search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The sewer"

    • அருப்புக்கோட்டை நகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.
    • திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது.

    பாலையம்பட்டி

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தை நிறை வேற்றுவது தொடர்பாக நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நகராட்சி சமுதாயக் கூடத்தில் நடந்தது.

    நகர மன்றத்தலைவர் சுந்தரலட்சுமி சிவப்பி ரகாசம் தலைமை தாங்கி னார். நகராட்சி கமிஷனர் அசோக்குமார், முன்னாள் நகர் மன்றத்தலைவர் சிவபிரகாசம், நகர்மன்ற துணைத்தலைவர் பழனிச் சாமி, உதவி பொறியாளர் முரளி மற்றும் கவுன்சிலர் கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பேசி யவர்கள் கூறியதாவது:-

    ஜெயசெல்வி (குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர்):- நகராட்சி யில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த ரூ. 373 கோடியே 22 லட்சத்தில் திட்ட அறிக்கை தயார் செய்துள்ளோம். நகரில் 2 ஆண்டுகளுக்குள் பாதாள சாக்கடை திட்டம் செயல் படுத்தப்படும். தற்போது மக்கள் தொகை 87 ஆயிரத்து 722 பேர் உள்ளனர். 2055-ம் ஆண்டு 1 லட்சத்து 30 ஆயிரத்து 35 பேர் மக்கள் தொகையாக உயரும் பட்சத்தில் அதற்கேற்றாற் போல் பாதாள சாக்கடை திட்டம் அமைக்கப்பட உள்ளது.

    பிரதான கழிவுநீர் அகற்றும் நிலையங்கள் நேதாஜி ரோட்டிலும், முனியசாமி கோவில் பகுதிகளில், நகராட்சி ஆட்டு சந்தையில் துணை கழிவு நீர் அகற்றும் நிலையமும், சுக்கில் நத்தம் ரோட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமும் அமைக்கப்பட உள்ளது. சுகாதாரத்தை பேணும் வகையில் அரசால் கொண்டுவரப்படும் இந்த திட்டத்தை செயல்படுத்து வது தொடர்பாக மக்கள் கருத்தை கேட்க உள்ளோம்.

    அசோக்குமார்(நகராட்சி கமிஷனர்):- பாதாள சாக்கடை திட்டம் செயல் படுத்தும்போது எந்தெந்த பகுதியில் வேலை செய்கி றார்களோ அதை முன் கூட்டியே நகராட்சி நிர்வாகத்திற்கு குடிநீர் வடிகால் வாரியத்தினர் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் பொது மக்களிடம் நாங்கள் எடுத்துச் சொல்வதற்கு வசதியாக இருக்கும். சிவப்பிரகாசம் (முன்னாள் நகர் மன்ற தலைவர்):- பாதாள சாக்கடை திட்டம் மூலம் அருப்புக்கோட்டை நகராட்சி சுகாதாரமான நகரமாக மாறும். திட்டம் தொடங்கும்போது சிரமமாகத்தான் இருக்கும். அதன் பின் பயனுள்ளதாக இருக்கும்.

    ஏ.கே.மணி (நகர தி.மு.க. செயலாளர்):- இந்த திட்டம் 25 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. ஆட்சி மாற்றங்களினால் கிடப்பில் போடப்பட்டது. தற்போது அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் முயற்சியால் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. உலக வங்கியில் கடன் பெற்று இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தை செயல் படுத்துவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்.

    பழனிசாமி (நகர் மன்ற துணைத்தலைவர்):- கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை திட்டம் குறித்து 36 வார்டுகளிலும் ஒவ்வொரு தெருக்களாக சர்வே செய்து அதன் பிறகு தான் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது.

    விருதுநகர், சாத்தூர் போன்று இல்லாமல் ஒவ்வொரு பகுதியாக வேலைகளை முடித்து அதன் பின்பு தான் செயல்படுத்தப்படும். இதனால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. சாலைகளை சீரமைக்க ரூ.42 கோடியே 96 லட்சத்தில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது.

    ×