என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    DQ41 திரைப்படத்தை எஸ்.எல்.வி. சினிமாஸ் நிறுவனம் சார்பில், சுதாகர் செருகுரி தயாரிக்கிறார்.

    துல்கர் சல்மான்- ரவி நெலகுடிடி (Ravi Nelakuditi)- சுதாகர் செருகுரி (Sudhakar Cherukuri) - SLV சினிமாஸ்- கூட்டணியில் தயாராகி வரும் திரைப்படம் DQ 41.

    துல்கர் சல்மான் அவரது 41 வது திரைப்படமான DQ 41-ல், அறிமுக இயக்குநர் ரவி நெலக்குடிடியுடன் இணைந்துள்ளார்.

    சமகால காதல் கதையாக வளமான நாடகத்தன்மையுடன் தயாராகும் இந்த திரைப்படத்தை எஸ்.எல்.வி. சினிமாஸ் நிறுவனம் சார்பில், சுதாகர் செருகுரி தயாரிக்கிறார். DQ41 திரைப்படம் எஸ்.எல்.வி. சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் பத்தாவது திரைப்படம் ஆகும்.

    இப்படத்திற்கு அனய் ஓம். கோஸ்வாமி ஒளிப்பதிவு செய்கிறார். தேசிய விருதை வென்ற ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

    இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகிறது. இப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிப்பதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்திருந்தது.

    இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டே இன்று தனது 35வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். பூஜா ஹெக்டே பிறந்தநாளை முன்னிட்டு DQ41 படக்குழு சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.

    • ஆர்யன் படத்தை அறிமுக இயக்குனரான பிரவீன் இயக்கியுள்ளார்.
    • இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

    'வெண்ணிலா கபடிகுழு', 'நீர்ப்பறவை', 'முண்டாசுப்பட்டி', 'ராட்சசன்', 'கட்டா குஸ்தி' போன்ற படங்களின் மூலம் பிரபலமானவர் விஷ்ணு விஷால். இவர் கடைசியாக ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய 'லால் சலாம்' திரைப்படத்தில் நடித்து இருந்தார்.

    இதனை தொடர்ந்து தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஆர்யன்'. இப்படத்தை அறிமுக இயக்குனரான பிரவீன் இயக்கியுள்ளார். இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன் மற்றும் செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இந்நிலையில், ஜிப்ரான் இசையில் இப்படத்தில் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று விஷ்ணு விஷால் ப்ரோமோ வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளார்.

    'ஆர்யன்' படம் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் அக்டோபர் மாதம் 31-ந்தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

    • ‘சிக்கந்தர்’ தோல்விக்கு சல்மான்கான் தான் காரணம் என ஏ. ஆர் முருகதாஸ் பேசியது பேசுபொருளானது.
    • ஏ.ஆர் முருகதாஸ் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் மதராஸி திரைப்படத்தை இயக்கினார்.

    தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர். முருகதாஸ் பாலிவுட்டில் சல்மான்கானை வைத்து 'சிக்கந்தர்' படத்தை இயக்கினார். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படம் வெளியாகி மக்களிடையே போதிய வரவேற்பை பெறவில்லை.

    இப்படத்தில் காஜல் அகர்வால், சுனில் ஷெட்டி மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

    சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் சிக்கந்தர் படத்தின் தோல்வியை குறித்து ஏ. ஆர் முருகதாஸ் கூறியபோது "சிக்கந்தர் படத்தின் கதை என் மனதிற்கு மிகவும் நெருக்கமானது. ஆனால் நான் நினைத்த கதையை என்னால் திரையில் கொண்டு வரமுடியவில்லை. அதற்கு நான் மட்டும் பொறுப்பாக முடியாது.

    சல்மான் கானுக்கு மிரட்டல் இருந்ததால் அவரை வைத்து பகலில் படப்பிடிப்பு நடத்த முடியாது. இரவில் தான் படப்பிடிப்பு நடத்த முடியும். பகல் காட்சியாக இருந்தாலும், அதனை இரவில் தான் படமாக்க முடியும்.

    எல்லாமே கம்ப்யூட்டர் கிராபிக்சிலும், கிரீன் மேட்டிலும் எடுக்க வேண்டியதாக இருந்தது. அவர் படப்பிடிப்புக்கும் தாமதமாக தான் வருவார். என்னால் என்ன செய்ய முடியும்?" என்று வேதனையுடன் தெரிவித்தார்.

    'சிக்கந்தர்' தோல்விக்கு சல்மான்கான் தான் காரணம் என ஏ. ஆர் முருகதாஸ் பேசியது பெரும் பேசுபொருளானது.

    இதனை தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் மதராஸி திரைப்படத்தை இயக்கினார். இப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

    இந்நிலையில், சிக்கந்தர் படம் குறித்த ஏ. ஆர் முருகதாஸ் விமர்சனத்திற்கு சல்மான்கான் பதிலடி கொடுத்துள்ளார்.

    இந்தியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய சல்மான்கான், 'சிக்கந்தர்' படம் குறித்து மக்கள் எதிர்மறையாக கூறுகின்றனர். ஆனால் நான் அதை ஒப்புக்கொள்ளமாட்டேன். சிக்கந்தர் படத்தின் ஒன்லைன் மிகச்சிறப்பானது.

    ஆனால் நான் படப்பிடிப்பில் இரவு 9 மணிக்கு தான் கலந்துகொள்வேன். அது பிரச்சினைகளை ஏற்படுத்தியது. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் அதை தான் சொன்னார். அப்போது எனது விலா எலும்பு உடைந்திருந்தது.

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அண்மையில் 'மதராஸி' என்ற பெரிய படத்தை இயக்கினார். அந்தப் படத்தின் நாயகன் காலை 6 மணிக்கு படப்பிடிப்புக்கு வந்துவிடுவார். ஆனால், அதே சமயம் மதராஸி படம் சிக்கந்தர் படத்தை விட பெரிய ப்ளாக்பஸ்டர் ஆகிவிட்டது" என மதராஸி படத்தின் தோல்வி குறித்து கிண்டலாக தெரிவித்தார். 

    • இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.
    • பைசன் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற 17-ம் தேதி வெளியாக உள்ளது.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

    இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற 17-ம் தேதி வெளியாக உள்ளது.

    படம் வெளியாவதற்கு இன்றும் 4 நாட்களே உள்ள நிலையில் இன்று 6 மணிக்கு படத்தின் டிரெய்லர் வெளியாகும் என இயக்குநர் மாரிசெல்வராஜ் போஸ்டரை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

    கடந்த 10-ந் தேதி வெளியாகும் என தெரிவித்திருந்த நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியாகவில்லை. அதற்கு பதிலாக அமீர், துருவ் விக்ரம் மற்றும் லால் ஆகியோர் இருக்கும் புதிய போஸ்டரை வெளியிட்டு டிரெய்லர் 13- ந் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    • மகாசேனா படத்தை தினேஷ் கலைச்செல்வன் இயக்குகிறார்.
    • இந்த படம் தமிழ், கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    நடிகர் விமல் பசங்க படத்தின் மூலம் அறிமுகமாகி 'களவாணி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, கலகலப்பு' போன்ற வெற்றி படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இவரது நடிப்பில் 'சார்' படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து வெப் தொடர்கள் மற்றும் சில படங்களிலும் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

    இந்நிலையில் தினேஷ் கலைச்செல்வன் இயக்கத்தில் விமல், யோகி பாபு, ஸ்ருஷ்டி டாங்கே ஆகியோர் முதன்மை கேரக்டர்களில் நடித்து வரும் 'மகாசேனா' என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கப்பட்டது. கூடலூர் அருகே உள்ள சந்தன மலைப்பகுதியில் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது.


    இந்நிலையில், விமல் நடிக்கும் 'மகாசேனா' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பைசன் படம் படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற 17-ம் தேதி வெளியாக உள்ளது.
    • இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும்.

    இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

    இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற 17-ம் தேதி வெளியாக உள்ளது.

    இன்று இப்படத்தில் டிரெய்லர் வெளியாகும் நிலையில், இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் பா. ரஞ்சித், "ராம் சார் தான் மாரி செல்வராஜை என்னிடம் அனுப்பிவைத்தார். மெட்ராஸ் படம் மீது மாரி செல்வராஜூக்கு விமர்சனம் உள்ளது என்று கூறி தான் ராம் என்னிடம் அனுப்பினார். அப்படி தான் மாரி செல்வராஜுடன் எனக்கு அறிமுகம் கிடைத்தது. பரியேறும் பெருமாள் படத்தை விட ஒரு இயக்குநராக பைசன் படத்தில் மாரி செல்வராஜ் வளர்ச்சி அடைந்துள்ளார்" என்று தெரிவித்தார். 

    • பைசன் படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.
    • இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும்.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும்.

    இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற 17-ம் தேதி வெளியாக உள்ளது.

    இன்று இப்படத்தில் டிரெய்லர் வெளியாகும் நிலையில், இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ், "திருநெல்வேலி மாவட்டம் குறித்து என்ன மாதிரியான படம் எடுக்கலாம் என்று யோசித்து கொண்டிருந்தபோது எனக்கு கிடைத்த tool தான் மணத்தி கணேசன் அண்ணா. அவரை உதாரணமாக வைத்து என்னுடைய அரசியலை கலந்து உருவாக்கப்பட்ட படம் தான் பைசன்.

    பைசன் படத்திற்குள் தென் மாவட்டத்திற்குள் வாழ்க்கையை தொலைத்த நிறைய இளைஞர்கள் இருக்கிறார்கள். தென் தமிழ்நாட்டின் அரசியலை மையப்படுத்திய படம்தான் பைசன்

    பைசன் படத்தின் வெற்றியை விட இப்படம் இந்த சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன்" என்று தெரிவித்தார். 

    • பரியேறும் பெருமாள் படத்திற்கு பிறகு நான் மாரி செல்வராஜ் சாரின் fan ஆக மாறிவிட்டேன்.
    • பைசனுக்கு முந்தைய அனுபமா வேற.. பைசனுக்கு பிறகான அனுபமா வேற

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும்.

    இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற 17-ம் தேதி வெளியாக உள்ளது.

    இன்று இப்படத்தில் டிரெய்லர் வெளியாகும் நிலையில், இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய அனுபமா பரமேஸ்வரன், "பரியேறும் பெருமாள் படத்தில் நடிக்க ரஞ்சித் சார் எனக்கு கால் செய்தார். அந்த சமயத்தில் நான் மாரி செல்வராஜ் சாரிடம் நான் பேசினேன். அனால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது என்னுடைய துரதிஷ்டம். அதற்காக நான் ரொம்ப வருத்தப்பட்டேன். பரியேறும் பெருமாள் படத்திற்கு பிறகு நான் மாரி செல்வராஜ் சாரின் fan ஆக மாறிவிட்டேன். அதன்பிறகு நீங்கள் என்னை படத்தில் நடிக்க கூப்பிடுவீர்கள் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் பைசன் படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது.

    பைசனுக்கு முந்தைய அனுபமா வேற.. பைசனுக்கு பிறகான அனுபமா வேற... ஒரு நடிகராக வித்தியாசமான கண்ணோட்டத்தை மாரி செல்வராஜ் சார் எனக்கு கொடுத்தார்.

    • கஷ்டமான காட்சிகள் நடிக்கும்போது சியானை நினைத்துக்கொள்வேன்.
    • மாரி செல்வராஜ் 'டேக் ஓகே' என்று சொன்னாலே எனக்கு வாழ்க்கையில ஏதோ சாதிச்ச மாதிரி இருக்கும்.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும்.

    இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற 17-ம் தேதி வெளியாக உள்ளது.

    இன்று இப்படத்தில் டிரெய்லர் வெளியாகும் நிலையில், இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய துருவ் விக்ரம், "கஷ்டமான காட்சிகள் நடிக்கும்போது சியானை நினைத்துக்கொள்வேன். என் அப்பாவுடன் என்னை ஒப்பிட முடியாது. இருந்தாலும் அவரை போல நடிக்க நான் தொடர்ந்து முயற்சிப்பேன்.

    பைசன் படத்தைக் கொடுத்ததற்கு என் குரு, இயக்குனர் மாரிசெல்வராஜ் சாருக்கு நன்றி. நான் இப்படத்திற்காக 2-3 வருடங்கள் காத்திருந்தேன் என்று சிலர் கூறுகிறார்கள், இதற்காக நான் 10 வருடங்கள் கூட காத்திருப்பேன். பைசன் படப்பிடிப்பின் போது மாரி செல்வராஜ் 'டேக் ஓகே' என்று சொன்னாலே எனக்கு வாழ்க்கையில ஏதோ சாதிச்ச மாதிரி இருக்கும். உங்களுடன் மீண்டும் பணியாற்ற நான் காத்திருக்கிறேன்" என்று தெரிவித்தார். 

    'அரசன்' படத்தின் ப்ரோமோ வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்தது- The film crew announced the promo release date for the film 'Arasan'.

    நடிகர் சிலம்பரசன் 'தக் லைப்' திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் அடுத்த படத்தில் நடித்து வருகிறார்.

    இப்படம் ஒரு வடசென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகி வருகிறது. இயக்குநர் வெற்றி மாறன் 'வடசென்னை' படத்துடன் தொடர்புடைய அதே காலகட்டத்துடன் தொடர்புடைய மற்றொரு கதையைப் படமாக்கி வருகிறார்.

    இந்த படத்தில், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குனர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

    சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சென்னையில் தொடங்கியது. சிம்பு இப்படத்தில் இளமை மற்றும் முதுமை என 2 தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

    பின்னர், 'எஸ்டிஆர் 49' படத்தின் தலைப்பு 'அரசன்' என்று கலைப்புலி எஸ்.தாணு எக்ஸ் தள பக்கத்தில் போஸ்டருடன் வெளியிட்டுள்ளார். போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    இந்நிலையில், 'அரசன்' படத்தின் ப்ரோமோ வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்தது. அதன்படி, வரும் அக்டோபர் மாதம்17ம் தேதி காலை 10.07க்கு அரசன் படம் யூடியூபில் வெளியாகிறது.

    முன்னதாக, 16ம் தேதி மாலை 6.02 மணிக்கு திரையரங்குகளில் பிரத்யேகமாக ப்ரோமோ திரையிடப்படும் எனவும் தயாரிப்பாளர் தாணு அறிவித்துள்ளார்.

    மேலும், 'அரசன்' படத்தின் ப்ரோமோ அக்.16ம் தேதி பிரத்யேகமாக திரையிடப்படவுள்ள தியேட்டர்களின் பட்டியலை தயாரிப்பாளர் தாணு வெளியிட்டார். டிக்கெட் கட்டணமாக ரூ.15 செலுத்தி ப்ரோமோவைக் காணலாம் என கூறப்பட்டுள்ளது. 

    திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற 17-ம் தேதி வெளியாக உள்ளது.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும்.

    இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

    இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற 17-ம் தேதி வெளியாக உள்ளது.

    படம் வெளியாவதற்கு இன்றும் 5 நாட்களே உள்ள நிலையில் படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகிறது.

    ஒரு டிஜிட்டல் உலகிற்கும், மனிதர்களுக்குமிடையேயான போராட்டத்தை காண்பிக்கும் படம் ட்ரான் ஆரஸ்.

    டெலிஞ்சர் என்கிற நபர் தனக்கு என ஒரு டிஜிட்டல் உலகத்தை உருவாக்குகிறார். அந்த டிஜிட்டல் உலகத்தில் ஆரஸ் என்கிற ஒரு மனிதனையும் உருவாக்குகிறார். அந்த ஆரஸை டிஜிட்டல் உலகத்தில் இருந்து நிஜ உலகத்திற்கு கொண்டு வந்து ஆர்மி-க்கு கொடுக்க முயற்சிக்கிறார்.

    ஆனால், நிஜ உலகத்தில் ஆரஸால் 29 நிமிடம் மட்டுமே இருக்க முடியும். அதற்கு பிறகு, ஆரஸ் கரைந்து போய்விடும்.

    டெலிஞ்சருக்கு போட்டி கம்பெனியான என்காம் என்கிற நிறுவனத்தை சேர்ந்த ஈவ், டிஜிட்டல் உலகில் இருப்பதை நிஜ உலகில் நிரந்தரமாக கொண்டு வரும் கோட் கண்டுபிடிக்கிறார்.

    ஈவ்-ன் முயற்சியை தெரிந்துக் கொண்ட டெலிஞ்சர் உடனே என்காமின் சர்வரை ஹேக் செய்து, ஈவ்-ஐ ஆரஸ் உதவியுடன் கடத்துகிறார்.

    ஆனால், ஒரு கட்டத்தில் ஆரஸ்-க்கு கொஞ்சம் கொஞ்சமாக மனித உணர்வுகள் வர, டெலிஞ்சர் நம்மை அழிவுக்கு பயன்படுத்துகிறார் என்பது தெரிய வருகிறது. பின்னர், ஈவ் பக்கம் திரும்பும் ஆரஸ், நீ என்னை காப்பாற்றினால், நான் உன்னை நிஜ உலகிற்கு நிரந்தரமாக கொண்டு வருகிறேன் என்று டீல் போடுகிறது. அதன் பிறகு என்ன ஆகிறது என்பது மீதிக்கதை..

    நடிகர்கள்

    ஜாரெட் லெட்டோ, கிரெட்டா லீ, ஈவன் பீட்டர்ஸ், ஹசன் மிர்னாஜ், ஜோடி டர்னர்-ஸ்மித், ஆர்ட்டுரோ காஸ்ட்ரோ, கேமரூன் மோனாகன், ஜில்லியன் ஆண்டர்சன், மற்றும் ஜெஃப் பிரிட்ஜஸ் அனைவரும் கதாப்பாத்திரத்திற்கேற்ப கச்சிதமாக நடித்துள்ளனர்.

    இயக்கம்

    ஒரு டிஜிட்டல் உலகிற்கும், மனிதர்களுக்குமிடையேயான போராட்டத்தை இயக்குனர் ஜோச்சிம் ரோன்னிங் எல்லோருக்கும் புரியும் படி பிரமாண்டத்துடன் எடுத்துள்ளார்.

    அதிலும் ஈவ் சிஸ்டத்தை ஹாக் செய்யும் இடம், அதை எதோ போர் போல் 5 ப்ரோகிராம் மனிதர்கள் சாப்ட்வேர் உள்ள வருவது, அதை எதிர்க்க வரும் ஆண்டி வைரஸ் மனிதர்கள் என கற்பனை குதிரையை பறக்க விட்டுள்ளார் இயக்குனர்.

    இசை

    பின்னணி இசை அபாரம்.

    ஒளிப்பதிவு

    டெக்னிக்கலாக படம் வேற லெவல். படம் முழுக்க காட்சிகள், கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி என அனைத்தும் விஸ்வல் ட்ரீட்டாக இருந்தது.

    ×