என் மலர்tooltip icon

    கார்

    ஹோண்டா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஹோண்டா சிட்டி eHEV ஹைப்ரிட் மாடல் உற்பத்தி துவங்கி விட்டது.


    ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் தனது சிட்டி eHEV ஹைப்ரிட் மாடல் உற்பத்தியை துவங்கி இருக்கிறது. புதிய ஹோண்டா சிட்டி eHEV ஹைப்ரிட் மாடல் உற்பத்தி ராஜஸ்தானில் உள்ள தபுகாரா உற்பத்தி ஆலையில் நடைபெற்று வருகிறது. ஹோண்டா சிட்டி eHEV ஹைப்ரிட் மாடல் கடந்த வாரம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. 

    புதிய ஹோண்டா சிட்டி eHEV மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு ஹோண்டா அதிகாரப்பூர்வ விற்பனை மையங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் நடைபெறுகிறது. முன்பதிவு கட்டணம் விற்பனை மையத்தில் ரூ. 21 ஆயிரம் என்றும் ஆன்லைனில் ரூ. 5 ஆயிரம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

     ஹோண்டா சிட்டி eHEV ஹைப்ரிட்

    ஹோண்டா சிட்டி eHEV மாடலில் 1.5 லிட்டர், அட்கின்சன் சைக்கிள் iVTEC பெட்ரோல் என்ஜின் மற்றும் லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இவை இணைந்து 124 பி.ஹெச்.பி. திறன், 253 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன. புதிய ஹோண்டா சிட்டி eHEV ஹைப்ரிட் மாடல் லிட்டருக்கு 26.5 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது.

    ஹோண்டா eHEV எலெக்ட்ரிக் மோட்டார்கள் லித்தியம் அயன் பேட்டரியை ஒவ்வொரு முறை பிரேக் போடும் போதும் சார்ஜ் செய்கின்றன. பேடில் ஷிஃப்டர்கள் உதவியுடன் பிரேக் எனர்ஜி மீட்பு சிஸ்டத்தை மாற்றி அமைத்துக் கொள்ள முடியும். லித்தியம் அயன் பேட்டரி மீது ஹோண்டா நிறுவனம் எட்டு ஆண்டுகளுக்கு வாரண்டி வழங்குகிறது.
    பி.எம்.டபிள்யூ. நிறுவனம் இந்திய சந்தையில் புதிய X4 சில்வர் ஷேடோ எடிஷன் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது. இது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.


    பி.எம்.டபிள்யூ. இந்தியா நிறுவனம் X4 சில்வர் ஷேடோ எடிஷன் காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய X4 சில்வர் ஷேடோ எடிஷன் மாடல் விலை ரூ. 71 லட்சத்து 90 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். 

    முன்னதாக பிளாக் ஷேடோ எடிஷன் வடிவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், தற்போது சில்வர் ஷேடோ எடிஷன் மாடல் எக்ஸ்-டிரைவ் 30 ஐ மற்றும் எக்ஸ்-டிரைவ் 30 டி விடிவில் கிடைக்கிறது. இந்த மாடலை வாங்க விரும்புவோர் பி.எம்.டபிள்யூ. ஆன்லைன் தளத்தில் மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும். புதிய சில்வர் ஷேடோ எடிஷன் விலை முந்தைய பிளாக் ஷேடோ எடிஷனை விட ரூ. 1 லட்சத்து 4 ஆயிரம் வரை அதிகம் ஆகும். 

    பி.எம்.டபிள்யூ. X4 சில்வர்  ஷேடோ எடிஷன்

    பிளாக் தீமிற்கு முற்றிலும் எதிராக, புதிய மாடல்- கார்பன் பிளாக், பைடோனிக் புளூ மற்றும் ஆல்பைன் வைட் என மூன்று வித எக்ஸ்டீரியர் ஷேட்களில் கிடைக்கிறது. இத்துடன் சிக்னேச்சர் கிரில், டூயல் எக்சாஸ்ட் பைப்கள் குரோம் ராப் செய்யப்பட்டு இருக்கிறது. இத்துடன் பம்ப்பர்கள் அசென்ச்சுவேட் செய்யப்பட்டு இருக்கிறது.

    புதிய பி.எம்.டபிள்யூ. X4 சில்வர் ஷேடோ எடிஷன் மாடலிலும் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. பெட்ரோல் என்ஜின் 251 பி.ஹெச்.பி. பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. டீசல் என்ஜின் 261 பி.ஹெச்.பி. பவர், 620 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இருவித என்ஜின்களுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. 
    ஃபோர்டு நிறுவனத்தின் கார் உற்பத்தி ஆலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஃபோர்டு உற்பத்தி ஆலையை வாங்க இருப்பதாக நீண்ட காலமாக தகவல்கள் வெளியாகி வந்தது. இந்த விவகாரம் தொடர்பாக இரு நிறுவனங்கள் இடையே இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது. மேலும் விற்பனை விவகாரத்தில் அனுமதி வழங்க கோரி இரு நிறுவனங்களும் குஜராத் அரசிடம் கோரிக்கை விடுத்து இருப்பதாக தெரிகிறது. அனுமதி கிடைத்தால் இரு நிறுவனங்களும் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடும் என கூறப்படுகிறது. 

    இதன் இடையே, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஃபோர்டு நிறுவனத்தின் சனந்த் உற்பத்தி ஆலையில், ஒவ்வொரு ஆண்டும் சுமார் இரண்டு லட்சம் எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்து இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ரூ. 2 ஆயிரம் கோடி முதலீடு செய்து 2026 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு லட்சம் எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்யும் என கூறப்படுகிறது.

     ஃபோர்டு உற்பத்தி ஆலை

    முன்னதாக ஃபோர்டு சனந்த் ஆலையில் பணியாற்றி வரும் ஊழியர்கள் யாரும் பணி நீக்கம் செய்யப்பட மாட்டார்கள் என்று டாடா மோட்டார்ஸ் நிறுவனம் குஜராத் அரசிடம் வாக்குறுதி அளித்து இருக்கிறது. இதன் மூலம் சுமார் 23 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும். 

    குஜராத் மாநிலத்தின் சனந்த் நகரில் உற்பத்தியை துவங்கிய முதல் நிறுவனங்களில் டாடா மோட்டார்ஸ் ஒன்றாக இருந்தது. நானோ காரை உற்பத்தி செய்ய ரூ. 4  ஆயிரத்து 500 கோடி முதலீடு செய்து இருந்தது. தற்போது  இந்த ஆலையில் டியாகோ, டிகோர் மற்றும் டிகோர் EV போன்ற மாடல்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. சனந்த் ஆலையில் ஒவ்வொரு ஆண்டும் 1.5 லட்சம் யூனிட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. 
    ஜீப் இந்தியா நிறுவனம் தனது கார் மாடல் விலையை திடீரென மாற்றி அமைத்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
     

    ஜீப் இந்தியா நிறுவனம் தனது காம்பஸ் எஸ்.யு.வி. மாடல் விலையை உயர்த்தி இருக்கிறது. 2022 ஆண்டில் முதல் முறையாக விலை உயர்வை ஜீப் இந்தியா நிறுவனம் அறிவித்து இருக்கிறது. விலை உயர்வின் படி ஜீப் காம்பஸ் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்கள், டிரையல்ஹாக் வேரியண்ட் உள்பட ரூ. 25 ஆயிரம் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    விலை உயர்வு கணமாக ஜீப் காம்பஸ் மாடல் விலை ரூ. 18 லட்சத்து 04 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் டிரையல்ஹாக் மாடல் விலை ரூ. 30 லட்சத்து 97 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஜீப் காம்பஸ் டிரையல்ஹாக் மாடல் இந்த ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.

     ஜீப் காம்பஸ்

    இதில் 2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் 4x4 சிஸ்டம் வழங்கப்பட்டு உள்ளது. தோற்றத்தில் ஜீப் காம்பஸ் டிரையல்ஹாக் மாடலில் டூயல் டோன் பெயிண்ட் செய்யப்பட்டு, முன்புறம் மற்றும் பின்புற பம்ப்பர்கள் ரி-வொர்க் செய்யப்பட்டுள்ளன. இந்த காரின் பூட் மற்றும் முன்புற ஃபெண்டரில் டிரையல்-ரேட் செய்யப்பட்ட பேட்ஜ் பொருத்தப்பட்டு இருக்கிறது.

    ஜீப் காம்பஸ் ஸ்டாண்டர்டு மாடல் 1.4 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் என்ஜின் 161 பி.ஹெச்.பி. பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. டீசல் என்ஜின் 168 பி.ஹெச்.பி. பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. 

    இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்பட்டு இருக்கிறது. பெட்ரோல் என்ஜினுடன் 7 ஸ்பீடு டி.சி.டி. யூனிட், டீசல் என்ஜினுடன் 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் மற்றும் 4 வீல் டிரைவ் செட்டப் தேர்வு செய்யும் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.
    கியா நிறுவனம் தனது புதிய எலெக்ட்ரிக் கார் வெளியீடு பற்றி புது தகவலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.


    கியா நிறுவனம் சர்வதேச ஆட்டோமொபைல் சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் இரு முக்கிய டிரெண்டிற்கு ஏற்ற வாகனங்களை வெளியிடுவதில் கவனமாக உள்ளது. அதன்படி எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் பெரிய எஸ்.யு.வி. போன்ற மாடல்களை அறிமுகம் செய்ய கியா திட்டமிட்டுள்ளது. 

    அதன்படி அமெரிக்க சந்தையில் அடுத்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் கியா EV9 மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக கியா நிறுவனம் அறிவித்து இருக்கிறது. புதிய EV9 மாடல் மூன்று ரோ எஸ்.யு.வி. கார் ஆகும். இது உலகிற்கான EV மாடல்களில் முக்கியத்துவம் வாய்ந்த மாடலாக இருக்கும். 

     கியா கான்செப்ட் EV9

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற LA ஆட்டோ விழாவில் காட்சிப்படுத்தப்பட்ட EV9 மாடல் சமீபத்தில் நியூ யார்க் சர்வதேச ஆட்டோ விழாவில் அமெரிக்க வெளியீடு பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஹூண்டாய் மோட்டாக் குழுமத்தின் E-GMP பிளாட்பார்மில் உருவாகி வரும் கியா EV9 மாடல் EV6,  EV7 மற்றும் இதர மாடல்களின் மேல் நிலைநிறுத்தப்பட இருக்கிறது. 

    கான்செப்ட் வடிவில் கியா EV9 அறிமுகம் செய்யும் போதே இந்த மாடலில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்றும் காரை 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 30 நிமிடங்களே போதுமானது என கியா நிறுவனம் தெரிவித்து இருந்தது. புதிய கியா EV9 மாடல் முழு சார்ஜ் செய்தால் குறைந்தபட்சம் 500 கிலோமீட்டர்களுக்கான ரேன்ஜ் வழங்கும் என எதிர்பார்க்கலாம். 

    ஸ்கோடா நிறுவனத்தின் குஷக் மாடலின் புது வேரியண்ட் இந்திய சந்தையில் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.


    ஸ்கோடா நிறுவனம் தனது குஷக் மாண்ட் கர்லோ எடிஷனை உருவாக்கி வருவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஸ்கோடா நிறுவனம் புதிய குஷக் மாண்ட் கர்லோ எடிஷனை இந்திய சந்தையில் மே 9 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. 

    ஸ்கோடா நிறுவனத்தின் மற்ற மாண்ட் கர்லோ மாடல்களை போன்றே குஷக் மாண்ட் கர்லோ மாடலிலும் பிளாக்டு-அவுட் எக்ஸ்டீரியர், உள்புறம் காஸ்மெடிக் மாற்றங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. ஸ்கோடா குஷக் மாண்ட் கர்லோ எடிஷனின் வெளிப்புறம் விங் மிரர்கள், ரூஃப், கிரில் மற்றும் பம்ப்பர் இன்சர்ட்களில் பிளாக்-அவுட் டிரீட்மெண்ட் செய்யப்படுகிறது.

     ஸ்கோடா குஷக்

    இதன் முன்புற ஃபெண்டர்கள் மற்றும் டெயில் கேட்களில் மாண்ட் கர்லோ பேட்ஜிங் பொருத்தப்படுகிறது. மேலும் இந்த மாடலில் 205/55 R17 ரக டையர்கள் மற்றும் வித்தியாசமாக காட்சியளிக்கும் அலாய் வீல்கள் வழங்கப்பட இருக்கிறது. 

    ஸ்கோடா குஷக் மாண்ட் கர்லோ எடிஷனில் 115 ஹெச்.பி. பவர், 175 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் 1 லிட்டர் TSI என்ஜின் மற்றும் 150 ஹெச்.பி. பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் TSI என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இருவித என்ஜின்களுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. 
    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வரும் புதிய சி கிளாஸ் மாடல் மே மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.


    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஒருவழியாக 2022 சி கிளாஸ் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய தேதி குறித்து விட்டது. சர்வதேச சந்தையில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், கொரோனா வைரஸ் பரவல், சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள செமிகண்டக்டர் குறைபாடு போன்ற காரணங்களால் இந்த மாடலின் இந்திய வெளியீடு தாமதம் ஆகி வந்தது. 

    புதிய 2022 மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் இந்திய வேரியண்ட் மகாராஷ்டிரா மாநிலத்தின் பூனே அருகில் உள்ள சக்கன் ஆலையில் அசெம்பில் செய்யப்பட இருக்கிறது. புதிய 2022 மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் மாடலுக்கான முன்பதிவும் துவங்கி நடைபெற்று வருகிறது. இதன் வெளியீடு மே மாதம் 10 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. 

     மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ்

    "வெளியீட்டுக்கு முன்பே எங்களின் வாடிக்கையாளர்கள் மத்தியில் புது சி கிளாஸ் மாடல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. வாடிக்கையாளர்கள் எங்களின் மீது வைத்துள்ள விசுவாசத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் மெர்சிடிஸ் பென்ஸ் வரலாற்றில் முதல் முறையாக எங்களின் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் புதிய சி கிளாஸ் மாடலுக்கான முன்பதிவை அனுமதித்து இருக்கிறோம்," என மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான மார்டின் ஸ்கிவென்க் தெரிவித்தார். 

    புதிய மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் மாடல் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷ்களில் கிடைக்கிறது. இத்துடன் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன்கள் வழங்கப்படுகிறது. மேலும் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வசதியும் வழங்கப்பட்டு உள்ளது. இந்த காரின் மிகப் பெரும் அப்டேட்களில் ஒன்றாக ரியர் வீல் ஸ்டீரிங் உள்ளது. எனினும் இந்திய மாடலில் இந்த அம்சம் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
    ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஹோண்டா சிட்டி eHEV ஹைப்ரிட் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.


    ஜப்பானை சேர்ந்த கார் உற்பத்தியாளரான ஹோண்டா இந்திய சந்தையில் புதிய ஹோண்டா சிட்டி eHEV ஹைப்ரிட் மாடலை அறிமுகம் செய்து உள்ளது. புதிய ஹோண்டா சிட்டி eHEV ஹைப்ரிட் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. 

    ஹோண்டா சிட்டி மாடல் டாப் எண்ட் ZX வேரியண்டில் வழங்கப்படுகிறது. ஹோண்டா சிட்டி eHEV ஹைப்ரிட் மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்பட்டுள்ளன. 

     ஹோண்டா சிட்டி eHEV ஹைப்ரிட்

    ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் 1.5 லிட்டர் அட்கின்சன் சைக்கிள் பெட்ரோல் என்ஜின் 97 பி.ஹெச்.பி. பவர், 127 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதில் உள்ள இரு மோட்டார்களில் ஒன்று இண்டகிரேடெட் ஸ்டார்டர் ஜெனரேட்டர் போன்று செயல்படும். 

    இரண்டாவது மோட்டார் முன்புற ஆக்சில் மீது பொருத்தப்பட்டு இருக்கிறது. இது 108 பி.ஹெச்.பி. பவர், 253 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. புதிய ஹோண்டா eHEV எலெக்ட்ரிக் மோட்டார்கள் லித்தியம் அயன் பேட்டரியை ஒவ்வொரு முறை பிரேக் போடும் போதும் சார்ஜ் செய்கின்றன. பேடில் ஷிஃப்டர்கள் உதவியுடன் பிரேக் எனர்ஜி மீட்பு சிஸ்டத்தை மாற்றி அமைத்துக் கொள்ள முடியும். லித்தியம் அயன் பேட்டரி மீது ஹோண்டா நிறுவனம் எட்டு ஆண்டுகளுக்கு வாரண்டி வழங்குகிறது.
    சில மாநிலங்களில் மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில், வாகனத்தின் பதிவுக் கட்டணம் மற்றும் சாலை வரி ஆகிவையும் தள்ளுபடி செய்யப்படுகிறது.
    இந்தியாவில் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களை மின்சார வாகனங்களை நோக்கி செலுத்துகிறது. இதனை ஊக்குவிக்கும் வகையில் கடன்களும் வழங்கப்படுகின்றன. அவற்றை இப்போது பார்க்கலாம்.

    ஒருவர் மின்சார வாகனம் வாங்கினால், வருமான வரி விதி 80EEB பிரிவின் கீழ் 1.5 லட்சம் ரூபாய் விலக்கு அளிக்கப்படும். இந்த விலக்கு 80C இன் கீழ் கிடைக்கும் விலக்கிலிருந்து வேறுபட்டது.  இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு இந்த தள்ளுபடி கிடைக்கும். 

    இதனுடன், சில மாநிலங்களில் மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில், வாகனத்தின் பதிவுக் கட்டணம் மற்றும் சாலை வரி ஆகிவையும் தள்ளுபடி செய்யப்படுகிறது.

    மேலும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, மின்சார வாகனங்களுக்கான கடனில் வாடிக்கையாளர்களுக்கு வாகனத்தின் ஆன்ரோடு விலையில் 90 சதவீதம் வரை வங்கி கடன் வழங்குகிறது. 

    இந்த கடனுக்கான வட்டி விகிதம் 7.05 சதவீதம் முதல் 7.75 சதவீதம் ஆகும்.  யூனியன் வங்கி மின்சார வாகனங்களுக்கு 10 லட்சம் வரை கடன் வழங்குகிறது. நான்கு சக்கர வாகனக் கடனை 84 மாதங்களிலும், இரு சக்கர வாகனக் கடனை 36 மாதங்களிலும் திருப்பிச் செலுத்தலாம். ஆக்சிஸ் வங்கி மாத சம்பளம் வாங்கும் நபர்களுக்கு சாலை விலையில் 85 சதவீதம் வரை கடனை வழங்குகிறது. இந்தக் கடனை 7 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்தலாம்.
    டெல்லியை தொடர்ந்து சென்னை, பெங்களூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் விலை உயர்வு அறிவிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
    மக்கள் பயணிப்பதற்கு உபர், ஓலா உள்ளிட்ட நிறுவனங்கள் வாகன உரிமையாளர்களுடன் இணைந்து சேவையை வழங்கி வருகின்றன.

    இந்நிலையில் உபர் நிறுவனம் தனது பயணிகளுக்கு கட்டணத்தில் 12 சதவீதத்தை உயர்த்திள்ளது. டெல்லி-என்சிஆர் பகுதியில் தற்போது இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணத்தினால் வாகன உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதால் இந்த கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் பெட்ரோ, டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப கட்டணங்கள் மாற்றி அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

    டெல்லியை தொடர்ந்து சென்னை, பெங்களூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் விலை உயர்வு அறிவிக்கப்படலாம் என்றும், ஓலா உள்ளிட்ட பிற நிறுவனங்களும் விலையை உயர்த்தலாம் என கூறப்படுகிறது.
    கிஸ்ஃப்ளோ என்ற நிறுவனம் 5 ஊழியர்களுக்கு பிஎம்டபில்யூ காரை பரிசளித்த நிலையில் தற்போது மற்றொரு ஐடி நிறுவனம் 100 ஊழியர்களுக்கு பரிசளித்துள்ளது.
    சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் Ideas2IT நிறுவனம் என்ற மென்பொருள் நிறுவனம், அதன் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் தொடர்ந்து உறுதுணையாக இருந்த ஊழியர்களை பாராட்டும் விதமாக 100 பேருக்கு புதிய மாருதி சுஸூகி கார்களை பரிசளித்துள்ளது.

    இதுகுறித்து Ideas2IT நிறுவனத்தின் நிறுவனர் முரளி விவேகானந்தன் கூறுகையில், கார்களைப் பரிசளிப்பது குறித்து ஊழியர்களால் இணைந்து கூட்டாக முடிவு செய்யப்பட்டது. எங்கள் நிறுவனத்தில் ஐந்தாண்டுகள் பணியாற்றிய அனைத்து ஊழியர்களுக்கும் கார் பரிசளிக்கப்பட்டுள்ளது என கூறினார்.

    இந்த கார் எங்களது ஊழியர்கள் இதுவரை செய்த பணிக்காக வழங்கப்பட்டது. ஊழியர்களுக்கான ஊக்கத் திட்டங்களின் முதல் படி தான் இந்த நடவடிக்கை. நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர்களுக்கு வளர்ச்சி ஒரு பங்கை அளிக்கும் முயற்சியாக இத்தகைய திட்டத்தைக் கையில் எடுத்துள்ளோம் எனக் கூறினார்.

    இந்த கார்களில் எஸ் கிராஸ் முதல் பலேனோ கார் வரை வழங்கப்பட்டுள்ளது. பரிசுபெற்ற ஊழியர்கள் சென்னையில் இருந்து மட்டுமில்லாமல் பல மாவட்டங்களிலும், சிலர் சிறிய ஊர்களையும் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே கிஸ்ஃப்ளோ என்ற நிறுவனம் 5 ஊழியர்களுக்கு பிஎம்டபில்யூ காரை பரிசளித்த நிலையில் தற்போது மற்றொரு ஐடி நிறுவனம் 100 ஊழியர்களுக்கு பரிசளித்துள்ளது.
    இந்த பேட்டரி தொழில்நுட்பம் 2028ம் ஆண்டுக்குள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    பெட்ரோல், டீசல் விலை உயர்வால் உலகம் முழுவதும் மின்சார வாகனங்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. பெரும் நிறுவனங்கள் மின்சார வாகன தயாரிப்பில் தீவிரமாக இயங்கி வருகின்றன.

    தினமும் புதுப்புது தொழில்நுட்பங்களுடன், அம்சங்களுடன் மின்சார வாகனங்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் நிசான் நிறுவனம் புதிய பேட்டரி தொழில்நுட்பத்தை மின்சார வாகனங்களுக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

    சாலிட் ஸ்டேட் பேட்டரி செல்கள் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த பேட்டரிகள் வழக்கமான லித்தியம் அயன் பேட்டரிகளை விடவும் இரண்டு மடங்கு டென்சிட்டியை உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் குறைந்த விலையில் இந்த பேட்டரிகளை உற்பத்தி செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது பரிசோதனை நிலையில் உள்ள இந்த பேட்டரியை முழுதாக 15 நிமிடத்திற்கு சார்ஜ் செய்துவிடலாம் என்றும், தற்போது உள்ள பேட்டரியை விட எடை குறைவு எனவும் கூறப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த பேட்டரி வழக்கமான பேட்டரிக்களை விட மக்கள் நீண்ட நேரம் பயணம் செய்யலாம் என கூறப்படுகிறது.

    இந்த தொழில்நுட்பம் மக்களை மேலும் மின்சார வாகனங்களை நோக்கி செலுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி தொழில்நுட்பம் 2028ம் ஆண்டுக்குள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ×