search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பெண்கள் ஊஞ்சலில் ஆடினால் உள்ளங்கள் இணையும்..
    X
    பெண்கள் ஊஞ்சலில் ஆடினால் உள்ளங்கள் இணையும்..

    பெண்கள் ஊஞ்சலில் ஆடினால் உள்ளங்கள் இணையும்..

    பெண்கள் ஓடியாடி விளையாடும் எல்லா விளையாட்டுகளுமே அவர்கள் உடலையும், மனதையும் மகிழ்ச்சிப்படுத்தும். ஆனால் ஓடிவிளையாட முடியாத பெண்கள்கூட ஊஞ்சலில் ஆடி மகிழ்ந்தால் அவர்கள் உடலுக்கும், மனதுக்கும் அது இதம் தரும்.
    பெண்கள் ஓடியாடி விளையாடும் எல்லா விளையாட்டுகளுமே அவர்கள் உடலையும், மனதையும் மகிழ்ச்சிப்படுத்தும். ஆனால் ஓடிவிளையாட முடியாத பெண்கள்கூட ஊஞ்சலில் ஆடி மகிழ்ந்தால் அவர்கள் உடலுக்கும், மனதுக்கும் அது இதம் தரும். அதனால்தான் பலரும் வீடுகளில் ஊஞ்சலை அமைத்திருக்கிறார்கள். ஆனாலும் பல வீடுகளில் அது காட்சிப் பொருளாகத்தான் இருந்துகொண்டிருக்கிறது. அதில் இருந்து பெண்கள் ஆடி மகிழ்வதில்லை.

    ஊஞ்சலில் ஆடும்போது உள்ளம் எப்படி எல்லாம் மகிழும் தெரியுமா?

    * ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் தோன்றுகிறது. மகிழ்ச்சிப் பெருகி எதிர்காலத்தைப் பற்றிய வளமான சிந்தனைகள் தோன்றுகின்றன. திருமணங்களில் ‘ஊஞ்சல் சடங்கு’ இதன் அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது. ஊஞ்சலில் ஜோடியாக ஆடினால் உள்ளங்கள் இணையும்.

    * ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் பெறுகிறது. நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு பக்க சங்கிலிகளையும் பிடித்துக்கொண்டு வேகமாக ஆடும் போது முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் படர்ந்து மூளை சுறுசுறுப்பாகிறது. இது ஒரு நல்ல பயிற்சி. தினமும் தூங்குவதற்கு முன்பு சில நிமிடங்கள் ஆடினால் மனது லேசாகிவிடும்.

    * கம்ப்யூட்டரில் மணிக்கணக்கில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைந்துப் போன இன்றைய பெண்கள் இந்த ஊஞ்சல் பயிற்சியை தினமும் செய்தால் முதுகுத்தண்டு வடம் பலம் பெற்று கழுத்துவலி குணமடைய வழி செய்கிறது. குடும்பத்தினரோடு சேர்ந்து ஆடினால் உறவுகள் பலப்படும்.

    * தோட்டத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஊஞ்சலில் ஆடுவது அதிக பலனை தரக் கூடியது. மரம் செடிகளிலிருந்து வரும் பிராணவாயு வேகமாக உடல் முழுவதும் பரவி ரத்தத்தை சுத்திகரிக்கும். இதயத்திற்கு சுத்தமான பிராண வாயுவை கொடுத்து இதயத்தை சீராக இயங்கச் செய்யும். தினமும் தோட்டத்தில் ஊஞ்சல் ஆடுவர்களுக்கு இதயநோய் கட்டுப்படும்.

    * ஊஞ்சல் ஆடுவதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்திற்கு ரத்தம் சீராக செல்லும். அதனால் இதயம் பலப்படும். இப்போது இளைஞர்கள்கூட இதய நோயால் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு ஊஞ்சல் ஆட்டம் நல்லது.

    * சாப்பிட்டவுடன் அரைமணிநேரம் மிதமான வேகத்தில் ஊஞ்சல் ஆடுவது நல்லது. சாப்பிட்ட உணவு நன்கு செரிக்க இந்த ஆட்டம் உதவும். கோபமாக இருக்கும் போது ஊஞ்சல் ஆடினால் கோபம் தணியும். வெளியில் சுற்றியலைந்துவிட்டு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து கண்களை மூடி தலையை சற்றே மேலே உயர்த்தி, இரு கைகளையும் ஊஞ்சல் பலகையில் பதியவைத்து ரிலாக்ஸாக ஆடினால் களைப்பெல்லாம் பறந்து, உடலின் ஒவ்வொரு பகுதியும் ஓய்வு பெற்று நிம்மதி ஏற்படும்.

    * இல்லத்திற்கு அழகு சேர்க்கும் கலைப்பொருட்களில் ஊஞ்சலும் ஒன்று. இதை ஒரு தெய்வீக ஆசனம் என்று கருதி மதிப்பு கொடுப்பதைவிட, ஆடி மகிழ்வதே ஊஞ்சலுக்கு செய்யும் சிறப்பாகும்.
    Next Story
    ×