என் மலர்
சினிமா செய்திகள்
- நான் வரலாமா என்று அவரிடம் கேட்டேன்.
- அவரை தொந்தரவு செய்ய நான் விரும்பவில்லை.
நடிகர் சிலம்பரசன் தற்போது இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகும் "அரசன்" திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து இவர் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
முன்னதாக நடிகர் சிலம்பரசன் துபாயில் வைத்து நடிகர் அஜித் குமாரை சந்தித்து இருந்தார். சிலம்பரசன் - அஜித் குமார் சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டது. சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடிய நடிகர் சிலம்பரசன் துபாயில் வைத்து நடிகர் அஜித் குமாரை சந்தித்தது பற்றி மனம் திறந்துள்ளார்.
இது குறித்து பேசிய சிலம்பரசன், "நான் ஒரு நகைக்கடை திறப்பு விழாவுக்காக துபாய் சென்றிருந்தேன். அஜித் குமாரின் பந்தயப் பயிற்சி செய்யும் இடம் வழியிலேயே இருந்தது. நான் அவரை நீண்ட நாட்களாக சந்திக்க திட்டமிட்டிருந்தேன், இப்போது சரியான வாய்ப்பு கிடைத்தது. அதே நேரத்தில், பந்தயத்தின் போது அவரை தொந்தரவு செய்ய நான் விரும்பவில்லை. அதனால், நான் வரலாமா என்று அவரிடம் கேட்டேன். AK வரச் சம்மதித்து என்னை சந்தித்தார். என்னை சந்தித்த பிறகு AK மிகவும் மகிழ்ச்சியடைந்தார், மேலும் தனது பந்தயம் குறித்து மிக விரிவாக பகிர்ந்துகொண்டார். நானும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன்," என தெரிவித்தார்.
- இயக்குநர் தீரவ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மெல்லிசை’ படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
- பல படங்களில் வில்லனாகவும், குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.
கடந்த 2007-ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கிய 'பொல்லாதவன்' படத்தில் வில்லன் கதாபாத்திரல் நடித்து தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமானவர் நடிகர் கிஷோர். இப்படத்தை தொடர்ந்து 'ஜெயம் கொண்டான்', 'வெண்ணிலா கபடிக்குழு', 'விடுதலை', 'வேட்டையன்', 'பொன்னியின் செல்வன்' உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.
இதை தொடர்ந்து தற்போது இயக்குநர் தீரவ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மெல்லிசை' படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை 'வெப்பம் குளிர் மழை' படத்தைத் தயாரித்த ஹேஷ்டேக் எப்டிஎப்எஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இதில் தனன்யா, சுபத்ரா ராபர்ட், ஜார்ஜ் மரியன், ஹரிஷ் உத்தமன், ஜஸ்வந்த் மண்டன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
பல படங்களில் வில்லனாகவும், குணசித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்ட நடிகர் கிஷோர் தற்போது பிரதமர் மோடி குறித்து பேசியுள்ள கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
நடிகர் கிஷோர் சமீபத்தில் அளித்த பேட்டியில், "வாழ்க்கையில் பின்னால் போகும் வாய்ப்பு இருந்தால் 2014ஆம் ஆண்டுக்கு சென்று பிரதமரை மாற்றிவிடுவேன். இந்தியாவே மாறியிருக்கும். நாடு இப்போது ஆபத்தான நிலைமையில் இருக்கிறது. வெறுப்புணர்வு நாட்டில் அதிகம் இருக்கிறது. இப்படியே போனால் இதை மாற்றுவதற்கு பல வருடங்கள் ஆகிவிடும். வெறுப்புணர்வை முதலீடாக வைத்து ஆட்சிக்கு வருபவர்கள் ரொம்ப ஆபத்தானவர்கள். அன்பு இல்லை என்றால் இங்கே எதுவுமே இருக்காது," என்று கூறியுள்ளார்.
- ஹாலிவுட்டில் 2006-ம் ஆண்டு வெளியான ‘அபோகலிப்டோ' படத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது.
- அவரது மரணத்துக்கு நுரையீரல் புற்றுநோய் காரணம் என்று கூறப்படுகிறது.
ஹாலிவுட்டில் 2006-ம் ஆண்டு வெளியான 'அபோகலிப்டோ' படத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது. அந்த படத்தில் 'மிடில் ஐ' என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டியவர், ஜெரார்டோ டராசெனா. அதில் கதாநாயகனை காடு, மலை என துரத்திச் சென்று கொல்லத்துடிக்கும் கதாபாத்திரத்தில் மிரட்டலான நடிப்பைக் கொடுத்தார்.
இதுதவிர 'நார்கோஸ்', 'குயின் ஆப் தி சவுத்', 'தி வயலின்', 'சர்வைவிங் மை குயின்செனரா', 'டெக்சாஸ் ரைசிங்', 'டையாபிளாரோ' போன்ற பல படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த ஜெரார்டோ டராசெனா மெக்சிகோவில் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 55. அவரது மரணத்துக்கு நுரையீரல் புற்றுநோய் காரணம் என்று கூறப்படுகிறது.
ஜெரார்டோ டராசெனா மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
- ஒரு கிராம் ஒரு லட்ச ரூபாயை நெருங்கும்போது, லட்சக்கணக்கான உயிர்கள் கொல்லப்படுவது உறுதியாகிவிடும்.
- ஒரு செயலின் மூலம் உலகமகா உன்னத மனுஷியாக அவதாரம் எடுத்திருக்கிறார்.
குப்பையில் கிடந்த 45 சவரன் நகையை நேர்மையுடன் ஒப்படைத்த தூய்மைப் பணியாள் பத்மாவின் செயலை பாராட்டி, அவருக்கு பாதணி அணிவித்து பாத பூஜை செய்து நடிகர் பார்த்திபன் கௌரவப்படுத்தினார். இது தொடர்பாக நடிகர் பார்த்திபன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தங்கத்தின் மதிப்பு ஏற ஏற, மனிதத்தின் மரியாதை குறைந்துகொண்டே போய், ஒரு கிராம் ஒரு லட்ச ரூபாயை நெருங்கும்போது, லட்சக்கணக்கான உயிர்கள் கொல்லப்படுவது உறுதியாகிவிடும்.
வருடத்தில் 360 நாளாவது உழைக்கும் துப்புரவு பணியாளர் திருமதி பத்மா அவர்கள், குப்பையில் கிடந்த 360 கிராம் நகையை உரியவரிடம் சேர்ப்பித்து, அந்த ஒரு செயலின் மூலம் உலகமகா உன்னத மனுஷியாக அவதாரம் எடுத்திருக்கிறார்.
என்னை Chief Guest-ஆக அழைத்த எத்திராஜ் கல்லூரிக்கு, நான் வெறும் Guest-ஆகவும் Chief-ஆக திருமதி பத்மாவை அழைத்துச் சென்று, பாதணி அணிவித்து, பாத பூஜை செய்து, புடவை போர்த்தி, 'உலக அழகி' என்ற கிரீடம் சூட்டி நான் பேரழகன் ஆனேன்... என்று கூறியுள்ளார்.
- காதலை எப்படி சொல்லாமல் மறைத்து வந்தார்களோ, அதேபோல திருமண நிச்சயதார்த்தம் குறித்தும் இதுவரை இருவருமே வெளிப்படையாக சொல்லவில்லை.
- ராஷ்மிகா கையில் இருக்கும் நிச்சய மோதிரம் இதை உறுதி செய்துள்ளது.
எப்போது தான் இவர்கள் திருமணம் நடக்கும்? என்று எதிர்பார்த்த நிலையில், கடந்த ஆண்டு ஐதராபாத்தில் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா திருமண நிச்சயதார்த்தம் ரகசியமாக நடந்து முடிந்தது. காதலை எப்படி சொல்லாமல் மறைத்து வந்தார்களோ, அதேபோல திருமண நிச்சயதார்த்தம் குறித்தும் இதுவரை இருவருமே வெளிப்படையாக சொல்லவில்லை. ஆனாலும் ராஷ்மிகா கையில் இருக்கும் நிச்சய மோதிரம் இதை உறுதி செய்துள்ளது.
இதற்கிடையில் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா திருமணம் வருகிற 26-ந்தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்பூர் அரண்மனையில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ராஷ்மிகாவிடம், 'உதய்பூரில் வருகிற 26-ந்தேதி திருமணமா?' என்று கேட்கப்பட்டது. இதற்கு அப்படியெல்லாம் இல்லையே... என்று பதிலளித்துள்ளார் ராஷ்மிகா.
ராஷ்மிகாவின் இந்த திகைப்பூட்டும் பதிலால் மறுபடியும் ரசிகர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ராம் சரண்- இயக்குனர் சங்கர் கூட்டணியில் வெளியான 'கேம் சேஞ்சர்' திரைப்படம் மக்களிடையே போதிய வரவேற்பை பெறவில்லை.
இந்த படத்தை தொடர்ந்து இயக்குநர் புச்சி பாபு இயக்கத்தில் 'பெத்தி' படத்தில் ராம் சரண் நடித்து வருகிறார். இப்படத்தை ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.
இப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் சிகிரி பாடலின் லிரிக்கள் வீடியோ உள்பட பாடல்கள் வெளியானது.
இந்நிலையில், 'பெத்தி' திரைப்படம் வரும் ஏப்ரல் 30ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இப்படம் மார்ச் 27ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், புதிய வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்தது.
இயக்குனர் கே.ஆர்.வினோத் இயக்கத்தில், லெனின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ரெட் லேபிள். ரெவ்ஜென் பிலிம் பேக்டரி சார்பில் தயாரிக்கப்பட்டு இப்படத்திற்கு பொன்.பார்த்திபன் எழுதியுள்ளார்.
இப்படத்திற்கு, கைலாஷ் மேனன் இசையமைத்துள்ளார். முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர் ஆர். வி. உதயகுமார் நடித்துள்ளனர். கவுரவ வேடத்தில் முனிஷ்காந்த் நடிக்க, இயக்குநர் அனுமோகன் தருண், கெவின், கார்மேகம் சசி,அனுஷா ஆகியோரும் நடித்துள்ளனர்.
ரெட் லேபிள் வரும் 6ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், சென்னை பிரசாத் லேபில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.
நிகழ்ச்சியில் படத்தின் தயாரிப்பாளரும், கதாநாயகனாக நடித்துள்ள லெனின் பேசியதாவது:-
முதலில் 2023-ல் கதை தேர்வானது, கதை பிடித்துவிட்டது. ஆனால் எந்தப் படம் வந்தாலும் நமது படத்தில் உள்ள காட்சிகள் இருப்பதுபோல் தோன்றியது. அதனால் போன ஆண்டில் வந்த அனைத்து படங்களையும் பார்த்து விட்டேன்.
வாரம் எட்டு படம் வருகிறது. எல்லாவற்றிலும் நாங்கள் நினைத்தது வந்தது போலவே தோன்றும். இருந்தாலும் கதை வலுவாக இருந்ததால் தைரியமாக இருந்தோம்.
நான் படப்பிடிப்பில் கேட்கிற அளவுக்கெல்லாம் வசதிகள் செய்து கொடுக்க மாட்டேன். ஒரு காட்சியில் 10 நாற்காலிகள் வேண்டுமென்றால் ஐந்து தான் கொடுப்பேன். இப்படித்தான் நான் தேவையற்ற செலவுகளைக் குறைத்துக் கொண்டு மிச்சப்படுத்தினேன்.
இந்த சினிமாவில் எதற்கெடுத்தாலும் கமிஷன் என்கிற போக்கு இருக்கிறது. இது மிகவும் தவறானது. இதைப் பார்த்த போது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. சினிமாவில் கமிஷன்கள் ஒழிக்கப்பட வேண்டும்.
படம் தொடங்கும்போதே பெப்ஸி பிரச்சினை வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. தொடர்ந்து போன்கள் வந்து கொண்டே இருந்தன. ஆறாவது நாள் நாங்கள் படத்தை நிறுத்தி விடுவோம் என்றார்கள். படப்பிடிப்பை நிறுத்தி விடுவோம் என்றார்கள்.
எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நாம் முதல் போட்டு படம் எடுக்கிறோம். அவர்கள் என்ன நிறுத்துவது என்று நானே நிறுத்திவிட்டேன். ஆறாவது நாளே படப்பிடிப்பு நின்று விட்டது. பலருக்கும் இந்தப் படம் தொடருமா என்கிற சந்தேகம் வந்திருக்கும்.
இப்படி 2023 இல் கதை விவாதத்தில் தொடங்கி 2026 வெளியாகிற தேதி வரை ஏதாவது தடைகள், முரண்பாடுகள் இருந்து கொண்டே தான் இருந்தன. இருந்தாலும் இயக்குநரும் மற்றவர்களும் இணைந்து இந்தப் படத்தை முடித்து இருக்கிறோம்.
இது எப்படி இடையில் அவ்வளவு கமிஷன் போகிறது. சம்பளம் வாங்குவது மட்டும் போதாதா? கமிஷன் ஏன் வாங்குகிறார்கள்? சினிமாவில் கமிஷனை ஒழிக்க வேண்டும்.
சங்கர் சார் லஞ்சத்தை ஒழிப்பதற்குப் படம் எடுத்தது மாதிரி இதையும் ஒழிக்கப் படமாக எடுக்க வேண்டும். இந்த கமிஷன் சினிமாவில் வெகு சகஜமாக இருக்கிறது .
இந்தப் படத்தில் நாங்கள் நியாயமாக உழைத்திருக்கிறோம். ஏதாவது எடுத்து ஒப்பேற்றி விடலாம் என்று நாங்கள் நினைக்கவில்லை. அதனால் தான் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எங்கள் மீது நம்பிக்கை வைத்து எங்களை ஊக்கப்படுத்தி இந்தப் படத்தை வெளியிடுகிறார்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- உஸ்தாத் பகத் சிங் படத்தில் ஸ்ரீலீலா நடித்துள்ளது.
- இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
தெலுங்கு பவர் ஸ்டார் பவன் கல்யாண் ஒரு புறம் ஆந்திர துணை முதல்வராக இருந்துகொண்டு மறுபுறம் படங்களிலும் நடித்து வருகிறார். இயக்குநர் ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் 'உஸ்தாத் பகத் சிங்' என்ற படத்தில் பவன் நடித்துள்ளார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில், பவன் கல்யாணுக்கு ஜோடியாக அவரை விட 30 வயது இளையவரான ஸ்ரீலீலா நடிக்கிறார். இந்தப் படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், `உஸ்தாத் பகத் சிங்' திரைப்படம் வருகிற மார்ச் 26ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் நடிகர் பார்த்திபன், ராஷி கண்ணா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் நாட்களில் இந்தப் படம் குறித்து அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என்று தெரிகிறது.
- எல்மா பிக்சர்ஸ் தமிழகமெங்கும் இந்தப் படத்தை வெளியிடுகிறது.
- "மங்காத்தா" மட்டும் தான் வெற்றி பெற்றது.
STR பிறந்தநாளைத் தொடர்ந்து அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான பிளாக்பஸ்டர் படமான சிலம்பாட்டம் திரைப்படம், வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகிறது. முன்னணி வெளியீட்டு நிறுவனமான எல்மா பிக்சர்ஸ் தமிழகமெங்கும் இந்தப் படத்தை வெளியிடுகிறது.
மறுவெளியீட்டை ஒட்டி சென்னையில் நடைபெற்ற விழாவில், இயக்குநர் Tராஜேந்தர் பேசும் போது, "என் மகன் சிலம்பரசன் பிறந்த நாள் கொண்டாட்டத்தை, "சிலம்பாட்டம்" படத்தோடு கொண்டாடும் அனைவருக்கும் நன்றி. எல்மா பிக்சர்ஸ் எத்தில் ராஜ், ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் குகன் ஆகிய இருவருக்கும் என் நன்றி. இயக்குநர் சரவணன் காலம் கடந்து நிற்கும் அருமையான ஆக்சன் படத்தை தந்துள்ளார். நான் என் பையன் நடித்ததில் வியந்து பார்த்த காதல் படம், விண்ணைத் தாண்டி வருவாயா!, நானும் பல காதல் படங்களை எடுத்திருக்கிறேன். ஆனால் என்னையே வியக்க வைத்த படம், விண்ணைத் தாண்டி வருவாயா."
"அதே போல ஆக்சன் படம் என்று எடுத்துக்கொண்டால், எத்தனையோ படங்கள் ரீ-ரிலீஸ் ஆகிறது. ஆனால், "மங்காத்தா" மட்டும் தான் வெற்றி பெற்றது. ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. ஏன் வேறுபடங்களுக்கு கூட்டம் வரவில்லை? அது போல இந்த "சிலம்பாட்டம்" கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும். இந்தப்படம் இந்த காலகட்டத்திற்கு ஏற்றார் போல மீண்டும் டிஜிட்டல் செய்துள்ளார்கள். ஒவ்வொரு ஃபிரேமும் அவ்வளவு கலர்ஃபுல்லாக இருக்கிறது."
"சரவணன் அடிப்படையில் கேமராமேன். அத்தனை அற்புதமாக எடுத்துள்ளார். இந்தப்படத்தில் நடித்த பிரபு, சந்தானம், சினேகா என எல்லோரும் அட்டகாசமாக நடித்துள்ளனர். என் "உயிருள்ள உஷா" படமும் ரீ-ரிலிசுக்கு தயாராகிவிட்டது. ஆனால், "சிலம்பாட்டம்" வருவதால் என் படத்தை தள்ளி வைத்துவிட்டேன். நண்பர் விஜய்யின் "ஜனநாயகன்" படம் வந்தாலும் தள்ளிப்போவேன் அது நான் தரும் மரியாதை. தமிழ் சினிமா ரீ-ரிலீசில் என் பையனின் "சிலம்பாட்டம்" பெரிய வெற்றி பெற ஆண்டவனை வேண்டுகிறேன், அனைவருக்கும் நன்றி," என்றார்.
- நான் என் தந்தையின் தொழிலை கவனிக்க வேண்டியிருந்தது.
- இது அரசியல் படமா என்று பலருக்கு கேள்விகள் எழலாம்.
லெஜண்ட் சரவணன் நடிக்கும் புதிய படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்திற்கு லீடர் என தலைப்பிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இந்தப் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.
டீசர் வெளியீட்டைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய லெஜண்ட் சரவணன், "சிறுவயதில் இருந்தே எனக்கு சினிமா மீது மிகுந்த ஆர்வம் உண்டு. என் ஃபிரிட்ஜில் இரண்டு பக்கங்களிலும் ஷாருக்கான் மற்றும் சல்மான் கான் புகைப்படங்கள் ஒட்டியிருப்பேன். ஒரு நாள் நானும் அவர்களை போல் ஆவேன் என்று என் அம்மாவிடம் சொல்வேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, நான் என் தந்தையின் தொழிலை கவனிக்க வேண்டியிருந்தது."
"ஜவுளி மற்றும் சினிமா ஆகிய இரண்டு தொழில்களிலும் நான் முதல் ஆளாக வந்து கடைசி ஆளாக செல்வேன். எந்த வேலையாக இருந்தாலும், அதில் என் முழுத் திறமையையும் வெளிப்படுத்துவேன். 'லீடர்' என்ற தலைப்பைப் பார்த்ததும், இது ஒரு அரசியல் படமா என்று பலருக்குக் கேள்விகள் எழலாம், ஆனால் இது ஒரு முழுமையான பொழுதுபோக்குத் திரைப்படம்."
"ஒரு அப்பாவி தந்தையும் மகளும் அமைதியாக வாழ்க்கை வாழ்கிறார்கள், ஆனால் ஒரு கும்பல் அவர்களின் வாழ்க்கையில் தலையிடுகிறது. இதுதான் கதை. ஆரம்பம் முதல் இறுதி வரை, இயக்குநர் துரை செந்தில்குமார் தனது திரைக்கதையால் இதை சிறப்பாக செதுக்கியுள்ளார். இந்த திரைக்கதை இந்த தலைமுறைக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும்," என்றார்.
- படத்திற்கு `லீடர்' என தலைப்பிடப்பட்டுள்ளது.
- இந்தப் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
லெஜண்ட் சரவணன் மற்றும் இயக்குநர் துரை செந்தில்குமார் கூட்டணியில் உருவாகி இருக்கும் புதிய படத்திற்கு `லீடர்' என தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்தப் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
தி லெஜெண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்தப் படத்திற்கு எஸ். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய பிரதீப் படத்தொகுப்பை கவனிக்கிறார்.
கலை இயக்க பணிகளை துரைராஜ் மேற்கொண்டுள்ளார். இந்தப் படத்தின் சண்டை காட்சிகளை மேத்யூ மகேஷ் அமைத்துள்ளார். ஆக்ஷன் கதையம்சம் கொண்ட இந்தப் படம் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.
செல்வந்தரான நாயகி ஆஷ்னா சவேரி தற்கொலை செய்து கொள்ள விஷத்துடன் தயாராகிறாள். அந்த நேரமாகப் பார்த்து ஒரு திருடன் முனீஷ்காந்த் வீட்டுக்குள் நுழைகிறார். அவரைப் பார்த்த அதிர்ச்சியில் விஷம் இருக்கிற பாட்டில் உடைந்து சிதறிவிட, தன் கையிலிருக்கும் துப்பாக்கியைக் கொடுத்து கொல்ல சொல்கிறார் ஆஷ்னா சவேரி.
பதட்டமடையும் முனீஷ்காந்த், நான் திருடத்தான் வந்தேன், கொலை செய்கிற அளவுக்கு எனக்கு தைரியமில்லை, என்னை விட்டு விடுங்கள் என்கிறார். என்னை கொல்லாவிட்டால், திருட வந்த குற்றத்துக்காக உன்னை போலீஸிடம் ஒப்படைத்து விடுவேன் என்று ஆஷ்னா சவேரி, முனீஷ்காந்த்தை மிரட்டுகிறார்.
இறுதியில் முனிஷ்காந்த், ஆஷ்னா சவேரியை கொலை செய்தாரா? எதற்காக ஆஷ்னா சவேரி தற்கொலை முயற்சி செய்கிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகியாக நடித்திருக்கும் ஆஷ்னா சவேரி, தற்கொலைக்கு முயற்சிப்பது, திருடன் வந்ததும் அவனிடம் துப்பாக்கியைக் கொடுத்து சுட சொல்வது, மறுக்கும்போது மிரட்டி சம்மதிக்க வைப்பது, தற்கொலை முடிவுக்கான காரணத்தை விளக்குவது என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார்.
ஆஷ்னாவின் கணவராக நடித்து இருக்கும் அசோக், மனைவியைக் கொடுமைப்படுத்துபவர், மனைவியால் கொடுமைகளை அனுபவிப்பவர் என இரண்டு விதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
திருடனாக வரும் முனீஷ்காந்த், ஆஷ்னா சவேரியிடம் மாட்டிக்கொண்டு, தவிக்கும் காட்சியில் சிரிக்க வைத்து இருக்கிறார். நிழல்கள் ரவி, வினோத் சாகர், ஷரவண சுப்பையா, ராட்சசன் சரவணன், ஆர்.எஸ். நித்தீஷ், அஸ்மிதா உள்ளிட்டோர் தங்களது கதாபாத்திரங்களில் வந்து போகிறார்கள்.
இயக்கம்
சூழ்நிலைகள்தான் மனிதர்கள் நல்லவர்களாகவும் கெட்டவர்களாகவும் மாறுவதற்கு காரணமாக அமைகிறது என்பதை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் கார்த்தி தட்சிணாமூர்த்தி. திரில்லர் பாணியில் படத்தை கொடுக்க நினைத்து இருக்கிறார். திரைக்கதையில் சுவாரசியம் கூட்டியிருந்தால் ரசித்து இருக்கலாம்.
இசை
என்.டி.ஆர் இசையில் பாடல்கள் சுமார் ரகம்.
ஔிப்பதிவு
ஒரு வீட்டுக்குள்ளேயே கேமரா கோணங்களை அமைத்திருக்கும் ஆர்.அதிசயராஜின் ஒளிப்பதிவு சிறப்பு.
ரேட்டிங்-2/5






