என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    இழந்த செல்வத்தை மீட்க ஒரே வழி இறைவனை பூஜிப்பது மட்டுமே. இறைவனை மனமுருகி வணங்கினால் இறைவன் இரட்டிப்பாக நமக்கு தருவான்.
    நாம் அள்ள அள்ள குறையாமல் செல்வத்தை சேகரித்து வைத்தாலும், ஒரு சில நேரத்தில் அனைத்தையும் இழந்து விடுகிறோம். நாம் இழந்ததை மீட்க முடியாது என எண்ணி அதைவிட்டு விடுகிறோம். ஆனால் இழந்த செல்வத்தை மீட்க ஒரே வழி இறைவனை பூஜிப்பது மட்டுமே. இறைவனை மனமுருகி வணங்கினால் இறைவன் இரட்டிப்பாக நமக்கு தருவான்.

    வாராஹி அம்மனுக்கு 8 சனிக்கிழமைகள் காலை மண் அகலில் கருநீல துணியில் சிறிது வெண்கடுகை இட்டு முடிந்து அதில் நல்லெண்ணெய் விட்டு தீபமிட்டு மனமார வேண்டினால் இழந்த புகழ், செல்வம் அனைத்தும் கிடைக்கும்.

    தேய்பிறை அஷ்டமியன்று பைரவரை வழிபாடு செய்தால் இழந்த செல்வத்தை பெற முடியும். நமக்கு செல்வ வளங்களை வழங்குவதற்கும் நம்மை நல்லவிதமாக வழிகாட்டி வாழ வைப்பதற்கும் பைரவர் வழிபாடு மிக முக்கியமானது.

    திருப்பதி ஏழுமலையான் திருமணத்துக்கு கடன் கொடுத்தவர் குபேரன் என்று புராணங்கள் கூறுகின்றன. குபேரனுக்கு ஏற்பட்ட சாபத்தினால் நாடு, நகரம், பொன், பொருள் அனைத்தையும் இழந்து நின்ற போது, லட்சுமி தேவியை வணங்கினார்.

    தேவி லட்சுமியை வணங்கியதால் இழந்ததை பெற்றார். ஆகவே லட்சுமியை வணங்கினால் இழந்த செல்வத்தை பெறலாம். வரலட்சுமி விரத பூஜையை வெள்ளிக்கிழமை காலை அல்லது மாலையில் உங்கள் வசதிக்கு ஏற்ப செய்யலாம்.

    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வருடாந்திர தெப்போற்சவத்தின் நிறைவு நாளான நேற்று இரவு உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோவிந்தராஜசாமி தெப்பத்தில் எழுந்தருளி 7 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வருடாந்திர தெப்போற்சவம் 20-ந்தேதி தொடங்கி 7 நாட்கள் கோலாகலமாக நடந்து வந்தது. தினமும் உற்சவர்கள் தெப்பத்தில் எழுந்தருளி பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தெப்போற்சவத்தின் நிறைவு நாளான நேற்று இரவு உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோவிந்தராஜசாமி தெப்பத்தில் எழுந்தருளி 7 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    அதையொட்டி திருப்பதியில் இந்து தர்ம பிரசார பரிஷத் திட்டம், அன்னமாச்சாரியார் திட்டம் ஆகியவை சார்பில் பக்தி பாடல்கள், பஜனை பாடல்கள், ஹரிகத காலேட்சபம், மங்கள வாத்திய இசை நிகழ்ச்சிகள் நடந்தன.

    ெதப்போற்சவத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ்.ஜவஹர்ரெட்டி, கோவில் துணை அதிகாரி ராஜேந்திரடு, உதவி அதிகாரி ரவிக்குமார் ரெட்டி, கண்காணிப்பாளர்கள் வேங்கடாத்ரி, ராஜ்குமார், கோவில் ஆய்வாளர்கள் காமராஜ், முனிந்திரபாபு மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    அப்பர் பெருமான் வாழ்வில் நடந்த இந்த நிகழ்வை உணர்த்தும் வகையில் பாடல் பெற்ற சைவசமய தலமான நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் தெப்ப உற்சவம் நடைபெற்றது.
    முன்னொரு காலத்தில் சைவ சமயத்திற்கும், சமண சமயத்திற்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சமண மதத்தை சேர்ந்தவர்கள் சைவ சமய குரவர்களில் ஒருவரான அப்பர் பெருமானின் ஆழ்ந்த பக்தியை பரிசோதிக்கும் வகையில் அப்பரை கல்லில் கட்டி கடலில் தூக்கி போட்டார்கள். அப்போது அப்பர் பெருமான் "கற்றுணை பூட்டியோர் கடலினில் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயமே" என்று சிவபெருமானை நினைத்து பாடினார்.

    அப்போது கல்லானது தெப்பமாக மாறி கடலில் மிதந்தது. இந்த சம்பவம் மூலம் அப்பர் பெருமான் தனது பக்தியால் சிவனின் அருள் சிறப்பை உலகுக்கு உணர்த்தி இறைவனின் திருக்காட்சி பெற்றார் என்று ஆன்மிக வரலாறு கூறுகிறது. அப்பர் பெருமான் வாழ்வில் நடந்த இந்த நிகழ்வை உணர்த்தும் வகையில் பாடல் பெற்ற சைவசமய தலமான நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் நேற்று தெப்ப உற்சவம் நடைபெற்றது.

    கோவிலின் உள்ளே அம்பாள் சன்னதி அருகில் அமைந்துள்ள பொற்றாமரை குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அப்பர் பெருமான் பவனி வந்தார். அங்குள்ள மண்டபத்தில் சுவாமி கைலாச பர்வத வாகனத்திலும், அம்பாள் தங்க கிளி வாகனத்திலும் எழுந்தருளி அப்பருக்கு காட்சி அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி, அம்பாள் மற்றும் அப்பரை தரிசனம் செய்தனர்.
    பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் மகாவிஷ்ணுவான ஸ்ரீனிவாசனை போற்றும் இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் காலையில் குளித்து முடித்ததும் பெருமாளை மனதில் நினைத்து 108 முறை துதித்து வழிபடுவதால் நீங்கள் விரும்பியது கிடைக்கும்.
    ஓம் நிரஞ்ஜநாய வித்மஹே
    நிராபாஸாய தீமஹி
    தந்நோ ஸ்ரீநிவாஸஹ் ப்ரசோதயாத்

    பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் மகாவிஷ்ணுவான ஸ்ரீனிவாசனை போற்றும் காயத்ரி மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலையில் குளித்து முடித்ததும் பெருமாளை மனதில் நினைத்து 108 முறை துதித்து பெருமாளை வழிபடுவதால் நீங்கள் விரும்பியது கிடைக்கும். ஆனந்தமான, வளமிக்க வாழ்வு அமையும். பாவங்களைப் போக்கும். 16 வகையான பேறுகளை தரும். மரண பயம் நீங்கும். இறுதி காலத்தில் முக்தி கிடைக்கும். மனதில் நிம்மதியான உணர்வு நீடித்திருக்கும்.

    பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பகவானை அறிவோம். பந்தங்களில் இருந்து விடுபடச் செய்யும், அந்த பரம்பொருளின் மீது தியானம் செய்வோம். ஸ்ரீனிவாசனான அவன் நம்மை காத்து அருள்புரிவான் என்பது இதன் பொருளாகும். மும்மூர்த்திகளில் அண்ட சராசரங்களையும், அதில் வாழும் அனைத்து உயிர்களையும் காக்கும் கடவுளாக திருமால் இருக்கிறார். பாற்கடலில் ஸ்ரீனிவாசனாக இருக்கும் பெருமாளின் இந்த காயத்ரி மந்திரம் துதித்து வழிபடுவதால் நமக்கு அனைத்து நன்மைகளும் உண்டாகிறது.

    ஆனைமலை மாசாணியம்மன் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதில் விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்குகின்றனர்.
    பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மயான பூஜை கடந்த 24-ந் தேதி நள்ளிரவு நடைபெற்றது. நேற்று முன்தினம் சக்தி கும்பஸ்தாபனம், மகாபூஜை ஆகியவை நடந்தன. நேற்று காலை 9.30 மணிக்கு குண்டம் கட்டும் நிகழ்ச்சியும், இரவு 6 மணிக்கு சித்திரதேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதை தொடர்ந்து இரவு 10 மணிக்கு குண்டம் பூ வளர்க்கும் நிகழ்ச்சி நடந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதில் விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்குகின்றனர். நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு கொடி இறக்குதல், காலை 10.30 மணிக்கு மஞ்சள் நீராடுதல், இரவு 8 மணிக்கு மகா முனிபூஜை நடைபெறுகிறது. நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 11.30 மணிக்கு மகா அபிஷேகம், அலங்கார பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.
    பச்சைமலை(மரகதாச்சலம்) அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், ஈரோடு மாவட்டத்தின் கோபிச்செட்டிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள புகழ் பெற்ற முருகன் கோவில்களில் ஒன்றாகும்.
    பச்சைமலை (மரகதாச்சலம்) அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், ஈரோடு மாவட்டத்தின் கோபிச்செட்டிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள புகழ் பெற்ற முருகன் கோவில்களில் ஒன்றாகும். "பச்சைமலை பவளமலை எங்கள் மலை நாடு" என்ற வாசகத்திற்கேற்ப இவ்விருமலை முருகன் கோவில்களும் இப்பகுதி மக்களால் காலம் காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருத்தலத்தில் முருகன், குழந்தை வடிவாக ஞான தண்டாயுதபாணியாக காட்சி தருகிறார்.

    பச்சைமலை - பெயர்க்காரணம்

    நாம் பலரும் நினைப்பது போல பச்சைமலை என்று இம்மலை பெயர் பெற காரணம் மரங்களோ, செடிகளோ அல்ல. பழைய படங்களை புரட்டினால் பச்சைமலையில் அவ்வளவாக மரங்கள் இல்லாமல் பாறைகளும் கற்களுமாக இருப்பதையே காண முடியும். இங்கு "பச்சை" என்பது நீரை குறிக்கிறது. இங்குள்ள மூலவருக்கு நேர் கீழாக ஒரு நீரூற்று இருப்பதாக நம்பப்படுகிறது. இது சமீப காலத்தில் நிரூபானம் ஆனது ஒரு சுவையான நிகழ்ச்சியின் மூலம் அறியலாம்.

    வருடம் 2000 க்கு முன்பு பச்சைமலைக்கு நீர் மலை அடிவாரத்தில் இருந்து தான் கொண்டு செல்லப்படும். அப்பொழுது ஏற்பட்ட வறட்சியில் கிணறுகள் வற்றிவிட்டன. அப்பொழுது மலைக்கு மேலே ஆழ்குழாய் கிணறு அமைத்தல் பற்றிய திட்டம் உருவானது. மலை அடிவாரத்தில் தண்ணீர் இல்லாத சமயம் மலைக்கு மேலே தண்ணீர் இருக்க முடியாது என்பதால், மிகுந்த சந்தேகத்தோடு தான் ஆழ்குழாய் தோண்டப்பட்டது. அன்று சிறு ஆழத்திலேயே மிகவும் வேகமாகவும், உயரமாகவும் நீர் வெளியேறியதை அருகிலிருந்தோர் இன்றும் பரவசத்தோடு நினைவு கூறுகின்றனர். இதனால், பச்சைமலையில் பயன்படுத்தும் நீர் அனைத்தையுமே நாம் தீர்த்தமாக கொள்ளலாம்.

    திருக்கோவில் வரலாறு

    முன்னொரு காலத்தில் துர்வாச முனிவர் ஒருமுறை கொங்கு நாட்டிற்கு எழுந்தருளினார். குன்னத்தூர் அருகே வந்து, சிவ பூஜை செய்ய சரியான இடத்தை தேட முற்பட்டார். அப்போது, கோபி அருகே அமைந்துள்ள மொடச்சூர் என்னும் ஊர் தான் சிவ பூஜை செய்ய சரியான இடம் என்பதை ஞான திரிஷ்டியால் உணர்ந்து அங்கு வந்து சிவ பூஜை செய்ய முற்படுகிறார். அப்போது குறை தீர்க்கும் குமரக் கடவுளை காண எண்ணி அவரது மனம் பூஜையில் திளைக்க மறுக்கிறது. குறை தீர்க்கும் குகனை எண்ணி தவத்தால் அருகில் உள்ள பச்சைமலை ( மரகதாச்சலம்/ மரகதகிரி) என்னும் குன்றை அறிகிறார். அங்கு அவருக்கு பாலதண்டாயுதபானியாக முருகன் காட்சி அளிக்கிறார். அவரின் வேண்டுகோளை ஏற்று இறைவன் பச்சைமலையில் நிலையாகக் குடிகொள்கின்றான். துர்வாசர் முருகனை மேற்கு நோக்கி பிரதிஷ்டை செய்கிறார்.

    காலங்கள் கடந்தோட, மரகதாச்சலத்தின் மகிமையை உலகம் மறந்தது. பூஜை மற்றும் திருப்பணி இல்லாமல் கோவில் மிகவும் பாழடைந்தது. அப்போது குப்புசாமி கவுண்டர் என்ற பக்தர் இறைவனை தரிசிக்க வருகிறார். அவருக்கு ஜோதி வடிவாக அருளிய முருகன், தன் கோவிலை பராமரிக்குமாறு அவருக்கு அசரீரியாக ஆணை பிறப்பிக்கிறார். இறைவனின் ஆணை ஏற்று பூஜைகள் தொடங்கப்பட்டது. பக்தர்களால் இணைந்து திருப்பணிகள் பல செய்யப்பட்டது. இன்று மீண்டும் மரகதாச்சலபதியாகிய பச்சைமலை பாலமுருகன், தமிழகமெங்கும் உள்ள முருக பக்தர்களால் கொண்டாடப்படுகிறான்.
    மூலவர்

    பச்சைமலை மூலவர் பால தண்டயுதபாணியாகக் காட்சி தருகிறார். பச்சைமலை மூலவரின் புன்னகை சிறப்பு. பழனியை போன்றே இங்கு மூலவர் மேற்கு நோக்கிய வண்ணம் காட்சி தருகிறார். மேற்கு  நோக்கிய முருகன் திருத்தலங்கள் மிகவும் அரிது. இங்கு மூலவருக்கு ஸ்வர்ணபந்தனம் செய்யப்பட்டுள்ளது.பிரதி வாரம் செவ்வாய்க்கிழமை அன்று மூலவருக்கு சத்ரு சம்ஹார திரிசடை அர்ச்சனை செய்யப்படுகிறது. தை பூசம், பங்குனி உத்திரம், கந்தர் ஷஷ்டி திருநாட்களில் இறைவனை தங்க கவச அலங்காரத்தில் சேவிக்கலாம்.

    ஸ்ரீ ஷண்முகர்

    பச்சைமலையில் பிரதான உற்சவராக ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஷண்முகர்  உள்ளார். ஆறுமுகம் கொண்ட முருகனின் ரூபத்தையே ஷண்முகர் என்று அழைக்கிறோம். பிரதி ஷஷ்டி, கிருத்திகை மற்றும் விசாக தினத்தன்று ஷன்முகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஷன்முகார்ச்சனை செய்யப்படுகிறது. கந்தர் சஷ்டியின் பொது ஆறு நாட்கள் தொடர்ந்து ஷன்முகார்ச்சனை வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

    பங்குனி உத்திர கல்யாண உற்சவத்தின் போது சிவப்பு சாத்தி உற்சவம் நடைபெறுகிறது. அன்று ஷண்முகர் திருசெந்தூரை போலவே நடராஜராகவும் காட்சி அளிப்பார். அன்றைய தினம் இரவு வெள்ளை சாத்தி உற்சவமும், மறுநாள் பங்குனி உத்திரத்தன்று பச்சை சாத்தி உற்சவமும் நடைபெறும். முருகன் தானே சிவன், பிரம்மா , விஷ்ணுவாகத் திகழ்வதை உணர்த்தவே இவ்வலங்காரங்கள் செய்யப்படுகின்றது. வருடத்தில் ஒரு முறை மட்டுமே மலர் பல்லக்கில் நகர் வலம் வருகிறார் ஷண்முகர்.

    பூஜை விபரம் / திறந்திருக்கும் நேரம்

    பச்சைமலை கோவிலில் எழு கால பூஜைகள் செய்யப்படுகிறது. காலை பதினொரு மணியளவில் ஒரு அபிஷேகமும், மாலை ஆறு மணியளவில் ஒரு அபிஷேகமும் தினமும் செய்யப்படுகிறது. மாலை ஆறு முப்பது மணியளவில் தங்க மயில் புறப்பாடு நடைபெறுகிறது. தங்க மயில் மீது பவனி செல்லும் ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி பிறகு தங்கத்தேரில் எழுந்தருளுவார்.

    இறுதியாக மாலை எழு மணியளவில் நடைபெறும் அர்த்தஜாம பூஜை என்கிற இராக்கால பூஜை, பழனியை போன்றே மிகவும் சிறப்பாகச் செய்யப்படுகிறது. இறைவனாகிய பாலமுருகனுக்கு வெள்ளை ஆடை சாற்றி மலர்களால் அலங்காரம் செய்யபடும். அலங்கார தீபாராதனை முடிந்தவுடன் தமிழ் வேதங்களாகிய பன்னிரு திருமுறை உள்ளடக்கிய பஞ்சபுராணம், திருப்புகழ், திருமுருகாற்றுப்படை,கந்தர் அநுபூதி,கந்தர் அலங்காரம், அபிராமி அந்தாதி, பிள்ளை தமிழ் ஆகிய நூல்களில் இருந்து சுமார் ஒரு மணி நேரம் பாடப்படும்.

    அப்பொழுது சிவசாரியார்களுடன் சேர்ந்து பக்தர்களும் பாட அனுமதிக்கப்படுவார்கள். இறுதியாக கல்யாண சுப்ரமணியர் மற்றும் பைரவர் தீபாராதனை முடிந்து கோவில் சாத்தப்படுகிறது. கல்யாண சுப்பிரமணியர் முன் இந்த இறுதி தீபராதனையில் வைக்கும் வேண்டுதல்கள் உடனே நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. பிறகு பிரசாதமாக திணை மாவு மற்றும் ஞானப்பால் வழங்கபடுகிறது.

    இக்கோவில் காலை 5:30 AM மணிக்கு நடைதிறக்கப்பட்டு, மதியம் 1:00 PM மணிக்கு நடைசாற்றப்படும். அதே போல் மாலை 4:00 PM மணி முதல் இரவு 8:30 PM மணி வரை கோவில் திறந்திருக்கும்.

    போக்குவரத்து வசதி

    பச்சைமலை கோவில் கோபிசெட்டிபாளையம்  நகராட்சியில் அமைந்துள்ளது. கோபி பேருந்து நிலையத்தில் இருந்து 1 Km தொலைவில் உள்ளது. பேருந்து வசதி குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் உள்ளதால், கோவிலுக்கு ஆட்டோவில் செல்லலாம். கோவிலுக்கு மேலே செல்ல மலை பாதை வசதியும் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு ரயில் நிலையம் 40 Km தொலைவிலும், கோயம்புத்தூர் பன்னாட்டு விமான நிலையம் 80 Km தொலைவிலும் அமைந்துள்ளது.
    திருவண்ணாமலை அருேக கவுதம நிதியில் அருணாசலேஸ்வரர் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று புனிதநீராடினர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் திருப்பணியில் பெரும் பங்காற்றியவர் வள்ளால மகாராஜா. இவர், குழந்தைப்பேறு இல்லாமல் தவித்தபோது, சிவபெருமானே குழந்தையாக தரிசனம் அளித்ததாகப் புராணங்கள் கூறுகிறது.

    சுகநதி ஆற்றங்கரையோரம் நடந்த போரில் உயிரிழந்த வள்ளால மகாராஜாவுக்கு ஆண்டுதோறும் மாசி மகத்தன்று மகம் நட்சத்திரத்தில் அருணாசலேஸ்வரர் திதி கொடுக்கும் நிகழ்ச்சியும், பின்னர் கவுதம நதியில் அருணாசலேஸ்வரருக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடப்பது வழக்கம்.

    அதன்படி மாசி மகமான நேற்று காலை 9 மணியளவில் உற்சவர் அருணாசலேஸ்வரர் சந்திரசேகரர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து உற்சவர் அருணாசலேஸ்வரர் கோவிலில் இருந்து மேளதாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக திருவண்ணாமலை அருேக பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள கவுதமநதிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    அந்த நதி கரையில் முதலில் அருணாசலேஸ்வரர் திதி கொடுக்கும் நிகழ்ச்சியும், அடுத்ததாக தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடந்தன. அப்போது பிரதான அர்ச்சகர்கள் திரிசூலத்தை கவுதமநதிக்கு கொண்டு சென்று 3 முைற புனிதநீரில் மூழ்கி எடுத்து ஸ்நானம் செய்வித்தனர்.

    அந்த நேரத்தில் கவுதமநதியில் கூடியிருந்த திரளான பக்தர்கள் நீரில் 3 முறை மூழ்கி புனித நீராடினர். அங்குக் கூடியிருந்த பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. அருணாசலேஸ்வரர் திதி கொடுத்த நேரத்தில் பக்தர்களும் கவுதம நதி கரையில் தங்களின் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.

    அங்கு, அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க கவுதம நதியில் தீர்த்தவாரி நடந்த இடத்தைச் சுற்றிலும் இரும்புத்தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. அந்த இடத்தில் ஏராளமான போலீசார், தீயணைப்புத்துறையினர், கோவில் அலுவலர்கள் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    மார்ச் மாதத்துக்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் வர்ச்சுவல் (காணொலி காட்சி மூலம்) முறையில் திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதில் பக்தர்கள் முன்பதிவு செய்து கொண்டு ஏழுமலையானை தரிசிக்கலாம்.
    திருமலை :

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய விருப்பம் உள்ள பக்தர்களின் வசதிக்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் வர்சுவல் முறையில் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீபலங்கார சேவை ஆகியவற்றை நடத்தி வருகிறது.

    அதில் முன்பதிவு செய்த பக்தர்கள் வெங்கடேஸ்வரா பக்தி சேனலில் ஒளிப்பரப்பப்படும் நிகழ்ச்சியில் பங்கேற்று சாமி தரிசனம் செய்யலாம். அத்துடன் கூடுதலாக கட்டணம் செலுத்தி ரூ.300 டிக்கெட் தரிசனத்திலும் சாமி தரிசனம் செய்யலாம்.

    அதன் படி மார்ச் மாதத்துக்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் வர்ச்சுவல் (காணொலி காட்சி மூலம்) முறையில் நேற்று முன்தினம் 11 மணியளவில் திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதில் பக்தர்கள் முன்பதிவு செய்து கொண்டு ஏழுமலையானை தரிசிக்கலாம்.

    மேலும் கல்யாண உற்சவ டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டும் (2 பேருக்கு) 90 நாட்களுக்குள் தேவஸ்தானம் இலவச விரைவு தரிசனத்தை அளித்து வருகிறது. பக்தர்கள் அந்தத் தரிசன டிக்கெட்டுகளை திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் முன்பு செய்து கொள்ளலாம்.
    மாசிமகத்தை முன்னிட்டு தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மற்றும் திருவையாறில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    கும்பகோணம் :

    கும்பகோணம் சிவாலயங்கள் மற்றும் பெருமாள் கோவில்களில் மாசிமகப்பெருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். அதன்படி ஆதிகும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர், வியாழசோமேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர் ஆகிய 6 சிவன் கோவில்களில் மாசிமகப் பெருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    கடந்த 18-ந்தேதி வைணவத் தலங்களான சக்கரபாணிசுவாமி கோவில், ராஜகோபாலசுவாமி கோவில், ஆதிவராக பெருமாள் ஆகிய கோவில்களில் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.

    தொடர்ந்து ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் சண்டிகேஸ்வரர் சுவாமி தேர் கோவிலின் தேரோடும் வீதிகளில் நடைபெற்றது. முன்னதாக காசிவிசுவநாதர், அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர் ஆகிய 3 சிவன் கோவில்களின் உற்சவ சுவாமி-அம்பாள் தேரில் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளினர்.

    பின்னர் தேரோட்டம் மகாமகக் குளக்கரையில் நடைபெற்றன. அப்போது பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்தனர். அதேபோல் வியாழசோமேஸ்வரர் கோவில் தேரோட்டமும் கோவிலை சுற்றி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    இதயடுத்து மாசிமகத்தை முன்னிட்டு நேற்று மகாமகக் குளக்கரையில் ஆதிகும்பேஸ்வரர், வியாழ சோமேஸ்வரர், அபிமுகேஸ்வரர், காசிவிஸ்வநாதர், காளஸ்தீஸ்வரர், கவுதமேஸ்வரர், நாகேஸ்வரர், பாணபுரீஸ்வரர், ஆதிகம்பட்ட விஸ்வநாதர், ஏகாம்பரேஸ்வரர்(அம்பாள்), கொட்டையூர் கோடீஸ்வரர், சாக்கோட்டை அமிர்தகலசநாதர் ஆகிய கோவில்களின் திருமூர்த்திகள் எழுந்தருள மாசிமக தீர்த்தவாரி பெருவிழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    இதேபோல் கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோவிலின் பொற்றாமரை குளத்தில் தெப்போற்சம் நடந்தது. இதில் ஆராவமுதப் பெருமாள் உபயநாச்சியார்களுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனர்.

    திருவையாறு புஷ்யமண்டப படித்துறை காவிரி ஆற்று கரையில் தீர்த்தவாரியையொட்டி அறம்வளர்த்தநாயகி உடனாகிய ஐயாறப்பர் எழுந்தருள சூலபாணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    முன்னதாக கும்பகோணம் மகாமக குளத்தில் தீர்த்தவாரியின்போது பக்தர்கள் புனிதநீராட தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும் பஸ் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்ததால் போதிய பஸ்கள் இயக்கப்படாததாலும் வெளியூர் பக்தர்கள் அதிகம் கலந்து கொள்ளவில்லை. இதனால் கும்பகோணம் மற்றும் திருவையாறில் குறைந்த அளவே பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
    கொரோனா பாதிப்பு அதிகரிப்பு எதிரொலியாக வருகிற 1-ந் தேதி முதல் சித்திவிநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
    மும்பை :

    மும்பையில் பிப்ரவரி முதல் வாரம் வரை கொரோனா பாதிப்பு கட்டுப்பாட்டில் இருந்தது. அதன்பிறகு தொற்று பாதிப்பு வேகமாக அதிகரித்தது. கடந்த புதன், வியாழக்கிழமைகளில் பாதிப்பு 1,100-ஐ தாண்டியது. இதையடுத்து அடுத்த மாதம் (மார்ச்) 1-ந்தேதி முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என சித்தி விநாயகா் கோவில் அறக்கட்டளை அறிவித்து உள்ளது.

    மேலும் இதுகுறித்து அறக்கட்டளை தலைமை நிர்வாக அதிகாரி பிரியங்கா சாப்வாலே கூறுகையில், ‘‘ஆன்லைனில் முன்பதிவு செய்யாத பக்தர்களுக்கு கூட கியு-ஆர் கோடு வழங்கி சாமி தரிசனம் செய்ய அனுமதித்து வந்தோம். 1-ந் தேதி முதல் இதை முற்றிலும் நிறுத்த முடிவு செய்து உள்ளோம். மறுஉத்தரவு வரும் வரை முன்பதிவு செய்யாத பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

    காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை முன்பதிவு செய்த பக்தர்கள் ஒரு மணி நேரத்துக்கு 100 போ் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அன்கார்கி சதுர்த்தி (2-ந் தேதி) அன்று பக்தர்கள் காலை 8 மணி முதல் இரவு 9 வரை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்" என்றார்.

    ஏற்கனவே கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக மும்பையில் பிரசித்தி பெற்ற மாகிம் தேவாலயம், சர்ச்கேட் ஒவல் மைதானம் போன்றவை மீண்டும் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    புதிய வகை கொரோனா பரவுவதால் திருவண்ணாமலையில் மார்ச் மாத பவுர்ணமிக்கு கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும் பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் சென்றனர்.
    திருவண்ணாமலை

    நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இக்கோவிலுக்கு பவுர்ணமி நாட்களில் லட்சகணக்கான பக்தர்கள் வருகை தந்து கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள்.

    கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் ஏப்ரல் மாதத்தில் வந்த பவுர்ணமியில் இருந்து திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்திற்கு மாவட்ட நிர்வாகம் மூலம் தடை விதிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் மாசி மாதத்திற்கான பவுர்ணமி நேற்று மதியம் 3.50 மணியளவில் தொடங்கிய இன்று (சனிக்கிழமை) மதியம் 2.45 மணிக்கு நிறைவடைகிறது. புதிய வகை கொரோனா பரவுவதால் இந்த பவுர்ணமிக்கு கிரிவலம் செல்ல பக்தர்கள் வரவேண்டாம் என்று மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

    இருப்பினும் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பக்தர்கள் நேற்று பகலில் இருந்தே கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர். போலீசார் கிரிவலப்பாதையில் உள்ள முக்கிய சாலை சந்திப்பு பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் சென்றனர்.
    திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் பிரம்மோற்சவ விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வான கல்யாண சுந்தரர் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
    திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. விழாவில் உற்சவர் சந்திர சேகரர் தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாட வீதிஉலா வந்தார். விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் 24-ந்தேதி கோலாகலகமாக நடைபெற்றது.

    இந்தநிலையில் பிரம்மோற்சவ விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வான கல்யாண சுந்தரர் திருக்கல்யாண வைபவம் நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி வசந்தமண்டபத்தில் சிவபெருமான், மணக்கோலமான கல்யாணசுந்தரர் அலங்காரத்தில் எழுந்தருளினார். அவருடன் பார்வதிதேவி, திரிபுரசுந்தரி கோலத்தில் எழுந்தருளினார். பின்னர் யாகம் வளர்க்கப்பட்டு, வேள்வியில் மங்கலப்பொருட்கள் சமர்ப்பிக்கப்பட்டது.

    தொடர்ந்து கல்யாண சுந்தரருக்கு காப்பு மற்றும் பூணூல் அணிவிக்கப்பட்டு, வேதமந்திரங்கள், வாத்தியங்கள் முழங்க திருக்கல்யாண வைபவம் நடந்தேறியது. அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பெண்கள், இனிப்புகளை பரிமாறிக்கொண்டனர். பின்னர் மாலை மாற்றுதல், பால், பழம் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. நிறைவாக மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    அதைதொடர்ந்து மதியம் 63 நாயன்மார்கள் மாடவீதி உலாவும், இரவு மகிழடி சேவை போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. விழாவில் இன்று(சனிக்கிழமை) தீர்த்தவாரி, கொடியிறக்கமும், நாளை(ஞாயிற்றுக்கிழமை) இரவு 18 திருநடனம் மற்றும் பந்தம்பறி உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.
    ×