என் மலர்tooltip icon
    • கள்ளிக்குடி அருகே விபத்தில் லாரி மோதி கார் கவிழ்ந்தது. இதில் பெண் இறந்தார். 6 பேர் காயம் அடைந்தனர்.
    • அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    திருமங்கலம்

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே யுள்ள மாதங்கோவில் பட்டியை சேர்ந்தவர் ஜான்சாமுவேல். இவர் குடும்பத்தினருடன் காரில் ஈரோடு சென்று விட்டு காரில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.

    நேற்று இரவு மதுரை-விருதுநகர் நான்கு வழிச்சாலையில் கள்ளிக்குடி அருகே சென்று கொண்டி ருந்தபோது பின்னால் வந்த லாரி, கார் மீது மோதியது. இதில் கார் நிலைத்தடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளா னது.

    இந்த விபத்தில் காரில் பயணம் செய்த அமிர்தம் சம்பவ இடத்திலேயே பரிதாப மாக உயிரிழந்தார். மேலும் காரில் இருந்த ஜான்சாமுவேல், இறைநிலா, லில்லிபுஷ்பம், எர்ணாஸ், லியோன், டேவிட் ஆகியோர் படுகாயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
    • ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன் இனிப்பு வழங்கினார்.

    சோழவந்தான்

    ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இதை வரவேற்று சோழவந்தானில் பேரூர் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

    ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன் இனிப்பு வழங்கினார். பேரூர் செயலாளர் சத்திய பிரகாஷ் தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன், துணைத்தலைவர் லதா கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், ஒன்றிய கவுன்சிலர் ரேகா வீரபாண்டி, முள்ளிப்பள்ளம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ராஜா, பேரூர் துணைச்செயலாளர்கள் ஸ்டாலின், கொத்தாளம் செந்தில், செல்வராணி ஜெயராமச்சந்திரன், முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் அண்ணாதுரை, மாவட்ட பிரதிநிதிகள் பேட்டை பெரியசாமி, சுரேஷ், ஒன்றிய நிர்வாகி நீலமேகம், பேரூர் நிர்வாகிகள் சங்கங்கோட்டை சந்திரன், இளைஞரணி காளி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ஜல்லிக்கட்டு தீர்ப்பை வரவேற்று கொண்டாடுவோம் என அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கமிட்டி துணைத் தலைவர் கூறினார்.
    • தீர்ப்பை வரவேற்று கொண்டாடுவோம்.

    மதுரை

    தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வந்த ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் என்ன தீர்ப்பு வழங்கப்படும் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருந் தனர்.

    இந்த நிலையில் இன்று தீர்ப்பு வெளியானது. அதில் தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு எந்த வித தடையும் இல்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கமிட்டி துணைத்தலைவர் எஸ்.டி.கல்யாணசுந்தரம் கூறியதாவது:-

    பீட்டா போன்ற சில அமைப்புகள் தமிழர்களின் உணர்வுக்கு எதிராக தமிழரின் கலாசாரத்திற்கு எதிராக, நமது ஜல்லிக்கட்டு போட்டியை தடுக்கும் விதமாக பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்தி வந்தன.

    இருந்தபோதிலும் தமிழக அரசும், மத்திய அரசும் தொடர்ந்து தமிழர்களின் கலாசாரத்தை பேணி காக்கின்ற வகையில் செயல்பட்டதின் காரணமாக வும், தமிழக அரசு சட்ட சபையில் ஜல்லிக்கட்டு க்கான தனி தீர்மானத்தைக் கொண்டு வந்து தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தியதாலும் தற்போது சுப்ரீம் கோர்ட்டு வழங்கி இருக்கின்ற தீர்ப்பு பீட்டா அமைப்பு களுக்கு கொடுக்கின்ற பதிலடியாக இருக்கும். எனவே இந்த தீர்ப்பை வரவேற்று உலகம் முழு வதும் இருக்கின்ற தமிழர்கள் கொண்டாடு வோம். இவ்வாறு அவர் கூறினார்

    • நரிக்குடி அருகே அ.தி.மு.க. ஆட்சியில் வழங்கப்பட்ட இலவச வீட்டுமனையை அபகரிக்க முயற்சி செய்வதாக பாதிக்கப்பட்ட விவசாயி தாசில்தாரிடம் புகார் செய்தார்.
    • சர்ச்சைக்குரிய இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி அருகே உள்ள நெடுக னேந்தல் கிராமத்தை சேர்ந்த வர் முனியசாமி (வயது65), விவசாயி. இவர் கடந்த பல வருடங்க ளாக நெடுக னேந்தல் கிராமத்தில் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் இவருக்கு கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது விருதுநகரில் நடை பெற்ற புதிய அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முனியசாமி உள்பட சிலருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார்.

    இந்த நிலையில் தமி ழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து முனியசாமிக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டா ரத்து செய்யப்பட்டதாக தெரி விக்கப்பட்டது. இதற்கி டையே முனிய சாமிக்கு வழங்கப்பட்ட இடத்தில் 10-க்கும் மேற்பட்டோர் கடப்பாரை போன்ற ஆயுதங்களுடன் அத்துமீறி உள்ளே நுழைந்து மரக்கன்றுகள் வைத்து செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டு இருந்த னர். இதற்கு முனியசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவருக்கு அந்த கும்பல் ெகாலை மிரட்டல் விடுத்தது.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் திருச்சுழி தாசில்தார் பாண்டி சங்கர் ராஜா சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அரசால் முனியசாமிக்கு வழங்கப் பட்ட சர்ச்சைக்கு ரிய இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது பாதிக்கப்பட்ட முனியசாமி குடும்பத்தினர் தங்களுக்கு அரசால் வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டாவை திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    • மதுரை மண்டல அளவிலான வெளிமாநில தொழிலாளர்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது.
    • இழப்பீடு குறித்து மதுரை தொழிலாளர் இணை ஆணையரும் எடுத்துக்கூறினர்.

    மதுரை

    மதுரை மண்டல அளவிலான வெளிமாநில தொழிலாளர்கள் ஒருங்கிணைப்புகுழு கூட்டம் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அக்குழுவின் தலைவரும், மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையரு மான குமரன் தலைமை தாங்கினார். மதுரை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக கூடுதல் இயக்குநர் ராஜசேகரன், மதுரை தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிரமணியன், பல்வேறு மாவட்ட அதிகாரிகள், அமைப்பு நிர்வாகிகள், வர்த்தக சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில், மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் வெளிமாநில தொழிலாளர்களின் சட்டப்படியான உரிமைகள் மற்றும் அரசின் திட்டங்களை எடுத்துரைத்தார். மதுரை மண்டலத்தில் 8 மாவட்டங்களில் உள்ள கடைகள், உணவு நிறுவனங்கள், மருத்துவமனைகள், சினிமா தியேட்டர்கள், அழகு நிலையங்கள் மற்றும் தோட்ட நிறுவனங்களில் பணிபுரியும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை தொழிலாளர் துறையிலும் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களை தொழிகை பாதுகாப்பு மற்றும் சுகாதாரதுறையின் வெப் போர்ட்டலிலும்

    (labour.in.gov.in/ism) பதிவேற்றம் செய்து அனைத்து வெளிமாநில தொழிலாளர்களையும் பதிவேற்றம் செய்ய கோரப்பட்டது.

    மேலும் அமைப்புசாரா தொழில்களில் வேலை செய்யும் வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களை சேகரித்து அவற்றை தொழிவாளர் உதவி ஆணையர்கள் வெப் போர்ட்டலில் பதிவேற்றம் செய்ய கோரப்பட்டது. வெளிமாநில தொழிலா ளர்களுக்கு ஏற்படும் சட்ட ஒழுங்கு பிரச்சினை, பணியிட விபத்துகள் ஏதும் ஏற்படின் உடனுக்குடன் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதுடன். அரசின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு செல்ல கோரப்பட்டது.

    அதனை தொடர்ந்து வெளிமாநில தொழிலாளர்கள் சட்ட உரிமைகள் குறித்து மதுரை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக கூடுதல் இயக்குநரும், விபத்து மரண இழப்பீடு குறித்து மதுரை தொழிலாளர் இணை ஆணையரும் எடுத்துக்கூறினர்.

    தொழிலாளர்களின் பணிநிலைமை, குறைந்தபட்ச ஊதியம், குழந்தைகளின் கல்வி மற்றும் விபத்து நேர்ந்தால் வழங்கப்படும் இழப்பீடு போன்ற விவரங்கள் குறித்து உறுப்பினர்கள் விவாதித்தனர். மேலும் பணியிடத்தில் சரியான பணி நிலைமை, குறைந்த பட்ச ஊதியம், 8 மணி நேர வேலை, குடும்பத்துடன் தங்கியுள்ள வெளிமாநில தொழிலாளர்களுக்கு குடியிருப்பு வசதி போன்றவை வேலையளிப்பவரால் வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிக்குமாறும், ஏதும் குறைபாடுகள் இருப்பின் சம்மந்தப்பட்ட துறையினருக்கு தெரிவித்து தீர்வுகாணுமாறு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

    • நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
    • கலெக்டர் நேரில் பார்வையிட்டார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி ஊராட்சி பகுதியில் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் அதிரடி ஆய்வு மேற் கொண்டார்.

    இலுப்பையூர், அகத்தாகுளம், பூமாலை ப்பட்டி, மறையூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். தொடர்ந்து பனைக்குடியில் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம் மற்றும் அய்யனார் கோவில் ஊரணி ஆழப்படுத்தும் பணிகளையும் கலெக்டர் நேரில் பார்வையிட்டார்.

    இசலி ஊராட்சியில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம், நிர்வாக அலுவலக கட்டிடம் மற்றும் புதிதாக கட்டப்படும் அங்கன்வாடி நிலைய கட்டிடத்தையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    இவ்வாறு நரிக்குடி ஊராட்சியில் ரூ.3 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளையும் ஆய்வு செய்த கலெக்டர் அதனை விரைந்து முடித்து அதனை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    • விருதுநகரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது.
    • பதிவு மூப்பு எந்த விதத்திலும் பாதிக்கப்படாது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலு வலகம் வாயிலாக மாதத்தின் 3-ம் வெள்ளி கிழமையில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப் பட்டு வருகிறது. அதன்படி படித்த வேலை தேடும் மனுதாரர்களுக்காக நாளை 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் 2 மணி வரை தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் விருதுநகர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    இந்த முகாமில் 25-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ கல்வித் தகுதி உடையவர்கள் விருதுநகர், சிவகாசி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் பணியமர்த்தம் செய்ய பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். இந்த வாய்ப்பை பயன்படுத்த விரும்பும் வேலைநாடுநர்கள் 19-ந் தேதி நடைபெறும் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பாக www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது கல்வித்தகுதியை பதிவு செய்துவிட்டு வர வேண்டும்.

    முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள் விருதுநகர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை புரிந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை தொடர்பு கொள்ள வேண்டும். தனியார் வேலை வாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்க ளது வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எந்த விதத்திலும் பாதிக்கப்படாது. அதனை பயன்படுத்தி அனைத்து தரப்பினரும் பயன்பெற வேண்டும். மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

    • நரிக்குடி யூனியனில் பழ மரக்கன்றுகள் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுவதாக வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளார்.
    • பொறுப்பு அலுவலர்களை தொடர்பு கொள்ள வேண்டும்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி ஒன்றியத்தில் நடப்பாண்டு க்கான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் அ.முக்குளம், வீரசோழன், அழகாபுரி, மினாக்குளம், நல்லுகுறிச்சி, வேளாநேரி, மேலப்பருத்தியூர், கீழக்கொன்றைக்குளம், நாலூர் ஆகிய 9 ஊராட்சிகள் தேர்ந்தெ டுக்கப் பட்டுள்ளன.

    இந்த திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட மேற்கண்ட 9 ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு சொந்தமான 10 ஏக்கர் முதல் 15 ஏக்கர் வரையிலான புன்செய் நிலங்களில் போர்வெல் அமைத்து, மின் இணைப்பு அல்லது சூரிய சக்தியுடன் கூடிய மோட்டார் அமைத்து அதில் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் பழ மரக்கன்றுகள் சாகுபடி செய்வதற்கு மானியம் வழங்கப்பட உள்ளது.

    மேலும் மானிய விலையில் பவர் டிரில்லர் கருவியும், 100 சதவீத மானி யத்தில் விவசாயிகளுக்கு பண்ணைக் குட்டையும் அமைத்து தரப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. மேற்கண்ட 9 ஊராட்சிகளை சேர்ந்த ஆதிதிராவிடர் விவசாயி களுக்கு கலைஞரின் அனை த்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் இலவசமாக ஆழ்துளைக்கி ணறு மற்றும் மின் இணைப்பு அல்லது சூரிய சக்தியுடன் கூடிய மோட்டார் இணைப்பு வழங்கப்பட உள்ளது.

    நரிக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேற்கண்ட ஊராட்சிகளை சேர்ந்த தகுதி வாய்ந்த விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் இணைந்து பயனடையலாம். மேலும் விபரங்களுக்கு அந்தந்த ஊராட்சிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு அலுவலர்களை தொடர்பு கொள்ள வேண்டும்.

    மேற்கண்ட தகவலை நரிக்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் வீரேசுவரன் தெரிவித்துள்ளார்.

    • அருப்புக்கோட்டை நகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.
    • திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது.

    பாலையம்பட்டி

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தை நிறை வேற்றுவது தொடர்பாக நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நகராட்சி சமுதாயக் கூடத்தில் நடந்தது.

    நகர மன்றத்தலைவர் சுந்தரலட்சுமி சிவப்பி ரகாசம் தலைமை தாங்கி னார். நகராட்சி கமிஷனர் அசோக்குமார், முன்னாள் நகர் மன்றத்தலைவர் சிவபிரகாசம், நகர்மன்ற துணைத்தலைவர் பழனிச் சாமி, உதவி பொறியாளர் முரளி மற்றும் கவுன்சிலர் கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பேசி யவர்கள் கூறியதாவது:-

    ஜெயசெல்வி (குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர்):- நகராட்சி யில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த ரூ. 373 கோடியே 22 லட்சத்தில் திட்ட அறிக்கை தயார் செய்துள்ளோம். நகரில் 2 ஆண்டுகளுக்குள் பாதாள சாக்கடை திட்டம் செயல் படுத்தப்படும். தற்போது மக்கள் தொகை 87 ஆயிரத்து 722 பேர் உள்ளனர். 2055-ம் ஆண்டு 1 லட்சத்து 30 ஆயிரத்து 35 பேர் மக்கள் தொகையாக உயரும் பட்சத்தில் அதற்கேற்றாற் போல் பாதாள சாக்கடை திட்டம் அமைக்கப்பட உள்ளது.

    பிரதான கழிவுநீர் அகற்றும் நிலையங்கள் நேதாஜி ரோட்டிலும், முனியசாமி கோவில் பகுதிகளில், நகராட்சி ஆட்டு சந்தையில் துணை கழிவு நீர் அகற்றும் நிலையமும், சுக்கில் நத்தம் ரோட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமும் அமைக்கப்பட உள்ளது. சுகாதாரத்தை பேணும் வகையில் அரசால் கொண்டுவரப்படும் இந்த திட்டத்தை செயல்படுத்து வது தொடர்பாக மக்கள் கருத்தை கேட்க உள்ளோம்.

    அசோக்குமார்(நகராட்சி கமிஷனர்):- பாதாள சாக்கடை திட்டம் செயல் படுத்தும்போது எந்தெந்த பகுதியில் வேலை செய்கி றார்களோ அதை முன் கூட்டியே நகராட்சி நிர்வாகத்திற்கு குடிநீர் வடிகால் வாரியத்தினர் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் பொது மக்களிடம் நாங்கள் எடுத்துச் சொல்வதற்கு வசதியாக இருக்கும். சிவப்பிரகாசம் (முன்னாள் நகர் மன்ற தலைவர்):- பாதாள சாக்கடை திட்டம் மூலம் அருப்புக்கோட்டை நகராட்சி சுகாதாரமான நகரமாக மாறும். திட்டம் தொடங்கும்போது சிரமமாகத்தான் இருக்கும். அதன் பின் பயனுள்ளதாக இருக்கும்.

    ஏ.கே.மணி (நகர தி.மு.க. செயலாளர்):- இந்த திட்டம் 25 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. ஆட்சி மாற்றங்களினால் கிடப்பில் போடப்பட்டது. தற்போது அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் முயற்சியால் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. உலக வங்கியில் கடன் பெற்று இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தை செயல் படுத்துவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்.

    பழனிசாமி (நகர் மன்ற துணைத்தலைவர்):- கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை திட்டம் குறித்து 36 வார்டுகளிலும் ஒவ்வொரு தெருக்களாக சர்வே செய்து அதன் பிறகு தான் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது.

    விருதுநகர், சாத்தூர் போன்று இல்லாமல் ஒவ்வொரு பகுதியாக வேலைகளை முடித்து அதன் பின்பு தான் செயல்படுத்தப்படும். இதனால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. சாலைகளை சீரமைக்க ரூ.42 கோடியே 96 லட்சத்தில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது.

    • ஊரணியில் கார் மூழ்கியதில் வியாபாரி உயிர் தப்பினார்.
    • காரில் சிக்கியிருந்த ஜான்பாலை மீட்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் ரோசல்பட்டியை சேர்ந்தவர் ஜான்பால். வியாபாரியான இவர் வெளியூர் சென்று விட்டு காரில் ஊருக்கு வந்திருந்தார். சொக்கம்பட்டி விலக்கு தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது காரின் முன் டயர் வெடித்தது.

    இதில் தாறுமாறாக ஓடிய கார் சாலையோர ஊரணியில் விழுந்து மூழ்கியது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்தப்பகுதி மக்கள் உடனே ஊரணியில் இறங்கி காரில் சிக்கியிருந்த ஜான்பாலை மீட்டனர்.

    மயங்கிய நிலையில் கிடந்த அவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக நத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • இளையான்குடி கல்லூரி பேராசிரியருக்கு விருது வழங்கப்பட்டது.
    • பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ-மாணவியர் வாழ்த்தினர்.

    மானாமதுரை

    தேசிய கல்வி தினத்தை முன்னிட்டு, ராமநாதபுரத்தில் கல்வி ரத்னா விருது வழங்கும் விழா நடந்தது. நவாஸ் கனி எம்.பி. கலந்து கொண்டு கற்பித்தல், மேலாண்மை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு, ஊக்கம் அளித்தல் தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி ஆகிய பிரிவுகளில் சிறந்து விளங்கியதற்காக சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் பணியாற்றும் வணிகவியல்துறை உதவிப்பேராசிரியர் நாசருக்கு கல்வி ரத்னா விருது வழங்கினார். விருதுபெற்ற பேராசிரியரை கல்லூரி ஆட்சிக்குழு, முதல்வர், பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ-மாணவியர் வாழ்த்தினர்.

    • மானாமதுரை பகுதியில் சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
    • கோவிலில் ஏராளமான பக்தர்கள் கங்கை தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

    மானாமதுரை

    மானாமதுரை வைகையாற்றங்கரையில் உள்ள ஆனந்தவல்லி-சோமநாதர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு 16 வகையான மூலிகை பொருள்கள் வைத்து அபிஷேகம் நடைபெற்றது. பின் வெள்ளி ரிஷப வாகனத்தில் உற்சவர்களுக்கு சிறப்பு பூஜை செய்து கோவில் பிரகாரம் சுற்றி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் ஆனந்தவல்லி சோமநாதரை தரிசனம் செய்தனர்.

    இதேபோல் மேலெநெட்டூரில் கும்பாபிஷேகம் செய்யபட்டு புதுபிக்கப்பட்ட சொர்ணவாரீஸ்வரர் சாந்தநாயகி அம்மன் கோவிலில் நடைபெற்ற பிரதோஷ பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். வேம்பத்தூர் கைலாசநாதர் ஆவுடையம்மன் கோவிலில் நடைபெற்ற பிரதோஷ பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் இங்கு உள்ள சிம்ம வாகனத்தில் காட்சி தரும் புதன் பகவானையும் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். மானாமதுரை பரமக்குடி சாலையில் உள்ள குறிச்சி காசிவிஸ்வநாதர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் கங்கை தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

    ×