என் மலர்
சினிமா செய்திகள்
- அன்பு மயில்சாமியும், பிருந்தா கிருஷ்ணனும் காதலிக்கிறார்கள்.
- காதலியை துஷ்ட சக்தியிடம் இருந்து காப்பாற்றும் காட்சிகளில் அன்பு மயில்சாமி நல்ல நடிப்பை கொடுத்துள்ளார். tantra, tantra review, தந்த்ரா, தந்த்ரா விமர்சனம்
அன்பு மயில்சாமியும், பிருந்தா கிருஷ்ணனும் காதலிக்கிறார்கள். அந்த ஜோடியின் திருமணப் பேச்சு வார்த்தையின்போது குறுக்கே வருகிற, துஷ்டசக்தியை சுமந்திருக்கும் ஒரு பெண், 'பிருந்தா சாக வேண்டியவள், சீக்கிரமே சாகப் போகிறாள்' என்று சொல்லி அதிர்ச்சி தருகிறாள்.
அவள் ஏன் அப்படி சொன்னாள் என்பது பற்றி பிருந்தாவின் அப்பா, அம்மாவிடம் விசாரிக்கும்போது பிருந்தா அவர்களுடைய மகளே இல்லை என்பதும், அவளுடைய தந்தை செய்த பாவச் செயலுக்காக ஒரு சக்தி பிருந்தாவை பழி வாங்கக் காத்திருப்பதும் தெரியவருகிறது.
இறுதியில் பிருந்தா கிருஷ்ணன் யாருடைய மகள், பழிவாங்கக் காத்திருக்கும் சக்தியிடமிருந்து பிருந்தாவை காப்பாற்ற முடிந்ததா? காதலர்கள் திருமணம் செய்து கொள்ள முடிந்ததா? என்பதே படத்தின் மீதி கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் அன்பு மயில்சாமி, மாமாவுடன் சேர்ந்து குடித்துவிட்டு ஜாலியாக பொழுதைக் கழித்துக் கொண்டும் இருக்கும் கதாபாத்திரம். காதலியை துஷ்ட சக்தியிடம் இருந்து காப்பாற்றும் காட்சிகளில் நல்ல நடிப்பை கொடுத்துள்ளார். பிருந்தா கிருஷ்ணன் அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்து இருக்கிறார். காதல் உணர்வை, பய உணர்வை போதுமான அளவில் வெளிப்படுத்துகிறார்.
மனித உயிர்களைப் பலியிட்டு புதையலை அடையத் துடிக்கும் மந்திரவாதியாக வருகிற நிகாரிகாவின் நடிப்பு, இன்னொரு மந்திரவாதியாக வருகிற ஜாக்கும் மிரட்டுகிறார்கள். நிழல்கள் ரவி, சசிகுமார் சுப்ரமணியன் ஜாவா சுந்தரேசன், மனோபாலா, லொள்ளுசபா சாமிநாதன் ஆகியோரின் நடிப்பு சிறப்பு.
இயக்கம்
ஒரு புதையல், அதை அடையத் துடிக்கும் மந்திரவாதி என ஒரு கதையை எடுத்துக் கொண்டு அதில் காதல், காமெடி என கமர்சியல் அம்சங்களை கலந்து அமானுஷ்ய திரில்லர் அனுபவம் தந்திருக்கிறார் இயக்குநர் வேதமணி. 'நல்லதும், கெட்டதும் நிறைந்திருப்பதுதான் உலகம்' என்பதை சொல்ல வந்திருக்கிறார். திரைக்கதை வலுவில்லாமல் செல்வதால் ரசிக்க முடியவில்லை.
இசை
கணேஷ் சந்திரசேகர் இசை ஹாரர், திரில்லர் கதைக்கேற்றவாறு பயணித்து இருக்கலாம்.
ஒளிப்பதிவு
ஹாசிப் எம் இஸ்மாயில் ஒளிப்பதிவு சுமார் ரகம்.
- 15-ந்தேதி பர்ஸ்ட் லுக் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.
பிரமாண்ட இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படம் மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
இப்படத்தில் பிரித்விராஜ் வில்லனாக நடிக்கிறார். படத்தில் அவருடைய காதாபாத்திர பெயர் கும்பா. டாக்டர் ஆக்டோபஸ் போன்று வில்லன் காதாபாத்திரத்தில் மிரட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்திற்கு இன்னும் அதிகாரப்பூர்வமாக பெயர் வைக்கப்படவில்லை. தற்போது குளோப் ட்ரோட்டர் (Globe Trotter) என அழைக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடும் நிகழ்ச்சி வருகிற 15-ந்தேதி ராமோஜி திரைப்பட நகரில் நடக்கிறது. இந்த நிகழ்ச்சி ஜியோஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோ பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இதை முன்னணி நடிகையும், பின்னணி பாடகியுமாக ஸ்ருதிஹாசன் பாடியுள்ளார். இப்படத்திற்கு எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார்.
- தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் கண்டு களிக்கலாம்.
- நாளை மறுநாள் முதல் நெட்ஃபிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் காணலாம்.
திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாகி உள்ளன என்பதைக் காணலாம்.
டியூட்
கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் 'டியூட்'. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார். இப்படத்தில் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன், டிராவிட் மற்றும் பலர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலை குவித்து வருகிறது. 'டியூட்' படம் ஓ.டி.டி. தளத்தில் எப்போது வெளியாகும் என காத்திருந்த ரசிகர்களுக்கு தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, 'டியூட்' படம் வருகிற 14-ந்தேதி வெள்ளிக்கிழமை நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. இதனை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் கண்டு களிக்கலாம்.
தெலுசு கடா
சித்து ஜொன்னலகட்டா, ராசி கன்னா மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் 'தெலுசு கடா'. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான இப்படத்தை பிரபல ஸ்டைலிஸ்ட் நீரஜா கோனா இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் தற்போது ஓடிடியில் வெளியாக உள்ளது. நெட்பிளிக்ஸ் தளத்தில் வருகிற 14-ந்தேதி முதல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீமிங் ஆக இருக்கிறது. இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானபோது கலவையான விமர்சனங்களைப் பெற்றது, தற்போது ஓடிடியில் பார்வையாளர்களை ஈர்க்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
டெல்லி க்ரைம் சீசன் 3
டெல்லி க்ரைம் சீரிஸின் 3 மூன்றாவது சீசன் வருகிறது. இதில் ஹுமா குரேஷி புதிய வில்லியாகத் தோன்றுகிறார். ஷெஃபாலி ஷா மீண்டும் டிசிபி வர்திகா சதுர்வேதி கதாபாத்திரத்திலும், ஜெயா பட்டாச்சார்யா விமலா பரத்வாஜ் ஆகவும் நடிக்கின்றனர். நாளை மறுநாள் முதல் நெட்ஃபிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் காணலாம்.
தசாவதார்
சுபோத் கனோல்கர் இயக்கிய இந்த மராத்தி த்ரில்லரில் திலீப் பிரபாவல்கர், பரத் ஜாதவ், மகேஷ் மஞ்ச்ரேக்கர், சித்தார்த் மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். வயதான தசாவதார் நடிகர் தனது கடைசி நாடகம் மூலம் ஆன்மீக மற்றும் கலாச்சாரப் போரில் சிக்குகிறார். வருகிற 14ந்தேதி முதல் ஜீ5 தளத்தில் பார்க்கலாம்.
ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த்
உலகம் முழுவதும் ரசிகர்கள் எதிர்பார்க்கும் இந்த ஆக்ஷன் அட்வென்ச்சர் படம், ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன் (2022) படத்தின் தனித்துவமான தொடர்ச்சியாகும். இது ஜுராசிக் பார்க் பிரான்சைஸின் ஏழாவது படம். ஸ்கார்லெட் ஜோஹன்சன், மஹர்ஷலா அலி, ஜொனாதன் பெய்லி ஆகியோர் நடித்துள்ளனர். மூன்று டைனோசர் இனங்களின் டிஎன்ஏ-வை சேகரிக்க ஒரு விஞ்ஞானிகள் குழு ஆபத்தான தீவுக்குப் பயணிக்கிறது. நவம்பர் 14ந் தேதி ஜியோஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது.
இதனிடையே 20-க்கும் மேற்பட்ட வெப் சீரிஸ்களும் ஆங்கிலம், இந்தி திரைப்படங்களும் ஓ.டி.டி.தளத்தில் வெளியாக உள்ளது.
நடிகர் ரஜினி கிஷன் மற்றும் திவிகா நடிக்கும் படம் ரஜினி கேங். இப்படத்தை ரமேஷ் பாரதி இயக்கியுள்ளார். மேலும் மொட்டை ராஜேந்திரன், ராம் தாஸ், கூல் சுரேஷ், கல்கி ராஜா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைக்கிறார். இப்படத்தை மிஷ்ரி என்டர்பிரைசஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் நாளை காலை 11.55 மணிக்கு வெளியாகிறது. இப்படத்தின் டிரைலரை நடிகரும், தயாரிப்பாளருமான விஷ்ணு விஷால் வெளியிடுகிறார்.
- சென்னை டி.ஜி.பி அலுவலகத்திற்கு மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
- ரம்யா கிருஷ்ணன், எஸ்.வி.சேகர் உள்ளிட்டோர் வீட்டிலும் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது.
சென்னை:
நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள், பள்ளிகள், விமானங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை டி.ஜி.பி அலுவலகத்திற்கு மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அதில் சென்னையில் உள்ள நடிகர் அஜித்குமார் வீட்டிற்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர் எஸ்.வி.சேகர் உள்ளிட்டோர் வீட்டிலும் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டிருந்தது.
அதன்பேரில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். சோதனை முடிவில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காந்தா படம் எம்.கே. தியாகராஜா பாகவதரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாகும்.
- 'காந்தா' படம் வருகிற 14-ந்தேதி முதல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
மலையாள சினிமா முன்னணி நடிகர்களுள் ஒருவர் துல்கர் சல்மான். இவர் கடைசியாக நடித்து வெளியான 'லக்கி பாஸ்கர்' படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
அடுத்ததாக துல்கர் சல்மான் 'காந்தா' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்கி உள்ளார். இப்படம் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான எம்.கே. தியாகராஜா பாகவதரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாகும்.
இப்படத்தில் மிஸ்டர் பச்சன் திரைப்பட புகழ் பாக்யஸ்ரீ, துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாகவுள்ளது. 'காந்தா' படம் வருகிற 14-ந்தேதி முதல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் காந்தா திரைப்படத்துக்கு தடை கோரி பாகவதரின் மகள் வழி பேரன் மனு அளித்துள்ளார். பழம்பெரும் நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள காந்தா படத்தை, எடுப்பதற்கு முன் அவரின் சட்டப்பூர்வ வாரிசுகளின் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என பாகவதரின் மகள் வழி பேரன் மனு அளித்துள்ளார்.
இந்த மனுவிற்கு தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் நடிகர் துல்கர் சல்மான் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- இது மிகவும் அவமரியாதை மற்றும் பொறுப்பற்ற செயல்.
- தயவுசெய்து எங்கள் குடும்பத்தினரின் தனியுரிமைக்கு உரிய மரியாதை கொடுங்கள்.
இந்தி திரையுலகின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா உடல்நலக்குறைவால் இன்று காலமானார் என்று செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், நடிகர் தர்மேந்திரா உயிருடன் இருப்பதாக அவருடைய மனைவியும் நடிகையும் எம்.பி.யுமான ஹேமமாலினி தனது எக்ஸ் பக்கத்தில் பரபரப்பான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:- நடந்து கொண்டிருப்பது மன்னிக்க முடியாதது! சிகிச்சைக்குப் பதிலளித்து குணமடைந்து வரும் ஒருவரைப் பற்றி பொறுப்பான சேனல்கள் எவ்வாறு தவறான செய்திகளைப் பரப்ப முடியும்? இது மிகவும் அவமரியாதை மற்றும் பொறுப்பற்ற செயல். தயவுசெய்து எங்கள் குடும்பத்தினரின் தனியுரிமைக்கு உரிய மரியாதை கொடுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.
அவரைத்தொடர்ந்து தர்மேந்திராவின் மகள் ஈஷா தியோல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "என் தந்தை நலமுடன் உள்ளார், குணமடைந்து வருகிறார். அவர் விரைவில் குணமடைய பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி" என பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, நேற்று நடிகர் தர்மேந்திராவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. இதற்கு தர்மேந்திராவின் குடும்பத்தினர் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- கருணாநிதி இயக்கி உள்ள இப்படத்தை ஜி.ஆர். மதன் கிருஷ்ணன் தயாரித்துள்ளார்.
- நடிகர் கிஷோர் மற்றும் நடிகை அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர்.
பிரபல யூடியூப்பரும், சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவருமான டிடிஎஃப் வாசன் தற்போது படம் ஒன்றில் நடித்து உள்ளார். அப்படத்திற்கு ஐபிஎல் (Indian Penal Law) என்று பெயரிடப்பட்டுள்ளது.
இப்படத்தில் நடிகர் கிஷோர் மற்றும் நடிகை அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். கருணாநிதி இயக்கி உள்ள இப்படத்தை ஜி.ஆர். மதன் கிருஷ்ணன் தயாரித்துள்ளார்.
இப்படத்திற்கு அஷ்வின் வினாயகமூர்த்தி இசையமைத்துள்ளார். படத்தின் "அப்போ இப்போ" பாடல் அண்மையில் வெளியானது. இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
படம் வரும் நவம்பர் 28 ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
- அதர்வா, ரவி மோகன் மற்றும் பசில் ஜோசஃப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
- படத்தின் முதல் பாடலான அடியே அலையே கடந்த வாரம் வெளியானது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 25-வது படம் உருவாகி வருகிறது.
பராசக்தி என பெயரிடப்பட்ட இந்த படத்தை ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரித்துள்ளது.
படத்தில் அதர்வா, ரவி மோகன் மற்றும் பசில் ஜோசஃப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நாயகியாக ஸ்ரீலீலா நடித்திருக்கிறார்.
படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி உள்ளது.
படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், போஸ்ட் ப்ரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது. படத்தின் முதல் பாடலான அடியே அலையே கடந்த வாரம் வெளியானது.
இந்நிலையில் படத்தின் டப்பிங் படிகள் தொடங்கியுள்ளதை படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. முதற்கட்டமாக ரவி மோகன் தனது கதாபாத்திரத்திற்கு டப்பிங் செய்து வருகிறார்.
அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி அடுத்தாண்டு ஜனவரி 14 இல் ஜனநாயகனுக்கு போட்டியாக இப்படம் திரைக்கு வருகிறது.
தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக சமையல் கலை நிபுணரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இதுதொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து, தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக ஜாய் கிரிசில்டா கடந்த சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, தன்னை 2வது திருமணம் செய்ததை மகளிர் ஆணையத்தின் முன் மாதம்பட்டி ரங்கராஜ் ஒப்புக் கொண்டார் என்று ஜாய் கிரிசில்டா இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து, ஜாய் கிரிசில்டாவின் இந்த கூற்றை மாதம்பட்டி ரங்கராஜ் நேற்று திட்டவட்டமாக மறுத்தார்.
இந்நிலையில், தனக்கு எதிராக அவதூறு கருத்துக்கள் தெரிவிக்க ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்கக்கோரியும், சமூக வலைதளங்களில் உள்ள வீடியோக்களை நீக்கக்கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.
அப்போது, "ஜாய் கிரிசில்டாவின் குழந்தைக்கு டிஎன்ஏ பரிசோதனை எடுக்க வேண்டும். அதில் நான்தான் தந்தை என தெரியவந்தால் குழந்தையை கவனிக்கும் பொறுப்பை வாழ்நாள் முழுவதும் ஏற்க தயார்" என்று மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்தார்.
இதையடுத்து, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது. மேலும், இருதரப்பும் எழுத்துப்பூர்வ வாதங்களை வரும் 14ம் தேதி தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக சமையல் கலை நிபுணரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இதுதொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து, தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக ஜாய் கிரிசில்டா கடந்த சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, தன்னை 2வது திருமணம் செய்ததை மகளிர் ஆணையத்தின் முன் மாதம்பட்டி ரங்கராஜ் ஒப்புக் கொண்டார் என்று ஜாய் கிரிசில்டா இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து, ஜாய் கிரிசில்டாவின் இந்த கூற்றை மாதம்பட்டி ரங்கராஜ் நேற்று திட்டவட்டமாக மறுத்தார்.
இந்நிலையில், ஜாய் கிரிசில்டா தனது பிஞ்சு குழந்தை பெயரில் இன்ஸ்டா ஐடி உருவாக்கியுள்ளார். ராகா மாதம்பட்டி ரங்கராஜ் என்ற நிற ஐடியில் இருந்து ஜாய் கிரிசில்டா பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், "அப்பா, (madhampattyrangaraj )நான்
உன் காதலில்
உன் மோகத்தில்
உன் வேகத்தில் உயிர்த்த கரு
உன் கரு
உன் உயிர்
உன் குருதி
உன் அடையாளம்!
ஆனால்
உன் அவமானமாய்
நீ உதிர்த்த சொற்கள்
காலம் கடந்தாலும்
காயம் ஆற்றாது!
புது உயிராய்
பூமியில் ஜனித்தேன்
ஒரு பாவம் அறியேன்
இப்படிக்கு
விடை வேண்டி வழக்கு தொடுத்த அப்பாவுடன் சண்டையிடும்
பிஞ்சு குழந்தை
ராகா ரங்கராஜ்
என்று தெரிவித்துள்ளார்.
- ஆஸ்கார் விருது பெற்ற தயாரிப்பு நிறுவனமான சீக்யா என்டர்டெயின்மென்ட், முதன்முறையாக கார்த்திக் சுப்பராஜுடன் இணைகிறது.
- பல ஆண்டுகளாக புதுமையான மற்றும் விருதுகளுக்கு தகுதியான கதை சொல்லலுக்கு பெயர் பெற்றது சீக்யா என்டர்டெயின்மென்ட்.
ஆஸ்கார் விருது பெற்ற இந்திய தயாரிப்பு நிறுவனம் தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான இயக்குநருடன் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் இன்று பூஜையுடன் தொடங்குகிறது.
குனீத் மோங்கா கபூர் மற்றும் அச்சின் ஜெயின் ஆகியோரின் ஆஸ்கார் விருது பெற்ற தயாரிப்பு நிறுவனமான சீக்யா என்டர்டெயின்மென்ட், முதன்முறையாக புகழ்பெற்ற இயக்குநர் கார்த்திக் சுப்பராஜுடன் இணைகிறது. எளிமையான பூஜைக்கு பிறகு மதுரையில் படத்தின் படப்பிடிப்பு இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.
பல ஆண்டுகளாக புதுமையான மற்றும் விருதுகளுக்கு தகுதியான கதை சொல்லலுக்கு பெயர் பெற்றது சீக்யா என்டர்டெயின்மென்ட். இந்தியாவின் முதல் ஆஸ்கார் விருது பெற்ற ஆவணப்படமான 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்', 'தி லஞ்ச்பாக்ஸ்', 'மசான்', 'பாக்லைட்' மற்றும் சமீபத்தில் தேசிய விருது பெற்ற 'காதல்' போன்ற உலகளவில் பாராட்டப்பட்ட பல திரைப்படங்களைத் தயாரித்துள்ளது இந்நிறுவனம். தனித்துவமான கண்ணோட்டத்துடன், புதிய திறமையாளர்களை வளர்த்து உலகளவில் உள்ள பார்வையாளர்கள் மத்தியில் நற்பெயரை இந்நிறுவனம் உருவாக்கியுள்ளது.
கார்த்திக் சுப்பராஜ் சமகால இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநராக வலம் வருகிறார். இது அவருடைய பத்தாவது திரைப்படமாகும். கடந்த பத்தாண்டுகளில் 'பீட்சா', 'ஜிகர்தண்டா', 'பேட்ட', 'இறைவி', 'மெர்குரி', 'ஜகமே தந்திரம்', 'மகான்', 'ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்' மற்றும் 'ரெட்ரோ' என விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் பாராட்டப்பட்ட பல படைப்புகளை அவர் கொடுத்திருக்கிறார்.
இந்தப் படம் குறித்து சீக்யா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பாளர் குனீத் மோங்கா கபூர் பகிர்ந்து கொண்டதாவது, "பல்வேறு கலாச்சாரங்களை கடந்து பார்வையாளர்களை சென்றடையும் மண்சார்ந்த கதைகளை சொல்வதில்தான் நாங்கள் எப்போதும் நம்பிக்கை கொண்டுள்ளோம். அந்த நம்பிக்கையை நிச்சயம் கார்த்திக் சுப்பராஜ் காப்பாற்றுவார். அவரது கதைகள் புதுமையாகவும் உலகளவில் உள்ள பார்வையாளர்களை ஈர்க்கும் விதமாகவும் அமையும். கார்த்திக்குடன் இந்தப் பயணத்தில் இணைவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்றார்.
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டதாவது, "சீக்யா தயாரித்திருக்கும் படங்கள் அனைத்தையும் நான் ரசித்திருக்கிறேன். நான் திரைக்கு கொண்டு வர வேண்டும் என விரும்பும் கலையுடன் சீக்யாவின் ரசனையும் ஒத்துப்போகிறது. விருதுகளுக்கு அர்த்தமுள்ள, தகுதியான படங்களைத் தயாரித்த குனீத் மற்றும் அச்சினுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி. நான் எழுதியிருக்கும் இந்தக் கதை என் மனதுக்கு நெருக்கமானது. அந்தக் கதைக்கான சரியான தயாரிப்பாளர்கள் கிடைத்துள்ளனர்" என்றார்.
சீக்யா எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் அச்சின் ஜெயின் பகிர்ந்து கொண்டதாவது, "கல்ட் மற்றும் கமர்ஷியல் என்ற இரண்டு விஷயங்களையும் சரியாகக் கையாளத் தெரிந்தவர் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். அவரது கதைகள் எதிர்பாராத திருப்பங்களையும் அதே சமயம் ஆழமான உணர்வுகளையும் கொண்டிருக்கும். பார்வையாளர்களின் எதிர்பார்ப்பையும் சரியான கதை சொல்லல் திறமையும் கொண்ட இயக்குநருடன் இணைவதில் மகிழ்ச்சியடைகிறோம். கார்த்திக் சுப்பராஜூடன் இணைந்திருப்பது சக்திவாய்ந்த வேரூன்றிய கதைகளை, உலகளாவிய சினிமா மொழி மூலம் வெளிப்படுத்தும் சீக்கியாவின் நோக்கத்தை பிரதிபலிக்கிறது" என்றார்.






