search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து
    X

    பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து

    • பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.
    • அவர்களின் நிலை என்ன? என தெரியவில்லை.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளத்தில் இன்று மதியம் வைரம் என்பவருக்கு சொந்தமான பட்டாசு குடோனில் வெடிவிபத்து ஏற்பட்டது. அங்கிருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதனால் குடோன் முழுவதும் தீப்பற்றி எரிந்தது.

    அந்தப்பகுதி மக்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தொடர்ந்து பட்டாசுகள் வெடித்துக் கொண்டிருந்ததால் தீயை அணைக்க முடியவில்லை. விபத்து குறித்து தகவல் அறிந்த சிவகாசி, வெம்பக்கோட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பட்டாசு விபத்து நடந்த குடோனில் 2 பேர் சிக்கியிருப்பதாக தெரிகிறது. அவர்களின் நிலை என்ன? என தெரியவில்லை.

    Next Story
    ×