என் மலர்
- மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
- மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
சிவகங்கை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திற னாளிக ளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற மாற்றுத்தி றனாளிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி கலெக்டர் மதுசூதன் ரெட்டியிடம் மனு வழங்கினர்.
இந்த கூட்டத்தில் 29 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.91 லட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்களை கலெக்டர் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களின் கீழ், அவர்களை பயன்பெறச் செய்து, உரிய பலன்களும் அவர்களுக்கு வழங்கும் பணி முனைப்புடன் நடைபெற்று வருகிறது. இதுதவிர, தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பங்களிப்புடனும், பல்வேறு உதவி உபகரணங்கள் வழங்கிடவும், மாவட்ட நிர்வாகத்தினால் நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டு, மாற்றுத்தி றனாளி களுக்கான பல்வேறு வகையான உதவி உபகர ணங்களும் வழங்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், இன்றையதினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளி களுக்கான சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், தேசிய அடையாள அட்டை வேண்டுதல், ருனுஐனு பதிவு செய்தல், ஆதார் அட்டை பதிவு செய்தல், மாண்புமிகு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு மேற்கொள்ளுதல், பிற துறைகளின் செயல்படுத்தப்படும் திட்டங்களின் பயன்கள், உதவி உபகரணங்கள், வங்கிக்கடனுதவிகள், வேலைவாய்ப்பு பயிற்சிகள், பராமரிப்பு உதவித்தொகை மற்றும் மாதாந்திர உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான 71 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, நேர்முக உதவியாளர் ரத்தினவேல், தனித்துணை கலெக்டர் சாந்தி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியானார்.
- வச்சக்காரபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
சிவகாசி அருகே உள்ள பூலாவூரணியை சேர்ந்தவர் மகாலிங்கம். இவர் சிவகாசியில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவரது 2-வது மகன் மகேந்திரன்(வயது34), தந்தைக்கு வியாபாரத்தில் உதவியாக இருந்து வந்தார். நேற்று வீட்டுக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் மகேந்திரன் கடைக்கு வந்து கொண்டிருந்தார். சிவகாசி-விளாம்பட்டி ரோட்டில் வந்தபோது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதியது. இதில் படுகாயமடைந்த மகேந்திரன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் அருகே உள்ள துலுக்கப்பட்டியை சேர்ந்தவர் தெய்வக்கனி(வயது45). பட்டாசு தொழிலாளியான இவர் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றார். அப்போது திடீரென தெய்வக்கனி மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி தெய்வக்கனி இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி சங்கரேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் வச்சக்காரபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மேலூர் தற்காலிக பஸ் நிலையத்தை அரசு பஸ்கள் புறக்கணித்தன.
- செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலூர்
தமிழகம் முழுவதும் பெரிய மற்றும் சிறிய நகரங்களில் உள்ள பழைய பஸ் நிலையங்களை இடித்துவிட்டு நவீன முறையில் புதிய பஸ் நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அதன்படி மதுரை மாவட்டத்தின் முக்கிய பகுதியாக விளங்கும் மேலூரில் உள்ள பழைய பஸ் நிலையத்தை இடித்து ரூ. 7.42 கோடி மதிப்பில் புதிய பஸ் நிலையம் கட்ட தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்தது.
இதையொட்டி பழைய பஸ் நிலையத்தில் இருந்த கட்டிடங்களை இடிக்கும் பணி நடைபெற்றது. இந்த பணிகள் முடிவுற்ற நிலையில் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் விரைவில் தொடங்க உள்ளன.கட்டுமான பணிகள் நடந்து முடியும் வரை மேலூர் பகுதியில் 4 இடங்களில் அரசு பஸ்கள் நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்கு பொதுமக்களும் வியாபாரிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 4 இடங்களில் பஸ்கள் நிறுத்தப்படுவதால் பொதுமக்களுக்கு வீண் அலைச்சலும் சிரமமும் ஏற்படும் என கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து மேலூர் நகர் மன்ற தலைவர் முகமது யாசின் தலைமையில் பொதுமக்கள், காவல்துறையினர், போக்கு வரத்து அதிகாரிகள் பங்கேற்ற கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.
இதில் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் முடியும் வரை மேலூர்- அழகர் கோவில் ரோட்டில் உள்ள இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான சிவன் கோவில் காலி இடத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.இந்த தற்காலிக பஸ் நிலையம் நேற்று (17-ந் தேதி) முதல் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து சிவன் கோவில் திடலில் முன்னேற்பாடு பணிகளும் செய்யப்பட்டிருந்தன. ஆனால் தற்காலிக பஸ் நிலையத்தில் எந்த ஒரு அரசு பஸ்களும் வந்து செல்லவில்லை. மாறாக மேலூர் நகர் பகுதியில் உள்ள மெயின் ரோட்டிலேயே ஆங்காங்கே பயணிகளை ஏற்றி இறக்கி அரசு பஸ்கள் சென்றன.
தற்காலிக பஸ் நிலையம் செயல்படும் என நம்பி அங்கு வந்த பொதுமக்கள் பஸ்கள் ஏதும் வராததால் மிகுந்த ஏமாற்றத்துடன் மீண்டும் பழைய பஸ் நிலைய பகுதிக்கு சென்று அரசு பஸ்களில் ஏறி பயணம் செய்தனர்.
நேற்று இரவு வரை எந்த ஒரு அரசு பஸ்சும் தற்காலிக பஸ் நிலையத்திற்குள் வரவில்லை. இதனால் சிவன் கோவில் திடல் வெறிச்சோடி காணப்பட்டது. மாறாக தனியார் வாகனங்கள் சில அங்கு நிறுத்தப்பட்டிருந்தன. நகர் மன்ற தலைவர், போலீசார் போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பேசி தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால் அதனை பொருட்படுத்தாமல் அரசு பஸ்கள் வழக்கம்போல் நகர் பகுதியில் நின்று சென்றது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி தற்காலிக பஸ் நிலையம் முழுமையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- விருதுநகரில் மாணவர்கள் விளையாட்டு மையங்களில் சேர தகுதி போட்டிகள் 24-ந்தேதி நடக்கிறது.
- மாவட்ட விளையாட்டு அரங்கில் நடக்கிறது.
விருதுநகர்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பள்ளிகளில் பயி லும் மாணவ-மாணவிகள் விளையாட்டுத்துறையில் சாதனைகள் புரிவதற்கு ஏற்ப விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் மற்றும் முதன்மை நிலை விளையாட்டு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
மாணவர்களுக்கான விளையாட்டு விடுதிகள் மதுரை, திருச்சி, திருநெல் வேலி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், கடலூர், தஞ்சாவூர், அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், ஊட்டி, விழுப்புரம், சென்னை, நெய்வேலி மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.
மாணவிகளுக்கான விளையாட்டு விடுதிகள் ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தரும புரி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் செயல் பட்டு வருகின்றன.
மாணவர்களுக்கான முதன்மை நிலை விளை யாட்டு மைய விடுதிகள் சென்னை, ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம், திருச்சி (ஸ்ரீரங்கம்) மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.இதேபோல் மாணவி களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி கள் சென்னை, ஜவஹர் லால் நேரு விளையாட்டு அரங்கம், மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.
மாணவ- மாணவி களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி வேலூர் சத்தூவச்சாரியில் செயல்பட்டு வருகிறது.
மேற்காணும் விளை யாட்டு விடுதிகளில் உள்ள விளையாட்டுக்களில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்கு 7-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு, 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு சேர்க்கை நடைபெ றும்.
முதன்மை நிலை விளை யாட்டு மையங்களில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்கு 6-ம் வகுப்பு, ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு ஆகிய வகுப்புகளில் சேர்க்கை நடைபெறும் மாவட்ட அளவிலான தேர்வுப் போட்டிகள் வருகிற 24-ந்தேதி காலை 7 மணிக்கு விருதுநகர் மாவட்ட விளை யாட்டு அரங்கில் நடக்கிறது.
- துப்புரவு பணியாளர்கள் முற்றுகை போராட்டம் நடந்தது.
- தகாத வார்த்தை பேசியதாக கூறப்படுகிறது.
மதுரை
மதுரை மாநகராட்சி 67-வது வார்டு விராட்டிபத்து பகுதியில் 15-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் தினமும் பணி செய்து வருகின்றனர். இந்த நிலையில் கவுன்சிலர் நாகநாதன், துப்புரவு பணி செய்யும் பெண் ஒருவரை தாக்கி, தகாத வார்த்தை பேசியதாக கூறப்படுகிறது. இதனை மற்ற தூய்மை பணியாளர்கள் தட்டிக்கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட துப்புரவு பணியாளரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று துப்புரவு பணியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதற்கு நாகநாதன் மறுத்து விட்டார். இதைத்தொடர்ந்து துப்புரவு பணியாளர்கள் இன்று பணிக்கு செல்லாமல் கவுன்சிலர் நாகநாதன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
- மதுரையில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நடந்தது.
- விளையாட்டு விடுதி மேலாளர் கண்ணன் நன்றி கூறினார்.
மதுரை
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மதுரை மாவட்ட பிரிவின் சார்பில் மாவட்ட அளவிலான கோடை கால பயிற்சி முகாம் ரேஸ்கோர்ஸ் எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கில் 15 நாட்கள் நடந்தது. இதில் தடகளம், கூடைப்பந்து, கால்பந்து.
கையுந்துபந்து, வளைகோல்பந்து, கைப்பந்து ஆகிய விளையாட்டுகளில் இலவசமாக நடத்தப்பட்டது. பயிற்சி முகாமில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகளுக்கு காலை முட்டையும், மாலையில் பிஸ்கெட், கண்டல் வழங்கப்பட்டது. பயிற்சி முகாமின் நிறைவு விழா நடந்தது.
மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, வரவேற்றார். 6-வது பட்டாலியன் தமிழ்நாடு சிறப்பு காவல்படை காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். முன்னாள் மண்டல முதுநிலை மேலாளர் முருகன், மதுரை மாவட்ட நீச்சல் கழக செயலாளர் கண்ணன், மண்டல இந்திய வங்கி முதன்மை மேலாளர் அண்ணாமலை, இந்தியன் வங்கியின் மாவட்ட கோர்ட்டு கிளை மேலாளர் பாலகுமார், முன்னாள் மாவட்ட விளையாட்டு அலுவலர் பிரகாசம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று 202 வீரர், வீராங்கனைகளுக்கு விளையாட்டு சீருடை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர். விளையாட்டு விடுதி மேலாளர் கண்ணன் நன்றி கூறினார்.
- இளம்பெண் திடீரென மாயமானார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாஅமராவதியை தேடி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கண்மாய்பட்டி தெருவை சேர்ந்தவர் ஜெயபாலன். இவரது மகள் ராஜாஅமராவதி(19). பேஷன் டிசைனிங் படித்துவிட்டு வீட்டில் இருந்தார். இந்த நிலையில் வெளியே சென்று வருவதாக கூறி சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் ேதடிப்பார்த்தும் விசாரித்து கண்டுபிடிக்க முடியவில்ைல.
இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் ஜெயபாலன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாஅமராவதியை தேடி வருகின்றனர்.
- அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 6 பேரை கைது செய்தனர்.
- பட்டாசு ஆலை உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்தது தெரியவந்தது.
விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள பட்டம்புதூர் பகுதியில் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சூலக்கரை இன்ஸ்பெக்டர் மாரியப்பன் மற்றும் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்று கண்காணித்தனர்். அங்குள்ள பட்டாசு ஆலை ஒன்றில் சோதனை செய்தனர். அதில் அந்த ஆலை உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அங்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சிவகாசியை சேர்ந்த ஆலை உரிமையாளர் ராஜமாணிக்கம்(57), ேபார்மேன் ஜெகதீசுவரன்(31) மற்றும் பணியாளர்கள் பாலமுருகன்(42), கருப்பசாமி(37), ரவிக்குமார்(34) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
- மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து; புரோட்டா மாஸ்டர் பலியானார்.
- அருப்புக்கோட்டை டவுன் போலீசில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்தி வருகிறது.
அருப்புக்கோட்டை
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சிலோன் காலனியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது52). இவர் அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் புரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்றுஇரவு வேலை முடிந்த பிறகு தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு புறப்பட்டார். எதிர்திசையில் அதே பகுதியில் வெள்ளக் கோட்டை பகுதியைச் சேர்ந்த ஓட்டல் ஊழியர் முனியசாமி(31) பணி முடித்து பாளையம் பட்டியில் இருந்து வந்து கொண்டிருந்தார். பெரிய கடை வீதியில் 2 மோட்டார் சைக்கிள்களும் வந்த போது நேருக்கு நேராக பயங்கரமாக மோதிக் கொண்டன. இதில் பலத்த காயமடைந்த வேல்முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
முனியசாமி லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். தகவ லறிந்தத அருப்புக்கோட்டை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முனியசாமியை சிகிச்சை க்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வேல்முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக அனுப்பி வைத்தனர்.
மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் புரோட்டா மாஸ்டர் இறந்தது குறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்தி வருகிறது.
- அனுமதியின்றி பட்டாசு திரி தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- 158 குரோஸ் பட்டாசு திரி பறிமுதல்; 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள இ.மீனாட்சிபுரம் பகுதியில் அனுமதியின்றி பட்டாசு திரி தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள பாலுசாமி(54) என்பவரது வீட்டில் 38 குரோஸ் பட்டாசு திரிகளும், பாலசுப்பிரிமணியின்(45) வீட்டில் 40 குரோஸ் பட்டாசு திரிகளும், காளிராஜ்(48) வீட்டில் 42 குரோஸ் பட்டாசு திரிகளும், சரவணன்(56) வீட்டில் 38 குரோஸ் பட்டாசு திரிகளும் பறிமுதல் செய்யப்பட்டது. ேபாலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர்.
- பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.
- அவர்களின் நிலை என்ன? என தெரியவில்லை.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளத்தில் இன்று மதியம் வைரம் என்பவருக்கு சொந்தமான பட்டாசு குடோனில் வெடிவிபத்து ஏற்பட்டது. அங்கிருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதனால் குடோன் முழுவதும் தீப்பற்றி எரிந்தது.
அந்தப்பகுதி மக்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தொடர்ந்து பட்டாசுகள் வெடித்துக் கொண்டிருந்ததால் தீயை அணைக்க முடியவில்லை. விபத்து குறித்து தகவல் அறிந்த சிவகாசி, வெம்பக்கோட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பட்டாசு விபத்து நடந்த குடோனில் 2 பேர் சிக்கியிருப்பதாக தெரிகிறது. அவர்களின் நிலை என்ன? என தெரியவில்லை.
- பண மோசடி வழக்கில் பா.ஜ.க. தலைவர் கைது நடவடிக்கையில் தாமதம் ஏன்? என கேள்வி எழுந்துள்ளது.
- கோர்ட்டு விதித்த நிபந்தனைகளை பின்பற்றா ததால் சுரேஷ்குமாரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி நகர் பா.ஜ.க. துணை தலைவர் பாண்டி யன். கடந்த 2017-ம் ஆண்டு இவரது 2 மகன்க ளுக்கு கப்பல் துறை முகத்திலும், ரெயில் வேயிலும் அரசு வேலை வாங்கி தருவதாக திருத்தங்கல்லை சேர்ந்த பா.ஜ.க. மேற்கு மாவட்ட தலைவர் சுரேஷ்குமார், மேற்கு மாவட்ட செயலாளர் கலையரசன் ஆகியோர் ஆசை வார்த்தை கூறி யுள்ளனர்.
இதனை நம்பிய பாண்டியன் 2 பேரிடமும் பல்வேறு தவணைகளில்
ரூ.11 லட்சம் வரை கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட அவர்கள் வேலை யும் வாங்கி தரவில்லை, பணத்தையும் திருப்பித் தரவில்லை. இதனால் தான் ஏமாற்றப் பட்டதை உணர்ந்த பாண்டியன் இது குறித்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையிடம் புகார் தெரிவித்தார். அதன்பின் சுரேஷ்குமாரும், கலைய ரசனும் ரூ.2 லட்சம் ரொக்கத்தை கொடுத்தனர். மீதமுள்ள பணத்திற்கு காசோலையை கொடுத்தனர். ஆனால் அந்த காசோலைகள் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பாண்டியன் பண மோசடி குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ்குமாரையும், கலையரசனையும் கைது செய்தனர்.
இதற்கிடையில் இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு கடந்த டிசம்பர் மாதம் மதுரை ஐகோர்ட்டில் சுரேஷ்குமார் மனு தாக்கல் செய்தார். அதனை விசா ரித்து ஐகோர்ட்டு ஜாமீன் பெறுவதற்கு ரூ.5 லட்சத்து 50 ஆயிரத்தை விருதுநகர் மாவட்ட 2-வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் டெபாசிட் செய்ய வேண்டு மென உத்தரவிட்டது. அதற்கு கால அவகாசமும் தரப்பட்டது. ஆனால் சுரேஷ்குமார் டெபாசிட் பணத்தை செலுத்தவில்லை.
இந்த நிலையில் மதுரை ஐகோர்ட்டு உத்தரவை ரத்து செய்யக்கோரி மீண்டும் சுரேஷ்குமார் கோர்ட்டில் மனு செய்தார். ஆனால் அந்த மனுவை உடனே வாபஸ் பெற்றார்.
இதனைத்தொடர்ந்து சுரேஷ்குமார் கால அவகாசம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தார். இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் தொகையை செலுத்த 2 வார காலம் அவகாசம் அளிப்பதாகவும், அப்போதும் டெபாசிட் செய்யாதபட்சத்தில் ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவு திரும்ப பெற்றதாக கருதப்படும் என்று தெரிவித்தது.
இந்த நிலையில் 2 வார காலம் முடிந்த பின்பும் சுரேஷ்குமார் டெபாசிட் தொகையை செலுத்த வில்லை. இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று சுரேஷ்குமாரை அதிரடியாக கைது செய்தனர்.
பண மோசடி வழக்கில் சுரேஷ்குமார் ஜாமீன் பெறுவதற்கு மதுரை ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டில் அடுத்தடுத்து மனு செய்ததால் போலீசார் கைது செய்வதில் தாமதம் ஏற்பட்டது. ஆனால் இந்த முறை கோர்ட்டு விதித்த நிபந்தனைகளை பின்பற்றா ததால் சுரேஷ்குமாரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.







