என் மலர்tooltip icon

    கார்

    கடந்த மாதம் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் ஏர்பேக் பிரச்சனை காரணமாக 2 லட்சம் யூனிட்டுகள் எஸ்.யூ.வியை திரும்ப பெற்றது குறிப்பிடத்தக்கது.
    ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் சுமார் 10,119 காரை அமெரிக்காவில் திரும்ப பெற்றுள்ளது. தயாரிப்பின் போது ரியர் சஸ்பென்ஷனில் ஏற்பட்ட பிரச்சனை தான் இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2021 மற்றும் 2022-ம் ஆண்டு டிகுவான், 2022 டாவோஸ் ஆகிய காம்பெக்ட் கிராஸ் ஓவர் கார்கள் மேற்கூறிய தயாரிப்பு பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளன.

    ரியர் சஸ்பென்ஷன் பிரச்சனையால் பின்பக்கம் உள்ள இடது அல்லது வலது பக்கம் உள்ள கினக்குல்கள் உடைந்துக்கொள்கின்றன.

    திரும்ப பெறப்பட்ட கார்களில் 6 சதவீதம் பின்பக்க கினக்கில் பிரச்சனைகளே காரணம் என கூறப்படுகிறது.

    ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அமெரிக்காவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு இந்த பிரச்சனை குறித்து தகவல் அனுபி வருகிறது. குறிப்பாக டிகுவான், டாவோஸ் வாகனம் வைத்திருப்பவர்கள் அருகில் உள்ள ஃபோக்ஸ்வேகன் டீலரிடம் சென்று பரிசோதனை செய்துகொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளன. பிரச்சனை எதுவும் இருந்தால் கூடுதல் செலவு எதுவும் இல்லாமல் இரண்டு கினக்கில்களும் மாற்றித்தரப்படும் என கூறப்படுகிறது.

    அமெரிக்காவை தாண்டி பிறநாடுகளுக்கும் இந்த பிரச்சனை இருக்குமா என சரிபார்க்கப்படுகிறது.

    அதேபோல கடந்த மாதம் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் ஏர்பேக் பிரச்சனை காரணமாக 2 லட்சம் யூனிட்டுகள் எஸ்.யூ.வியை திரும்ப பெற்றது குறிப்பிடத்தக்கது.
    இந்தியாவிற்கு பசுமை ஆற்றலை வழங்கும் வாய்ப்பை தாங்கள் பயன்படுத்திக்கொண்டுள்ளதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது.
    பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து இந்திய மக்கள் மின்சார வாகனங்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். பெரும் ஆட்டோமொபைல் நிறுவனங்களும் மின்சார கார்கள், பைக்குகள், ஸ்கூட்டர்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகின்றன.

    இந்நிலையில் உலக அளவில் முன்னணி வணிக குழுமங்களில் ஒன்றான அதானி குழுமம் இந்திய மின்சார வாகன சந்தையில் களமிறங்கியுள்ளது. இந்தியா முழுவதும் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களை அதானி குழுமம் நிறுவ திட்டமிட்டுள்ளது.

    அதானி குழுமமும், பிரெஞ்ச் நாட்டை சேர்ந்த நிறுவனமான டோட்டல் எனர்ஜிஸும் சேர்ந்து முதல் மின்சார வாகன சார்ஜிங் ஸ்டேஷனை அகமதாபாத்தில் நிறுவியுள்ளன. மேலும் நாடு முழுவதும் 1500 மின்சார வாகனங்களை நிறுவவுள்ளதாகவும் தெரிவித்துள்ளன.

    தேவையை பொறுத்து கூடுதலாக சார்ஜிங் ஸ்டேஷன்கள் நிறுவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு பசுமை ஆற்றலை வழங்கும் வாய்ப்பை தாங்கள் பயன்படுத்திக்கொண்டுள்ளதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது.
    டெஸ்லா நிறுவனம் மின்சார கார்களை உற்பத்தி செய்வதில் உலகின் முன்னோடி நிறுவனமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
    டெஸ்லா நிறுவனம் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்வதில் உலகின் முன்னோடியாக இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் அதிகமான மின்சார வாகனங்களை உற்பத்தி செய்கிறது. 

    இந்நிலையில் இந்த நிறுவனம் சமீபத்தில் விற்பனை செய்யப்பட்ட 947 கார்களை திரும்ப பெற்றுள்ளது. இதற்கு காரணம் பின்புறத்தை காட்டும் இமேஜ் டிஸ்பிளே தாமதமாக செயல்படுவது தான் என கூறப்படுகிறது.

    காரை ரிவர்ஸ் செய்யும்போதே டிஸ்பிளேவில் காட்டப்படாமல், சிறிது நேரம் கழித்து காட்டப்படுகிறது. இது ஓட்டுநருக்கு தொந்தரவை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமில்லாமல் கார் விபத்து ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது என்பதால் அத்தனை கார்களையும் திரும்ப பெற்றுள்ளோம் என டெஸ்லா விளக்கமளித்துள்ளது.

    டெஸ்லா கார்களில் ஆட்டோபைலட் கம்ப்யூட்டர் 2.5 என்ற மென்பொருளின் மூலம் பின்புற டிஸ்பிளே வேலைசெய்கிறது. இந்த மென்பொருளில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து புதிய அப்டேட்டை வெளியிடவும் டெஸ்லா முடிவு செய்துள்ளது.
    சமீபத்தில் பி.எம்.டபில்யூ, ஆடி, மெர்சடிஸ் பென்ஸ் ஆகிய நிறுவனங்கள் விலை உயர்வை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
    பிரபல ஜப்பானிய கார் நிறுவனமான டயோட்டா அனைத்து கார்களின் விலையை ஏற்றப்போவதாக அறிவித்துள்ளது.  வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அனைத்து கார்களின் விலையும் 4 சதவீதம் ஏற்றப்படவுள்ளது.

    சமீபத்தில் பி.எம்.டபில்யூ 3.5 சதவீதம் விலை உயர்வை அறிவித்தது. அதை தொடர்ந்து ஆடி, மெர்செடிஸ் பென்ஸ் ஆகிய நிறுவனங்களும் ஏப்ரல் 1 முதல் விலை உயர்வை அறிவித்துள்ளன. இந்நிலையில் டயோட்டாவும் இன்று விலை உயர்வை அறிவித்துள்ளது.

    இன்புட் காஸ்ட் அதிகரித்துள்ளதால் இந்த விலையேற்றம் செய்யப்படுவது கட்டாயமாகியுள்ளதாக டயோட்டா தெரிவித்துள்ளது. இந்தியாவில் டயோட்டா நிறுவனம் ஃபார்டுனர், இனோவா கிரிஸ்டா, கேம்ரி, வெல்ஃபயர், அர்பன் க்ரூசர் மற்றும் கிளான்ஸா ஆகிய 6 கார்களை விற்பனை செய்துவருகிறது.

    குறிப்பாக டயோட்டாவின் கிளான்சா சமீபத்தில் தான் இந்தியாவில் அறிமுகமானது. இந்நிலையில் புதிய மாடல் ஒன்றையும் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

    இந்த கார் டயோட்டாவின் ஹிலக்ஸ் பிக்அப் டிரக்காக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதமே அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த கார் அடுத்த மாதம் வெளியாகும் என கருதப்படுகிறது.
    ஏற்கனவே கியா ஈவி6 உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ள காரிலும் இடம்பெறும் என கூறப்படுகிறது.
    கியா நிறுவனம் விரைவில் கியா ஈவி6 என்ற புதிய மின்சார கார் ஒன்றை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த கார் வரும் ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏற்கனவே கியா ஈவி6 உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ள காரிலும் இடம்பெறும் என கூறப்படுகிறது.

    இதன்படி ஈவி6 58.0 kWh யூனிட் மற்றும் 77.4 kWh யூனிட் என்ற இரண்டு பேட்டரி வேரியண்டுகளில் வெளி வருகிறது.

    58.0 kWh பேட்டரியில் 168kW பின்பக்க மோட்டார் தரப்பட்டிருக்கும். இது 168 ஹார்ஸ்பவரை உருவாக்கக்கூடியது. இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் 373 கி.மீ வரை செல்லும் என கூறப்படுகிறது. மற்றொரு வேரியண்டான 77.4kWh பேட்டரி கொண்ட காரில் 168kW பின்பக்க மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இது 225 ஹார்ஸ்பவரை உருவாக்ககூடியது. இந்த கார் 500 கி.மீ ரேஞ்ச் வரை செல்லும் என கூறப்படுகிறது.

    மேலும் இந்த ஈவி6 காரில் 2900mm வீல் பேஸ் வழங்கப்பட்டிருக்கும், டேஷ்போர்டில் 2 ஸ்கிரீன்கள் தரப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரிய ஸ்கீரினில் இன்ஃபோடைன்மெண்ட் சிஸ்டமும், இரண்டாவது ஸ்க்ரீனில் டிஜிட்டல் டயலும் இருக்கும் என கூறப்படுகிறது.

    மேலும் பல அம்சங்கள் இடம்பெற்றுள்ள இந்த காரின் விலை இந்திய மதிப்பில் ரூ.25.5 லட்சமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    வரும் 2025-ம் ஆண்டு நடைபெறவுள்ள உலக கண்காட்சியில் பறக்கும் டாக்சிகளையும் ஸ்கைடிரைவ் நிறுவனம் காட்சிப்படுத்தவுள்ளது.
    உலகில் உள்ள பெரும் நிறுவனங்கள் பறக்கும் வாகனங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஊபர் ஏர், ஏர்பஸ், ஹுண்டாய், போயிங் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்கனவே சோதனை அளவில் பறக்கும் கார்களை தயாரிக்க தொடங்கிவிட்டன. 

    இந்நிலையில் தற்போது ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான சுஸூகி, ஸ்கைடிரைவ் என்ற நிறுவனத்துடன் இணைந்து பறக்கும் மின்சார கார்களை தயாரித்து இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

    இரண்டு பேர் அமரும் வகையில் பறக்கும் மின்சார கார்களை அதிக அளவில் உற்பத்தி செய்து இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இரு நிறுவனங்களும் திட்டமிட்டுள்ளது. 

    மேலும் வரும் 2025-ம் ஆண்டு நடைபெறவுள்ள உலக கண்காட்சியில் பறக்கும் டாக்சிகளையும் ஸ்கைடிரைவ் நிறுவனம் காட்சிப்படுத்தவுள்ளது.
    வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த காரை இணையதளத்திலேயே விர்சுவல் ஷோரூம் மூலம் தெளிவாக பார்வையிட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    எம்.ஜி மோட்டார் நிறுவனம் MG e-Pay என்ற ஒன்ஸ்டாப் கார் நிதி இணையதளத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த இணையதளம் மூலம் வாடிக்கையாளர்கள் எளிதாக கார் கடன் பெறலாம். 

    இந்த இணையதளத்திற்காக எம்.ஜி மோட்டார் நிறுவனம் பலதரப்பட்ட வங்கிகளுடன் இணைந்து செயல்படவுள்ளது. தற்போது வரை ஐசிஐசிஐ வங்கி, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, கோடாக் மகிந்திரா பிரைம் மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவை எம்.ஜி நிறுவனத்துடன் இணைந்துள்ளது.

    பலதரப்பட்ட வங்கிகள் இணைவதால் பலவிதமான வட்டிகளில், சலுகைகளில் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த கடன் திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம். வெறும் 5 கிளிக்குகளில், 5 படிநிலைகளில் வாடிக்கையாளர் உடனடி செயல்முறை மூலம் கார் லோன் பெற்றுவிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மேலும் கடன் பெற்றவுடன் காரை ஆன்லைனிலேயே புக் செய்ய முடியும். இதைத்தவிர கார் உதிரி மாகங்கள், காப்பீடுகள் ஆகியவற்றையும் இந்த இணையதளத்தில் பெற முடியும் என கூறப்பட்டுள்ளது.

    இத்துடன் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த காரை இணையதளத்திலேயே விர்சுவல் ஷோரூம் மூலம் தெளிவாக பார்வையிடும் வசதியையும் எம்.ஜி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

    தற்போது எம்.ஜி நிறுவனம்  ஹெக்டார், ஹெக்டார் பிளஸ், ஆஸ்டோர், குளோஸ்டோர் மற்றும் எலக்ட்ரிக் எஸ்.யூ.வி ZS EV ஆகிய கார்களை விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
    மக்களுக்கு உயர்ந்த தொழில்நுட்பம் கொண்ட மலிவு விலை கார்களை ஸ்கோடா இந்தியா தயாரித்து வழங்கும் என அந்நிறுவனத்தின் சி.இ.ஓ கூறியுள்ளார்.
    இந்தியா மலிவு விலை மின்சார வாகன உற்பத்தியின் மையமாக விரைவில் மாறும் என ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தின் தலைமை அதிகாரி தாமஸ் ஷ்கேஃபர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்ய இந்தியாவில் அதிக முதலீடுகளை செய்கின்றனர். குறிப்பாக தென்கிழக்கு ஆசியாவில் வாகன உற்பத்தியில் இந்தியா முக்கிய சக்தியாக விளங்குகிறது.

    உலகம் முழுவதும் பல பகுதிகளில் மலிவு விலை மின்சார வாகனங்களின் தேவை அதிகரித்துள்ளது. அந்த தேவையை இந்தியாவில் இருந்து நாங்கள் பூர்த்தி செய்வோம். 2030-ம் ஆண்டுக்குள் மின்சார கார்கள் அதிக அளவில் புழக்கத்திற்கு வரும் என பலரும் கூறுகின்றனர். இன்னும் 2 ஆண்டுகளில் மின்சார கார்களின் விற்பனை அதிகரிக்கப்போகிறது.

    மக்களுக்கு உயர்ந்த தொழில்நுட்பம் கொண்ட மலிவு விலை மின்சார கார்களை ஸ்கோடா இந்தியா தயாரித்து வழங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    இந்த காரின் இன்ஜின் 89 hp பவர், 113 Nm பீக் டார்க்கை உருவாக்கக்கூடியது.
    மாருதி சுஸூகியின் 2022 பலேனோ அறிமுகம் செய்யப்பட்ட ஒருமாதத்தில் 50,000 யூனிட்டுகள் முன்பதிவை பெற்றுள்ளதுல். இந்த பைக்கின் விலை ரூ.6.35 லட்சத்தில் தொடங்கி, ரூ.9.49 லட்சம் வரை உள்ளது.

    மாருதி பலேனோ இந்தியாவில் அதிகம் விற்கப்படும்  5 கார்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த காருக்கான சந்தா விலை ரூ.13,999-ல் இருந்து தொடங்குகிறது.

    2022 மாருதி சுஸூகி பலேனோ ஹாட்ச்பேக் புதிய டிசைன் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களுடன் வருகிறது. இதில் மாருதி சியாஜ் போன்ற எல்.இ.டி ஹெட்லேம்புகள் வழங்கப்பட்டுள்ளன.

    மேலும் இதில் 10 ஸ்போக் அல்லோய் வீல்கள், ஹெச்.டி டச் ஸ்க்ரீன் சிஸ்டம், ஸ்மார்ட்பிளே ப்ரோ+,  1.2 லிட்டர் டூயல் ஜெட் பெட்ரோல் இன்ஜின், 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆகியவை தரப்பட்டுள்ளன.

    இந்த காரின் இன்ஜின் 89 hp பவர், 113 Nm பீக் டார்க்கை உருவாக்கக்கூடியது.
    பயணிகள் வீடியோக்களை பார்க்கும்போது ஓட்டுநர் தொந்தரவு அடைந்து கவனம் சிதறாமல் இருக்க இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    மெர்செடிஸ் - பென்ஸ் நிறுவனம் புதிய EQS மின்சார எஸ்.யூ.வி ரக கார் ஒன்றை ஏப்ரல் மாதம் 19-ம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது. இந்த காரில் முன்பக்கம் அமர்ந்திருக்கும் பயணிகள் ஓட்டுநரை தொந்தரவு செய்யாமல் வீடியோக்களை பார்க்கும் புதிய அம்சம் ஒன்றையும் அந்நிறுவனம் கொண்டு வரவுள்ளது.

    இந்த காரில் 56 இன்ச் MBUX ஹைப்பர்ஸ்கிரீன் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பயணிகள் அதிஅற்புதமான டிஜிட்டல் அனுபவத்தை பெற முடியும்.  மேலும் 12.3 இன்ச் OLED டிஸ்பிளேவில் முன்பக்கத்தில் அமர்ந்துள்ள பயணி வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்ய முடியும். 

    பயணிகள் ஹெட்போன்களை அணிந்து கொண்டு ஓட்டுநருக்கு தொந்தரவு இல்லாமல் வாகனத்தை ஓட்டலாம். அதேசமயம் மற்றொரு புதிய தொழில்நுட்பம் ஒன்றும் இந்த காரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஓட்டுநர் பயணிகளுடைய திரையில் உள்ள வீடியோக்களை பார்க்க நினைத்தால் தானாக திரை மங்கிவிடும். அதுமட்டுமில்லாமல் ஓட்டுநரின் கண்கள் செல்லும் திசையை கண்காணிக்கும் அம்சமும் இதில் இடம்பெற்றுள்ளது.

    பயணிகள் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு இந்த வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.
    இந்த கார்களில் XM மற்றும் XZ+ வேரியண்டுகளை மகாராஷ்டிரா அரசின் மானியத்தின் மூலம் குறைந்த விலையில் பெறலாம்.
    இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் மின்சார காரான டாடாவின் நெக்ஸான் எலக்ட்ரிக்  எஸ்.யூ.வி கார்களுக்கு விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

    டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் தற்போது XM, XZ+, XZ+ Lux, XZ+ Dark மற்றும் XZ+ Lux Dark என்ற 5 வேரியண்டுகளில் வருகிறது. இந்த 5 மாடல்களின் விலைகளும் தற்போது உயர்த்தப்பட்டுள்ளன. 

    நெக்ஸானின் XM வேரியண்டின் விலை ரூ.14.29 லட்சத்தில் இருந்து ரூ.14.54 லட்சமாக உள்ளது. XZ+ வேரியண்டின் விலை ரூ.15.70 லட்சத்தில் இருந்து ரூ.15.95 லட்சமாக உள்ளது. XZ+ Lux வேரியண்டின் விலை ரூ.16.70 லட்சத்தில் இருந்து 16.95 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. XZ+ Dark வேரியண்டின் விலை ரூ.16.04 லட்சத்தில் இருந்து ரூ.16.29 லட்சமாகவும், XZ+ Lux Dark வேரியண்டின் விலை ரூ.16.90 லட்சத்தில் இருந்து ரூ.17.15 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

    மேலும் டாடா லாங் ரேஞ்ச் நெக்ஸான் எலக்ட்ரிக் கார் ஒன்றையும் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த வேரியண்ட் 40kWh பேட்டரியுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 30.2kWh பேட்டரி பேக் மூலம் 312 கி.மீ தூரம் செல்ல முடியும் என்ற நிலையில் 40kWh பேட்டரி பேக் மூலம் 400 கி.மீ ரேஞ்சை எட்ட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த கார்களில் XM மற்றும் XZ+ வேரியண்டுகளை மகாராஷ்டிரா அரசின் மானியத்தின் மூலம் குறைந்த விலையில் பெறலாம்.
    இந்தியாவில் லக்சரி மாடல் மின்சார கார்களே உள்ளதால் குறைந்த விலையில் கார்களை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
    உலகம் முழுவதும் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை மக்களை மின்சார வாகனங்களை நோக்கி தள்ளியுள்ளது. இந்தியாவிலும் பலர் மின்சார இருசக்கர வாகனங்கள், கார்களை நோக்கி செல்கின்றனர். இதனால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பலவும் மின்சார வாகன உற்பத்தியில் இறங்கியுள்ளன.

    இந்நிலையில் ஜப்பானின் முன்னணி நிறுவனமான சுஸூகி மோட்டார் நிறுவனம், இந்தியாவில் ரூ.9800 கோடி முதலீட்டை மின்சார வாகன உற்பத்திகாக செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது. மாருதி சுஸூகி தொழிற்சாலைகளில் மின்சார வாகனங்கள் மற்றும் பேட்டரிக்களை அந்நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

    இதுகுறித்து சுஸூகி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவில் அதிக அளவில் மின்சார இருசக்கர, மூன்று சக்கர வாகனங்களின் விற்பனை நடைபெற்று வருகிறது. இந்தியர்கள் பலரும் மின்சார வாகனங்களை நோக்கி திரும்பியுள்ளனர். மின்சார கார்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டாலும் பலவும் அதிக விலை உள்ள லக்சரி மாடலாகத்தான் இருக்கிறது. இதன்விலையே ரூ.1 கோடியில் இருந்து தான் தொடங்குகிறது. 

    ஒன்றிரண்டு நிறுவனங்கள் மட்டும் தான் மக்கள் வாங்கக்கூடிய விலையில் மின்சார கார்களை உருவாக்கி வருக்கின்றன. இந்நிலையில் மாருதி சுஸூகி அந்த இடத்தை நிரப்புவதற்கு திட்டமிட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் வாங்கும் விலையில் கார்களை நிர்ணயித்தால் மட்டுமே இந்தியாவில் வரவேற்பு கிட்டும். அந்த வேலையில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம்.

    தற்போது மாருதி சுஸூகியின் வேகன் - ஆர் மாடலை மின்சார காராக அறிமுகம் செய்ய சோதனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் மற்ற மாடல்களும் மின்சார வேரியண்டுக்கு மாற்றப்படும்.

    இவ்வாறு மாருதி சுஸூகி தெரிவித்துள்ளது.
    ×