என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    காந்தாரா படம் விரைவில் ஆயிரம் கோடியை எட்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற படம் 'காந்தாரா'. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்து இருந்தார். குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்தது.

    இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவான 'காந்தாரா சாப்டர்1' கடந்த 2-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியோ, ஜெர்மனி, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, நேபாளம் உள்ளிட்ட 30 நாடுகளிலும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    'காந்தாரா சாப்டர்1' படம் வெளியாகி 2 வாரங்களில் உலக அளவில் இதுவரை ரூ.717.50 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படம் விரைவில் ஆயிரம் கோடியை எட்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், காந்தாரா சாப்டர் 1 படத்தின் இந்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரிஷப் ஷெட்டி ராமேஸ்வரத்தில் உள்ள ராமணதாசுவாமி கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தார்.

    அவருக்கு அங்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    கருப்பு படத்திற்கு இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

    ரெட்ரோ படத்தையடுத்து நடிகர் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் கருப்பு படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் சூர்யா நடிக்கும் 45-வது திரைப்படமாகும்.

    இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. திரிஷா படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் சூர்யா வக்கீல் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    மேலும், இவர்களுடன் ஸ்வாசிகா, மலையாள நடிகரான இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி நடித்துள்ளனர். படத்திற்கு இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

    படத்தின் ரிலீஸ் இன்னும் உறுதியாகவில்லை. திரைப்படம் பொங்கலுக்கு வெளி வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. படத்தின் ரீ -ரெகார்டிங் பணிகளை சாய் அபயங்கர் முடித்துள்ளார்.

    கருப்பு படத்தின் முதல் சிங்கிள் வெளியாகும் தேதியை படக்குழு நேற்று அறிவித்தது. அதன்படி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் 20ம் தேதி அன்று கருப்பு படத்தின் முதல் பாடல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முதல் பாடல் 'GOD MODE' நாளை வெளியாகும் நிலையில், இப்பாடலின் ப்ரோமோ இன்று மாலை வெளியாகியுள்ளது.

    • 'ஆர்யன்'. இப்படத்தை அறிமுக இயக்குனரான பிரவீன் இயக்கியுள்ளார்.
    • இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

    'வெண்ணிலா கபடிகுழு', 'நீர்ப்பறவை', 'முண்டாசுப்பட்டி', 'ராட்சசன்', 'கட்டா குஸ்தி' போன்ற படங்களின் மூலம் பிரபலமானவர் விஷ்ணு விஷால். இவர் கடைசியாக ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய 'லால் சலாம்' திரைப்படத்தில் நடித்து இருந்தார்.

    இதனை தொடர்ந்து தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஆர்யன்'. இப்படத்தை அறிமுக இயக்குனரான பிரவீன் இயக்கியுள்ளார். இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன் மற்றும் செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    ஜிப்ரான் இசையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் சமீபத்தில் வெளியானது.

    'ஆர்யன்' படம் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் அக்டோபர் மாதம் 31-ந்தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஆர்யன் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

    • டியூட் படத்திற்கு கதாநாயகியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்.
    • டியூட் படம் மக்களிடையே நல்ல அவரவேற்பை பெற்றுள்ளது.

    இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் அடுத்ததாக டியூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்.

    மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன்,டிராவிட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று முன்தினம் வெளியான இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    டியூட் படம் முதல் நாளில் உலகளவில் ரூ.22 கோடி வசூலை ஈட்டிய நிலையில், 2 நாட்களில் ரூ.45 கோடி வசூலைக் குவித்துள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

    • முதல் வாரத்தில் இயக்குநர் பிரவீன் காந்தி வெளியேற்றப்பட்டார்
    • கம்ருதீன் வெற்றிப்பெற்று எவிக்‌ஷன் ஃபிரீ பாஸ் பெற்றார்.

    சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் பல்வேறு மொழிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. 15 போட்டியாளர்கள் பல்வேறு டாஸ்க்குகளுடன் 100 நாட்கள் தங்கியிருப்பார்கள். டாஸ்க்குகளை கடந்து வெற்றியாளர்கள் இறுதியில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

    நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் புதிய மாற்றங்களுடன், நிகழ்ச்சியை கூடுதலாக விறுவிறுப்பாக்கும் வகையில் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

    குறிப்பாக போட்டியாளர்கள் பிக் பாஸ் ஹவுஸ், லக்சரி ஹவுஸ் என இரண்டு குழுக்களாக பிரித்து விளையாடி வருகின்றனர். பிக் பாஸ் ஹவுஸ் எந்தவித சலுகைகள் இல்லாமலும் லக்சரியில் சமையல் உட்பட அனைத்து சலுகைகளும் கிடைக்கும்.

    முதல் வாரத்தில் இயக்குநர் பிரவீன் காந்தி வெளியேற்றப்பட்டார். பொம்மை பொம்மை போட்டியில் பிக்பாஸ் வீட்டை சேர்ந்த கம்ருதீன் வெற்றிப்பெற்று எவிக்ஷன் ஃபிரீ பாஸ் பெற்றார். இதனால் இந்த வார எவிக்ஷன் பட்டியலில் இருந்த கம்ருதீன் விடுவிக்கப்பட்டார். எனவே மீதம் இருந்த வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர், வி.ஜே பாரு, சபரிநாதன், கெமி, ரம்யா ஜோ , எப்.ஜே , அரோரா சின்க்ளேர், அப்சரா சிஜே, ஆகிய போட்டியாளர்கள் எவிக்ஷனில் இருக்கின்றனர்.

    பிக்பாஸ் தமிழ் சீசன் 9 தொடங்கி 13 நாட்களை கடந்த நிலையில் இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர் அப்சரா சிஜே என்று தகவல் வெளியாகியுள்ளது.

    கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த திருநங்கையான அப்சரா சிஜே , மாற்று பாலினத்தவர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து செயல்பட்டுவருகிறார். 'கடந்து வந்த பாதை' டாஸ்கில் தான் எதிர்கொண்ட கஷ்டங்கள், சவால்களை அவர் பகிர்ந்துக்கொண்டது போட்டியாளர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    இதற்கு முன்னர் நமீதா மாரிமுத்து, ஷிவின் ஆகிய திருநங்கை போட்டியாளர்கள் பிக்பாஸ் போட்டியில் கலந்துகொண்ட நிலையில், இந்த முறை திருநங்கை போட்டியாளராக அப்சரா சிஜே பங்கேற்றார்.

    இரு சூழலில் வளரும் சதோதரர்கள் அரசியல் மற்றும் காதல் மூலம் எதிரிகளாக நிற்கும் கதை.

    கதாநாயகன் இஷாக் உசைனி ஆதரவற்ற இல்லத்தில் வளர்ந்து வருகிறார். இவரது தந்தையும், தம்பியும் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர்.

    இதனால், தனது தந்தையையும், அண்ணனையும் பழி வாங்க நினைக்கிறார். ஆனால், தம்பி இஷாக் உசைனி சிறு வயதில் காணாமல் போன தனது அண்ணனை காண ஏங்கிக் கொண்டிருக்கிறார். என்றைக்காவது ஒரு நாள் சந்தித்து விடுவோம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.

    வெளிநாட்டில் இருந்து வரும் தம்பி உசைனும், அண்ணனும் ஒரே பெண்ணை காதலிக்கின்றனர். இதற்கிடையே, எம்.பியாகும் முனைப்பில் இருவரும் போட்டியிடுகின்றனர்.

    தம்பியை கொலை செய்ய துடிக்கும் அண்ணன் இஷாக் உசைனியும், அண்ணன் மீது அதிக பாசம் கொண்ட தம்பியும் அரசியல் மற்றும் காதலால் சகோதரர்கள் என்று தெரியாமலேயே எதிரெதிரே நிற்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

    இந்தநிலையில், அண்ணனும்- தம்பியும் சந்தித்தார்களா? அரசியல் மற்றும் காதலில் யார் ஜெயித்தார்? என்பது மீதிக்கதை..

    நடிகர்கள்

    இஷாக் உசைனி தொழிலதிபர் மற்றம் அரசியல்வாதியாகவும், கல்லூரி மாணவராகவும் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். இரண்டு வேடங்களுக்கும் இடையே இருக்கு வேற்றுமையை வெளிப்படுத்த மெனக்கெட்டிருக்கிறார். தில்சானா மற்றும்

    ஹேமா கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். வில்லன் உள்பட அனைத்து நடிகர்களும் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப நடித்துள்ளனர்.

    இயக்கம்

    நாயகனாக நடித்து, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி தயாரித்திருக்கும் இஷாக் உசைனி அரசியல் ஆக்ஷன் மாஸ் படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார்.

    இசை

    இசையமைப்பாளர் சதாசிவ ஜெயராமனின் இசையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

    ஒளிப்பதிவு

    ஒளிப்பதிவாளர்கள் தயாள் ஓஷோ மற்றும் தேவராஜ், படத்தொகுப்பாளர் நவீன்குமார் ஆகியோர் படத்திற்கு பலம் சேர்க்க முயன்றுள்ளனர்.

    ஆர்யன் திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 31-ந்தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

    'வெண்ணிலா கபடிகுழு', 'நீர்ப்பறவை', 'முண்டாசுப்பட்டி', 'ராட்சசன்', 'கட்டா குஸ்தி' போன்ற படங்களின் மூலம் பிரபலமானவர் விஷ்ணு விஷால். இவர் கடைசியாக ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய 'லால் சலாம்' திரைப்படத்தில் நடித்து இருந்தார்.

    இதனை தொடர்ந்து தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஆர்யன்'. இப்படத்தை அறிமுக இயக்குனரான பிரவீன் இயக்கியுள்ளார். இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன் மற்றும் செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    ஜிப்ரான் இசையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் சமீபத்தில் வெளியானது.

    'ஆர்யன்' படம் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் அக்டோபர் மாதம் 31-ந்தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், ஆர்யன் படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

    • அவர்களின் திருமணம் விண்வெளியில் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
    • டாம் குரூஸ் (63) மற்றும் அனா டி அர்மாஸ் (37) ஆகியோர் நட்சத்திர ஜோடியாக வளம் வந்தனர்.

    ஹாலிவுட் நட்சத்திரங்கள் டாம் குரூஸ் (63) மற்றும் அனா டி அர்மாஸ் (37) ஆகியோர் தங்கள் காதல் உறவை முறித்துக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கடந்த 9 மாதங்களாக டேட்டிங் செய்து வந்த இந்த ஜோடி, விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக சமீபத்தில் வதந்தி பரவியது.

    அவர்களின் திருமணம் விண்வெளியில் நடைபெறும் என்று கூட வதந்தி பரவியது. ஆனால் மாறாக இருவரும் பிரிந்துவிட்டதாக அமெரிக்க ஊடங்கங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

     தங்கள் உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதில் இருவருக்கும் இடையிலான ஆர்வம் குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது.

    இந்த உறவு எதிர்காலத்தில் நீண்ட காலம் நீடிக்காது என்று உணர்ந்த இருவரும், இணக்கமாகப் பிரிவது நல்லது என்று முடிவு செய்துள்ளனர் என நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வயது வித்தியாசம் காரணமாக அவர்கள் திருமணம் செய்துகொள்ள தயங்கியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. 

     

    கருப்பு படத்திற்கு இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

    ரெட்ரோ படத்தையடுத்து நடிகர் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் கருப்பு படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் சூர்யா நடிக்கும் 45-வது திரைப்படமாகும்.

    இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. திரிஷா படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் சூர்யா வக்கீல் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    மேலும், இவர்களுடன் ஸ்வாசிகா, மலையாள நடிகரான இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி நடித்துள்ளனர். படத்திற்கு இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

    படத்தின் ரிலீஸ் இன்னும் உறுதியாகவில்லை. திரைப்படம் பொங்கலுக்கு வெளி வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. படத்தின் ரீ -ரெகார்டிங் பணிகளை சாய் அபயங்கர் முடித்துள்ளார்.

    இந்நிலையில், கருப்பு படத்தின் முதல் சிங்கிள் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் 20ம் தேதி அன்று கருப்பு படத்தின் முதல் பாடல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சீன உணவுப்பொருள் நிறுவனமான சிங் நிறுவன விளம்பரம் ஒன்றை அட்லி இயக்கியுள்ளார்.
    • இந்த விளம்பரத்தில் ரன்வீர் சிங், ஸ்ரீலா, பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர்.

    இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் உலக அளவில் ரூ.1000 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.

    இந்நிலையில், சீன உணவுப்பொருள் நிறுவனமான சிங் நிறுவன விளம்பரம் ஒன்றை அட்லி இயக்கியுள்ளார். இந்த விளம்பரத்தில் ரன்வீர் சிங், ஸ்ரீலா, பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர்.

    ரூ.150 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த விளம்பரம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான படத்தின் டிரெய்லர் போல உள்ளது. பல பாலிவுட் படங்களின் பட்ஜெட்டை விட இந்த விளம்பரத்தின் பட்ஜெட் அதிகம் என்பதால் இந்த விளம்பரம் அனைவரின் கவனத்தியும் ஈர்த்துள்ளது.

    இந்த விளம்பரத்தில் சிங் நிறுவனத்தின் ஏஜெண்டாக ரன்வீர் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார். பாபி தியோல் வில்லனாக நடித்துள்ளார்.

    ரன்வீர் சிங் இதற்கு முன்பும் சிங் நிறுவனத்தின் விளம்பரங்களில் நடித்திருந்தார். ரோஹித் ஷெட்டி இயக்கிய இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் விளம்பரத்தில் தமன்னாவுடன் இணைந்து ரன்வீர் சிங் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கும்கி படத்தில் மதி மற்றும் அர்ஜுன் தாஸ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    பிரபுசாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கும்கி'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

    மேலும், இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த சுகுமாருக்கும் நல்ல பெயர் கிடைத்தது. இந்தப் படத்தைத் தொடர்ந்து பல்வேறு பெரிய படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வந்தார்.

    தொடர்ந்து, பிரபு சாலமன்- சுகுமார் கூட்டணி மீண்டும் இணைந்து 'கும்கி 2' படத்தை உருவாக்கி வருகின்றனர். இந்தப் படம் முழுக்க காடுகளுக்குள்ளே படமாக்கப்பட்டுள்ளது.

    'கும்கி 2' படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்தில் மதி மற்றும் அர்ஜுன் தாஸ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இந்நிலையில், கும்கி 2 படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. டீசரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். கும்கி 2 படம் வரும் நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது. விஜய் சேதுபதி டீசருடன், வாழ்த்து தெரிவித்து பதிவு வெளியிட்டுள்ளார்.

    அதில்,"ஒரு மனிதனுக்கும் யானைக்கும் இடையிலான நட்பு மற்றும் பிணைப்பைப் பற்றிய அழகான கதை. முழு குழுவினருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நடிகரும், இயக்குனருமான பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டியூட் படம் தீபாவளிக்கு வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது.

    இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையை அடுத்த தண்டலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது.

    இந்த படத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 20 வயது துணை நடிகை ஒருவர் நடித்து உள்ளார். இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக இவர் மகாராஷ்டிராவில் இருந்து சென்னை வந்தார்.

    ரெயில் மூலமாக சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் வந்து இறங்கிய துணை நடிகை அங்கிருந்து விழா நடைபெற்ற கல்லூரிக்கு கால் டாக்சி மூலமாக சென்றுள்ளார். அப்போது கால் டாக்ஸி டிரைவர் துணை நடிகையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு உள்ளார்.

    இதுபற்றி துணை நடிகை விழா முடிவடைந்ததும், பெரியமேடு போலீஸ் நிலையத்திற்கு சென்று பரபரப்பு புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போலீஸ் விசாரணையில் கார் டிரைவர் பெயர் கணேச பாண்டியன் என்பது தெரிந்தது. அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னை மாநகரில் கால் டாக்சிகளில் பயணம் செய்பவர்கள் பாலியல் தொல்லைக்கு உள்ளாவது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை போலீசார் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கையை பயணிகள் எழுப்பி உள்ளனர்.

    ×