என் மலர்
தொழில்நுட்பம்
- கதாபாத்திரங்கள் அலுவல் பயணமாக தாய்லாந்து செல்கின்றன.
- முந்தைய நிலையை மட்டும் காண்பிக்கும் வகையில் உள்ளதாக நெட்டிசன்கள் குற்றச்சாட்டு.
ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள புது விளம்பர வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தாய்லாந்தை சேர்ந்த பலர் இந்த வீடியோவுக்கு சமூக வலைதளங்களில் கண்டனக்குரல் எழுப்பி வருகின்றனர்.
பத்து நிமிடங்கள் ஓடும் புது விளம்பர வீடியோ கடந்த ஜூலை 18 ஆம் தேதி ஆப்பிள் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இது "Apple at Work – The Underdogs" சீரிசின் கீழ் வெளியாகி இருக்கும் ஐந்தாவது வீடியோ ஆகும்.

வீடியோவில் நான்கு கதாபாத்திரங்கள் "அன்டர்டாக்ஸ்" என்று காட்டப்படுகின்றன. இவை பணியாற்றும் இடங்களில் ஆப்பிள் சாதனங்கள் மற்றும் மென்பொருள் மூலம் எப்படி எதிர்கொள்கின்றனர் என்பதை சுட்டிக்காட்டும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் சமீபத்திய வீடியோவில், கதாபாத்திரங்கள் அலுவல் பயணமாக தாய்லாந்து செல்கின்றன. இது தொடர்பாக காட்சிகளில் அந்த கதாபாத்திரங்கள் ரெயில் மற்றும் டக்டக் வண்டிகளில் பயணம் செய்யும் காட்சிகள் இடம்பெற்று உள்ளன. இவை தாய்லாந்தின் 50 ஆண்டுகளுக்கு முந்தைய நிலையை மட்டும் காண்பிக்கும் வகையில் உள்ளதாக நெட்டிசன்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த வீடியோவில், தாய்லாந்தின் தொழில்நுட்ப வளர்ச்சி, இன்றைய கால சூழல் உள்ளிட்டவைகளை வெளிப்படுத்தும் வகையில் எந்த காட்சிகளும் இடம்பெறவில்லை. இதற்கு தாய்லாந்தை சேர்ந்த பலர் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
- தொழில்நுட்பத்தின் சமீபத்திய வளர்ச்சி கவலை கொள்ள செய்கிறது.
- அதிகளவு பயன்படுத்த துவங்கும் போது அதிக பொய் சொல்லும்.
உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், ஏஐ தொழில்நுட்பம் பற்றி தொடர்ச்சியாக கருத்து பதிவிட்டு வருகிறார். அந்த வரிசையில், அவர் ஏஐ ஏற்படுத்தக்கூடிய அபாயங்கள் பற்றி மனம்திறந்துள்ளார்.
சமீபத்திய பேட்டியில், "ஏஐ தொழில்நுட்பத்தின் சமீபத்திய வளர்ச்சி கவலை கொள்ள செய்கிறது. சின்ன விஷயங்களில் கூட பொய் சொல்லும் அளவுக்கு ஏஐ தொழில்நுட்பம் அறிவூட்டப்பட்டு இருக்கிறது."
"தற்போது சின்ன விஷயங்களாக இருப்பவை, நாளடைவில் பெரிதாக மாறும். மேலும் மக்கள் இதனை அதிகளவு பயன்படுத்த துவங்கும் போது இன்னும் அதிகளவு பொய் சொல்லும்," என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், குறைந்து வரும் குழந்தை பிறப்பு எண்ணிக்கையும் தனக்கு கவலையை ஏற்படுத்துவதாக தெரிவித்தார்.
இது குறித்து பேசும் போது, "கடந்த கால வரலாறுகளின் குழந்தை பிறப்பு குறைவதே நாகீரக வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கிறது. இதில் இருந்து மனித இனம் மீண்டுவரவில்லை எனில், இதே நிலை மீண்டும் எழுவதை யாரும் தடுக்க முடியாது," என்றார்.
- ரியல்மி 13 ப்ரோ+ ஆனது முதல் முறையாக OIS உடன் Sony LYT-701 சென்சார் கொண்ட 50MP பின்புற கேமராவைக் கொண்டுள்ளது.
- ரியல்மி 13 ப்ரோ 50MP LYT-600 சென்சார் கொண்டுள்ளது.
ரியல்மி (Realme) இந்தியாவில் ரியல்மி 13 ப்ரோ சீரிஸ் 5G ஸ்மார்ட்போனை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. அறிமுகத்தை தொடர்ந்து ஜூலை 31 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் முன்பதிவு துவங்கியது. முன்பதிவு ரியல்மி மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் நடைபெற்றது.
அந்த வகையில் புதிய ரியல்மி 13 ப்ரோ சீரிஸ் 5G ஸ்மார்ட்போன்களை வாங்க 6 மணி நேரத்தில் அனைத்து தளங்களிலும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்டர் செய்துள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இது நம்பர் சீரிஸ் வரலாற்றில் ரியல்மிக்கு ஒரு புதிய சாதனை ஆகும்.

ரியல்மி 13 ப்ரோ சீரிஸ் 5G 6.7-இன்ச் FHD+ 120Hz வளைந்த AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 7s Gen 2 பிராசஸர், 12 GB வரை ரேம் மற்றும் 5200mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
ரியல்மி 13 ப்ரோ+ ஆனது முதல் முறையாக OIS உடன் Sony LYT-701 சென்சார் கொண்ட 50MP பின்புற கேமராவைக் கொண்டுள்ளது. இத்துடன் 50MP Sony LYT-600 பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவைக் கொண்டுள்ளது.
ரியல்மி 13 ப்ரோ 50MP LYT-600 சென்சார் கொண்டுள்ளது. இரண்டு போன்களும் 8MP அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 32MP முன் கேமராவைக் கொண்டுள்ளது.
ரியல்மி 13 ப்ரோ 8GB + 12GB மாடலின் விலை ரூ.26,999 என்றும், 8GB + 256GB விலை ரூ.28,999 என்றும் 12GB + 512GB மாடலின் விலை ரூ.31,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ரியல்மி 13 ப்ரோ பிளஸ் 8GB + 256GB மாடலின் விலை ரூ.32,999 என்றும், 12GB + 256GB மாடலின் விலை ரூ.34,999 என்றும் 12GB + 512GB மாடல் விலை ரூ.36,999 என நிர்ணிக்கப்பட்டு இருக்கிறது.
- இதுவரை நிலச்சரிவில் சிக்கி 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
- நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களால் முடிந்தவரை உதவிகளை செய்து வருகின்றனர்.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த 29-ம் தேதி இரவில் கனமழை கொட்டியது.
அதனால் வயநாட்டில் உள்ள முண்டகை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய மலைக்கிராமங்களில் அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அத்துடன் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இந்த வெள்ளத்தில் சாலைகள், பாலங்கள், வீடுகள், தங்கும் விடுதிகள், கடைகள், வாகனங்கள் என அனைத்தும் அடித்து செல்லப்பட்டன.
அதிகாலை நேரம் என்பதால் அங்கு வசித்து வந்தவர்கள் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தனர். அவர்கள் நடக்க போகும் விபரீதத்தை உணராத நிலையில், காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். பலர், மண்ணோடு மண்ணாக புதைந்தும் போயினர். இதுவரை நிலச்சரிவில் சிக்கி 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இன்று 3-வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இடையிடையே பெய்து வரும் மழையையும் பொருட்படுத்தாமல் மீட்பு பணி நடைபெற்று வருகிறது.
இதனிடையே, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களால் முடிந்தவரை உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் உள்ள எர்டெல் வாடிக்கையாளர்களுக்கு சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
அதாவது, வேலிடிட்டி நிறைவடைந்து ரீசார்ஜ் செய்ய முடியாதவர்களுக்கு 3 நாட்களுக்கு 1ஜிபி மொபைல் டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ், 100 எஸ்எம்எஸ் இலவசமாக வழங்கப்படும் என ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்கள் தங்கள் கட்டணத்தை செலுத்துவதற்கான கால அவகாசம் 30 நாட்களுக்கு நீட்டிப்பு எனவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
- இந்தத் சீரிஸ் மாடல்கள்- டார்க் க்ரே, லைட் க்ரே, ஆஃப்-வொயிட் மற்றும் பிங்க் என நான்கு புதிய வண்ணங்களில் கிடைக்கும்.
- பிக்சல் 9 சீரிஸ் ஜெமினி AI அம்சங்களுடன் பெரிதும் ஒருங்கிணைக்கப்படும் என்று கூகுள் சுட்டிக்காட்டியுள்ளது.
கூகுள் பிக்சல் 9 சீரிஸ் ஆகஸ்ட் 14-ந்தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. கூகுள் அதன் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உட்பட ஒன்றல்ல, நான்கு பிக்சல் சாதனங்களை அறிமுகப்படுத்த உள்ளது.
கூகுள் பிக்சல் 9 சீரிசில் பிக்சல் 9, பிக்சல் 9 ப்ரோ, பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் மற்றும் பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் ஆகியவை அடங்கும். இந்த ஸ்மார்ட்போன்கள் ஆகஸ்ட் 14-ந் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இவை பிளிப்கார்ட்டில் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன்களின் உலகளாவிய வெளியீடு ஆகஸ்ட் 13 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக நடைபெறுகிறது.
இந்தத் சீரிஸ் மாடல்கள்- டார்க் க்ரே, லைட் க்ரே, ஆஃப்-வொயிட் மற்றும் பிங்க் என நான்கு புதிய வண்ணங்களில் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் பளபளப்பான பிரேம்களை மேட்-டெக்சர்டு பேனல்களைக் கொண்டிருக்கும் என்று தெரிய வந்துள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் கேமரா ஒரு தனித்துவமான தோற்றத்தைக் கொண்டிருக்கும். ப்ரோ மாடல்களில் மூன்று லென்ஸ்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் வழக்கமான பிக்சலில் இரண்டு லென்ஸ்கள் இருக்கும். பிக்சல் 9 ப்ரோ ஃபோல்டில் உள்ள கேமரா பம்ப் செவ்வக வடிவில் வட்டமான மூலைகளுடன் உள்ளது. அதேசமயம் பிக்சல் 9 ஆனது நீள்வட்ட வடிவ கேமரா பம்ப் கொண்டிருக்கும்.
பிக்சல் 9 சீரிஸ் ஜெமினி AI அம்சங்களுடன் பெரிதும் ஒருங்கிணைக்கப்படும் என்று கூகுள் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த சாதனங்கள் AI திறன்களை உள்ளடக்கியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூகுள் பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் என்பது கூகுளின் 2-வது மடிக்கக்கூடிய ஸ்மார்போனாகவும், இந்தியாவிற்கு வரும் கூகுளின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்போனாகவும் இருக்கும். இந்த புதிய ஸ்மார்போன் அதன் முந்தைய கூகுள் ஃபோல்டுடன் ஒப்பிடும்போது மிகப் பெரிய டிஸ்பிளேவைக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.
- விவோ வி40 முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று அதன் கேமரா அமைப்பு ஆகும்.
- விவோ வி40 வடிவமைப்பை பொறுத்தவரை, நேர்த்தியான மற்றும் நவீனமானது.
விவோ வி30 சீரிசை அறிமுகப்படுத்திய சில மாதங்களுக்குப் பிறகு விவோ அதன் சமீபத்திய ஸ்மார்ட்போன் விவோ வி40 சீரிசை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.
இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களின்படி, விவோ வி40 மற்றும் விவோ வி40 ப்ரோ வருகிற ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விவோ வி40 மாடல் 8ஜிபி ரேம் மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 பிராசஸர் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இது ஸ்மார்ட்போனில் மல்டி டாஸ்கிங் மற்றும் கேமிங் பயன்பாடுகளுக்கு ஏற்றதாக மாற்றுகிறது.
இந்த மாடலில் 6.78 இன்ச் AMOLED டிஸ்ப்ளே 1260x2800 பிக்சல் டிஸ்பிளே கொண்டிருக்கிறது. இத்துடன் 120Hz ரிப்ரெஷ் வழங்கப்படுவதால் மென்மையான ஸ்க்ரோலிங் மற்றும் கேம்பிளேவுக்கு உதவுகிறது.
விவோ வி40 முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று அதன் கேமரா அமைப்பு ஆகும். இதில் இரு 50 எம்பி பின்புற கேமராக்களைக் கொண்டுள்ளது. ஒரு வைட் ஆங்கிள் மற்றும் ஒரு அல்ட்ராவைட் அடங்கும். இதன் முன்புறம் 50 எம்பி கேமரா உள்ளது. இது உயர்தர செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு ஏற்றது.
முன் மற்றும் பின்புற கேமராக்கள் இரண்டும் 4K வீடியோ தெளிவான வீடியோக்களை உறுதி செய்கின்றன. விவோ வி40 5500 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது ஒருமுறை சார்ஜ் செய்தால் நாள் முழுவதும் நீடிக்கும். கூடுதலாக, 80W வேகமான சார்ஜிங் மூலம், தேவைப்படும்போது விரைவாக பேட்டரியை ரீசார்ஜ் செய்யலாம்.
விவோ வி40 வடிவமைப்பை பொறுத்தவரை, நேர்த்தியான மற்றும் நவீனமானது. இந்த போனின் பின்புறம் மினரில் கிளாஸ் பேக் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்டெல்லார் சில்வர் மற்றும் நெபுளா பர்பில் நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது.
இந்த போன் 256 ஜிபி ஸ்டோரேஜ் உடன் கிடைக்கிறது. கனெக்டிவிட்டிக்கு 5ஜி, வைபை 5, ப்ளூடூத் v5.4, என்எப்சி மற்றும் யுஎஸ்பி டைப் சி ஆகியவை வழங்கப்படுகின்றன. விவோ வி40 மாடலில் பாதுகாப்பிற்காக திரையில் கைரேகை சென்சார் கொண்டுள்ளது.
- செல்பி கேமரா 50 மெகா பிக்சல் கொண்டதாக இருக்கும்.
- 8GB ரேம், 256GB ஸ்டோரேஜ் மற்றும் 12GB ரேம், 256GB ஸ்டோரேஜ் கட்டமைப்பு கொண்டதாக இருக்கும்.
"Nothing Phone 2a Plus" இந்தியா உள்பட உலகளவில் வருகிற 31-ந்தேதி ரிலீஸ் ஆகும் என நத்திங் (Nothing) நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் புதிக சிறப்பம்சங்கள் இருக்கும் என துணை-நிறுவனர் கார்ல் பெய் உறுதி அளித்துள்ளார்.
செல்பி கேமரா 50 மெகா பிக்சல் கொண்டதாக இருக்கும். முன்னதாக 32 மெகா பிக்சல் கொண்டதாக இருந்தது. இந்த பிளஸ் மாடல் 50W சற்று கூடுதல் சார்ஜிங் ஸ்பீடு கொண்டதாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மீடியாடெக் டைமென்சிட்டி 7350 சிப்செட்டால் (MediaTek Dimensity 7350 chipset) இயக்கப்படும். 12GB ரேம் வரை ஒத்துழைக்கக் கூடி கட்டமைப்பு கொண்டதாக இருக்கும்
8GB ரேம், 256GB ஸ்டோரேஜ் மற்றும் 12GB ரேம், 256GB ஸ்டோரேஜ் கட்டமைப்புடன் கருப்பு மற்றம் கிரே கலரில் கிடைக்கும்.
- மத்திய பட்ஜெட்டில் செல்போன் மற்றும் முக்கிய பாகங்களுக்கான சுங்க வரி 15 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.
- அப்போது பேசிய நிதி மந்திரி, இறக்குமதி வரியைக் குறைப்பது நுகர்வோருக்கு நன்மை பயக்கும் என கூறினார்.
பாராளுமன்றத்தில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சமீபத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது மொபைல் போன்கள் மற்றும் அதன் முக்கிய பாகங்களின் அடிப்படை சுங்க வரியை 20 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாகக் குறைத்து அறிவிப்பு வெளியிட்டார்.
அப்போது பேசிய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இறக்குமதி வரியைக் குறைப்பது நுகர்வோருக்கு நன்மை பயக்கும் என தெரிவித்தார்.
இந்நிலையில், ப்ரோ அல்லது ப்ரோ மேக்ஸ் மாடல் ஐபோன்களுக்கான விலையை ஆப்பிள் நிறுவனம் 3 முதல் 4 சதவீதம் வரை குறைத்துள்ளது. இதன்மூலம் குறைந்தது 5,000 முதல் 6,000 ரூபாய் வரை வாடிக்கையாளர்கள் சேமிக்க முடியும்.
இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐபோன் 13, ஐபோன் 14 மற்றும் ஐபோன் 15 ஆகியவற்றின் விலையில் 3,000 ரூபாய் குறைக்கப்படுகிறது.
புதிய விலை விவரங்கள்:
ஐபோன் 13 (128 ஜி.பி.) விலை ரூ. 53 ஆயிரத்து 900
ஐபோன் 13 (256 ஜி.பி.) விலை ரூ. 63 ஆயிரத்து 900
ஐபோன் 13 (512 ஜி.பி.) விலை ரூ. 83 ஆயிரத்து 900
ஐபோன் 14 (128 ஜி.பி.) விலை ரூ. 63 ஆயிரத்து 900
ஐபோன் 14 (256 ஜி.பி.) விலை ரூ. 73 ஆயிரத்து 900
ஐபோன் 14 (512 ஜி.பி.) விலை ரூ. 93 ஆயிரத்து 900
ஐபோன் 14 பிளஸ் (128 ஜி.பி.) விலை ரூ. 73 ஆயிரத்து 900
ஐபோன் 14 பிளஸ் (256 ஜி.பி.) விலை ரூ. 83 ஆயிரத்து 900
ஐபோன் 14 பிளஸ் (512 ஜி.பி.) விலை ரூ. 1 லட்சத்து 03 ஆயிரத்து 900
மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் ஐபோன்களின் விலை அதன் முந்தைய விலையை விட ரூ. 6,000 குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜியோ அதன் ஜியோ ஏர் ஃபைபர் திட்டங்களில் புதிய இலவச சலுகையை அறிவித்துள்ளது.
- இலவச சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் என்று ஜியோ தெரிவித்துள்ளது.
ஜியோ ஒரு புதிய ஃப்ரீடம் ஆஃபரை (Freedom Offer) அறிவித்துள்ளது. அதில் ஜியோ ஏர்ஃபைபர் திட்டங்களில் 30 சதவீத தள்ளுபடியை வழங்குகிறது.
ஜியோ அதன் ஜியோ ஏர் ஃபைபர் (JioAirFiber) திட்டங்களில் புதிய இலவச சலுகையை அறிவித்துள்ளது. ஜியோ ஏர்ஃபைபர் பிராட்பேண்ட் இணைப்பை பெறுவோருக்கு 30 சதவீதம் தள்ளுபடியை ஜியோ வழங்குகிறது. இதன் மூலம் ரூ.1000 கட்டண சலுகையை வழங்குகிறது. ஆனால் இந்த சலுகை புதிய பயனர்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
நீங்கள் ஏற்கனவே இருக்கும் ஜியோ ஏர் ஃபைபர் பயனராக இருந்து, புதிய திட்டத்தை வாங்கினால் அல்லது வேறொரு திட்டத்தை மேம்படுத்தினால், நீங்கள் இந்த ஆஃபருக்குத் தகுதிபெற மாட்டீர்கள். ஜியோ வழங்கும் 30 சதவீத தள்ளுபடியானது ரூ.1,000 இன்ஸ்டாலேஷன் கட்டணத்தை தள்ளுபடி செய்வதாகும். மேலும் இது புதிய பயனர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
நீங்கள் இப்போது ஜியோ ஏர் ஃபைபர் சேவைக்கு முன்பதிவு செய்திருக்கிறீர்கள், இன்னும் உங்களுக்காக பிராட்பேண்ட் இணைப்பு இன்ஸ்டால் செய்யப்படவில்லை என்றால் நீங்கள் இந்த சலுகையை பெறலாம்.
இலவச சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் என்று ஜியோ தெரிவித்துள்ளது. இந்தச் சலுகை ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 15 வரை வழங்கப்படுகிறது.
- ரெனோ 12 ப்ரோ 5ஜி மாடல் ஜூலை 18 ஆம் தேதி விற்பனைக்கு வந்தது.
- ஒப்போ ரெனோ 12 மாடல் மூன்று நிறங்களில் கிடைக்கிறது.
ஒப்போ நிறுவனத்தின் ரெனோ 12 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது. முன்னதாக ரெனோ 12 ப்ரோ 5ஜி மாடல் ஜூலை 18 ஆம் தேதி விற்பனைக்கு வந்த நிலையில், தற்போது ரெனோ 12 விற்பனைக்கு வந்துள்ளது.
இந்தியாவில் ரெனோ 12 மாடல் சன்செட் பீச், மேட் பிரவுன் மற்றும் ஆஸ்ட்ரோ சில்வர் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 32,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை ப்ளிப்கார்ட், ஒப்போ ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெறுகிறது.
புது ரெனோ 12 5ஜி ஸ்மார்ட்போன் வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 3 ஆயிரம் வரை உடனடி கேஷ்பேக் பெற முடியும். இத்துடன் அதிகபட்சம் 9 மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. மேலும் 3 மாத யூடியூப் பிரீமியம் மற்றும் கூகுள் ஒன் சந்தா வழங்கப்படுகிறது.

அம்சங்களை பொருத்தவரை ரெனோ 12 மாடலில் 6.7 இன்ச் FHD+ OLED டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i பாதுகாப்பு, மீடியாடெக் டிமென்சிட்டி 7300 பிராசஸர், மாலி G615 MC2 GPU, அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 14 சார்ந்த கலர் ஓஎஸ் 14.1 வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்கள் எடுக்க 50MP பிரைமரி கேமரா, OIS, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ லென்ஸ், 32MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 80 வாட் சூப்பர் வூக் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.
- ஆப்பிள் இந்த அம்சத்திற்காக ஜியோவுடன் கூட்டு சேர்ந்துள்ளது.
- உங்கள் குழந்தைகளுக்கான ஆப்பிள் வாட்ச் குழந்தைகளுக்கு அவர்களின் சுதந்திரத்தை கொடுக்கும்.
இந்தியாவில் ஆப்பிள் வாட்ச் ஃபார் யுவர் கிட்ஸ் (For Your Kids) அம்சத்தை ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆப்பிள் வாட்ச் ஃபார் யுவர் கிட்ஸால் உங்கள் குழந்தைகளுடன் தொடர்பில் இருக்கவும், அவர்கள் எங்கிருக்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதைக் கண்காணிக்கவும் முடியும்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் தொடர்பு கொள்ளவும், அவர்களின் உடல்நலம் மற்றும் உடற்பயிற்சியை கண்காணிக்கவும், மேலும் ஆப்பிள் வாட்ச்சின் மற்ற அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் பயன்படுத்த அனுமதிக்கும்.
இதன் மூலம் உங்கள் குழந்தைகள், தகவல்கள் மற்றும் போன் அழைப்புகள் மற்றும் நீங்கள் வழக்கமாக ஆப்பிள் வாட்சில் பெறும் அனைத்து உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி அம்சங்களையும் பெறலாம்.

இந்த அம்சம் இப்போது இந்தியாவில் வழங்கப்படுகிறது. ஆப்பிள் வாட்ச் SE மற்றும் ஆப்பிள் வாட்ச் 4 அல்லது அதற்குப் பிறகு வெளியான மாடல்களில் இந்த அம்சம் வேலை செய்யும். வாட்ச் ஓஎஸ் 7 அல்லது அதற்குப் பிறகு வந்த இயங்குதளங்கள் மற்றும் ஐஓஎஸ் 14 அல்லது அதற்குப் பிறகு வெளியான ஓஎஸ் கொண்ட ஐபோன் மாடல்களில் இந்த அம்சம் இயங்கும்.
தற்போது, ஆப்பிள் இந்த அம்சத்திற்காக ஜியோவுடன் கூட்டு சேர்ந்துள்ளது. அதாவது, இந்த அம்சம் செயல்பட, நீங்கள் ஆப்பிள் வாட்சுக்கான புதிய ஜியோ இணைப்பைப் பெற வேண்டும். உங்கள் குழந்தைகளுக்கான ஆப்பிள் வாட்ச் அமைக்க, குறைந்தபட்சம் பெற்றோரில் ஒருவராவது ஐபோன் பயனராக இருக்க வேண்டும்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆப்பிள் வாட்ச் குழந்தைகளுக்கு அவர்களின் சுதந்திரத்தை கொடுக்கும். அதே நேரத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கண்காணிக்கவும் அனுமதிக்கும்.
ஆப்பிள் வாட்சிலிருந்து குழந்தைகள் எந்த தொடர்பை இணைக்கிறார்களோ அதனை பெற்றோர்கள் கண்காணிக்க முடியும். அதே போல் தங்கள் குழந்தைகளின் இருப்பிடத்தை ஐபோனில் இருந்து கண்காணிக்க முடியும்.
- லிமிட்டெட் எடிஷன் மாடல் இருவித நிறங்களில் கிடைக்கும் என தகவல்.
- சியோமி 14 சிவி கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டன.
சியோமி நிறுவனம் தனது சியோமி 14 ஸ்மார்ட்போனினை லெய்கா பிராண்டு கேமரா சென்சார்களுடன் குரூயிஸ் புளூ டூயல் ஸ்லைஸ் எடிஷன், மேட்சா கிரீன் நானோ-டெக் வீகன் லெதர் எடிஷன் மற்றும் ஷேடோ பிளாக் கிளாசிக் மேட் எடிஷன் போன்ற வெர்ஷன்களில் விற்பனை செய்து வருகிறது. இவை கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டன.
இந்த நிலையில், சியோமி 14 சிவி லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டை அந்நிறுவனம் உறுதி செய்துள்ளது. புதிய லிமிட்டெட் எடிஷன் மாடல் பான்டா டிசைன் கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போனுடன் ரெட்மி பேட் SE 4ஜி மற்றும் ரெட்மி பேட் ப்ரோ 5ஜி போன்ற சாதனங்களும் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
புதிய லிமிட்டெட் எடிஷன் மாடல் மிரர் கிளாஸ் மற்றும் வீகன் லெதர் வெர்ஷன் கொண்டிருக்கும். இத்துடன் பின்க், மோனோக்ரோம் மற்றும் புளூ எடிஷன்களும் விற்பனைக்கு கிடைக்கும். சியோமி 14 சிவி லிமிட்டெட் எடிஷன் தொடர்பாக அந்நிறுவனம் டீசர்களை வெளியிட்டு வருகிறது.
இந்திய சந்தையில் சியோமி 14 சிவி லிமிட்டெட் எடிஷன் மாடல் ப்ளிப்கார்ட், Mi வலைதளங்கள் தவிர Mi ஹோம் ஸ்டோர் மற்றும் இதர விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்பட உள்ளது.






