என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kanthara"

    பிரபல நடிகருக்கும்.. அவரை உருவாக்கிய இயக்குனருக்கும் இடையே ஏற்படும் ஈகோ பிரச்சனையை சுவாரஸ்யமாக சொல்லப்பட்டிருக்கும் கதை "காந்தா".

    பிளாக் அண்ட் ஒயிட் காலகட்டத்தில் கதை நகருகிறது. அந்த காலத்தில் பிரபல நடிகராக இருக்கும் துல்கர் சல்மான், அவரை உருவாக்கிய இயக்குநர் சமுத்திரக்கனி மற்றும் நாயகி பாக்யஸ்ரீயை சுற்றிதான் கதையின் முதல் பாதி அமைந்திருக்கிறது.

    இயக்குநர் சமுத்திரகனி கனவு கதையாக உருவாக்கும் திரைப்படம் சாந்தா. சாதாரணமாக இருந்த துல்கர் சல்மானை நடிப்பின் சக்கரவார்த்தியாக காரணமான சமுத்திரகனியின் படத்தில் நடிக்க வைக்க முயற்சிக்கிறார்.

    ஆனால், கதையின் கிளைமேக்ஸில் மாற்றம் வேண்டும் என்று துல்கர் சல்மான் தயாரிப்பு நிறுவனத்திடம் பேசுகிறார். என் கதையை எப்படி நீ மாற்ற முயற்சிக்கலாம் என்று துல்கர் சல்மானுக்கும்- சமுத்திரகனிக்கும் இடையே ஈகோ பிரச்சனை எழுகிறது.

    இந்த ஈகோ பிரச்சனைக்கு இடையே படத்தை எப்படியாவது முடிக்க வேண்டும் என்று சமுத்திரகனி நாயகனின் அடாவடியை பொறுத்துக் கொண்டாலும், தான் எழுதிய கிளைமேக்ஸூடன் படம் முடிய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். இதற்கிடையே, துல்கர் சல்மான் மற்றும் நாயகி பாக்யஸ்ரீ இடையே புரிதல் ஏற்படுகிறது. பாக்யஸ்ரீயின் உதவியை சமுத்திரகனி நாடுகிறார்.

    இந்த மோதல் இறுதியில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பது படத்தின் மீதிக்கதை

    நடிகர்கள்

    பழம்பரும் நடிகர் கதாபாத்திரத்தில் நடிப்பு சக்கரவர்த்தி என்ற பட்டப்பெயருடன் நடித்திருக்கும் துல்கர் சல்மான், நடிப்பில் பிச்சி உதறியிருக்கிறார். அவரது தோற்றம், பிரமிக்க வைக்கும் நடிப்பு கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்.

    பழம்பெரும் இயக்குநர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சமுத்திரக்கனி வேறு ஒரு பரிணாமத்தில் அசத்தலாக நடித்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் பாக்யஸ்ரீ-க்கு, அந்த காலத்து நடிகையின் முக அழகு. கதாப்பாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.

    காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ராணா டகுபதியின் நடிப்பு அதிரடியாக அமைந்துள்ளது.

    இயக்கம்

    பழம்பெரும் நடிகர் ஒருவரின் கதாப்பாத்திரத்தை மையமாக கொண்டு இயக்குநர் செல்வமணி செல்வராஜ் கதையை எழுதியிருக்கிறார். அதை திரைக்கதையாக மாற்றி சுவாரஸ்யமாக நகர்த்திச் சென்றிருக்கிறார். படத்தின் நீளம் சற்று அதிகம் என்றாலும், ஆங்காக்கே சில தொய்வுகள் இருந்தாலும் படம் ரசிக்கும்படியும், விறுவிறுப்பாகவும் செல்கிறது.

    இசை

    படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு கச்சிதம்.

    ஒளிப்பதிவு

    ஒளிப்பதிவாளர் டானி சஞ்செஸ் லோபெஸின் ஒளிப்பதிவு அந்த காலத்திற்கே நம்பை பயணிக்க வைக்கிறது.

    • படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இப்படத்தின் ஆங்கில வெர்ஷன் நேற்று வெளியானது.
    • தீபாவளியையொட்டி வெளியான இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் குவித்து வருகிறது.

    ஒவ்வொரு மாதமும் ரசிகர்களின் விருப்பத்திற்கேற்ப படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், அக்டோபர் மாதம் 'இட்லி கடை', 'காந்தாரா சாப்டர்1', 'டியூட்', 'பைசன்', 'ஆர்யன் ', 'ஆண் பாவம் பொல்லாதது', 'தடை அதை உடை', 'தேசிய தலைவர்', 'ராம் அப்துல்லா ஆண்டனி', 'மெசஞ்சர்', 'பரிசு' உள்ளிட்ட பல படங்கள் வெளியாகின.

    இந்த நிலையில், தமிழ் சினிமா அக்டோபர் மாதத்தில் தமிழகத்தில் மட்டும் 200 கோடி ரூபாயை தாண்டி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, 'இட்லி கடை', 'காந்தாரா சாப்டர்1', 'டியூட்', 'பைசன்' ஆகிய 4 படங்கள் மட்டுமே இணைந்து இந்த வசூல் சாதனையை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.

    இட்லி கடை

    தனுஷ் இயக்கி நடித்த படம் 'இட்லி கடை' இப்படத்தில் நித்யா மேனன், ஷாலினி பாண்டே, அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்து உள்ளனர். இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வசூலும் குவித்து வருகிறது.

    காந்தாரா சாப்டர்1

    பலதரப்பு மக்களால் ரசிக்கப்படும் 'காந்தாரா சாப்டர்1' வசூலில் சாதனை படைத்து வருகிறது. படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இப்படத்தின் ஆங்கில வெர்ஷன் நேற்று வெளியானது.

    டியூட்

    கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் 'டியூட்'. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார். இப்படத்தில் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன், டிராவிட் மற்றும் பலர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தீபாவளியையொட்டி வெளியான இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் குவித்து வருகிறது.

    பைசன்

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் 'பைசன்'. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் வசூல் குவித்து வருகிறது.

    காந்தாரா சாப்டர் 1 உலக அளவில் ரூ.803 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்தது.

    2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற படம் 'காந்தாரா'. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்து இருந்தார். குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்தது.

    இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவான 'காந்தாரா சாப்டர்1' கடந்த 2-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியோ, ஜெர்மனி, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, நேபாளம் உள்ளிட்ட 30 நாடுகளிலும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப்பெற்றுள்ளது.

    பலதரப்பு மக்களால் ரசிக்கப்படும் 'காந்தாரா சாப்டர்1' வெளியான 20 நாட்களில் உலக அளவில் ரூ.803 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்தது.

    இதைதொடர்ந்து,'காந்தாரா சாப்டர்1' படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இப்படத்தின் ஆங்கில வெர்ஷன் வருகிற 31-ந்தேதி உலகெங்கும் வெளியாக உள்ளது.

    கன்னட வெர்ஷனின் நீளம் 169 நிமிடங்களாக உள்ள நிலையில், ஆங்கில வெர்ஷன் சற்று குறைவாக 134 நிமிடங்கள் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் ஆங்கிலத்தில் டப்பிங் செய்து திரையரங்குகளில் வெளியிடப்படும் முதல் இந்தியத் திரைப்படம் என்ற பெருமையை 'காந்தாரா சாப்டர்1' பெறுகிறது.

    இந்நிலையில்,'காந்தாரா சாப்டர் 1' திரைப்படம் ஒடிடியில் வெளியாகும் தேதி குறித்து படக்குழு தெரிவித்துள்ளது.

    அதன்படி, ரிஷப் ஷெட்டி, ருக்மிணி வசந்த் நடிப்பில் வெளியாகி உலகெங்கும் வசூல் வேட்டை செய்து வரும் 'காந்தாரா சாப்டர் 1' திரைப்படம் அக்.31ம் தேதி பிரைம் வீடியோவில் வெளியாகிறது.

    காந்தாரா படம் விரைவில் ஆயிரம் கோடியை எட்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற படம் 'காந்தாரா'. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்து இருந்தார். குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்தது.

    இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவான 'காந்தாரா சாப்டர்1' கடந்த 2-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியோ, ஜெர்மனி, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, நேபாளம் உள்ளிட்ட 30 நாடுகளிலும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    'காந்தாரா சாப்டர்1' படம் வெளியாகி 2 வாரங்களில் உலக அளவில் இதுவரை ரூ.717.50 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படம் விரைவில் ஆயிரம் கோடியை எட்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், காந்தாரா சாப்டர் 1 படத்தின் இந்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரிஷப் ஷெட்டி ராமேஸ்வரத்தில் உள்ள ராமணதாசுவாமி கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தார்.

    அவருக்கு அங்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    • படத்தின் வெற்றி ரிஷப்ஷெட்டியையும், கதாநாயகியான ருக்மிணி வசந்த்தையும் உலக அளவில் பிரபலமாக்கி இருக்கிறது.
    • சமூக வலைதள பக்கங்களிலும் ரிஷப்ஷெட்டி, ருக்மிணி வசந்த் பெயர்கள் டிரெண்டிங்காகி வருகிறது.

    ரிஷப் ஷெட்டி, ருக்மினி வசந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'காந்தாரா சாப்டர்-1' சர்வதேச அளவில் வெளியான இந்த படம் திரைக்கு வந்து ரூ.1000 கோடி வசூலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. படத்தின் வெற்றி ரிஷப்ஷெட்டியையும், கதாநாயகியான ருக்மிணி வசந்த்தையும் உலக அளவில் பிரபலமாக்கி இருக்கிறது.

    இது மட்டுமின்றி சமூக வலைதள பக்கங்களிலும் ரிஷப்ஷெட்டி, ருக்மிணி வசந்த் பெயர்கள் டிரெண்டிங்காகி வருகிறது. மேலும் ஐ.எம்.டி.பி. வெளியிட்டுள்ள டிரெண்டிங் பட்டியலில் முதல் 2 இடங்களை ரிஷப்ஷெட்டியும், ருக்மிணி வசந்தும் பெற்றுள்ளனர்.

    ரிஷப் முதல் இடத்தையும் 2-ம் இடத்தை ருக்மிணி வசந்தும், 3-வது இடத்தில் மோனாசிங், 4-வது இடத்தில் ஹிருத்திக் ரோஷன் பெயரும் இடம் பெற்று உள்ளன.

    'காந்தாரா சாப்டர்1' படம் விரைவில் ஆயிரம் கோடியை எட்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற படம் 'காந்தாரா'. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்து இருந்தார். குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்தது.

    இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவான 'காந்தாரா சாப்டர்1' கடந்த 2-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியோ, ஜெர்மனி, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, நேபாளம் உள்ளிட்ட 30 நாடுகளிலும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப்பெற்றுள்ளது.

    'காந்தாரா சாப்டர்1' படம் வெளியாகி 11 நாட்களில் உலக அளவில் இதுவரை ரூ.700 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. 'காந்தாரா சாப்டர்1' படம் விரைவில் ஆயிரம் கோடியை எட்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    படம் வெளியாவதற்கு முன்பே காந்தாரா சாப்டர் 2 படத்தின் டிரெயிலர் வெளியான நிலையில், படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு மற்றும் தீபாவளியை முன்னிட்டு படக்குழு புதிய டிரெயிலரை வெளியிட்டுள்ளது.

    இந்த டிரெயிலர் ஜெட் வேகத்தில் பார்வையாளர்களை கடந்து சென்றுக்கொண்டிருக்கிறது.

    • 'காந்தாரா' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • இப்படம் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நெகிழ்ச்சியுடன் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

    நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது. முதலில் இந்த படம் கன்னட மொழியில் மட்டுமே வெளியிடப்பட்டது. கர்நாடகாவில் விமர்சன ரீதியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், நல்ல வசூலையும் குவித்தது.


    காந்தாரா

    இதையடுத்து, படத்தை மற்ற மொழிகளில் வெளியிட படத்தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் முடிவு செய்து. இதனடிப்படையில் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக காந்தாரா திரைப்படம் வெளியிடப்பட்டது. தற்போது அனைத்து மொழிகளிலும் இந்த படம் வசூலில் சாதனை படைத்துள்ளது.


    ஆர்.கே.சுரேஷ்

    இந்த படத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நடிகர் ரஜினிகாந்த் உள்பட பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், 'காந்தாரா' திரைப்படம் பார்த்த தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ் கூறியதாவது, "இந்துத்துவா படமாக நான் இதை பார்க்கவில்லை. அன்று வெளியான அம்மன் படம் முதல் இன்று வெளியான காந்தாரா வரை அனைத்தையும் ஆன்மிக படங்களாகதான் பார்க்கிறேன். நம்ம ஊரு கருப்பண்ணசாமி தான் அங்கு காந்தாரா. ஆன்மிக படங்கள் என்றைக்கும் வெற்றிபெரும். " என்று குறிப்பிட்டுள்ளார்.

    • நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘காந்தாரா’.
    • இந்த திரைப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்றது.

    நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த 'காந்தாரா' திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது. முதலில் இந்த படம் கன்னட மொழியில் மட்டுமே வெளியிடப்பட்டது. கர்நாடகாவில் விமர்சன ரீதியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், நல்ல வசூலையும் குவித்தது. இதையடுத்து, படத்தை மற்ற மொழிகளில் வெளியிட படத்தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் முடிவு செய்து. இதனடிப்படையில் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் சமீபத்தில் 'காந்தாரா' திரைப்படம் வெளியிடப்பட்டது.


    காந்தாரா

    தற்போது அனைத்து மொழிகளிலும் இந்த படம் வசூலில் சாதனை படைத்துள்ளது. இந்த படத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நடிகர் ரஜினிகாந்த் உள்பட பலரும் பாராட்டினர். இந்த நிலையில், 'காந்தாரா' திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை ரூ.400 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


    காந்தாரா

    அதன்படி, கேரளாவில் ரூ.19.2 கோடியையும், வட இந்தியாவில் ரூ.96 கோடியையும், தெலுங்கில் ரூ.60 கோடியையும், தமிழ்நாட்டில் 12.70 கோடியையும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கர்நாடகாவில் மட்டும் ரூ.168.5 கோடி ரூபாயை படம் வசூலித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் வெளிநாட்டில் ரூ.44 கோடியை வசூலித்திருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • ’கே.ஜி.எஃப்’, ‘காந்தாரா’ போன்ற படங்களை தயாரித்த நிறுவனம் ஹோம்பாலே பிலிம்ஸ்.
    • இந்நிறுவனம் திரைத்துறையில் மூவாயிரம் கோடி முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

    'கே.ஜி.எஃப். 1', 'கே.ஜி.எஃப் 2', 'காந்தாரா' போன்ற பிரம்மாண்டமான படங்களை தயாரித்து ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்திருக்கும் தயாரிப்பு நிறுவனம் ஹோம்பாலே பிலிம்ஸ். இந்நிறுவனத்தின் உரிமையாளரான தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர், பார்வையாளர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து, எதிர்கால திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.


    தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர்

    இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, " எங்கள் மீது அசைக்க முடியாத அன்பையும், ஆதரவையும் பொழியும் உங்கள் அனைவரையும் பாராட்டுகிறேன். கடந்த ஆண்டு எங்களுக்கு சிறந்த ஆண்டாகவும், நிறைவானதாகவும் இருந்தது- இது உங்கள் அன்பு மற்றும் ஆதரவினால் மட்டுமே சாத்தியமானது. அதற்காக மீண்டும் ஒரு முறை அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் இந்த நட்புறவு தொடரும் என்றும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து இலக்குகளை எட்டுவோம் என்றும் நம்புகிறேன்.


    தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர்

    சினிமா, வலிமையான பொழுதுபோக்கு ஊடகம் என்பது பழங்காலத்திலிருந்தே உள்ளது. நேர்நிலையாகவோ அல்லது எதிர்நிலையாகவோ அதிர்வை ஏற்படுத்தியிருந்தாலும், அது நிம்மதி மற்றும் மகிழ்ச்சியின் மிகப்பெரிய ஊடகமாக இருந்து வருகிறது. இது நமது கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் வரலாற்றின் வலுவான சாட்சியாக இருந்து வருகிறது, இதன் மூலம் நமது அடையாளத்தை உலகிற்கு பெரிய அளவில் வெளிப்படுத்தி வருகிறோம்.


    ஹோம்பாலே பிலிம்ஸ் அறிக்கை

    பன்முகத்தன்மை கொண்ட நம் இந்தியாவிலுள்ள இளைஞர்களிடம் இருக்கும் பரந்த திறனை வெளிக்கொணர ஒரு வாய்ப்பை நமக்கு வழங்குகிறது. இந்த புதிய ஆண்டை நாங்கள் தொடங்கும்போது, நீடித்த நினைவாற்றலைக் கொண்டிருக்கக்கூடிய மற்றும் உங்கள் மீது அழியாத தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஆழ்ந்த அனுபவத்துடன், அழுத்தமான உள்ளடக்கத்தை தயாரிக்கவிருப்பதாக உறுதியளிக்கிறோம். இந்த ஆர்வத்தை மனதில் கொண்டு, எதிர் வரும் ஐந்து ஆண்டுகளில் மூவாயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்வோம் என்று உறுதியளிக்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளது.

    ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தற்போது 'சலார்', 'ரகு தாத்தா', 'டைசன்', 'ரிச்சர்ட் ஆண்டனி' போன்ற படங்களை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த திரைப்படம் 'காந்தாரா' .
    • ரூ.8 கோடி செலவில் தயாரான காந்தாரா ரூ.400 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.

    நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த 'காந்தாரா' திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது. முதலில் இந்த படம் கன்னட மொழியில் மட்டுமே வெளியிடப்பட்டது. கர்நாடகாவில் விமர்சன ரீதியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், நல்ல வசூலையும் குவித்தது.


    காந்தாரா

    இதையடுத்து, படத்தை மற்ற மொழிகளில் வெளியிட படத்தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் முடிவு செய்து, இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் சமீபத்தில் 'காந்தாரா' திரைப்படம் வெளியிடப்பட்டது. ரூ.8 கோடி செலவில் தயாரான காந்தாரா ரூ.400 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.


    காந்தாரா போஸ்டர்

    இந்நிலையில், 'காந்தாரா' திரைப்படம் 100 நாட்களை எட்டியுள்ளது. இது குறித்து இயக்குனர் ரிஷப் ஷெட்டி தனது சமூக வலைதளத்தில், "நாம் எப்போதும் போற்றும் ஒரு திரைப்படம் நமது வேர்களை திரும்பி பார்க்க வைத்து கலாச்சாரத்தின் மீது பிரம்மிப்பை ஏற்படுத்தும். இதை சாத்தியப்படுத்திய அனைவருக்கும் நன்றி" என பதிவிட்டுள்ளார்.



    ×