என் மலர்
கார்
பரிசு பெற்றவர்களிடம் முன்கூட்டியே தெரிவிக்காமல் அவர்களுக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில் இந்த கார்கள் பரிசளிக்கப்பட்டுள்ளன.
சென்னையை சேர்ந்த கிஸ்ஃப்ளோ இன்கார்பரேஷன் என்ற சர்வதேச மென்பொருள் சேவை நிறுவனம் தனது 5 ஊழியர்களுக்கு தலா ரூ.1 கோடி மதிப்புள்ள பி.எம்.டபில்யூ கார்களை பரிசளித்துள்ளது.
பிஎம்டபில்யூ 5 சீரிஸ் லக்சரி செடான் கார்கள் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கிஸ்ப்ளோ நிறுவனத்தின் 10வது ஆண்டு நிறைவையொட்டி இந்த பரிசு சிறந்த வஊழியர்களுக்கு தரப்பட்டுள்ளது. பரிசு பெற்றவர்களிடம் முன்கூட்டியே தெரிவிக்காமல் அவர்களுக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில் இந்த கார் பரிசளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் சி.இ.ஓ சுரேஷ் சம்பந்தம் கூறியதாவது:-
பரிசளிக்கப்பட்ட 5 ஊழியர்களும் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டதில் இருந்து என்னுடன் இருந்தவர்கள். குறிப்பாக பெருந்தொற்று காலத்தில் நிறுவனத்தை வெற்றிகரமாக வழிநடத்தியவர்கள். அதிலும் சிலர் மிகவும் எளிமையான பின்னணியில் இருந்து வந்தவர்கள்.
இந்த நிறுவனத்தில் ஊழியர்களுக்கு அனைத்து வகை வசதிகளும் செய்து தரப்படுகிறது. விடுமுறையை பொறுத்தவரை தனித்தனியாக ஆரோக்கிய விடுப்பு, சாதாரண விடுப்பு என்றெல்லாம் கிடையாது. ஒரே விதமான விடுப்பு தான். அவர்களுக்கு பிடித்தால் எடுத்துகொள்ளலாம். அதேபோல அலுவலகத்திற்கு வர விருப்பமில்லை என்றால் ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்துகொள்ளலாம். அதேபோல ஊழியர்களுக்கு அட்டெண்டஸும் பிற நிறுவனங்களை போல கிடையாது.
எங்கள் ஊழியர்களை நாங்கள் ஊக்குவிக்கும் வகையில் இவற்றை செய்து வருகிறோம்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதத்தில் அதிகம் விற்கப்பட்டுள்ள எஸ்.யூ.வி ரக கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் ஆட்டோமொபைல் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மக்கள் புதிய கார்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த மார்ச் மாதத்தில் அதிகம் விற்கப்பட்டுள்ள எஸ்.யூ.வி ரக கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
இதன்படி மாருதி சுஸூகியின் வாகன் ஆர் கார் 24,634 யூனிட்டுகள் விற்பனை செய்யப்ப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து மாருதி சுஸூகியின் டிஜையர் 18,623 யூனிட்டுகள் விற்பனை செய்யபட்டுள்ளன. அடுத்ததாக மாருதி சுஸூகியின் பலேனோ 14,520 யூனிட்டுகள் விற்கப்பட்டுள்ளன.
கடந்த மாதம் அதிகம் விற்கப்பட்ட கார்களில் முதல் மூன்று இடத்தில் மாருதி சுஸூகி நிறுவனமே ஆதிக்கம் செலுத்துகிறது.
அடுத்ததாக டாடா நிறுவனத்தின் டாடா நேக்ஸன் 14,315 யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளது. பிறகு மீண்டும் மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் 13623 யூனிட்டுகளும், மாருதி சுஸூகி விட்டாரா ப்ரெசா 12,439 யூனிட்டுகளும் விற்பனையாகியுள்ளன. ஹுண்டாய் கிரேட்டா 10,532 யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளது. டாடா பஞ்ச் 10,526 யூனிட்டுகளும், ஹுண்டாய் கிராண்ட் ஐ10 நியோஒஸ் 9687 யூனிட்டுகளும், மாருதி சுஸூகி எக்கோ 9221 யூனிட்டுகளும் விற்பனையாகியுள்ளன.
போலோவின் 12 வருட நிறைவை கொண்டாட ஃபோக்ஸ்வேகன், போலோ லெஜண்ட் சிறப்பு லிமிடெட் எடிஷனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. வெறும் 700 யூனிட்டுகள் மட்டுமே தயாரிக்கப்பட்ட இந்த காரின் விலை ரூ.10.25 லட்சமாகும்.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் தனது போலோ கார் உற்பத்தியை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. போலோ பிரீமியம் ஹேட்ச்பேக் கார் கடந்த 2009ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஃபோக்ஸ்வேகன் நிறுவன கார்களில் இந்தியாவில் அதிக வரவேற்பை பெற்ற கார் போலோ ஆகும்.
2010ம் ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் இந்த கார் காட்சிக்கு வைக்கப்பட்டது. 3 லட்சத்திற்கும் அதிகமான போலோ கார்கள் இந்தியாவில் விற்கப்பட்டுள்ளன. இந்தியாவில் உருவான ஹேட்ச்பேக் கார்களில் 2 ஏர் பேக்குகளுடன் வந்ததில் போலோ தான் முதன்மையானது.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
போக்ஸ்வேகன் போலோ கடந்த 12 வருடங்களாக இந்திய சாலைகளில் ஓடி வருகிறது. இப்போது பிரேக் பிடிப்பதற்கான நேரம் வந்துவிட்டது.
வாடிக்கையாளர்களிடம் பல்வேறு உணர்வுகளை இந்த கார் உருவாக்கியது. ஒரு குடும்பத்தின் முதல் காராக எப்போதும் போலோ தான் இருந்திருக்கும். இதன் ஸ்போர்ட்டி டிசைன், சேஃப்டி, ஃபன் டூ டிரை அனுபவம், பில்ட் குவாலிட்டி ஆகியவை இந்த காரை அனைவருக்கும் நெருக்கமாக்கியது என கூறியுள்ளது.
போலோவின் 12 வருட நிறைவை கொண்டாட ஃபோக்ஸ்வேகன், போலோ லெஜண்ட் சிறப்பு லிமிடெட் எடிஷனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. வெறும் 700 யூனிட்டுகள் மட்டுமே தயாரிக்கப்பட்ட இந்த காரின் விலை ரூ.10.25 லட்சமாகும்.
இதில் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் TSI பெட்ரோல் இன்ஜின், 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டார்க் கன்வேர்டர் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த கார் 110PS மேக்ஸிமம் பவர், 175 Nm பீக் டார்க்கை உருவாக்கூடியது.
மாருதி சுஸூகி நிறுவனம் இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை 8.8 சதவீதம் வாகனங்களுக்கான விலையை உயர்த்தியுள்ளது.
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக மாருதி சுஸூகி இருக்கிறது. இந்த நிறுவனம் ஆல்டோ, எஸ் கிராஸ் என நிறைய மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
இந்நிலையில் மாருதி சுஸூகி நிறுவனம் மீண்டும் வாகனங்களின் விலைகளை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது. மாருதி சுஸூகியின் அனைத்து வகை வாகனங்களுக்கும் விலை உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகனங்களின் உள்ளீட்டு செலவுகள் தொடர்ந்து உயர்ந்து வருவதால் இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
ஏற்கனவே மாருதி சுஸூகி நிறுவனம் இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை 8.8 சதவீதம் வாகனங்களுக்கான விலையை உயர்த்தியுள்ளது. இந்நிலையில் தற்போது ஏப்ரல் மாதமும் விலை உயர்வை அறிவித்துள்ளது.
உயர்த்தப்பட்ட விலைகளின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டத்தின்படி 40 சார்ஜிங் நிலையங்களை நிறுவி மின்சார கார்கள் மற்றும் பைக்குகளுக்கு இலவச சார்ஜ் வழங்கப்படவுள்ளன.
இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இருப்பினும் மின்சார வகானங்கள் அவ்வபோது தீப்பிடிப்பது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் மக்களை மின்சார வாகனங்களை வாங்குவதற்கு ஊக்குவிக்கும் வகையில் ElectiVa என்ற நிறுவனம் ஜூன் 1ம் தேதி முதல் இலவச சார்ஜ் வழங்கப்போவதாக அறிவித்துள்ளது.
இதன்படி டெல்லி முழுவதும் 40 சார்ஜிங் நிலையங்களை நிறுவி மின்சார கார்கள் மற்றும் பைக்குகளுக்கு இலவச சார்ஜ் வழங்கப்படவுள்ளன.
இந்த இலவச சார்ஜ் சேவை பொது சார்ஜிங் நிலையங்களில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மட்டுமே வழங்கப்படவுள்ளது.
இதுகுறித்து ElectiVa-ன் நிறுவனர் சுமித் தனுஷ்கா கூறுகையில், அனைத்து கமர்ஷியல் மற்றும் கமர்ஷியல் அல்லாத மின்சார வாகன பயனர்களுக்கும் இந்த இலவச சார்ஜ் வழங்கப்படவுள்ளது. இந்த முன்னெடுப்பு பெட்ரோல், டீசல் எரிபொருளில் இருந்து மின்சார வாகனத்தை நோக்கி மக்களை நகர்த்துவதற்காக செய்யப்படுகிறது.
டெல்லியில் ஒவ்வொரு 3 கி.மீட்டர்களுக்கும் இடையும் சார்ஜிங் நிலையம் அமைக்கப்படவுள்ளது. இந்த திட்டத்திற்கு டெல்லியை தேர்ந்தெடுப்பதற்கு காரணம் அங்கு கடந்த மார்ச் மாதம் வாங்கப்பட்ட வாகனங்களில் 19 சதவீதம் மின்சார வாகனங்களே ஆகும். இதில் 10,707 வாகனங்கள் இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 5,888 வாகனங்கள் இருசக்கர வாகங்களாகும் என கூறினார்.
இந்த திட்டத்தை தொடர்ந்து அரசாங்க அமைப்புகளுடன் இணைந்து மேலும் 100 சார்ஜிங் நிலையங்கள் நிறுவப்படும் எனவும் கூறியுள்ளார்.
தற்போது டெல்லியில் 1 யூனிட் சார்ஜ் ரூ.10க்கு விற்பனையாகி வரும் நிலையில் இந்த இலவச திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் ஊரடங்கு பிரச்சனை இருந்தபோதும் இத்தகைய விற்பனையை டெஸ்லா எட்டியுள்ளதற்கு டெஸ்லா அணி தான் காரணம் என அந்நிறுவனத்தின் சி.இ.ஓ எலான் மஸ்க் பாராட்டு தெரிவித்துள்ளார்.
டெஸ்லா நிறுவனம் உலகின் முன்னணி மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமாக இருக்கிறது.
இந்த நிறுவனம் கடந்த ஏப்ரல் 2021 முதல் இந்த ஆண்டு மார்ச் 2022 வரை சுமார் 10 லட்சத்திற்கும் மேலான கார்களை விற்றுள்ளதாக அறிவித்துள்ளது. இதில் 3 லட்சத்து 10 ஆயிரத்து 048 கார்கள் இந்த ஆண்டு முதல் காலாண்டில் விற்கப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 67 சதவீதம் அதிகம்.
டெஸ்லா மாடல் எஸ் மற்றும் டெஸ்லா மாடல் ஒய் கார்கள் கடந்த ஆண்டு 24,964 யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளன. இந்த ஆண்டு முதல் காலாண்டில் 14,724 யூனிட்டுகள் எஸ் மற்றும் ஒய் மாடல்களில் விற்பனையாகியுள்ளது.
உலகம் முழுவதும் லாஜிஸ்டிக்ஸ் பிரச்சனை மற்றும் சிப் பற்றாக்குறை பிரச்சனை ஆட்டோமொபைல் சந்தையை பலவீனப்படுத்தியுள்ளது. இருப்பினும் டெஸ்லா அதிக எண்ணிக்கையிலான கார்களை விற்றுள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
சீனாவில் ஊரடங்கு பிரச்சனை இருந்தபோதும் இத்தகைய விற்பனையை டெஸ்லா எட்டியுள்ளதற்கு டெஸ்லா அணி தான் காரணம் என அந்நிறுவனத்தின் சி.இ.ஓ எலான் மஸ்க் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஹோண்டா சிட்டி, ஹோண்டா WR-V, ஹோண்டா அமேஸ் ஆகிய கார்களுக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹோண்டா நிறுவனம் தனது வாகனங்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. இதன்படி ஹோண்டா சிட்டி கார்களுக்கு ரூ.5,396 வரை சலுகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் எக்ஸ்சேஜ் ஆஃபரில் வாங்குவோருக்கு கூடுதலாக ரூ.5000 சலுகையும், கார்பரேட் சலுகையில் வாங்குவோருக்கு ரூ.7000 கூடுதல் சலுகையும் வழங்கப்படவுள்ளது.
இத்துடன் லாயல்டி போனஸும் இந்த காருக்கு வழங்கப்படுகிறது.
ஹோண்டா சிட்டி 5வது ஜெனரேஷன் கார் மிட் அளவு செடான் காராக இருக்கிறது. இது பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் தேர்வுகளில் வருகிறது.
இந்த கார் சிவிடி டிரான்ஸ்மிஷனை வழங்குகிறது. அத்துடன் அதிக இடமுள்ள, பல அம்சங்கள் நிறைந்த கேபினை வழங்குகிறது.
அதேபோல ஹோண்டா WR-V காருக்கு எக்ஸ்சேஞ்ச் சலுகையாக ரூ.10000 வரை வழங்கப்படுகிறது. லாயல்டி போனஸாக ரூ.5000, கார்பரேட் சலுகையாக ரூ.5000 சலுகையும் இந்த காருக்கு உண்டு.
இந்த கார் 5 பேர் அமரக்கூடிய கிராஸ் ஓவர் எஸ்யூவி ரக கார் ஆகும். இந்த கார் 4 வேரியண்டுகளில் 2 இன்ஜின் தேர்வுகளில் வருகிறது.
ஹோண்டா நிறுவனம் ஹோண்டா அமேஸ் காருக்கும் சலுகையை அறிவித்துள்ளது. இதன்படி இந்த காரை வாங்குபவர்களுக்கு ரூ.5000 லாயல்டி போனஸ் வழங்கப்படும். அத்துடன் கார்பரேட் சலுகை, கார் எக்ஸ்சேஞ்ச் சலுகையும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடத்தில் 13 சதவீதம் வரை புதிய வாகனத்தின் விலை உயர்ந்துள்ளதாகவும், பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலையும் 29 சதவீதம் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
உலகம் முழுவதும் ஆட்டோமொபைல் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆட்டோமொபைல் நிறுவனங்கள் புதுப்புது கார்கள், பைக்குகளை தொடர்ந்து சந்தையில் அறிமுகம் செய்த வண்ணம் இருக்கின்றன.
இந்நிலையில் ஃபோக்ஸ்வேகன், மெர்சடிஸ் பென்ஸ், பி.எம்.டபில்யூ, டொயோட்டோ உள்ளிட்ட நிறுவனங்கள் திடீரென விலை உயர்வை இந்த மாதம் முதல் அறிவித்துள்ளன.
ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் மற்றும் ஏனைய ஆட்டோ மொபைல் சார்ந்த பொருட்கள் விலை ஏறியதால் வாகனங்களின் விலையும் உயர்த்தப்படுவதாக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அறிவித்தன. இந்நிலையில் இந்த விலை உயர்வுக்கு ரஷியா - உக்ரைன் போர் முக்கிய பங்குவகிப்பதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போரினால் உலக ஆட்டோமொபைல் துறை பெரும் பாதிப்பை சந்திக்கும் என்றும், அந்த பாதிப்பு தொடர்ந்து வளரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
ரஷியா உக்ரைன் போரினால் பி.எம்.டபில்யூ இரண்டு ஜெர்மன் தொழிற்சாலைகளில் உற்பத்தியை நிறுத்தியுள்ளது. பென்ஸ் நிறுவனமும் தங்களது தொழிற்சாலையில் உற்பத்தியை தாமதப்படுத்தியுள்ளது. இதுபோன்ற உற்பத்தி பாதிப்பு உலக அளவில் வாகனங்கள் வாடிக்கையாளர்கள் கைகளுக்கு சென்று சேர்வதை தாமதமாக்குவதால், வாகனங்களின் விலையும் உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தவிர கம்ப்யூட்டர் சிப்ஸ் மற்றும் பிற கணினி பாகங்களுக்கான பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இதுவும் பழைய மற்றும் புதிய கார்களின் விலை உயர்வை அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது.
உக்ரைன் நாடு எலக்ட்ரிக்கல் ஒயரிங் ஏற்றுமதியில் பெரும் பங்கு வகிக்கிறது. ரஷியாவும் கேட்டலிட்டிக் கன்வெர்டர் மற்றும் மின்சார வாகன பேட்டரிக்களுக்கான நிக்கல் உள்ளிட்ட உலோக ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கும் நாடாக இருக்கிறது. இந்த இரு நாடுகளும் போரில் ஈடுபட்டுள்ளதால் இந்த பாதிப்பு ஆட்டோமொபைல் சந்தையையை பெரிதும் பாதித்துள்ளது.
கடந்த வருடத்தில் 13 சதவீதம் வரை புதிய வாகனத்தின் விலை உயர்ந்துள்ளதாகவும், பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலையும் 29 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ரஷிய உக்ரைன் பிரச்சனை நீடிக்கும் வரை இந்த விலை தொடர்ந்து அதிகரித்துகொண்டே இருக்கும் என கூறப்படுகிறது.
கடந்த காலாண்டில் விற்பனையான கார்களில் 40 சதவீத புதிய கார்கள் மின்சாரம் அல்லது ஹைப்ரிட் வகை கார்களாகவே இருந்துள்ளன.
உலகம் முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து மின்சார வாகனங்களை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர்.
பெரும் ஆட்டோமொபைல் நிறுவனங்களும் மின்சார வாகனங்களை தயாரித்து புதிய புதிய மாடல்களை சந்தையில் அறிமுகம் செய்கின்றன. ஏற்கனவே பெட்ரோல், டீசலில் உற்பத்தி செய்யப்பட்ட மாடலில் மின்சார வெர்ஷனையும் நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன.
இந்நிலையில் பிரான்ஸ் நாட்டில் முதல் முதலாக பெட்ரோல் வாகனங்களை விட மின்சார வாகனங்களின் விற்பனை அதிகரித்து சாதனை படைத்துள்ளது.
குறிப்பாக இந்த ஆண்டு ஜனவரி முதல் பிரான்ஸ் நாட்டில் மின்சார வாகனங்கள்ள் விற்பனை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அரசாங்கமும் மானியம் உள்ளிட்டவற்றை வழங்கி வருவதால் மக்கள் மின்சார வாகனங்களில் அதிகம் ஆர்வம் செலுத்த தொடங்கியுள்ளனர்.
கடந்த காலாண்டில் விற்பனையான கார்களில் 40 சதவீத புதிய கார்கள் மின்சாரம் அல்லது ஹைப்ரிட் வகை கார்களாகவே இருந்துள்ளன. 38 வகை கார்கள் பெட்ரோல் வகை மாடல்களாக இருந்துள்ளன.
கடந்த மாதம் அதிகம் விற்ற மின்சார கார்களின் முதலிடத்தில் டெஸ்லா மாடல் 3 இருந்துள்ளது, ரெனால்டின் டாசியா, ஸ்டெல்லாண்டிஸின் பியேகியாட் 208 ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. பிரான்ஸில் உள்நாட்டு தயாரிப்பாக சிட்ரியான், ஜெர்மன் கார் தயாரிப்புகளான பிஎம்டபில்யூ, ஆடி, மெர்சடிஸ் ஆகியவற்றின் கார்களும் அதிகம் விற்கப்பட்டுள்ளன.
மேலும் பிரான்சில் புதிய கார்கள் விற்பனை கடந்த காலாண்டில் 20 சதவீதம் வரை சரிவை சந்தித்துள்ளது. இதற்கு காரணம் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள செமி கண்டெக்டர்கள் சிப் பற்றாக்குறை தான் என கூறப்படுகிறது.
ஃபிரான்ஸில் பெட்ரோல் கார் விற்பனையை மின்சார வாகனங்கள் முந்தினாலும் அந்நாட்டில் டீசல் வாகனங்களே அதிகம் விற்கப்பட்டு வருகின்றன. கிட்டதட்ட 16.5 சதவீதம் சந்தை பங்கை டீசல் கார்கள் முதல் காலாண்டில் வைத்திருந்தன. தற்போதும் வைத்துள்ளன. ஆனால் இன்னும் 3 ஆண்டுகளில் மின்சார கார் விற்பனை டீசல் கார்களையும் முந்தி செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாருது சுஸூகி நிறுவனம் இதுவரை 22.5 லட்சம் கார்களை 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஏற்றுமதி செய்துள்ளது.
நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மாருதி சுஸுகி இந்தியா, கடந்த 2021 - 22ஆம் நிதியாண்டில் 2,38,376 கார்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளது.
அதுபோல, இந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மட்டும் 26,496 கார்களை மாருதி சுஸூகி ஏற்றுமதி செய்திருக்கிறது. இது மாருதி சுஸுகி வரலாற்றிலேயே ஒரு மாதத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட அதிகபட்ச கார்களின் எண்ணிக்கை ஆகும்.
கடந்த 1986-ம் ஆண்டு முதல் வாகனங்களை ஏற்றுமதி செய்து வரும் மாருது சுஸூகி நிறுவனம் இதுவரை 22.5 லட்சம் கார்களை ஏற்றுமதி செய்துள்ளது. மாருதியின் கார்கள் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாருதி சுஸுகி இந்தியாவின் புதிய நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்றிருக்கும் ஹிஷாசி டாக்யூச்சி கூறியதாவது:-
இந்த நாள் வாழ்வில் மறக்க முடியாத நாளாக அமைந்துவிட்டது. நான் இந்த நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் இந்த வேளையில், மாருதி சுஸுகி நிறுவனம் ஏற்றுமதியில் வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனையை படைத்துள்ளது. இந்த வளர்ச்சி தொடந்து அதிகரிக்கும் என நம்புகிறேன்.
இவ்வாறு ஹிடாஷி டாக்யூச்சி கூறினார்.
Global NCAP அமைப்பு இந்த காரின் பாதுகாப்புக்கு 4 ஸ்டார் மதிப்பீட்டை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரெனால்ட் இந்தியா நிறுவனம் 2022 ஆம் ஆண்டிற்கான புதிய ரெனால்ட் கிகர் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டில் ரெனால்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கும் 3-வது கார் இதுவாகும்.
இப்போது வெளியிடப்பட்டிருக்கும் இந்தக் கார் கருப்பு நிறத்திலான டாப் ரூப்பைக் கொண்ட இரண்டு வண்ண விருப்பங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது. கம்பீரமான தோற்றம் மற்றும் அசத்தல் அம்சங்களை கொண்டிருக்கும் ரெனால்ட் கிகருக்கான முன்பதிவும் தொடங்கப்பட்டுள்ளது.
சிறிய எஸ்யூவி டர்போ ரக காரான இதில் புதிய டெயில்கேட் மற்றும் குரோம் வேலைப்பாடு, முன்பக்கத்தில் ஸ்கிட் பிளேட்டுகள் மற்றும் டர்போ டோர் டீக்கால்ஸ் ஆகியவை உள்ளன. இந்த காரில் 16-இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள் சிவப்பு வீல்கேப்களுடன் வருகின்றன.
இந்த காரில் மல்டி சென்ஸ் டிரைவிங் மோடுகள் மற்றும் PM2.5 அட்வான்ஸ்டு அட்மாஸ்பியர் ஃபில்டரை உள்ளடக்கிய லேட்டஸ்ட் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. வயர்லெஸ் சார்ஜிங், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் 60/40 ஸ்பிலிட் ரியர் சீட் உடன் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட் உள்ளது.
மேலும் இந்த புதிய ரெனால்ட் சிகர் கார் இரண்டு எஞ்சின் தேர்வுகளுடன் வழங்கப்படுகிறது. 1.0-லிட்டர் எனர்ஜி இன்ஜின் மேனுவல் மற்றும் ஈஸி-ஆர் ஏஎம்டி டிரான்ஸ்மிஷன்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. மற்றொரு இன்ஜின் மேனுவல் மற்றும் எக்ஸ்-டிரானிக் சிவிடி டிரான்ஸ்மிஷன்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஒரு லிட்டர் பெட்ரோலில் இந்த கார் 20 கிலோ மீட்டர் மைலேஜுக்கு மேல் தரும் என கூறப்படுகிறது.
இந்த காரில் 2 ஏர்பேக்குகள், EBD உடன் ஏபிஎஸ், பின்புற பார்க்கிங் சென்சார்கள், சென்சிங் டோர் அன்லாக் மற்றும் ஸ்பீட் சென்சிங் டோர் லாக் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக Global NCAP அமைப்பு இந்த காரின் பாதுகாப்புக்கு 4 ஸ்டார் மதிப்பீட்டை வழங்கியுள்ளது.
இந்த காரின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.5.84 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் மக்கள் பழைய கார்களை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் பல்வேறு காரணங்களால் அதன் விலை அதிகரித்துள்ளது.
இந்தியாவில் புதிய கார்களை விட பயன்படுத்தப்பட்ட கார்களே அதிகம் விற்பனை ஆகி வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட கார்களின் விலை 10 சதவீதம் வரை கடந்த ஆண்டு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பயன்படுத்தப்பட்ட கார்கள் தற்போது கிடைப்பதே அரிதாக இருப்பதாக கூறப்படுகிறது. அதிகரிக்கும் பணவீக்கம், வேலைவாய்ப்பு குறித்த பிரச்சனைகள் ஆகிய காரணங்களால் புதிய கார்கள் வாங்கப்படுவது குறைவதனால் பழைய கார்களை விற்க யாரும் முன்வருவதில்லை என்பதால் தேவை அதிகரித்து விலை உயர்ந்துள்ளது.
இதுகுறித்து மாருதி சுஸூகியின் நிர்வாக இயக்குநர் ஷாசங் ஸ்ரீனிவாட்சா கூறுகையில், வாடிக்கையார்கள் புது கார் ஒன்றை வாங்க வேண்டும் என பணம் சேர்த்து அல்லது கடனுக்கு விண்ணப்பித்து பணம் கைக்கு வந்தவுடன் வாங்க வரும்போது அந்த காரின் விலை ஏறி விடுகிறது. இதனால் அவர்களுக்கு பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்குவது தான் சுலபமாக இருக்கிறது. மேலும் பெரும்பாலான மாநிலங்கள் பழைய கார்களை அழிக்கும் திட்டங்களை கொண்டு வருவதால் பயன்படுத்தப்பட்ட கார்களின் விலை உயர்ந்து வருகிறது என தெரிவித்துள்ளார்.
கொரோனா காலக்கட்டத்தில் ஒருவர் பழைய காரை விற்றுவிட்டு புதிய காரை வாங்குவது 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
மகிந்திரா நிறுவனத்தை பொறுத்தவரை அதன் பயன்படுத்தப்பட்ட கார்களின் விலை 5 முதல் 15 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.






