என் மலர்tooltip icon

    கார்

    எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனமே தானியங்கி கார் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் அவர் பேசியுள்ளார்.
    ஓட்டுநர்கள் இல்லாத தானியங்கி கார்களால் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் என டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

    டெஸ்லா நிறுவனம் தானியங்கி கார் தொழில்நுட்பத்தில் முன்னோடியாக இருந்து வருகிறது. அந்த நிறுவனம் தற்போது செமி-ஆட்டோனமஸ் டிரைவிங் மென்பொருளை மின்சார வாகன நிறுவனங்களுக்கு அளித்து வருகிறது. இது தவிர் தற்போது எஃப்.எஸ்.டி எனப்படும் முழுதாக தானியங்கி முறையில் ஓடும் கார்களையும் உருவாக்கி வருகிறது.

    இதுகுறித்து ட்வீட் செய்துள்ள டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் கூறியதாவது:-

    எதிர்காலத்தில் தானியங்கி வாகனங்கள் மக்கள் பயனிப்பதை எளிதாக்கும் என்பதால்,  மக்கள் கூடுதலாக வாகனங்களை வாங்க முற்படுவர். இதனால் சாலையில் செல்லும் வாகனங்களும் அதிகரிக்கும். போக்குவரத்து நெரிசலும் அதிகமாகும். இதை தவிர்க்க முடியாது. ஆனால் தானியங்கி கார்கள் போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் வேதனையை குறைக்கும்.

    இவ்வாறு எலான் மஸ்க் கூறியுள்ளார்.

    எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனமே தானியங்கி கார் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், அதனால் ஏற்படும் பாதிப்புகளை அவர் பேசியுள்ளார்.
    இந்த புதிய நிறுவனம் இந்த ஆண்டே தொடங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
    ஜப்பானை சேர்ந்த இரண்டு பெரிய நிறுவனங்களான சோனியும், ஹோண்டாவும் இணைந்து புதிய மின்சார வாகனம் உற்பத்தி செய்யும் நிறுவனத்தை தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளன. இதன்மூலம் நவீன தொழில்நுட்பத்துடனான மின்வாகனங்களை தயாரிக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளன.

    ஜாயிண்ட் வெஞ்சர் அடிப்படையில் தொடங்கப்படும் இந்த நிறுவனத்தில் வாகன உற்பத்தியோடு, அதிக திறன் வாய்ந்த மின்வாகன பேட்டரிக்களையும் விற்பனை செய்யப்போவதாக கூறப்படுகிறது.

    இந்த புதிய நிறுவனத்தை இந்த ஆண்டே தொடங்குவதற்கு இரு நிறுவனங்களும் திட்டமிட்டு வருகின்றன.

    ஹோண்டா- சோனி

    இந்த புதிய நிறுவனத்தில் ஹோண்டா நிறுவனம் வாகன பாகங்கள் தயாரிப்பு, விற்பனைக்கு பிறகான சேவை உள்ளிட்டவைகளை பார்த்துகொள்ளும். சோனி நிறுவனம், இமேஜிங், சென்சார், தொலைத்தொடர்பு, நெட்வொர்க், கேளிக்கை ஆகியவற்றில் தனது தொழிநுட்பத்தை வழங்கும்.

    இந்த ஆண்டே நிறுவனம் தொடங்கப்பட்டாலும் புதிய நிறுவனத்தின் முதல் ஈ.வி மாடல் வாகனம் 2025-ம் ஆண்டில் தான் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. இந்த புதிய நிறுவனத்தில் திட்டமிடுதல், டிசைன், விற்பனை ஆகியவை நடைபெறும் என்றும், உற்பத்தி ஹோண்டாவின் உற்பத்தி நிலையங்களில் தான் செய்யப்படும் என கூறப்படுகிறது.

    ரொக்கத் தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் சலுகை, ஹோண்டா வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு தள்ளுபடி என ரூ.35,000 வரை விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது.
    ஹோண்டா நிறுவனம் தனது கார்களுக்கு சிறப்பு தள்ளுபடியை அறிவித்துள்ளது. 

    இதன்படி, ஹோண்டா சிட்டி 5-வது ஜெனரேஷன் காருக்கு ரூ.10,000 வரை ரொக்கத் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் எக்ஸ்சேஞ்ச் சலுகையில் ரூ.5000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் பழைய ஹோண்டா வாடிக்கையாளர்களுக்கு ரூ.5,000 வரை லாயல்டி போனஸ், ஹோண்டா கார் எக்ஸ்சேஞ்சிற்கு ரூ.7000 வரை போனஸ் என மொத்தம் ரூ.35,596 வரை தள்ளுபடி விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல ஹோண்டா சிட்டி 4-வது ஜெனரேஷன் காருக்கு பழைய ஹோண்டா வாடிக்கையாளர்களுக்கு ரூ.5,000 வரை லாயல்டி போனஸும், ரூ.7,000 வரையிலான ஹோண்டா கார் எக்ஸ்சேஞ்ச் சலுகையையும், ரூ.8,000 வரை கார்ப்பரேட் தள்ளுபடி என மொத்தம் ரூ.20,000 வரை தள்ளுபடி விலை வழங்கப்படுகிறது.

    ஹோண்டா ஜாஸ் காருக்கு ரூ.10,000 வரை ரொக்க தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, எக்ஸ்சேஞ்ச் போனஸாக ரூ.5,000 தள்ளுபடி, பழைய ஹோண்டா வாடிக்கையாளர்களுக்கு ரூ.5,000 வரை லாயல்டி போனஸ், ஹோண்டா கார் எக்ஸ்சேஞ்சில் ரூ.7,000,  கார்ப்பரேட் தள்ளுபடி ரூ.4,000 என தள்ளுபடியாக மொத்தம் ரூ.33,158 வரை வழங்கப்படுகிறது. 

    ஹோண்டா சிட்டி கார்

    ஹோண்டா நிறுவனம் அதன் எஸ்யுவி ஹோண்டா WR-V காருக்கு மொத்தம் ரூ. 26,000 வரை தள்ளுபடிகளை வழங்கியுள்ளது. இதில் எக்ஸ்சேஞ்ச் சலுகையாக ரூ.10,000 வரை, பழைய வாடிக்கையாளர்களுக்கு ரூ.5,000 வரை, ஹோண்டா கார்களை எக்ஸ்சேஞ்ச் செய்தால் ரூ.7,000 வரை, கார்ப்பரேட் தள்ளுபடி ரூ.4,000 வரை வழங்கப்படுகிறது.

    ஹோண்டா அமேஸ் காருக்கு மொத்தமாக ரூ.15,000 வரை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இதில் பழைய வாடிக்கையாளர்களுக்கு ரூ.5,000 வரை லாயல்டி போனஸ், ரூ.6,000 வரை ஹோண்டா கார் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடியாக ரூ.4,000 ஆகியவை வழங்கப்படுகிறது.

    இந்த தள்ளுபடி மார்ச் 31, 2022 வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இந்த சேவையில் ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.3 அல்லது ரூ.4 என்ற விலையில் சார்ஜ் வழங்கப்படுகிறது.
    இந்தியாவில் மின்சார வாகனங்களின் உற்பத்தி அதிகரித்து வருகிறது. பெரும் நிறுவனங்கள் மின்சார வாகனங்களை அறிமுகம் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் ஹோப்சார்ஜ் என்ற நிறுவனம் வீட்டிற்கே வந்து மின்சார வாகனங்களை சார்ஜ் செய்யும் சேவையை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாங்கள் வேகமாக சார்ஜ் வழங்கும் சேவையை தொடங்கியுள்ளோம். நகரத்தின் எந்த பகுதியிலும், எந்த நாளிலும், எந்த நேரத்திலும் சார்ஜ் வழங்கப்படும். தற்போது குர்கானில் மட்டும் சோதனை முறையில் இந்த சேவை வழங்கப்படுகிறது. 

    இந்த சேவையில் 1 kWh சார்ஜ் ரூ.20-க்கு வழங்கப்படுகிறது. இதன்படி பார்த்தால் ஒரு கிலோமீட்டருக்கு ரூ.3 அல்லது ரூ.4-க்கு சார்ஜ் வழங்கப்படும். எங்கள் சேவையை பயன்படுத்துவதற்கு ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்ஸில் செயலிகளும் இருக்கிறது. 

    சோதனைக்கு பிறகு முக்கிய நகங்களில் இந்த சேவை வழங்கப்படும். 

    இவ்வாறு ஹோப்சார்ஜ் நிறுவனம் கூறியுள்ளது.
    கியா நிறுவனம் வெளியிட்டு வரும் கார்கள், விற்பனையில் பெரும் சாதனை படைத்து வருகின்றன.
    தென் கொரிய கார் உற்பத்தி நிறுவனமான கியா, இந்தியாவில் கடந்த 2019-ம் ஆண்டு செல்டோஸ் காருடன் தனது விற்பனையை தொடங்கியது. கியாவின் கார்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் இருந்து வருகிறது.

    இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் 18,121 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளதாக கியா இந்தியா அறிவித்துள்ளது. இது கடந்த பிப்ரவரி மாதத்தை விட 8.5 சதவீதம் அதிகமாகும்.

    கடந்த மாதத்தில் கியாவின் செல்டோஸ் 6,575 யூனிட்டுகளும், சோனெட் 6,154 யூனிட்டுகளும் விற்பனையாகி உள்ளது. கார்னிவல் லக்சரி எம்.பி.வி கார் 282 யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    கியா கேரன்ஸ்

    இந்நிலையில் தற்போது அறிமுகமாகியுள்ள புதிய கேரன்ஸ் கார் விற்பனையில் புதிய இலக்கை எட்டும் என்றும், அதன் விற்பனை இந்தியாவில் கியாவின் நிலையை வலுவாக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    தற்போது அனந்தபூரில் தொடங்கப்பட்டுள்ள கியா தொழிற்சாலையின் காரணமாக கார் உற்பத்தி அதிகரிக்கப்படும் என்றும், உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள செமி கண்டெக்டர் பற்றாக்குறை கார் தயாரிப்பாளர்களை பெரிதாக பாதித்து இருந்தாலும், அதனை ஈடுகட்டும் நடவடிக்கைகளில் கியா ஈடுபடும் எனவும் கூறியுள்ளது.

    கியாவின் கேரன் காரில் 2 பெட்ரோல் மோட்டார், 1 டீசல் மோட்டார் என 3 இன்ஜின் தேர்வுகள் தரப்பட்டுள்ளன. மேலும் இதில் பல்வேறு டிரான்ஸ்மிஷன், சீட் லே அவுட் ஆப்ஷன் உள்ளிட்ட அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.
    மெர்சிடிஸ், பி.எம்.டபில்யூ, லெக்சஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் டாப் கிளாஸ் கார்களை இந்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது.
    இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆட்டோமொபைல் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சாதாரண காரில் இருந்து பிரீமியம் கார்கள் வரை விற்பனையில் சாதனை படைத்து வருகின்றன. இந்நிலையில் இந்த மாதம் இந்தியாவில் அறிமுகமாகவுள்ள கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

    இதன்படி ஸ்கோடா நிறுவனம் ஸ்லாவியா காரை வரும் 3-ம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது. 1.5 லிட்டர் வெர்ஷன் காரான இதற்கு ரூ.10 லட்சத்து 69 ஆயிரம் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரில் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ மோட்டார், ஆக்டீவ் சிலிண்டர் தொழில்நுட்பம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 148 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இதனுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி யூனிட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    மெர்சிடிஸ் மேபேக் எஸ்-கிளாஸ் கார் வரும் 3ம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. அதிக லக்சூரி அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள கார் இரு விதமான ட்ரிம்களில், இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளில் விற்பனைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் விர்சுஸ் காரை இந்த மாதம் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரை எம்க்யூபி ஏ0 ஐஎன் பிளாட்பாரத்தில் வைத்து உள்ளூரிலேயே தயாரிக்க திட்டமிட்டுள்ளது. 

    லெக்சஸ் நிறுவனம் என்எக்ஸ் 350எச் ஃபேஸ்லிஃப்ட் காரை  மார்ச் 9-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. இக்காரின் விலை பற்றி விபரம் இன்னும் அறிவிக்கப்படதா நிலையில், பல்வேறு அம்சங்களுடன் இந்த கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    எம்.ஜி நிறுவனம் 2022-ம் ஆண்டுக்கான எம்ஜி இசட்எஸ் இவி காரை இந்த மாதம் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த காரில் பழைய வெர்ஷனில் இருந்து மாற்றப்பட்ட முன்-பின் பம்பர்கள், ஹெட்லைட்டுகள், அலாய் வீல்கள் மற்றும் மறு வடிவமைப்பு செய்யப்பட்ட சார்ஜிங் போர்ட் உள்ளிட்டவை இடம்பெறும் என கூறப்படுகிறது.

    டொயோட்டா ஹைலக்ஸ்

    பிஎம்டபிள்யூ நிறுவனம் எக்ஸ்4 சொகுசு காரை இந்த மாதத்தில் வெளியிடவுள்ளது. இதற்கான டீசர் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த கார் குறித்த எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

    டொயோட்டா நிறுவனம் ஹைலக்ஸ் பிக்-அப் ட்ரக் ரக வாகனத்தை அறிமுகம் செய்யவுள்ளது. இக்காருக்கு ரூ. 1 லட்சம் என்ற முன் தொகையில் புக்கிங் நடைபெற்று வருகிறது. இக்காரில் 2.8 லிட்டர் டீசல் மோட்டார் கொண்டுள்ளது.
    இது 201 பிஎச்பி பவர் மற்றும் 420 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனையும் கொண்டுள்ளது. இது தவிர டொயோட்டா நிறுவனம் கிளான்ஸா ஃபேஸ்லிஃப்ட் காரையும் அறிமுகம் செய்யவுள்ளது.
    மாறிவரும் காலங்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
    இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி விற்பனை குறித்து புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

    இதன்படி இனி மாருதி சுஸூகி நிறுவனத்தின் அசல் உதிரி பாகங்கள், நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட நகரங்களில் ஆன்லைனில் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது. 

    தற்போது 2,000-க்கும் மேற்பட்ட மாருதி சுஸுகியின் அசல் உதிரிபாகங்கள் ஆன்லைனில் கிடைக்கும் என்றும், மேலும் உள்ள தயாரிப்புகளும் விரைவில் ஆன்லைனில் விற்பனைக்கு வரும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

    இதுகுறித்து மாருதி சுஸூகி இந்தியாவின் எம்.டி மற்றும் சி.இ.ஓ கெனிச்சி அயுகாவா கூறியதாவது:-

    வாடிக்கையாளர்கள் இனி தேடி அலைய தேவையில்லாமல் உண்மையான மாருதி சுஸுகி உதிரிபாகங்களை இணையதளத்தில் மூலமே ஆர்டர் செய்துகொள்ளலாம். மேலும் அவற்றை வீட்டிலேயே வைத்து நிறுவுவதற்கு வழிவகை செய்யவும் ஆன்லைனில் ஆப்ஷன் தரப்பட்டிருக்கும்.

    மாறிவரும் காலங்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்கள் மாருதி சுஸூகிக்கான அசல் பாகங்களைப் பெறுவதை எளிதாக்கும்.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.
    இந்த கார் 2019 பிஎம்டபிள்யூ எக்ஸ்4 காரை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    பிஎம்டபிள்யூ  நிறுவனம் எக்ஸ்4 பிளாக் ஷேடோவ் எடிசன் என்ற புதிய சொகுசு கார் மாடல் ஒன்றை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

    எஸ்யூவி ரக காரான இதில் பல சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

    இந்த கார் 2019 பிஎம்டபிள்யூ எக்ஸ்4 காரை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. எக்ஸ்4 காரின் டேஷ்போர்டு இந்த காரில் மறு வேலைப்பாடு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், 12.3 இன்ச் அளவுள்ள டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன.

    எக்ஸ்4 பிளாக் ஷேடோவ் எடிசன்

    இந்த காரில் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான இன்ஜின் தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 3.0 லிட்டர் டீசல் ஆகிய மோட்டார் தேர்வுகளும் இதில் இடம்பெற்றுள்ளது. இந்த காரின் பெட்ரோல் எஞ்ஜின் 248 பிஎச்பி பவர், 350 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. டீசல் எஞ்ஜின் 282 பிஎச்பி பவர் மற்றும் 650 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனை கொண்டுள்ளது. இத்துடன், 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட இருக்கின்றது. 

    இது தவிர இந்த காரில் மூன்று ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், இன்ஜின் ஸ்டார்ட்-ஸ்டாப் பட்டன், எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், ட்வீக்கட் சென்டர் கன்சோல் மற்றும் புதிய கியர் லிவர் உள்ளிட்ட கொடுக்கப்பட்டுள்ளன. எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், ஹில் டெசன்ட் கன்ட்ரோல், பிஎம்டபிள்யூ லைவ் காக்பிட் ப்ளஸ், ஹெட்ஸ்-அப் டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே உள்ளிட்ட அம்சங்களும் இதில் வழங்கப்பட்டுள்ளன.

    இந்த காரில் ஸ்போர்ட்டி லுக் கிட்னி க்ரில் முகப்பு பகுதியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அடாப்டீவ் எல்இடி ஹெட்லைட் மேட்ரிக்ஸ், முழு எல்இடி வால் பகுதி மின் விளக்கு, புதிய ஏப்ரான் மற்றும் ரெஃப்ளக்டர்கள் உள்ளிட்டவை இந்த எடிசனில் தரப்பட்டுள்ளன.

    ரூ.67.50 லட்சம் எக்ஸ் ஷோரூம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இந்த காரின் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் ரூ.50,000 மட்டும் செலுத்தி காரை முன்பதிவு செய்யலாம்.
    இதற்கான முன்பதிவுகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இந்த கார் மார்ச் 9-ம் தேதி அறிமுகமாகும் என கூறப்படுகிறது.
    ஜப்பானை சேர்ந்த லெக்சஸ் நிறுவனம், லெக்சஸ் என்எக்ஸ் 350எச் என்ற காரை விரைவில்  இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

    இந்த கார் பெட்ரோல் மற்றும் மின்சாரம் இரண்டிலும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்த காரில் பெட்ரோல் மோட்டாருடன், மின்சார மோட்டாரும் பொருத்தப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள மோட்டாருக்கு மின்சாரத்தை வழங்குவதற்கு சிறிய பேட்டரி பேக் ஒன்றையும் வழங்கியுள்ளது.

    இந்த காரி எக்ஸ்க்யூசைட், லக்சரி, எஃப் ஸ்போர்ட் உள்ளிட்ட 3 வேரியண்டுகளில் வருகிறது.

    லெக்சஸ் கார்

    இந்த காரில் 2.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு 4 சிலிண்டர் இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவற்றுடன் சேர்த்து மின்சார மோட்டாரும் இணைக்கப்பட்டுள்ளதால் இரண்டும் சேர்ந்து 235 எச்.பி ஆற்றலை தரும் என கூறப்படுகிறது. 

    இது தவிர இந்த காரில் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டர், ஸ்மார்ட் போன் இணைப்பு உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகளும் உள்ளது. 

    இந்த காரின் விலை ரூ.58.13 லட்சத்தில் இருந்து தொடங்கி ரூ.63.57 லட்சம் வரை இருக்கிறது. இதற்கான முன்பதிவுகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த கார் மார்ச் 9-ம் தேதி அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

    தனது போட்டியாளர்கள் அனைவரையும் விட பலேனோ காரே அதிக மைலேஜை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    மாருதி சுசுகி நிறுவனம் கடந்த பிப்ரவரி 22-ம் தேதி பலேனோ காரை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்தது. இந்த காரின் மைலேஜ் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. 

    இதுகுறித்து வெளியான தகவலின்படி, புதிய 2022 ஆட்டோமேட்டிக் பலினோ கார் ஒரு லிட்டருக்கு 22.35 கி.மீ முதல் 22.94 கி.மீ வரை மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல பலேனோவின் மேனுவல் வேரியண்ட், 22.35 கிமீ மைலேஜை வழங்கும் என கூறப்பட்டுள்ளது. 

    மேலும் புதிய பலேனோ காரில் 90 பிஎச்பி பவரை வெளியேற்றக் கூடிய 1.2 லிட்டர் ட்யூவல் ஜெட் கே12என் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கும்.

    இத்துடன், இதன் எஞ்ஜினில் 12 வோல்ட் மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பத்திற்கு பதிலாக எஞ்ஜின் ஐடில் ஸ்டார்ட்/ஸ்டாப் வசதிக் கொடுக்கப்பட்டுள்ளது. இது எரிபொருள் சிக்கனத்தை வழங்க உதவும் என கூறப்படுகிறது.

    2020-ம் ஆண்டு பலேனோவிற்கு போட்டியாக ஹூண்டாய் ஐ20, டாடா அல்ட்ராஸ், ஃபோக்ஸ்வேகன் போலோ மற்றும் ஹோண்டா ஜாஸ் ஆகிய பிரீமியம் தர கார்கள் விற்பனையில் இருக்கின்றன. இவை அனைத்தையும் விட பலேனோ அதிக மைலேஜை வழங்குகிறது.
    வெறும் 30 யூனிட் எண்ணிக்கையில் இந்த காரை மினி நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது.
    பிரபல கார் உற்பத்தி நிறுவனமான மினி, அதன் முதல் மின்சார காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மினி எலெக்ட்ரிக் என்ற பெயரில் இந்த கார் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் இந்த கார் மினி கூப்பர் எஸ்இ  என்ற பெயரில் சர்வதேச சந்தையில் கிடைக்கிறது.

    வெறும் 30 யூனிட் எண்ணிக்கையில் இந்த காரை மினி நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. இதற்கான முன்பதிவு கடந்த 2021ம் ஆண்டு தொடக்கியபோது இரண்டு மணி நேரங்களிலேயே அனைத்து யூனிட்டுகளும் புக் செய்யப்பட்டன.

    இந்த காரின் அறிமுக எக்ஸ் ஷோரும் விலை ரூ. 47,20,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த காரில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்:-

    இந்த காரில் பயன்படுத்தப்பட்டுள்ள மின் மோட்டார் அதிகபட்சமாக 181 பிஎச்பி மற்றும் 270 என்எம் டார்க்கை வெளியேற்றும் தன்மையை கொண்டது. இதில் 32.6 கிலோவாட் திறன் கொண்ட லித்தியம் அயன்-பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது.இதனால் இந்த காரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 270 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். 

    மினி எலெக்ட்ரிக் கார்

    இந்த காரை 2.5 மணி நேரத்தில் பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் சார்ஜ் செய்து கொள்ள முடியும். இதற்கு 11 கிலோ வாட் வசதிக் கொண்ட சார்ஜிங் பாயிண்ட் தேவைப்படும். 50 கிலோவாட் திறன் கொண்ட சார்ஜிங் பாயிண்டில் இந்த காரை சார்ஜ் செய்தால் வெறும் 36 நிமிடங்களிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும். 

    இந்த மினி எலெக்ட்ரிக் கார் உச்சபட்ச வேகமாக மணிக்கு 150 கிமீ-ஐ எட்டும். வெறும் 7.3 நொடிகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டும் திறனையும் கொண்டுள்ளது.

    இந்த கார் மூன்று கதவுகள் அமைப்பைக் கொண்ட மின்சார காராகும். மேலும் இந்த காரை கவர்ச்சியூட்டும் வகையில் 17 இன்ச் அலாய் வீல்கள், வட்ட வடிவ ஹெட்லேம்ப், யூனியன் ஜேக் தீமிலான எல்இடி டெயில்-லைட், வட்ட வடிவ ஓஆர்விஎம்கள் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டுள்ளன.

    இந்த கார் ஒயிட் சில்வர், மிட்நைட் பிளாக், மூன் வால்க் கிரே மற்றும் பிரிட்டிஷ் ரேசிங் கிரீன் ஆகிய நிறங்களில்

    பிரீமியம் மற்றும் லக்சூரி அம்சங்கள் கொண்ட இந்த எலெக்ட்ரிக் காருக்கு இந்தியாவில் நேரடி போட்டியாளர்கள் இல்லை.
    ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் காரான இது இதுவரை 2.5 லட்சம் யூனிட்டுகள் விற்பனையாகி உள்ளது.
    ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் 12 ஆண்டு காலமாக விற்பனையில் உள்ள போலோ நிறுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ஒரு பிரீமியம் ரக ஹேட்ச்பேக் கார் வகையாகும். 

    இதுவரை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் 6 தலைமுறை போலோ கார்களை அறிமுகம் செய்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு 6-வது தலைமுறை போலோ கார் வெளியானது.

    மஹாராஷ்டிரா மாநிலம் சக்கன் உற்பத்தி ஆலையில் உற்பத்தி செய்யப்படும் இந்த போலோ கார்கள் இதுவரை 2.5 லட்சம் யூனிட்டுகள் விற்பனையாகி உள்ளன. 

    போலோ கார்கள்

    விற்பனைக்கு வந்த புதிதில் இந்தியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இந்த காரின் மதிப்பு சமீபத்திய ஆண்டுகளில் பெரிதும் சரிந்துள்ளது. மாதத்திற்கு ஆயிரத்திற்கும் குறைவான போலோ காரின் யூனிட்டுகளே விற்பனையாகி வருகின்றன.

    இதனால் போலோ காரின் உற்பத்தி நிறுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், விர்சுஸ் காரை அறிமுகம் செய்து உலக அளவில் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. இதுவும்  போலோ காரின் உற்பத்தி பணியை நிறுத்துவதற்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. 

    இதேபோல விர்சுஸ் காரின் வருகை வெண்டோ காரின் உற்பத்தியையும் பாதிக்கலாம் என கருதப்படுகிறது.
    ×