search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ford"

    • ஃபோர்டு எவரஸ்ட் பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • டொயோட்டா ஹிலக்ஸ், இசுசு டி மேக்ஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    ஃபோர்டு நிறுவனத்தின் முற்றிலும் புதிய ரேஞ்சர் மாடல் இந்தியாவில் டெஸ்டிங் செய்யப்படுகிறது. இந்த கார் டிரக் ஒன்றின் மீது எடுத்துச் செல்லப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இத்துடன் ஃபோர்டு என்டேவர் மாடலும் காணப்பட்டது. இதே கார் சர்வதேச சந்தையில் ஃபோர்டு எவரஸ்ட் பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இரு மாடல்களும் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் காணப்பட்டுள்ளது. ஃபோர்டு நிறுவனத்தின் ரேஞ்சர் மாடல் உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்படும் பிரபல எஸ்.யு.வி. ஆகும். இந்த மாடல் டொயோட்டா ஹிலக்ஸ் மற்றும் இசுசு டி மேக்ஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

     


    இந்த எஸ்.யு.வி. பெட்ரோல், டீசல் என இருவித பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த காரின் ரேப்டர் பெர்ஃபார்மன்ஸ் வேரியண்டில் உள்ள 3.0 லிட்டர் வி6 பெட்ரோல் என்ஜின் 288 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    ரேஞ்சர் எஸ்.யு.வி. மாடல் இதுவரை இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டதே இல்லை. எனினும், இந்த மாடலின் தோற்றம் கிட்டத்தட்ட ஃபோர்டு என்டேவர் எஸ்.யு.வி.-யை போன்றே காட்சியளிக்கிறது. ஒருவேளை இந்த மாடல் இந்திய சந்தையில் அறிமுகமாகும் பட்சத்தில் டொயோட்டா ஹிலக்ஸ் மற்றும் இசுசு டி மேக்ஸ் மாடல்களுக்கு போட்டியை ஏற்படுத்தும்.

    • கார் டிசைனுக்கு காப்புரிமை கோரியுள்ளது.
    • வாகனங்களை இறக்குமதி செய்ய அரசு அனுமதி.

    சென்னையில் உள்ள ஆலையை விற்பனை செய்யும் முடிவை மாற்றிக் கொண்டது, புதிய வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்புகளை வெளியிட்டது மற்றும் என்டேவர் பெயருக்கு காப்புரிமை கோரி விண்ணப்பித்து இருப்பது உள்ளிட்டவை ஃபோர்டு நிறுவனம் மீண்டும் இந்திய சந்தையில் கால் பதிக்கலாம் என்பதை உணர்த்தும் வகையில் தான் உள்ளது.

    முன்னதாக இந்திய சந்தையில் இருந்து வெளியேறுவதாக ஃபோர்டு நிறுவனம் அறிவித்து இருந்தது. எனினும், ஃபோர்டு மீண்டும் இந்தியாவில் தனது வாகனங்களை விற்பனை செய்யலாம் என்று தகவல்கள் வெளியாகின. அந்த வரிசையில், ஃபோர்டு நிறுவனம் தற்போது தாய்லாந்து போன்ற சர்வதேச சந்தைகளில் ஃபோர்டு எவரஸ்ட் என்ற பெயரில் விற்பனை செய்து வரும் கார் டிசைனுக்கு காப்புரிமை கோரியுள்ளது.

     


    2022-ம் ஆண்டு முதல் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருவதால் இந்த எஸ்.யு.வி. மாடல் இந்திய சந்தையில் புதிதான ஒன்றாகவே இருக்கும். இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் ஃபோர்டு நிறுவனம் புதிய என்டேவர் மாடலை சென்னையில் உள்ள ஆலையில் அசெம்பில் செய்ய திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

    தற்போது ஆண்டிற்கு 2500 யூனிட்கள் வரை இந்தியாவுக்கு வாகனங்களை இறக்குமதி செய்ய அரசு அனுமதி வழங்கி வருகிறது. இதன் காரணமாக ஃபோர்டு நிறுவனம் விரைவில் தனது என்டேவர் மாடலை இந்தியாவில் இறக்குமதி செய்யலாம் என்று கூறப்படுகிறது. என்டேவர் மாடலுக்கு இந்தியாவில் நேரடி போட்டியை ஏற்படுத்தும் மாடலாக டொயோட்டா ஃபார்ச்சூனர் உள்ளது.

     


    இந்தியாவில் டொயோட்டா ஃபார்ச்சூனர் மாடலின் டாப் எண்ட் விலை ரூ. 60 லட்சம் ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நேரடியாக இறக்குமதி செய்யப்படும் என்டேவர் மாடல் ஃபார்ச்சூனருக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையிலேயே இருக்கும். முன்னதாக ஃபோர்டு நிறுவனமும் நேரடியாக இறக்குமதி செய்து வாகனங்கள் விற்பனை செய்ய திட்டமிருப்பதாகவும் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • ஆலைகளில் கார் உற்பத்தி படிப்படியாக நிறுத்தப்பட்டது.
    • ஃபோர்டு ஆலையை டாடா மோட்டார்ஸ் விலைக்கு வாங்கியது.

    அமெரிக்காவைச் சேர்ந்த ஃபோர்டு நிறுவனம், இந்தியாவில் சென்னை மறைமலை நகர் மற்றும் குஜராத்தில் உள்ள சனந்த் என இரண்டு இடங்களில் தனது தொழிற்சாலையில் கார் தயாரித்து வந்தது. இந்தியாவில் ஃபோர்டு நிறுவனம் கடும் நஷ்டத்தை சந்தித்ததால், ஆலைகளில் கார் உற்பத்தி படிப்படியாக நிறுத்தப்பட்டது. இனிமேல் இந்தியாவில் உள்ள தங்களது இரண்டு தொழிற்சாலைகளிலும் கார்கள் தயாரிப்பதில்லை என்கிற முடிவுக்கு வந்தது ஃபோர்டு.

    சென்னை மறைமலை நகர் தொழிற்சாலையை ஒப்பிடுகையில், குஜராத்தில் உள்ள தொழிற்சாலை மிகவும் நவீனமானது. குஜராத் மாநிலம் சனந்தில் உள்ள ஃபோர்டு ஆலையை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 726 கோடி ரூபாய்க்கு வாங்கியது. மறைமலை நகரில் இருக்கிற ஆலையை வாங்க மஹிந்திரா நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியது.

     


    எனினும், மஹிந்திரா மற்றும் ஃபோர்டு இடையே சுமூக முடிவு எட்டப்படவில்லை. இதனைத்தொடர்ந்து, ஜே.எஸ்.டபிள்யு. குழுமம் மற்றும் ஃபோர்டு இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்ட்டது. இந்த நிலையில், அதனையும் ஃபோர்டு நிறுவனம் ரத்து செய்தது.

    இந்நிலையில், சென்னை ஆலையை விற்பனை செய்ய ஃபோர்டு நிறுவனத்துக்கு திட்டம் இல்லை என்றும் ஆலையை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஃபோர்டு தொழிற்சாலையை, மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் ஆலையாக மாற்ற முடியுமா என்பதை ஆராய்வதற்காக ஃபோர்டு நிறுவனத்துடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

    தற்போது மக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த தொடங்கியுள்ள காரணத்தால் இந்தியாவில் ஒரு ஆலையை ஏற்றுமதி தளமாக பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்கிறது ஃபோர்டு நிறுவனம். எனவே, இந்தியாவில் போர்ஃடு நிறுவனம் மீண்டும் போல்டாக செயல்பட உள்ளது.

    • போர்டு நிறுவனம் ஏழாம் தலைமுறை மஸ்டங் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
    • புதிய போர்டு மஸ்டங் மாடலில் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

    அமெரிக்க ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான போர்டு தனது பாரம்பரியம் மிக்க மஸ்டங் மாடலின் ஏழாம் தலைமுறை மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த காரில் புதிய எக்ஸ்டீரியர் மற்றும் இண்டீரியர், சக்திவாய்ந்த வி8 சேர்த்து இருவித என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

    போர்டு வரலாற்றில் முதல் முறையாக மஸ்டங் டார்க் ஹார்ஸ் வேரியண்டை அறிமுகம் செய்து இருக்கிறது. இது டிராக் சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கும் சக்திவாய்ந்த வேரியண்ட் ஆகும். இதில் அதிக செயல்திறன் வழங்கும் அப்கிரேடுகளை கொண்டிருக்கிறது.


    புதிய தலைமுறை மஸ்டங் மாடல் ஜிடி மற்றும் இகோபூஸ்ட் ட்ரிம் லெவல்களில் கூப் மற்றும் கன்வெர்டிபில் பாடி ஸ்டைல்களில் கிடைக்கிறது. இதன் எக்ஸ்டீரியர் டிசைன் 1960-க்களில் வெளிவந்த ஒரிஜினல் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. முதல் முறையாக ஜிடி மற்றும் இகோபூஸ்ட் மாடல்கள் வித்தியாசப்படுத்தப்பட்டு உள்ளன.

    ஒட்டுமொத்தத்தில் புதிய மஸ்டங் ஹெக்சகன் வடிவ கிரில், பெரிய ஏர் இன்லெட்கள், மூன்று பார் எல்இடி ஹெட்லைட்கள், எக்ஸ்டெண்ட் செய்யப்பட்ட பூட், கூர்மையான டெயில் லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கார் மொத்தத்தில் 11 நிறங்களில் கிடைக்கிறது. இதில் வேப்பர் புளூ மற்றும் எல்லோ ஸ்பிலாஷ் என இரண்டு புதிய நிறங்களில் கிடைக்கிறது.

    ஏழாம் தலைமுறை போர்டு மஸ்டங் மாடல் 5.0 லிட்டர் கோயோட் வி8 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் டூயல் கோல்டு ஏர் இண்டேக், டூயல் திராட்டில் பாடி டிசைன் மற்றும் அதிக ஏர்-ஃபுளோ ரேட்களை வழங்குகிறது. இத்துடன் 2.3 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட ட்வின் ஸ்கிரால், இகோபூஸ்ட் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது.

    இகோபூஸ்ட் வெர்ஷனில் 10 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஸ்டாண்டர்டு அம்சமாகவும், வி8 என்ஜினில் ஆப்ஷனாகவும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின்களின் செயல்திறன் பற்றி போர்டு சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

    • போர்டு நிறுவனம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் இருந்து வெளியேறுவதாக ஏற்கனவே அறிவித்து விட்டது.
    • கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் சனந்த் ஆலை பணிகளை போர்டு நிறுத்தியது.

    போர்டு நிறுவனத்தின் சென்னை ஆலையில் இருந்து கடைசி கார் போர்டு இகோஸ்போர்ட் வெளியிடப்பட்டது. இந்த மாடல் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் யூனிட் ஆகும். இந்திய சந்தையில் இருந்து வெளியேறுவதாக போர்டு நிறுவனம் ஏற்கனவே அறிவித்து விட்டது.


    இதைத் தொடர்ந்து போர்டு நிறுவனம் உற்பத்தி பணிகளை மெல்ல நிறுத்தி வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் போர்டு சனந்த் ஆலையில் உற்பத்தி பணிகள் நிறுத்தப்பட்டது. இந்த ஆலையில் இருந்து ஃபிரீஸ்டைல் மாடல் கடைசி யூனிட்-ஆக வெளியிடப்பட்டது. சென்னை ஆலை மட்டும் தொடர்ந்து இயங்கிக் கொண்டே வந்தது. இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு வந்த மாடல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இந்தியாவில் மீண்டும் பணிகளை தொடங்குவது பற்றி போர்டு நிறுவனம் இதுவரை எந்த திட்டமும் கொண்டிருக்கவில்லை. போர்டு நிறுவனம் தனது சனந்த் ஆலையை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு விற்று விட்டது. இதைத் தொடர்ந்து சென்னை ஆலையும் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் குகா எஸ்.யு.வி. மாடலை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Ford



    அமெரிக்காவைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு மோட்டார் நிறுவனம் குகா என்ற பெயரில் மற்றொரு எஸ்.யு.வி. மாடல் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. ஏற்கனவே இந்த மாடல் கார்கள் வட அமெரிக்காவில் மிகவும் பிரபலம். அங்கு இந்த மாடல் கார்கள் ஃபோர்டு எஸ்கேப் என்ற பெயரில் விற்பனையாகிறது. 

    இதுவரை 1.5 லட்சம் கார்களை விற்றுள்ள நிலையில் இந்த மாடலை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்ய ஃபோர்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 500 மாடல் எஸ்.யு.வி. தயாராகும் அதே பிளாட்பார்மில் ஃபோர்டு குகா தயாராகிறது. பிரீமியம் மாடலாக உருவாக்கப்படும் இந்த எஸ்.யு.வி. தற்போது 5 பேர் பயணிக்கும் வகையிலும் 7 பேர் பயணிக்கும் வகையிலும் தயாராகிறது.



    புதிய மாடல் ஃபோர்டு இகோ ஸ்போர்ட் மற்றும் எண்டேவர் ஆகிய இரண்டு மாடல்களுக்கும் இடைப்பட்டதாக இருக்கும். அதேசமயம் இதே பிரிவில் தயாராகும் ஜீப் கம்பாஸ் மற்றும் ஹூண்டாய் டக்சன் ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த மாடல் கார் 2016-ம் ஆண்டு முதல் உருவாக்கப்படுகிறது.

    இதில் மிகச் சிறப்பான முகப்பு விளக்கு, எஸ்.யு.வி. கார்களுக்கே உரிய பிரமாண்டமான டயர்கள் அதை தாங்கும் அலாய் சக்கரங்கள், பெரிய அளவிலான தொடு திரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன.

    இத்துடன் கிளைமேட் கண்ட்ரோல் வசதி, பன்முக பயன்பாடு கொண்ட ஸ்டீரிங் வீல், ரியர் பார்க்கிங் சென்சார் மற்றும் கேமரா, 6 ஏர்பேக்குகள் மற்றும் ஏ.பி.எஸ்., இ.பி.டி. வசதிகளை கொண்டிருக்கிறது. இந்தியாவில் ஃபோர்டு குகா விலை ரூ.12 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என்று தெரிகிறது. 
    ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2019 எண்டேவர் எஸ்.யு.வி.யை அறிமுகம் செய்துள்ளது. #2019FordEndeavour



    ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் தனது 2019 எண்டேவர் எஸ்.யு.வி. காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய காரின் பேஸ் வேரியண்ட் விலை ரூ.28.19 லட்சம் என்றும் டாப் எண்ட் வேரியண்ட் விலை ரூ.32.97 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ஃபோர்டு எண்டேவர் எஸ்.யு.வி. டைட்டாணியம் மற்றும் டைட்டாணியம் பிளஸ் என இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது. முந்தைய டிரெண்ட் மாடல் தற்சமயம் நிறுத்தப்பட்டு விட்டசு. புதிய எண்டேவர் கார் 2.2 லிட்டர் மற்றும் 3.2 லிட்டர் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    பேஸ் மாடலான டைட்டாணியம் வேரியண்ட் 2.2 லிட்டர் என்ஜின் 158 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 385 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் 3.2 லிட்டர் யூனிட் 197 பி.ஹெச்.பி. மற்றும் 470 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின் 6 ஸ்பீடு  ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது. 



    புதிய மாடலில் முன்புற பம்பர், கிரில், முகப்பு விளக்கு உள்ளிட்ட அனைத்துமே மாற்றம் செய்யப்பட்டு கம்பீரமான தோற்றத்துடன் உருவாகி இருக்கிறது. இத்துடன் டயமண்ட் கட் பினிஷுடன் 18 அங்குல அலாய் சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளன. உள்புறம் ஹேண்ட்ஸ்-ஃப்ரீ டெயில்கேட் அம்சம், புஷ் ஸ்டார்ட் / ஸ்டாப் வசதி வழங்கப்படுகிறது. 

    மற்ற அம்சங்களை பொருத்தவரை ஹெச்.ஐ.டி. ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், ரெயின் சென்சிங் வைப்பர்கள், செமி பேரலெல் பார்க்கிங் அசிஸ்ட், பானரோமிக் சன்ரூஃப் மற்றும் ஆக்டிவ் நாய்ஸ் கான்செலேஷன் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 8.0 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட SYNC3 இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் 10-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. 
    2019 ஃபோர்டு எண்டேவர் கார் புத்தம் புதிய இன்டீரியர் மற்றும் பல்வேறு புதிய அம்சங்களுடன் உருவாகி வருகிறது. #FordEndeavour #Car
    அமெரிக்காவின் ஃபோர்டு நிறுவனம் தனது பிரபல எண்டேவர் எஸ்.யு.வி. மாடலில் புதிய மேம்படுத்தப்பட்ட மாடலை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. தற்சமயம் விற்பனை செய்யப்படும் மாடல் இந்தியாவில் 2016 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

    இதனால் இந்தாண்டில் மேம்படுத்தப்பட்ட ரகத்தை அறிமுகம் செய்ய ஃபோர்டு முடிவு செய்துள்ளது. புதிய மாடலில் முன்புற பம்பர், கிரில், முகப்பு விளக்கு உள்ளிட்ட அனைத்துமே மாற்றம் செய்யப்பட்டு கம்பீரமான தோற்றத்துடன் உருவாகி வருவதாக தெரிகிறது. இத்துடன் டயமண்ட் கட் பினிஷுடன் 20 அங்குல அலாய் சக்கரங்கள் வழங்கப்படுகின்றன.

    உள்புற இன்டீரியரிலும் மாறுதல்கள் செய்யப்படுகின்றன. அந்த வகையில் இன்ஃபோடெயின்மென்ட் பகுதியில் இப்போது கூடுதலாக ஃபோர்டு சிங் 3 இன்டர்ஃபேஸ் வழங்கப்படுகிறது. இது ஆப்பிள் கார் பிளே சேவைக்கு இணையான ஒன்றாகும். இத்துடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதியும் வழங்கப்படுகிறது.



    பாதசாரிகள் திடீரென காரை கடந்தால் அதை உணர்ந்து உடனடியாக பிரேக் தானாக செயல்படும் தொழில்நுட்பமும் இந்த காரில் வழங்கப்படுகிறது. முந்தைய மாடல்களில் வழங்கப்பட்டிருப்பதை போன்று 2.2 லிட்டர் மற்றும் 3.2 லிட்டர் டீசல் என்ஜினுடன் இவை வெளிவந்துள்ளன.

    இவை பி.எஸ். VI (பாரத் புகை விதி 6) இணையாக விளங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த என்ஜின்கள் முறையே 180 பி.ஹெச்.பி. பவர் 420 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 213 பி.ஹெச்.பி. மற்றும் 500 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.

    புதிய ஃபோர்டு எண்டேவர் கார் இந்தியாவில் மஹிந்திரா அல்டுராஸ், டொயோடா பார்ச்சூனர், மிட்சுபிஷி பஜெரோ ஸ்போர்ட் மற்றும் மேம்படுத்தப்பட்ட இசுஸூ எம்.யு.எக்ஸ். போன்ற மாடல்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் என்று ஆட்டோமொபைல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.#FordEndeavour #Car
    ஃபோர்டு நிறுவத்தின் புதிய ஆஸ்பையர் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Ford #Aspire



    ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் புதிய ஆஸ்பையர் ஃபேஸ்லிஃப்ட் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

    இந்தியாவில் புதிய ஆஸ்பையர் கார் ஐந்து வெவ்வேறு வேரியன்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை ரூ.5.55 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) துவங்குகிறது. இதன் டாப்-என்ட் மாடலின் விலை ரூ.8.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய ஆஸ்பையர் காரின் முன்பக்கம் முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்ட கிரில் வழங்கப்பட்டுள்ளது, இத்துடன் குரோம் சரவுன்ட்கள், மேம்படுத்தப்பட்ட ஸ்வெப்ட்பேக் ஹெட்லேம்ப்கள், சி-வடிவம் கொண்ட குரோம் இன்செர்ட்கள், ஃபாக் லேம்ப், அகலமான ஏர்டேம் மற்றும் வட்ட வடிவம் கொண்ட ஃபாக் லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளது.

    காரின் பக்கவாட்டில் புதிய வடிவமைப்பு கொண்ட 15-இன்ச் அலாய் வீல்கள், பின்புறம் டெயில் லைட் கிளஸ்டர் மற்றும் புதிய பம்ப்பர் வழங்கபப்ட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக புதிய ஆஸ்பையர் கார் தற்போதைய மாடலை விட முற்றிலும் புதிய தோற்றம் பெற்று இருக்கிறது.



    புதிய ஃபோர்டு ஆஸ்பையர் மாடல்: வைட் கோல்டு, மூன்டஸ்ட் சில்வர், ஸ்மோக் கிரே, அப்சல்யூட் பிளாக், டீப் இம்பேக்ட் புளு, ரூபி ரெட் மற்றும் ஆக்ஸ்ஃபோர்டு வைட் என ஏழு வித நிறங்களில் கிடைக்கிறது.

    காரின் உள்புறத்தில் பிளாக்/பெய்க் டூயல்-டோன் தீம் மற்றும் டேஷ்போர்டு வடிவமைப்பில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. எனினும் புதிய ஆஸ்பையர் மாடலில் 6.5 இன்ச் SYNC3 ஃபுளோட்டிங் டச்-ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே வசதி வழங்கப்பட்டுள்ளது.

    ஃபோர்டு ஆஸ்பையர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் குறிப்பிடத்தக்க அம்சங்களாக ஆட்டோமேடிக் கிளைமேட் கன்ட்ரோல், இரண்டு யு.எஸ்.பி. போர்ட்கள், இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன், எலெக்ட்ரோகுரோமிக் IRVM, ரெயின்-சென்சிங் வைப்பர்கள் மற்றும் ஆட்டோமேடிக் ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன.



    புதிய ஃபோர்டு ஆஸ்பையர் மாடலில் டூயல் ஏர்பேக், ஏ.பி.எஸ். மற்றும் இ.பிடி. அம்சம் அனைத்து வேரியன்ட்களிலும் வழங்கப்பட்டுள்ளது. இதன் டாப்-என்ட் மாடல்களில் கூடுதலாக பாதுகாப்பு அம்சங்களாக ஆறு ஏர்-பேக், எலெக்டிரானிக் ஸ்டேபிலிட்டி கன்ட்ரோல் மற்றும் ஹில்-லான்ச் அசிஸ்ட் வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.

    இன்ஜின் அம்சங்களை பொருத்த வரை புதிய ஃபோர்டு ஆஸ்பையர் மாடலில் 1.2 லிட்டர், 3-சிலிண்டர், டிராகன் சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதன் டீசல் வேரியன்ட் 1.5-லிட்டர் யூனிட் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 99 பி.ஹெச்.பி. பவர், 215 என்.எம். டார்கியூ செயல்திறன் மற்றும் இரண்டு இன்ஜின்களும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய ஃபோர்டு ஆஸ்பையர் மாடலில் 1.5 லிட்டர் 3-சிலிண்டர், பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 121 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. மூன்று இன்ஜின்களும் அதன் பிரிவுகளில் சக்திவாய்ந்தது என ஃபோர்டு தெரிவித்துள்ளது.
    ஃபோர்டு நிறுவனத்தின் ஆஸ்பையர் ஃபேஸ்லிஃப்ட் கார் விரைவில் வெளியிடப்பட இருக்கும் நிலையில் இதன் ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது. #Ford



    ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் ஆஸ்பையர் ஃபேஸ்லிஃப்ட் மாடலை அக்டோபர் 4-ம் தேதி வெளியிட இருக்கிறது. இந்நிலையில் காரின் ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது.

    புதிய ஆஸ்பையர் பல்வேறு புதிய ஸ்டைலிங் மற்றும் அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய ஆஸ்பையரின் பெட்ரோல் மாடலும் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஸ்பை படங்களின் படி ஆஸ்பையர் மாடலில் ஹனிகாம்ப் முன்பக்க கிரில், கிடையான ஸ்லாட்கள் இடம்பெற்றிருக்கிறது.



    மற்ற அப்டேட்களை பொருத்த வரை மேம்படுத்தப்பட்ட ஃபாக் லேம்ப்கள், ஹெட்லேம்ப் மற்றும் பம்ப்பர்கள் இடம்பெற்றுள்ளன.

    முன்பக்க பம்ப்பர்களில் பெரிய ஏர் டேம் மற்றும் பக்கவாட்டுகளில் சி-வடிவம் கொண்ட ஃபாக் லேம்ப் கிளஸ்டர்கள் வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் சில மாற்றங்கள் செய்யப்படுகிறது.



    புதிய ஃபோர்டு ஆஸ்பையர் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் டெயில்லைட் கிளஸ்டர் தற்போதைய மாடலில் உள்ளதை போன்று வழங்கப்படுகிறது. 

    இத்துடன் பின்புற பார்க்கிங் கேமரா, முற்றிலும் வடிவமைக்கப்பட்ட மல்டி-ஸ்போக் அலாய் வீல்கள் வழங்கப்படுகிறது. உள்புறத்தில் டூயல்-டோன் கேபின் பிளாக் மற்றும் பெய்க் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.



    டேஷ்போர்டு மேம்படுத்தப்பட்டு புதிய சென்டர் கன்சோல், மிதக்கும் வகையிலான டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. 3-ஸ்போக் ஸ்டீரிங் வீல் ஆடியோ மற்றும் இதர கன்ட்ரோல்களை கொண்டுள்ளது. இத்துடன் 3-பாட் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் கொண்டிருக்கிறது.

    புதிய ஆஸ்பையர் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 1.2 லிட்டர், 3-சிலிண்டர் பெட்ரோல் அல்லது 1.5 லிட்டர், 4-சிலிண்டர் டீசல் பவர் யூனிட் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இதே இன்ஜின் ஆப்ஷன்கள் ஃப்ரீஸ்டைல் மாடலில் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் டிரான்ஸ்மிஷன் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படலாம். 
    2020 ஃபோர்டு மஸ்டாங் ஷெல்பி GT500 சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் இணையத்தில் பதிவிடப்பட்டுள்ளன.
    புதுடெல்லி:

    2020 ஃபோர்டு மஸ்டாங் ஷெல்பி GT500 புதிய புகைப்படங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. ஃபோர்டு இதுவரை வெளியிட்டதில் GT500 மிகவும் சக்திவாய்ந்த மாடலாக இருக்கும்.

    புதிய 2020 ஃபோர்டு மஸ்டாங் ஷெல்பி GT500 ஷெவர்லே கேம்ரோ ZL1 1LE மற்றும் டாட்ஜ் சேலெஞ்சர் ஹெல்கேட் மாடல்களுக்கு போட்டியாக அமையும். ஃபோர்டு மஸ்டாங் ஷெல்பி GT500 சூப்பர்சார்ஜ் செய்யப்பட்ட 5.2 லிட்டர் வி8 இன்ஜின் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    இந்த இன்ஜின் 700பிஎஸ் செயல்திறன் கொண்டிருக்கும் என்றும் GT500 மோட்டார் வழக்கமான 90-டிகிரி கிரான்க்ஷிஃப்ட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. GT350 மாடலில் ஐரோப்பிய ஃபிளாட்-பிளேன் கிரான்க்ஷேஃப்ட் 5.2 லிட்டர் வி8 இன்ஜின் வழங்கப்பட்டு இருந்தது.



    புகைப்படம்: நன்றி caranddriver

    புதிய ஃபோர்டு மஸ்டாங் ஷெல்பி GT500 மாடலில் ஃபோர்டு சமீபத்தில் அறிமுகம் செய்த 10-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுமா அல்லது 7-ஸ்பீடு டிசிடி டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.

    சமீபத்தில் ஃபோர்டு மஸ்டாங் ஷெல்பி GT500 சோதனை செய்யப்பட்டதில் புதிய கார் நீல நிறம் மற்றும் டூயல் வைட் ரேசிங் ஸ்டிரைப்களை கொண்டிருப்பது தெரியவந்தது. புதிய டீசர் மற்றும் ஸ்பை படங்களில் ஷெல்பி GT500 ஹூட் பெரிய வென்ட் மற்றும் ஃபென்டர்களை கொண்டிருக்கிறது.

    இத்துடன் இம்போசிங் கிரில் மற்றும் முன்பக்கம் பெரிய ஸ்ப்லிட்டர் கொண்டிருக்கிறது. இதுவரை வெளியாகி இருக்கும் ஸ்பை படங்கலில் மிகவும் கவர்ச்சிகர ஃபென்டர்கள் மற்றும் தலைசிறந்த வடிவமைப்பு காரின் தோற்றத்தை மேம்படுத்துகிறது.
    ஃபோர்டு இகோஸ்ப்ரோர்ட் காம்பேக்ட் எஸ்யுவி மாடலின் டாப் என்ட் வேரியன்ட் மிக விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    ஃபோர்டு இகோஸ்போர்ட் 2018 காம்பேக்ட் எஸ்யுவி மாடலின் டாப்-என்ட் வேரியன்ட் டைட்டானியம் எல் பெயரில் மே 14-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அறிமுகம் செய்யப்பட்டதும் டெமோ கார்கள் கிடைக்கும் என்றும் புதிய இகோஸ்போர்ட் டைட்டானியம் எஸ் விநியோகஸ்தர்களுக்கு அனுப்பப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

    புதிய மாடலில் 1.0 லிட்டர் இகோபூஸ்ட் டர்போ-பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படும் என்றும் இந்த இன்ஜின் 124 பிஎஸ் மற்றும் 170 என்எம் டார்கியூ செயல்திறன் வழங்கும் என கூறப்படுகிறது. இதன் 1.5 லிட்டர் டிராகன் டீசல் இன்ஜின் எஸ் மாடலிலும், சிக்னேச்சர் எடிஷன் மாடலில் 1.5 லிட்டர் டிராகன் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய இன்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    இகோஸ்போர்ட் எஸ் மற்றும் சிக்னேச்சர் எடிஷன் மாடலில் 17 இன்ச் அலாய் வீல், சர்வதேச மாடல்களில் வழங்கப்பட்டதை போன்ற வடிவமைப்பு மற்றும் எலெக்ட்ரிக் சன்ரூஃப் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இகோஸ்போர்ட் டைட்டானியம் எஸ் மாடலில் ஸ்மோக்டு HID ஹெட்லேம்ப் மற்றும் ஃபாக் லேம்ப்கள் வழங்கப்படுகிறது. 

    இதன் ரூஃப் கருப்பு நிறத்திலும், முன்பக்க கிரில் டார்க் ஃபினிஷ் செயய்ப்பட்டுள்ளது. உள்புறம் டைட்டானியம் எஸ் மாடலில் 4.2 இன்ச் அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், சீட் மற்றும் டோர் ட்ரிம்களில் ஆரஞ்சு ஹைலைட்கள் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் உள்புறத்துக்கு ஏற்ப எஸ் பேட்ஜிங், புதிய சேட்டின் ஆரஞ்சு நிற பெயின்ட் செய்யப்படுகிறது.

    புதிய மாடல் அறிமுகம் செய்யப்படும் நிலையில், டைட்டானியம் பிளஸ் வேரியன்ட்-இல் 17 இன்ச் வீல்கள் நீக்கப்பட்டு 16 இன்ச் வீல்கள் வழங்கப்படும். இகோஸ்போர்ட் சிக்னேச்சர் எடிஷன் மாடலில் ஸ்பாயிலர், புளு ட்ரிம், சீட் ஸ்டிட்சிங் டீடெயில், இஎஸ்சி மற்றும் ஹில் அசிஸ்ட் (HLA) உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படுகிறது. 

    இந்தியாவில் புதிய ஃபோர்டு இகோஸ்போர்ட் டாடா நெக்சன், ஹூன்டாய் கிரெட்டா மற்றும் மாருதி சுசுகி விடாரா பிரெஸ்ஸா மாடல்களுக்கு போட்டியாக அமையும்.
    ×