என் மலர்
சினிமா செய்திகள்
- மகளிர் ஆணையத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரீஸில்டா புகார் .
- மாதம்பட்டி ரங்கராஜ் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருணம் செய்து ஏமாற்றி விட்டார். வயிற்றில் வளரும் குழந்தைக்கு அவர்தான் தந்தை என ஜாய் கிரிசில்டா போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் தெரிவித்திருந்தார். மேலும், சமூக வலைத்தளங்களில் இருவருக்கும் இடையிலான தொடர்பு குறித்த படங்களையும் பகிர்ந்திருந்தார்.
இதனையடுத்து சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரீஸில்டா புகார் அளித்தார்.
இந்நிலையில், ஜாய் கிரிசில்டா கொடுத்த புகாரில் நாளை (அக்டோபர் 15) மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசில்டா இருவரும் ஆஜராக மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
- அபிஷன் ஜீவின்ந்துக்கு ஜோடியாக கேரளாவில் வளர்ந்து வரும் நட்சத்திரமான அனஸ்வர ராஜன் நடித்துள்ளார்.
- இப்படத்தை ‘டூரிஸ்ட் ஃபேமிலி’, ‘லவ்வர்’ படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய மதன் இயக்கியுள்ளார்.
சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியான படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'. கடந்த மே மாதம் வெளியான இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் இயக்கி இருந்தார். இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் குடும்பம் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்து சந்திக்கும் சவால்களை காமெடி கலந்து சொல்லப்பட்டு இருந்ததால் அனைவராலும் ரசிக்கப்பட்டது.
இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் அடுத்து எந்த நடிகரை வைத்த படம் இயக்குவார் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரே கதாநாயகனாக அறிமுகமாவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூறப்பட்டது.

இந்த நிலையில், அபிஷன் ஜீவின்ந்த் கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. இப்படத்தில், அபிஷன் ஜீவின்ந்துக்கு ஜோடியாக கேரளாவில் வளர்ந்து வரும் நட்சத்திரமான அனஸ்வர ராஜன் நடித்துள்ளார்.
இப்படத்தை 'டூரிஸ்ட் ஃபேமிலி', 'லவ்வர்' படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய மதன் இயக்கியுள்ளார். MRP என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
விரைவான திட்டமிடல் மற்றும் செயலாக்கத்துடன் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து இப்படத்தின் போஸ்ட் புரோடெக்ஷன் பணிகள் நடைபெற உள்ளது. இப்பணிகள் நடைபெற்ற பிறகு படம் வெளியாவது குறித்து அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
- எப்போதும் ஒரு படத்தில் கமிட்டாகும் போது கதாநாயகனிடம் கதை சொல்லி தான் கமிட்டாவேன்.
- முதலில் கதையை ரெடி செய்த பிறகு தான் கதாநாயகனிடம் சொல்லி ஓகே வாங்குவேன்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் 'பைசன்'. இப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற 17-ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையே படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் ரசிகர்களிடையே படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இதனிடையே, 'பைசன்' படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் அடுத்து உதயநிதியின் மகன் இன்பநிதியை கதாநாயகனாக வைத்து படம் எடுக்க உள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல்கள் வெளியாயின. இருப்பினும் இத்தகவல் தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், உதயநிதியின் மகன் இன்பநிதியை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கப்போவதாக மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 'பைசன்' படம் வெளியான பிறகு தனுஷை வைத்து தான் தன் அடுத்த படத்தை தொடங்க உள்ளதாகவும், அதனை தொடர்ந்து இன்பநிதி மற்றும் கார்த்தி ஆகியோரை வைத்து படம் எடுக்க உள்ளதாகவும் கூறியுள்ளார். இதன்மூலம் இன்பநிதி திரைத்துறைக்கு வருவது உறுதியாகி உள்ளது.
மேலும் மாரிசெல்வராஜ் கூறுகையில், எப்போதும் ஒரு படத்தில் கமிட்டாகும் போது கதாநாயகனிடம் கதை சொல்லி தான் கமிட்டாவேன். ஒரு படத்தில் கமிட்டான பிறகு கதையை யோசிக்கலாம் என்று இருக்க மாட்டேன். முதலில் கதையை ரெடி செய்த பிறகு தான் கதாநாயகனிடம் சொல்லி ஓகே வாங்குவேன். கமிட்டாகிவிட்டு அதன் பிறகு நான் சொன்ன கதை அந்த கதாநாயகனுக்கு பிடிக்கவில்லை என்றால் எனக்கு கஷ்டமாக இருக்கும் என்றார்.
உதயநிதி கடைசியாக நடித்த 'மாமன்னன்' படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் தான் இன்பநிதியின் முதல் படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ரசிகர்கள் தவறு செய்யும் போதெல்லாம் நடிகர் அஜித்குமார் அவர்களை கண்டித்து வந்துள்ளார்.
- அஜித் குமாரின் இந்த செயலை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
ஸ்பெயினில் தன்னை சந்தித்த ரசிகர்கள் விசிலடித்து கூச்சலிட்டதால் சைகை மூலம் அவர்களை நடிகரும் ரேசருமான அஜித் குமார் கண்டித்த வீடியோ இணையத்தில் வைரலானது.
தன்னுடைய ரசிகர்கள் தவறு செய்யும் போதெல்லாம் நடிகர் அஜித்குமார் அவர்களை தொடர்ச்சியாக கண்டித்து வந்துள்ளார். அஜித் குமாரின் இந்த செயலை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், அஜித்குமார் குறித்து பார்த்திபன் ஒரு நேர்காணலில் பேசிய வீடியோவை எக்ஸ் பக்கத்தில் ஒருவர் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவில், "அஜித் ரொம்ப தனித்துவமானவர் அவரோட decision making எல்லாம் அவ்வளவு தெளிவா இருக்கும்" என்று பார்த்திபன் கூறியுள்ளார்.
இந்த வீடியோவை பகிர்ந்த பார்திபன், "decision ma'KING' Ajith தான்! சலனமே இல்லாத மனிதர். கவனமே சினிமா மீதும் தன் தனிப்பட்ட வாழ்க்கை மீதும். பெரும்பலம் கொண்ட தன் சினிமா புகழையும் ரசிகக் கூட்டத்தையும் அடித்தளமாக வைத்து அரசியல் மேடை அமைக்க விரும்பாதவர். தன்னை நேசிக்கும் கூட்டத்தின் பாதுகாப்பு மீது அக்கறை கொண்டவர். எனவே promotionக்கு கூட வராமல், தனக்கான உலகத்தில் பயணிக்கும் ஞானி மனநிலை மனிதர். ஆச்சர்யமான அபூர்வப் பிறவி. எல்லோருக்கும் நல்ல நண்பர்> எனக்கும்!" என்று பதிவிட்டுள்ளார்.
நடிகர் விஜய் அரசியலுக்காக தனது ரசிகர்களை பயன்படுத்தி அவர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியதாக இணையத்தில் விமர்சனங்கள் எழுந்த நிலையில், பார்த்திபனும் மறைமுகமாக அதை குறிப்பிட்டு விஜயை விமர்சித்துள்ளார்.
- ‘காந்தாரா சாப்டர்1’ படம் விரைவில் ஆயிரம் கோடியை எட்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
- வருகிற 30-ந்தேதி ‘காந்தாரா சாப்டர்1’ படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகலாம்.
2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற படம் 'காந்தாரா'. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்து இருந்தார். குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்தது.
இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவான 'காந்தாரா சாப்டர்1' கடந்த 2-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியோ, ஜெர்மனி, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, நேபாளம் உள்ளிட்ட 30 நாடுகளிலும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப்பெற்றுள்ளது.
இந்த நிலையில், 'காந்தாரா சாப்டர்1' படம் வெளியாகி 11 நாட்களில் உலக அளவில் இதுவரை ரூ.655 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 'காந்தாரா சாப்டர்1' படம் விரைவில் ஆயிரம் கோடியை எட்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற 'காந்தாரா சாப்டர்1' படம் வருகிற 30-ந்தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
- இப்படத்தை இயக்குனர் கீதா மோகன்தாஸ் இயக்குகிறார்.
- இத்திரைப்படம் அடுத்தாண்டு மார்ச் மாதம் 19-ந்தேதி வெளியாக இருக்கிறது.
கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் யாஷ். ராக்கி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து இவர் பல்வேறு படங்களில் நடித்தார். இவர் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப். திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்தப் படத்தில் நடித்து இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தார் யாஷ்.
இதைத் தொடர்ந்து நடிகர் யாஷ் "டாக்ஸிக்" என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் கீதா மோகன்தாஸ் இயக்குகிறார். இப்படம் டிரக் மாஃபியா உலகில் நடக்கும் கேங்ஸ்டர் டிராமாவாக இருக்கும் என படக்குழு தெரிவித்து இருந்தது.
இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் ப்ரோடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இத்திரைப்படம் அடுத்தாண்டு மார்ச் மாதம் 19-ந்தேதி வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், "டாக்ஸிக்" திரைப்படத்தில் யாஷ் நடித்த ஒரு காட்சி தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
வீடியோவில், மேல் சட்டை இல்லாமல் பால்கனியில் நின்று யாஷ் புகைப்பிடிப்பது போன்று வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். இப்படம் தொடர்பான எந்தவித காட்சிகளும் இணையதளத்தில் வெளியாகாமல் இருந்த நிலையில், தற்போது வெளியாகி உள்ள வீடியோ காட்சி படக்குழுவினரை கவலையடையச் செய்துள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற 17-ம் தேதி வெளியாக உள்ளது.
படம் வெளியாவதற்கு இன்றும் 4 நாட்களே உள்ள நிலையில் இன்று 6 மணிக்கு படத்தின் டிரெய்லர் வெளியாகும் என இயக்குநர் மாரிசெல்வராஜ் போஸ்டரை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
கடந்த 10-ந் தேதி வெளியாகும் என தெரிவித்திருந்த நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியாகவில்லை. அதற்கு பதிலாக அமீர், துருவ் விக்ரம் மற்றும் லால் ஆகியோர் இருக்கும் புதிய போஸ்டரை வெளியிட்டு டிரெய்லர் 13- ந் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்தது.
இன்று மாலை 6 மணிக்கு டிரெய்லர் வெளியாகும் என போஸ்டர் வெளியிடப்பட்டது. பின்னர் 7 மணிக்கு வெளியாகும் என போஸ்டர் வெளியானது.
பிறகு, பைசன் படத்தின் டிரெய்லர் இன்று இரவு 8 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது. இந்நிலையில், பைசன் பட டிரெய்லர் வெளியாகியுள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற 17-ம் தேதி வெளியாக உள்ளது.
படம் வெளியாவதற்கு இன்றும் 4 நாட்களே உள்ள நிலையில் இன்று 6 மணிக்கு படத்தின் டிரெய்லர் வெளியாகும் என இயக்குநர் மாரிசெல்வராஜ் போஸ்டரை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
கடந்த 10-ந் தேதி வெளியாகும் என தெரிவித்திருந்த நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியாகவில்லை. அதற்கு பதிலாக அமீர், துருவ் விக்ரம் மற்றும் லால் ஆகியோர் இருக்கும் புதிய போஸ்டரை வெளியிட்டு டிரெய்லர் 13- ந் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்தது.
இன்று மாலை 6 மணிக்கு டிரெய்லர் வெளியாகும் என போஸ்டர் வெளியிடப்பட்டது. பின்னர் 7 மணிக்கு வெளியாகும் என போஸ்டர் வெளியானது.
இந்நிலையில், பைசன் படத்தின் டிரெய்லர் இன்று இரவு 8 மணிக்கு நடிகர் ராணா தகுபதி வெளியிட உள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
இதற்கிடையே, பைசன் டிரெய்லர் தள்ளிப்போவதற்கு மன்னிப்பு கோரி இயக்குனர் மாரி செல்வராஜ் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில்," தவிர்க்க முடியாத காரணங்களால் டிரெய்லர் ஒரு மணி நேரம் தாமதமாகிறது. இந்த நேர தாமதத்திற்கு மிகவும் வருந்துகிறேன்! பைசன் டிரெய்லர் இன்று இரவு 8 மணிக்கு.." என்று பதிவிட்டுள்ளார்.
Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நஸ்ரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு, முழுமையாக நிறைவடைந்துள்ளது.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். சுரேஷ் குமார் எடிட்டிங் பணிகளைச் செய்துள்ளார். ராஜ்கமல் கலை இயக்கம் செய்கிறார். உடை வடிவமைப்பாளராக ப்ரியா ரவி பணியாற்றியுள்ளார்.
"டூரிஸ்ட் ஃபேமிலி" படம் மூலம் கவனம் ஈர்த்த அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் இந்த புதிய படம் அறிவிக்கப்பட்டபோதே, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில், இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் ஒரே கட்டமாக, வெறும் 35 நாட்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
முழுக்க முழுக்க நவீன கால இளைஞர்களைக் கவரும், அருமையான காதல் கதையாக உருவாகும் இப்படத்தை, "லவ்வர், டூரிஸ்ட் ஃபேமிலி" படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய, மதன் கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.
இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக, மலையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான அனஸ்வரா ராஜன் நடிக்கிறார்.
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களில், தொடர் வெற்றிப் படங்களை வழங்கி வரும் MRP Entertainment நிறுவனம், குட் நைட், லவ்வர் மற்றும் இந்த வருடத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிப்படமான டுரிஸ்ட் ஃபேமிலி படத்தின் ஹாட்ரிக் வெற்றியைத் தொடர்ந்து, இப்படத்தைத் தயாரிக்கிறது.
Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இப்படத்தை இணைந்து வழங்குகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், போஸ்ட் புரடக்க்ஷன் பணிகள் படக்குழு துவங்கவுள்ளது. விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், சிங்கிள் பற்றிய அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற 17-ம் தேதி வெளியாக உள்ளது.
படம் வெளியாவதற்கு இன்றும் 4 நாட்களே உள்ள நிலையில் இன்று 6 மணிக்கு படத்தின் டிரெய்லர் வெளியாகும் என இயக்குநர் மாரிசெல்வராஜ் போஸ்டரை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
கடந்த 10-ந் தேதி வெளியாகும் என தெரிவித்திருந்த நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியாகவில்லை. அதற்கு பதிலாக அமீர், துருவ் விக்ரம் மற்றும் லால் ஆகியோர் இருக்கும் புதிய போஸ்டரை வெளியிட்டு டிரெய்லர் 13- ந் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்தது.
இன்று மாலை 6 மணிக்கு டிரெய்லர் வெளியாகும் என போஸ்டர் வெளியிடப்பட்டது. பின்னர் 7 மணிக்கு வெளியாகும் என போஸ்டர் வெளியானது.
இந்நிலையில், பைசன் படத்தின் டிரெய்லர் (தெலுங்கு) இன்று இரவு 8 மணிக்கு நடிகர் ராணா தகுபதி வெளியிட உள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'ஜன நாயகன்'. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இத்திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. ஏனென்றால் இப்படமே நடிகர் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படம் இதுவாகும்.
இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ந்தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
இயக்குனர்கள் அட்லி, லோகேஷ் கனகராஜ் மற்றும் நெல்சன் ஆகியோர் ஜனநாயக்ன் படத்தில் கேமியோ ரோலில் ஒரு காட்சியில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
முன்னதாக ஜனநாயகன் திரைபடத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆன்ந்த் நடித்துள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், பூஜா ஹெக்டேவின் பிறந்தநாளை முன்னிட்டு, ஜனநாயகன் படத்தில் நடிக்கும் அவரது கதாப்பாத்திர பெயரை வெளியிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.
அதன்படி, 'ஜனநாயகன்' படத்தில் கயல் என்ற கதாபாத்திரத்தில் பூஜா ஹெக்டே நடிக்கிறார். இதுதொடர்பாக படக்குழு சிறப்புப் போஸ்டரை பகிர்ந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளது.

துல்கர் சல்மான்- ரவி நெலகுடிடி (Ravi Nelakuditi)- சுதாகர் செருகுரி (Sudhakar Cherukuri) - SLV சினிமாஸ்- கூட்டணியில் தயாராகி வரும் திரைப்படம் DQ 41.
துல்கர் சல்மான் அவரது 41 வது திரைப்படமான DQ 41-ல், அறிமுக இயக்குநர் ரவி நெலக்குடிடியுடன் இணைந்துள்ளார்.
சமகால காதல் கதையாக வளமான நாடகத்தன்மையுடன் தயாராகும் இந்த திரைப்படத்தை எஸ்.எல்.வி. சினிமாஸ் நிறுவனம் சார்பில், சுதாகர் செருகுரி தயாரிக்கிறார். DQ41 திரைப்படம் எஸ்.எல்.வி. சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் பத்தாவது திரைப்படம் ஆகும்.
இப்படத்திற்கு அனய் ஓம். கோஸ்வாமி ஒளிப்பதிவு செய்கிறார். தேசிய விருதை வென்ற ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகிறது. இப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிப்பதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்திருந்தது.
இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டே இன்று தனது 35வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். பூஜா ஹெக்டே பிறந்தநாளை முன்னிட்டு DQ41 படக்குழு சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.






