என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
நீரிழிவை கட்டுப்படுத்தும் குடைமிளகாய் ஸ்டப்ஃடு சப்பாத்தி
Byமாலை மலர்6 Feb 2021 5:17 AM GMT (Updated: 6 Feb 2021 5:17 AM GMT)
குடைமிளகாய் வாதம் தொடர்புடைய நோய்கள், வயிற்றுப்புண், மலச்சிக்கல் போன்றவைகளுக்கு எதிராக செயல்படுகிறது. இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தி, நீரிழிவையும் கட்டுப்படுத்துகிறது.
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1 கப்
தக்காளி - 2
குடைமிளகாய் - 1
பெ.வெங்காயம் - 3
மிளகாய்த்தூள் - சிறிதளவு
இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு
கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
சோயா சாஸ், தக்காளி சாஸ் - சிறிதளவு
கொத்தமல்லித்தழை, எண்ணெய் - சிறிதளவு
தண்ணீர், உப்பு - தேவைக்கு
செய்முறை :
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கோதுமை மாவுடன் உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் குடைமிளகாய், வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது, உப்பு ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும். பின்னர் சோயா சாஸ், தக்காளி சாஸ், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் ஆகியவற்றை கொட்டி வதக்கி வைக்கவும்.
பிறகு சப்பாத்திகளாக தேய்த்து நடுவில் குடைமிளகாய் மசாலாவை வைத்து மூடி மீண்டும் சப்பாத்திகளாக தேய்த்து வைத்து கொள்ளவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் இந்த சப்பாத்தியை போட்டு சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
கோதுமை மாவு - 1 கப்
தக்காளி - 2
குடைமிளகாய் - 1
பெ.வெங்காயம் - 3
மிளகாய்த்தூள் - சிறிதளவு
இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு
கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
சோயா சாஸ், தக்காளி சாஸ் - சிறிதளவு
கொத்தமல்லித்தழை, எண்ணெய் - சிறிதளவு
தண்ணீர், உப்பு - தேவைக்கு
செய்முறை :
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கோதுமை மாவுடன் உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் குடைமிளகாய், வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது, உப்பு ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும். பின்னர் சோயா சாஸ், தக்காளி சாஸ், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் ஆகியவற்றை கொட்டி வதக்கி வைக்கவும்.
பிறகு சப்பாத்திகளாக தேய்த்து நடுவில் குடைமிளகாய் மசாலாவை வைத்து மூடி மீண்டும் சப்பாத்திகளாக தேய்த்து வைத்து கொள்ளவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் இந்த சப்பாத்தியை போட்டு சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
சத்தான குடைமிளகாய் ஸ்டப்ஃடு சப்பாத்தி ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X