என் மலர்
நீங்கள் தேடியது "ஆர் கே சுரேஷ்"
- விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' திரைப்படத்தில் சீமான் நடித்துள்ளார் .
- சீமான் அடுத்ததாக தர்மயுத்தம் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
நடிகர் மற்றும் இயக்குனர் சீமான் தற்போது முழு நேர அரசியலில் பிஸியாக இருந்தாலும், அவ்வப்போது சில படங்களில் நடித்து வருகிறார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' திரைப்படத்தில் சீமான் விவசாயியாக நடிப்பதாக தகவல் வெளியானது. மு.களஞ்சியம் சீமானை நாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.
இதைத்தொடர்ந்து சீமான் அடுத்ததாக தர்மயுத்தம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் காவல் அதிகாரியாக நடித்துள்ளார்.
படக்குழு வெளியிட்ட இந்த போஸ்டரில் 'தீர விசாரிப்பதே மெய்' என்ற ஹேஷ்டேக் உடன் வெளியாகியுள்ளது, சீமான், அனு சித்தாரா மற்றும் ஆர்கே சுரேஷ் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர் சுப்பிரமணியம் என்பவர் எழுதி இயக்கும் இந்த படத்தை ஆதம்பாவா மற்றும் சிவக்குமார் ஆகியோர் தயாரித்து வருகின்றனர். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் சூரி அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார். திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- 'காந்தாரா' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
- இப்படம் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நெகிழ்ச்சியுடன் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது. முதலில் இந்த படம் கன்னட மொழியில் மட்டுமே வெளியிடப்பட்டது. கர்நாடகாவில் விமர்சன ரீதியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், நல்ல வசூலையும் குவித்தது.

காந்தாரா
இதையடுத்து, படத்தை மற்ற மொழிகளில் வெளியிட படத்தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் முடிவு செய்து. இதனடிப்படையில் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக காந்தாரா திரைப்படம் வெளியிடப்பட்டது. தற்போது அனைத்து மொழிகளிலும் இந்த படம் வசூலில் சாதனை படைத்துள்ளது.

ஆர்.கே.சுரேஷ்
இந்த படத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நடிகர் ரஜினிகாந்த் உள்பட பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், 'காந்தாரா' திரைப்படம் பார்த்த தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ் கூறியதாவது, "இந்துத்துவா படமாக நான் இதை பார்க்கவில்லை. அன்று வெளியான அம்மன் படம் முதல் இன்று வெளியான காந்தாரா வரை அனைத்தையும் ஆன்மிக படங்களாகதான் பார்க்கிறேன். நம்ம ஊரு கருப்பண்ணசாமி தான் அங்கு காந்தாரா. ஆன்மிக படங்கள் என்றைக்கும் வெற்றிபெரும். " என்று குறிப்பிட்டுள்ளார்.






