search icon
என் மலர்tooltip icon

    கார்

    டெஸ்லா
    X
    டெஸ்லா

    விற்பனை செய்யப்பட்ட 947 கார்களை திரும்ப பெற்ற டெஸ்லா- ஏன் தெரியுமா?

    டெஸ்லா நிறுவனம் மின்சார கார்களை உற்பத்தி செய்வதில் உலகின் முன்னோடி நிறுவனமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
    டெஸ்லா நிறுவனம் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்வதில் உலகின் முன்னோடியாக இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் அதிகமான மின்சார வாகனங்களை உற்பத்தி செய்கிறது. 

    இந்நிலையில் இந்த நிறுவனம் சமீபத்தில் விற்பனை செய்யப்பட்ட 947 கார்களை திரும்ப பெற்றுள்ளது. இதற்கு காரணம் பின்புறத்தை காட்டும் இமேஜ் டிஸ்பிளே தாமதமாக செயல்படுவது தான் என கூறப்படுகிறது.

    காரை ரிவர்ஸ் செய்யும்போதே டிஸ்பிளேவில் காட்டப்படாமல், சிறிது நேரம் கழித்து காட்டப்படுகிறது. இது ஓட்டுநருக்கு தொந்தரவை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமில்லாமல் கார் விபத்து ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது என்பதால் அத்தனை கார்களையும் திரும்ப பெற்றுள்ளோம் என டெஸ்லா விளக்கமளித்துள்ளது.

    டெஸ்லா கார்களில் ஆட்டோபைலட் கம்ப்யூட்டர் 2.5 என்ற மென்பொருளின் மூலம் பின்புற டிஸ்பிளே வேலைசெய்கிறது. இந்த மென்பொருளில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து புதிய அப்டேட்டை வெளியிடவும் டெஸ்லா முடிவு செய்துள்ளது.
    Next Story
    ×