆகியிருக்கிறது. அதில் கருத்துவேறுபாட்டுடன் 4 மாதங்களாக பிரிந்திருக்கிறார்கள்.

    இளஞ்ஜோடியிடம் பிரச்சினைகள் உருவாக மூலகாரணம் என்ன என்பதை எளிதாக கண்டறிந்துவிட்ட அந்த ஆலோசனை மையத்தின் தலைமை பெண் அதிகாரி, இருவரையும் நெருக்கமாக அமரவைத்து கைகளை பற்றிப்பிடித்துக்கொள்ள சொன்னார். ‘உங்கள் இருவரது காதல் திருமணம், உங்கள் குடும்பத்தில் உள்ள முக்கியமான சிலருக்கு பிடிக்கவில்லை. அவர்களுக்கு பிடிக்காமல் போனதற்கு என்ன காரணம் என்பதற்குள் நான் செல்லவிரும்பவில்லை. ஆனால் உங்கள் இருவருக்குள்ளும் இன்னும் வற்றாத காதல் இருந்துகொண்டிருக்கிறது. திட்டமிட்டு வாழ்க்கையில் இணைந்த நீங்கள், உங்கள் வாழ்க்கையின் லட்சியத்தை அடைய இன்னும் வெகுதூரம் பயணிக்கவேண்டியிருக்கிறது. நீங்கள் வாழ்க்கையில் அனுபவிக்க இன்னும் நிறைய இருக்கிறது.

    நீங்கள் இருவரும் உங்களை நன்றாக புரிந்துவைத்திருக்கிறீர்கள். உங்களை, உங்கள் அளவுக்கு புரிந்துகொண்டவர்கள் இந்த உலகத்தில் வேறு யாரும் இல்லை. உங்களை பிரிக்க சிலர் களமிறங்கியுள்ளனர். இப்போது உங்கள் வாழ்க்கையை காப்பாற்றியாகவேண்டும். அது உங்கள் இருவரால் மட்டுமே முடியும். அனுபவமின்மையால் உங்களுக்குள் சின்னச்சின்ன பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கின்றன. அதை உங்கள் இரு குடும்பத்தாரும் பெரிதாக்கி, உங்களை இந்த இடம் வரை கொண்டுவந்துவிட்டார்கள். இவர்களிடமிருந்து உங்கள் வாழ்க்கையை காப்பாற்ற என்ன செய்யப்போகிறீர்கள்?’ என்று கேட்க, இருவரும் தங்களுக்குள் இருந்த கோபதாபங்களின் வேகத்தை குறைத்துக்கொண்டு, ஒருவர் முகத்தை இன்னொருவர் வெகுநாட்களுக்கு பிறகு பார்த்து கண்கலங்கினார்கள்.

    சிறிது நேரம் கழித்து ‘உன் அம்மா இப்படி சொன்னார்.. என் அப்பா அப்படி சொன்னார்..’ என்று, பிரச்சினைகள் தோன்றிய விதத்தை இருவரும் மனம்விட்டுப் பேச, அடுத்து அந்த பெண் அதிகாரி செய்த ஏற்பாடுகள்தான் அதிரடி ரகம்.

    அந்த ஜோடியை தனிஅறையில் உட்காரவைத்த அவர், இரு குடும்பத்தாரையும் அவர்கள் அருகில் அனுமதிக்கவில்லை. அவர்கள் காதலித்தபோது பயணம்செய்து மிகுந்த சந்தோஷத்தை அனுபவித்த சுற்றுலா ஸ்தலம் ஒன்றின் பெயரை அவர்களையே சொல்லவைத்து, தனி அறையில் இருந்தபடியே அவர்களை அந்த ஊரில் உள்ள ஓட்டலில் உடனடியாக அறையை பதிவுசெய்யவைத்து, வீட்டிற்கு செல்லாமல் அங்கிருந்தே காரில் அந்த ஊருக்கு செல்லவைத்துவிட்டார். ‘ஒரு வாரம் கழித்து மனம் ஒன்றி திரும்பிவாருங்கள்’ என்று அனுப்பிவைத்துவிட்டார். இருவரிடமும் கிரெடிட் கார்டு இருந்ததால் வேலை எளிதாக முடிந்தது.

    இருதரப்பு பெற்றோரும் ஆலோசனை மையத்திற்கு வெளியே கால்வலிக்க காத்திருக்க, தனித்தனியாக உள்ளே சென்ற இளஞ்ஜோடியோ ஒன்றாக சேர்ந்து வெளியேவந்து, அவர்களுக்கு ‘டாடா’ மட்டும் காட்டிவிட்டு காரில் ஏறி கிளம்பியதை அவர்களது கண்களாலே நம்பமுடியவில்லை. உள்ளே நடந்த எதையும் ஊகிக்க முடியாமல், பின்பு ஆளுக்கொரு பக்கமாக கலைந்துசென்றார்கள்.

    “காதல் திருமணம் செய்துகொண்ட ஜோடிகளில் ஏராளமானவர்கள் ஒரு வருடத்திற்குள்ளே பிரச்சினைகள் ஏற்பட்டு பிரிந்துபோக தயாராகிவிடுகிறார்கள். அவர்களுக்குள் பிரச்சினைகள் உருவாக பெரும்பாலும் இருதரப்பு பெற்றோரோ, முக்கியமான உறவினர்களோதான் காரணமாக இருக்கிறார்கள். காதல் திருமணம் செய்துகொண்டவர்கள் இதை புரிந்துகொள்ளவேண்டும். தங்கள் மணவாழ்க்கையை அவர்கள் காப்பாற்றிக்கொள்ள ஒருபோதும் மூன்றாம் நபர்களின் தலையீட்டை அனுமதிக்கக்கூடாது” என்கிறார், அந்த ஆலோசனை மைய பெண் அதிகாரி.

    காதல் மணம்புரிந்தவர்களே கவனமாக இருந்து உங்கள் தாம்பத்ய வாழ்க்கையை காப்பாற்றிக்கொள்ளுங்கள்!
    பெரும்பாலான தாய்மார்களால் பிஞ்சுக்குழந்தையின் கண்களில் ஏதேனும் பாதிப்பு இருக்கிறதா? என்று கண்டறிய முடிவதில்லை. ஆயிரம் குழந்தைகளில் ஒரு சிலவற்றுக்கு கண்களில் பாதிப்பு உள்ளது.
    ‘‘குழந்தை பிறந்ததும் தாய், அந்த குழந்தையின் முகத்தை பார்த்து ஆனந்த கண்ணீர் வடிப்பார். பத்து மாதம் சுமந்த கஷ்டமும், பிரசவ வலியில் துடித்த வேதனையும் அப்போதே அவரிடமிருந்து அகன்றுவிடும். தனது குழந்தையை அள்ளி எடுத்து கொஞ்சுவார். தனது குடும்பத்தின் வாரிசான அந்த குழந்தை எந்தவிதத்திலும் அங்க குறைபாடு கொண்டிருக்கக்கூடாது என்று கருதி, அதன் கை கால்கள் முழு வளர்ச்சியுடன் இருக்கிறதா என்றும், கேள்வித்திறன் எப்படி இருக்கிறது என்றும் பரிசோதிப்பார். ஆனால் பெரும்பாலான தாய்மார்களால் அந்த பிஞ்சுக்குழந்தையின் கண்களில் ஏதேனும் பாதிப்பு இருக்கிறதா? என்று கண்டறிய முடிவதில்லை. ஆயிரம் குழந்தைகளில் ஒரு சிலவற்றுக்கு கண்களில் பாதிப்பு உள்ளது. பிறந்த சில மாதங்களுக்குள் அதை கண்டுபிடித்துவிட்டால் சிகிச்சை அளித்து எளிதாக குணப்படுத்திவிடலாம். கவனிக்காமலே விட்டு விட்டால், அந்த குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் பார்வைத்திறன் இழப்புகூட ஏற்படலாம்’’ என்று கூறுகிறார், கண் மருத்துவர் வசுமதி வேதாந்தம்.

    வெளிநாடுகளில் மருத்துவ கல்வி பயின்று, விழித்திரை அறுவை சிகிச்சை நிபுணராகத் திகழும் இவர் அரசு மகப்பேறு மருத்துவமனைகளுக்கு சென்று அங்கு பிறந்த குழந்தைகளின் கண்களை பரிசோதித்து, குறைபாடுகள் இருப்பின் சிகிச்சைக்காக பரிந்துரைக்கிறார். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் மருத்துவமனை களுக்கு சென்று அங்குள்ள மகப்பேறு மருத்துவர்களுக்கு பிறந்த குழந்தைகளின் கண்களில் குறைபாடு இருந்தால் எப்படி கண்டறிவது என்பதற்கான விளக்க நிகழ்ச்சிகளும் நடத்துகிறார். இவரது இந்த சேவையை பாராட்டி இந்தியாவிலும், வெளிநாட்டிலும் விருதுகள் கிடைத்துள்ளன.

    ‘‘தாய் வயிற்றில் இருந்து முழு வளர்ச்சி பெற்று, பத்து மாதங்களில் பிறக்கும் குழந்தைகள் பொதுவாகவே இயல்பான கண் வளர்ச்சி பெற்றுவிடுகின்றன. ஆனால் குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளின் கண்கள் பெரும்பாலும் இயல்பான வளர்ச்சியை பெற்றிருப்பதில்லை. 35 வாரங்களுக்கு முன்பு பிறந்துவிடும் குழந்தைகளை, குறைமாதத்தில் பிறந்தவை என்கிறோம். அவை அனேகமாக 2 கிலோவுக்கும் குறைவான எடையை கொண்டிருக்கும். அத்தகைய குழந்தைகளின் கண்களில் நாம் அதிக கவனம் செலுத்தவேண்டும்.

    அதுபோல் குழந்தையின்மைக்காக சிகிச்சை பெற்று, தாய்மை யடைந்து பிரசவிக்கும் பெண்களும், ஒரே பிரசவத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றெடுக்கும் தாய்மார்களும் குழந்தைகளின் கண்கள் மீது கவனம் செலுத்தவேண்டும். சொந்தத்தில் திருமணம் செய்துகொள்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும், மரபணுகுறைபாடு கொண்ட குழந்தை களுக்கும் விழித்திரை பாதிப்பு ஏற்படலாம்.

    இந்த பாதிப்பை ‘ரெட்டினோபதி ஆப் பிரிமெச்சூரிட்டி’ (ஆர்.ஓ.பி) என்று குறிப்பிடுவோம். ஒருசில குழந்தைகளுக்கு பிறக்கும்போதே கண்புரை பாதிப்பு ஏற்படுவதும் உண்டு. கண்புரையை அகற்றினால்தான் குழந்தைகளின் கண்கள் முழு வளர்ச்சிபெறும். மிக அரிதாக லட்சத்தில் ஒரு குழந்தைக்கு கண்களில் புற்றுநோய் கட்டிகூட இருக்கும். அதையும் தொடக்கத்திலே கண்டறிந்து சரியான சிகிச்சை அளித்து, குழந்தையின் பார்வைத்திறன் பாதிக்காத அளவுக்கு சரிசெய்துவிடலாம்.

    குழந்தைகள் பிறந்து 2 மாதம் ஆன பிறகுதான் பார்வைத் திறன் லேசாக கிடைக்கும். அப்போது 8 அங்குலம் முதல் 12 அங்குலம் வரையிலான தூரத்தில் தாய் நின்றால்தான், குழந்தையால் தாயின் முகத்தை பார்க்க இயலும். பின்பு நிறங்களை பார்க்க முயற்சிக்கும். முதலில் சிவப்பு நிறத்தைதான் குழந்தைகள் உணரும். பின்பு மஞ்சள் நிறத்தை அடையாளங்காணும். பேசத் தொடங்கியதும், மெல்ல மெல்ல நிறங்களை அறிந்து சொல்லும். 5 வயதை கடக்கும்போதுதான் முழு பார்வைத்திறனை பெறும்.

    அதனால் மற்ற உடல் உறுப்புகளில் இருக்கும் குறைபாடுகளை எளிதாக அறிந்துகொள்வதுபோல், குழந்தைகளின் கண் பார்வைத்திறன் குறைபாட்டை பெற்றோரால் எளிதாக கண்டறிய இயலுவதில்லை. அதனால்தான் இதில் அதிக கவனம் செலுத்தவேண்டும் என்று பெற்றோர்களிடம் விழிப் புணர்வை ஏற்படுத்துகிறேன். இதை சேவை உணர்வோடு செய்து வருகிறேன்’’ என்கிறார்.

    ‘குழந்தைகளுக்கு ஏற்படும் இந்த விழித்திரை வளர்ச்சியின்மை குறைபாட்டை (ஆர்.ஓ.பி) கண்டறிவது எப்படி?’ என்று கேட்டபோது..

    ‘‘குறைமாதத்தில் பிறக்கும் குழந்தை களுக்கு நுரையீரல் சரியாக வளர்ச்சியடைந்திருக்காது. அதனால் சுவாசிக்கும் திறன் குறையும். அதை ஈடுகட்ட ஆக்சிஜன் கொடுப்பார்கள். சில குழந்தைகளுக்கு அளவுக்கு அதிகமாக ஆக்சிஜன் சென்றதால் விழித்திரை பாதிப்பு ஏற்பட்டதை கண்டறிந்தார்கள். அதன் பின்பு சீராக ஆக்சிஜன் கொடுக்கும் நிலை உருவானது. குறைமாதத்தில் பிறக்கும் எல்லா குழந்தைகளுக்கும் விழித்திரை வளர்ச்சி குறைபாடு இருக்காது. ஒருவேளை இந்த குறைபாடு இருந்தாலும், பிறந்து மூன்று நான்கு வாரங்கள் கழித்துதான் தெரிந்துகொள்ள முடியும்.

    இதற்கு பெற்றோர் என்ன செய்யவேண்டும் என்றால், குழந்தை பிறந்த நான்கு வாரத்திற்குள் கண்களை ‘ஸ்கிரீனிங்’ பரிசோதனை செய்ய முன்வரவேண்டும். அதற்குரிய கருவி மூலம் எளிதாக இதனை கண்டறிந்துவிடலாம். விழித்திரை வளர்ச்சியின்மை இருந்தால், குழந்தைகளுக்கு லேசர் சிகிச்சை தேவைப்படும். இது மயக்க மருந்து கொடுத்து செய்யப்படுவதில்லை. அறுவை சிகிச்சையும் அவசியம் இல்லை. குழந்தைகளுக்கு நெருக்கடிகொடுக்காமல் 15 முதல் 20 நிமிடத்தில் இந்த லேசர் சிகிச்சையை முடித்துவிடலாம். இது குழந்தைகளின் எதிர்காலத்தோடு தொடர்புடையது என்பதால் பெற்றோர் இதில் அதிக கவனம் செலுத்தவேண்டும். இப்போது கிராமங்களுக்கும் சென்றும் இந்த சேவையை செய்துகொண்டிருக்கிறோம்’’

    ‘கிராமத்து தாய்மார்களிடம் இருந்து உங்களுக்கு கிடைத்த அனுபவம் என்ன?’ என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில்..

    ‘‘உலக அளவிலான எண்ணிக்கையோடு ஒப்பிட்டால், இந்தியாவில்தான் குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இந்தியாவில் நகரங்களைவிட கிராமத்து தாய்மார்களிடம் இதுபற்றிய விழிப்புணர்வு குறைவாகவே இருக்கிறது. குழந்தையின் உடலில் வெளிப்புறமாக எந்த குறைபாடு இருந்தாலும் அவர்கள் தங்கள் அனுபவத்தின் அடிப்படையில் தெளிவாக கண்டறிந்துவிடுகிறார்கள். அவர்களால் குழந்தையின் உள்உறுப்பான கண்களின் பாதிப்பை உணரமுடிவதில்லை. இது பற்றி கிராமத்து தாய்மார் களிடம் எடுத்துக்கூறி, பிறந்த குழந்தைகளை தேடிச்சென்று ‘ஸ்கிரீனிங்’ பரிசோதனை செய்கிறோம். இதுவரை 2 லட்சம் குழந்தைகளுக்கு இந்த பரிசோதனையை செய்திருக்கிறோம். கிட்டத்தட்ட ஆயிரம் குழந்தைகளுக்கு இலவசமாக லேசர் சிகிச்சை செய்திருக்கிறோம்.

    இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா போன்ற பிற நாடுகளிலும் இத்தகைய பாதிப்பு இருக்கிறது. அதனால் உலக சுகாதார நிறுவனமும் இதில் அதிக கவனம் செலுத்துகிறது. உலக சுகாதார நிறுவனம் தனது செயல்திட்டத்தில் ‘விஷன் 2020 புரோகிராமில்’ இந்த விழித்திரை வளர்ச்சியின்மை விழிப்புணர்வுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது. அதனால் உலகமே இப்போது குழந்தைகளின் கண்களின் மீது தனது கவனத்தை ஆழமாக பதித்திருக்கிறது.

    நாங்கள் பச்சிளங்குழந்தைகளுக்கு உதவுவதற்காக ‘ப்ராஜெக்ட் விஷன் ஆப் வீல்ஸ்’ என்ற திட்டத்தையும் நடைமுறைப் படுத்துகிறோம். அதற்கான வாகனத்தில் ஸ்கிரீனிங் பரிசோதனை செய்யக்கூடிய மெஷின்கள் இருக்கும். அதனை கிராமங்கள் தோறும் கொண்டு சென்று, பயிற்சி பெற்ற தொழில்நுட்ப ஊழியர்கள் குழந்தைகளை பரிசோதித்து அங்கிருந்து குழந்தைகளின் விழித்திரையை படமெடுத்து அனுப்புவார்கள். அதனை நாங்கள் இங்கிருந்து ஆய்வு செய்து, விழித்திரை வளர்ச்சியின்மை இருந்தால் அந்த குழந்தையை தாயாருடன் அந்த வாகனத்திலே அழைத்து வந்து சிகிச்சை அளித்து குணப்படுத்துகிறோம். இதனை சேவை உணர்வோடு பல்வேறு சேவை நிறுவனங்களின் உதவியோடு செய்து வருகிறோம். இது எங்களுக்கு மிகுந்த ஆத்மதிருப்தியை தருகிறது’’ என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார், டாக்டர் வசுமதி வேதாந்தம்.

    பாராட்டவேண்டிய சேவைதான்!

    டாக்டர் வசுமதி வேதாந்தம்
    இன்றைய சூழலில், அதிகரித்து வரும் குழந்தையின்மை பிரச்சினைக்கு முக்கிய காரணமாக இருப்பது நவீன வாழ்க்கை முறை. நவீன வாழ்க்கை எந்த அளவுக்கு வாழ்க்கை சூழலை எளிதாக்கி இருக்கிறதோ அதற்கு எதிர்மறை விளைவையும் தந்துள்ளது.
    இன்றைய சூழலில், அதிகரித்து வரும் குழந்தையின்மை பிரச்சினைக்கு முக்கிய காரணமாக இருப்பது நவீன வாழ்க்கை முறை. நவீன வாழ்க்கை எந்த அளவுக்கு வாழ்க்கை சூழலை எளிதாக்கி இருக்கிறதோ அதற்கு எதிர்மறை விளைவையும் தந்துள்ளது.

    நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கைமுறை இன்று இல்லை. பொருளாதார தேவைக்காக ஆண் பெண் இருவரும் வேலைக்குச் செல்கின்றனர். முறையற்ற உறக்கத்தால் இயல்பான உடலுறவு குறைய வாய்ப்புள்ளது. வெளிநாடு வேலையால் சிலர் பிரிந்து இருப்பதால், ஆண்டுக்கு ஒரிரு மாதங்கள் மட்டுமே சேர்ந்திருக்கின்றனர். இதனால் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு மனஅழுத்தத்துக்கு ஆளாகின்றனர். குறிப்பாக மென்பொருள் பொறியாளர், விற்பனை பிரதிநிதிகளாக இருக்கும் ஆண்களுக்கு விந்தணு உற்பத்தி குறைய வாய்ப்புள்ளது. இதனாலேயே குழந்தை பெறும் தன்மை குறைந்து வருகிறது.

    அதேபோல் உணவு பழக்கமும் மாறி வருகிறது. பருவ மாற்றங்களுக்கு ஏற்றவாறு இருந்த உணவுமுறை இப்போது இல்லை. துரித உணவுகள், பதப்படுத்தபட்ட ரசாயனம் கலந்த உணவுகள், ரெடிமேட் மசாலா, ரெடிமேட் உணவு வகைகள், குளிர்பானங்கள் இன்று வழக்கத்திற்கு வந்துவிட்டது. இவற்றில் சேர்க்கப்படும் ரசாயனங்களால் குடல்புண், குடல் அழற்சி, குடல் புற்று நோய், உடல்பருமன், மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்புள்ளது. வாகன புகை, கழிவால் சுற்றுச்சூழல் மாசு அதிகரித்து நமது உடலுக்கு ஊறு விளைவித்து பல நோய்கள் வருவதற்கு அடித்தளமாகிறது. இந்த சுற்றுச்சூழல் மாசால் ஆண்களுக்கு உணர்ச்சிகள் குறைவது மட்டுமின்றி மலட்டுத்தன்மையும் அதிகமாகியுள்ளது.

    முறையான உடற்பயிற்சி பெண்களுக்கு இல்லை. மாவு ஆட்ட, அரைக்க எந்திரம் வந்துவிட்டது. இதனால் உடற்பருமன் உருவாகி எடையை குறைக்க உடற்பயிற்சிகூடத்துக்கு செல்கின்றனர். எடை அதிகரிப்பும் பெண்களுக்கு கருத்தரித்தலில் தேக்க நிலை ஏற்படுகிறது. ஆகவே முறையான எளிய உடற்பயிற்சி இருபாலருக்கும் வேண்டும். பெண்களுக்கு திருமண வயது 30-யைகடக்கும் போது, மருத்துவரை கலந்து ஆலோசிக்க வேண்டும். அதுபோல் ஆண்களும் புகை, மது, போதை பழக்கத்தால் ஆண்மைக்குறைவு, விந்தணு உற்பத்தி பாதிப்பு ஏற்படுகிறது. மேலும், அதிக கதிர்வீச்சுள்ள தளங்களில் வேலை செய்பவர்கள், லேப்டாப், கணினி போன்றவற்றை பயன்படுத்துபவர்களுக்கும் விந்தணு உற்பத்தி குறைபாடு ஏற்படுகிறது.

    இன்றைய அறிவியல் வளர்ச்சி எந்த வயதிலும் குழந்தைபேறு வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது. இதை நாம் பயன்படுத்திக்கொள்வது நம் கையில் உள்ளது. அமைதியான வாழ்க்கைமுறை, இயற்கை உணவுமுறை மற்றும் சீரான உடற்பயிற்சி இருந்தால் குழந்தையில்லா தம்பதியினருக்கு மழலை எனும் மகத்தான செல்வம் கிடைக்கும்.

    டாக்டர் டி.செந்தாமரை செல்வி எம்.பி.பி.எஸ்.,டி.ஜி.ஓ., ஏ.ஆர்.டி., பாலாஜி கருத்தரித்தல் மையம், பழனி.
    ×