என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ஒரு டிஜிட்டல் உலகிற்கும், மனிதர்களுக்குமிடையேயான போராட்டத்தை காண்பிக்கும் படம் ட்ரான் ஆரஸ்.

    டெலிஞ்சர் என்கிற நபர் தனக்கு என ஒரு டிஜிட்டல் உலகத்தை உருவாக்குகிறார். அந்த டிஜிட்டல் உலகத்தில் ஆரஸ் என்கிற ஒரு மனிதனையும் உருவாக்குகிறார். அந்த ஆரஸை டிஜிட்டல் உலகத்தில் இருந்து நிஜ உலகத்திற்கு கொண்டு வந்து ஆர்மி-க்கு கொடுக்க முயற்சிக்கிறார்.

    ஆனால், நிஜ உலகத்தில் ஆரஸால் 29 நிமிடம் மட்டுமே இருக்க முடியும். அதற்கு பிறகு, ஆரஸ் கரைந்து போய்விடும்.

    டெலிஞ்சருக்கு போட்டி கம்பெனியான என்காம் என்கிற நிறுவனத்தை சேர்ந்த ஈவ், டிஜிட்டல் உலகில் இருப்பதை நிஜ உலகில் நிரந்தரமாக கொண்டு வரும் கோட் கண்டுபிடிக்கிறார்.

    ஈவ்-ன் முயற்சியை தெரிந்துக் கொண்ட டெலிஞ்சர் உடனே என்காமின் சர்வரை ஹேக் செய்து, ஈவ்-ஐ ஆரஸ் உதவியுடன் கடத்துகிறார்.

    ஆனால், ஒரு கட்டத்தில் ஆரஸ்-க்கு கொஞ்சம் கொஞ்சமாக மனித உணர்வுகள் வர, டெலிஞ்சர் நம்மை அழிவுக்கு பயன்படுத்துகிறார் என்பது தெரிய வருகிறது. பின்னர், ஈவ் பக்கம் திரும்பும் ஆரஸ், நீ என்னை காப்பாற்றினால், நான் உன்னை நிஜ உலகிற்கு நிரந்தரமாக கொண்டு வருகிறேன் என்று டீல் போடுகிறது. அதன் பிறகு என்ன ஆகிறது என்பது மீதிக்கதை..

    நடிகர்கள்

    ஜாரெட் லெட்டோ, கிரெட்டா லீ, ஈவன் பீட்டர்ஸ், ஹசன் மிர்னாஜ், ஜோடி டர்னர்-ஸ்மித், ஆர்ட்டுரோ காஸ்ட்ரோ, கேமரூன் மோனாகன், ஜில்லியன் ஆண்டர்சன், மற்றும் ஜெஃப் பிரிட்ஜஸ் அனைவரும் கதாப்பாத்திரத்திற்கேற்ப கச்சிதமாக நடித்துள்ளனர்.

    இயக்கம்

    ஒரு டிஜிட்டல் உலகிற்கும், மனிதர்களுக்குமிடையேயான போராட்டத்தை இயக்குனர் ஜோச்சிம் ரோன்னிங் எல்லோருக்கும் புரியும் படி பிரமாண்டத்துடன் எடுத்துள்ளார்.

    அதிலும் ஈவ் சிஸ்டத்தை ஹாக் செய்யும் இடம், அதை எதோ போர் போல் 5 ப்ரோகிராம் மனிதர்கள் சாப்ட்வேர் உள்ள வருவது, அதை எதிர்க்க வரும் ஆண்டி வைரஸ் மனிதர்கள் என கற்பனை குதிரையை பறக்க விட்டுள்ளார் இயக்குனர்.

    இசை

    பின்னணி இசை அபாரம்.

    ஒளிப்பதிவு

    டெக்னிக்கலாக படம் வேற லெவல். படம் முழுக்க காட்சிகள், கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி என அனைத்தும் விஸ்வல் ட்ரீட்டாக இருந்தது.

    மோசடி மூலம் சிக்கியிருக்கும் தனது நிலத்தை மீட்க போராடும் ஒரு விவசாயியின் கதை.

    ஒரு கிராமத்தில் விதார்த் தனது மனைவி மற்றும் மகனுடன் வாழ்ந்து வருகிறார். விவசாயியான விதார்த் தனது மகனை பெரிய ஆளாக்க வேண்டும் என்று கனவுடன் உழைக்கிறார். இதற்காக அதிகளவில் கடனை பெற்று மகனை பெரிய கான்வென்ட் பள்ளியில் சேர்க்கிறார்.

    இந்த சூழலில், தனது விவசாய நிலம் வங்கியில் ஏலம் விட்டதை தெரிந்து விதார்த் அதிர்ச்சி அடைகிறார். வாங்காத கடனுக்கு நிலம் எப்படி ஏலத்தில் போகும் என்றும் குழம்புகிறார்.

    இதுதொடர்பாக விதார்த் வங்கியில் கேட்கும்போது, அவரது தந்தையின் பெயரில் கடன் வாங்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், கடன் வாங்கியிருந்தால் தந்தை இதை பற்றி சொல்லியிருப்பாரே என்றும் யோசிக்கிறார். இதில், ஏதோ மோசடி நடந்திருப்பதை விதார்த் உணர்கிறார். இந்த மோசடி பின்னணியில் இருக்கும் விஷயங்களை ஆராய்கிறார்.

    இறுதியில் விதார்த் தனது நிலத்தை மீட்டாரா? மோசடியில் ஈடுபட்டது யார்? என்பதே மீதி கதை...

    நடிகர்கள்

    விவசாயி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விதார்த், நிலத்தை மீட்க போராடும் காட்சிகளில் கண்கலங்க வைக்கிறார். தனது நடிப்பின் அனுபவம் வெளிப்படுகிறது. ரக்ஷனா கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமான நடிப்பை காட்டியிருக்கிறார்.

    சிறுவனாக நடித்துள்ள கார்த்திக் நடிப்பும் கவனம் ஈர்க்கிறது. அருள்தாஸ், சரவண சுப்பையா, மாறன், நாகராஜ் ஆகியோரின் நடிப்பு நினைவில் நிற்கிறது.

    இயக்கம்

    பட நேரம் குறைவு என்றாலும் இழுவையாக தெரிகிறது. திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

    விவசாயிகளுக்கான திட்டங்கள் மற்றும் சலுகைகளை மோசடியாக சிலர் எப்படி சுரண்டுகிறார்கள்? என்பதை சொல்லி, அதற்கான தீர்வுகளை எடுத்துரைத்து திரும்பி பார்க்க வைத்துள்ளார் இயக்குனர் வி.கஜேந்திரன்.

    இசை

    என்.ஆர்.ரகுநந்தன் இசை கதைக்கு கச்சிதம்.

    ஒளிப்பதிவு

    அருள் கே.சோமசுந்தரத்தின் ஒளிப்பதிவு கிராமத்து பசுமையைக் காட்சிப்படுத்தி இருக்கிறது.

    • 90 திரைக்கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கிப் பாராட்டினார்.
    • திரையுலக பயணத்தை தொடங்கிய நிகில் முருகன் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

    தமிழ்நாடு அரசின் சார்பில் இயல், இசை, நாடக மன்றத்தின் மூலம் பல்வேறு கலைப்பிரிவுகளைச் சேர்ந்த சிறந்த கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

    அந்தவகையில் 2021, 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் வழங்கும் விழா, சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று மாலை நடந்தது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, விக்ரம் பிரபு, எஸ்.ஜே.சூர்யா, சாய் பல்லவி, அனிருத் உள்பட 90 திரைக்கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கிப் பாராட்டினார்.



    கலைமாமணி விருது பெற்றவர்களில் 30 ஆண்டுகளாக 575-க்கும் மேற்பட்ட படங்களுக்கு மக்கள் தொடர்பாளராக தொடர்ந்து பணியாற்றி வரும் நிகில் முருகனும் ஒருவர். 1988-ம் ஆண்டு தனது திரையுலக பயணத்தை தொடங்கிய நிகில் முருகன் பல விருதுகளையும் பெற்றுள்ளார். மேலும், கே. பாலசந்தர், மணிரத்னம், ஷங்கர், பாலா, கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஏ.ஆர்.ரகுமான் போன்ற திரைத்துறை உச்ச பிரபலங்களின் நிகழ்ச்சிகளையும் திறம்பட செய்துள்ளார். 

    • சிம்ரன் நடிப்பில் வெளியான "டூரிஸ்ட் பேமிலி" படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
    • டூரிஸ்ட் பேமிலி படத்தில் சிம்ரன் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது.

    தமிழ் திரை உலகில் ரஜினி, கமல், விஜய், அஜித் என பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் சிம்ரன்.

    சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான "டூரிஸ்ட் பேமிலி" படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. படத்தில் சிம்ரன் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது.

    இந்நிலையில், சிவப்பு நிறத்தில் சேலை கட்டி நடந்து வரும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை சிம்ரன் பகிர்ந்துள்ளார்.அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

    மைலாஞ்சி படத்திற்கு இசைஞானி இளையராஜா பாடல்களை எழுதி இசையமைத்துள்ளார்.

    அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் அர்ஜுன் தயாரிப்பில் அஜயன் பாலா இயக்கத்தில் ஸ்ரீராம் கார்த்திக் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் 'மைலாஞ்சி'.

    திரைப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா பாடல்களை எழுதி இசையமைக்க இயக்குநர் வெற்றிமாறன் வழங்குகிறார்.

    இந்நிகழ்வில் அகிலா பாலுமகேந்திரா மற்றும் இசைக்கலைஞர் கங்கை அமரன் ஆகியோர் இசை மற்றும் டீசரை வெளியிட, சிறப்பு விருந்தினர்களாக படக்குழுவினருடன் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர்கள் ஆர். வி. உதயகுமார், பேரரசு, ஏ. எல். விஜய், மீரா கதிரவன், காவல்துறை உயரதிகாரி தினகரன் (ஏடிஜிபி) ஆகியோர் பெற்றுக் கொண்டனர். டிரென்ட் மியூசிக் நிறுவனம் 'மைலாஞ்சி' பாடல்களை வெளியிட்டுள்ளது.

    ஸ்ரீராம் கார்த்திக் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை க்ருஷா குரூப் நடித்திருக்கிறார். இவர்களுடன் முனீஷ்காந்த், சிங்கம் புலி, தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு மேதை செழியன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

    இந்நிகழ்ச்சியில் இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது:-

    நான் சினிமாவில் வந்ததற்கு அஜயன் பாலாவும் ஒரு காரணம். அன்பான மனிதர், பண்பான மனிதர். அதனால் அவருக்கு சினிமா வாய்ப்பு எளிதாக கிடைக்கவில்லை. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் எனக்கு முன்னால், வெற்றிமாறனுக்கு முன்னால், அஜயன் பாலா இயக்குநராகி இருக்க வேண்டும்.

    இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் இசைஞானி இளையராஜாவை இணைத்துக் கொண்டது தான். இந்தப் படத்தின் பாடல்களை கேட்டேன், பார்த்தேன். சில இடங்களில் அவருடைய தனித்துவம் தெரிந்தது.

    கடந்த 30 வருடமாக இந்த சினிமாவில் நான் புரிந்து கொண்ட விஷயத்தை பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் முக்கோணம் என்ற ஒரு வடிவத்தை பற்றி தெரிந்திருக்கும். அதில் ஐந்து வகையான முக்கோணங்கள் இருக்கிறது என்பார்கள், மூன்று பக்கமும் ஒரே அளவுள்ள முக்கோணம் தான் தனித்துவமானது. அதேபோன்றுதான் இந்த சினிமா. தயாரிப்பாளர் - கதாசிரியர் & இயக்குநர் - தொழில்நுட்பக் கலைஞர்கள்- என இந்த மூவரும் சமமாக இருந்தால் படைப்பு நன்றாக இருக்கும்.

    எங்கள் காலத்தில் சினிமா என்பது ஒரு கனவாகவே இருந்தது. ஆனால் இப்போது அப்படி அல்ல. 365 திரைப்படங்கள் உருவான இந்த தமிழ் சினிமாவில் தற்போது 35 திரைப்படங்கள் தான் உருவாகின்றன. ஐந்து படங்கள் தான் வெற்றி பெறுகின்றன. அடுத்த தலைமுறை சினிமாவிற்கு வரும் தயாரிப்பாளர்கள் ஒரு மூன்று படங்களை உருவாக்குவதற்கான திட்டமிடலுடன் வர வேண்டும். முதல் படம் அனுபவம். இரண்டாவது படம் எப்படி தோல்வி அடையாமல் படம் தயாரிப்பது, எப்படி வெற்றி பெறுவது என்று அனுபவத்தை தரும். மூன்றாவது படத்தில் பொருத்தமான நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோரை தேர்வு செய்து வெற்றி படத்தை எப்படி அளிக்க வேண்டும் என்ற அனுபவத்தை பெறுவார்கள். இது என்னுடைய கணிப்பு.

    இவ்வாறு கூறினார்.

    திரில்லர் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் கயிலன்.

    தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்தியாளராக வேலை பார்த்து வருகிறார் ரம்யா பாண்டியன். ஒருநாள் இவருக்கு மர்ம நபரிடம் இருந்து இமெயில் ஒன்று வருகிறது. அதில் இன்னும் சில நாட்களில் வார் ஒன்று நடக்க போகிறது என்று இருக்கிறது. இதை பார்த்த ரம்யா பாண்டியன், உடனே அதை செய்தியாக்கி வெளியிடுகிறார்.

    இதற்கு பல எதிர்ப்புகள் வருகிறது. யார் என்று தெரியாத ஒருவரிடம் இருந்து வந்த இமெயிலை வைத்து செய்தியை வெளியிட்டது தவறு என்று பிரச்சனை வருகிறது. மீண்டும் மர்ம நபரிடம் இருந்து இமெயில் வருகிறது. இதை போலீசுக்கு தெரியப்படுத்துகிறார் ரம்யா பாண்டியன். இதை விசாரிக்க அதிகாரியான ஸ்சுவேதா களம் இறங்குகிறார். இவருடைய விசாரணையில் மர்ம நபர் பெயர் காரி என்று தெரியவருகிறது.

    இறுதியில் காரி என்பவர் யார்? எதற்காக மிரட்டுகிறார்? காரியை ஸ்சுவேதா கண்டுபிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தில் ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக ஓடிக்கொண்டே இருக்கிறார் ஸ்சுவேதா நாயர். இவரது உடை, உடல் மொழி ஆகியவை கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறது. நிதானமாக இவர் யோசிக்கும் போதும், கேள்விகள் கேட்கும் போதும் நடிப்பில் கவனிக்க வைத்து இருக்கிறார். படம் ஆரம்பித்தது முதல் பத்து நிமிடம் மட்டுமே வந்து சென்றிருக்கிறார் ரம்யா பாண்டியன்.

    சிறிது நேரம் மட்டுமே வந்தாலும் மனதில் பதிந்து இருக்கிறார் பிரஜன். தாய், தந்தை இழந்த காட்சியில் நெகிழ வைத்து இருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.

    இயக்கம்

    திரில்லர் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் அருள் அஜித். ஆரம்பம் முதல் இறுதி வரை திரைக்கதையை விறுவிறுப்பாக நகர்த்தி இருக்கிறார். ஏ ஐ டெக்னாலஜியை அனைவருக்கும் புரியும் படி சொல்லியிருக்கிறார். நிறைய காட்சிகள் வசனத்திலேயே கடந்து போயிருக்கிறார். இதை தவிர்த்து இருக்கலாம். நிறைய கதாபாத்திரங்களை வீணடித்து இருக்கிறார்.

    ஒளிப்பதிவு

    அமீன் ஒளிப்பதிவில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். காட்சிகள் தெளிவாக அமையவில்லை.

    இசை

    கார்த்திக் ஹர்ஷா இசையில் பாடல்கள் கவரவில்லை. ஹரியின் பின்னணி இசை பெரியதாக எடுபடவில்லை.

    பான்-இந்தியா பிரம்மாண்டம் என்ற கான்செப்டில் உருவாகும் இந்தப் படம் மிகப்பெரிய அளவில் தயாராகிறது.

    க்யூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஷெரீப் முகமது தயாரிக்கும் மாபெரும் ஆக்ஷன் திரில்லர் படமான "காட்டாளன்" படத்தின், அதிரடி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

    புதிய இயக்குநர் பால் ஜார்ஜ் இயக்கத்தில் உருவாகும் "காட்டாளன்", மலையாளத் திரையுலகில் இதுவரை இல்லாத அளவுக்கு பிரமாண்ட பூஜையுடன் தொடங்கப்பட்டது.

    பான்-இந்தியா பிரம்மாண்டம் என்ற கான்செப்டில் உருவாகும் இந்தப் படம் மிகப்பெரிய அளவில் தயாராகிறது.

    படத்திற்கான இசையை "காந்தாரா", "மகாராஜா" போன்ற ஹிட் படங்களுக்கு இசையமைத்த B. அஜனீஷ் லோக்நாத் வழங்கியுள்ளார்.

    இப்படத்தில், முன்னணி நடிகர் ஆண்டனி வர்கீஸுன் மிரட்டல் தோற்றம் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.  எரியும் கண்கள், சிதறிய சிவப்பு முடி, வாயில் புகைபிடிக்கும் சிகார்— இப்படியாக ஆண்டனியின் அதிரடி லுக், ஒரு கடும் ஆற்றல் கொண்ட மாஸ் அவதாரமாக காட்சி தருகிறது.

    ரத்தம் பூசப்பட்ட முகம், கைகள் ஆகியவை படத்தின் அதிரடி ஆக்ஷன் களத்தை வெளிப்படுத்தி, இதுவரை கண்டிராத மிரட்டலான நிறைந்த தோற்றத்தை ரசிகர்களுக்கு வழங்கி விருந்தளிக்கிறது.

    இதில், தெலுங்கு நடிகர் சுனில், கபீர் துகான் சிங், ராப்பர் பேபி ஜீன், தெலுங்கு நடிகர் ராஜ் திரண்டாசு, பாலிவுட் நடிகர் பார்த்த் திவாரி ஆகியோர் நடிக்கின்றனர். மலையாளத் திரையுலகிலிருந்து ஜகதீஷ், சித்திக், மற்றும் ஹனான் ஷா இணைந்துள்ளனர்.

    மனிதன் படத்தை டிஜிட்டல் முறையில் மாற்றி ரீ ரிலீஸ் செய்துள்ளனர்.

    1987 ஆம் ஆண்டு எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான மனிதன் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.

    இப்படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக ரூபிணி நடித்துள்ளார். இப்படத்தில் சோ, வினு சக்கரவர்த்தி, ரகுவரன், செந்தில், ஸ்ரீவித்யா, டெல்லி கணேஷ் உட்பட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர்.

    மனிதன் படத்தின் பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டாகின. குறிப்பாக, மனிதன்.. மனிதன்.., வானத்த பார்த்தேன்.., காளை காளை., ஏதோ நடக்கிறது.., முத்து முத்து பெண்ணே.., உள்ளிட்ட பாடல்கள் இன்றும் மக்கள் ரசித்து வருகின்றனர்.

    இந்நிலையில், ரஜினிகாந்த் திரைத்துறையில் அறிமுகமாகி 50 ஆண்டுகள் நிறைவு அடைந்ததை கொண்டாடும் வகையில் மனிதன் படத்தை டிஜிட்டல் முறையில் மாற்றி ரீ ரிலீஸ் செய்ய முடிவு செய்தனர்.

    அதன்படி, மனிதன் படம் வரும் அக்டோபர் மாதம் 10ம் தேதி (நேற்று) ரிலீஸ் ஆனது. இதனால், ரஜினிகாந்தின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    மறைந்த விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    தமிழ் சினிமாவில் கிராமத்து சார்ந்த நகைச்சுவை திரைப்படம் இயக்குவதில் திறமை மிக்க இயக்குனர் பொன்ராம். 2013 ஆம் ஆண்டு இவர் இயக்கிய வருத்தப்படாத வாலிபர் சங்கம் மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது.

    அதைத்தொடர்ந்து, ரஜினி முருகன், சீமராஜா, எம்.ஜி.ஆர் மகன் மற்றும் டி.எஸ்.பி போன்ற வெற்றித் திரைப்படங்களை இயக்கினார்.

    இந்நிலையில் அடுத்ததாக பொன்ராம், மறைந்த விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் சரத்குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பால சுப்ரமணியன் ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். பட தொகுப்பை தினேஷ் பொன்ராஜ் செய்கிறார். இப்படத்திற்கு கொம்புசீவி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

    இப்படம் 1996 வாக்கில் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, வைகை அணை பகுதியில் நடந்த கதைகளை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், கொம்புசீவி படத்தின் டீசர் இன்று மாலை வௌியானது.

    • கலைமாமணி விருது பெற்ற அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
    • நலிந்த கலைஞர்களுக்கு மாந்தோறும் ரூ.3000 உதவித் தொகை வழங்கி வருகிறோம்.

    சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில் விருதாளர்ளுக்கு கலைமாமணி விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    இயல், இசை, நாடகக்கலையில் பல ஆண்டுகளாக சேவை செய்பவர்களை கவுரவிக்கும் விதமாக 90 பேருக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டது. விருதுகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    இந்நிலையில், கலைமாமணி விருது வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசுகையில்," என் மேல் ஏன் இவ்வளவு பாசம்? என இசைஞானி இளையராஜா கேட்டார்.

    அவர் மீது நமக்கு இருப்பது கலைப்பாசம், தமிழ்ப்பாசம், தமிழர் என்கிற பாசம். அதனால்தான் பாராட்டு விழா நடத்தினோம்" என்றார்.

    • அண்மையில் வெளியான 'இட்லி கடை' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
    • இட்லி கடை ! நீண்ட நாட்களுக்கு பிறகு மனதிலேயே நிற்கும் ஒரு படம்.

    தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. இது தனுஷின் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

    இப்படத்தில் நித்யா மேனன், ஷாலினி பாண்டே, அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்து உள்ளனர். அண்மையில் வெளியான 'இட்லி கடை' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    இந்நிலையில் இட்லி கடை படத்தை இயக்கி நடித்த தனுஷ்-க்கு அவரின் அண்ணனும் இயக்குனருமான செல்வராகவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இட்லி கடை ! நீண்ட நாட்களுக்கு பிறகு மனதிலேயே நிற்கும் ஒரு படம். கருப்பு சாமியும் கன்று குட்டியும் கண்களை கலங்க வைக்கின்றனர். நமது ஊரை நாம் எவ்வளவு மதிக்க வேண்டும் என இப்பொழுதுதான் புரிகின்றது. வாழ்த்துக்கள்

    தனுஷ் (@dhanushkraja) தம்பி என கூறினார்.

    • விஜய் தேவரகொண்டா நடிப்பில் கிங்டம் படம் அண்மையில் வெளியானது.
    • கிங்டம் படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

    தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா நடிப்பில் கிங்டம் படம் அண்மையில் வெளியானது. இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

    இந்நிலையில், விஜய் தேவரகொண்டாவின் புதிய படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தை ரவி கிரண் கோலா இயக்குகிறார். பிரபல தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிக்கிறார்.

    இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இப்படத்தின் பூஜை தற்போது நடைபெற்றது. இதில் விஜய் தேவரகொண்டா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.

    ×