என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பச் செய்திகள்
X
விண்டோஸ் 11 பயனர்களுக்கு மைக்ரோசாஃப்ட் வெளியிட்ட நற்செய்தி
Byமாலை மலர்9 April 2022 9:40 AM GMT (Updated: 9 April 2022 9:40 AM GMT)
இந்த ஆண்டு பின்பகுதியில் இந்த அம்சம் வெளியாகும் என கூறப்படுகிறது.
உலகம் முழுவதுமே இணைய தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. உண்மையான இணையதளங்கள் போலவே உருவாக்கப்பட்ட போலி தளங்களுக்கு இணையவாசிகளை வரவைத்து அவர்களுடைய தகவல்களை திருடுவது ஃபிஷ்ஷிங் எனப்படும்.
உதாரணமாக வங்கியின் பெயரில் போலி இணையதளத்தை உருவாக்கி அதில் பயனர்களின் வங்கி விவரங்களை டைப் செய்ய வைத்து அந்த தகவல்களை திருடலாம்.
இந்த தாக்குதல் ஸ்ட்ரீமிங் சேவைகள், வரி கட்டும் இணையதளங்கள் என பல இடங்களில் நடக்கிறது.
இந்நிலையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இத்தகைய தாக்குதல்கலை தடுக்க புதிய பாதுகாப்பு அம்சம் ஒன்றை விண்டோஸ் 11 பயனர்களுக்கு வெளியிடவுள்ளது. இந்த ஆண்டு பின்பகுதியில் இந்த அம்சம் வெளியாகும் என கூறப்படுகிறது.
இந்த அம்சத்தை நாம் கணினியில் ஆன் செய்து வைத்தால், பிஷ்ஷிங் தாக்குதல்களை நடத்தும் இணையதளங்கள், புரோகிராம்கள் பயனர்களுக்கு காட்டப்படும். இதன்மூலம் ஆபத்தான இணையதளங்களை பயனர்கள் தவிர்த்துவிடலாம்.
அதேபோல மைக்ரோசாஃப்ட் புதிய தகவல் என்கிரிப்ஷன் அம்சத்தையும் வெளியிட திட்டமிட்டு வருகிறது. இதன்மூலம் விண்டோஸ் பயனர்களின் சாதனங்கள் தொலைந்துபோனால் அதில் உள்ள தகவல்களை யாரும் திருடி விடாமல் பாதுகாக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X