என் மலர்
சினிமா செய்திகள்

500 ரூபாய் சம்பளம் வாங்கியபோது இருந்த சந்தோஷம் இப்போது கோடிக்கணக்கில் வாங்கும்போது இல்லை - அனிருத்
- இனம் புரியாத ஒரு சந்தோஷம் எனக்குள் ஏற்படும்.
தமிழ் சினிமாவின் தற்போது முன்னணி இசையமைப்பாளர்களில் முதன்மையானவராக வளம் வருபவர் அனிருத். அவரின் இசை இன்றி பெரிய ஹீரோக்களின் படங்கள் வருவதே இல்லை என்ற அளவுக்கு வெற்றிகரமான இசையமைப்பாளராக போட்டியின்றி திகழ்கிறார் அனிருத்.
இந்நிலையில் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அனிருத், சிறுவயது நினைவை பகிர்ந்து, பணம் சம்பாதிப்பது குறித்து மனம் திறந்துள்ளார்.
நிகழ்வில் பேசிய அவர், சிறிய வயதில் திருமண நிகழ்ச்சிகளுக்கு வாசிக்க செல்லும்போது 500 ரூபாய் சம்பளமாக கொடுத்திருக்கிறார்கள். அப்போது இனம் புரியாத ஒரு சந்தோஷம் எனக்குள் ஏற்படும். சில நிகழ்வுகளில் சம்பளம் தராமல் வெறும் வெற்றிலை, பாக்கு மட்டும் கொடுத்து நன்றி சொல்லி அனுப்பி விடுவார்கள்.
இப்போது கோடிகளில் சம்பளம் கிடைக்கிறது. ஆனால் முன்பு இருந்த சந்தோஷம் இப்போது இல்லை. என்னதான் வேலையில் பரபரப்பாக இருந்தாலும் அந்த சிறுவயது சந்தோஷத்தை மட்டும் மறக்கவே முடியாது" என்று தெரிவித்தார்.






