என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே 6 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ண தீர்த்தத்தில் 28-ந்தேதி பவுர்ணமி அன்று பூச நட்சத்திரத்தில் முக்கோட்டி உற்சவம் நடக்கிறது.
திருமலை :
திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே 6 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ண தீர்த்தத்தில் 28-ந்தேதி பவுர்ணமி அன்று பூச நட்சத்திரத்தில் முக்கோட்டி உற்சவம் நடக்கிறது.
அதில் பக்தர்கள் பங்கேற்கலாம் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே 6 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ண தீர்த்தத்தில் 28-ந்தேதி பவுர்ணமி அன்று பூச நட்சத்திரத்தில் முக்கோட்டி உற்சவம் நடக்கிறது.
அதில் பக்தர்கள் பங்கேற்கலாம் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இந்திய மண்ணில் இந்த நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ஒரு அற்புத கலைப்படைப்பாக இந்த ‘அக்ஷர்தாம் கோவில்’ கம்பீரமாக வீற்றிருக்கிறது.
இந்திய மண்ணில் இந்த நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ஒரு அற்புத கலைப்படைப்பாக இந்த ‘அக்ஷர்தாம் கோவில்’ கம்பீரமாக வீற்றிருக்கிறது. என்னதான் நாம் நவீன உபகரணங்களையும் தொழில் நுட்ப உத்திகளையும் பயன்படுத்தி வானுயர்ந்த கட்டிடங்களை நகர்ப்பகுதிகளில் உருவாக்கியுள்ளபோதிலும் நம் முன்னோர்களின் ரசனைக்கும் கட்டிடக்கலை நுணுக்கங்களுக்கும் இணையாக ஒரு கட்டுமானப்படைப்பை - மனித அறிவும் ஜனநாயகமும் ஆக்கிரமிக்க தொடங்கிவிட்ட கடந்த அரை நூற்றாண்டுக்காலத்தில் - உருவாக்கவேயில்லை என்பதுதான் உண்மை.
அந்த உண்மைக்கான நிகழ்காலத்தின் பதிலாகத்தான் இந்த ‘அக்ஷர்தாம் கோவில்’ உருவாகியிருக்கிறது என்றால் மிகையில்லை. வெகு தூரம் கடந்து போய்விட்ட இந்திய மண்ணின் மஹோன்னத கோவிற்கலை பாரம்பரியத்தை நினைவூட்டுவதுபோல், இந்த பிரம்மாண்ட ஆலய வளாகம் இந்தியாவின் தலைநகரில் எழுப்பப்பட்டிருக்கிறது. இது அரசாங்க அதிகாரத்துக்கு அப்பாற்பட்டு செயல்படுத்தப்பட்ட ஒரு சாதனை என்பதும் வியப்பூட்டும் மற்றொரு அதிசயமாகும்.
இந்திய மண்ணின் பாரம்பரிய கோவிற்கலை மரபையும் ஆன்மீக முக்கியத்துவத்தையும் பிரதிபலிக்கும் இந்த மஹோன்னத கோவில் வளாகத்தை உருவாக்குவதற்கு 5 வருடங்கள் பிடித்துள்ளன. ‘போச்சனஸ்வாமி ஷீ அக்ஷர் புருஷோத்தம் ஸ்வாமிநாராயண் சன்ஸ்தா’ எனும் ஆன்மீக மடத்தின் குருவான ‘பிரமுக் ஸ்வாமி மஹராஜ்’ என்பவரது நோக்கம் மற்றும் வழிகாட்டலில் இந்த கோவில் உருவாகியிருக்கிறது. 3000 தன்னார்வ கரசேவகர்களையும் உள்ளடக்கிய 11000 கலைஞர்களின் கூட்டு உழைப்பில் இந்த ‘அக்ஷர்தாம் கோவில் வளாகம்’ உருவாக்கப்பட்டுள்ளது.
2005ம் ஆண்டு நவம்பர் 6ம் நாள் இக்கோவில் திறக்கப்பட்டிருக்கிறது. வாஸ்து சாஸ்திரம் மற்றும் பஞ்சரத்ர சாஸ்திரம் போன்ற பாரம்பரிய இந்திய கட்டிடக்கலை தத்துவ மரபுகளை பின்பற்றி இந்த கோவில் வடிவமைப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தின் ஒட்டுமொத்த வளாகமும் 5 முக்கியமான தொகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது.
வளாகத்தின் நடுவே இதன் பிரதான அமைப்பு வீற்றிருக்கிறது. 141 அடி உயரத்தில் காட்சியளிக்கும் இந்த கோவில் வளாகமானது அலங்கார நுணுக்கங்கள் கொண்ட 234 தூண்கள், 9 அலங்கார மாடகோபுரங்கள், 20 நாற்கர விமானக்கூரைகள், ஒரு பிரம்மாண்ட கஜேந்திர பீடம் மற்றும் தெய்வங்கள், ரிஷிகள், பக்தர்கள், யோகிகள் ஆகியோரை குறிக்கும் 20000 சிற்பங்கள் மற்றும் சிலைகள் போன்றவற்றை தன்னுள் கொண்டுள்ளது. இளஞ்சிவப்பு மணற்பாறைகள் மற்றும் வெள்ளை சலவைக்கல் இரண்டையும் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ள இந்த கோவிலில் உலோகக்கட்டமைப்புகளோ கான்கிரீட் கலவையோ பயன்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முழுக்க முழுக்க நம் முன்னோர்களின் படைப்பைப்போன்றே உருவாக்க வேண்டும் எனும் நோக்கத்தில் நமது சம கால கலைஞர்கள் ஜெயித்தார்களா என்பது பற்றி நீங்கள் நேரில் இந்த கோவிலைப்பார்த்தபின் ஒரு முடிவுக்கு வரலாம். கோவில் வளாகத்தில் உள்ள ‘சஹஜாநாத் பிரதர்ஷன்’ எனும் கூடத்தில் இயந்திரபொம்மைகள், தத்ரூப காட்சி மாதிரிகள் போன்றவற்றை பயன்படுத்தி ஸ்வாமிநாராயணனின் வரலாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
உலகசமாதானம், ஒற்றுமை, கருணை, தொண்டு போன்ற மானுட அம்சங்களை வலியுறுத்துவதுடன் ஒப்பற்ற மஹாசக்தியை (கடவுள்) முன்னிலைப்படுத்துவதாகவும் இந்த சித்தரிப்புகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த கோவில் வளாகத்தில் ‘நீலகண்ட கல்யாண யாத்ரா’ எனும் விசேஷமான ஆவணப்படம் ஒரு பிரம்மாண்ட திரையில் (85’ X 65’) பக்தர்களுக்காக திரையிடப்படுகிறது. இமாலயம் தொடங்கி கேரளக்கடற்கரை வரை இந்தியாவிலுள்ள முக்கிய ஆன்மீக புனித்தலங்கள், சடங்குகள் மற்றும் மரபுகள், கலாச்சாரம், திருவிழாக்கள் போன்றவற்றை படம் பிடித்து தொகுத்து இந்த சிறப்பான ஆவணப்படம் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
விரிவான உள்ளடக்கத்துடன் இதே படத்தின் சர்வதேச திரைவடிவமும் ‘மிஸ்டிக் இந்தியா’ என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அக்ஷர்தாம் கோவிலில் படகுச்சவாரி எனும் புதுமையான அனுபவத்திற்கான ஒரு உன்னத வளாகம் ஒன்றும் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதி அற்புதமான கற்பனையில் உதித்த ஒரு படைப்பாக்கம் என்றே இந்த வளாகத்தை சொல்லலாம். இந்த வளாக அமைப்பில் பார்வையாளர்கள் படகில் நகர்ந்தபடியே நிஜக்காட்சியை பார்ப்பது போன்று தத்ரூபமான காட்சித்தோற்ற அமைப்புகளை கரைப்பகுதியில் பார்த்து ரசிக்கலாம்.
இந்திய மரபின் சில அடிப்படையான அம்சங்கள், வாழ்க்கைக்காட்சிகள் போன்றவற்றை சித்தரிக்கும் நுணுக்கமான (இன்ஸ்டலேஷன் பாணி) காட்சி அமைப்புகள் இங்கு வரிசையாக அமைக்கப்பட்டுள்ளன. இவை பார்வையாளர்களை நிஜமாகவே இன்னொரு யுகத்துக்குள் கால இயந்திரம் போன்று இழுத்துச்செல்கின்றன. குருகுலக்கல்வி, யோகக்கலை போன்றவை இந்திய பாரம்பரிய கல்வி முறையின் அங்கமாக இடம் பெற்றிருந்ததை விளக்கும் தத்ரூப காட்சிகள் நம் முன்னே வெளிச்சத்துடன் உயிர் பெறுவது பரவசமூட்டும் அனுபவமாகும்.
பார்வையாளர்கள் இருட்டிலும், காட்சிகள் நுணுக்கமாக வெளிச்சப்படுத்தப்பட்டும் இருக்குமாறு அற்புதமான தொழில்நுட்பத்துடன் இந்த படகுச்சவாரி வளாகம் உருவாக்கப்பட்டுள்ளது. படகுச்சவாரி என்பதற்கு பதிலாக ‘கால இயந்திர சவாரி’ என்றே இந்த அனுபவத்தை சொல்லலாம் என்பதை நேரில் புரிந்து கொள்வீர்கள். அக்ஷர்தாம் வளாகத்தின் யக்ஞபுருஷ் குண்டம் மற்றும் அதிலுள்ள இசைநீரூற்று மற்றொரு சிறப்பம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது. வேதகால யாக குண்டம் மற்றும் நவீன இசை நீரூற்று அமைப்பு இரண்டையும் கலந்து இந்த அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.
புராதன கால படிக்கிணறு போன்று பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த குண்டம் அல்லது கிணறு உலகிலேயே மிகப்பெரிய படிக்கிணறாக உருவாக்கப்பட்டிருக்கிறது. மாலை நேரங்களில் இந்த குண்டத்தின் இசை நீரூற்று இயக்குவிக்கப்படுகிறது. வண்ண விளக்குளால் ஜொலிக்கும் இந்த அதிஉயர நீரூற்றுகள் மாயாஜாலம் போன்று பார்வையாளர்களை திகைக்க வைத்துவிடுகின்றன. மேலும், எட்டு இதழ்களுடன் கூடிய தாமரை மலர் போன்ற வடிவமைப்பு இந்த படிக்கிணறின் மையத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
அக்கால இந்திய கணிதத்தத்துவங்களில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்த ‘எண்கோண’ தத்துவப்படி இந்த தாமரை மலர் அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அக்ஷர்தாம் கோவில் வளாகத்தின் மற்றொரு அம்சமாக இதன் உள்ளே ‘பாரத் உபாவன்’ அல்லது ‘பாரத தோட்டம்’ எனும் அமைப்பும் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதனுள்ளே குழந்தைகள், பெண்கள், சுதந்திரப்போராட்ட வீரர்கள், முக்கிய தலைவர்கள் மற்றும் இந்திய பிரபல்யங்களின் சிலைகள் காணப்படுகின்றன.
இவை தவிர அக்ஷர்தாம் கோவிலில் யோகி ஹிருதய் கமால், நீலகண்ட அபிஷேக், நாராயண் சரோவர், பிரேம்வதி அஹர்கிருஹ் மற்றும் ஆர்ஷ் சென்டர் போன்ற இதர முக்கிய அம்சங்களும் உள்ளன. தலைநகருக்கு விஜயம் செய்யும் இந்தியப்பயணிகள் அனைவரும் மறக்காமல் தரிசிக்கவேண்டிய அற்புத ஸ்தலம் இந்த அக்ஷர்தாம் கோவிலாகும்.
அந்த உண்மைக்கான நிகழ்காலத்தின் பதிலாகத்தான் இந்த ‘அக்ஷர்தாம் கோவில்’ உருவாகியிருக்கிறது என்றால் மிகையில்லை. வெகு தூரம் கடந்து போய்விட்ட இந்திய மண்ணின் மஹோன்னத கோவிற்கலை பாரம்பரியத்தை நினைவூட்டுவதுபோல், இந்த பிரம்மாண்ட ஆலய வளாகம் இந்தியாவின் தலைநகரில் எழுப்பப்பட்டிருக்கிறது. இது அரசாங்க அதிகாரத்துக்கு அப்பாற்பட்டு செயல்படுத்தப்பட்ட ஒரு சாதனை என்பதும் வியப்பூட்டும் மற்றொரு அதிசயமாகும்.
இந்திய மண்ணின் பாரம்பரிய கோவிற்கலை மரபையும் ஆன்மீக முக்கியத்துவத்தையும் பிரதிபலிக்கும் இந்த மஹோன்னத கோவில் வளாகத்தை உருவாக்குவதற்கு 5 வருடங்கள் பிடித்துள்ளன. ‘போச்சனஸ்வாமி ஷீ அக்ஷர் புருஷோத்தம் ஸ்வாமிநாராயண் சன்ஸ்தா’ எனும் ஆன்மீக மடத்தின் குருவான ‘பிரமுக் ஸ்வாமி மஹராஜ்’ என்பவரது நோக்கம் மற்றும் வழிகாட்டலில் இந்த கோவில் உருவாகியிருக்கிறது. 3000 தன்னார்வ கரசேவகர்களையும் உள்ளடக்கிய 11000 கலைஞர்களின் கூட்டு உழைப்பில் இந்த ‘அக்ஷர்தாம் கோவில் வளாகம்’ உருவாக்கப்பட்டுள்ளது.
2005ம் ஆண்டு நவம்பர் 6ம் நாள் இக்கோவில் திறக்கப்பட்டிருக்கிறது. வாஸ்து சாஸ்திரம் மற்றும் பஞ்சரத்ர சாஸ்திரம் போன்ற பாரம்பரிய இந்திய கட்டிடக்கலை தத்துவ மரபுகளை பின்பற்றி இந்த கோவில் வடிவமைப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தின் ஒட்டுமொத்த வளாகமும் 5 முக்கியமான தொகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது.
வளாகத்தின் நடுவே இதன் பிரதான அமைப்பு வீற்றிருக்கிறது. 141 அடி உயரத்தில் காட்சியளிக்கும் இந்த கோவில் வளாகமானது அலங்கார நுணுக்கங்கள் கொண்ட 234 தூண்கள், 9 அலங்கார மாடகோபுரங்கள், 20 நாற்கர விமானக்கூரைகள், ஒரு பிரம்மாண்ட கஜேந்திர பீடம் மற்றும் தெய்வங்கள், ரிஷிகள், பக்தர்கள், யோகிகள் ஆகியோரை குறிக்கும் 20000 சிற்பங்கள் மற்றும் சிலைகள் போன்றவற்றை தன்னுள் கொண்டுள்ளது. இளஞ்சிவப்பு மணற்பாறைகள் மற்றும் வெள்ளை சலவைக்கல் இரண்டையும் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ள இந்த கோவிலில் உலோகக்கட்டமைப்புகளோ கான்கிரீட் கலவையோ பயன்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முழுக்க முழுக்க நம் முன்னோர்களின் படைப்பைப்போன்றே உருவாக்க வேண்டும் எனும் நோக்கத்தில் நமது சம கால கலைஞர்கள் ஜெயித்தார்களா என்பது பற்றி நீங்கள் நேரில் இந்த கோவிலைப்பார்த்தபின் ஒரு முடிவுக்கு வரலாம். கோவில் வளாகத்தில் உள்ள ‘சஹஜாநாத் பிரதர்ஷன்’ எனும் கூடத்தில் இயந்திரபொம்மைகள், தத்ரூப காட்சி மாதிரிகள் போன்றவற்றை பயன்படுத்தி ஸ்வாமிநாராயணனின் வரலாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
உலகசமாதானம், ஒற்றுமை, கருணை, தொண்டு போன்ற மானுட அம்சங்களை வலியுறுத்துவதுடன் ஒப்பற்ற மஹாசக்தியை (கடவுள்) முன்னிலைப்படுத்துவதாகவும் இந்த சித்தரிப்புகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த கோவில் வளாகத்தில் ‘நீலகண்ட கல்யாண யாத்ரா’ எனும் விசேஷமான ஆவணப்படம் ஒரு பிரம்மாண்ட திரையில் (85’ X 65’) பக்தர்களுக்காக திரையிடப்படுகிறது. இமாலயம் தொடங்கி கேரளக்கடற்கரை வரை இந்தியாவிலுள்ள முக்கிய ஆன்மீக புனித்தலங்கள், சடங்குகள் மற்றும் மரபுகள், கலாச்சாரம், திருவிழாக்கள் போன்றவற்றை படம் பிடித்து தொகுத்து இந்த சிறப்பான ஆவணப்படம் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
விரிவான உள்ளடக்கத்துடன் இதே படத்தின் சர்வதேச திரைவடிவமும் ‘மிஸ்டிக் இந்தியா’ என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அக்ஷர்தாம் கோவிலில் படகுச்சவாரி எனும் புதுமையான அனுபவத்திற்கான ஒரு உன்னத வளாகம் ஒன்றும் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதி அற்புதமான கற்பனையில் உதித்த ஒரு படைப்பாக்கம் என்றே இந்த வளாகத்தை சொல்லலாம். இந்த வளாக அமைப்பில் பார்வையாளர்கள் படகில் நகர்ந்தபடியே நிஜக்காட்சியை பார்ப்பது போன்று தத்ரூபமான காட்சித்தோற்ற அமைப்புகளை கரைப்பகுதியில் பார்த்து ரசிக்கலாம்.
இந்திய மரபின் சில அடிப்படையான அம்சங்கள், வாழ்க்கைக்காட்சிகள் போன்றவற்றை சித்தரிக்கும் நுணுக்கமான (இன்ஸ்டலேஷன் பாணி) காட்சி அமைப்புகள் இங்கு வரிசையாக அமைக்கப்பட்டுள்ளன. இவை பார்வையாளர்களை நிஜமாகவே இன்னொரு யுகத்துக்குள் கால இயந்திரம் போன்று இழுத்துச்செல்கின்றன. குருகுலக்கல்வி, யோகக்கலை போன்றவை இந்திய பாரம்பரிய கல்வி முறையின் அங்கமாக இடம் பெற்றிருந்ததை விளக்கும் தத்ரூப காட்சிகள் நம் முன்னே வெளிச்சத்துடன் உயிர் பெறுவது பரவசமூட்டும் அனுபவமாகும்.
பார்வையாளர்கள் இருட்டிலும், காட்சிகள் நுணுக்கமாக வெளிச்சப்படுத்தப்பட்டும் இருக்குமாறு அற்புதமான தொழில்நுட்பத்துடன் இந்த படகுச்சவாரி வளாகம் உருவாக்கப்பட்டுள்ளது. படகுச்சவாரி என்பதற்கு பதிலாக ‘கால இயந்திர சவாரி’ என்றே இந்த அனுபவத்தை சொல்லலாம் என்பதை நேரில் புரிந்து கொள்வீர்கள். அக்ஷர்தாம் வளாகத்தின் யக்ஞபுருஷ் குண்டம் மற்றும் அதிலுள்ள இசைநீரூற்று மற்றொரு சிறப்பம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது. வேதகால யாக குண்டம் மற்றும் நவீன இசை நீரூற்று அமைப்பு இரண்டையும் கலந்து இந்த அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.
புராதன கால படிக்கிணறு போன்று பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த குண்டம் அல்லது கிணறு உலகிலேயே மிகப்பெரிய படிக்கிணறாக உருவாக்கப்பட்டிருக்கிறது. மாலை நேரங்களில் இந்த குண்டத்தின் இசை நீரூற்று இயக்குவிக்கப்படுகிறது. வண்ண விளக்குளால் ஜொலிக்கும் இந்த அதிஉயர நீரூற்றுகள் மாயாஜாலம் போன்று பார்வையாளர்களை திகைக்க வைத்துவிடுகின்றன. மேலும், எட்டு இதழ்களுடன் கூடிய தாமரை மலர் போன்ற வடிவமைப்பு இந்த படிக்கிணறின் மையத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
அக்கால இந்திய கணிதத்தத்துவங்களில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்த ‘எண்கோண’ தத்துவப்படி இந்த தாமரை மலர் அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அக்ஷர்தாம் கோவில் வளாகத்தின் மற்றொரு அம்சமாக இதன் உள்ளே ‘பாரத் உபாவன்’ அல்லது ‘பாரத தோட்டம்’ எனும் அமைப்பும் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதனுள்ளே குழந்தைகள், பெண்கள், சுதந்திரப்போராட்ட வீரர்கள், முக்கிய தலைவர்கள் மற்றும் இந்திய பிரபல்யங்களின் சிலைகள் காணப்படுகின்றன.
இவை தவிர அக்ஷர்தாம் கோவிலில் யோகி ஹிருதய் கமால், நீலகண்ட அபிஷேக், நாராயண் சரோவர், பிரேம்வதி அஹர்கிருஹ் மற்றும் ஆர்ஷ் சென்டர் போன்ற இதர முக்கிய அம்சங்களும் உள்ளன. தலைநகருக்கு விஜயம் செய்யும் இந்தியப்பயணிகள் அனைவரும் மறக்காமல் தரிசிக்கவேண்டிய அற்புத ஸ்தலம் இந்த அக்ஷர்தாம் கோவிலாகும்.
புதுக்கடை முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 25-ந் தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது.
புதுக்கடை, வடக்கு தெருவில் அரசமூடு ஈஸ்வர பூதத்தான் கோவில், வீரமார்த்தாண்டன் பிள்ளையார் கோவில், ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 25-ந் தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது.
இன்று காலை 6.30 மணிக்கு கணபதி ஹோமம், தீபாராதனை, 7.30 மணிக்கு நவக்கிரக பூஜை, 8 மணிக்கு கஜ பூஜை, 9 மணிக்கு முன்சிறை திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து புனித நீர் ஊர்வலமாக எடுத்து வருதல், 10 மணிக்கு ஜலாதிவாசம், மதியம் 12 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு சுமங்கலி பூஜை போன்றவை நடக்கிறது.
நாளை (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு சுதர்சனஹோமம், மதியம் 12 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு முதல்கால யாகசாலை வேள்வி பூஜை, இரவு 10 மணிக்கு சைனாதி வாசம் ஆகியவையும்,
24-ந் தேதி காலை 7 மணிக்கு கோ பூஜை, யாகசாலை பூஜை, இரவு 7 மணிக்கு 3-ம் கால யாகசாலை பூஜை, தீபாராதனை, இரவு 9 மணிக்கு பிரசாதம் வழங்குதல் போன்றவையும் நடக்கிறது.
விழாவின் இறுதி நாளான 25-ந் தேதி காலை 6 மணிக்கு ஈஸ்வர பூதத்தான் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம், 8.30 மணிக்கு யாகசாலையில் இருந்து கடம் புறப்படுதல், 9 மணிக்கு முத்தாரம்மன் மூலஸ்தானம், பரிவாரமூர்த்திகள் விமானம் கும்பாபிஷேகம், 9.45 மணிக்கு மூலஸ்தானம் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம், 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, இரவு 7.15 மணிக்கு சுவாமி, அம்பாள் வீதி வலம் வருதல் போன்றவை நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை திருப்பணி குழு தலைவர் சச்சுதானந்தன், துணை தலைவர் மது.மோகன், செயலாளர் ராமநாதன், இணை செயலாளர் வி.சுப்பிரமணியன், பொருளாளர் குமார், இணை பொருளாளர் அருண் பிரசாத், ஆலோசகர் கோலப்பன், கோவில் கட்டுமான பொறியாளரும், ஆலோசகருமான எச்.சரவணசுப்பையா மற்றும் உறுப்பினர்கள் செய்துள்ளனர்.
இன்று காலை 6.30 மணிக்கு கணபதி ஹோமம், தீபாராதனை, 7.30 மணிக்கு நவக்கிரக பூஜை, 8 மணிக்கு கஜ பூஜை, 9 மணிக்கு முன்சிறை திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து புனித நீர் ஊர்வலமாக எடுத்து வருதல், 10 மணிக்கு ஜலாதிவாசம், மதியம் 12 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு சுமங்கலி பூஜை போன்றவை நடக்கிறது.
நாளை (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு சுதர்சனஹோமம், மதியம் 12 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு முதல்கால யாகசாலை வேள்வி பூஜை, இரவு 10 மணிக்கு சைனாதி வாசம் ஆகியவையும்,
24-ந் தேதி காலை 7 மணிக்கு கோ பூஜை, யாகசாலை பூஜை, இரவு 7 மணிக்கு 3-ம் கால யாகசாலை பூஜை, தீபாராதனை, இரவு 9 மணிக்கு பிரசாதம் வழங்குதல் போன்றவையும் நடக்கிறது.
விழாவின் இறுதி நாளான 25-ந் தேதி காலை 6 மணிக்கு ஈஸ்வர பூதத்தான் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம், 8.30 மணிக்கு யாகசாலையில் இருந்து கடம் புறப்படுதல், 9 மணிக்கு முத்தாரம்மன் மூலஸ்தானம், பரிவாரமூர்த்திகள் விமானம் கும்பாபிஷேகம், 9.45 மணிக்கு மூலஸ்தானம் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம், 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, இரவு 7.15 மணிக்கு சுவாமி, அம்பாள் வீதி வலம் வருதல் போன்றவை நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை திருப்பணி குழு தலைவர் சச்சுதானந்தன், துணை தலைவர் மது.மோகன், செயலாளர் ராமநாதன், இணை செயலாளர் வி.சுப்பிரமணியன், பொருளாளர் குமார், இணை பொருளாளர் அருண் பிரசாத், ஆலோசகர் கோலப்பன், கோவில் கட்டுமான பொறியாளரும், ஆலோசகருமான எச்.சரவணசுப்பையா மற்றும் உறுப்பினர்கள் செய்துள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 28-ந்தேதி தை மாத பவுர்ணமியையொட்டி கருடசேவை நடக்கிறது. நான்கு மாடவீதிகளில் உற்சவர் மலையப்பசாமி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
திருமலை :
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 28-ந்தேதி தை மாத பவுர்ணமியையொட்டி கருடசேவை நடக்கிறது.
அன்று இரவு 7 மணியில் இருந்து 8.30 மணி வரை கோவிலின் நான்கு மாடவீதிகளில் உற்சவர் மலையப்பசாமி தங்க, வைர நகைகள் அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 28-ந்தேதி தை மாத பவுர்ணமியையொட்டி கருடசேவை நடக்கிறது.
அன்று இரவு 7 மணியில் இருந்து 8.30 மணி வரை கோவிலின் நான்கு மாடவீதிகளில் உற்சவர் மலையப்பசாமி தங்க, வைர நகைகள் அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், துர்க்கைக்கு எலுமிச்சை தீபம் ஏற்றி துர்க்கை காயத்ரியை 11 முறை அல்லது 24 முறை அல்லது 54 முறை ஜெபித்து வேண்டிக்கொள்ளலாம்.
துக்கங்களையெல்லாம் போக்கி அருளும் துர்கையின் காயத்ரியைச் சொல்லி வழிபட்டு வந்தால், நம் துக்கத்தையெல்லாம் நீக்கியருளுவாள். கஷ்டங்களையெல்லாம் போக்கித் தருவாள்.
செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், துர்கைக்கு எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபடுவதும் ராகுகாலத்தில் தீபமேற்றி வழிபடுவதும் எண்ணற்ற பலன்களை வழங்கவல்லது. அதேசமயம், தினமும் துர்கை காயத்ரியை 11 முறை அல்லது 24 முறை அல்லது 54 முறை ஜபித்து வேண்டிக்கொள்ளலாம். காலையும் மாலையும் சொல்லி வணங்கி வழிபடலாம்.
ஓம் காத்யாயனய வித்மஹே
கன்யாகுமாரி தீமஹி
தந்நோ துர்கி ப்ரசோதயாத்
அதாவது, காத்யாயயன மகரிஷியின் மகளாக அவதரித்தவளே. நித்திய குமரியாக திகழ்பவளே. உன்னை வணங்கித் தொழுவதால், என்னுடைய மனதை தெளிவுபடுத்துவாயாக. குழப்பமில்லாத மனதையும் அறிவையும் மேம்படுத்துவாயாக. நற்பலன்களை வாரி வழங்கும் உன்னுடைய பாதங்களைப் பணிகிறேன் என்று அர்த்தம்.
இந்த துர்கை காயத்ரியை தினமும் சொல்லுங்கள். முடிந்தால் 108 முறை ஜபித்து வேண்டிக்கொள்ளுங்கள். வேண்டியதையெல்லாம் தந்தருளுவாள் துர்காதேவி.
செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், துர்கைக்கு எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபடுவதும் ராகுகாலத்தில் தீபமேற்றி வழிபடுவதும் எண்ணற்ற பலன்களை வழங்கவல்லது. அதேசமயம், தினமும் துர்கை காயத்ரியை 11 முறை அல்லது 24 முறை அல்லது 54 முறை ஜபித்து வேண்டிக்கொள்ளலாம். காலையும் மாலையும் சொல்லி வணங்கி வழிபடலாம்.
ஓம் காத்யாயனய வித்மஹே
கன்யாகுமாரி தீமஹி
தந்நோ துர்கி ப்ரசோதயாத்
அதாவது, காத்யாயயன மகரிஷியின் மகளாக அவதரித்தவளே. நித்திய குமரியாக திகழ்பவளே. உன்னை வணங்கித் தொழுவதால், என்னுடைய மனதை தெளிவுபடுத்துவாயாக. குழப்பமில்லாத மனதையும் அறிவையும் மேம்படுத்துவாயாக. நற்பலன்களை வாரி வழங்கும் உன்னுடைய பாதங்களைப் பணிகிறேன் என்று அர்த்தம்.
இந்த துர்கை காயத்ரியை தினமும் சொல்லுங்கள். முடிந்தால் 108 முறை ஜபித்து வேண்டிக்கொள்ளுங்கள். வேண்டியதையெல்லாம் தந்தருளுவாள் துர்காதேவி.
மண்டைக்காடு அருகே நடுவூர்கரை சிவசக்தி கோவில் 14-வது வருஷாபிஷேக விழா நடைபெற்றது. இதனைதொடர்ந்து வருஷாபிஷேக கலச பூஜைகளும், அன்னதானம் வழங்கப்பட்டன.
மண்டைக்காடு அருகே நடுவூர்கரை சிவசக்தி கோவில் 14-வது வருஷாபிஷேக விழா நடைபெற்றது. அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மாலய பூஜை, அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதனைதொடர்ந்து வருஷாபிஷேக கலச பூஜைகளும், மதியம் அன்னதானம் வழங்கப்பட்டன.
மாலை பஜனை, திருவிளக்கு பூஜை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. முன்னதாக நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு கோவில் நிர்வாகிகள் பரிசுகளை வழங்குகிறார்கள்.
மாலை பஜனை, திருவிளக்கு பூஜை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. முன்னதாக நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு கோவில் நிர்வாகிகள் பரிசுகளை வழங்குகிறார்கள்.
தமிழ்கடவுள் முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
பழனி :
தமிழ்கடவுள் முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி முருகன்கோவில் தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த ஆன்மிக தலங்களில் ஒன்றாக உள்ளது. இங்கு தைப்பூசம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, கந்தசஷ்டி உள்ளிட்ட திருவிழாக்கள் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்த திருவிழா காலங்களில் தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வருகை புரிந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம்.
கடந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தலால் பழனி முருகன் கோவிலில் முக்கிய திருவிழாக்கள் நடைபெறவில்லை. மாறாக ஆகமவிதிப்படி பூஜைகள் மட்டும் நடைபெற்றன. இந்நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் காலை 7 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது. தொடர்ந்து முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானையுடன் வீதியுலா வரும் நிகழ்ச்சி தினமும் நடைபெறுகிறது.
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தி பக்தர்கள் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்தும், அவர்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்படி தரிசனத்துக்கு ஆன்லைனில் முன்பதிவு, முககவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்டவற்றை பக்தர்கள் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. புனித நீராடும் சண்முகநதி, இடும்பன்குளம் ஆகியவற்றில் பக்தர்கள் ஆழமான பகுதிக்கு செல்வதை தடுக்க தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளதோடு அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன.
தைப்பூச திருவிழாவையொட்டி பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும் கடந்த சில நாட்களாக தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிக்கு வருகின்றனர். குறிப்பாக காரைக்குடி, திருச்சி, மதுரை, ராமநாதபுரம், தேனி ஆகிய பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் மாலை அணிந்து கோவிலை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். ஒரு சில பக்தர்கள் அலகு குத்தியும், மயில்காவடி, பால்காவடி, தீர்த்தக்காவடி உள்ளிட்டவற்றை எடுத்தும் வருகின்றனர்.
பாதயாத்திரை பக்தர்களின் நலனுக்காக உணவருந்தி விட்டு ஓய்வெடுக்க இலவச தங்குமிடங்கள், மருத்துவ முகாம்கள், வெளிச்சத்துக்காக பாதையோரம் மின்விளக்குகள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இரவு நேரத்தில் விபத்தை தடுக்க பக்தர்களுக்கு போலீஸ் துறை சார்பில் ஒளிரும் பட்டைகள் வழங்கப்படுகின்றன. தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவுக்கு ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோவிலில் முன்பதிவு சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு ஆதார் அட்டை மூலம் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
தைப்பூச திருவிழாவில் கலந்துகொள்ள பழனிக்கு பாதயாத்திரையாக வரும், பக்தர்கள் களைப்பு தெரியாமல் இருக்க கோலாட்டம், ஒயிலாட்டம் ஆடிக் கொண்டும், வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா... வீரவேல் முருகனுக்கு அரோகரா... என்ற சரண கோஷம் எழுப்பியபடியும் வருகின்றனர். இதனால் காலை, மாலை வேளைகளில் அடிவாரம், கிரிவீதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது. பக்தர்கள் சாமி தரிசனத்தை முடித்து விட்டு ஊருக்கு திரும்பும்போது பஞ்சாமிர்தம், இனிப்புகள் மற்றும் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர்.தைப்பூசத்தையொட்டி பழனியில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
தமிழ்கடவுள் முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி முருகன்கோவில் தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த ஆன்மிக தலங்களில் ஒன்றாக உள்ளது. இங்கு தைப்பூசம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, கந்தசஷ்டி உள்ளிட்ட திருவிழாக்கள் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்த திருவிழா காலங்களில் தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வருகை புரிந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம்.
கடந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தலால் பழனி முருகன் கோவிலில் முக்கிய திருவிழாக்கள் நடைபெறவில்லை. மாறாக ஆகமவிதிப்படி பூஜைகள் மட்டும் நடைபெற்றன. இந்நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் காலை 7 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது. தொடர்ந்து முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானையுடன் வீதியுலா வரும் நிகழ்ச்சி தினமும் நடைபெறுகிறது.
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தி பக்தர்கள் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்தும், அவர்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்படி தரிசனத்துக்கு ஆன்லைனில் முன்பதிவு, முககவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்டவற்றை பக்தர்கள் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. புனித நீராடும் சண்முகநதி, இடும்பன்குளம் ஆகியவற்றில் பக்தர்கள் ஆழமான பகுதிக்கு செல்வதை தடுக்க தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளதோடு அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன.
தைப்பூச திருவிழாவையொட்டி பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும் கடந்த சில நாட்களாக தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிக்கு வருகின்றனர். குறிப்பாக காரைக்குடி, திருச்சி, மதுரை, ராமநாதபுரம், தேனி ஆகிய பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் மாலை அணிந்து கோவிலை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். ஒரு சில பக்தர்கள் அலகு குத்தியும், மயில்காவடி, பால்காவடி, தீர்த்தக்காவடி உள்ளிட்டவற்றை எடுத்தும் வருகின்றனர்.
பாதயாத்திரை பக்தர்களின் நலனுக்காக உணவருந்தி விட்டு ஓய்வெடுக்க இலவச தங்குமிடங்கள், மருத்துவ முகாம்கள், வெளிச்சத்துக்காக பாதையோரம் மின்விளக்குகள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இரவு நேரத்தில் விபத்தை தடுக்க பக்தர்களுக்கு போலீஸ் துறை சார்பில் ஒளிரும் பட்டைகள் வழங்கப்படுகின்றன. தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவுக்கு ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோவிலில் முன்பதிவு சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு ஆதார் அட்டை மூலம் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
தைப்பூச திருவிழாவில் கலந்துகொள்ள பழனிக்கு பாதயாத்திரையாக வரும், பக்தர்கள் களைப்பு தெரியாமல் இருக்க கோலாட்டம், ஒயிலாட்டம் ஆடிக் கொண்டும், வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா... வீரவேல் முருகனுக்கு அரோகரா... என்ற சரண கோஷம் எழுப்பியபடியும் வருகின்றனர். இதனால் காலை, மாலை வேளைகளில் அடிவாரம், கிரிவீதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது. பக்தர்கள் சாமி தரிசனத்தை முடித்து விட்டு ஊருக்கு திரும்பும்போது பஞ்சாமிர்தம், இனிப்புகள் மற்றும் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர்.தைப்பூசத்தையொட்டி பழனியில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
தை மாதத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விரதம் இருந்து காளிகாம்பாளை தரிசனம் செய்யுங்கள். நம் குடும்பத்தையும் சந்ததியையும் செழிக்கச் செய்து அருளுவாள் தேவி.
நமக்கு என்ன தேவை என்பதை நாம் கேட்காமலே உணர்ந்து நமக்கு வழங்குபவர்கள்தான் நம் அம்மாக்கள். காளிகாம்பாளும் அப்படித்தான். உலகத்துக்கே அன்னையாகத் திகழ்பவள்தானே பராசக்தி. காளிகாம்பாளிடம் நாம் ஒருமுறையேனும் நின்று அவளை தரிசித்தாலே போதும்.. நாம் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களையெல்லாம் போக்கி, நம்மை அருளிக் காப்பாள் காளிகாம்பாள்.
செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் காளிகாம்பாளைத் தரிசிக்க எங்கிருந்தெல்லாமோ வருவார்கள் பக்தர்கள். அதிலும் தை மாதம் வந்துவிட்டால், செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை என்றில்லாமல் எல்லா நாளும் காளிகாம்பாளைத் தரிசனம் செய்ய வந்துவிடுவார்கள். தை மாத வெள்ளிக்கிழமையில், காளிகாம்பாளை தரிசிப்போம்.
தை முதல் வெள்ளியில், விரதம் இருந்து அன்னை காளிகாம்பாளை கண்குளிரத் தரிசிப்போம். நம் கவலைகளையெல்லாம் போக்கி அருளுவாள் அம்பாள். கஷ்டங்களையெல்லாம் நீக்கி வாழச் செய்வாள் அம்பிகை.
தொடர்ந்து தை மாதத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விரதம் இருந்து காளிகாம்பாளை தரிசனம் செய்யுங்கள். நம் குடும்பத்தையும் சந்ததியையும் செழிக்கச் செய்து அருளுவாள் தேவி.
செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் காளிகாம்பாளைத் தரிசிக்க எங்கிருந்தெல்லாமோ வருவார்கள் பக்தர்கள். அதிலும் தை மாதம் வந்துவிட்டால், செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை என்றில்லாமல் எல்லா நாளும் காளிகாம்பாளைத் தரிசனம் செய்ய வந்துவிடுவார்கள். தை மாத வெள்ளிக்கிழமையில், காளிகாம்பாளை தரிசிப்போம்.
தை முதல் வெள்ளியில், விரதம் இருந்து அன்னை காளிகாம்பாளை கண்குளிரத் தரிசிப்போம். நம் கவலைகளையெல்லாம் போக்கி அருளுவாள் அம்பாள். கஷ்டங்களையெல்லாம் நீக்கி வாழச் செய்வாள் அம்பிகை.
தொடர்ந்து தை மாதத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விரதம் இருந்து காளிகாம்பாளை தரிசனம் செய்யுங்கள். நம் குடும்பத்தையும் சந்ததியையும் செழிக்கச் செய்து அருளுவாள் தேவி.
திண்ணன் என்ற இயற்பெயர் இருந்தாலும், கண்ணப்பர் என்ற பெயர்தான் அவரின் அடையாளமாக மாறிப் போனது. இது குறித்து அறிந்து கொள்ளலாம்.
திண்ணன் என்ற இயற்பெயர் இருந்தாலும், கண்ணப்பர் என்ற பெயர்தான் அவரின் அடையாளமாக மாறிப் போனது. ஏனெனில் அகிலத்தையே காத்து அருளும் சிவபெருமானுக்கே, தன்னுடைய கண்ணை தானமாகக் கொடுத்தவர் இவர். கண்களை தானமாகக் கொடுத்ததாலேயே, ‘கண்ணப்பர்’ என்ற பெயரைப் பெற்றார். ஈசனின் மீது கொண் டிருந்த ஒப்பற்ற அன்பின் வாயிலாக நாயனார் பதவியையும் பெற்றவர்.
வேடர் குலத்தைச் சேர்ந்தவர் நாகனார். திருக் காளத்தி எனப்படும் மலைப் பகுதியைச் சேர்ந்த வேடர்களின் தலைவராக இருந்தார். இவரது மகன்தான் திண்ணன். வாலிப வயதை எட்டிய திண்ணன் வேட்டையாடுவதில் வல்லவராக இருந்தார். ஒருநாள் திருக்காளத்தி மலைக்கு வேட்டையாடுவதற்காகச் சென்ற திண்ணன், மலையின் ஒரு பகுதியில் சிவலிங்கம் ஒன்று இருப்பதைக் கண்டார். அதைக் கண்டதும் திண்ணனுக்கு அன்பு மிகுந்தது. பக்தியோடு அந்த சிவலிங்கத்தை ஆரத்தழுவி இன்புற்றார்.
பின்னர் லிங்க உருவில் இருந்த ஈசனுக்கு உணவு படைக்க வேண்டும் என்ற எண்ணம் திண்ணனுக்கு ஏற்பட்டது. உடனடியாக தான் வேட்டையாடி வைத்திருந்த பன்றியை, தீயில் வாட்டி அதன் இறைச்சியை கையில் எடுத்துக் கொண்டார். கையில் இறைச்சி இருந்ததால், இறைவனை நீராட்டுவதற்கான நீரை வாயில் பருகி வைத்துக் கொண்டார். அர்ச்சிப்பதற்காக பூவை தன் தலையில் வைத்துக் கொண்டு சிவலிங்கம் இருந்த இடத்திற்குச் சென்றார்.
சிவலிங்கத்தின் மேல் இருந்த சருகுகளை எல்லாம் தன்னுடைய காலால் தள்ளி அகற்றினார். பின்னர் வாயில் இருந்த நீரைக்கொண்டு சிவலிங்கத்தை நீராட்டினார். தலையில் இருந்த பூக்களை லிங்கத்தின் தலையில் சூட்டி, இறைச்சியை நைவேத்தியமாக படைத்தார். மாலை மறைந்து இருள் சூழ்ந்ததும், கொடிய விலங்குகள் வரும் என நினைத்து வில்லுடன் நின்று காவல் காத்தார்.
மறுநாள் பொழுது புலர்ந்ததும், மீண்டும் இறைவனுக்கு அமுது படைக்க வேண்டும் என்பதற்காக, இறைச்சியைத் தேடி காட்டிற்குள் சென்றார். அந்த நேரம் பார்த்து தினமும் காளத்திநாதருக்கு பூஜை செய்யும் அர்ச்சகர் அங்கு வந்தார். சிவலிங்கத்தின் முன்பாக இறைச்சித் துண்டுகளும், எலும்பும் கிடைப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மன வருத்தத்துடன் தான் கொண்டு வந்திருந்த நீரைக் கொண்டு சிவலிங்கத்தை சுற்றிலும் சுத்தம் செய்தார். இறைவனுக்கு அபிஷேகம் செய்து மலர் மாலை சூட்டி விட்டு அங்கிருந்து புறப்பட்டார்.
காட்டுக்குள் சென்ற திண்ணன் அங்கு விலங்குகளை வேட்டையாடி, அதன் இறைச்சியை சமைத்து அதில் தேனை பிழிந்து எடுத்துக் கொண்டு வந்து, இறைவனுக்கு படைத்து பூஜை செய்தார். மறுநாள் காலை வந்தபோதும் இறைச்சிகள் இருப்பதைக் கண்டு அர்ச்சகர் மனம் நொந்து போனார். பின்னர் சுத்தம் செய்து பூஜித்தவர், இறைச்சியை இறைவனுக்கு படைத்து தீயச் செயலைச் செய்தவர்கள் கழுவேற்றப்பட வேண்டும் என்று வேண்டினார்.
அன்றைய தினம் இரவு அர்ச்சகர் கனவில் தோன்றினார், சிவபெருமான். “நாளை என் இருப்பிடம் வரும் நீ, அங்கு மறைவாக இருந்து கவனி. என்னை ஒருவன் எவ்வளவு பக்தியோடு வழிபடுகிறான் என்பதை நீ அறிவாய்” என்றார்.
அதன்படி அர்ச்சகர் அங்கு வந்து மறைந்திருந்தார். திண்ணன் வழக்கம்போல் காட்டுக்குள் சென்று வேட்டையாடிய ஊனமுது சகிதம் வந்து இறைவனுக்கு படைத்து வழிபட்டார். அப்போது திண்ணனின் பக்தியை உலகம் அறியச் செய்ய நினைத்த சிவபெருமான், லிங்கத்தின் வலது கண் பகுதியில் இருந்து ரத்தத்தை கசிய விட்டார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த திண்ணன், ரத்தத்தை துணியால் துடைத்தும் அது வழிந்துகொண்டே இருந்தது. சிவபெருமானைக் கட்டிப் பிடித்துக் கொண்டு கதறி அழுதார். காட்டிற்குள் ஓடிச் சென்று பச்சிலை பறித்து வந்து, அதன் சாறு பிழிந்து கண்களில் ஊற்றினார். எதுவும் பலன் தரவில்லை.
‘ஊனுக்கு ஊன் மருந்து’ என்ற மருத்துவ முறையை கையாள நினைத்தார், திண்ணன். அதன்படி தன்னுடைய வலது கண்ணை அம்பு கொண்டு பறித்து சிவலிங்கத்திற்கு வைத்தார். உடனடியாக ரத்தம் வழிவது நின்றது. திண்ணன் நிம்மதி அடைவதற்குள் இடது கண்ணில் இருந்தும் ரத்தம் கசிந்தது. சற்றும் யோசிக்காத திண்ணன், தன்னுடைய வலது கால் பெருவிரலை லிங்கத்தின் இடது கண் பகுதியில் அடையாளமாக வைத்துக் கொண்டு, தன்னுடைய மற்றொரு கண்ணையும் அம்பு கொண்டு பறிக்க முயன்றார்.
அப்போது “கண்ணப்ப நிற்க” என்று இறைவன் அசரீரியாக குரல் கொடுத்தார். பின்னர் அவரை தன் கருணையால் ஆட்கொண்டார். இதையெல்லாம் மறைந்திருந்து பார்த்த அர்ச்சகர் நெஞ்சம் நெகிழ்ந்தார். இறைவனே “கண்ணப்ப” என்று அழைத்ததால், ‘கண்ணப்பர்’ என்ற பெயரே திண்ணனுக்கு நிலைத்துப் போனது.
வேடர் குலத்தைச் சேர்ந்தவர் நாகனார். திருக் காளத்தி எனப்படும் மலைப் பகுதியைச் சேர்ந்த வேடர்களின் தலைவராக இருந்தார். இவரது மகன்தான் திண்ணன். வாலிப வயதை எட்டிய திண்ணன் வேட்டையாடுவதில் வல்லவராக இருந்தார். ஒருநாள் திருக்காளத்தி மலைக்கு வேட்டையாடுவதற்காகச் சென்ற திண்ணன், மலையின் ஒரு பகுதியில் சிவலிங்கம் ஒன்று இருப்பதைக் கண்டார். அதைக் கண்டதும் திண்ணனுக்கு அன்பு மிகுந்தது. பக்தியோடு அந்த சிவலிங்கத்தை ஆரத்தழுவி இன்புற்றார்.
பின்னர் லிங்க உருவில் இருந்த ஈசனுக்கு உணவு படைக்க வேண்டும் என்ற எண்ணம் திண்ணனுக்கு ஏற்பட்டது. உடனடியாக தான் வேட்டையாடி வைத்திருந்த பன்றியை, தீயில் வாட்டி அதன் இறைச்சியை கையில் எடுத்துக் கொண்டார். கையில் இறைச்சி இருந்ததால், இறைவனை நீராட்டுவதற்கான நீரை வாயில் பருகி வைத்துக் கொண்டார். அர்ச்சிப்பதற்காக பூவை தன் தலையில் வைத்துக் கொண்டு சிவலிங்கம் இருந்த இடத்திற்குச் சென்றார்.
சிவலிங்கத்தின் மேல் இருந்த சருகுகளை எல்லாம் தன்னுடைய காலால் தள்ளி அகற்றினார். பின்னர் வாயில் இருந்த நீரைக்கொண்டு சிவலிங்கத்தை நீராட்டினார். தலையில் இருந்த பூக்களை லிங்கத்தின் தலையில் சூட்டி, இறைச்சியை நைவேத்தியமாக படைத்தார். மாலை மறைந்து இருள் சூழ்ந்ததும், கொடிய விலங்குகள் வரும் என நினைத்து வில்லுடன் நின்று காவல் காத்தார்.
மறுநாள் பொழுது புலர்ந்ததும், மீண்டும் இறைவனுக்கு அமுது படைக்க வேண்டும் என்பதற்காக, இறைச்சியைத் தேடி காட்டிற்குள் சென்றார். அந்த நேரம் பார்த்து தினமும் காளத்திநாதருக்கு பூஜை செய்யும் அர்ச்சகர் அங்கு வந்தார். சிவலிங்கத்தின் முன்பாக இறைச்சித் துண்டுகளும், எலும்பும் கிடைப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மன வருத்தத்துடன் தான் கொண்டு வந்திருந்த நீரைக் கொண்டு சிவலிங்கத்தை சுற்றிலும் சுத்தம் செய்தார். இறைவனுக்கு அபிஷேகம் செய்து மலர் மாலை சூட்டி விட்டு அங்கிருந்து புறப்பட்டார்.
காட்டுக்குள் சென்ற திண்ணன் அங்கு விலங்குகளை வேட்டையாடி, அதன் இறைச்சியை சமைத்து அதில் தேனை பிழிந்து எடுத்துக் கொண்டு வந்து, இறைவனுக்கு படைத்து பூஜை செய்தார். மறுநாள் காலை வந்தபோதும் இறைச்சிகள் இருப்பதைக் கண்டு அர்ச்சகர் மனம் நொந்து போனார். பின்னர் சுத்தம் செய்து பூஜித்தவர், இறைச்சியை இறைவனுக்கு படைத்து தீயச் செயலைச் செய்தவர்கள் கழுவேற்றப்பட வேண்டும் என்று வேண்டினார்.
அன்றைய தினம் இரவு அர்ச்சகர் கனவில் தோன்றினார், சிவபெருமான். “நாளை என் இருப்பிடம் வரும் நீ, அங்கு மறைவாக இருந்து கவனி. என்னை ஒருவன் எவ்வளவு பக்தியோடு வழிபடுகிறான் என்பதை நீ அறிவாய்” என்றார்.
அதன்படி அர்ச்சகர் அங்கு வந்து மறைந்திருந்தார். திண்ணன் வழக்கம்போல் காட்டுக்குள் சென்று வேட்டையாடிய ஊனமுது சகிதம் வந்து இறைவனுக்கு படைத்து வழிபட்டார். அப்போது திண்ணனின் பக்தியை உலகம் அறியச் செய்ய நினைத்த சிவபெருமான், லிங்கத்தின் வலது கண் பகுதியில் இருந்து ரத்தத்தை கசிய விட்டார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த திண்ணன், ரத்தத்தை துணியால் துடைத்தும் அது வழிந்துகொண்டே இருந்தது. சிவபெருமானைக் கட்டிப் பிடித்துக் கொண்டு கதறி அழுதார். காட்டிற்குள் ஓடிச் சென்று பச்சிலை பறித்து வந்து, அதன் சாறு பிழிந்து கண்களில் ஊற்றினார். எதுவும் பலன் தரவில்லை.
‘ஊனுக்கு ஊன் மருந்து’ என்ற மருத்துவ முறையை கையாள நினைத்தார், திண்ணன். அதன்படி தன்னுடைய வலது கண்ணை அம்பு கொண்டு பறித்து சிவலிங்கத்திற்கு வைத்தார். உடனடியாக ரத்தம் வழிவது நின்றது. திண்ணன் நிம்மதி அடைவதற்குள் இடது கண்ணில் இருந்தும் ரத்தம் கசிந்தது. சற்றும் யோசிக்காத திண்ணன், தன்னுடைய வலது கால் பெருவிரலை லிங்கத்தின் இடது கண் பகுதியில் அடையாளமாக வைத்துக் கொண்டு, தன்னுடைய மற்றொரு கண்ணையும் அம்பு கொண்டு பறிக்க முயன்றார்.
அப்போது “கண்ணப்ப நிற்க” என்று இறைவன் அசரீரியாக குரல் கொடுத்தார். பின்னர் அவரை தன் கருணையால் ஆட்கொண்டார். இதையெல்லாம் மறைந்திருந்து பார்த்த அர்ச்சகர் நெஞ்சம் நெகிழ்ந்தார். இறைவனே “கண்ணப்ப” என்று அழைத்ததால், ‘கண்ணப்பர்’ என்ற பெயரே திண்ணனுக்கு நிலைத்துப் போனது.
முருகனின் ஏழாம் படை வீடான மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
வடவள்ளி :
முருகனின் ஏழாம் படை வீடு என பக்தர்களால் அழைக்கப்படும் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடந்தோறும் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். பக்தர்கள் பால்குடம் எடுத்தும், காவடி எடுத்தும் வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.
இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 28-ந் தேதி திருக்கல்யாண உற்சவம் நடக்க உள்ளது.
இதுகுறித்து அறநிலை யத்துறை துணை ஆணையர் விமலா கூறியதாவது:-
மருதமலை சுப்பிர மணியசுவாமி கோவிலில் இன்று இரவு வாஸ்து சாந்தி மற்றும் விநாயகர் பூஜையுடன் தைப்பூசத் திருவிழா தொடங்குகிறது. நாளை காலை 7 மணி முதல் 8 மணிக்குள் தைப்பூசத் திருவிழாவிற்கான கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது.
28-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் சப்பரத்தில் வீதி உலா வருகிறார்.
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு 27-ந் தேதி மாலை முதல் 28-ந் தேதி காலை 7 மணி வரை பக்தர்களுக்கு அனுமதியில்லை. 28-ந் தேதி காலை 7 மணிக்கு பிறகே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
முருகனின் ஏழாம் படை வீடு என பக்தர்களால் அழைக்கப்படும் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடந்தோறும் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். பக்தர்கள் பால்குடம் எடுத்தும், காவடி எடுத்தும் வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.
இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 28-ந் தேதி திருக்கல்யாண உற்சவம் நடக்க உள்ளது.
இதுகுறித்து அறநிலை யத்துறை துணை ஆணையர் விமலா கூறியதாவது:-
மருதமலை சுப்பிர மணியசுவாமி கோவிலில் இன்று இரவு வாஸ்து சாந்தி மற்றும் விநாயகர் பூஜையுடன் தைப்பூசத் திருவிழா தொடங்குகிறது. நாளை காலை 7 மணி முதல் 8 மணிக்குள் தைப்பூசத் திருவிழாவிற்கான கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது.
28-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் சப்பரத்தில் வீதி உலா வருகிறார்.
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு 27-ந் தேதி மாலை முதல் 28-ந் தேதி காலை 7 மணி வரை பக்தர்களுக்கு அனுமதியில்லை. 28-ந் தேதி காலை 7 மணிக்கு பிறகே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
நவகிரகங்களால் ஏற்படகூடிய தோஷங்கள் விலகவும், நவகிரகங்களின் அருள் பெற அவர்களுக்கு உரிய நவதானியம் வைத்து எளிய பரிகாரம் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
ஜோதிடத்தின் அடிப்படையே நவகிரகங்கள் தான். நம் ஜாதகத்தில் நவகிரகங்கள் அமைந்துள்ளதை வைத்து தான் நமக்கான பலன்கள் அமைக்கின்றன. ஜாதகத்தில் நவகிரகங்களால் ஏற்படக் கூடிய தோஷங்களிலிருந்து நிரந்தர தீர்வு காண்பதற்கான எளிய பரிகாரங்கள் குறித்து இங்கு விரிவாக பார்ப்போம்...
சூரியன்: நவகிரகங்களின் தலைவனாகப் பார்க்கப்படுபவர் சூரிய பகவான். கோதுமை சூரியனுக்கு உகந்தது. அதனால் கோதுமையால் செய்யப்பட்ட சுண்டல் அல்லது உணவை படைத்து வணங்குவதால் சூரியனால் ஏற்பட்ட பாதிப்புக்கள் நீங்கும்.
சந்திரன் : சந்திர பகவானுக்கு உரிய தானியம் நெல். அரிசியால் செய்யப்பட்ட உணவை படைத்து சந்திரனை வணங்கி வர தோஷம் நீங்கி நீண்ட ஆயுளும் ஏற்படுவதோடு, சந்திரனால் ஏற்பட்ட தோஷமும் இன்னல்கள் நீங்கும்.
செவ்வாய் பகவானுக்கு உரிய தானியம் துவரை. துவரம் பருப்பால் செய்யப்பட்ட பதார்த்தங்களைப் படைத்து செவ்வாய் பகவானை வணங்கினால், அவரால் ஏற்படக் கூடிய விபத்து, காயங்கள் உள்ளிட்ட தீய பலன்களை தவிர்க்கலாம். அதோடு செவ்வாயால் ஏற்படக்கூடிய திருமணத்தடை நீங்குவதோடு, சொத்துக்கள் சேரும்.
புதன்:
கல்விக்கடவுளாக பார்க்கப்படுகிறார் புதன் பகவான். புதனுக்கு உரியது பச்சை பயிறு தானியத்தை வைத்து அல்லது தானியத்தால் செய்யப்பட்ட உணவை வைத்து வழிபடுவதால் கல்வி தடை நீங்கும். பேச்சாற்றல் சிறக்கும். தொழிலில் நல்ல வெற்றியையும், ஜோதிட கலையில் ஞானமும், புகழும் பெறலாம்.
குரு:
குரு பகவனானுக்கு உரிய தானியம் கடலை. மங்களத்தை அருளக் கூடிய குருவினால் ஏற்படக் கூடிய தோஷங்கள் நீங்க கடலையைப் படைத்து வணங்கி வர சுப காரியங்கள் சிறப்பாக நடந்து மங்கள பாக்கியங்கள் உண்டாகும்.
சுக்கிரன் :
நவகிரகங்களில் சுக போகங்களைத் தரக் கூடியவர் சுக்கிர பகவான். மொச்சை பயிறு சுக்கிரனுக்கு உரியதாகும். மொச்சை பயிறு படைத்து வழிபட்டு வருவதால் கலைகளில் வித்தகராகத் திகழலாம்.
சனி
சனி பகவானுக்கு உரிய தானியம் எள். எள் தீபம் ஏற்றி வழிபடுவதாலும், எள் சேர்த்த உணவை படைத்து சனி பகவானை வணங்கி வருவதால் அனைத்து தடைகளும் நீங்குவதோடு, விரோதங்கள் நீங்கி, கஷ்டங்கள் தீர்ந்து மகிழ்ச்சி உண்டாகும். தீராத நோய் தீர்ந்து ஆயுள் விருத்தியாகும். பூர்விக சொத்துக்கள் கிடைக்கும்.
ராகு:
நிழல் கிரகமான ராகு பகவானுக்கு உரிய தானியம் உளுந்து. உளுந்து தானியத்தால் தயாரித்த பதார்த்தத்தை படைத்து வழிபட்டு வணங்கி வருவதன் மூலம் நாக தோஷம் நீங்கும். திடீர் பணக்காரனாக்கும் நிலையை இராகு பகவான் தரக் கூடியவர். ராகுவை வணங்கி வர முயற்சிகளுக்கு வெற்றியைத் தரும். ராகுவை வணங்கி வர துர்க்கை அம்மனின் அருள் பெற முடியும்.
கேது
நிழல் கிரகமான கேது பகவானுக்கு உரிய தானியம் கொள்ளு. தீராத நோய் தீரவும், குறையாத மருத்து செலவுகள் பெரியளவில் குறையவும், மனதில் மகிழ்ச்சியும், தைரியத்தையும் கொடுக்கக் கூடிய கேது பகவானுக்கு கொள்ளு படைத்து வணங்கவும். கேதுவை வணங்கி வர ஞானத்தை தரக்கூடிய வினை தீர்க்கும் விநாயகரின் அருள் கிடைக்கும்.
சூரியன்: நவகிரகங்களின் தலைவனாகப் பார்க்கப்படுபவர் சூரிய பகவான். கோதுமை சூரியனுக்கு உகந்தது. அதனால் கோதுமையால் செய்யப்பட்ட சுண்டல் அல்லது உணவை படைத்து வணங்குவதால் சூரியனால் ஏற்பட்ட பாதிப்புக்கள் நீங்கும்.
சந்திரன் : சந்திர பகவானுக்கு உரிய தானியம் நெல். அரிசியால் செய்யப்பட்ட உணவை படைத்து சந்திரனை வணங்கி வர தோஷம் நீங்கி நீண்ட ஆயுளும் ஏற்படுவதோடு, சந்திரனால் ஏற்பட்ட தோஷமும் இன்னல்கள் நீங்கும்.
செவ்வாய் பகவானுக்கு உரிய தானியம் துவரை. துவரம் பருப்பால் செய்யப்பட்ட பதார்த்தங்களைப் படைத்து செவ்வாய் பகவானை வணங்கினால், அவரால் ஏற்படக் கூடிய விபத்து, காயங்கள் உள்ளிட்ட தீய பலன்களை தவிர்க்கலாம். அதோடு செவ்வாயால் ஏற்படக்கூடிய திருமணத்தடை நீங்குவதோடு, சொத்துக்கள் சேரும்.
புதன்:
கல்விக்கடவுளாக பார்க்கப்படுகிறார் புதன் பகவான். புதனுக்கு உரியது பச்சை பயிறு தானியத்தை வைத்து அல்லது தானியத்தால் செய்யப்பட்ட உணவை வைத்து வழிபடுவதால் கல்வி தடை நீங்கும். பேச்சாற்றல் சிறக்கும். தொழிலில் நல்ல வெற்றியையும், ஜோதிட கலையில் ஞானமும், புகழும் பெறலாம்.
குரு:
குரு பகவனானுக்கு உரிய தானியம் கடலை. மங்களத்தை அருளக் கூடிய குருவினால் ஏற்படக் கூடிய தோஷங்கள் நீங்க கடலையைப் படைத்து வணங்கி வர சுப காரியங்கள் சிறப்பாக நடந்து மங்கள பாக்கியங்கள் உண்டாகும்.
சுக்கிரன் :
நவகிரகங்களில் சுக போகங்களைத் தரக் கூடியவர் சுக்கிர பகவான். மொச்சை பயிறு சுக்கிரனுக்கு உரியதாகும். மொச்சை பயிறு படைத்து வழிபட்டு வருவதால் கலைகளில் வித்தகராகத் திகழலாம்.
சனி
சனி பகவானுக்கு உரிய தானியம் எள். எள் தீபம் ஏற்றி வழிபடுவதாலும், எள் சேர்த்த உணவை படைத்து சனி பகவானை வணங்கி வருவதால் அனைத்து தடைகளும் நீங்குவதோடு, விரோதங்கள் நீங்கி, கஷ்டங்கள் தீர்ந்து மகிழ்ச்சி உண்டாகும். தீராத நோய் தீர்ந்து ஆயுள் விருத்தியாகும். பூர்விக சொத்துக்கள் கிடைக்கும்.
ராகு:
நிழல் கிரகமான ராகு பகவானுக்கு உரிய தானியம் உளுந்து. உளுந்து தானியத்தால் தயாரித்த பதார்த்தத்தை படைத்து வழிபட்டு வணங்கி வருவதன் மூலம் நாக தோஷம் நீங்கும். திடீர் பணக்காரனாக்கும் நிலையை இராகு பகவான் தரக் கூடியவர். ராகுவை வணங்கி வர முயற்சிகளுக்கு வெற்றியைத் தரும். ராகுவை வணங்கி வர துர்க்கை அம்மனின் அருள் பெற முடியும்.
கேது
நிழல் கிரகமான கேது பகவானுக்கு உரிய தானியம் கொள்ளு. தீராத நோய் தீரவும், குறையாத மருத்து செலவுகள் பெரியளவில் குறையவும், மனதில் மகிழ்ச்சியும், தைரியத்தையும் கொடுக்கக் கூடிய கேது பகவானுக்கு கொள்ளு படைத்து வணங்கவும். கேதுவை வணங்கி வர ஞானத்தை தரக்கூடிய வினை தீர்க்கும் விநாயகரின் அருள் கிடைக்கும்.
கபிலர்மலை பாலசுப்பிரமணிய சாமி கோவில் தைப்பூச தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இரவு சாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கபிலர்மலை பாலசுப்பிரமணிய சாமி கோவில் தைப்பூச தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இரவு சாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று முதல் (வியாழக்கிழமை) வருகிற 25-ந் தேதி வரை தினந்தோறும் காலை பல்லக்கு உற்சவம், இரவு அன்னம், ரிஷபம், மயில் மற்றும் யானை உள்ளிட்ட வாகனங்களில் சாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
26-ந் தேதி இரவு திருக்கல்யாண உற்சவம், 27-ந் தேதி இரவு குதிரை வாகனத்தில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி, 28-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் சாமி திருத்தேருக்கு எழுந்தருளலும், மாலை 4 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுத்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 29-ந் தேதி முதல் பிப்ரவரி மாதம் 1-ந் தேதி வரை சாமி இரவு பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர், இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
26-ந் தேதி இரவு திருக்கல்யாண உற்சவம், 27-ந் தேதி இரவு குதிரை வாகனத்தில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி, 28-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் சாமி திருத்தேருக்கு எழுந்தருளலும், மாலை 4 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுத்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 29-ந் தேதி முதல் பிப்ரவரி மாதம் 1-ந் தேதி வரை சாமி இரவு பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர், இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.






