என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
பெங்களூரு எச்.ஏ.எல். சுதாமநகரில் புனித ஆரோக்கிய அன்னை ஜெப ஆலயத்தின் 23-வது ஆண்டு திருவிழா தொடங்கியது. 3 நாட்கள் இந்த திருவிழா நடக்கிறது.
பெங்களூரு எச்.ஏ.எல். சுதாமநகரில் புனித ஆரோக்கிய அன்னை ஜெப ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஜெப ஆலயத்தின் 23-வது ஆண்டு திருவிழா நேற்று தொடங்கியது. நேற்று முதல் நாளை(ஞாயிற்றுக்கிழமை) வரை 3 நாட்கள் இந்த திருவிழா நடக்கிறது.
2-வது நாளான இன்று (சனிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு புனித தொமையார் ஆலயத்தின் பங்கு தந்தை சின்னப்பா திருப்பலி நடத்துகிறார். அதனைதொடர்ந்து மாலை 6.30 மணிக்கு தேர் பவனி நடைபெறுகிறது. நாளை மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை புனித ஆரோக்கிய அன்னை ஜெப ஆலய நிர்வாகிகள் செய்துள்ளனர்.
2-வது நாளான இன்று (சனிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு புனித தொமையார் ஆலயத்தின் பங்கு தந்தை சின்னப்பா திருப்பலி நடத்துகிறார். அதனைதொடர்ந்து மாலை 6.30 மணிக்கு தேர் பவனி நடைபெறுகிறது. நாளை மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை புனித ஆரோக்கிய அன்னை ஜெப ஆலய நிர்வாகிகள் செய்துள்ளனர்.
கோவை மருதமலை முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுவாமி திருக்கல்யாணம் 28-ந் தேதி அதிகாலை 3 முதல் 5.30 மணிக்குள் நடைபெறுகிறது.
கோவை மருதமலை முருகன் கோவிலில் தைப்பூச விழா ஆண்டுதோறும் 10 நாட்கள் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த ஆண்டு தைப்பூசத் திருவிழா நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு விநாயகர் பூஜை, வாஸ்து சாந்தியுடன் தொடங்கியது. நேற்று காலை கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோ பூஜை நடைபெற்றது. 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. கோ பூஜையை தொடர்ந்து மூலவருக்கு பால், பன்னீர் சந்தனம், ஜவ்வாது போன்ற 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து 5.30 மணிக்கு தங்க கவச அலங்காரத்தில் காட்சியளித்த மூலவருக்கு சிறப்பு தீபாரதனை நடைபெற்றது.
தைப்பூச விழாவை யொட்டி கோவில் முழுவதும் வண்ணமலர்களாலும் மாவிலை தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து முன் பிரகார மண்டபத்தில் சிவாச்சாரியார்களால் வேள்வி பூஜை நடைபெற்றது.இதையடுத்து விநாயகர் பூஜை, புண்யாகம், மண் எடுத்தல், முளைப்பாலிகை இடுதல், மருதாலமூர்த்தி, முருகன் வள்ளி, தெய்வானை மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கங்கணம் கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.பின்னர் வள்ளி தெய்வானையோடு சுப்ரமணியசாமி விநாயகர், வீரபாகு தேவர், சூலத்தேவர் ஆகியோரோடு கற்பகத்தரு வாகனத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார்.
காலை சரியாக 7.30 மணிக்கு கோவில் முன்புறம் உள்ள கொடிமரத்தின் முன்பு மங்கள வாத்தியங்கள் முழங்க பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் சூரியன், சந்திரன், வேல், சேவல் சின்னம் பொறிக்கப்பட்ட கிருத்திகைகொடிக்கு பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து 8 மணிக்கு சேவற்கொடி கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா என கோஷமிட்டனர். பின்னர் கொடிமரத்துக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதை தொடர்ந்துசுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வயானை, விநாயகர் வீரபாகு தேவர் ஆகியோரோடு கற்பகத்தரு வாகனத்தில் வீதி உலா வந்தார்.மாலை 4 மணிக்குமூலவருக்கு அபிஷேகம் பூஜை தீபாராதனை நடைபெற்றது. 5 மணிக்கு அனந்தாசனத்தில் சுவாமி திருவீதி உலா வந்தார்.
இந்த நிகழ்ச்சியில் மருதமலை கோவில் துணை ஆணையர் (பொறுப்பு) விமலா செவ்வாய் பக்தர்கள் குழு தலைவர் கணுவாய் தேவராஜ், செயலாளர் சிவமுருகன், சிவபக்தர்கள் நலச்சங்க தலைவர் பேரூர் ராஜேந்திரன் உட்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
விழா நாட்களில் தினமும் காலை மாலை சுவாமி திருவீதி உலா நடைபெறுகிறது. 27-ந்தேதி மாலை தங்க மயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் எழுந்தருள்கிறார். 27-ந் தேதி இரவு ஏழு முப்பது மணிக்கு சந்தனக்காப்பு அலங்காரத்தில் சுவாமி காட்சியளிக்கிறார். தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுவாமி திருக்கல்யாணம் 28-ந் தேதி அதிகாலை 3 முதல் 5.30 மணிக்குள் நடைபெறுகிறது.
இதை அடுத்து சுப்ரமணிய சுவாமி வள்ளி தெய்வயானை வெள்ளை யானை வாகனத்தில் வீதி உலா வருகின்றனர்.கொரோனோ பரவல் காரணமாக பக்தர்கள் திருக்கல்யாண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு திருக்கோயில் நிர்வாகம் தடைவிதித்துள்ளது.இதனால் இந்த நிகழ்ச்சிகள் நடக்கும் பொழுது பக்தர்களுக்கு அனுமதி இல்லை காலை 7 மணிக்கு மேல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர், கொரோனோ பரவல் காரணமாக பெரிய தேர் வீதி உலா ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தைப்பூச விழாவை யொட்டி கோவில் முழுவதும் வண்ணமலர்களாலும் மாவிலை தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து முன் பிரகார மண்டபத்தில் சிவாச்சாரியார்களால் வேள்வி பூஜை நடைபெற்றது.இதையடுத்து விநாயகர் பூஜை, புண்யாகம், மண் எடுத்தல், முளைப்பாலிகை இடுதல், மருதாலமூர்த்தி, முருகன் வள்ளி, தெய்வானை மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கங்கணம் கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.பின்னர் வள்ளி தெய்வானையோடு சுப்ரமணியசாமி விநாயகர், வீரபாகு தேவர், சூலத்தேவர் ஆகியோரோடு கற்பகத்தரு வாகனத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார்.
காலை சரியாக 7.30 மணிக்கு கோவில் முன்புறம் உள்ள கொடிமரத்தின் முன்பு மங்கள வாத்தியங்கள் முழங்க பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் சூரியன், சந்திரன், வேல், சேவல் சின்னம் பொறிக்கப்பட்ட கிருத்திகைகொடிக்கு பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து 8 மணிக்கு சேவற்கொடி கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா என கோஷமிட்டனர். பின்னர் கொடிமரத்துக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதை தொடர்ந்துசுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வயானை, விநாயகர் வீரபாகு தேவர் ஆகியோரோடு கற்பகத்தரு வாகனத்தில் வீதி உலா வந்தார்.மாலை 4 மணிக்குமூலவருக்கு அபிஷேகம் பூஜை தீபாராதனை நடைபெற்றது. 5 மணிக்கு அனந்தாசனத்தில் சுவாமி திருவீதி உலா வந்தார்.
இந்த நிகழ்ச்சியில் மருதமலை கோவில் துணை ஆணையர் (பொறுப்பு) விமலா செவ்வாய் பக்தர்கள் குழு தலைவர் கணுவாய் தேவராஜ், செயலாளர் சிவமுருகன், சிவபக்தர்கள் நலச்சங்க தலைவர் பேரூர் ராஜேந்திரன் உட்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
விழா நாட்களில் தினமும் காலை மாலை சுவாமி திருவீதி உலா நடைபெறுகிறது. 27-ந்தேதி மாலை தங்க மயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் எழுந்தருள்கிறார். 27-ந் தேதி இரவு ஏழு முப்பது மணிக்கு சந்தனக்காப்பு அலங்காரத்தில் சுவாமி காட்சியளிக்கிறார். தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுவாமி திருக்கல்யாணம் 28-ந் தேதி அதிகாலை 3 முதல் 5.30 மணிக்குள் நடைபெறுகிறது.
இதை அடுத்து சுப்ரமணிய சுவாமி வள்ளி தெய்வயானை வெள்ளை யானை வாகனத்தில் வீதி உலா வருகின்றனர்.கொரோனோ பரவல் காரணமாக பக்தர்கள் திருக்கல்யாண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு திருக்கோயில் நிர்வாகம் தடைவிதித்துள்ளது.இதனால் இந்த நிகழ்ச்சிகள் நடக்கும் பொழுது பக்தர்களுக்கு அனுமதி இல்லை காலை 7 மணிக்கு மேல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர், கொரோனோ பரவல் காரணமாக பெரிய தேர் வீதி உலா ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாகூர் தர்கா கந்தூரி விழா சந்தனக்கூடு ஊர்வலம் இன்று (சனிக்கிழமை) மாலை நடக்கிறது. இந்த சந்தனம் கூடு நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை தர்காவை வந்தடையும்.
நாகையை அடுத்த நாகூரில் உலக பிரசித்திபெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த தர்காவில் நாகூர் ஆண்டவர் என போற்றி அழைக்கப்படும் சாகுல்ஹமீது காதிர் நாயகம் மறைந்த நினைவு நாளையொட்டி கந்தூரி விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான 464-வது கந்தூரி விழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி நேற்றுமுன்தினம் இரவு வாணவேடிக்கை நடைபெற்றது.
நேற்று இரவு 10 மணிக்கு தர்காவில் பீர் அமர வைத்தல்(பீர் ஜமாத்தார்) நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் இன்று (சனிக்கிழமை) மாலை நடக்கிறது. சந்தனக்கூடு நாகையில் உள்ள அபிராமி அம்மன் திருவாசலில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படுகிறது. அப்போது சாம்பிராணி சட்டி ரதம், நகராமேடை மற்றும் பல்வேறு மின் அலங்கார தட்டிகள் சந்தன கூட்டின் முன்னும், பின்னும் அணிவகுத்து செல்லும். சந்தனக்கூடு ஊர்வலம் நாகை புதுப்பள்ளி தெரு வழியாக யாஹசைன் தெரு, நூல்கடை தெரு, வெங்காயகடை தெரு, பெரிய கடை தெரு, சர்அகமதுதெரு உள்ளிட்ட தெருக்களில் பவனியாக செல்லும்.
பின்னர் அண்ணாசிலை, பப்ளிக் ஆபீஸ் சாலை வழியாக நாகூர் எல்லையை சந்தனக்கூடு சென்றடையும். தொடர்ந்து அங்குள்ள கூட்டுப்பாத்திகா மண்டபத்தில் பாத்திகா ஓதி பின்னர் வாணக்காரத்தெரு, தெற்கு தெரு, அலங்காரவாசல் வழியாக வந்து அங்குள்ள பாரம்பரிய முறைக்காரர் வீட்டில் சந்தனக்குடத்தை வாங்கி கூட்டில் வைக்கப்படும். பின்னர் செய்யது பள்ளி தெரு வழியாக சந்தனம் கூடு நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை தர்காவை வந்தடையும். இதையடுத்து கால்மாட்டு வாசல் வழியாக சந்தனக்குடம் தர்காவின் உள்ளே கொண்டு செல்லப்பட்டு, அதிகாலை 4.30 மணியளவில் சந்தனகுடங்கள் தர்காவில் உள்ள ஆண்டவரின் சமாதி அறைக்கு கொண்டு செல்லப்படும். இதைத்தொடர்ந்து, ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசப்படும். விழாவையொட்டி நாகூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சந்தனக்கூடு ஊர்வலத்தையொட்டி போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா தலைமையில் 12 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வையில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
நேற்று இரவு 10 மணிக்கு தர்காவில் பீர் அமர வைத்தல்(பீர் ஜமாத்தார்) நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் இன்று (சனிக்கிழமை) மாலை நடக்கிறது. சந்தனக்கூடு நாகையில் உள்ள அபிராமி அம்மன் திருவாசலில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படுகிறது. அப்போது சாம்பிராணி சட்டி ரதம், நகராமேடை மற்றும் பல்வேறு மின் அலங்கார தட்டிகள் சந்தன கூட்டின் முன்னும், பின்னும் அணிவகுத்து செல்லும். சந்தனக்கூடு ஊர்வலம் நாகை புதுப்பள்ளி தெரு வழியாக யாஹசைன் தெரு, நூல்கடை தெரு, வெங்காயகடை தெரு, பெரிய கடை தெரு, சர்அகமதுதெரு உள்ளிட்ட தெருக்களில் பவனியாக செல்லும்.
பின்னர் அண்ணாசிலை, பப்ளிக் ஆபீஸ் சாலை வழியாக நாகூர் எல்லையை சந்தனக்கூடு சென்றடையும். தொடர்ந்து அங்குள்ள கூட்டுப்பாத்திகா மண்டபத்தில் பாத்திகா ஓதி பின்னர் வாணக்காரத்தெரு, தெற்கு தெரு, அலங்காரவாசல் வழியாக வந்து அங்குள்ள பாரம்பரிய முறைக்காரர் வீட்டில் சந்தனக்குடத்தை வாங்கி கூட்டில் வைக்கப்படும். பின்னர் செய்யது பள்ளி தெரு வழியாக சந்தனம் கூடு நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை தர்காவை வந்தடையும். இதையடுத்து கால்மாட்டு வாசல் வழியாக சந்தனக்குடம் தர்காவின் உள்ளே கொண்டு செல்லப்பட்டு, அதிகாலை 4.30 மணியளவில் சந்தனகுடங்கள் தர்காவில் உள்ள ஆண்டவரின் சமாதி அறைக்கு கொண்டு செல்லப்படும். இதைத்தொடர்ந்து, ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசப்படும். விழாவையொட்டி நாகூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சந்தனக்கூடு ஊர்வலத்தையொட்டி போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா தலைமையில் 12 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வையில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
ஸ்ரீபுரம் தங்கக்கோவில் வளாகத்தில் ரூ.15 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீசக்தி கணபதி கோவில் கும்பாபிஷேகம் நாளைமறுநாள் (திங்கட்கிழமை) நடக்கிறது.
வேலூர் :
ஸ்ரீபுரம் தங்கக்கோவிலில் சக்திஅம்மா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஸ்ரீபுரத்தில் கடந்த 2000 ஆண்டில் நாராயணி கோவிலும், 2007-ம் ஆண்டு தங்கக்கோவிலும் கட்டப்பட்டது. தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் இடமாக ஸ்ரீபுரம் உள்ளது. தொடர்ச்சியாக ஸ்ரீனிவாசப்பெருமாளுக்கு தனி ஆலயம் அமைக்கப்பட்டது.
பக்தர்களின் கோரிக்கைக்கு ஏற்ப தங்கக்கோவில் வளாகத்தில் முக்கிய கடவுளான விநாயகருக்கு கோவில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி 700 டன் கருங்கற்களால் தங்கக்கோவில் வளாகத்தில் ஸ்ரீசக்தி கணபதி கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் இடம்பெற உள்ள விநாயகர் சிலை 1,700 கிலோ வெள்ளியால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை சுமார் 5 அடி உயரம் கொண்டது. விநாயகரை வணங்கினால் நல்லது கிடைக்கும். அமைதி மற்றும் செழிப்பு உண்டாகும்.
இந்த கோவிலின் மகாகும்பாபிஷேகம் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் 10.20 மணிக்குள் நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு விக்கிரகத்துக்கு கீழ் வைக்கப்படும் யந்திரத்திற்கு கடந்த ஒரு ஆண்டாக சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, நாளை (இன்று) பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
இதைமுன்னிட்டு கடந்த 15-ந் தேதி முதல் வருகிற 25-ந் தேதி வரை நவதானியங்களால் ஆன 1 லட்சத்து 8 ஆயிரம் லட்டுகளால் தமிழ் முறைப்படி யாகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. வேதமுறைப்படியும் பூஜைகள் தொடங்கப்பட்டுள்ளது. எனவே இந்த கும்பாபிஷேகம் தமிழ் மற்றும் வேதமுறைப்படி நடைபெறுகிறது. இந்தகோவில் முழுவதும் கட்டி முடிக்க ரூ.15 கோடி செலவானது.
கும்பாபிஷேகத்துக்கு முக்கிய பிரமுகர்கள், ஆன்மீகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களும் பலர் கலந்து கொள்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது ஸ்ரீபுரம் இயக்குனர் சுரேஷ்பாபு மற்றும் பலர் உடன் இருந்தனர்.
ஸ்ரீபுரம் தங்கக்கோவிலில் சக்திஅம்மா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஸ்ரீபுரத்தில் கடந்த 2000 ஆண்டில் நாராயணி கோவிலும், 2007-ம் ஆண்டு தங்கக்கோவிலும் கட்டப்பட்டது. தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் இடமாக ஸ்ரீபுரம் உள்ளது. தொடர்ச்சியாக ஸ்ரீனிவாசப்பெருமாளுக்கு தனி ஆலயம் அமைக்கப்பட்டது.
பக்தர்களின் கோரிக்கைக்கு ஏற்ப தங்கக்கோவில் வளாகத்தில் முக்கிய கடவுளான விநாயகருக்கு கோவில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி 700 டன் கருங்கற்களால் தங்கக்கோவில் வளாகத்தில் ஸ்ரீசக்தி கணபதி கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் இடம்பெற உள்ள விநாயகர் சிலை 1,700 கிலோ வெள்ளியால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை சுமார் 5 அடி உயரம் கொண்டது. விநாயகரை வணங்கினால் நல்லது கிடைக்கும். அமைதி மற்றும் செழிப்பு உண்டாகும்.
இந்த கோவிலின் மகாகும்பாபிஷேகம் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் 10.20 மணிக்குள் நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு விக்கிரகத்துக்கு கீழ் வைக்கப்படும் யந்திரத்திற்கு கடந்த ஒரு ஆண்டாக சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, நாளை (இன்று) பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
இதைமுன்னிட்டு கடந்த 15-ந் தேதி முதல் வருகிற 25-ந் தேதி வரை நவதானியங்களால் ஆன 1 லட்சத்து 8 ஆயிரம் லட்டுகளால் தமிழ் முறைப்படி யாகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. வேதமுறைப்படியும் பூஜைகள் தொடங்கப்பட்டுள்ளது. எனவே இந்த கும்பாபிஷேகம் தமிழ் மற்றும் வேதமுறைப்படி நடைபெறுகிறது. இந்தகோவில் முழுவதும் கட்டி முடிக்க ரூ.15 கோடி செலவானது.
கும்பாபிஷேகத்துக்கு முக்கிய பிரமுகர்கள், ஆன்மீகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களும் பலர் கலந்து கொள்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது ஸ்ரீபுரம் இயக்குனர் சுரேஷ்பாபு மற்றும் பலர் உடன் இருந்தனர்.
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவை முன்னிட்டு நேற்று கலிவேட்டை நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழா கடந்த 15-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் எட்டாம் நாளான நேற்று கலிவேட்டை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடை திறப்பு, அய்யாவுக்கு பணிவிடை, மாலை 4 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட வெள்ளை குதிரை வாகனத்தில் அய்யா எழுந்தருளும் காட்சி, மாலை 5 மணிக்கு முத்து குடைகள், மேளதாளங்கள் முன்னே செல்ல அய்யா கலி வேட்டைக்குப் புறப்படும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
பாலபிரஜாபதி அடிகளார் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் குதிரை வாகனம் தலைமைப் பதியையும், நான்கு ரத வீதிகளையும் சுற்றி வந்தது. பின்னர் இரவு 7 மணிக்கு முத்திரி கிணற்றங்கரையில் திரளான அய்யாவழி பக்தர்கள் முன்னிலையில் அய்யா கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் அய்யா குதிரை வாகனத்தில் செட்டிவிளை, சாஸ்தான்கோவில் விளை, கோட்டயடி புதூர், சோட்டப்பணிக்கன் தேரிவிளை, காமராஜபுரம் ஆகிய ஊர்களுக்கு சென்று அருள் பாலித்தார். வாகனம் செல்லும் இடங்களில் அந்த கிராமப்பகுதி மக்கள் வரவேற்பு கொடுத்து சுருள் வைத்து வழிபாடு செய்தனர்.
வாகன பவனி தலைைமப்பதிைய வந்தடைந்த பின்பு இரவு அய்யா தலைமைப் பதியின் வடக்கு வாசலில் பக்தர்களுக்கு தவக்கோல காட்சியளித்தார். பின்னர் பணிவிடையும், பெரிய யுக படிப்பும், அன்னதானமும் நடைபெற்றது. கலி வேட்டை நிகழ்ச்சியில் அய்யாவழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தொடர்ந்து வருகிற விழா நாட்களில் தினமும் காலை, மாலை பணிவிடையும், இரவு வாகன பவனியும், அன்னதானமும் நடைபெறுகிறது. வருகிற 25 -ந் தேதி 11-ம் திருவிழாவை முன்னிட்டு மதியம் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறும்.
பாலபிரஜாபதி அடிகளார் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் குதிரை வாகனம் தலைமைப் பதியையும், நான்கு ரத வீதிகளையும் சுற்றி வந்தது. பின்னர் இரவு 7 மணிக்கு முத்திரி கிணற்றங்கரையில் திரளான அய்யாவழி பக்தர்கள் முன்னிலையில் அய்யா கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் அய்யா குதிரை வாகனத்தில் செட்டிவிளை, சாஸ்தான்கோவில் விளை, கோட்டயடி புதூர், சோட்டப்பணிக்கன் தேரிவிளை, காமராஜபுரம் ஆகிய ஊர்களுக்கு சென்று அருள் பாலித்தார். வாகனம் செல்லும் இடங்களில் அந்த கிராமப்பகுதி மக்கள் வரவேற்பு கொடுத்து சுருள் வைத்து வழிபாடு செய்தனர்.
வாகன பவனி தலைைமப்பதிைய வந்தடைந்த பின்பு இரவு அய்யா தலைமைப் பதியின் வடக்கு வாசலில் பக்தர்களுக்கு தவக்கோல காட்சியளித்தார். பின்னர் பணிவிடையும், பெரிய யுக படிப்பும், அன்னதானமும் நடைபெற்றது. கலி வேட்டை நிகழ்ச்சியில் அய்யாவழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தொடர்ந்து வருகிற விழா நாட்களில் தினமும் காலை, மாலை பணிவிடையும், இரவு வாகன பவனியும், அன்னதானமும் நடைபெறுகிறது. வருகிற 25 -ந் தேதி 11-ம் திருவிழாவை முன்னிட்டு மதியம் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறும்.
குழந்தை செல்வம் வேண்டுபவர்கள் தை கிருத்திகையில் அழகன் முருகனை நினைத்து ஓராண்டு விரதம் இருந்து வழிபட்டால், அவர்களின் வேண்டுதல் ஏற்கப்பட்டு, கட்டாயம் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை.
சிவனின் மைந்தன் முருகப்பெருமானை கார்த்திகை நாளில் விரதம் இருந்து வணங்கினால் நமக்கு ஏற்பட்ட தடைகள் நீங்கும் அனைத்து காரியங்களும் வெற்றிகரமாக நிறைவேறும். குழந்தை செல்வம் வேண்டுபவர்கள் தை கிருத்திகையில் அழகன் முருகனை மனமார நினைத்து ஓராண்டு விரதம் இருந்து வழிபட்டால், அவர்களின் வேண்டுதல் ஏற்கப்பட்டு, கட்டாயம் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. பிள்ளைச் செல்வம் பெற வேண்டிய பெண்கள், பத்தாவது மாதமான தை கிருத்திகையில் முருகனை மனமார நினைத்து ஏறக்குறைய ஓராண்டு விரதம் இருந்து வழிபட்டால், அவர்களுக்கு கட்டாயம் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. திருமண தடைகள், நிலப்பிரச்சினைகள் தீரும்
ஒவ்வொரு மாதத்திலும், முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகிய கிருத்திகை நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை நினைத்து விரதம் மேற்கொள்வதால், முருகனின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆண்டுக்கு மூன்று கிருத்திகை தினங்கள் அதீத முக்கியத்துவம் பெறுகின்றன. அவை, உத்தராயண துவக்கமான தை மாத தை கிருத்திகை, கார்த்திகை மாதத்தில் வரும் பெரிய கிருத்திகை, தட்சிணாயன துவக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை. இந்த மூன்று கிருத்திகை முருகனுக்கு மிக உகந்த நாட்கள் ஆகும்.
கிருத்திகை விரதம் இருப்பவர்கள் பரணியில் இருந்தே விரதம் தொடங்குவது நல்லது. கிருத்திகை விரத நாளில் உப்பில்லாமல் உண்டு, பகலில் உறங்காமல் நோன்பிருந்து முருகப்பெருமானை தரிசிக்க வேண்டும். அடுத்த நாள் அதிகாலை ரோகிணி நட்சத்திரத்தில் முருகப் பெருமானை எண்ணி வழிபட்டு விரதம் முடிக்கலாம். மூன்று நாள்களும் விரதம் இருக்க முடியாவிட்டாலும், குறைந்தது கிருத்திகை நாளிலாவது விரதமிருப்பது நல்லது.
கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுபவர்கள் நிறைவான அறிவு, நிலையான செல்வம், நீண்ட ஆயுள், அன்பும் பண்பும் நிறைந்த வாழ்க்கைத்துணை, நல்ல குணமுள்ள குழந்தைகள் ஆகிய பேறுகளைப் பெற்று சிறப்பாக வாழ்வார்கள். இரவில் உறங்காமல் செய்யாமல் விழித்திருந்து கந்த மந்திரங்களை படித்து கந்தன் அடியார்களுக்கு அன்னதானம் செய்து அவர்களுடன் இணைந்து சாப்பிட வேண்டும். ஆலயங்களில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகள், பூஜைகள் மற்றும் அர்ச்சனைகளிலும் பங்கு கொண்டு முருகனின் அருளை பெறலாம்.
தை மாத கிருத்திகை அன்று பல முருகன் தலங்களில் மக்கள் தங்களின் பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தி வருகின்றனர். தை கிருத்திகையில் விரதம் இருந்து வள்ளி மணாளனை வழிபட்டால் குறைகள் அனைத்தும் தீரும். நினைத்தது நடக்கும். தை கிருத்திகையில் விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும். உப்பில்லா உணவை எடுத்துக் கொண்டு கார்த்திகை விரதமிருந்து முருகனை வழிபடுவோர் இன்னல்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் சகல செல்வங்களும் பெற்று வாழ்வார்கள். பிள்ளைச் செல்வம் வேண்டுபவர்கள், தை கிருத்திகையில் அழகன் முருகனை மனமார நினைத்து ஓராண்டு விரதம் இருந்து வழிபட்டால், அவர்களின் வேண்டுதல் ஏற்கப்பட்டு, கட்டாயம் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை.
ஒவ்வொரு மாதத்திலும், முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகிய கிருத்திகை நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை நினைத்து விரதம் மேற்கொள்வதால், முருகனின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆண்டுக்கு மூன்று கிருத்திகை தினங்கள் அதீத முக்கியத்துவம் பெறுகின்றன. அவை, உத்தராயண துவக்கமான தை மாத தை கிருத்திகை, கார்த்திகை மாதத்தில் வரும் பெரிய கிருத்திகை, தட்சிணாயன துவக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை. இந்த மூன்று கிருத்திகை முருகனுக்கு மிக உகந்த நாட்கள் ஆகும்.
கிருத்திகை விரதம் இருப்பவர்கள் பரணியில் இருந்தே விரதம் தொடங்குவது நல்லது. கிருத்திகை விரத நாளில் உப்பில்லாமல் உண்டு, பகலில் உறங்காமல் நோன்பிருந்து முருகப்பெருமானை தரிசிக்க வேண்டும். அடுத்த நாள் அதிகாலை ரோகிணி நட்சத்திரத்தில் முருகப் பெருமானை எண்ணி வழிபட்டு விரதம் முடிக்கலாம். மூன்று நாள்களும் விரதம் இருக்க முடியாவிட்டாலும், குறைந்தது கிருத்திகை நாளிலாவது விரதமிருப்பது நல்லது.
கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுபவர்கள் நிறைவான அறிவு, நிலையான செல்வம், நீண்ட ஆயுள், அன்பும் பண்பும் நிறைந்த வாழ்க்கைத்துணை, நல்ல குணமுள்ள குழந்தைகள் ஆகிய பேறுகளைப் பெற்று சிறப்பாக வாழ்வார்கள். இரவில் உறங்காமல் செய்யாமல் விழித்திருந்து கந்த மந்திரங்களை படித்து கந்தன் அடியார்களுக்கு அன்னதானம் செய்து அவர்களுடன் இணைந்து சாப்பிட வேண்டும். ஆலயங்களில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகள், பூஜைகள் மற்றும் அர்ச்சனைகளிலும் பங்கு கொண்டு முருகனின் அருளை பெறலாம்.
தை மாத கிருத்திகை அன்று பல முருகன் தலங்களில் மக்கள் தங்களின் பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தி வருகின்றனர். தை கிருத்திகையில் விரதம் இருந்து வள்ளி மணாளனை வழிபட்டால் குறைகள் அனைத்தும் தீரும். நினைத்தது நடக்கும். தை கிருத்திகையில் விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும். உப்பில்லா உணவை எடுத்துக் கொண்டு கார்த்திகை விரதமிருந்து முருகனை வழிபடுவோர் இன்னல்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் சகல செல்வங்களும் பெற்று வாழ்வார்கள். பிள்ளைச் செல்வம் வேண்டுபவர்கள், தை கிருத்திகையில் அழகன் முருகனை மனமார நினைத்து ஓராண்டு விரதம் இருந்து வழிபட்டால், அவர்களின் வேண்டுதல் ஏற்கப்பட்டு, கட்டாயம் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை.
வடலூரில் வருகிற 27-ந் தேதி தைப்பூச ஜோதி தரிசன திருவிழாவுக்கான கொடியேற்றமும், 28-ந் தேதி தைப்பூச திருவிழாவும் நடைபெற உள்ளது. கருத்தரங்கம், நாடகங்கள் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வடலூர் :
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் வருகிற 31-ந் தேதி வரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கோவில் திருவிழாக்கள், கடற்கரைகளில் கூட்டம் கூட அனுமதிக்கப்படவில்லை. கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்துள்ளதால் வடலூரில் தைப்பூச திருவிழா நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
வடலூரில் இந்த ஆண்டு 150-வது ஜோதி தரிசன விழா திருஅருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம் என்னும் சத்ய ஞானசபையில் நடைபெறுகிறது.
இதையொட்டி வருகிற 27-ந் தேதி தைப்பூச ஜோதி தரிசன திருவிழாவுக்கான கொடியேற்றமும், 28-ந் தேதி தைப்பூச திருவிழாவும் நடைபெற உள்ளது.
28-ந் தேதி காலை 6 மணி, 10 மணி, மதியம், 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, 29-ந் தேதி காலை 5.30 மணி என 6 காலங்கள் 7 திரைகள் நீக்கப்பட்டு ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும்.
வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில் 30-ந் தேதி திருஅறை தரிசனம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்றும் பக்தர்கள் சமூக இடைவெளியுடன், முககவசம் அணிந்து வரவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கருத்தரங்கம், நாடகங்கள் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளான ராட்டினங்கள், கடைகள் அமைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
விழாவையொட்டி பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகளை வள்ளலார் தெய்வநிலைய நிர்வாகம் செய்து வருகிறது.
தற்போது சபை வளாகத்தில் பந்தல், தடுப்புகள் அமைக்கும் பணிகளும், தெய்வநிலைய வளாகத்தை சுத்தம் செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் வருகிற 31-ந் தேதி வரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கோவில் திருவிழாக்கள், கடற்கரைகளில் கூட்டம் கூட அனுமதிக்கப்படவில்லை. கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்துள்ளதால் வடலூரில் தைப்பூச திருவிழா நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
வடலூரில் இந்த ஆண்டு 150-வது ஜோதி தரிசன விழா திருஅருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம் என்னும் சத்ய ஞானசபையில் நடைபெறுகிறது.
இதையொட்டி வருகிற 27-ந் தேதி தைப்பூச ஜோதி தரிசன திருவிழாவுக்கான கொடியேற்றமும், 28-ந் தேதி தைப்பூச திருவிழாவும் நடைபெற உள்ளது.
28-ந் தேதி காலை 6 மணி, 10 மணி, மதியம், 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, 29-ந் தேதி காலை 5.30 மணி என 6 காலங்கள் 7 திரைகள் நீக்கப்பட்டு ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும்.
வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில் 30-ந் தேதி திருஅறை தரிசனம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்றும் பக்தர்கள் சமூக இடைவெளியுடன், முககவசம் அணிந்து வரவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கருத்தரங்கம், நாடகங்கள் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளான ராட்டினங்கள், கடைகள் அமைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
விழாவையொட்டி பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகளை வள்ளலார் தெய்வநிலைய நிர்வாகம் செய்து வருகிறது.
தற்போது சபை வளாகத்தில் பந்தல், தடுப்புகள் அமைக்கும் பணிகளும், தெய்வநிலைய வளாகத்தை சுத்தம் செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.
பழனி முருகன் கோவிலில் தைப்பூசத்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆன்லைனில் முன்பதிவு செய்து வரும் பக்தர்களுக்கு மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.
பழனி :
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் தைப்பூசத்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இத்திருவிழாவின் முக்கிய அம்சமே பக்தர்கள் பல்வேறு ஊர்களில் இருந்து பாதயாத்திரையாக பழனிக்கு வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்வதுதான்.
அவ்வாறு வரும் பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் வருவார்கள். இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தைப்பூசத்திருவிழாவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை 7.35 மணிக்கு பழனி கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது.
வேல், மயில், சேவல் உருவம் பொறித்த மஞ்சள் நிற கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. அதனைத் தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க கோவில் கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.
அப்போது கோவில் மண்டபத்தில் முத்துக்குமார சுவாமி, வள்ளி, தெய்வானை, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். அவர்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு கடந்த சில நாட்களாகவே பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தவண்ணம் உள்ளனர். ஆன்லைனில் முன்பதிவு செய்து வரும் பக்தர்களுக்கு மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 27-ந் தேதி திருக்கல்யாணமும், 28-ந் தேதி தைப்பூசத் தேரோட்டமும் நடைபெறுகிறது. 31-ந் தேதி வாணவேடிக்கையுடன், தெப்ப உற்சவம் மற்றும் கொடி இறக்கம் நடைபெறுகிறது.
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் தைப்பூசத்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இத்திருவிழாவின் முக்கிய அம்சமே பக்தர்கள் பல்வேறு ஊர்களில் இருந்து பாதயாத்திரையாக பழனிக்கு வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்வதுதான்.
அவ்வாறு வரும் பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் வருவார்கள். இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தைப்பூசத்திருவிழாவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை 7.35 மணிக்கு பழனி கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது.
வேல், மயில், சேவல் உருவம் பொறித்த மஞ்சள் நிற கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. அதனைத் தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க கோவில் கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.
அப்போது கோவில் மண்டபத்தில் முத்துக்குமார சுவாமி, வள்ளி, தெய்வானை, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். அவர்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு கடந்த சில நாட்களாகவே பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தவண்ணம் உள்ளனர். ஆன்லைனில் முன்பதிவு செய்து வரும் பக்தர்களுக்கு மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 27-ந் தேதி திருக்கல்யாணமும், 28-ந் தேதி தைப்பூசத் தேரோட்டமும் நடைபெறுகிறது. 31-ந் தேதி வாணவேடிக்கையுடன், தெப்ப உற்சவம் மற்றும் கொடி இறக்கம் நடைபெறுகிறது.
கடவுளுக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொள்வது மிகச் சிறந்த வாழ்வு என அவள் நிரூபித்ததை இஸ்ரவேல் மக்களும் பின்பற்றத் தொடங்கினர். இவர்களை போல நாமும் இறை வாழ்க்கை வாழ முயல்வோம்.
கானான் நாட்டின் இன்னொரு பெயரே ‘இஸ்ரவேல்.’ அதன் முதல் நியாயாதிபதியாக யோசுவா இருந்தார். அதன்பிறகு சுமார் 350 ஆண்டுகளுக்கு வெவ்வேறு நியாயாதிபதிகள் இஸ்ரவேலை ஆட்சி செய்தனர். ஆனால் இஸ்ரவேலர்கள் மீது, தொடர் படையெடுப்புகள் மூலம் அந்நியர்கள் பலரும் ஆதிக்கம் செலுத்திவந்தனர். இப்படி அம்மோன் நாட்டின் மக்களாகிய அம்மோனியர்கள், இஸ்ரவேலர்கள் மீது 18 ஆண்டு காலம் ஆதிக்கம் செலுத்தி வந் தனர். இரக்கமற்ற கொலைகள், கொள்ளையில் ஈடுபட்டுவந்தனர். அவர்களது அட்டூழியங்களுக்கு முடிவுகட்ட எண்ணிய இஸ்ரவேலர்கள் தங்கள் கடவுளாகிய பரலோகத் தந்தையிடம் கெஞ்சி மன்றாடினார்கள்.
அம்மோனியருடன் போர் செய்ய யெப்தாவைத் தேர்ந்தெடுக்கும்படி கடவுள் வழிகாட்டினார். உறவுகளாலும், ஊர்க்காரர்களாலும் ஊரைவிட்டு வெளியேற்றப்பட்ட யெப்தாவை, இஸ்ரவேலர்கள் கெஞ்சி அழைத்தனர். அதை ஏற்றுக்கொண்டார் யெப்தா.
“யாரால் புறக்கணிக்கப்பட்டோமோ அவர்களே வந்து நம்மைத் தலைவராக ஏற்றுக்கொள்வதாகச் சொல்கிறார்களே இது எத்தனை பெரிய தலைகீழ் மாற்றம். கடவுளாகிய யகோவா என் மீது காட்டிய கருணையன்றி இது வேறென்ன!” என்று கடவுளைப் புகழ்ந்த யெப்தா, போரில் வெற்றி பெற கடவுளின் உதவி தேவை என்பதை உணந்தார். கடவுளிடம் பிரார்த்தனை செய்வதற்காக ‘மிஸ்பா’வுக்குச் சென்றார். அங்கே போய் முழந்தாளிட்டுக் கடவுளை நோக்கி, “நீர் எனக்கு வெற்றியைத் தந்தால் போர் முடிந்து நான் வீடு திரும்பும்போது, என் வீட்டிலிருந்து என்னை எதிர்கொண்டு வரவேற்க முதல் நபராக யார் வருகிறார்களோ... அவர்களை உமக்கு அர்ப்பணிப்பேன்” என்று சத்திய நேர்த்திக் கடன் செய்து பிரார்த்தனை செய்தார்.
யெப்தா செய்த சத்திய நேர்த்திக் கடனை கடவுள் கேட்டார். அம்மோனியர்களுடனான போரில் யெப்தாவுக்கு மிகப் பெரிய வெற்றி கிடைக்கிறது. அவர்களது கட்டுப்பாட்டில் இருந்த 20 நகரங்களை யெப்தா மீட்டெடுத்தார். வெற்றிக் களிப்புடன் இஸ்ரவேலர்களுக்குத் தலைமையேற்பதற்காக ஊர் திரும்பினார். ஊருக்குள் நுழைந்ததும் அவரை வரவேற்க எதிர்கொண்டு வந்தவர்களில் முதலில் வந்தாள், அவருடைய ஒரே அன்பு மகள். யெப்தா அவளை மிகவும் நேசித்தார். மிகுந்த மனவேதனை கொண்டவராய், தனது ஆடையைக் கிழித்துக் கதறியழுதார். தனது தந்தையின் சத்திய நேர்த்தியைப் பற்றித் தெரிந்து கொண்டபோது முதலில் வருத்தப்பட்டாலும் பின்னர் அவள் வருந்தவில்லை. தந்தையையும், தோழிகளையும் பிரிய வேண்டியிருக்குமே என்று அவள் நினைத்தாலும் சீலோவிலிருக்கிற ஆசாரிப்புக் கூடாரத்தில் கடவுளுக்கு வாழ்நாள் முழுவதும் சேவை செய்ய முடியும் என்பதை நினைத்தபோது அவள் மனம் நிறைந்தது. பின்னர் தனது தந்தையை சமாதானப்படுத்தி, இறைச்சேவைக்காக அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொண்டாள்.
பின்னர் கடவுளுக்குச் சத்தியம் செய்தபடியே யெப்தாவின் மகள் சீலோவுக்குப் போகிறாள். அங்கே யகோவாவின் ஆசாரிப்புக் கூடாரத்தில் தன் வாழ்நாள் முழுவதும் கடவுளுக்குச் சேவை செய்கிறாள். தந்தை மற்றும் தோழிகளின் உறவை முற்றிலும் மறந்தவளாய், இறைச்சேவை செய்தபடியே இறை வாழ்க்கை வாழ்கிறாள். கடவுளுக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொள்வது மிகச் சிறந்த வாழ்வு என அவள் நிரூபித்ததை இஸ்ரவேல் மக்களும் பின்பற்றத் தொடங்கினர். கடவுளுக்காக தங்களை அர்ப்பணித்து, இறை வாழ்வு வாழ்ந்தனர். இவர்களை போல நாமும் இறை வாழ்க்கை வாழ முயல்வோம்.
அம்மோனியருடன் போர் செய்ய யெப்தாவைத் தேர்ந்தெடுக்கும்படி கடவுள் வழிகாட்டினார். உறவுகளாலும், ஊர்க்காரர்களாலும் ஊரைவிட்டு வெளியேற்றப்பட்ட யெப்தாவை, இஸ்ரவேலர்கள் கெஞ்சி அழைத்தனர். அதை ஏற்றுக்கொண்டார் யெப்தா.
“யாரால் புறக்கணிக்கப்பட்டோமோ அவர்களே வந்து நம்மைத் தலைவராக ஏற்றுக்கொள்வதாகச் சொல்கிறார்களே இது எத்தனை பெரிய தலைகீழ் மாற்றம். கடவுளாகிய யகோவா என் மீது காட்டிய கருணையன்றி இது வேறென்ன!” என்று கடவுளைப் புகழ்ந்த யெப்தா, போரில் வெற்றி பெற கடவுளின் உதவி தேவை என்பதை உணந்தார். கடவுளிடம் பிரார்த்தனை செய்வதற்காக ‘மிஸ்பா’வுக்குச் சென்றார். அங்கே போய் முழந்தாளிட்டுக் கடவுளை நோக்கி, “நீர் எனக்கு வெற்றியைத் தந்தால் போர் முடிந்து நான் வீடு திரும்பும்போது, என் வீட்டிலிருந்து என்னை எதிர்கொண்டு வரவேற்க முதல் நபராக யார் வருகிறார்களோ... அவர்களை உமக்கு அர்ப்பணிப்பேன்” என்று சத்திய நேர்த்திக் கடன் செய்து பிரார்த்தனை செய்தார்.
யெப்தா செய்த சத்திய நேர்த்திக் கடனை கடவுள் கேட்டார். அம்மோனியர்களுடனான போரில் யெப்தாவுக்கு மிகப் பெரிய வெற்றி கிடைக்கிறது. அவர்களது கட்டுப்பாட்டில் இருந்த 20 நகரங்களை யெப்தா மீட்டெடுத்தார். வெற்றிக் களிப்புடன் இஸ்ரவேலர்களுக்குத் தலைமையேற்பதற்காக ஊர் திரும்பினார். ஊருக்குள் நுழைந்ததும் அவரை வரவேற்க எதிர்கொண்டு வந்தவர்களில் முதலில் வந்தாள், அவருடைய ஒரே அன்பு மகள். யெப்தா அவளை மிகவும் நேசித்தார். மிகுந்த மனவேதனை கொண்டவராய், தனது ஆடையைக் கிழித்துக் கதறியழுதார். தனது தந்தையின் சத்திய நேர்த்தியைப் பற்றித் தெரிந்து கொண்டபோது முதலில் வருத்தப்பட்டாலும் பின்னர் அவள் வருந்தவில்லை. தந்தையையும், தோழிகளையும் பிரிய வேண்டியிருக்குமே என்று அவள் நினைத்தாலும் சீலோவிலிருக்கிற ஆசாரிப்புக் கூடாரத்தில் கடவுளுக்கு வாழ்நாள் முழுவதும் சேவை செய்ய முடியும் என்பதை நினைத்தபோது அவள் மனம் நிறைந்தது. பின்னர் தனது தந்தையை சமாதானப்படுத்தி, இறைச்சேவைக்காக அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொண்டாள்.
பின்னர் கடவுளுக்குச் சத்தியம் செய்தபடியே யெப்தாவின் மகள் சீலோவுக்குப் போகிறாள். அங்கே யகோவாவின் ஆசாரிப்புக் கூடாரத்தில் தன் வாழ்நாள் முழுவதும் கடவுளுக்குச் சேவை செய்கிறாள். தந்தை மற்றும் தோழிகளின் உறவை முற்றிலும் மறந்தவளாய், இறைச்சேவை செய்தபடியே இறை வாழ்க்கை வாழ்கிறாள். கடவுளுக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொள்வது மிகச் சிறந்த வாழ்வு என அவள் நிரூபித்ததை இஸ்ரவேல் மக்களும் பின்பற்றத் தொடங்கினர். கடவுளுக்காக தங்களை அர்ப்பணித்து, இறை வாழ்வு வாழ்ந்தனர். இவர்களை போல நாமும் இறை வாழ்க்கை வாழ முயல்வோம்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா வருகிற 28-ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது.
திருச்செந்தூர் :
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-வது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். கோவிலில் இந்த ஆண்டு தைப்பூச திருவிழா வருகிற 28-ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. அன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடக்கிறது.
காலை 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 8.30 மணிக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி, 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. தொடர்ந்து மற்றகால பூஜைகள் நடைபெறும்.
ஆண்டுதோறும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, சுவாமி அலைவாயுகந்த பெருமான் வடக்கு ரத வீதியில் உள்ள தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளுவார். ஆனால் இந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கோவில் உள்பிரகாரத்தில் சுவாமி அலைவாயுகந்த பெருமான் எழுந்தருளுகிறார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொறுப்பு) கல்யாணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-வது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். கோவிலில் இந்த ஆண்டு தைப்பூச திருவிழா வருகிற 28-ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. அன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடக்கிறது.
காலை 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 8.30 மணிக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி, 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. தொடர்ந்து மற்றகால பூஜைகள் நடைபெறும்.
ஆண்டுதோறும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, சுவாமி அலைவாயுகந்த பெருமான் வடக்கு ரத வீதியில் உள்ள தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளுவார். ஆனால் இந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கோவில் உள்பிரகாரத்தில் சுவாமி அலைவாயுகந்த பெருமான் எழுந்தருளுகிறார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொறுப்பு) கல்யாணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
நரசிம்ம மூர்த்தியை தொடர்ந்து சனிக்கிழமைகளில் வழிபட்டு வந்தால், நம் வாழ்வின் கண்ணுக்குத் தெரியாத எதிர்ப்புகளையும் அழித்தொழிப்பார் நரசிங்கப் பெருமாள் என்பது ஐதீகம்.
மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில், நரசிம்ம அவதாரமும் ஒன்று. அதேபோல் மற்றைய அவதாரங்களுக்கும் நரசிம்ம அவதாரத்துக்கும் உள்ள வித்தியாசம், இருப்பதிலேயே மிகக்குறைந்த பொழுதுகளே ஆன அவதாரம்... நரசிம்ம அவதாரம்.
நல்லது நடக்க நரசிம்மர், அல்லவை விலக்க நரசிம்மர் என்பார்கள். மனித உடலும் சிங்க முகமும் கொண்டு உக்கிர மூர்த்தியாக காட்சி தரும் நரசிம்மருக்கு பல க்ஷேத்திரங்கள் உள்ளன. நரசிம்ம மூர்த்தியை தொடர்ந்து புதன் கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் வழிபட்டு வந்தால், நம் வாழ்வின் கண்ணுக்குத் தெரியாத எதிர்ப்புகளையும் அழித்தொழிப்பார் நரசிங்கப் பெருமாள் என்பது ஐதீகம்.
இரணியனை வதம் செய்வதற்காகவும் பிரகலாதனின் பக்தியை உலகுக்கு உணர்த்தவும் எடுத்த அவதாரமே நரசிம்ம மூர்த்தி அவதாரம். எதிர்ப்புகளையும் இன்னல்களையும் அழித்தொழிப்பவர் நரசிம்மர் என்று போற்றுகிறார்கள் பக்தர்கள்.
உக்கிர மூர்த்தியாகத் திகழும் நரசிம்மரை எவரொருவர் தொடர்ந்து ஆராதனைகள் செய்து வழிபட்டு வருகிறார்களோ அவர்களை தீயசக்திகள் அண்டாமல் காத்தருள்வார் என்பது ஐதீகம். தொடர்ந்து நரசிம்மரை வழிபட்டு பிரார்த்தித்து வந்தால், எதிரிகள் பலமிழப்பார்கள். எதிர்ப்பே இல்லாமல் போகும்.
’எதைச் செஞ்சாலும் தடையாவே இருந்துக்கிட்டு இருக்குதே’ என்று புலம்பி வருந்தாதவர்களே இல்லை. வீடு கட்டி பாதியில் தடை ஏற்பட்டு அப்படியே போட்டது போட்டபடி இருக்கிறதே’ என்று கவலைப்படுவார்கள் சிலர். ‘எந்தத் தொழில் செய்தாலும் ஜாண் ஏறினால் முழம் சறுக்குகிறதே’ என்று தவித்து மருகுவார்கள் சிலர். ‘படிப்புக்கேத்த வேலை இல்லை, வேலைக்கேத்த சம்பளம் இல்லை’ என்று கலங்குவார்கள் சிலர்.
இப்படியாக வாழ்வில் எந்தத் தடை ஏற்பட்டிருந்தாலும் தொடர்ந்து நரசிம்ம மூர்த்தியை தரிசிப்பதும் வழிபாடுகள் செய்வதும் மகத்தான மாற்றங்களைத் தரும், வாழ்வில் ஏற்றங்களைக் கொடுக்கும். நம்மை எதிரிகளின் கண்முன்னே சிறப்புற வாழச் செய்வார் நரசிம்மர் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
நல்லது நடக்க நரசிம்மர், அல்லவை விலக்க நரசிம்மர் என்பார்கள். மனித உடலும் சிங்க முகமும் கொண்டு உக்கிர மூர்த்தியாக காட்சி தரும் நரசிம்மருக்கு பல க்ஷேத்திரங்கள் உள்ளன. நரசிம்ம மூர்த்தியை தொடர்ந்து புதன் கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் வழிபட்டு வந்தால், நம் வாழ்வின் கண்ணுக்குத் தெரியாத எதிர்ப்புகளையும் அழித்தொழிப்பார் நரசிங்கப் பெருமாள் என்பது ஐதீகம்.
இரணியனை வதம் செய்வதற்காகவும் பிரகலாதனின் பக்தியை உலகுக்கு உணர்த்தவும் எடுத்த அவதாரமே நரசிம்ம மூர்த்தி அவதாரம். எதிர்ப்புகளையும் இன்னல்களையும் அழித்தொழிப்பவர் நரசிம்மர் என்று போற்றுகிறார்கள் பக்தர்கள்.
உக்கிர மூர்த்தியாகத் திகழும் நரசிம்மரை எவரொருவர் தொடர்ந்து ஆராதனைகள் செய்து வழிபட்டு வருகிறார்களோ அவர்களை தீயசக்திகள் அண்டாமல் காத்தருள்வார் என்பது ஐதீகம். தொடர்ந்து நரசிம்மரை வழிபட்டு பிரார்த்தித்து வந்தால், எதிரிகள் பலமிழப்பார்கள். எதிர்ப்பே இல்லாமல் போகும்.
’எதைச் செஞ்சாலும் தடையாவே இருந்துக்கிட்டு இருக்குதே’ என்று புலம்பி வருந்தாதவர்களே இல்லை. வீடு கட்டி பாதியில் தடை ஏற்பட்டு அப்படியே போட்டது போட்டபடி இருக்கிறதே’ என்று கவலைப்படுவார்கள் சிலர். ‘எந்தத் தொழில் செய்தாலும் ஜாண் ஏறினால் முழம் சறுக்குகிறதே’ என்று தவித்து மருகுவார்கள் சிலர். ‘படிப்புக்கேத்த வேலை இல்லை, வேலைக்கேத்த சம்பளம் இல்லை’ என்று கலங்குவார்கள் சிலர்.
இப்படியாக வாழ்வில் எந்தத் தடை ஏற்பட்டிருந்தாலும் தொடர்ந்து நரசிம்ம மூர்த்தியை தரிசிப்பதும் வழிபாடுகள் செய்வதும் மகத்தான மாற்றங்களைத் தரும், வாழ்வில் ஏற்றங்களைக் கொடுக்கும். நம்மை எதிரிகளின் கண்முன்னே சிறப்புற வாழச் செய்வார் நரசிம்மர் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
முதலியார்பேட்டை புது நகர் முத்துமாரியம்மன் கோவிலில் வருகிற 27-ந்தேதி காலை (புதன்கிழமை) 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.
முதலியார்பேட்டை புது நகர் முத்துமாரியம்மன் கோவிலில் பரிவார மூர்த்தி களான விநாயகர், முருகன், துர்க்கை அம்மன் மற்றும் புதிதாக நவகிரகங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதையடுத்து வருகிற 27-ந் தேதி கும்பாபிஷேக விழா நடக்கிறது.
இதையொட்டி வருகிற 25-ந் தேதி முதல் யாகசாலை பூஜைகள் தொடங்குகின்றன. 26-ந் தேதி யாகபூஜைகள், கோபூஜை, பூர்ணாகுதியை தொடர்ந்து 27-ந்தேதி காலை (புதன்கிழமை) 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.
விழாவில் அமைச்சர் நமச்சிவாயம், சபாநாயகர் சிவக்கொழுந்து, முன்னாள் சபாநாயகர் சபாபதி என்ற கோதண்டராமன், முன்னாள் அமைச்சர் ஜெய குமார், ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. நடராஜன், இந்து சமய அற நிலையத்துறை ஆணையர் சச்சிதானந்தம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கின்றனர்.
இதையொட்டி வருகிற 25-ந் தேதி முதல் யாகசாலை பூஜைகள் தொடங்குகின்றன. 26-ந் தேதி யாகபூஜைகள், கோபூஜை, பூர்ணாகுதியை தொடர்ந்து 27-ந்தேதி காலை (புதன்கிழமை) 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.
விழாவில் அமைச்சர் நமச்சிவாயம், சபாநாயகர் சிவக்கொழுந்து, முன்னாள் சபாநாயகர் சபாபதி என்ற கோதண்டராமன், முன்னாள் அமைச்சர் ஜெய குமார், ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. நடராஜன், இந்து சமய அற நிலையத்துறை ஆணையர் சச்சிதானந்தம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கின்றனர்.






