என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்
இந்த செய்தி ஆப்பிள் சப்போர்ட் பக்கத்தில் வெளியான நிலையில், அதிகாரப்பூர்வமான அறிவிப்பை ஆப்பிள் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் தனது பயனர்களின் சார்ஜிங் பற்றிய கவலைகளை போக்க புதிய சார்ஜர் ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சார்கர் 35W சக்தியை கொண்டுள்ளதாகவும், கேலியம் நைட்ரைட் என்ற செமி கண்டெக்டரை பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
மற்ற பவர் சார்ஜர்களை விடவும் சக்தி வாய்ந்தது எனவும், இதில் ஒரு போர்ட்டுக்கு பதில் இரண்டு போர்ட் தரப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. இதன்மூலம் ஆப்பிள் பயனர்கள் ஒரு சார்ஜர் மூலம் இரண்டு சாதனங்களை சார்ஜ் செய்துகொள்ள முடியும்.
குறிப்பாக ஐபோன், ஆப்பிள் வாட்ச் என எதை வேண்டுமானாலும் இதில் சார்ஜ் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தி ஆப்பிள் சப்போர்ட் பக்கத்தில் வெளியான நிலையில், அதிகாரப்பூர்வமான அறிவிப்பை ஆப்பிள் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தாக்குதல்கள் 2021ம் ஆண்டு மத்தியில் தொடங்கப்பட்டு, ஃபிப்ரவரி 2022 வரை நடைபெற்றுள்ளது.
விஎல்சி பிளேயர் கணினி பயன்படுத்தும் அனைவருக்கும் விருப்பமான மீடியா பிளேயர் ஆகும்.
இந்த பிளேயர் நமது கணினியில் குறைந்த இடங்களை எடுத்துகொண்டு, வேகமாக செயல்படக்கூடியதும், அனைத்து வகையான ஃபார்மெட்டுகளை பிளே செய்யும் அம்சங்களை கொண்டதும் ஆகும்.
எல்லோருக்கும் விருப்பமான இந்த மீடியா பிளேயர் சீன அரசின் உதவியுடன் பயனர்களை கண்காணித்து வருவதாக சிமாண்டெக் சைபர் செக்யூரிட்டி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சிசாடா அல்லது APT10 என்ற நிறுவனம் விஎல்சி மீடியா பிளேயரை பயன்படுத்தி மால்வேர் மூலம் அரசாங்கம், மதம், காவல்துறை, மருத்துவம் மற்றும் பிற நிறுவனங்களை கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா உள்ளிட்ட இடங்களில் இந்த செயல்கள் நடைபெறுவதாகவும், குறிப்பாக அமெரிக்கா, கனடா, ஹாங்காங், துருக்கி, இஸ்ரேல், இந்தியா, மோண்டகேரோ, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளில் இந்த சைபர் தாக்குதல்கள் நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த தாக்குதல்கள் 2021ம் ஆண்டு மத்தியில் தொடங்கபட்டு, ஃபிப்ரவரி 2022 வரை நடைபெற்றுள்ளது.
ஏற்கனவே சாம்சங் இதேபோன்று ரிப்பேர் சேவையை அறிவித்துள்ள நிலையில், தற்போது கூகுளும் இந்த திட்டத்தை தொடங்கியுள்ளது.
கூகுள் நிறுவனம் தனது பிக்ஸல் ஸ்மார்ட்போன்களை, வாடிக்கையாளர்களே ரிப்பேர் செய்யும் புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது.
இதற்காக iFixit என்ற நிறுவனத்துடன் இணைந்து கூகுள் செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் பிக்ஸல் போன்களை ரிப்பேர் செய்வதற்கு தேவையான உண்மையான உதிரி பாகங்களுடன், எவ்வாறு ரிப்பேர் செய்ய வேண்டும் என்ற வழிகாட்டியையும் வழங்கப்படுகிறது.
உதிரி பாகங்களில் பேட்டரிக்கள், டிஸ்பிளேக்கள், கேமராக்கள் மற்றும் பிற முக்கிய உதிரி பாகங்களும் வழங்கப்படவுள்ளன. மேலும் போனை ரிப்பேர் செய்ய தேவையான ஸ்க்ரூடிரைவர் பிட்கள், ஸ்பட்ஜர்ஸ் ஆகியற்றையும் வழங்குகிறது.
இந்த சேவை பிக்ஸல் 2 முதல் பிக்ஸல் 6 ப்ரோ வரையிலான போன்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இனி வரும் பிக்ஸல் போன்களுக்கும் இந்த சேவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய யூனியனை சேர்ந்த நாடுகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள இந்த சேவை விரைவில் பிற நாடுகளுக்கும் வழங்கப்படவுள்ளது.
ஏற்கனவே சாம்சங் இதேபோன்று ரிப்பேர் சேவையை அறிவித்துள்ள நிலையில், தற்போது கூகுளும் இந்த திட்டத்தை தொடங்கியுள்ளது.
கூகுள் பிளே ஸ்டோரில் மால்வேர்களால் பாதிக்கப்பட்ட செயலிகள் இருப்பதாக வெளியான அறிவிப்பை தொடர்ந்து கூகுள் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு செயலிகள், கேம்களை தரவிறக்கம் செய்வதற்கு அதிக அளவில் கூகுள் பிளே ஸ்டோர் பயன்பட்டு வருகிறது. கூகுளின் அதிகாரப்பூர்வ தளம் என்பதால் அங்கீகரிக்கப்பட்ட செயலிகள் மட்டுமே இதில் இடம்பெறுகின்றன.
ஆனால் சமீபத்தில் கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள செயலிகள் தொடர்ந்து மால்வேர், வைரஸ் தாக்குதல்களுக்கு ஆளாகி வருகின்றன. இந்நிலையில் பிளே ஸ்டோரில் 6 புதிய செயலிகள் பயனர்களின் தகவல்களை திருடும் மால்வேரால் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
ஷார்க்பாட்ஸ் எனப்படும் இந்த மால்வேர் பயனர்களின் யூசர் நேம், பாஸ்வேர்ட் ஆகிய தகவல்களை திருடும் வல்லமை கொண்டது. அதேபோல நாம் டைப் செய்யும் ஒவ்வொரு வார்த்தையையும் ஆராய்ந்து, நாம் வங்கி தொடர்பாக டைப் செய்துள்ள தகவல்களை எடுத்துகொள்ளக்கூடியது என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த மால்வேர்களை நீக்கியுள்ளதாக தற்போது கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பிளேஸ்டோரில் இருந்து க்யூஆர் ஸ்கேனர், வெதர் செயலி, பிரேயர் செயலி என நிறைய செயலிகளை நீக்கியுள்ளோம். இதில் தகவலை திருடும் மால்வேர்கள் இடம்பெற்றதாக கூறப்பட்டது. இந்த செயலிகளை ஒரு கோடிக்கும் அதிகமானோர் டவுன்லோட் செய்துள்ளதும் தெரியவந்தது.
கூகுள் பிளேயில் உள்ள அனைத்து செயலிகளும் கூகுளின் பாதுகாப்பு கொள்கைகளை கடைபிடிக்க வேண்டும். இல்லையென்றால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளது.
வழக்கமாக ஏர்டெல் பிளாக் சேவை போஸ்ட்பெய்ட் சிம் கார்டுடன் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது ப்ரீபெய்ட் கனெக்ஷனுக்கும் இந்த திட்டம் வழங்கப்படுகிறது.
ஏர்டெல் நிறுவனம் இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. பல்வேறு சிறப்பு திட்டங்களை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வரும் ஏர்டெல் நிறுவனம், புதிய ஏர்டெல் பிளாக் திட்டத்தை அறிவித்துள்ளது.
இதன்படிரூ.1099க்கு ரீசார்ஜ் செய்தால் 200Mbps வரையிலான வேகத்தில் ஏர்டெல் ஃபைபர் மற்றும் ஏர்டெல் லேண்ட்லைன் கனெக்ஷன் வழங்கப்படும். அதுமட்டுமின்றி ரூ.350 மதிப்புள்ள டிவி சேனல்களை கொண்ட டிடிஹெச் கனெக்ஷனும் இந்த பிளானுடன் உண்டு.
இதனுடன் ஒருவருடத்திற்காக அமேசான் பிரைம் சந்தா மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் செயலிகளில் சந்தாவும் இத்துடன் வழங்கப்படும்.
வழக்கமாக ஏர்டெல் பிளாக் சேவை போஸ்ட்பெய்ட் சிம் கார்டுடன் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது ப்ரீபெய்ட் கனெக்ஷனுக்கும் இந்த திட்டம் வழங்கப்படுகிறது.
அவர் ஜொமேட்டோ ஊழியர்கள் படும் கஷ்டங்களை விரிவாக லிங்கடின் இணையதளத்தில் எழுதியுள்ளார். அந்த பதிவு பெறும் வரவேற்பை பெற்றுள்ளது.
சென்னையை சேர்ந்த ஸ்ரீனிவாசன் ஜெயராமன் என்ற ஐடி ஊழியர் ஒருவர் ஜொமேட்டோ நிறுவனத்தின் உணவு டெலிவரி செய்யும் வேலையை இரண்டு நாட்கள் பார்த்து, அதன் அனுபவத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
பொதுவாக ஜொமேட்டோ உணவு டெலிவரி ஊழியர்கள் சந்திக்கும் பிரச்சனை ஏராளமாக இருக்கிறது. சரியான கழிப்பிடம் இல்லாமை, உணவு டெலிவரி செய்ய தாமதமானால் சந்திக்கும் சிக்கல்கள் என பல்வேறு பிரச்சனைகள் இருக்கின்றன. அவற்றை அனுபவப்பூர்வமாக அறிந்துகொள்ள ஜெயராமன் முயன்றுள்ளார்.
இரண்டு நாட்கள் வேலை பார்த்த அனுபவத்தில் அவர் கூறியதாவது:-
உணவு டெலிவரி செய்யப்படும் செயலியில் காட்டப்படும் கடைகளும், ஆர்டர் கொடுத்தவரின் வீடு இருக்கும் இடமும் துல்லியமாக காட்டப்படாது. அதேபோல ஒரே உணவகத்தில் இருந்து பல ஆர்டர்கள் வரும்போது அனைத்து ஆர்டர்களையும் சரியான நேரத்தில் டெலிவரி செய்வதும் கஷ்டம். சில ஆர்டர்கள் 14 கி.மீ தூரத்தில் கூட இருக்கும்.
அருகில் இருந்த இடத்தில் ஆர்டர் டெலிவரி செய்வதற்கே 20 முதல் 30 நிமிடங்கள் வரை இருக்கிறது. அதேபோல உணவகங்கள் கொடுக்கும் வாடிக்கையாளர் போன் நம்பர்களுக்கும் சரியாக எடுப்பதில்லை. 14 கி.மீ தூரம் செய்து டெலிவரி கொடுத்த உணவில் இருந்து ரூ.10 தான் எனக்கு டிப்ஸ் கிடைத்தது. சிலர் 20-25 கி.மீ தூரம் வரை கூட சென்று உணவு டெலிவரி செய்கின்றனர்.
ஜொமேட்டோ ஊழியர்களுக்கு நீண்ட தூரம் ஆர்டர் கொடுப்பதை அந்நிறுவனம் நிறுத்த வேண்டும். அதற்கு தாமதமானால் அவர்களை கண்டிக்க கூடாது.
இவ்வாறு ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
அவர் ஜொமேட்டோ ஊழியர்கள் படும் கஷ்டங்களை விரிவாக லிங்கடின் இணையதளத்தில் எழுதியுள்ளார். அந்த பதிவு பெறும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த ஆண்டு பின்பகுதியில் இந்த அம்சம் வெளியாகும் என கூறப்படுகிறது.
உலகம் முழுவதுமே இணைய தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. உண்மையான இணையதளங்கள் போலவே உருவாக்கப்பட்ட போலி தளங்களுக்கு இணையவாசிகளை வரவைத்து அவர்களுடைய தகவல்களை திருடுவது ஃபிஷ்ஷிங் எனப்படும்.
உதாரணமாக வங்கியின் பெயரில் போலி இணையதளத்தை உருவாக்கி அதில் பயனர்களின் வங்கி விவரங்களை டைப் செய்ய வைத்து அந்த தகவல்களை திருடலாம்.
இந்த தாக்குதல் ஸ்ட்ரீமிங் சேவைகள், வரி கட்டும் இணையதளங்கள் என பல இடங்களில் நடக்கிறது.
இந்நிலையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இத்தகைய தாக்குதல்கலை தடுக்க புதிய பாதுகாப்பு அம்சம் ஒன்றை விண்டோஸ் 11 பயனர்களுக்கு வெளியிடவுள்ளது. இந்த ஆண்டு பின்பகுதியில் இந்த அம்சம் வெளியாகும் என கூறப்படுகிறது.
இந்த அம்சத்தை நாம் கணினியில் ஆன் செய்து வைத்தால், பிஷ்ஷிங் தாக்குதல்களை நடத்தும் இணையதளங்கள், புரோகிராம்கள் பயனர்களுக்கு காட்டப்படும். இதன்மூலம் ஆபத்தான இணையதளங்களை பயனர்கள் தவிர்த்துவிடலாம்.
அதேபோல மைக்ரோசாஃப்ட் புதிய தகவல் என்கிரிப்ஷன் அம்சத்தையும் வெளியிட திட்டமிட்டு வருகிறது. இதன்மூலம் விண்டோஸ் பயனர்களின் சாதனங்கள் தொலைந்துபோனால் அதில் உள்ள தகவல்களை யாரும் திருடி விடாமல் பாதுகாக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அம்சம் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் மட்டுமே வழங்கப்பட்டவுள்ளது. பிறகு மற்ற நாடுகளுக்கும் வழங்கப்படும்.
கூகுள் நிறுவனத்தின் கூகுள் மேப் செயலியை இன்று பயன்படுத்தாதவர்கள் யாரும் இருக்க முடியாது. நாம் எந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்றாலும் கூகுள் மேப்பை பயன்படுத்தினால் போது சரியாக சென்று சேர்ந்துவிடலாம்.
இந்த கூகுள் மேப்பில் புதிய அம்சங்களை கூகுள் கொண்டு வரவுள்ளது. இதன்படி கூகுள் மேப்பில் இனி எங்கெல்லாம் டோல் கேட் இருக்கிறது என காட்டப்படும். இதன்மூலம் நாம் காரில் பயணம் செய்ய எவ்வளவு செலவாகும் என தெரிந்துகொள்ளலாம். இந்த அம்சம் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் மட்டுமே வழங்கப்பட்டவுள்ளது. பிறகு மற்ற நாடுகளுக்கும் வழங்கப்படும்.
இதற்காக உள்ளூர் டோல் அதிகாரிகளிடம் கூகுள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதேபோல டோல் இல்லாத சாலையை நாம் தேர்ந்தெடுத்துகொள்ளும் வகையில் மேப்பில் வசதி இடம்பெறும்.
அதேபோல கூகுள் மேப்பில் சாலைகளில் உள்ள சிக்னல்களும் இனி காட்டப்படும். சிவப்பு சிக்னல் போடப்பட்டிருக்கிறதா, பச்சை சிக்னல் போடப்பட்டிருக்கிறதா என்பதை பார்த்து நாம் தெரிந்துகொள்ளலாம்.
மற்றொரு அம்சத்தில் சாலையில் உள்ள கட்டிடங்களின் அமைப்புகள் துல்லியமாக காட்டப்படவுள்ளது. இதன்மூலம் நாம் சாலை விரிவாக உள்ளதா, குறுகிய சாலையா, சாலையில் எவ்வளவு இடம் உள்ளது என்பதை காண முடியும்.
பிற தளங்களில் இருந்து ஏபிகே ஃபைல்களை டவுன்லோட் செய்வது ஆபத்தை ஏற்படுத்தும் என கூகுள் எச்சரித்து வரும் நிலையில் கூகுள் பிளே ஸ்டோர் தளத்திலேயே தொடர்ந்து பாதிக்கப்பட்ட செயலிகள் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு செயலிகள், கேம்களை தரவிறக்கம் செய்வதற்கு அதிக அளவில் கூகுள் பிளே ஸ்டோர் பயன்பட்டு வருகிறது. கூகுளின் அதிகாரப்பூர்வ தளம் என்பதால் அங்கீகரிக்கப்பட்ட செயலிகள் மட்டுமே இதில் இடம்பெறுகின்றன.
ஆனால் சமீபத்தில் கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள செயலிகள் தொடர்ந்து மால்வேர், வைரஸ் தாக்குதல்களுக்கு ஆளாகி வருகின்றன. இந்நிலையில் தற்போது பிளே ஸ்டோரில் 6 புதிய செயலிகளில் பயனர்களின் லாகிங் தகவல்களை திருடும் மால்வேர் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இதில் முக்கியமான அம்சம் இந்த செயலிகள் எல்லாம் வைரஸ்களை நீக்குவதாக கூறும் ஆண்டி வைரஸ் செயலிகள் என்பது தான்.
Atom Clean booster antivirus, Antivirus super cleaner, Alpha antivirus cleaner, Powerful Cleaner, antivirus, Center Security Antivirus ஆகிய செயலிகள் மால்வேர்களை கொண்டுள்ளது.
இந்த செயலிகளை கூகுள் கண்டறிந்து நீக்குவதற்கு முன் 15,000க்கும் மேற்பட்டோர் டவுன்லோட் செய்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்த ஆண்டி வைரஸ் செயலிகளில் ஷார்க்பாட்ஸ் என்ற மால்வேர் இடம்பெற்றுள்ளது. இது பயனர்களின் நம்முடைய யூசர் நேம், பாஸ்வேர்ட் ஆகிய தகவல்களை திருடும் வல்லமை கொண்டது. அதேபோல நாம் டைப் செய்யும் ஒவ்வொரு வார்த்தையையும் ஆராய்ந்து. நாம் வங்கி தொடர்பாக டைப் செய்துள்ள தகவல்களை எடுத்துகொள்ளக்கூடியது.
இந்த மால்வேரால் பிரிட்டன் மற்றும் இத்தாலி நாட்டை சேர்ந்தவர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற தளங்களில் இருந்து ஏபிகே ஃபைல்களை டவுன்லோட் செய்வது ஆபத்தை ஏற்படுத்தும் என கூகுள் எச்சரித்து வரும் நிலையில் கூகுள் பிளே ஸ்டோர் தளத்திலேயே தொடர்ந்து பாதிக்கப்பட்ட செயலிகள் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதன்மூலம் டெபிட், கிரெடிட் கார்டுகளை வைத்து நடைபெறும் மோசடிகளும், முறைக்கேடுகளும் குறையும் என ஆர்பிஐ விளக்கம் அளித்துள்ளது.
இந்தியாவில் கிரெடிட், டெபிட் கார்டுகள் இல்லாமல் யு.பி.ஐ சேவை மூலம் ஏடிஎம்மில் பணம் எடுக்கும் புதிய சேவை விரைவில் அறிமுகம் செய்யப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இதற்கான வழிமுறைகளை அதிகாரிகள் உருவாக்கி வருவதாகவும், ஒவ்வொரு வங்கியையும் தொடர்புகொண்டு இந்த வழிமுறை தொடர்பாக பேசவுள்ளாகவும் கூறியுள்ளது.
இந்த புதிய சேவை வருவதன் மூலம் மக்கள் கிரெடிட், டெபிட் கார்டுகளை எல்லா இடத்திற்கும் எடுத்து செல்ல வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. அதேபோல டெபிட், கிரெடிட் கார்டுகளை வைத்து நடைபெறும் மோசடிகளும், முறைக்கேடுகளும் குறையும் என கூறியுள்ளது.
யூபிஐ மூலம் பணம் எடுக்க நாம் ஸ்மார்ட்போனை கையில் வைத்திருந்தாலே போதும் என கூறியுள்ளது.
இந்த வசதி எப்படி வேலை செய்யும் என்பதையும் ஆர்பிஐ விளக்கியுள்ளது.
இதன்படி நாம் ஏடிஎம்மிற்கு சென்று கார்ட்லெஸ் பணம் எடுக்கும் முறையை தேர்ந்தெடுக்க வேண்டும். உடனே ஏடிஎம் ஸ்கிரீனில் க்யூ.ஆர் கோட் வரும், அவற்றை யூபிஐ செயலி மூலம் ஸ்கேன் செய்து, வேண்டிய தொகையை நிரப்பி, யுபிஐ பின் டைப் செய்தால் உடனே ஏடிஎம்மில் இருந்து பணம் வந்துவிடும் என கூறியுள்ளது.
கார்ட் இல்லாமல் பணம் எடுக்கும் அம்சம் ஏற்கனவே ஐசிஐசிஐ, எஸ்பிஐ உளிட்ட வங்கி ஏடிஎம்களில் வந்தாலும், இந்த யூபிஐ வசதி மூலம் பணம் எடுப்பது இந்தியா முழுவதும் பரவலாக்குகிறது.
குழந்தைகளின் பொம்மைகள் தயாரிப்பு நிறுவனமான லெகோவும், ஃபோர்ட்னைட் என்ற பிரபல கேமை தயாரித்த எபிக் கேம்ஸ் நிறுவனமும் இணைந்து குழந்தைகளுக்காக மெட்டாவெர்ஸை உருவாக்குகின்றன.
மெய்நிகர் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் மெட்டாவெர்ஸை நோக்கி நிறுவனங்கள் படையெடுக்க தொடங்கிவிட்டன.
ஏற்கனவே மெக்டோனல்ட்ஸ், ஹெச்.எஸ்.பி.சி வங்கி போன்ற நிறுவனங்கள் மெட்டாவெர்ஸில் தங்களுடைய நிறுவனங்களை தொடங்கிவிட்டன. இதுத்தவிர பிறந்தநாள், திருமண நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை கூட மெட்டாவெர்ஸில் நடைபெறுகிறது.
திரைப்படங்கள் கூட மெட்டா வெர்ஸில் தங்களுடைய கதாபாத்திரங்கள் தொடர்பான உலகை உருவாக்கி வருகின்றன. இந்நிலையில் இரண்டு கெமிங் நிறுவனங்கள் இணைந்து மெட்டாவெர்ஸில் குழந்தைகளுக்காக விளையாட்டுகளை உருவாக்கவுள்ளதாக தெரிவித்துள்ளன.
குழந்தைகளின் பொம்மைகள் தயாரிப்பு நிறுவனமான லெகோவும், ஃபோர்ட்னைட் என்ற பிரபல கேமை தயாரித்த எபிக் கேம்ஸ் நிறுவனமும் இணைந்து குழந்தைகளுக்காக மெட்டாவெர்ஸை உருவாக்குகின்றன.
இதுகுறித்து அந்நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், குழந்தைகளை சிறந்த படைப்பாளிகளாக மாற்றவும், பாதுகாப்பாக விளையாடவும் ஏற்றவகையில் இந்த மெட்டாவெர்ஸ் உருவாக்கப்படும். அவர்கள் இதில் நிறைய கற்றுகொள்வதோடு, பிறரோடு தகவல் பரிமாறவும் சிறப்பாக பயிற்சி பெறுவர்.
குழந்தைகளின் உரிமைகளுக்கும், பாதுகாப்புக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். குழந்தைகளின் தனியுரிமையும், அவர்களுடைய ஆர்வத்திற்கு முக்கியத்துவம் தரப்படும். டிஜிட்டல் அனுபவத்தை குழந்தைகளும், வளரும் பருவத்தினரும் சிறப்பாக கையாளும் வகையில் இந்த கருவி இருக்கும் என தெரிவித்துள்ளன.
பல அம்சங்களை கொண்டுள்ள வாட்ஸ்ஆப்பில் தற்போது புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் அதிகம் பேரால் பயன்படுத்தப்படும் செயலியாக வாட்ஸ்ஆப் இருக்கிறது. இந்த செயலியில் வீடியோ கால், ஆடியோ கால், வாய்ஸ் மெசேஜ் என ஏகப்பட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
இதில் 'Disappearing Message' என்ற அம்சமும் இடம்பெற்றுள்ளது. இந்த அம்சத்தின்படி ஒருவர் நாம் அனுப்பும் மெசேஜ்ஜை படித்தவுடன் தானாகவே டெலிட்டாகும் வகையில் செய்ய முடியும். எத்தனை நாட்களில் டெலிட் ஆக வேண்டும் என்பதையும் நாமே நிர்ணயிக்கலாம்.

ஆனால் இந்த அம்சத்தின் மூலம் ஒருவர் புகைப்படம், வீடியோ ஏதேனும் அனுப்பினால் மெசேஜ் டெலிட் ஆவதற்கு முன்பே அவற்றை சேகரித்துவிட முடியும். இதை தடுப்பதற்கு வாட்ஸ்ஆப் நிறுவனம் தனது புதிய அப்டேட்டில் போட்டோ, வீடியோ உள்ளிட்ட ஃபைல்களும் தானாகவே டெலிட் ஆகிவிடும் வகையில் மாற்றம் செய்துள்ளது.
அதேபோன்று வாட்ஸ் ஆப்பில் புதிய இமேஜ் எடிட்டிங் அம்சத்தையும் கொண்டு வரவுள்ளது. இதன்படி புகைப்படத்தை அனுப்பும்போது நாம் அதில் ஏதேனும் வரைய வேண்டும் என்றால் பென்சில் டூல் மூலம் வரைந்து பிறகு அனுப்ப முடியும்.
இந்த பென்சில் டூல் ஏற்கனவே இருந்தாலும் தற்போது வரும் புதிய அப்டேட்டில் புதிதாக 3 பென்சில் டூல்கள் இடம்பெறவுள்ளன. அதேபோன்று புகைப்படங்களை ப்ளர் செய்து அனுப்பும் அம்சமும் வாட்ஸ்ஆப்பில் இடம்பெறவுள்ளது.







