என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ford"

    • ஆலைகளில் கார் உற்பத்தி படிப்படியாக நிறுத்தப்பட்டது.
    • ஃபோர்டு ஆலையை டாடா மோட்டார்ஸ் விலைக்கு வாங்கியது.

    அமெரிக்காவைச் சேர்ந்த ஃபோர்டு நிறுவனம், இந்தியாவில் சென்னை மறைமலை நகர் மற்றும் குஜராத்தில் உள்ள சனந்த் என இரண்டு இடங்களில் தனது தொழிற்சாலையில் கார் தயாரித்து வந்தது. இந்தியாவில் ஃபோர்டு நிறுவனம் கடும் நஷ்டத்தை சந்தித்ததால், ஆலைகளில் கார் உற்பத்தி படிப்படியாக நிறுத்தப்பட்டது. இனிமேல் இந்தியாவில் உள்ள தங்களது இரண்டு தொழிற்சாலைகளிலும் கார்கள் தயாரிப்பதில்லை என்கிற முடிவுக்கு வந்தது ஃபோர்டு.

    சென்னை மறைமலை நகர் தொழிற்சாலையை ஒப்பிடுகையில், குஜராத்தில் உள்ள தொழிற்சாலை மிகவும் நவீனமானது. குஜராத் மாநிலம் சனந்தில் உள்ள ஃபோர்டு ஆலையை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 726 கோடி ரூபாய்க்கு வாங்கியது. மறைமலை நகரில் இருக்கிற ஆலையை வாங்க மஹிந்திரா நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியது.

     


    எனினும், மஹிந்திரா மற்றும் ஃபோர்டு இடையே சுமூக முடிவு எட்டப்படவில்லை. இதனைத்தொடர்ந்து, ஜே.எஸ்.டபிள்யு. குழுமம் மற்றும் ஃபோர்டு இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்ட்டது. இந்த நிலையில், அதனையும் ஃபோர்டு நிறுவனம் ரத்து செய்தது.

    இந்நிலையில், சென்னை ஆலையை விற்பனை செய்ய ஃபோர்டு நிறுவனத்துக்கு திட்டம் இல்லை என்றும் ஆலையை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஃபோர்டு தொழிற்சாலையை, மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் ஆலையாக மாற்ற முடியுமா என்பதை ஆராய்வதற்காக ஃபோர்டு நிறுவனத்துடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

    தற்போது மக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த தொடங்கியுள்ள காரணத்தால் இந்தியாவில் ஒரு ஆலையை ஏற்றுமதி தளமாக பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்கிறது ஃபோர்டு நிறுவனம். எனவே, இந்தியாவில் போர்ஃடு நிறுவனம் மீண்டும் போல்டாக செயல்பட உள்ளது.

    • கார் டிசைனுக்கு காப்புரிமை கோரியுள்ளது.
    • வாகனங்களை இறக்குமதி செய்ய அரசு அனுமதி.

    சென்னையில் உள்ள ஆலையை விற்பனை செய்யும் முடிவை மாற்றிக் கொண்டது, புதிய வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்புகளை வெளியிட்டது மற்றும் என்டேவர் பெயருக்கு காப்புரிமை கோரி விண்ணப்பித்து இருப்பது உள்ளிட்டவை ஃபோர்டு நிறுவனம் மீண்டும் இந்திய சந்தையில் கால் பதிக்கலாம் என்பதை உணர்த்தும் வகையில் தான் உள்ளது.

    முன்னதாக இந்திய சந்தையில் இருந்து வெளியேறுவதாக ஃபோர்டு நிறுவனம் அறிவித்து இருந்தது. எனினும், ஃபோர்டு மீண்டும் இந்தியாவில் தனது வாகனங்களை விற்பனை செய்யலாம் என்று தகவல்கள் வெளியாகின. அந்த வரிசையில், ஃபோர்டு நிறுவனம் தற்போது தாய்லாந்து போன்ற சர்வதேச சந்தைகளில் ஃபோர்டு எவரஸ்ட் என்ற பெயரில் விற்பனை செய்து வரும் கார் டிசைனுக்கு காப்புரிமை கோரியுள்ளது.

     


    2022-ம் ஆண்டு முதல் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருவதால் இந்த எஸ்.யு.வி. மாடல் இந்திய சந்தையில் புதிதான ஒன்றாகவே இருக்கும். இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் ஃபோர்டு நிறுவனம் புதிய என்டேவர் மாடலை சென்னையில் உள்ள ஆலையில் அசெம்பில் செய்ய திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

    தற்போது ஆண்டிற்கு 2500 யூனிட்கள் வரை இந்தியாவுக்கு வாகனங்களை இறக்குமதி செய்ய அரசு அனுமதி வழங்கி வருகிறது. இதன் காரணமாக ஃபோர்டு நிறுவனம் விரைவில் தனது என்டேவர் மாடலை இந்தியாவில் இறக்குமதி செய்யலாம் என்று கூறப்படுகிறது. என்டேவர் மாடலுக்கு இந்தியாவில் நேரடி போட்டியை ஏற்படுத்தும் மாடலாக டொயோட்டா ஃபார்ச்சூனர் உள்ளது.

     


    இந்தியாவில் டொயோட்டா ஃபார்ச்சூனர் மாடலின் டாப் எண்ட் விலை ரூ. 60 லட்சம் ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நேரடியாக இறக்குமதி செய்யப்படும் என்டேவர் மாடல் ஃபார்ச்சூனருக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையிலேயே இருக்கும். முன்னதாக ஃபோர்டு நிறுவனமும் நேரடியாக இறக்குமதி செய்து வாகனங்கள் விற்பனை செய்ய திட்டமிருப்பதாகவும் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • ஃபோர்டு எவரஸ்ட் பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • டொயோட்டா ஹிலக்ஸ், இசுசு டி மேக்ஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    ஃபோர்டு நிறுவனத்தின் முற்றிலும் புதிய ரேஞ்சர் மாடல் இந்தியாவில் டெஸ்டிங் செய்யப்படுகிறது. இந்த கார் டிரக் ஒன்றின் மீது எடுத்துச் செல்லப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இத்துடன் ஃபோர்டு என்டேவர் மாடலும் காணப்பட்டது. இதே கார் சர்வதேச சந்தையில் ஃபோர்டு எவரஸ்ட் பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இரு மாடல்களும் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் காணப்பட்டுள்ளது. ஃபோர்டு நிறுவனத்தின் ரேஞ்சர் மாடல் உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்படும் பிரபல எஸ்.யு.வி. ஆகும். இந்த மாடல் டொயோட்டா ஹிலக்ஸ் மற்றும் இசுசு டி மேக்ஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

     


    இந்த எஸ்.யு.வி. பெட்ரோல், டீசல் என இருவித பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த காரின் ரேப்டர் பெர்ஃபார்மன்ஸ் வேரியண்டில் உள்ள 3.0 லிட்டர் வி6 பெட்ரோல் என்ஜின் 288 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    ரேஞ்சர் எஸ்.யு.வி. மாடல் இதுவரை இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டதே இல்லை. எனினும், இந்த மாடலின் தோற்றம் கிட்டத்தட்ட ஃபோர்டு என்டேவர் எஸ்.யு.வி.-யை போன்றே காட்சியளிக்கிறது. ஒருவேளை இந்த மாடல் இந்திய சந்தையில் அறிமுகமாகும் பட்சத்தில் டொயோட்டா ஹிலக்ஸ் மற்றும் இசுசு டி மேக்ஸ் மாடல்களுக்கு போட்டியை ஏற்படுத்தும்.

    • இந்திய சந்தையில் மீண்டும் கவனம் செலுத்துவதற்கு போர்டு நிறுவனம் முடிவு செய்துள்ளது.
    • தமிழ்நாட்டில் மீண்டும் ஆலையை அமைக்க மாநில அரசிடம் கடிதத்தை சமர்ப்பிப்பு.

    தமிழகத்தில் போர்ட் மோட்டார் நிறுவனம் மீண்டும் ஏற்றுமதிக்கான உற்பத்தி ஆலையை அமைக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவில் போர்டு கார் தொழிற்சாலையின் உயர் அதிகாரிகளை சந்தித்து சென்னையில் மீண்டும் கார் உற்பத்தியை தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

    அப்போது, போர்ட் உடனான 30 ஆண்டுகால கூட்டணியை மீண்டும் புதுப்பிக்கும் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்தோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

    அந்த வேண்டுகோளை ஏற்று போர்டு கார் நிறுவனம் மீண்டும் சென்னை அருகே கார் உற்பத்தியை தொடங்க உள்ளதாக தமிழக அரசிடம் கடிதம் வழங்கி உள்ளது. அதன்படி, மீண்டும் இந்திய சந்தையில் கவனம் செலுத்துவதற்கு அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

    இதற்கான முறையான அறிவிப்பு சில தினங்களில் வெளியாகும் என தெரிகிறது. இந்நிலையில், மின்சார வாகன விற்பனையுடன் இந்தியாவில் நுழைவதற்கான முயற்சிகளை போர்ட் நிறுவனம் தொடங்கியுள்ளது.

    அமெரிக்காவை சேர்ந்த முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமாக போர்ட் நிறுவனம், கடந்த 2021ம் ஆண்டில் இந்தியாவில் தனது செயல்பாடுகளை நிறுத்திக் கொண்டது.

    சென்னை மறைமலைநகர், குஜராத்தின் சனந்த் பகுதிகளில் செயல்பட்டு வந்த போர்ட் ஆலைகள் 2021ல் மூடப்பட்டன.

    இந்நிலையில், தமிழ்நாட்டில் மீண்டும் ஆலையை அமைக்க மாநில அரசிடம் கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாக போர்ட் நிறுவனம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தொழிற்சாலையை இயக்குவதற்கான இசைவு ஆணை கடந்த மார்ச் மாதத்துடன் காலாவதியானது.
    • தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் ஃபோர்டு நிறுவனம் விண்ணப்பித்து இருந்தது.

    ஃபோர்டு நிறுவனத்தின் கோரிக்கையின்படி மறைமலை நகரில் உள்ள தொழிற்சாலையை இயக்குவதற்கான இசைவு ஆணையை தமிழ்நடு மாசு கட்டுப்பாடு வாரியம் புதுப்பித்து உத்தரவிட்டுள்ளது.

    இசைவு வாணையை புதுப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் ஃபோர்டு நிறுவனம் விண்ணப்பித்து இருந்தது.

    தொழிற்சாலையை இயக்குவதற்கான இசைவு ஆணை கடந்த மார்ச் மாதத்துடன் காலாவதியானது.

    இந்நிலையில், விண்ணப்பித்த பரிசீலனை செய்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் இணைவு வாணையை 31.3.2028 வரை புதுப்பித்து அனுமதி வழங்கியுள்ளது.

    கடந்த 2021ம் ஆண்டு இந்தியாவில் தனது உற்பத்தியை ஃபோர்டு நிறுவனம் 2022ம் ஆண்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

    ஃபோர்டு இந்தியா உற்பத்தி ஆலையில் பவர்டிரெயின் உற்பத்தி மேற்கொள்ளப்பட இருக்கிறது. இந்த ஆலையில் ஒவ்வொரு ஆண்டும் மூன்று லட்சம் யூனிட்கள் உற்பத்தி செய்ய முடியும்.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டாடா பாசஞ்சர் எலெக்ட்ரிக் மொபிலிட்டி பிரிவின் கீழ் ஃபோர்டு இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து குஜராத் அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் ஃபோர்டு நிறுவனம் குஜராத் மாநிலத்தின் சனந்த் பகுதியில் வைத்து இருக்கும் ஆலையை வாங்க டாடா மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது. 

     ஃபோர்டு உற்பத்தி ஆலை

    புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி டாடா பாசஞ்சர் எலெக்ட்ரிக் மொபிலிட்டி பிரிவு ஃபோர்டு இந்தியா உற்பத்தி ஆலையின் நிலம், கட்டிடங்கள் மற்றும் வாகன உற்பத்தி ஆலையை அதில் உள்ள இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களுடன் விலைக்கு வாங்க இருக்கிறது. அதன்படி அந்த ஆலையில் பணியாற்றும் ஊழியர்களும் விரைவில் டாடா பாசஞ்சர் எலெக்ட்ரிக் மொபிலிட்டி பிரிவின் கீழ் பணியாற்றுவர்.

    எனினும், ஃபோர்டு இந்தியா நிறுவனம் தனது பவர்டிரெயின் உற்பத்தி ஆலையை தொடர்ந்து இயக்க முடிவு செய்துள்ளது. இதற்காக டாடா பாசஞ்சர் எலெக்ட்ரிக் மொபிலிட்டி பிரிவிடம் இருந்து ஆலையை லீசுக்கு எடுத்து பயன்படுத்த இருக்கிறது. வரும் மாதங்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த ஆலையில் புது இயந்திரங்களை நிறுவி ஆலையின் உற்பத்தி திறனை ஆண்டுக்கு மூன்று லட்சமாக உயர்த்துகிறது. 
    ×