என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
‘ஓம் காகத்வஜாய வித்மஹே
கட்கஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்தஹ் ப்ரசோதயாத்’
பொருள்:
காகக் கொடியை உடையவரும், கையில் கமண்டலத்தை கொண்டவரும், மெதுவாக நகரும் தன்மை கொண்டவருமான சனி பகவானை நினைத்து தியானம் செய்வதன் பலனாக அவர் நம்மை காத்து ரட்சிப்பார்.
இந்த மந்திரத்தை சனிக்கிழமைகளில் 108 முறை ஜெபிப்பதன் பலனாக மேலே கூறிய பலன்கள் அனைத்தையும் பெறலாம்.
அது போல எல்லோருடைய வீட்டிலும் இருக்ககூடிய பல்லியில் சில சாஸ்திரங்கள் உள்ளன. பல்லி என்பது நவகிரகங்களில் கேதுவை குறிக்கிறது. கேது என்பது ஸ்வரபானு என்கிற அசுரனின் உடலாகும். பல்லி கத்துவது முதல், அது நம் உடலில் எங்கே விழுகிறது என்பது வரை அதன் சில செயல்கள் பல முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. பல்லி நமது உடலில் விழுந்தால் ஏற்படும் தோஷங்களுக்கு என்னென்ன பரிகாரங்கள் உள்ளன என்பன பற்றி பார்க்கலாம் வாங்க...
உடலின் எந்த பாகத்தின் மீது பல்லி விழுந்தாலும் உடனே குளித்து விடுங்கள். குளித்த பின்னர் அருகில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்யுங்கள் அல்லது வீட்டிலேயே விளக்கேற்றி சுவாமியை வழிபட்டு பல்லி விழுந்ததால் எந்த கெட்ட செயலும் நடந்துவிடக் கூடாது என வேண்டிக் கொள்ளுங்கள்.
இல்லையெனில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட பல்லியின் சிலையை தொட்டு வணங்கினால் பல்லி விழுந்த தோஷங்கள் நீங்கி விடும் என்பது ஐதீகம்.
இந்த விழாவின் முன்னேற்பாடாக சப்பர முகூர்த்த விழா கடந்த பிப்ரவரி மாதம் 7-ந் தேதி மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவிலில் நடந்தது. இதை தொடர்ந்து சித்திரை பெருந்திருவிழாவின் முன்னோட்ட நிகழ்ச்சியாக நேற்று காலை 10.25 மணிக்கு தல்லாகுளம் பிரசன்ன வெங் கடாசலபதி பெருமாள் கோவிலின் சன்னதி முன்பாக கொட்டகை முகூர்த்த விழா நடைபெற்றது.
இதில் கோவில் மண்டப வளாகத்தில் யாழி திருமுகத்திற்கு முன்பாக நாணல் புல், மாவிலை, பூ மாலைகள், சந்தனம், தாம்பூலம், தேங்காய், பழங்கள், வைத்து, நூபுர கங்கை தீர்த்தத்தால், அபிஷேகம் பட்டர்களின் வேத மந்திரங்கள், மேள தாளம் முழங்க நடந்தது.
பின்னர் மங்கள இசையுடன், வர்ணம் பூசப்பட்ட முகூர்த்த கால்கள், மாவிலை, மாலைகளுடன் இணைக்கப்பட்டு கோவில் உள்பிரகாரம், மற்றும் வெளிப்புறம் உள்ள ராஜ கோபுரம் முன்பாகவும் முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து மண்டபங்கள் பந்தல் அமைக்கும் பணிகள் தொடங்கியது. வருகிற 14-ந் தேதி (வியாழக்கிழமை) கள்ளழகர் பெருமாள் தங்கப்பல்லக்கில் மதுரைக்கு புறப்படு கிறார்.
தொடர்ந்து 15-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கள்ளழகர் எதிர் சேவை மதுரை மூன்று மாவடியில் நடைபெறுகிறது. 16-ந் தேதி (சனிக்கிழமை) அதிகாலை 5.50 மணிக்குமேல் 6.20 மணிக்குள் கள்ளழகர் பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார். பின்னர் ராமராயர் மண்டபத் திலும், அன்றிரவு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலிலும் சுவாமி எழுந்தருள்கிறார்.
17-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலையில் சேஷ வாகனத்தில் காட்சி தருகிறார். அதன் பின்னர் கருட வாகனத்தில் எழுந் தருளி தேனூர் மண்டபத்தில் மாலை 3 மணிக்கு மண்டூக மகரிஷி முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வும், நடைபெறும். அன்றிரவு திவான் ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்ச்சி நடைபெறுகிறது.
18-ந் தேதி (திங்கட்கிழமை) காலையில் மோகனவதாரத்தில் கள்ளழகர் எழுந்தருள்கிறார். 19-ந் தேதி (செவ்வாய் கிழமை) இரவு பூப்பல்லக்கில் எழுந்தருளல், 20-ந் தேதி (புதன்கிழமை) காலையில் பிரியாவிடை பெற்று கள்ளழகர் பல்லக்கு பரிவாரங்களுடன் அப்பன் திருப்பதி வழியாக கள்ளழகர் கோவிலுக்கு செல்கிறார்.
பின்னர் அன்று பகல் 1.30 மணிக்குள் அழகர் மலைக்கு கள்ளர் திருக்கோலத்தில் வந்து சேருதல். இத்துடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம் கோவில் துணை ஆணையர், அனிதா மற்றும் கோவில் கண்காணிப்பாளர்கள் உள்துறை அலுவ லர்கள், திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
முன்னதாக கடந்த 2 வருடமாக கொரோனா தொற்று காரணமாக சித்திரை திருவிழா, அழகர்கோவிலுக்கு உள்ளேயே அரசு வழிகாட்டுதல்படி நடந்தது. 2 வருடத்திற்கு பிறகு கள்ளழகர் இந்த வருடம் சித்திரை மாத திருவிழாவிற்கு மதுரைக்கு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
விழாவின் 8-ம் நாளான நேற்று கலி வேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை, உகப்படிப்பு, மதியம் 12 மணிக்கு உச்சிப்படிப்பு தொடர்ந்து பால் தர்மம் ஆகியவை நடைபெற்றது.
இரவு 7 மணிக்கு அய்யா பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் மேளதாளம் முழங்க எழுந்தருளி கலி வேட்டைக்கு புறப்பட்டார். ஒற்றையால் விளை, மாதவபுரம் சென்று முட்டப்பதிக்கு ஊர்வலமாக வந்து பதியின் வடக்கு வாசலில் கலி வேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு 11 மணிக்கு அன்னதர்மம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வருகிற 4-ந் தேதி மதியம் 12 மணிக்கு அய்யா திருத்தேரில் எழுந்தருளி வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை முட்டப்பதி தர்மகர்த்தாக்கள் மனோகரச்செல்வன் மற்றும் கைலாஷ் மனோகரச்செல்வன் ஆகியோர் செய்துள்ளனர்.
இந்த நிலையில் கடலூர் மாவட்டம் குண்டுசாலை குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்த பொன் கபில்தேவ் (வயது 42) என்ற பக்தரின் கனவில் முருகப்பெருமான் தோன்றி, போகர் சித்தர் உருவப்படம் வைத்து பூஜை செய்யுமாறு கூறியதாக அவர் கோவிலில் வந்து கூறினார். அதன்படி சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் நேற்று முதல் போகர் சித்தர் உருவப்படம் வைத்து பூஜை செய்யப்படுகிறது. இதற்கு முன்னதாக ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கடந்த மார்ச் - 21-ந் தேதி முதல் இலவம் பஞ்சு, பருத்தி பஞ்சு, சோளி ஆகிய பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்டது.
சென்னை, ஏப். 2-
முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று புனித ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதாகும். இந்த மாதம் முழுவதும் நோன்பை கடை பிடிப்பார்கள்.
இஸ்லாமிய காலண்டரில் 9-வது மாதம் ரமலான் ஆகும். இந்த புனித மாதத்தில் தான் மக்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய திருக்குர்ஆன் அருளப்பட்டது.
ஆண்டுதோறும் ரமலான் பிறை தொடங்கிய நாளில் இருந்து நோன்பு கடைப் பிடிக்கப்படும். ரமலான் மாத இறுதியில் பண்டிகை கொண்டாடப்படும்.
இந்த ஆண்டுக்கான ரமலான் நோன்பு நாளை தொடங்குகிறது.
இன்று மாலை பிறை பார்த்த பிறகு இது குறித்து அறிவிக்கப்படும். வளைகுடா நாடுகளில் ரமலான் நோன்பு இன்று தொடங்கியது.
நோன்பு என்பது கிழக்கு வெளுத்ததில் இருந்து சூரியன் மறையும் வரை உண்ணுதல், பருகுதல் உள்பட நோன்பை முடிக்கும் காரியங்களை விட்டு ஒருவர் தன்னை தடுத்து கொள்வதாகும்.
அதாவது அதிகாலை 4 மணி அளவில் இருந்து மாலை 6.30 மணி வரை உண்ணாமலும், பருகாமலும் இருப்பார்கள்.
புனித ரமலான் மாதத்தையொட்டி இரவில் சிறப்பு தொழுகையில் ஈடுபடுவார்கள். இந்த மாதம் முழுவதும் சிறப்பு தொழுகையில் ஈடுபடுவார் கள்.
இந்த புனித மாதத்தில் முஸ்லிம்கள் தர்மம் எனும் ஜகாத்தில் ஈடுபடுவார்கள். மேலும் திருக்குர் ஆன் ஓதுதல், பிரார்த்தனை செய்தல் உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகளில் ஈடுபடுவார்கள். 29 அல்லது 30 நாட்கள் நோன்பு முடிவில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். * * *
12 நாள் நடைபெறும் இந்த பெருவிழா வருகிற 5-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்க இருக்கிறது. வருகிற 12-ந்தேதி மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், 13-ந்தேதி திக்கு விஜயம் நடைபெறுகிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ந்தேதியன்று மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.
அன்றைய தினம் காலை 10.35 மணிக்கு மேல் 10.59 மணிக்குள் திருக்கல்யாண நிகழ்வுகள் மேற்கு, தெற்கு ஆடி வீதி சந்திப்பில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறும். மறுநாள் தேரோட்டம் நடக்கிறது.
இந்தநிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் சார்பில், திருக்கல்யாணம் கட்டண சீட்டு குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை காண வரும் பக்தர்களின் வசதிக்காக ரூ.200, ரூ.500 கட்டண சீட்டுகளும், தெற்கு கோபுரம் வழியாக பக்தர்கள் கட்டணமில்லா தரிசன முறையில் முதலில் வருபவர்களுக்கு முதலில் அனுமதி என்ற அடிப்படையில் கொள்ளளவிற்கேற்ப பக்தர்களை திருக்கல்யாண உற்சவத்தை தரிசிக்க அனுமதிக்கப்பட உள்ளனர்..
எனவே கோவில் இணையதளத்தில் (www.maduraimeenakshi.org) வருகிற 4-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை கட்டணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
திருக்கல்யாணம் 14-ந்தேதி காலை 10.35 மணி முதல் 10.59 மணிக்குள் நடைபெறும் என்பதால், திருக்கல்யாண நுழைவுக் கட்டணச்சீட்டு பெற்றவர்கள் அன்று காலை 9 மணி வரை மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். 500 ரூபாய் கட்டணச்சீட்டு பெற்றவர்கள் கோவில் வடக்கு முனீஸ்வரர் சன்னதி ஒட்டிய வழியிலும், 200 ரூபாய் கட்டணச்சீட்டு பெற்றவர்கள் வடக்கு ராஜகோபுரம் வழியாக அனுமதிக்கப்படுவார்கள். எனவே திருக்கல்யாண கட்டணச்சீட்டு முன்பதிவு செய்தவர்கள் அவர்களுக்கு ஓதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் காலை 9 மணிக்குள் அமர்ந்து திருக்கல்யாணத்தை கண்டு தரிசிக்கலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாம்....வெட்டவெளியில் நிற்கும் சனி பகவான்- மகாராஷ்டிரா
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தெலுங்கு வருட பிறப்பையொட்டி இன்று அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.
கொடிமரம் மூலவர், உற்சவருக்கு புதிய வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டது அதன்பிறகு பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. கோவில் முழுவதும் வண்ண மலர்கள், பழவகைகள் கொண்டு அலங்காரம் செய்திருந்தனர்.
இதேபோல் கோவில் கோபுர விமானங்கள் மதில் சுவர்கள் முழுவதும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தன. ஏழுமலையான் கோவிலில் இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
உள்ளூர் மற்றும் வெளியூர் வெளி மாநில பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக ஏராளமான வாகனங்களில் வந்தனர்.
இதனால் அலிபிரி சோதனை சாவடியில் வாகனங்கள் நீண்ட தூரம் காத்திருந்தன. இதேபோல் தரிசனத்திற்காக வந்தவர்கள் அங்குள்ள குடோன்களில் தங்க வைக்கப்பட்டு தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
தரிசனத்திற்காக நீண்ட நேரம் பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். அவர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் உணவு மற்றும் பால் வழங்கப்பட்டது.
யுகாதி ஆஸ்த்தானத்தால் கோவிலில் இன்று காலை கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் ரத்து செய்யப்பட்டது.
நேற்று ஏழுமலையான் கோவிலில் 56,958 பேர் தரிசனம் செய்தனர். 26,029 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.35 கோடி உண்டியலில் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
ஆந்திர மாநிலம் 2 ஆக பிரிக்கப்பட்ட பின்பு பத்ராசலம் தெலுங்கானா மாநிலத்துக்கு சென்று விட்டது.
இதனால் கடப்பா மாவட்டம், ஒண்டிமிட்டாவில் உள்ள கோதண்டராமர் கோவில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தன் வசம் எடுத்துக் கொண்டது. ரூ.63 கோடி செலவில் சீரமைத்து, அங்கு நித்திய பூஜைகள், உள்ளிட்டவற்றை செய்து வருகிறது.
வருகிற ஏப்ரல் மாதம் ஸ்ரீ ராம நவமி உற்சவத்தை முன்னிட்டு கோதண்டராமர் கோவிலில் ஆண்டுதோறும் தேவஸ்தானம் வருடாந்திர பிரம்மோற்சவத்தை நடத்தி வருகிறது. தற்போது கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. பிரம்மோற்சவத்தில் வருகிற 15-ந் தேதி சீதாராமர் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.
கொரோனா காலகட்டத்துக்குப் பிறகு திருக்கல்யாணம் நடைபெறுவதால் தேவஸ்தானம் 15 லட்சம் பக்தர்கள் முன்னிலையில் அதை நடத்த முடிவு செய்துள்ளது.
அதற்கான ஏற்பாடுகள் கோவிலில் நடந்து வருகிறது. திருக்கல்யாணத்துக்கு ஆந்திர அரசு சார்பில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்க உள்ளார்.
மேலும் தாளபாக்கத்தில் உள்ள 108 அடி உயரமுள்ள அன்னமாச்சாரியார் திரு உருவத்தின் கீழ் ஏழுமலையான் கோவில் கட்டவும் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
உகாதி ஆஸ்தானத்தால் கோவிலில் இன்று கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் ரத்து செய்யப்படுகிறது, என கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில் அம்மனுக்கு அபிஷேகங்கள் நடைபெற்ற போதிலும், படையல் வைத்து வழிபடுவது என்பது கிடையாது. தொடர்ந்து வருகிற 10-ந்தேதி வரைக்கும் அம்மன் விரதம் இருக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அன்றைய தினம், அம்மனுக்கு மகா அபிஷேகம் நடைபெற்று, பூச்சொரிதல் விழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
கடந்த 19-ந்தேதி இரவு 10 மணிக்கு பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன் மற்றும் காரை வாய்க்கால் (நடு) மாரியம்மன் கோவில்களில் கம்பம் நடப்பட்டது.
இந்த கம்பத்துக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் புனிதநீர் ஊற்றி வழிபட்டு வருகின்றனர். அதன்படி நேற்றும் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கம்பத்துக்கு புனிதநீர் மற்றும் பால் ஊற்றி அம்மனை வழிபட்டனர். மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் அலகு குத்தியும், அக்னிசட்டி, பால்குடம் எடுத்தும் கோவிலுக்கு ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
கடந்த 23-ந்தேதி இரவு 10.30 மணிக்கு கிராமசாந்தியும், 24-ந்தேதி மாலை 5 மணிக்கு கோவிலில் கொடியேற்றமும் நடந்தது. 29-ந்தேதி அதிகாலை 5.30 மணிக்கு காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் குண்டம் விழாவும், இரவு 8 மணிக்கு மாவிளக்கு பூஜையும் நடைபெற்றது. 30-ந்தேதி காலை 9.30 மணிக்கு பொங்கல் விழாவும், மாலை 4 மணிக்கு சின்ன மாரியம்மன் கோவிலில் தேரோட்டமும் நடைபெற்றது.
நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு பெரிய மாரியம்மன் மலர் பல்லக்கிலும், நேற்று இரவு 8 மணிக்கு காரை வாய்க்கால் மாரியம்மன், இரவு 9 மணிக்கு சின்ன மாரியம்மன் மலர் பல்லக்கிலும் வீதி உலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் பிடுங்குதல் மற்றும் மஞ்சள் நீராட்டு விழா இன்று (சனிக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு நடக்கிறது.
முதலில் பெரிய மாரியம்மன் கோவில் கம்பம் பிடுங்கப்பட்டு பன்னீர் செல்வம் பூங்கா வழியாக மணிக்கூண்டு சென்றடையும். அதேநேரத்தில் சின்ன மாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோவில்களின் கம்பங்களும் பிடுங்கப்பட்டு, மணிக்கூண்டுக்கு வரும்.
இதைத்தொடர்ந்து 3 கம்பங்களும் அங்கிருந்து புறப்பட்டு ஊர்வலமாக ஈஸ்வரன் கோவில் வீதி, காமராஜ் வீதி, பிரப் ரோடு, அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா, மேட்டூர் ரோடு, சுவஸ்திக் கார்னர், சத்தி ரோடு, எல்லை மாரியம்மன் கோவில், நேதாஜி ரோடு, மணிக்கூண்டு, மண்டபம் வீதி, டவுன் போலீஸ் நிலையம், அக்ரஹார வீதி வழியாக காரைவாய்க்கால் சென்றடையும். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ஒருவர் மீது ஒருவர் மஞ்சள் பூசி மகிழ்வார்கள். இதன் காரணமாக ஈரோடு மஞ்சள் மாநகராக காட்சி அளிக்கும். நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.






