search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஃபோர்டு"

    • ஃபோர்டு எவரஸ்ட் பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • டொயோட்டா ஹிலக்ஸ், இசுசு டி மேக்ஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    ஃபோர்டு நிறுவனத்தின் முற்றிலும் புதிய ரேஞ்சர் மாடல் இந்தியாவில் டெஸ்டிங் செய்யப்படுகிறது. இந்த கார் டிரக் ஒன்றின் மீது எடுத்துச் செல்லப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இத்துடன் ஃபோர்டு என்டேவர் மாடலும் காணப்பட்டது. இதே கார் சர்வதேச சந்தையில் ஃபோர்டு எவரஸ்ட் பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இரு மாடல்களும் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் காணப்பட்டுள்ளது. ஃபோர்டு நிறுவனத்தின் ரேஞ்சர் மாடல் உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்படும் பிரபல எஸ்.யு.வி. ஆகும். இந்த மாடல் டொயோட்டா ஹிலக்ஸ் மற்றும் இசுசு டி மேக்ஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

     


    இந்த எஸ்.யு.வி. பெட்ரோல், டீசல் என இருவித பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த காரின் ரேப்டர் பெர்ஃபார்மன்ஸ் வேரியண்டில் உள்ள 3.0 லிட்டர் வி6 பெட்ரோல் என்ஜின் 288 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    ரேஞ்சர் எஸ்.யு.வி. மாடல் இதுவரை இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டதே இல்லை. எனினும், இந்த மாடலின் தோற்றம் கிட்டத்தட்ட ஃபோர்டு என்டேவர் எஸ்.யு.வி.-யை போன்றே காட்சியளிக்கிறது. ஒருவேளை இந்த மாடல் இந்திய சந்தையில் அறிமுகமாகும் பட்சத்தில் டொயோட்டா ஹிலக்ஸ் மற்றும் இசுசு டி மேக்ஸ் மாடல்களுக்கு போட்டியை ஏற்படுத்தும்.

    • கார் டிசைனுக்கு காப்புரிமை கோரியுள்ளது.
    • வாகனங்களை இறக்குமதி செய்ய அரசு அனுமதி.

    சென்னையில் உள்ள ஆலையை விற்பனை செய்யும் முடிவை மாற்றிக் கொண்டது, புதிய வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்புகளை வெளியிட்டது மற்றும் என்டேவர் பெயருக்கு காப்புரிமை கோரி விண்ணப்பித்து இருப்பது உள்ளிட்டவை ஃபோர்டு நிறுவனம் மீண்டும் இந்திய சந்தையில் கால் பதிக்கலாம் என்பதை உணர்த்தும் வகையில் தான் உள்ளது.

    முன்னதாக இந்திய சந்தையில் இருந்து வெளியேறுவதாக ஃபோர்டு நிறுவனம் அறிவித்து இருந்தது. எனினும், ஃபோர்டு மீண்டும் இந்தியாவில் தனது வாகனங்களை விற்பனை செய்யலாம் என்று தகவல்கள் வெளியாகின. அந்த வரிசையில், ஃபோர்டு நிறுவனம் தற்போது தாய்லாந்து போன்ற சர்வதேச சந்தைகளில் ஃபோர்டு எவரஸ்ட் என்ற பெயரில் விற்பனை செய்து வரும் கார் டிசைனுக்கு காப்புரிமை கோரியுள்ளது.

     


    2022-ம் ஆண்டு முதல் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருவதால் இந்த எஸ்.யு.வி. மாடல் இந்திய சந்தையில் புதிதான ஒன்றாகவே இருக்கும். இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் ஃபோர்டு நிறுவனம் புதிய என்டேவர் மாடலை சென்னையில் உள்ள ஆலையில் அசெம்பில் செய்ய திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

    தற்போது ஆண்டிற்கு 2500 யூனிட்கள் வரை இந்தியாவுக்கு வாகனங்களை இறக்குமதி செய்ய அரசு அனுமதி வழங்கி வருகிறது. இதன் காரணமாக ஃபோர்டு நிறுவனம் விரைவில் தனது என்டேவர் மாடலை இந்தியாவில் இறக்குமதி செய்யலாம் என்று கூறப்படுகிறது. என்டேவர் மாடலுக்கு இந்தியாவில் நேரடி போட்டியை ஏற்படுத்தும் மாடலாக டொயோட்டா ஃபார்ச்சூனர் உள்ளது.

     


    இந்தியாவில் டொயோட்டா ஃபார்ச்சூனர் மாடலின் டாப் எண்ட் விலை ரூ. 60 லட்சம் ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நேரடியாக இறக்குமதி செய்யப்படும் என்டேவர் மாடல் ஃபார்ச்சூனருக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையிலேயே இருக்கும். முன்னதாக ஃபோர்டு நிறுவனமும் நேரடியாக இறக்குமதி செய்து வாகனங்கள் விற்பனை செய்ய திட்டமிருப்பதாகவும் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • ஆலைகளில் கார் உற்பத்தி படிப்படியாக நிறுத்தப்பட்டது.
    • ஃபோர்டு ஆலையை டாடா மோட்டார்ஸ் விலைக்கு வாங்கியது.

    அமெரிக்காவைச் சேர்ந்த ஃபோர்டு நிறுவனம், இந்தியாவில் சென்னை மறைமலை நகர் மற்றும் குஜராத்தில் உள்ள சனந்த் என இரண்டு இடங்களில் தனது தொழிற்சாலையில் கார் தயாரித்து வந்தது. இந்தியாவில் ஃபோர்டு நிறுவனம் கடும் நஷ்டத்தை சந்தித்ததால், ஆலைகளில் கார் உற்பத்தி படிப்படியாக நிறுத்தப்பட்டது. இனிமேல் இந்தியாவில் உள்ள தங்களது இரண்டு தொழிற்சாலைகளிலும் கார்கள் தயாரிப்பதில்லை என்கிற முடிவுக்கு வந்தது ஃபோர்டு.

    சென்னை மறைமலை நகர் தொழிற்சாலையை ஒப்பிடுகையில், குஜராத்தில் உள்ள தொழிற்சாலை மிகவும் நவீனமானது. குஜராத் மாநிலம் சனந்தில் உள்ள ஃபோர்டு ஆலையை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 726 கோடி ரூபாய்க்கு வாங்கியது. மறைமலை நகரில் இருக்கிற ஆலையை வாங்க மஹிந்திரா நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியது.

     


    எனினும், மஹிந்திரா மற்றும் ஃபோர்டு இடையே சுமூக முடிவு எட்டப்படவில்லை. இதனைத்தொடர்ந்து, ஜே.எஸ்.டபிள்யு. குழுமம் மற்றும் ஃபோர்டு இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்ட்டது. இந்த நிலையில், அதனையும் ஃபோர்டு நிறுவனம் ரத்து செய்தது.

    இந்நிலையில், சென்னை ஆலையை விற்பனை செய்ய ஃபோர்டு நிறுவனத்துக்கு திட்டம் இல்லை என்றும் ஆலையை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஃபோர்டு தொழிற்சாலையை, மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் ஆலையாக மாற்ற முடியுமா என்பதை ஆராய்வதற்காக ஃபோர்டு நிறுவனத்துடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

    தற்போது மக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த தொடங்கியுள்ள காரணத்தால் இந்தியாவில் ஒரு ஆலையை ஏற்றுமதி தளமாக பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்கிறது ஃபோர்டு நிறுவனம். எனவே, இந்தியாவில் போர்ஃடு நிறுவனம் மீண்டும் போல்டாக செயல்பட உள்ளது.

    • கேரளா மாநில நுகர்வோர் நீதிமன்றம் வாடிக்கையாளர் ஒருவருக்கு ரூ. 3 லட்சம் இழப்பீடு கொடுக்க தீர்ப்பு வழங்கி உள்ளது.
    • ஃபோர்டு ஃபியஸ்டா மாடல் விளம்பர்த்தில் குறிப்பிடப்பட்ட மைலேஜ் கொடுக்கவில்லை என வாடிக்கையாளர் வழக்கு தொடர்ந்தார்.

    புதிதாக கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் முதலில் கருத்தில் வைப்பது அதன் மைலேஜ் எவ்வளவு என்பது மட்டும் தான். கார் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கும் மைலேஜ் மற்றும் அன்றாட பயன்பாட்டில் கார்கள் கொடுக்கும் மைலேஜ் என இரண்டிற்கும் அதிக வேறுபாடு உண்டு என்பது நம்மில் பலரும் அறிந்ததே.

    எனினும், கேரளாவை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் தனது ஃபோர்டு ஃபியஸ்டா கார் அந்நிறுவனம் விளம்பரத்தில் குறிப்பிட்ட மைலேஜை வழங்கவில்லை என நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கில் வாடிக்கையாளருக்கு ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

    இந்திய சந்தையில் ஃபோர்டு ஃபியஸ்டா காரின் விற்பனை 2015 முதலை நிறுத்தப்பட்டு விட்டது. இந்த காரில் 1.4 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது தவிர 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜினும் இதே காரில் வழங்கப்பட்டு இருக்கிறது. 2011 ஆண்டு வாக்கில் ஆட்டோமொபைல் செய்திகளை வெளியிடும் நாளேடு காரின் பெட்ரோல் மற்றும் டீசல் வெர்ஷன்களை ஓட்டி பார்த்தது.

    அதில் இந்த கார் லிட்டருக்கு 32 கிலோமீட்டர் வரை மைலேஜ் வழங்கி இருக்கிறது. மிட்-சைஸ் செடான் மாடலில் இவ்வளவு மைலேஜ் கிடைப்பது மிகவும் ஆச்சரியமான விஷயம் ஆகும். இதே தகவலை விளம்பரமாக வெளியிட ஃபோர்டு முடிவு செய்தது. அதன்படி இந்த செடான் மாடல் லிட்டருக்கு 32.38 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என்ற விளம்பரங்கள் வெளியாகின. இந்த விளம்பரம் தற்போது புது பிரச்சினையை ஏற்படுத்தி விட்டது.

    இந்த வழக்கை தொடர்ந்த வாடிக்கையாளர் சௌதாமினி பிபி, கார் லிட்டருக்கு 32.38 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என்ற காரணத்தால் தான் இந்த காரை தான் வாங்கியதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் காரை வாங்கியதில் இருந்து அது அத்தனை மைலேஜ் கொடுக்கவில்லை என்பதை அறிந்து கொள்கிறார். இதைத் தொடர்ந்து அவர் நீதிமன்றம் சென்றார். இந்த கார் லிட்டருக்கு 16 கிலோமீட்டர் மைலேஜ் மட்டுமே வழங்குகிறது என அவர் மேலும் தெரவித்தார்.

    வழக்கு விசாரணையின் போது இந்த கார் விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டு இருந்ததை விட 40 சதவீதம் வரை குறைந்த மைலேஜ் வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் கார் உற்பத்தியாளர் ஃபோர்டு இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் விற்பனையாளர் கைராளி ஃபோர்டு கார் விற்பனைக்காக அதிக மைலேஜ் வழங்குவதாக விளம்பரம் கொடுத்தது தவறு செய்துள்ளன என்று நீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது.

    மேலும் இந்த விவகாரத்தில் ஏமாற்றப்பட்ட வாடிக்கையாளருக்கு கார் உற்பத்தியாளர் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரமும், விற்பனையாளர் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரமும் இழப்பீடாக கேரளா நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சட்டப்போராட்டம் நடத்திய வாடிக்கையாளருக்கு ரூ. 10 ஆயிரம் கூடுதலாக வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ×