என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கார்
X
ஏப்ரல் 1-ம் தேதி முதல் விலையை ஏற்றப்போகும் பிரபல கார் நிறுவனம்
Byமாலை மலர்26 March 2022 7:42 AM GMT (Updated: 26 March 2022 7:42 AM GMT)
சமீபத்தில் பி.எம்.டபில்யூ, ஆடி, மெர்சடிஸ் பென்ஸ் ஆகிய நிறுவனங்கள் விலை உயர்வை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
பிரபல ஜப்பானிய கார் நிறுவனமான டயோட்டா அனைத்து கார்களின் விலையை ஏற்றப்போவதாக அறிவித்துள்ளது. வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அனைத்து கார்களின் விலையும் 4 சதவீதம் ஏற்றப்படவுள்ளது.
சமீபத்தில் பி.எம்.டபில்யூ 3.5 சதவீதம் விலை உயர்வை அறிவித்தது. அதை தொடர்ந்து ஆடி, மெர்செடிஸ் பென்ஸ் ஆகிய நிறுவனங்களும் ஏப்ரல் 1 முதல் விலை உயர்வை அறிவித்துள்ளன. இந்நிலையில் டயோட்டாவும் இன்று விலை உயர்வை அறிவித்துள்ளது.
இன்புட் காஸ்ட் அதிகரித்துள்ளதால் இந்த விலையேற்றம் செய்யப்படுவது கட்டாயமாகியுள்ளதாக டயோட்டா தெரிவித்துள்ளது. இந்தியாவில் டயோட்டா நிறுவனம் ஃபார்டுனர், இனோவா கிரிஸ்டா, கேம்ரி, வெல்ஃபயர், அர்பன் க்ரூசர் மற்றும் கிளான்ஸா ஆகிய 6 கார்களை விற்பனை செய்துவருகிறது.
குறிப்பாக டயோட்டாவின் கிளான்சா சமீபத்தில் தான் இந்தியாவில் அறிமுகமானது. இந்நிலையில் புதிய மாடல் ஒன்றையும் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.
இந்த கார் டயோட்டாவின் ஹிலக்ஸ் பிக்அப் டிரக்காக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதமே அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த கார் அடுத்த மாதம் வெளியாகும் என கருதப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X