என் மலர்
சினிமா செய்திகள்
- இந்த வாரம் நடைபெற்ற ஹோட்டல் டாஸ்கின் விருந்தினராக பழைய போட்டியாளர்கள் களமிறக்கினர்.
- சாண்ட்ரா தனக்கு கொடுத்த சீக்ரெட் டாஸ்க்கை வெற்றிகரமாக முடித்தார்.
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் பல்வேறு மொழிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. 15 போட்டியாளர்கள் பல்வேறு டாஸ்க்குகளுடன் 100 நாட்கள் தங்கியிருப்பார்கள். டாஸ்க்குகளை கடந்து வெற்றியாளர்கள் இறுதியில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் புதிய மாற்றங்களுடன், நிகழ்ச்சியை கூடுதலாக விறுவிறுப்பாக்கும் வகையில் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
குறிப்பாக போட்டியாளர்கள் பிக் பாஸ் ஹவுஸ், லக்சரி ஹவுஸ் என இரண்டு குழுக்களாக பிரித்து விளையாடி வருகின்றனர். பிக் பாஸ் ஹவுஸ் எந்தவித சலுகைகள் இல்லாமலும் லக்சரியில் சமையல் உட்பட அனைத்து சலுகைகளும் கிடைக்கும்.
முதல் வாரத்தில் இயக்குநர் பிரவீன் காந்தியும் 2 ஆம் வாரம் அப்சரா சிஜேவும் 3 ஆம் வாரத்தில் ஆதிரையும் 4 ஆம் வாரத்தில் கலையரசனும் வெளியேற்றப்பட்டனர்.
கடந்த வாரம் லக்சரி ஹவுஸ் கிடையாது என்றும் அனைத்து போட்டியாளர்களும் பிக் பாஸ் வீட்டில் இருக்க வேண்டும் என்று புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டது.
இந்த வாரம் நடைபெற்ற ஹோட்டல் டாஸ்கின் விருந்தினராக பழைய போட்டியாளர்கள் களமிறக்கினர். இதில் தீபக், பிரியங்கா, மஞ்சரி ஆகியோர் பங்கேற்றனர். உள்ளே வந்த அவர்கள், போட்டியாளர்களின் செயல்களுக்கு ஸ்டார் கொடுத்தார்கள். வைல்ட் கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்த சாண்ட்ரா தனக்கு கொடுத்த சீக்ரெட் டாஸ்க்கை முடித்து பிக்பாஸ் வீட்டர்களை அழவைத்து சம்பவம் செய்தார்.
இந்த வார எவிக்ஷன் பட்டியலில் வைல்ட் கார்டு போட்டியாளர்கள் தவிர மற்ற பெரும்பாலான போட்டியார்கள் இடம் பெற்றிருந்த நிலையில், துஷார் இந்த வாரம் வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த டபுள் எவிக்ஷன் நடந்ததாகவும் அதில் 2 ஆவது நபராக பிரவீன் வெளியேற்றப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
- கௌரி கிஷனை டார்கெட் செய்யும் அளவிற்கு யூடியூபர் கேள்விகளை எழுப்பினர்.
- கௌரி கிஷனின் துணிச்சல் இணையத்தில் பாராட்டுகளை பெற்றது
அபின் ஹரிஹரன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஆதித்யா மாதவன் மற்றும் 96 பட நடிகை கௌரி கிஷன் நடிப்பில் அதர்ஸ் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் நாளை திரைக்கு வர உள்ளது.
இப்படத்தின் முந்தைய செய்தியாளர் சந்திப்பு கடந்த 30 ஆம் தேதி நடைபெற்றது. படத்தின் பாடலில் நடிகையை தூக்கினீர்களே நடிகையின் எடை என்ன? என கதாநாயகனிடம் யூடியூபர்கள் கேள்வி எழுப்பினர்.
இது தொடர்பாக மற்ற தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் பேசிய கௌரி கிஷன் இதுபோன்ற ஸ்டுப்பிட்டான கேள்விகள் எழுப்பப்படுகிறது. இதுபோன்ற கேள்விகள் சரியான கேள்விகள் அல்ல என அந்த விமர்சனம் தொடர்பாக பேசியிருந்தார்.
இந்த நிலையில் அண்மையில் நடைபெற்ற அதர்ஸ் பட செய்தியாளர் சந்திப்பில், நடிகை கௌரி கிருஷ்ணனை டார்கெட் செய்யும் அளவிற்கு யூ டியூபர்கள் இருவர் மாறி மாறி கேள்விகளை எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த நடிகை கௌரி கிருஷ்ணன் உடல் எடை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி என்னை உருவக் கேலியை செய்ததற்கு சமம். கதாநாயகனிடம் என்னைப் பற்றி கேட்டாலும் என்னுடைய எடை தொடர்பாகவே எழுப்பப்பட்ட கேள்வி எனவே அந்த கேள்வி தொடர்பாக நான் விமர்சனம் செய்திருந்தேன் என நிதானமாக பதில் அளித்தார்.
கௌரி கிஷனின் இந்த துணிச்சல் இணையத்தில் பாராட்டுகளை பெற்றது. பல நடிகர்கள் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். நடிகர் சங்கமும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கௌரி கிஷன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், "ஒருவரின் உடல் அமைப்பு அல்லது தோற்றத்தை குறிவைக்கும் கேள்விகள் எந்த சூழலிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதே கேள்வியை ஒரு நடிகரிடம் கேட்பார்களா? என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. இருப்பினும் சம்பந்தப்பட்ட யூடியூபரை குறிவைத்து விமர்சிக்க வேண்டாம்.
மேலும் எனக்குக் கிடைத்த அனைத்து ஆதரவிற்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இது நான் எதிர்பார்க்காதது" என்று தெரிவித்திருந்தார்
இந்நிலையில், நடிகை கவுரி கிஷனின் எடை குறித்து அநாகரிக கேள்வி எழுப்பியது தொடர்பாக வருத்தம் தெரிவித்து யூடியூபர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், நடிகை கவுரி கிஷனின் எடை குறித்து தான் எழுப்பிய கேள்வி தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக யூடியூபர் R.S.கார்த்திக் விளக்கம் அளித்துள்ளார். மேலும், தனது கேள்வியால் வருத்தம் ஏற்பட்டிருந்தால் நடிகை கவுரி கிஷனிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக அவர் தெரிவித்தார்.
- இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த மாதம் 17-ந்தேதி வெளியானது.
- இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலை குவித்து வருகிறது.
கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் 'டியூட்'. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார். இப்படத்தில் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன், டிராவிட் மற்றும் பலர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த மாதம் 17-ந்தேதி வெளியானது. தன் மாமன் பெண்ணை காதலித்து திருமணம் செய்ய தயாராகும் நாயகனுக்கு, அப்பெண்ணுக்கு வேறொருவர் பிடித்திருப்பது தெரிந்தும் திருமணம் செய்து பின்னர், அப்பெண்ணை அவரது காதலனுடன் சேர்த்து வைக்க நாயகன் பாடுபடுவதும், அதன்பின் நாயகனுக்கு திருமணம் செய்து வைக்க நாயகி பாடுபடுவதும் என சாதிக்கு எதிராக படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலை குவித்து வருகிறது.
இதனிடையே, 'டியூட்' படம் ஓ.டி.டி. தளத்தில் எப்போது வெளியாகும் என காத்திருந்த ரசிகர்களுக்கு தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, 'டியூட்' படம் வருகிற 14-ந்தேதி வெள்ளிக்கிழமை நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
திரையரங்குகளில் வசூலை குவித்த 'டியூட்' படத்திற்கு ஓ.டி.டி. தளத்திலும் கவனம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் ரஜினிகாந்தின் அண்ணன் சத்யநாராயண ராவுக்கு திடீரென உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரஜினியின் மூத்த சகோதரர் சத்யநாராயணாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தனது அண்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவலை அறிந்து நடிகர் ரஜினிகாந்த் உடனடியாக பெங்களூரு புறப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
- கௌரி கிஷனின் துணிச்சல் இணையத்தில் பாராட்டுகளை பெற்றது.
- நடிகர் சங்கமும் கௌரி கிஷனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தது.
அபின் ஹரிஹரன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஆதித்யா மாதவன் மற்றும் 96 பட நடிகை கௌரி கிஷன் நடிப்பில் அதர்ஸ் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் நாளை திரைக்கு வர உள்ளது.
இப்படத்தின் முந்தைய செய்தியாளர் சந்திப்பு கடந்த 30 ஆம் தேதி நடைபெற்றது. படத்தின் பாடலில் நடிகையை தூக்கினீர்களே நடிகையின் எடை என்ன? என கதாநாயகனிடம் யூடியூபர்கள் கேள்வி எழுப்பினர்.
இது தொடர்பாக மற்ற தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் பேசிய கௌரி கிஷன் இதுபோன்ற ஸ்டுப்பிட்டான கேள்விகள் எழுப்பப்படுகிறது. இதுபோன்ற கேள்விகள் சரியான கேள்விகள் அல்ல என அந்த விமர்சனம் தொடர்பாக பேசியிருந்தார்.
இந்த நிலையில் அண்மையில் நடைபெற்ற அதர்ஸ் பட செய்தியாளர் சந்திப்பில், நடிகை கௌரி கிஷனை டார்கெட் செய்யும் அளவிற்கு யூ டியூபர்கள் இருவர் மாறி மாறி கேள்விகளை எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த நடிகை கௌரி கிஷன் உடல் எடை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி என்னை உருவக் கேலியை செய்ததற்கு சமம். கதாநாயகனிடம் என்னைப் பற்றி கேட்டாலும் என்னுடைய எடை தொடர்பாகவே எழுப்பப்பட்ட கேள்வி எனவே அந்த கேள்வி தொடர்பாக நான் விமர்சனம் செய்திருந்தேன் என நிதானமாக பதில் அளித்தார்.
கௌரி கிஷனின் இந்த துணிச்சல் இணையத்தில் பாராட்டுகளை பெற்றது. பல நடிகர்கள் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். நடிகர் சங்கமும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கௌரி கிஷன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், "இந்த வார தொடக்கத்தில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின் போது, எனக்கும் ஒரு யூடியூபருக்கும் இடையே ஒரு வாக்குவாதம் ஏற்பட்டு எதிர்பாராத விதமாக பதட்டமாக மாறியது.
ஒரு நபரின் உடல் அல்லது தோற்றத்தை குறிவைக்கும் கருத்துகள் அல்லது கேட்கப்படும் கேள்விகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த சூழலிலும் சரியானது கிடையாது. அதே சமயம் சம்பந்தப்பட்ட யூடியூபரை குறிவைத்து விமர்சிக்க வேண்டாம்.
விமர்சனங்கள் எனது தொழிலின் ஒரு பகுதியாக இருப்பதை புரிந்திருக்கிறேன். ஆனால் ஒருவரின் உடல் அமைப்பு அல்லது தோற்றத்தை குறிவைக்கும் கேள்விகள் எந்த சூழலிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இதே கேள்வியை ஒரு நடிகரிடம் கேட்பார்களா? என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. அந்த தருணத்தில் உறுதியுடன் நின்றது எனது கடமை என நினைக்கிறேன். இது எனக்காக மட்டுமல்ல. இதேபோன்ற அனுபவங்களை சந்தித்த அனைவருக்குமானது.
படம் பற்றும் என்னுடைய நடிப்பை பற்றியும் கேட்கப்படும் கேள்விகளை தான் நான் விரும்புகிறேன். ஒரு கடினமான சூழ்நிலையில் என் நிலைப்பாட்டில் நான் உறுதியாக நிற்க முடிந்ததற்கு எனக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
எனக்கு நடந்தது ஒன்றும் புதிதல்ல. அது பல இடங்களில் நடந்து வருகிறது. பாடி ஷேமிங் செய்வதை இது இயல்பாக்குகிறது. நமது அசௌகரியத்தை வெளிப்படுத்தவும், தவறு செய்யும்போது கேள்வி கேட்கவும் நமக்கு உரிமை உண்டு.
மேலும் எனக்குக் கிடைத்த அனைத்து ஆதரவிற்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இது நான் எதிர்பார்க்காதது. உங்கள் ஆதரவிற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம், அம்மா சங்கம் (மலையாள திரைப்படத் துறை), தென்னிந்திய நடிகர் சங்கம் ஆகியவற்றிற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் மற்றும் உங்கள் அசைக்க முடியாத ஆதரவிற்கு பொதுமக்களுக்கு நன்றி. எனது சக ஊழியர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து எனக்கு ஆதரவு அளித்த தொழில்துறையில் உள்ள அனைவருக்கும் நன்றி" என்று தெரிவித்துள்ளார்.
பள்ளி மற்றும் கல்லூரியில் காதல் தோல்விகளை சந்தித்த நாயகன் கிஷன் தாஸ், மேட்ரிமோனியல் கம்பெனியில் வேலைக்கு சேர்கிறார். அங்கு மேனேஜராக இருக்கும் நாயகி ஷிவாத்மிகாவுடன் சில சண்டைகள் போடுகிறார். பிறகு ஒரு கட்டத்தில் அவரையும் காதலிக்க ஆரம்பிக்கிறார். அவரோ காதலுக்கு ஓகே சொல்லும் நேரத்தில் சில காரணங்களால் பிரிகிறார்.
இறுதியில் கிஷன் தாஸ், ஷிவாத்மிகா இருவரும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா? ஷிவாத்மிகா, கிஷன் தாசை விட்டு செல்ல காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் கிஷன் தாஸ், பள்ளி மாணவன், கல்லுாரி மாணவன், வேலைக்கு செல்லும் இளைஞன் என மூன்று தோற்றங்களில் நடித்து அசத்தி இருக்கிறார். அந்தந்த கால கட்டத்திற்கு ஏற்ப நடிப்பை வெளிப்படுத்தி இருப்பது சிறப்பு.
நாயகியாக நடித்திருக்கும் ஷிவாத்மிகா, துணிச்சலான பெண்ணாக நடித்து கவர்ந்து இருக்கிறார். கோபம், பாசம், காதல் என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் கவனிக்க வைத்து இருக்கிறார்.
நண்பராக நடித்து இருக்கும் ஹர்சத் கான் பல இடங்களில் சிரிக்க வைத்து இருக்கிறார். விடிவி கணேஷ் அனுபவ நடிப்பை கொடுத்து இருக்கிறார். அம்மா பாசத்தில் நெகிழ வைத்து இருக்கிறார். மற்ற கதாபாத்திரத்தில் நடித்து இருப்பவர்கள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.
இயக்கம்
காதலை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் சாரங் தியாகு. இயக்குனர் கவுதம் மேனனின் உதவியாளராக பணியாற்றியதால் அவருடைய சாயல் ஆங்காங்கே தெரிகிறது.
சிலம்பரசனின் பின்னணி குரல் படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது. காதலை தேடி போக முடியாது... கொடுக்க தான் முடியும்... நீ எப்போ கொடுக்குற இடத்துல இருக்கியோ... காதல் உன்னை தேடி வரும்... அதுதான் காதல்... என்று சொல்லி இருக்கிறார் இயக்குனர். காதல் காட்சிகள் அழுத்தம் இல்லாதது வருத்தம். மேட்ரிமோனியல் சம்பந்தப்பட்ட காட்சிகள் அதிகம் வருவதை குறைத்து இருக்கலாம். பிரிவதற்கான காரணம் பெரியதாக ஒர்க்கவுட் ஆகவில்லை.
இசை
சித்து குமாரின் இசையில் பாடல்கள் அனைத்தும் தாளம் போட வைக்கிறது. பின்னணி இசையை ரசிக்கும் படி கொடுத்து இருக்கிறார்.
ஒளிப்பதிவு
கவுதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்து இருக்கிறது.
- இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் 9-ந்தேதி வெளியாகிறது.
- இன்று மாலை வெளியாகும் பாடலை எதிர்நோக்கி காத்திருக்கும் ரசிகர்களுக்கு மற்றொரு தகவலும் வெளியாகி உள்ளது.
எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்துள்ள திரைப்படம் 'ஜன நாயகன்'. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. ஏனென்றால் இப்படமே நடிகர் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமாக இருக்கும் எனவும் அதற்கு பின் முழுநேர அரசியலில் விஜய் ஈடுபடபோவதாக கூறப்படுகிறது.
மேலும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் 9-ந்தேதி வெளியாகிறது. இதற்கிடையே, இப்படத்திற்கான ப்ரேமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனிடையே, 'ஜன நாயகன்' படத்தின் 'தளபதி கச்சேரி' எனத் தொடங்கும் பாடல் இன்று மாலை 6.03-க்கு வெளியாகும் என்றும் இப்பாடலை விஜய் பாடியிருப்பதாக கூறப்படுகிறது.
இன்று மாலை வெளியாகும் பாடலை எதிர்நோக்கி காத்திருக்கும் ரசிகர்களுக்கு மற்றொரு தகவலும் வெளியாகி உள்ளது.
அதாவது, 'ஜன நாயகன்' படத்தின் ஆடியோ வெளியீடு குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி டிசம்பர் மாதம் 27-ந்தேதி மலேசியாவில் நடைபெறுவதாக கூறப்படுகிறது.
அடுத்தடுத்து 'ஜன நாயகன்' படம் குறித்த அப்டேட்கள் வெளியாகி வருவதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்துள்ள திரைப்படம் 'ஜனநாயகன்'. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. ஏனென்றால் இப்படமே நடிகர் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமாக இருக்கும் எனவும் அதற்கு பின் முழுநேர அரசியலில் விஜய் ஈடுபடபோவதாக கூறப்படுகிறது.
மேலும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9-ந்தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
ஜனநாயகன் முதல் பாடல் இன்று (நவம்பர் 8) வெளியாகும் என படக்குழு நேற்று முன்தினம் போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.
இந்நிலையில், 'தளபதி கச்சேரி' எனத் தொடங்கும் அந்த பாடல் இன்று மாலை 6.03-க்கு வெளியாகிறது என கேவிஎன் புரொடக்ஷன்ஸ் வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.
இந்த வீடியோவில் விஜய் நடிப்பில் வெளியான ஹிட் படங்களின் பாடல்கள் மீண்டும் நினைவுக்கு கொண்டு வரும் வகையில் தொகுக்கப்பட்டுள்ளது.
இந்த பாடல் விஜய் குரலில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
- தி ஃபேமிலி மேன்' வெப் தொடர் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
- தி பேமிலி மேன் 2 தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆக்ஷன் இன்வெஸ்டிகேடிவ் த்ரில்லர் தொடர்களை விரும்பிப் பார்க்கக் கூடியவர்கள் இடையே தி ஃபேமிலி மேன்' வெப் தொடர் பெரும் வரவேற்பை பெற்றது.
சமந்தா நடிப்பில் இந்தியில் உருவாகி வெளியான 'தி பேமிலி மேன் 2 வெப் தொடரில் ஈழத்தமிழர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக தமிழ்நாட்டில் கண்டனக் குரல்கள் எழுந்தது.
இந்நிலையில், தி பேமிலி மேன் வெப் தொடரின் 3 ஆம் பாகம் உருவாகியுள்ளது. இந்த தொடரில் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த சீசனை ராஜ் & டிகே உடன் இணைந்து சுமன்குமார் மற்றும் துஷார் இயக்கியுள்ளனர்
தி பேமிலி மேன் வெப் தொடரின் 3 ஆம் பாகம் நவம்பர் 21 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 'தி ஃபேமிலி மேன்' வெப் தொடரின் சீசன் - 3 டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
- ஆலுவாவை சேர்ந்த ஐ.டி. ஊழியர் நண்பர்களுடன் மது அருந்த வந்தார்.
- ஐ.டி.ஊழியரை காரில் கடத்தி சென்று, வெடிமரா பகுதியில் வைத்து தாக்கினர்.
கேரளாவை சேர்ந்த பிரபல நடிகை லட்சுமி மேனன். தமிழில் கும்கி, வேதாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து உள்ளார். கொச்சி அருகே ஆலுவா நகரில் வசித்து வருகிறார். கடந்த ஆகஸ்டு 24-ந்தேதி எர்ணாகுளம் பானர்ஜி சாலையில் உள்ள மதுபாருக்கு லட்சுமி மேனன் தனது 4 நண்பர்களுடன் சென்றதாக தெரிகிறது.

அங்கு ஆலுவாவை சேர்ந்த ஐ.டி. ஊழியரான ஷா சலீம் என்பவர் நண்பர்களுடன் மது அருந்த வந்தார். அப்போது அவருக்கும், லட்சுமி மேனனுக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து ஷா சலீமை காரில் கடத்தி சென்று, வெடிமரா பகுதியில் வைத்து தாக்கினர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார், நடிகை லட்சுமி மேனன், அவரது நண்பர்கள் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் லட்சுமி மேனன் முன்ஜாமீன் கேட்டு கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இதைத்தொடர்ந்து சமாதான பேச்சுவார்த்தை மூலம் இந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டதாக நடிகை லட்சுமி மேனன், ஐ.டி. ஊழியர் ஆகிய 2 பேரும் ஐகோர்ட்டில் தெரிவித்தனர். இதை பரிசீலித்த நீதிபதி டயஸ் தலைமையிலான அமர்வு, நடிகை லட்சுமி மேனன் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.
- மலையாள சினிமாவின் ‘லேடி சூப்பர் ஸ்டார்' என்று அழைக்கப்படுபவர்.
- 47 வயதிலும் இளம் நடிகைகளுக்கு இணையாக படங்கள் நடித்து வருகிறார்.
மலையாள சினிமா கொண்டாடும் முன்னணி நடிகைகளில் ஒருவர் மஞ்சு வாரியர். மோகன்லால், மம்முட்டி என முன்னணி நடிகர்களுடன் படங்கள் நடித்த இவர் தமிழில் 'அசுரன்', 'துணிவு', 'விடுதலை-2', 'வேட்டையன்' போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
மலையாள சினிமாவின் 'லேடி சூப்பர் ஸ்டார்' என்று அழைக்கப்படும் மஞ்சு வாரியர், 47 வயதிலும் இளம் நடிகைகளுக்கு இணையாக படங்கள் நடித்து வருகிறார். ஆக்ஷன் காட்சிகளிலும் அசத்துகிறார்.
இந்தநிலையில் 'இப்போதும் அதே ஸ்டைல் மற்றும் இளமையுடன் நீங்கள் வலம் வருகிறீர்களே... அதன் ரகசியம் என்ன? என்று கேட்கப்பட்டது. அதற்கு, ''உடற்பயிற்சி மற்றும் நடனம் தான் காரணம். சரியான உணவு முறைகளும் என்னை பாதுகாப்பதாக உணருகிறேன்'' என்று சிரித்தபடி கூறுகிறார்.
மஞ்சு வாரியர் தினமும் தவறாமல் 'ஜிம்'முக்கு சென்று உடற்பயிற்சியில் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது.
- திரைப்படம் சார்ந்த ஆவணப்படங்கள், ஆய்வறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட உள்ளன.
- சிறப்பு ஆய்வரங்குகள், பயிற்சி பட்டறைகளும் நடைபெறவுள்ளன.
கோவாவில் ஒவ்வொரு ஆண்டும் இந்திய சர்வதேச திரைப்பட விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் நடைபெறும் மிக முக்கியமான திரைப்பட விழாக்களில் இதுவும் ஒன்று. இது உலகளாவிய திரைப்படங்களையும், உள்ளூர் திறமைகளையும் வெளிப்படுத்துகிறது.
அந்தவகையில் இந்த ஆண்டுக்கான திரைப்பட விழா, கோவாவில் வருகிற 20-ந்தேதி தொடங்கி 24-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் பல்வேறு மொழிகளில் வெளியான திரைப்படங்கள் வெளியிடப்படுகின்றன.
மேலும் திரைப்படம் சார்ந்த ஆவணப்படங்கள், ஆய்வறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட உள்ளன. சிறப்பு ஆய்வரங்குகள், பயிற்சி பட்டறைகளும் நடைபெறவுள்ளன.
இதில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் சினிமாவில் 50 ஆண்டுகளைக் கடந்துள்ளதைச் சிறப்பிக்கும் வகையில் சிறப்பு விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அத்துடன் சிறந்த நடிப்புக்கான விருதுகளும் பிரபலங்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்த விழாவை இந்திய தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் மற்றும் கோவா மாநில அரசு ஆகியவற்றால் இணைந்து நடத்தப்படுகிறது.






