search icon
என் மலர்tooltip icon

    கார்

    உபர்
    X
    உபர்

    கட்டண உயர்வை அறிவித்த பிரபல நிறுவனம்- இனி கார், ஆட்டோவில் பயணிப்பவர்களுக்கு சிக்கல் தான்..

    டெல்லியை தொடர்ந்து சென்னை, பெங்களூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் விலை உயர்வு அறிவிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
    மக்கள் பயணிப்பதற்கு உபர், ஓலா உள்ளிட்ட நிறுவனங்கள் வாகன உரிமையாளர்களுடன் இணைந்து சேவையை வழங்கி வருகின்றன.

    இந்நிலையில் உபர் நிறுவனம் தனது பயணிகளுக்கு கட்டணத்தில் 12 சதவீதத்தை உயர்த்திள்ளது. டெல்லி-என்சிஆர் பகுதியில் தற்போது இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணத்தினால் வாகன உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதால் இந்த கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் பெட்ரோ, டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப கட்டணங்கள் மாற்றி அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

    டெல்லியை தொடர்ந்து சென்னை, பெங்களூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் விலை உயர்வு அறிவிக்கப்படலாம் என்றும், ஓலா உள்ளிட்ட பிற நிறுவனங்களும் விலையை உயர்த்தலாம் என கூறப்படுகிறது.
    Next Story
    ×