என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கோவில்கள்
X
வெட்டவெளியில் நிற்கும் சனி பகவான்- மகாராஷ்டிரா
Byமாலை மலர்2 April 2022 1:31 AM GMT (Updated: 2 April 2022 7:42 AM GMT)
கடந்த 300 ஆண்டுகளுக்கும் மேலாக வெட்ட வெளியில்தான், இத்தல சனி பகவான் அருள்பாலித்து வருகிறார். சனிபகவானை வழிபட இக்கோவிலுக்கு ஒவ்வொரு நாளும் சராசரியாக 40 ஆயிரம் பக்தர்கள் வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், அகமது நகர் மாவட்டம், நய்வாசா வட்டத்தில் அமைந்துள்ள சிறு நகரம்தான் ‘சனி சிங்கனாப்பூர்.’ இந்தப் பகுதியில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் பெய்த பெருமழை காரணமாக, பனாஸ்னாலா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தில் கனமான பலகை போன்ற ஒரு கல் மிதந்து வந்து, சிங்கனாப்பூரில் கரை ஒதுங்கியது.
அது என்ன மாதிரியான பொருள் என்று அறியாத அந்தப் பகுதி மக்கள், அதை ஒரு குச்சியால் குத்தியபோது, அதில் இருந்து ரத்தம் வழிந்ததைக் கண்டு அச்சமும், வியப்பும் அடைந்தனர். அன்று இரவு ஊர்த் தலைவரின் கனவில் காட்சி கொடுத்த சனி பகவான், அந்த ஊரில் குடியிருக்கப் போவதாகவும், வெள்ளத்தில் மிதந்து வந்த கல்லை, அங்கே வைத்து வழிபடும்படியும் கூறினார். மேலும் தன்னை வெட்ட வெளியில் வைக்கும்படியும், கட்டிடத்திற்குள் வைத்து அடைக்க வேண்டாம் என்றும் கூறியதாக தல வரலாறு சொல்கிறது.
இதனால் கடந்த 300 ஆண்டுகளுக்கும் மேலாக வெட்ட வெளியில்தான், இத்தல சனி பகவான் அருள்பாலித்து வருகிறார். இங்குள்ள சிவன் மற்றும் அனுமன் சிலைகளுக்கு முன்பு, சனி பகவான், ஐந்தரை அடி உயரத்தில் சுயம்பு வடிவில் கருங்கல் ரூபமாக அருள்பாலிக்கிறார். இவருக்கு மேற்கூரையோ, சுற்றுச்சுவரோ கிடையாது. சனிபகவானை வழிபட இக்கோவிலுக்கு ஒவ்வொரு நாளும் சராசரியாக 40 ஆயிரம் பக்தர்கள் வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது. அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் மூன்று லட்சம் பக்தர்கள் வரை இக்கோவிலில் வழிபாட்டுக்காக கூடுவார்களாம். சனிக்கிழமையில் வரும் அமாவாசை நாளில், சனி பகவானுக்கு விசேஷமாக நல்லெண்ணெய், பூ மற்றும் கறுப்பு உளுந்து படைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
அமைவிடம்
சீரடி நகரில் இருந்து 60 கிலோமீட்டர் தூரத்திலும், அகமது நகரில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவிலும், அவுரங்காபாத்தில் இருந்து 84 கிலோமீட்டர் தூரத்திலும், பூனாவில் இருந்து 160 கிலோமீட்டர் தொலைவிலும், மும்பை நகரில் இருந்து 265 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது, சனி சிங்கனாப்பூர். அவுரங்காபாத் விமான நிலையம் 90 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது.
அது என்ன மாதிரியான பொருள் என்று அறியாத அந்தப் பகுதி மக்கள், அதை ஒரு குச்சியால் குத்தியபோது, அதில் இருந்து ரத்தம் வழிந்ததைக் கண்டு அச்சமும், வியப்பும் அடைந்தனர். அன்று இரவு ஊர்த் தலைவரின் கனவில் காட்சி கொடுத்த சனி பகவான், அந்த ஊரில் குடியிருக்கப் போவதாகவும், வெள்ளத்தில் மிதந்து வந்த கல்லை, அங்கே வைத்து வழிபடும்படியும் கூறினார். மேலும் தன்னை வெட்ட வெளியில் வைக்கும்படியும், கட்டிடத்திற்குள் வைத்து அடைக்க வேண்டாம் என்றும் கூறியதாக தல வரலாறு சொல்கிறது.
இதனால் கடந்த 300 ஆண்டுகளுக்கும் மேலாக வெட்ட வெளியில்தான், இத்தல சனி பகவான் அருள்பாலித்து வருகிறார். இங்குள்ள சிவன் மற்றும் அனுமன் சிலைகளுக்கு முன்பு, சனி பகவான், ஐந்தரை அடி உயரத்தில் சுயம்பு வடிவில் கருங்கல் ரூபமாக அருள்பாலிக்கிறார். இவருக்கு மேற்கூரையோ, சுற்றுச்சுவரோ கிடையாது. சனிபகவானை வழிபட இக்கோவிலுக்கு ஒவ்வொரு நாளும் சராசரியாக 40 ஆயிரம் பக்தர்கள் வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது. அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் மூன்று லட்சம் பக்தர்கள் வரை இக்கோவிலில் வழிபாட்டுக்காக கூடுவார்களாம். சனிக்கிழமையில் வரும் அமாவாசை நாளில், சனி பகவானுக்கு விசேஷமாக நல்லெண்ணெய், பூ மற்றும் கறுப்பு உளுந்து படைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
அமைவிடம்
சீரடி நகரில் இருந்து 60 கிலோமீட்டர் தூரத்திலும், அகமது நகரில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவிலும், அவுரங்காபாத்தில் இருந்து 84 கிலோமீட்டர் தூரத்திலும், பூனாவில் இருந்து 160 கிலோமீட்டர் தொலைவிலும், மும்பை நகரில் இருந்து 265 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது, சனி சிங்கனாப்பூர். அவுரங்காபாத் விமான நிலையம் 90 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X