search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் கலிவேட்ைட நிகழ்ச்சி நடந்த போது எடுத்த படம்.
    X
    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் கலிவேட்ைட நிகழ்ச்சி நடந்த போது எடுத்த படம்.

    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் கலிவேட்டை நிகழ்ச்சி

    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவை முன்னிட்டு நேற்று கலிவேட்டை நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழா கடந்த 15-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் எட்டாம் நாளான நேற்று கலிவேட்டை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடை திறப்பு, அய்யாவுக்கு பணிவிடை, மாலை 4 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட வெள்ளை குதிரை வாகனத்தில் அய்யா எழுந்தருளும் காட்சி, மாலை 5 மணிக்கு முத்து குடைகள், மேளதாளங்கள் முன்னே செல்ல அய்யா கலி வேட்டைக்குப் புறப்படும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    பாலபிரஜாபதி அடிகளார் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் குதிரை வாகனம் தலைமைப் பதியையும், நான்கு ரத வீதிகளையும் சுற்றி வந்தது. பின்னர் இரவு 7 மணிக்கு முத்திரி கிணற்றங்கரையில் திரளான அய்யாவழி பக்தர்கள் முன்னிலையில் அய்யா கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பின்னர் அய்யா குதிரை வாகனத்தில் செட்டிவிளை, சாஸ்தான்கோவில் விளை, கோட்டயடி புதூர், சோட்டப்பணிக்கன் தேரிவிளை, காமராஜபுரம் ஆகிய ஊர்களுக்கு சென்று அருள் பாலித்தார். வாகனம் செல்லும் இடங்களில் அந்த கிராமப்பகுதி மக்கள் வரவேற்பு கொடுத்து சுருள் வைத்து வழிபாடு செய்தனர்.

    வாகன பவனி தலைைமப்பதிைய வந்தடைந்த பின்பு இரவு அய்யா தலைமைப் பதியின் வடக்கு வாசலில் பக்தர்களுக்கு தவக்கோல காட்சியளித்தார். பின்னர் பணிவிடையும், பெரிய யுக படிப்பும், அன்னதானமும் நடைபெற்றது. கலி வேட்டை நிகழ்ச்சியில் அய்யாவழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து வருகிற விழா நாட்களில் தினமும் காலை, மாலை பணிவிடையும், இரவு வாகன பவனியும், அன்னதானமும் நடைபெறுகிறது. வருகிற 25 -ந் தேதி 11-ம் திருவிழாவை முன்னிட்டு மதியம் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறும்.
    Next Story
    ×