search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எலெக்ட்ரிக் கார்"

    • அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம்.
    • வாகனங்களை உருவாக்க இருப்பதாக தெரிவித்தது.

    கியா நிறுவனம் சமீபத்தில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கலந்து கொண்ட நிகழ்வில், அந்நிறுவன எதிர்கால திட்டங்களை அறிவித்தது. அப்போது இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதாகவும், இந்தியாவுக்கு ஏற்ற வாகனங்களை உருவாக்க இருப்பதாகவும் தெரிவித்தது.

    அந்த வகையில், கியா நிறுவனம் 2024-25 ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையில் எம்.பி.வி. மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த வரிசையில் கியா EV9 மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முழு சார்ஜ் செய்தால் 541 கிலோமீட்டர்கள் ரேன்ஜ் வழங்கும் என சான்று பெற்றுள்ள கியா EV9 இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்திலோ அறிமுகம் செய்யப்படலாம்.

     


    கியா EV9 மாடல் தவிர புதிய தலைமுறை கியா கார்னிவல் மாடலும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மாடல் வரும் மாதங்களில் அறிமுகம் செய்யப்படலாம் என்று தெரிகிறது. இந்த கார் ஏழு மற்றும் ஒன்பது பேர் பயணம் செய்யக்கூடிய இருக்கை அமைப்புகளில் கிடைக்கும்.

    இரு மாடல்களுடன் கியா எலெக்ட்ரிக் RV மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த கார் பற்றிய விவரங்கள் ரகசியமாகவே உள்ளது. எனினும், இந்த கார் கரென்ஸ் மாடலின் எலெக்ட்ரிக் வெர்ஷனாக இருக்கும்.

    • இந்திய சந்தையில் கடந்த ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.
    • டாடா பன்ச் EV மாடல் 315 கி.மீ. ரேன்ஜ் வழங்கும் என சான்று பெற்றுள்ளது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பன்ச் எலெக்ட்ரிக் மாடலுக்கு முதல் முறையாக சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அந்த வகையில், டாடா பன்ச் EV வாங்குவோருக்கு ரூ. 50 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது.

    கடந்த ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், பன்ச் EV மாடலுக்கு முதல் முறையாக சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தற்போதைய தகவல்களின் படி டாடா பன்ச் EV டாப் எண்ட் மாடலுக்கு மட்டுமே ரூ. 50 ஆயிரம் சலுகை மற்றும் பலன்கள் வழங்கப்படுகிறது.

     


    விற்பனையாகும் வேரியண்ட்களுக்கு ஏற்ப ஒவ்வொரு விற்பனை மையம் சார்பில் ரூ. 20 ஆயிரம் வரை தள்ளுபடி மற்றும் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான காப்பீட்டு பலன்கள் வழங்கப்படுகின்றன.

    டாடா பன்ச் EV லாங் ரேன்ஜ் மாடலில் 35 கிலோவாட் ஹவர் பேட்டரி உள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 421 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என சான்று பெற்றிருக்கிறது.

    டாடா பன்ச் EV ஸ்டான்டர்டு மாடலில் 25 கிலோவாட் ஹவர் பேட்டரி உள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 315 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என சான்று பெற்றிருக்கிறது.

    • கியா EV9 மாடல் விரைவில் இந்தியா வரவிருக்கிறது.
    • 6 எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்கிறது.

    கியா நிறுவனம் தனது சர்வதேச யுத்தியின் அங்கமாக இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. மேலும் இந்திய சந்தையில் இரண்டு எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக கியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இரண்டு புதிய வாகனங்களில் ஒன்று கியா கரென்ஸ் EV மற்றொன்று முற்றிலும் புது எலெக்ட்ரிக் கார் ஆகும். கியா முதலீட்டாளர்கள் தினம் 2024 நிகழ்வில் இது தொடர்பான தகவல்களை அந்நிறுவன தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான ஹோ சுங் சாங் உறுதிப்படுத்தினார்.

     


    இவைதவிர கியா EV9 மாடல் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    "எலெக்ட்ரிக் வாகன சந்தையின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், கியா நிறுவனம் 2026 ஆண்டிற்குள் ஆறு எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்யும். 2024 ஆண்டிலேயே EV3, இதைத் தொடர்ந்து EV2, EV4 மற்றும் EV5 போன்ற மாடல்கள் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது."

    "வளர்ந்து வரும் சந்தைகளில் இரண்டு மாடல்கள் அப்பகுதிக்கு ஏற்ற வகையிலான எலெக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்தியாவில் இந்த வரிசையில் கியா கரென்ஸ் EV மாடல் அறிமுகம் செய்யப்படும்," என்று ஹோ சுங் சாங் தெரிவித்தார். 

    • சியோமி SU7 மாடல் மே மாதம் விற்பனைக்கு வருகிறது.
    • 900 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும்.

    சியோமி நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் வாகனம் - SU7 மாடலை அறிமுகம் செய்தது. ஆன்லைன் நேரலையில் சியோமி தலைமை செயல் அதிகாரி லெய் ஜூன் புதிய எலெக்ட்ரிக் கார் மாடலை அறிவித்தார். அறிமுகத்தின் போது புதிய SU7 மாடலை டெஸ்லா மாடல் 3 காருடன் நேரடியாக ஒப்பிட்டார். இதோடு, சியோமி SU7 மாடல் சீன சந்தையில் மே மாதம் விற்பனைக்கு வரும் என்று அறிவித்துள்ளார்.

    புதிய சியோமி SU7 மாடலில் டூயல் மோட்டார்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை இணைந்து 637 ஹெச்.பி. பவர், 838 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளன. பயனர்கள் தேர்வு செய்யும் வேரியண்டிற்கு ஏற்ப சியோமி SU7 மாடல் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 900 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என்று சியோமி தெரிவித்துள்ளது.

     


    இந்த எலெக்ட்ரிக் கார் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 2.78 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 265 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. ஐந்து மீட்டர்கள் நீளமாக உள்ள சியோமி SU7 2 மீட்டர்கள் அகலம், 3 மீட்டர்கள் வீல்பஸ் கொண்டிருக்கிறது. இந்த கார் மொத்தத்தில் ஒன்பது விதமான நிறங்களில் கிடைக்கும்.

    புதிய எலெக்ட்ரிக் கார் அம்சங்களில் - வாட்டர் டிராப் ஹெட்லைட்கள், ஹாலோ டெயில் லைட்கள், ஆக்டிவ் ரியர் ஸ்பாயிலர், ஃபுளோயிங் கர்வ், மறைக்கப்பட்ட நிலையில் கதவுகளின் கைப்பிடிகள் உள்ளிட்டவை குறிப்பிடத்தக்க அம்சங்களாக உள்ளன. இந்த எலெக்ட்ரிக் கார் சியோமியின் ஹைப்பர் ஒ.எஸ். கொண்டிருக்கிறது.

    இதை கொண்டு பயனர்கள் தங்களது சியோமி ஸ்மார்ட்போன், டேப்லெட் மற்றும் இதர சாதனங்களை காருடன் இணைத்துக் கொள்ள முடியும். இந்த காரில் ராப்-அரவுண்ட் காக்பிட், பல்வேறு ஸ்கிரீன்கள், டிரைவர் அசிஸ்டன்ஸ் அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    சியோமி SU7 பேஸ் மாடலில் 73.6 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்படுகிறது. இது முழு சார்ஜ் செய்தால் 700 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என்று தெரிகிறது. இந்த வேரியண்ட் மணிக்கு அதிகபட்சம் 210 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும். இதன் விலை சீன சந்தையில் 2 லட்சத்து 15 ஆயிரத்து 900 யுவான்கள், இந்திய மதிப்பில் ரூ. 24 லட்சத்து 90 ஆயிரத்து 413 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த காரின் டாப் என்ட் வேரியண்டில் 101 கிலோவாட் ஹவர் பேட்டரி உள்ளது. இதை முழு சார்ஜ் செய்தால் 900 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும். இதன் விலை 2 லட்சத்து 99 ஆயிரத்து 900 யுவான்கள், இந்திய மதிப்பில் ரூ. 34 லட்சத்து 59 ஆயிரத்து 356 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • இரண்டாவது எலெக்ட்ரிக் கார் மாடலாக இருக்கும்.
    • எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்து மேம்பட்ட திட்ட விவரங்கள் வெளியீடு.

    ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் முற்றிலும் புதிய ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் எலெக்ட்ரிக் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது. 2026 ஆம் ஆண்டிற்குள் ஆறு எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய ஜாகுவார் லேண்ட் ரோவர் முடிவு செய்துள்ள நிலையில், இது அந்த பட்டியலில் இரண்டாவது எலெக்ட்ரிக் கார் மாடலாக இருக்கும் என்று தெரிகிறது.

    எலெக்ட்ரிக் வாகனங்களுக்காக ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் ரி-இமாஜின் டிரான்ஸ்ஃபர்மேஷன் ஸ்டிராடஜி என்ற திட்டத்தை உருவாக்கி இருப்பதாக அதன் தலைமை செயல் அதிகாரி தெய்ரி பாலோர் தெரிவித்து இருந்தார். தற்போது ஜாகுவார் லேண்ட் ரோவர் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் அட்ரியன் மார்டெல் எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்து மேம்பட்ட திட்ட விவரங்களை வெளியிட்டுள்ளார்.

     


    அதில், "2026 ஆம் ஆண்டிற்குள் ஆறு லேண்ட் ரோவர்கள் பற்றி தெரிவித்து இருந்தோம். 2026 ஆம் ஆண்டிற்குள் ஆறு ஜாகுவார் லேண்ட் ரோவர் மாடல்களை வைத்திருப்பது கிட்டத்தட்ட சாத்தியமாகி வருகிறது. புதிய தொழில்நுட்பம் கொண்டு இதுவரை நாங்கள் உருவாக்கியதிலேயே மிகவும் சிறப்பான வாகனங்களை உற்பத்தி செய்வதில் நாங்கள் கவனமுடன் பணியாற்றி வருகிறோம்," என்று தெரிவித்தார்.

    தற்போது மாற்றப்பட்ட புதிய திட்டப்படி ரேன்ஜ் ரோவர் EV மற்றும் ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் EV மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதில் ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் EV மாடல் முதலில் அறிமுகம் செய்யப்படுகிறது. இரு மாடல்களும் MLA பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுகிறது. இவற்றுடன் இரண்டு சிறிய எஸ்.யு.வி.-க்கள் முற்றிலும் புதிய EMA பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட இருக்கிறது.

    சிறிய கார்கள் ரேன்ஜ் ரோவர் இவோக் மற்றும் வெலார் EV மாடல்களாக இருக்கும் என்று தெரிகிறது. நான்கு கார்கள் தவிர டிஸ்கவரி ஸ்போர்ட் மற்றும் டிஃபென்டர் மாடல்களின் எலெக்ட்ரிக் வெர்ஷனும் இணையும் என்று எதிர்பார்க்கலாம். 

    • வாடிக்கையாளர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
    • பரிசோதனையில் 34-க்கு 20.86 புள்ளிகளை பெற்றது.

    சிட்ரோயன் இந்தியா நிறுவனம் தனது eC3 எலெக்ட்ரிக் ஹேச்பேக் மாடலை பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தியது. இந்த சோதனையின் முடிவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

    முன்புறம் ஓட்டுநர் மற்றும் பயணி இருக்கைகளில் ஏர்பேக், பெல்ட் லோடு லிமிட்டர் மற்றும் சீட் பெல்ட் ரிமைண்டர் போன்ற வசதிகளை கொண்டிருக்கும் சிட்ரோயன் eC3 குளோபல் NCAP கிராஷ் டெஸ்டில் ஓரு நட்சத்திர குறியீடையும் பெறாவில்லை. இது சிட்ரோயன் வாடிக்கையாளர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

     


    சிட்ரோயன் eC3 மாடல் பெரியவர்கள் பாதுகாப்புக்கான பரிசோதனையில் 34-க்கு 20.86 புள்ளிகளை பெற்றது. சிறுவர்கள் பாதுகாப்புக்கான பரிசோதனையில் 49-க்கு 10.55 புள்ளிகளையே பெற்றது. இந்த கார் அதன் ஓட்டுநர் மற்றும் அவரின் அருகாமையில் அமரும் பயணிக்கு தலை மற்றும் கழுத்து பகுதிகளில் நல்ல பாதுகாப்பை வழங்கியதாக குளோபல் NCAP தெரிவித்தது.

    எனினும், பக்காவாட்டுகளில் தலை பகுதிக்கு பாதுகாப்பு அளிப்பதை ஆப்ஷனாகவும் சிட்ரோயன் வழங்கவில்லை. காரின் ஒட்டுமொத்த உருவம் திடமாக இருந்தது என்று குளோபல் NCAP தெரிவித்துள்ளது.

    இவைதவிர சிட்ரோயன் eC3 எலெக்ட்ரிக் ஹேச்பேக் காரில் ஏ.பி.எஸ். மற்றும் இ.பி.டி. போன்ற பாதுகாப்பு அம்சங்கள், ரிவர்ஸ் பார்கிங் சென்சார்கள், ரியர் டோர் மேனுவல் சைல்டு லாக், ஹை ஸ்பீடு அலர்ட் சிஸ்டம், ஸ்பீடு சென்சிடிவ் ஆட்டோ டோர் லாக் வசதியும் வழங்கப்படுகிறது.

    • இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • ஹெட்-அப் டிஸ்ப்ளேவை பொருத்திக் கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது.

    ஆடி நிறுவனத்தின் முற்றிலும் புதிய கியூ6 இ டிரான் மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆடியின் புதிய எலெக்ட்ரிக் கார் பி.பி.இ. பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்.யு.வி. மாடல் டூயல் மோட்டார் மற்றும் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. இந்த கார் மாடல் அடுத்த ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கியூ6 இ டிரான் மாடல் ஆடியின் முற்றிலும் புதிய டிசைன் மற்றும் ஸ்ப்லிட் ஹெட்லைட் செட்டப் கொண்டிருக்கிறது. இந்த காரின் முன்புறம் க்ளோஸ்டு ஆஃப் கிரில், அழகிய தோற்றம் கொண்ட டி.ஆர்.எல்.கள், முன்புறம் அகலமான ஏர் இன்டேக்குகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த காரில் ஆடியின் முற்றிலும் புதிய டிஜிட்டல் லைட் சிக்னேச்சர் வழங்கப்பட்டு இருக்கிறது.

     


    இந்த காரின் உள்புறம் பானரோமிக் டிஸ்ப்ளே, 11.9 இன்ச் ஆடி விர்ச்சுவல் காக்பிட், 14.5 இன்ச் MMI டச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள ஸ்டீரிங் வீலில் பட்டன்களுக்கு மாற்றாக டச் கண்ட்ரோல்கள் வழங்கப்பட்டுள்ளன. பயனர்கள் விரும்பும் பட்சத்தில் இந்த எஸ்.யு.வி.-யில் ஆக்மென்டெட் ரியாலிட்டி ஹெட்-அப் டிஸ்ப்ளேவை பொருத்திக் கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது.


     

    பவர்டிரெயினை பொருத்தவரை ஆடி கியூ6 இ டிரான் மாடலில் 382 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் டூயல் மோட்டார் செட்டப் உள்ளது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 5.9 நொடிகளில் எட்டிவிடும். இத்துடன் மணிக்கு அதிகபட்சம் 210 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. இதில் உள்ள 100 கிலோவாட் ஹவர் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 625 கிலோமீட்டர்கள் ரேன்ஜ் வழங்கும் என சான்று பெற்று இருக்கிறது.

    • புது வால்வோ காரின் முன்பதிவு கட்டணம் ரூ. 1 லட்சம் ஆகும்.
    • மணிக்கு அதிகபட்சம் 180 கி.மீ. வேகத்தில் செல்லும்.

    வால்வோ கார் இந்தியா நிறுவனம் தனது XC40 ரிசார்ஜ் சிங்கில் வேரியண்டுக்கான முன்பதிவுகளை துவங்கியது. இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய வேரியண்டின் விலை ரூ. 54 லட்சத்து 95 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய வால்வோ XC40 ரிசார்ஜ் முன்பதிவு கட்டணம் ரூ. 1 லட்சம் ஆகும். முன்பதிவு வால்வோ இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் நடைபெறுகிறது.

    புதிய வேரியண்ட் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் XC40 ரிசார்ஜ் டூயல் மோட்டார், ஆல்வீல் டிரைவ் வேரியண்டின் கீழ் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது.


     

    புதிய வேரியண்ட்-இல் பிக்சல் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், ஃபாக் லேம்ப்கள், 360 டிகிரி கேமரா, ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் போன்ற வசதிகள் வழங்கப்படவில்லை. மாற்றாக இந்த காரில் 8 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், 2-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், 12 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, 9 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட் உள்ளது.

    இத்துடன் பார்க் அசிஸ்ட், 19 இன்ச் அலாய் வீல்கள், பானரோமிக் சன்ரூஃப், முன்புறம் பவர்டு இருக்கைகள், வயர்லெஸ் போன் சார்ஜிங் போன்ற வசதிகள் உள்ளன. பாதுகாப்பிற்கு 7 ஏர்பேக், லேன் கீப் அசிஸ்ட், அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், கிராஸ் டிராஃபிக் அலர்ட்கள், ரியர் கொலிஷன் வார்னிங் போன்ற வசதிகளை வழங்கும் ADAS சூட் உள்ளது.


     

    இதில் உள்ள வால்வோ ஒற்றை மோட்டார் 238 ஹெச்.பி. பவர், 420 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 7.3 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டுள்ளது. இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 180 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும்.

    வால்வோ XC40 ரிசார்ஜ் புதிய வேரியண்டில் 69 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 475 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என சான்று பெற்றுள்ளது.

    • புதிய கார் பற்றிய தகவல்கள் அனைத்தும் ரகசியமாகவே உள்ளது.
    • முக்கிய அறிவிப்பை வெளியிட எம்.ஜி. மோட்டார்ஸ் திட்டம்.

    எம்.ஜி. மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் பயன்படுத்துவதற்காக புதிய பெயரை டிரேட்மார்க் செய்துள்ளது. இந்த பெயரில் தான் எம்.ஜி. நிறுவனத்தின் மூன்றாவது எலெக்ட்ரிக் கார் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது.

    புதிய எலெக்ட்ரிக் கார் மாடல் எக்செல்லார் என்ற பெயரில் விற்பனை செய்யப்பட உள்ளது. சர்வதேச சந்தையில் எம்.ஜி. நிறுவனம் எந்த மாடலுக்கும் எக்செல்லார் பெயரை பயன்படுத்துவதில்லை. அந்த வகையில், இந்த வாகனம் பற்றிய தகவல்கள் அனைத்தும் ரகசியமாகவே உள்ளது.

     


    இந்த எலெக்ட்ரிக் கார் கொமெட் மற்றும் ZS EV மாடல்களுக்கு மத்தியில் நிலை நிறுத்தப்படும் என்று தெரிகிறது. புதிய எலெக்ட்ரிக் கார் டாடா நெக்சான் EV மாடலுக்கு போட்டியாக அமையும். மார்ச் 20-ம் தேதி மிக முக்கிய அறிவிப்பை வெளியிட எம்.ஜி. மோட்டார்ஸ் திட்டமிட்டு வருகிறது.

    அந்த வகையில், புதிய எக்செல்லார் எலெக்ட்ரிக் கார் பற்றிய விவரங்கள் வெளியிடப்படும் என்று தெரிகிறது. புதிய எலெக்ட்ரிக் கார் மட்டுமின்றி எம்.ஜி.மோட்டார்ஸ் நிறுவனம் தனது குளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடலை டெஸ்டிங் செய்து வருகிறது. வரும் மாதங்களில் இந்த மாடல் அறிமுகம் செய்யப்படலாம்.

    • ஆடியின் எதிர்கால இ டிரான் மாடல்கள் உருவாக்கப்பட இருக்கின்றன.
    • இந்த எஸ்.யு.வி. இருவித ஆப்ஷன்களில் கிடைக்கும்.

    ஆடி நிறுவனம் தனது முற்றிலும் புதிய கியூ6 இ டிரான் மாடல் மார்ச் 18-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. ஆடியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எஸ்.யு.வி. மாடல் முற்றிலும் புதிய PPE (பிரீமியம் பிளாட்ஃபார்ம் எலெக்ட்ரிக்) பிளாட்ஃபார்மில் உருவாகி இருக்கிறது. இதே பிளாட்ஃபார்மில் ஆடியின் எதிர்கால இ டிரான் மாடல்கள் உருவாக்கப்பட இருக்கின்றன.

    புதிய காரின் புகைப்படங்களை ஆடி நிறுவனம் வெளியிட்டு உள்ளது. இந்த மாடல் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஆடி கியூ4 மற்றும் கியூ8 இ டிரான் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி.-க்களை போன்ற டிசைன் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது. அதன்படி பல்கேரியன் பியர்டு கிரில் மூடப்பட்டு மெல்லிய லைட் கிளஸ்டர்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

     


    போர்ஷே மக்கன் மாடலை போன்றே புதிய கியூ6 மாடலிலும் ஸ்ப்லிட் ஹெட்லைட் டிசைன், எல்.இ.டி. டி.ஆர்.எல்.-கள் வழங்கப்படுகின்றன. புதிய கியூ6 இ டிரான் உள்புறத்தில் இரட்டை டிஜிட்டல் ஸ்கிரீன்கள்- ஒன்று இன்ஃபோடெயின்மென்ட் மற்றொன்று இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டராக வழங்கப்படுகின்றன.

    புதிய ஆடி கியூ6 இ டிரான் மாடலில் 800 வோல்ட் எலெக்ட்ரிக் ஆர்கிடெக்ச்சர் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதன் பவர்டிரெயின் பற்றிய விவரங்கள் மர்மமாகவே உள்ளன. இந்த எஸ்.யு.வி. மாடல் 2-வீல் மற்றும் ஆல்-வீல் டிரைவ் என இருவித ஆப்ஷன்களில் கிடைக்கும் என்று தெரிகிறது.

    • மூன்று எலெக்ட்ரிக் வாகனங்கள் இடம்பெற்று இருக்கும் என்று தெரிகிறது.
    • பல்வேறு பாடி ஸ்டைல்களில் கார்களை உருவாக்க முடியும்.

    மாருதி சுசுகி நிறுவனம் அடுத்த சில ஆண்டுகளில் பல்வேறு கார் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. இதில் பலேனோ, ஃபிரான்க்ஸ், ஸ்விஃப்ட் மற்றும் இதர கார் மாடல்களின் ஹைப்ரிட் வெர்ஷன்கள் இடம்பெற்றிருக்கும் என்று கூறப்பட்டது.

    இவைதவிர மாருதி நிறுவனம் தனது வாகனங்களை முழுமையாக மாற்றியமைக்கும் நோக்கில் முற்றிலும் புதிதாக எட்டு கார் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் எஸ்.யு.வி.-க்கள், எம்.பி.வி.-க்கள் மற்றும் மூன்று எலெக்ட்ரிக் வாகனங்கள் இடம்பெற்று இருக்கும் என்று தெரிகிறது.

     


    இதில் ஒரு மாடல் தாமதமாகவே வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த மாடல் எலெக்ட்ரிக் எம்.பி.வி. என்றும் இது YMC எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. எலெக்ட்ரிக் வாகனங்களுக்காக மாருதி மற்றும் டொயோட்டா நிறுவனங்கள் இணைந்து பார்ன்-இவி (Born EV) ஆர்கிடெக்ச்சரை உருவாக்கி வருகின்றன.

    இதை கொண்டு பல்வேறு பாடி ஸ்டைல்களில் கார்களை உருவாக்க முடியும். இந்த ஆர்கிடெக்ச்சரில் உருவாகும் எம்.பி.வி. மாடல் தான் YMC எனும் குறியீட்டு பெயர் கொண்டிருக்கிறது என்றும், இந்த மாடல் eVX அறிமுகமாகி ஒன்றரை ஆண்டுகள் கழித்தே அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. அறிமுகமாகும் போது மாருதி YMC மாடல் அந்நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் எம்.பி.வி.-யாக இருக்கும்.

    மாருதியின் புதிய எம்.பி.வி. மாடல் பற்றிய விவரங்கள் மர்மமாகவே உள்ள நிலையில், இதில் 40 கிலோவாட் ஹவர் மற்றும் 60 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த காரின் ரேன்ஜ் மாருதி eVX மாடலுக்கு இணையாக 550 கிலோமீட்டர்கள் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. 

    • புதிய மாடல்களுக்கு இந்த சலுகைகள் வழங்கப்படுகின்றன.
    • ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மாடல்களுக்கு வழங்கப்படவில்லை.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் கார் மாடல்களுக்கு மாதாந்திர சலுகைகளை அறிவித்து இருக்கிறது. எனினும், இந்த சலுகைகள் எதுவும் பன்ச் EV மாடலுக்கு மட்டும் வழங்கப்படவில்லை. மேலும் 2023 ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட கார்கள் மற்றும் 2024 புதிய மாடல்களுக்கு இந்த சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    2023 ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட்-க்கு முந்தைய மாடல்களுக்கு டாடா உற்பத்தியாளர்கள் அசத்தல் சலுகைகளை அறிவித்துள்ளனர். அதன்படி நெக்சான் EV பிரைம் மாடலுக்கு ரூ. 2 லட்சத்து 30 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 50 ஆயிரம் வரை எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது. நெக்சான் EV மேக்ஸ் மாடலுக்கு ரூ. 2 லட்சத்து 65 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 50 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது.

    நெக்சான் EV பிரைம் மாடலில் 129 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் எலெக்ட்ரிக் மோட்டார், 30.2 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 312 கிலோமீட்டர்கள் வரை செல்லும் என சான்று பெற்று இருக்கிறது.

    நெக்சான் EV மேக்ஸ் மாடலில் 143 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் எலெக்ட்ரிக் மோட்டார் உள்ளது. இந்த காரில் உள்ள 40.5 கிலோவாட் ஹவர் பேட்டரி முழு சார்ஜ் செய்தால் 437 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என சான்று பெற்று இருக்கிறது.

    கடந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட நெக்சான் EV மாடல்களுக்கு ரூ. 50 ஆயிரம் வரை கிரீன் போனஸ், 2024 ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட மாடல்களுக்கு ரூ. 20 ஆயிரம் வரை கிரீன் போனஸ் வழங்கப்படுகிறது. இவைதவிர ரொக்க தள்ளுபடி மற்றும் எக்சேன்ஜ் போனஸ் உள்ளிட்டவை ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மாடல்களுக்கு வழங்கப்படவில்லை.

    இந்திய சந்தையில் நெக்சான் EV மாடல் மீடியம் ரேன்ஜ் மற்றும் லாங் ரேன்ஜ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றுடன் 7.2 கிலோவாட் AC சார்ஜர் ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது. மீடியம் ரேன்ஜ் வேரியண்டை இந்த சார்ஜர் 4.3 மணி நேரத்தில் 10-இல் இருந்து 100 சதவீதம் வரை சார்ஜ் செய்துவிடும். லாங் ரேன்ஜ் வேரியண்டில் இது 6 மணி நேரத்தில் சார்ஜ் செய்துவிடும்.

    ×