search icon
என் மலர்tooltip icon

    கார்

    மாருதி சுஸூகி
    X
    மாருதி சுஸூகி

    மீண்டும் விலையை உயர்த்தும் பிரபல கார் தயாரிப்பு நிறுவனம்

    மாருதி சுஸூகி நிறுவனம் இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை 8.8 சதவீதம் வாகனங்களுக்கான விலையை உயர்த்தியுள்ளது.
    இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக மாருதி சுஸூகி இருக்கிறது. இந்த நிறுவனம் ஆல்டோ, எஸ் கிராஸ் என நிறைய மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. 

    இந்நிலையில் மாருதி சுஸூகி நிறுவனம் மீண்டும் வாகனங்களின் விலைகளை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது. மாருதி சுஸூகியின் அனைத்து வகை வாகனங்களுக்கும் விலை உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வாகனங்களின் உள்ளீட்டு செலவுகள் தொடர்ந்து உயர்ந்து வருவதால் இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

    ஏற்கனவே மாருதி சுஸூகி நிறுவனம் இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை 8.8 சதவீதம் வாகனங்களுக்கான விலையை உயர்த்தியுள்ளது. இந்நிலையில் தற்போது ஏப்ரல் மாதமும் விலை உயர்வை அறிவித்துள்ளது. 

    உயர்த்தப்பட்ட விலைகளின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×